kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...

//எப்படி எதனால் இப்படி இருக்கிறாங்க என்று புரிய மாட்டேன் என்கிறதே. இப்படி இதயம் கடினப்பட்டுப் போக வாய்ப்பு இருக்கா??

சில பாவங்களிலிருந்து விடுபட முடியாமல் - எல்லோருக்கும் இரட்சிப்பு, எல்லோருக்கும் பரலோகம் என்று சொல்லி மனதை தேற்றிக் கொள்கிறார்களோ என்னவோ. கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.//

அம்மணி எல்லாருக்கும் பரலோகம் என்று நாங்கள் சொல்லவில்லை. எல்லாருக்கும் இரட்சிப்பு என்றுதான் சொல்லுகிறோம். இரட்சிப்பு என்றாலே பரலோகம்தான் என்று பாபிலோன் மார்க்கத்திலிருந்தபோது நானும் நம்பிக்கொண்டிருந்தவன் தான். மரணத்தைப் பற்றியே தெளிவில்லாத உங்களுக்கு இரட்சிப்பு புரிய நியாயமில்லை. 

வசனம் சொல்வது வருத்தமாக இருந்தால் நாங்கள் பொறுப்பல்ல‌...

ஜோசப் என்கிற கோமாளி

//இதை நிச்சயம் சோலு சொலூஷன் தான் எழுதியிருப்பார். முடியவில்லை என நீர் எப்படி சொல்ல முடியும், சரி அப்படி எல்லாருக்கும் ரட்சிப்பு என்றால் எதற்கய்யா இப்படி அடுத்தவர்களை, உங்க பாஷையில் சொல்வதானால் பன்றிகளை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறீர். அதான் எல்லாருக்கும் கேடண்டி கொடுத்தாச்சுல்ல அப்புறம் என்ன. இதுக்கு தேவையில்லாம ஒரு ரூமில் உக்காந்து ஏ.சியை ஓடவிட்டு நேரத்தை வீணாக்கி வேத ஆராய்ச்....சீ செய்ய வேண்டும். போங்கப்பா வேற வேலை இருந்தா பாருங்க‌.

அப்புறம் ஒரு அறிவியற்பூர்வமான விஷயம், மனிதனின் உள்ளுறுப்புகளில் சில, ஒத்துப்போவது பன்றியின் உள்ளுறுப்புகளோடு தானாம்.//

யாரையும் எங்கள் தளத்துக்கு வருந்தி அழைக்கவில்லை. அந்த அவசியமும் எங்களூக்கில்லை. உமக்கேன் எரிகிறது. எங்கள் வேலை என்னவென்று எந்தப் பன்றிகளிடமும் கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை. உளையான சேற்றில் உழன்றுகொண்டு பழகிப்போன பன்றிகளூக்கு முத்துக்களைப் பற்றித்தெரிய நியாயமில்லைதான்.

உறுப்பு ஒத்துபோவது சரி; சிலருக்கு சுபாவமே ஒத்துப்போகிறதே என்ன செய்ய. அதனால் தான் பன்றிகளூக்கு வேண்டியதை அவைகளே தேடிக்கொள்ளும். பன்றிகளை குற்றம் சொல்லவில்லை அவைகளின் நாற்றம் தாங்காமல் விரட்டியடித்தாக வேண்டியிருக்கிறதே என்ன செய்ய‌...

//தேவனின் ரட்சிப்பை ராஜியத்தில் தெரிந்துகொள்வோமாம். சரி அப்புறம் ஏன் ஓய் டென்ஷனாகிறீர். ஓகோ அப்ப உங்க வீட்டில் சரக்கு கேஸ் கேஸா அடுக்கி வச்சிருக்கிறீராக்கும். எழுதனும் என்பதற்காக என்னத்தையாவது எழுதக்கூடாது. போங்க போய் அப்படியே உங்க மிலிட்டரி கேண்டீன் பக்கம் போய் எட்டிப்பாருங்க, ஏற்கனவே ஒருத்தர் சரக்கை உள்ளே இறக்கி தான் ஒரு அப்பாவி சிறுவனை போட்டுத்தள்ளிட்டு கம்பி எண்ணிக்கிட்டிருக்காரு.//

நாங்க டென்ஷனாகல ஓய், எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதில் டென்ஷன் எங்கிருந்து வரும். அதான் உங்களைப் போன்றவர்கள் நரகத்திலிருந்து ஜனங்களை காப்பாற்றும் முயற்சியில் கேவலமாத் தோற்றுப்போய் டென்ஷனாகிறார்கள். இந்தப் பன்றிகளுக்குள்ளேயே ஒற்றுமையில்லை. உமது தளத்திலேயே பாரும் சக 'பன்றிகளை' எப்படியெல்லாம் வசை பாடியிருக்கிறார்கள் என்று. எழுதனும் என்று என்னத்தையோ எழுதவில்லை, தளம் முழுக்க வசனங்களால்தான் நிரம்பி வழிகிறது. என்னத்தையோ எழுதுவது பன்றிகளின் தளத்தில்தான். 

ஜான்

//நண்பர் அன்புவும் மரணம் என்றால் சரிர மரணம் மாத்திரம் அல்ல என்று நம்புபவர் தான். அவரும் பன்றியோ??//

சிண்டு முடிவதற்கு சில்சாமிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் சில்சாம் கழிவு என்றேன். மரணம் என்றால் என்ன என்று அன்புவை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். மரணம், உயிர்த்தெழுதல் போன்றவற்றில் அவர் மிகத்தெளிவாகத்தான் இருக்கிறார்.

ஆக மொத்தம் முத்துக்கள் உங்களுக்கல்ல‌...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கொல்வின்//சகோதரி கோல்டா கலக்குறீங்க.... நம்பவே முடியவில்லை. நண்பர் கோவை பெரியன் எத்தனை பேரைத்தான் சமாளிப்பார். உங்களுக்கென்று தனிப்பதிவு தொடங்கினாலும் ஆச்சரியமில்லை. 

ஆத்தும கரைசலின் 50 இற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தீர்கள். இதுவரை உருப்படியாக அதற்கு மறுப்பு எழுதினார்களா?//

சாது அய்யாவின் சிஷ்யையாச்சே அதான் கலக்குறாங்க போல. 

முதல் கேள்விக்கே பதில் சொதப்பல். காமெடி பதில்களூக்கெல்லாம் மறுப்பு எழுதுமளவுக்கு  நேரமில்லை நண்பரே...

மனிதனை எரியும் நெருப்பில் போட்டால் செத்து சாம்பலாகிப்போவான் என்ற சாதாரண விஷயம்கூட தெரியாதவர்களிடம் என்னத்த விவாதிப்பது?

ஓஒ நீங்கதான் சாத்தானின் 'சாகவே சாவதில்லை' யை நம்பும் கூட்டமாச்சே.... மகிமையான இந்த சுவிசேஷத்தின் ஒளி உங்களுக்குத் தெரிய நியாமில்லைதான். பிரபஞ்சத்தின் தேவனானவனால் குருடாகிப்போனவர்கள்...

ஏதோ காமெடி பண்ணிக்கொண்டு போங்கள்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஐரோப்பிய நாடுகளில் மங்கிய நிறமுள்ள குதிரை

சாது சுந்தர் செல்வராஜ் சமீபத்தில் “குணமாக்கும் அன்பு” நிகழ்ச்சியில் சொன்னது :

எகிப்தில் காணப்பட்ட மங்கிய குதிரை ஐரோப்பிய நாடுகளில் செல்லும்.

அங்கு கலவரம், இரத்தம் சிந்துதல் உண்டாகும். அதன் பிரதிபலிப்பு ஐரோப்பாவின் தென் பகுதியில்(மத்திய கிழக்கு நாடுகள்?) உள்ள நாடுகளில் காணப்படும்.//

மங்கிய குதிரை குறித்து கோல்டா என்ற அம்மணி, (அப்பப்ப கலக்குவாங்களாம்) பதித்த பதிவைக் குறித்து ஒருத்தனும் வாய் திறக்கவில்லை. சாது செல்வராஜ் ஒரு காமெடி பீஸ் என்று எல்லாருக்கும் தெரியும், அவரப்பத்தி ஏதாவது எழுதப்போயி பாவம் அப்பப்ப கலக்கும் இந்தம்மாவும் தளத்தவுட்டு ஓடிட்டா என்ன செய்றதுன்றதால, மெல்லவும் முடியாம, முழுங்கவும் முடியாமா..... பாவம்.இதைத்தான் அலித்துவம் என்கிறோம். இங்குமல்ல அங்குமல்ல‌..

இந்த அம்மணி "பரிசுத்தாவியால்" நிறைந்து மெச்சிக்கொள்ளும் சாதுஜி யைப்பற்றி 'தள'பதியின் கருத்து. இந்த விஷயத்தில் சில்சாமை பாராட்டியே ஆகவேண்டும்.

//உதாரணமாக சாதுஜி ஒரு 70 % Ok, ஆனால் 30% கெட்டவர் என்பது போன்ற விவாதங்கள் ஒன்றுக்கும் உதவாது;அந்த ஆளும் அவருடைய கூட்டத்தாரும் முழுக்க முழுக்க மோசடி பேர்வழிகள் என்பதும் ஆவிக்குரிய உலகின் விபச்சாரிகள் என்பதுவுமே சத்தியத்தின் வெளிச்சத்தில் நான் கண்ட பேருண்மையாகும்.ஆனாலும் நான் எப்படி இவர்களை வன்மையாக எதிர்க்கிறேனோ அதுபோலவே நீங்கள் அவர்களை உங்கள் கணவனுக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்பது உங்கள் ஆத்மாவுக்கு மாத்திரமே தெரிந்த இரகசியமல்லவா...//

ஆவிக்குரிய விபச்சாரிகளை கணவனுக்கும் மேலாக நேசிக்கிறீர்கள் என்று சொன்னது கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர்தான்.

அதையும் சகித்துக்கொண்டு இன்னும் அந்தத் தளத்தில் பதிவுகளைத் தந்து "கலக்கி"க்கொண்டிருக்கும் சகோதரி கோல்டாவையும் பாராட்டியே தீரவேண்டும்...



-- Edited by soulsolution on Thursday 28th of July 2011 11:41:14 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கலக்கும் கோல்டா (அட அடைமொழி தேவலாம்போலயே), 50 கேள்விகளுக்கும் பதிலளித்து நம்மை தமது வேத அறிவால் திக்குமுக்காட வைத்தவர். இவரைப்பற்றி இவரது தளத்திலேயே சுவாரசியமான விவரங்கள் பதிவாகியுள்ளது. அது மட்டுமல்ல சாதுஜி பற்றியும், தினகரன்கள் பற்றியும் கூட‌....

Chillsam:

கோல்டா அவர்களே, நீங்களும் வேதத்தை ஒழுங்குடன் வாசியுங்கள்; முறைகேடாகவும் சுயநலத்துக்காகவும் ஒழுங்கீனமாகவும் அதனைப் பயன்படுத்தவேண்டாம்; இதன் காரணமாகவே நான் வசனத்தை வைத்து சண்டையிடுகிறதில்லை; நீங்களெல்லாம் மெத்தப்படித்த நீதிமான்கள் என்ற தைரியத்தில் கண்டதையும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், இதன் விளைவுகளை அறியாமலே.

நீங்கள் குறிப்பிட்ட வேதப்பகுதியில் சிலர் என்றுதானே இருக்கிறது; சகோ.ஜோசப் போன்ற சிலர் என்றா இருக்கிறது; நான் கொஞ்சமே கொஞ்சம் படித்த வேதப்பகுதியில் இன்னும் தெளிவாக அனைத்தும் இருக்கிறதம்மா...உங்களுக்கு ஒரு கண்பார்வையில் ஏதேனும் கோளாறா இல்லை, முளையில் கோளாறா..? தரிசனம் என்ற பெயரில் எதையாவது பார்த்துவிட்டு உளறுபவர்களின் பின்னால் அலையாதிருங்கள்; நிதானமாக சத்தியத்தை கைக்கொண்டு போதிக்கும் என்னைப் போன்றவர்களிடம் நட்பாக இருங்கள்.

  • "அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
  • இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
  • அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்." (யோவான்.12:3,5,6)


இந்த வேதப்பகுதியின்படி நான், ஜோசப் உட்பட எல்லோரும் யூதாஸின் வரிசையில் நிற்கிறோம்; செலவு செய்பவர்கள் வரிசையில் உங்களுக்கு வேண்டியவர்கள் நிற்கட்டும்; ஆண்டவரே தீர்ப்பு செய்வார். நான் கண்ணகி பரம்பரையைச் சேர்ந்தவள் என்று மணிமேகலையின் பேத்தி சொன்னால் எப்படியிருக்குமோ அப்படியே உங்கள் ஆட்களும்... போய் அவங்க பழைய தொழிலைச் செய்யச் சொல்லுங்கள்... இயேசுவின் இரத்தத்தை வைத்து வியாபாரம் செய்வதைவிட பால் தினகரனைப் போல பிணத்தைக் காட்டி பிச்சையெடுக்கட்டும்..!




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
நாகூம் 1:5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம்.

தேவ பிரசன்னத்தில் மலையே கரையும் என்றால், நீங்க எம்மாத்திரம்!! சீக்கிரத்தில் இரட்சிக்கப்படுவீங்க சோல் அண்ணே! எந்த சந்தேகமும் இல்லை! உங்க நண்பர் பெரேயன்ஸும் தான்!


பர்வதங்களை எல்லாம் அவர் அழித்து போட வைக்கவில்லை!! அது அப்படியே தானிருக்கும்?!! உங்கள் கூட்டத்தாரின் 2000 சபைகளில் உள்ள துர்போதனை மலைகள் தான் அவரின் பிரசன்னத்தில் அகன்று போகும்!! மங்கிய குதிரையை பார்த்தேன், காரில் உட்கார்ந்து எக்கால சத்தத்தை கேட்டேன் போன்ற கோமாளிகளின் வார்த்தைகளை நம்புவோருக்கும் மலையும் மலையாக தான் தெரியும்!!

ஆனாலும் உங்கள் குருநாதர் போன்றே எந்த வசனத்தை கொடுத்து அதற்கு என்ன விளக்கம் கொடுப்பது என்கிற விவஸ்தையே கிடையாதா!! இந்த வசனத்திற்கும் நாங்கள் இரட்சிக்கப்படுவதற்கும் என்ன லிங்க் என்றே தெரியவில்லை!! நீங்கள் கவலைபட வேண்டாம் கோல்டா அவர்களே, உங்களை காட்டிலும், தேவனின் இரட்சிப்பை அவர் எங்களுக்கு நல்லாவே விளக்கியிருக்கிறார்!! நீங்கள் மங்கிய குதிரை, அடுத்து வெள்ளை, சிகப்பு என்று கலர் கலராக குதிரை பார்த்துக்கொண்டு, தேவ தூதர்களின் எக்காலம் ஊதுவதில் மயங்கியிருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கோல்டா அவர்களே,

நாங்கள் இரட்சிக்கப்படவே வேண்டாம்; நான் நரகத்துக்கு போய்விட்டுப்போகிறேன். சாது அய்யா, தினகரன்கள் இருக்கும் பரலோகம் போவதற்கு நரகம் எவ்வளவோ தேவலாம்...

"கண்ணுங்களா செல்லங்களா டி வி முன்னாடி அப்டியே 'மொலங்கால்' போடுங்க"ன்னு சாது சொன்னதை ஒரு காலத்தில் நாங்களும் சீரியஸாத்தான் நெனச்சோம். குணமாக்கும் அன்பு ஒரு சூப்பர் காமெடி டைம்னு பின்னர்தான் விளங்கியது. நீங்களும் புரிந்துகொள்வீர்கள். 

சில்சாம் அண்ணே ஏன் இப்படி பதிச்சாங்கன்னு இப்பதான் புரியுது.

//கோல்டா அவர்களே, நீங்களும் வேதத்தை ஒழுங்குடன் வாசியுங்கள்; முறைகேடாகவும் சுயநலத்துக்காகவும் ஒழுங்கீனமாகவும் அதனைப் பயன்படுத்தவேண்டாம்; இதன் காரணமாகவே நான் வசனத்தை வைத்து சண்டையிடுகிறதில்லை; நீங்களெல்லாம் மெத்தப்படித்த நீதிமான்கள் என்ற தைரியத்தில் கண்டதையும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள், இதன் விளைவுகளை அறியாமலே.

.....உங்களுக்கு ஒரு கண்பார்வையில் ஏதேனும் கோளாறா இல்லை, முளையில் கோளாறா..? தரிசனம் என்ற பெயரில் எதையாவது பார்த்துவிட்டு உளறுபவர்களின் பின்னால் அலையாதிருங்கள்; நிதானமாக சத்தியத்தை கைக்கொண்டு போதிக்கும் என்னைப் போன்றவர்களிடம் நட்பாக இருங்கள்.//



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//உங்க இருவரின்(சோல் & பெரேயன்) ஆத்துமாக்களும் அஷ்டகோணலாக முறுக்கிக் கொண்டிருக்கிறது சகொ அன்பு முறுக்கை எடுத்து விட முயற்சித்தாலும் இன்னும் முறுக்கிக் கொள்கிறீர்கள்.ஆண்டவர் உங்களை நேசிக்கிறார் என்பதால் தான், சகோ அன்பு போன்றோரை அனுப்பி உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

 ஆண்டவ்ர் உங்க கோணலை சரியாக்குவார் என்று நான் நம்புகிறேன்.//

கோல்டா அவர்களே, எங்கள் ஆத்துமாக்களை கிறிஸ்து இயேசு பார்த்துக்கொள்வார், அதை குறித்து உங்கள் கவலை தேவையற்றது!! முதலில் உங்களுக்குள் இருக்கும் 2000 சபை பிரிவினைகளை (எல்லாரும் திரித்துவர்கள் தான், ஆனாலும் தனி சபைகள்) எத்துனை விதமான அஷ்டகோணல்களில் செல்கிறது என்பதை "சரிப்படுத்துங்கள்"!! தேவன் எங்களை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை எங்களை விட யாராலும் புரிந்திருக்க முடியாது என்று தான் நான் சொல்லுவேன்!!

சங்கீதம் 40:2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,

சொல்லியப்படியே, எங்களை இது போன்ற திரித்துவ சபை பிரிவினை என்கிற உளையான சேற்றிலிருந்து தூக்கியெடுத்து, கிறிஸ்து என்கிற கன்மலையின்மேல் எங்களை திடமாக நிறுத்தியிருக்கிறார்!! நாங்கள் கிறிஸ்துவின் ஈடுபலியில் மிகவும் நிச்சயமாக இருக்கிறோம்!! நீங்கள் சாதுவிடம் கற்றுக்கொண்டதை பார்த்துக்கொள்ளுங்கள்!! ஏனென்றால் உங்களை போன்றோருக்கு கிறிஸ்துவின் ஈடுபலி என்னவென்று தெரியாது என்றே சொல்லுவேன்!! அவரால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்கிற தீக்கமான முடிவில் தான் இருக்கிறீர்கள் என்பதையும் அறிவேன்!! உங்கள் சாது போன்ற ஆட்களையும் சேர்த்து தான்,

மத்தேயு 7:22. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்ளும் சாது, வி.செ போன்ற தீர்க்கதரிசிகளை என் கர்த்தர் என்னவென்று சொல்லுகிறார், அக்கிரமச் செய்கைக்காரரே என்கிறார்!! முடிந்தால் அவர்களின் ஆத்துமாக்கள் (!!) நலம் பெற ஜெபித்துக்கொள்ளுங்கள்!! நாங்கள் நம்பும் கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன்பாக மற்ற அனைத்துமே தூசு தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//உலகம் ஒரு நாடக மேடை.ஆண்டவர் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார். நாம் வெறும் கதாபாத்திரங்கள். கொடுக்கப்பட்ட வசனத்தை ஒப்பிச்சிட்டுப் போவதுதான் நம் வேலை. The End என்று சொல்லி திரை போட்டவுடன், எல்லோரும் உயிர்த்தெழுந்து கொஞ்சம் பேர் பரலோகத்திலும், மீதி பேர் இவ்வுலகில் உண்டாகும் ராஜ்ஜியத்திலும் பங்கடைவார்கள்.

இதாங்க அவங்க நம்பிக்கை! இதுக்கு எதுக்கு பைபிள், ஜெபம், உபவாசம் எல்லாம் தேவையென்று ஒன்றும் புரியவில்லை.

வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறார்களோ.

இவங்க ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகளை கேலியும், கிண்டலும் பண்ற மாதிரி எனக்குத் தெரியுது.

சோல் & பெரேயன்ஸ் சகோதரர்களே, உங்களைப் பார்த்து பிசாசு சிரிப்பது தெரிகிறதா?//

பைபிள் என்ன சொல்கிறதென்று உண்மையில் ஆராய்ந்திருந்தீர்களென்றால் சத்தியத்தையும் அறிந்திருப்பீர்கள் அந்த சத்தியம் போலி உபவாசம், தேவசித்தமில்லாத அபத்தமான ஜெபங்கள் எல்லாவற்றிலிருந்தும் உங்களை விடுதலையாக்கியிருக்கும்.

எங்களைப்பார்த்து நீங்களே சிரிக்கிறீர்கள்; பிசாசு சிரித்தால் சிரித்துவிட்டுப் போகட்டும்.

வெளிப்படுத்தல் வசனத்துக்குப் போகும் முன் முதலில் ஆதியாகமத்துக்கு வந்து நீ சாகவே சாவாய். மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் போன்ற நேரடி வசனங்களைப் புரிந்துகொண்டு. முதலில் மரணம் என்றால் என்ன என்று தெளிவாகுங்கள்... நித்திய ஜீவனுக்கு அப்புறம் போகலாம். ஏன் ஆயிரம் முறை சொன்னாலும் இது குறித்து உங்கள் தளத்தில் கண்டு கொள்வதே இல்லை. உலகின் எல்லா கோட்பாடுகளுக்கும் மூலகாரணமே மனிதன் செத்தவுடன் வேறெங்கேயோ உயிரோடு போகிறான் என்று நம்பும் மூடத்தனமே ஆகும். முதலில் அதிலிருந்து வசனபூர்வமாக வெளியே வாருங்கள்....

//இது நீங்க quote பண்ணிய வசனம்:

கலாத்தியர் 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.

இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைக்க வேண்டும், வைத்தால் தான் நீதிமானாக்கப்படுவோம் என்று தானே வசனம் சொல்கிறது. அதெல்லாம் தேவையில்லை, எல்லோருக்கும் இரட்சிப்பு என்று எப்படி சொல்றீங்க சோல் அவர்களே?//

அதெல்லாம் தேவையில்லை என்று ஒரு போதும் சொல்லவில்லை. எல்லாரும் உயிர்த்தெழுந்து அதன் பின்னரே கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்துக்கு வருவார்கள் என்றுதான் சொல்கிறோம். அரைகுறையாகப் படித்துவிட்டு அரைகுறையாகக் கேள்வி கேட்டால் எப்படி பதில் தர முடியும் கோல்டா அவர்களே?

இப்போது கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மரித்தவர்கள் என்னாவார்கள் என்று உங்கள் தளத்து வேத விற்பன்னர்களிடமோ, சாது போன்ற சூப்பர் ஃப்ராடுகளிடமோ கேட்டுத்தான் பாருங்களேன். காமெடியான பதில் சொல்வார்கள்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சோல் & பெரேயன்ஸ் சகோதரர்களே, உங்களைப் பார்த்து பிசாசு சிரிப்பது தெரிகிறதா?//

ஆமாம் இன்று உங்களை போன்றோர், மேலும் ஜான் எழுதினாரே, அவரும் அவர்களின் கூட்டாளிகலும், விழுந்து விழுந்து சிரித்தார்கள் என்பதை வாசிக்கும் போது, நீங்கள் சொன்னது உண்மையாக தான் இருக்கிறது!!

//இவங்க ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகளை கேலியும், கிண்டலும் பண்ற மாதிரி எனக்குத் தெரியுது.//

மன்னிக்கனும், இந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு பொருட்டாகக்கூட எடுக்காமல், பரலோகம், நரகம் என்று ட்ரிப் அடித்து, எக்காளச்சத்தம் கேட்டு, தீர்க்கதரிசனம்(!!) சொல்லுகிறோம் என்று ஜோஷியம் சொல்லி, முக்கியமாக அடுத்தவர்களின் பணத்தில், கோபுரம் கட்டுகிறோம், டீவி நடத்துகிறோம், வாசல் கட்டுகிறோம், மலைக்கட்டுகிரோம், என்று கெர்ஜித்து நடப்பவர்களிடம் போய் சொல்லுங்கள் உங்களின் இந்த வார்த்தைகளை!! ஆனால் அதை எல்லாம் கேட்டு அது தான் உண்மை என்று உங்களை போன்று பலர் ஏமாற்றப்படுகிறீர்கள் என்பதை கூட தெரியாமல் எப்படி தான் வசனத்தை நம்புகிறோம் என்று சொல்லுகிறீர்கள் என்பது புதிராக இருக்கிறது!! உங்கள் தீர்க்கதரிசிகளை குறித்து தான் இயேசு கிறிஸ்து சொல்லுவார், அக்கிரம செய்கைக்காரர்களே, என்னை விட்டு அகன்று போங்கள் என்று!! யார் தேவனின் வார்த்தைகளை கேலியும் கிண்டலும் பண்ற மாதிரி இருக்குது என்று இன்னும் தெளிவாக தெரியும் நாள் வருகிறது!! அது வரையில் பொறுமையாக இருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//எந்த நாள் அது??//

அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

இது தான் அந்த நாள்!! நியாயத்தீர்ப்பின் நாள்!!

அந்த நாள் 1000 வருஷம்!! நீதியை கற்றுக்கொள்ளும் நாள்!! சத்தியத்தை அறிந்துக்கொள்ளும் நாள்!! எல்லா மனுஷர்களையும் இரட்சித்து சத்தியத்தை அறிய செய்கிற நாள்!! இந்த நாளில் தான் சமுத்திரம் ஜலத்தினால் நிறம்புவது போல் பூமி தேவனை அரிகிற அறிவால் நிறம்பும் நாள்!!

//சரி நீங்க யார்? யேகோவா விட்னஸ் இல்லை என்று சொல்றீங்க அப்ப Mormons என்று சொல்லப்படும் கூட்டத்தை சேர்ந்தவர்களா? உங்க நம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் சிலவற்றை சொல்லுங்கள்.//

நாங்கள் யெகோவா சாட்சிகளோ, வேத மாணவர்களோ, மார்மன்ஸ் என்று சொல்லப்படும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் கிடையாது!! எங்களுக்கு நம்பிக்கையும் விசுவாசத்தையும் தருவது வேத புத்தகமே!!

யோவான் 8:32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.

யோவான் 17:17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.

எபிரெயர் 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

இப்படி தேவன் சொன்னது, அவரது குமாரனும், நம் கர்த்தராகிய கிறிஸ்து இயேசு சொன்னது அனைத்துமே வேதத்தில் தான் இருக்கிறது!! தேவ கிருபை நடத்துகிறது என்பதை விசுவசிக்கிறோம், எது நடக்கிறதோ அது தேவன் தன் சித்தத்தின்படியே நடத்துகிறார், எல்லாவற்றையும் உருவாக்கும் முன்னமே அவர் நம்மை அறிந்து நாம் என்ன என்பதை  நியமித்துமிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறோம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மனிதனுக்குள் ஆவி என்று ஒன்று இருக்கிறது.

நீதிமொழிகள் 20:27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்திலுள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்//

ஆவி என்றால் என்ன? ஆவிக்கு உணர்வுள்ளதா? 

//பிரசங்கி 8:8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை

மரணத்தில், மண்ணால் உண்டாக்கப்பட்ட சரீரம் மண்ணுக்குத் திரும்பும். தேவன் தந்த ஆவி போக வேண்டிய இடத்துக்குப் போகும்//

அடுத்தவசனம் ஆவி தேவனிடத்துக்குப் போகிறதென்று பதித்துள்ளீர்கள். எல்லாருடைய ஆவியும் தேவனிடத்துக்குத்தானே போகும்? ஏதும் சந்தேகம் உண்டா?

பிரசங்கி 12:7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

யோசனைகள் அழிந்துபோனால் மனிதன் அழிந்துபோனதாகத்தானே அர்த்தம். சரீரத்திலுள்ள மூளையில் தானே எல்லா யோசனைகளும் உள்ளன. அப்ப சரீரம் அழிந்தால் யோசனை அழியத்தானே செய்யும். ஏதேனும் சந்தேகம் உண்டா?

ஆவி சரி அப்ப ஆத்துமா என்றால் என்ன? ஆத்துமா சாகுமா சாகாதா?

//அதெல்லாம் தேவையில்லை என்று ஒரு போதும் சொல்லவில்லை. எல்லாரும் உயிர்த்தெழுந்து அதன் பின்னரே கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்துக்கு வருவார்கள் என்றுதான் சொல்கிறோம். அரைகுறையாகப் படித்துவிட்டு அரைகுறையாகக் கேள்வி கேட்டால் எப்படி பதில் தர முடியும் கோல்டா அவர்களே?

உயிரிந்தெழுந்தற்கு அப்புறம் தான் அந்த வசனம் apply ஆகும் என்று எப்படி சொல்றீங்க? அப்படி எங்க போட்டிருக்கு?//

ஏசாயா26:9. என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

பிலிப்பியர் 2:10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

இந்த வசனங்கள் எப்போது நிறைவேறும்?

//சரி நீங்க யார்? யேகோவா விட்னஸ் இல்லை என்று சொல்றீங்க அப்ப Mormons என்று சொல்லப்படும் கூட்டத்தை சேர்ந்தவர்களா? உங்க நம்பிக்கை சார்ந்த புத்தகங்கள் சிலவற்றை சொல்லுங்கள்.//

நாங்க யார்னு சகோ.பெரேயன் பதித்துள்ளார்.

நீங்க யார்?

ரோமன் கத்தோலிக்கமா,

ஆவியில்லாத புரோட்டா ஸ்டேன்டா,

ஆவி நிரம்பிய பெந்தெ கோஸ்தா?

ஒயிட் அன்டு ஒயிட் டி பி எம்மா?

தெளிப்பா? முழுக்கா?

வருகைக்கு முன் உபத்திரவமா, அல்ல வந்த பின்னரா?

நகையா கூடாதா?

அந்நிய பாஷையா இல்லையா?

இராப்போஜனம் இராவிலா, இல்லை எல்லா நேரத்திலுமா? வாரமா? மாதமா? தினமுமா?  

குணமாக்கும் அன்பா அல்லது டாக்டரா?

இந்தப்பிரிவுகளில் இருக்கும் ஒரே ஒற்றுமை திரித்துவம் என்ற மனிதக்கோட்பாடுதான். மற்றபடி ஒருவர் மாற்றி ஒருவர் தூற்றிக்கொள்வதுதான் உலகமே அறியுமே? 

எங்கள் நம்பிக்கையைச் சார்ந்த ஒரே புத்தகம் வேதம் மட்டுமே. கருகலான பகுதிகளில் மூல பாஷயை நாடுகிறோம். அவ்வளவெ. எங்களூக்கு என்று ஒரு அமைப்பு கிடையாது, யாருக்கும் எந்த உபதேசத்துக்கும் நாங்கள் கட்டுப்படவும் இல்லை. வேத வெளிச்சத்தில் வசனத்துக்கும் தேவத்தன்மைக்கும் இசைவான கருத்துடைய புத்தகங்களை ஏற்பதில் தவறில்லை. நாங்களே ஒரு சிறிய புத்தகம் வெளியிட்டுள்ளோம்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இப்போது கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மரித்தவர்கள் என்னாவார்கள் என்று உங்கள் தளத்து வேத விற்பன்னர்களிடமோ, சாது போன்ற சூப்பர் ஃப்ராடுகளிடமோ கேட்டுத்தான் பாருங்களேன். காமெடியான பதில் சொல்வார்கள்.//

அவர்களுக்கு ஆண்டவர் என்ன திட்டம் வைத்திருக்கிறாரோ நமக்குத் தெரியாது. அவர் நீதியுள்ள நியாயாதிபதி , எனவே, நீதியாய் தீர்ப்பு செய்வார் என்று நம்பலாம்.//

இதைத்தான் காமெடியான பதில் என்கிறேன். அவர்களுக்கு திட்டம் வைத்திருப்பாரேயானால், அவர்களுக்கு நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்வாரேயானால், இப்போது அவரை அறியாதவர்களுக்கு அவரால் செய்ய முடியாதா? முட்டாள்தனமான வாதமாக உங்களுக்குத் தோன்றவில்லை?

//ஆனால் இக்காலத்தில் இயேசு கிறிஸ்துதான் வழி, சத்தியம், ஜீவன். அவரை ஏற்றுக் கொண்டால்தான் இரட்சிப்பு.//

இல்லாவிட்டால்? ஏற்றுக்கொண்டேன் என்று சொல்கிறவர்கள் அனைவருமே பரலோகம் போய்விடுவார்களா? என்ன கியாரண்டி? உத்தரவாதமே இல்லாத ஒரு விஷயம் ஏன் வலுக்கட்டாயமாக மற்றவர்களுக்குத் திணிக்கப்படுகிறது. 

"பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வரான்", முன்குறிக்கப்படுதல், உண்மையானால்

பிதா இழுத்துக்கொள்ளாத, முன்குறிக்கப்படாதவர்களுடைய நிலை என்ன? இக்கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்காமல், இரட்சிப்பு என்ற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாமல் என்ன சுவிசேஷம் வேண்டியுள்ளது?

எது சுவிசேஷம் தேவன் ஒரு சிலரை தெரிந்துகொண்டு பரலோகத்துக்கு கூட்டிப்போவார் மற்றவர்களை நரகத்தில் வாதிப்பார், இதுவா சுவிசேஷம்?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//இரட்சிப்பு என்பது மரணத்திலிருந்து உயிர்த்தெழுவது என்று காமெடி பேசும் உங்களைப் போன்ற சிலர் இருக்கிறார்கள்.யெகோவா சாட்சிகள் அப்படித்தானா என்று தெரியாது. Mormons அப்படித்தான். எனவே நீங்க மட்டும் தனி இல்லை.//

எதிலிருந்து இரட்சிப்பு என்பதையே தெரியாமல் இருப்பது தான் சரியான காமெடி!! பலர் பேசுவதினால் அது உலகத்தாருக்கு சத்தியம், சிலர் பேசுவது தான் வேதத்தின்படி சத்தியம்!! புரீதுங்களா!!

இவர்கள் போதகர்கள் சொல்லி கொடுப்பது போல், இரட்சிப்பு என்றால் இப்ப, மரிப்பதற்கு முன்னமே இவர்கள் "நீதிமான்கள்"ஆகி விடுவதாம், இவர்கள் இனிமேல் பாவமே செய்யாமல் இருப்பதாம் (அப்படியே செய்தாலும் அது எல்லாம் ஏற்கனவே மன்னிக்கப்பட்டாகிவிட்டதாம், இரட்சிப்பு என்பது இவர்களுக்கு பாவம் செய்வதற்குண்டான லைசென்ஸ்), அப்புறம் மற்றவர்களையும் கிறிஸ்தவர்களாக மதமாற்றுவது தான் இவர்களுக்கு தெரிந்த இரட்சிப்பு!!

உங்கள் காமெடியை அப்படியே தொடருங்கள்!! இந்த காமெடியை தான் இன்று கிறிஸ்தவ மண்டலம் முழுவதும் பேசி வருகிறார்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நீங்க யார்? என்ற கேள்வி கேட்டு பல பிரிவுகளை போட்டிருந்தீர்கள். See, our God loves variety! ஆண்டவர் காட்டுப் புஷ்பங்களைக் கூட வித்தியாசமான வண்ணங்களில், வடிவங்களில் படைத்திருக்கிறார். சாலோமோன் கூட அவைகளைப் போல் உடுத்தியிருக்கவில்லை என்று ஆண்டவர் சொல்லவில்லையா? எனவே, அவர் படைத்த மனிதன் நடத்தும் சபைகள் பல வண்ணங்கள், வடிவங்களில் இருப்பதில் ஆச்சர்யம் என்ன??//

ஒரே வேதாகமத்தை வைத்துக்கொண்டு ஆளாளுக்கு ஒரு அர்த்தம் கற்பித்துக்கொண்டு, வேஷம் போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் சாடிக்கொண்டு, குற்றம்பிடித்துக்கொண்டு நான் சரி, அவன் சரியில்லை என்று ஒரு 'வண்ண' சபையிலிருந்து இன்னொரு 'வண்ண' சபைக்கு ஆட்களை இழுத்துக்கொண்டு, துருபதேசம் செய்து ஜனங்களை மோசம் போக்கிக்கொண்டிருக்கும் "அவர் படைத்த மனிதன் நடத்தும்" வேசி சபைகளூக்கும்,

 கிறிஸ்துவின் சரீரமாகிய, வேற்றுமையில்லாத, அப்போஸ்தலர்களை அஸ்திவாரமாக கொண்டு தேவனால் முன்குறிக்கப்பட்டவர்களைக் கொண்டு, தேவனால் கட்டப்பட்டுவரும் கன்னி சபைக்கும் வித்தியாசம் தெரிந்தால் இத்தகைய கூமுட்டைத்தனமான பதில் வந்திருக்காது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நம்மிடம் ஆவி, ஆத்துமா, சரீரம் இருக்கிறது என்று உணர்த்தும் வேதவசனம்.

I தெசலோனிக்கேயர் 5:23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.//

ஆவி ஆத்துமா சரீரம் இல்லை என்று நாங்கள் எப்ப சொன்னோம்?

"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" என்ற வசனத்தில் சரீரத்தில் செய்த பாவத்துக்கு ஆத்துமா சாகுமா? ஆத்துமா சாகவே சாகாது என்றுதானே சொல்கிறீர்கள். உதாரணத்துக்கு வசனம் வேறு, 

//நம் நினைவுகள் எல்லாம் ஆத்துமாவில் பதிவு செய்யப்படுகிறது. மரணம் சம்பவிக்கையில் சரீரத்தை விட்டு, ஆவியும் ஆத்துமாவும் பிரிந்து செல்கிறது.பாதாளத்தில் சரீரம் இன்றி வேதனைப்பட்ட ஐஸ்வர்யவானுக்கு எல்லாம் ஞாபக்ம் இருந்தது. அத்துடன் எல்லா உணர்வுகளும் இருந்தது.//

நம் நினைவுகள் மூளையில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. ஆத்துமாவுக்கு மூளை உண்டா? உணர்வு இருக்கும்பட்சம் ஐம்புலன்களும் இருந்தாக வேண்டும். வாயில்லாமல் பேச முடியாது. இதெல்லாம் இருந்தால் உயிரோடு இருக்க சாப்பிட்டாக வேண்டும். அக்கினியில் போட்டால் அழிய வேண்டும். மேலும் ஆத்துமாவாகவே இருப்பதில் நிறைய அனுகூலங்கள் இருக்கும்போது மீண்டும் எதற்காக சரீரத்தில் உயிர்த்தெழ வேண்டும்? பாதாளத்தில் ஆத்துமாவாக ஏற்கனவே அக்கினியில் வேதனைப்படும் ஒருவனை மறுபடியும் சரீரத்தில் எழுப்பி இன்னொரு தண்டனையா? லூசுத்தனமாக இல்லை?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//சோல்(soul) என்பது நீங்கதான். அதாவது வெளியே தெரியாத உள்ளான உண்மை மனிதன். மூளை hardware. ஆத்துமா software.வெளியே வீரனாக நடித்தாலும், உள்ளே பயந்தாங்கொள்ளியா இருக்கலாம். வெளியே அன்பு காட்டினாலும், உள்ளே வெறுப்பு இருக்கலாம். வெளியே வெயில் அடித்தாலும், உள்ளே மகிழ்ச்சியாக இருக்கலாம்.//

இது எல்லாம் வாசிக்கவும் பேசவும் நல்லா தான் இருக்கு, ஆனால் வசனம் இல்லையே!! வசனம் இல்லாததை தான் கால காலமாக சொல்லிக்கொண்டு அதில் மகிழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்களே!! கிளப்புங்க‌!!

//நம் நினைவுகள் எல்லாம் ஆத்துமாவில் பதிவு செய்யப்படுகிறது. மரணம் சம்பவிக்கையில் சரீரத்தை விட்டு, ஆவியும் ஆத்துமாவும் பிரிந்து செல்கிறது.பாதாளத்தில் சரீரம் இன்றி வேதனைப்பட்ட ஐஸ்வர்யவானுக்கு எல்லாம் ஞாபக்ம் இருந்தது. அத்துடன் எல்லா உணர்வுகளும் இருந்தது.//

இதற்கு தான் கோமாளித்தனமான பதிவுகள் என்று சொல்லுகிறோம்!! இதற்கு முந்தய பதிவில் தான் ஒரு வசனத்தை எழுதினீர்கள், ஆவி பிரிந்து செல்கிறது என்பதற்கு வசனம் இருக்கிறது!! ஆத்துமா பிரிந்து (!!) செல்லுகிறது என்பதை என்ன வேறு மதத்தின் வேதத்திலிருந்து எடுத்து சொல்லுகிறீர்களோ!!

பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று தேவனின் வசனம் சொல்லுகிறது, அப்படி என்றால் பாவம் செய்த ஐசுவரியவானின் "ஆத்துமா" எப்படீங்க பிரிந்து போனது!! வசனத்தின்படி அது செத்து தானே போகவேண்டும்!! நல்லா தான் இருக்கு உங்க காமெடி போங்க‌.............!! கொஞ்சமாவது வசனத்தையும் பார்க்க வேண்டாமா!! சும்மா உங்க சாதுவோ, வி.சே.யோ அல்லது வேறு ஒரு போதகரோ சொல்லுவதை எல்லாம் கேட்டு ஏன் தான் இப்படி............!!??

//Body receives input from the natural world .Spirit receives input from the spritual world (God, Devil,Angels & Evil Spirits).Soul sits between spirit and body.Whatever we receive through natural sensess(body) and spiritual senses(spirit) goes to the soul. Soul is the part through which we understand(or try to understand) the inputs. In that sense, we can say soul is the brain for the body and spirit.//

Ok, Ok, that means when your pastor prays to God, "Please fill this church with souls" you understand that something which sits between spirit and body comes to your church!! Do you really understand things or pretend to understand!!?? Your church is filled with invisible "souls" to your understanding!! You don't understand what you are writing!!

Understand!!

//பெரேயன்ஸ் & சோல் பிரதர்ஸ்,

முத்திரையை எடுக்கலாமா, வேண்டாமா? வசனம் சதாகாலங்களிலும் வாதை என்று சொல்கிறதே? ( 1000 வருட ஆட்சிக்குப்பின் என்ன நடக்கும்? உங்க நம்பிக்கை என்ன? )//

சிஸ்டர் அவர்களே, நீங்கள் மெய்யாலுமே அறிந்துக்கொள்ள கேட்கிறீர்களா!!??

//பிறர் மேல் உங்களுக்குள்ள அன்பை, இரக்கத்தைப் பாராட்டுகிறேன்(உண்மையாதான்!). ஆனால், இதெல்லாம் தெரியாமலா, ஆண்டவர் சுவிசேஷம் சொல்லுங்கப்பா என்று சொன்னார்?? யார் எனக்காகப் போவார்கள் என்று கேட்கிறார்?//

உங்கள் பாராட்டிற்கு நன்றிகள், தேவன் அன்பாகவே இருக்கிறார், அவரின் சாயலில் இருக்கும் ஒவ்வொரு மனிதனிலும் அது நிச்சயமாக இருக்கும்!! இவ்வுளவு பேசுகிறீர்களே (எழுதுகிறீர்களே) உங்கள் பக்கத்து வீடு, உங்கள் தெரு, உங்கள் சந்து, உங்கள் வீதி, உங்கள் வட்டாரம் முழுவதிலும், இயேசு கிறிஸ்து சொன்ன சுவிசேஷத்தை சொல்லி முடித்து விட்டீர்களா!!??

நானே வழியும் ஜீவனும் சத்தியமுமாய் இருக்கிறேன், என்னை அன்றி ஒருவனும் பிதாவிடத்திற்கு (பரலோகம்) வரான் என்று சொன்ன கிறிஸ்து இயேசு வந்தே 2000 ஆண்டுகள் தான் ஆகியிருக்கிறது!! அவருக்கு முன் சுமார் 4000 வருடங்கள், அவர் வந்து சுவிசேஷம் கேட்காமல் மரித்தவர்கள் எல்லாரும், நீங்கள் சொல்லும் சுவிசேஷத்தின்படி பார்த்தோமென்றால் நீங்கள் சொல்லும் நரகத்திற்கு தானே போவார்கள்!!

//5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.//

கொஞ்சம் யோசியுங்கள், உயிரடையவில்லை என்று சொல்லிவிட்டு அது தான் முதலாம் உயிர்த்தெழுதல் என்று சொல்லுவதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா!!??

//நீங்களும் மாறலாம். ஆனால் நீங்க நரகத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கிறீங்க!//

அடம் பிடிக்காட்டியும் நீங்களும் நரகத்திற்கு போயே ஆக வேண்டும்!! நரகம் என்றாலே "மரித்தோரின் நிலை" அல்லது சுலபமாக புரிய வேண்டுமென்றால் "கல்லறை"!! நாங்கள் மாத்திரம் அல்ல, எல்லாரும் போய் தான் ஆக வேண்டும்!!

//7 தடவை மட்டுமல்ல, 7 X 70 முறை பாவம் செய்தாலும், மன்னிப்பு கேட்டால் அவ்ர் மன்னிப்பார். அவர் தயாளனாய் இருக்கையில், நீங்க ஏன் வன்கண்ணனாய் இருக்கிறீர்கள்?//

நியாயமா நாங்கள் தான் இதை போன்ற கேள்விகளை உங்களிடம் கேட்க வேண்டும்!! அவர் உலகத்தையே மன்னிக்க சித்தம் கொண்டிருக்கிறார், நீங்கள் தான் வன்கண்ணனாய் இருக்கிறீகள்!!

//உண்மைதான். சிலுவையில் சில exchange நடக்குது. நம் அழுக்கான நீதி இயேசுவின் மேல் போடப்படுகிறது. இயேசுவின் நீதி நமக்குக் கொடுக்கப்படுகிறது.//

இது வேதத்தில் சொல்லப்பட்ட வசனமா அல்லது சாது அல்லது வி.செ. அல்லது உங்கள் சபை போதகர் கவிதையாக பேசியதா!! இயேசு கிறிஸ்துவின் சிலுவை கிரியைக்கு பதிலாக கிருபை அருளியது!! அந்த சிலுவையில் எல்லா மனுஷர்களுக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக ஆக்கினார் கிறிஸ்து இயேசு!! இது எல்லாம் உங்களுக்கு புரியாது!! எல்லா மனுஷர்களுமா!!?? என்று தான் கேட்ப்பீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆண்டவர் பேசுவது நம் ஆவியுடன்தான்.

ரோமர் 8:16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.//

ஆவியுடன் என்ன பேசுகிறார்? சரீரத்தில் கற்றுக்கொண்ட பாஷையிலா? அவர் நேரடியாக உங்களிடம் பேசினால் பைபிள் எதற்கு? எல்லாவற்றையும் அவரே கற்றுக்கொடுத்துவிடலாமே? போதகர்கள் எதற்கு? அது எப்ப்வோ நடக்கட்டும் என்று சொல்வதற்குப் பதில் ஆவியானவரைக் கேட்டு சொல்லலாமே, நீங்களும் உங்கள் கூட்டமும்தான் பரிசுத்த ஆவியானவரால் போதிக்கப்படுகிறீர்களே?

//பெரேயன்ஸ் & சோல் பிரதர்ஸ்,

முத்திரையை எடுக்கலாமா, வேண்டாமா? வசனம் சதாகாலங்களிலும் வாதை என்று சொல்கிறதே? ( 1000 வருட ஆட்சிக்குப்பின் என்ன நடக்கும்? உங்க நம்பிக்கை என்ன? )

//வெளி 14

9. அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ,//

ஏன் மூக்கிலாவது, காலிலாவது தரித்துக்கொள்கிறவன் தப்பித்து விடுவானா? அம்மணி, வெளிப்படுத்தல் புத்தகத்தை அறியும் முன் முதலில் ஆத்துமா சாகுமா சாகாதா? என்ற கேள்விக்கு பதில் தேவை.

 //ஆனால், இதெல்லாம் தெரியாமலா, ஆண்டவர் சுவிசேஷம் சொல்லுங்கப்பா என்று சொன்னார்?? யார் எனக்காகப் போவார்கள் என்று கேட்கிறார்?//

ஆண்டவர் மரித்தோரை எழுப்புங்கள் என்றும் சொன்னார்... இதுவரை யாரையாவது அப்படி எழுப்பியிருக்கிறார்களா?

மாயக்காரராகிய வேத பாரகரே உங்களுக்கு ஐயோ! என்றும் சொன்னார், 

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினாலுண்டானவர்கள் என்று சொன்னார்... 

அக்கிரம செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்றும் சொன்னார், 

உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட‌..... என்றும் சொன்னார்....

காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.  

நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்;  

அப்பாலே போ... என்றும் சொன்னார்.

வேதத்தில் யார் எப்போது யாருக்குச் சொன்னது என்பது கூடத் தெரியாமல் எல்லாவற்றையும் எனக்கெ சொன்னார் என்று வாதிடுவது எவ்வளவு முட்டாள்தனமானது. அப்போஸ்தலர்களுக்கும், சீடர்களுக்கும் சொன்னதை அவர்கள் செய்தார்கள். போ போய் செய்கிறதை சீக்கிரமாய்ச் செய் என்று சொன்னதால் நீங்கள் போய் காட்டிக்கொடுப்பீர்களோ?

கூறுகெட்ட பதிவுகள் என்று நாங்கள் கொடுத்த தலைப்பை இப்படி தினசரி நிரூபிப்பதற்கு நன்றி!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//சோல் & பெரேயன் பிரதர்ஸ், கண்டிப்பாக வாசிக்க வேண்டும்!

Death in the Bible is always pictured as a separation between two things.

http://www.bible.ca/d-death=separation.htm//

அம்மணி நாங்கள் வேத்ததை மட்டுமே வாசிக்கிறோம். இம்மாதிரி பின்வரும் வசனங்களுக்கு முரணாக இருக்கும் முட்டாள்தனமான ஆயிரம் தளங்கள் உண்டு. ஆவிக்குரிய மரணம், ஆத்தும மரணம், சரீர மரணம் என்று வேதத்தில் இல்லாத வார்த்தைகளை நம்புவதற்கு நாங்கள் மூடர்கள் இல்லை.

வேதம் கூறுவது பாவத்தின் சம்பளம் மரணம்; அவ்வளவே ஆவிக்குரிய மரணம் (தேவனிடத்திலிருந்து 'பிரிக்கப்பட்ட' நிலையாம்), சரீர மரணம், எல்லாம் வேதத்தில் இல்லை.

கோல்டா கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

ஆதி3:19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

பிரசங்கி3:18. மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் அறியும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்திலே எண்ணினேன்.

19. மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

20. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

21. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

9:5. உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.

10. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.

சங்கீதம் 146:4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

இந்த வசனங்கள் பொய்யா?  நினைவுகள் ஆத்துமாவில் பதிந்துள்ளதாம் சாஃப்ட் வேராம்,

 எபிரெயர் 12:15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான "வேர்" முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,

பவுல் இந்த வேரைத்தான் சொன்னாரோ என்னவோ?

சாஃப்ட் வேரையும் பதிக்க ஒரு ஹார்டு வேர் தேவைப்பட்டே ஆக வேண்டும். காற்றில் யோசனைகளை பதிக்க முடியாது அம்மணி.

ஹார்டு வேராகிய சரீரம் அழிந்தால் அதிலுள்ள சாஃட் வேரும் அதோடே அழிந்துவிடும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நீங்க என்ன வேற உலகத்திலயா இருக்கீங்க. இல்ல வேற வேதம் வச்சிருக்கீங்களா?

இருக்கிற 10 பிரிவோட நீங்க 11. அதுவும் மகா மோசமான பிரிவு. ஒவரா உங்களைப் பத்தி நினைச்சிக்காதீங்க.//

நாங்க 10தோட 11 ஆக இருந்தால் நீங்கள் இத்தனை நேரம் எங்களோடு விவாதிக்க மாட்டீர்கள். அதே வேதம்தான் வைத்திருக்கிறோம் ஆனால் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.

எது மோசமான பிரிவு என்று எல்லாருக்கும் தெரியும் காலம் வரும். நாங்க எங்களைப்பற்றியல்ல சிலுவையைக் குறித்தே ஓவரா மேன்மை பாராட்டுகிறோம்,

தேவ அன்பு எல்லாரையும் மீட்கும் என்றால் உங்களுக்கு ஓவர்தான். கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி எல்லாரையும் சுத்திகரிக்கும் என்றால் உங்களுக்கு அது ஓவர்தான்.

ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில பரிசுத்தமே உருவானவர்கள் மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைப்பதுதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவர்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பக்கத்திலிருக்கும் அவர்களுக்கும், தூரத்திலிருக்கும் உங்களுக்கும் ஜெபம் பண்ணியாச்சி. எனவே, எல்லோருக்கும் ஏதோ ஒரு வழியில் சுவிசேஷம் கண்டிப்பாக செல்லும். ஏஞ்சல் டிவி பார்த்தாலே போதுமே!//

என்னமோ போய் சுவிசேஷம் அறிவிக்கனும் என்று தானே சொன்னீர்கள், இப்ப என்ன இப்படி தடாலடின்னு மாறீட்டீங்க!! எல்லாருக்கும் உங்கள் வீட்டிலிருந்து ஜெபிக்கிறேன் என்று சொல்லுவது எல்லாரிடமும் போய் சுவிசேஷம் சொல்லுவது ஒன்றா!! என்ன முட்டாள்த்தனமான கோமாளித்தனமான பதிவு!!

எல்லாருக்கும் சுவிசேஷம் செல்லும் என்கிறீர்கள், அது இப்பவே என்கிறீர்கள்!! ஆனால் அது தேவன் நியமித்த காலத்தில் தான் என்கிறோம் நாங்கள்!! போய் உலகம் எங்கும் சுவிசேஷம் சொல்லி தானே வசனம் சொல்லுகிறது, அப்புறம் என்ன ஜெபம் பண்ணுகிற சுவிசேஷம்!! ஏஞ்சல் டிவி பார்த்தால் "என்னை விட்டு அகன்று போங்கள், அக்கிரம செய்கைக்காரர்களே" என்று தான் பெயர் எடுக்க முடியும்!!

//வசனத்தைக் காட்டினாலும், அது ராஜ்ஜியத்தில்தான் நிறைவேறும் என்று சொல்லி தூக்கிப் போடத்தான் போறீங்க! உங்களுக்கு வசனத்தை சொல்றதே வேஸ்ட்.//

சுத்த பிதற்றல்!! எதை தான் வசனத்துடன் சொல்லுகிறீர்கள்!! வசனம் எழுதுகிறீர்கள், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் ஏதை கேட்க்கிறோமே அதை எழுதுவதில்லை என்கிறேன்!! பாவம் செய்யும் ஆத்துமா சாகும் என்று வசனம் சொல்லுகிறது, ஆனால் நீங்களோ சரீரம் மரித்து ஆவி+ஆத்துமா எங்கேயோ போகுது என்று வசனமே இல்லாமல் கொடுத்துவிட்டு, வசனத்தை சொல்றதே வேஸ்ட் என்கிறீர்கள்!! இதற்கு வசனம் இருந்தால் தானே சொல்லுவதற்கு!!

//அப்ப ஆண்டவர் மரித்தபோது அவர் ஆத்துமா செத்துப் போச்சா?//

அதான் சொன்னேனே, வசனம் என்றால் என்னவென்றால், ஏஞ்சல் டிவியில் சொல்லுவது, உங்கள் சபை பாஸ்டர் சொல்லுவது!! ஏன் வேதத்தில் உள்ளதை எல்லாம் நீங்கள் வசனமாக எடுத்துக்கொள்வதில்லையா!!

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,..............

இந்த வசனம் உங்கள் வேதத்தில் இருக்கிறது பாருங்கள்!! இது இயேசு கிறிஸ்து தன் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் என்கிறது!!

//ஒரு வார்த்தை பல அர்த்தத்தில் உபயோகப்படுத்த முடியும் என்று தெரியாதா? வசனந்தான் தெரியாது என்றால் மொழியும் அப்படித்தானா???//

அப்படி என்றால் ஆத்துமாவிற்கு எத்துனை அர்த்தங்கள் இருக்கிறது என்று ஒரு பட்டியல் போடுங்கள், பிறகு அதை விவாதிக்கலாம்!!

//ஏன் இப்படி அவர்களை நரகத்திற்கு அனுப்புவதிலே குறியா இருக்கீங்க?? எத்தனை தடவைதான் இதே கேள்வியை கேட்பீர்கள்??//

நாங்களா அனுவதர்கு குறியாக இருக்கிறோம்!! நீங்கள் எல்லாரும் சேர்ந்து சொல்லுவதை நான் சொன்னேன்!! நாங்கள் தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லி வருகிறோமே!!

//என்ன சொல்றீங்க?? பைபிளில் லாஜிக் இல்லை என்று சொல்றீங்களா??//

இதை தான் புரட்டல் என்பது!! நான் என்ன பைபிளில் லாஜிக் இல்லை என்றா சொன்னேன்!! அந்த வசனத்தை பாருங்கள்!! அந்த வசனம் மாத்திரம் இல்லை, மொழிப்பெயர்க்கப்பட்ட பல வசனங்கள் இப்படி தான் தப்பு தப்பாக இருக்கிறது!! உங்கள் வேதத்திலும் அடிப்பகுதியில் () எழுதியிருப்பார்கள்!! பார்த்ததே இல்லையா!!

தொடரும்...........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2 35  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard