kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: தீமைக்கு யார் காரணம்? தேவனா?


மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். (இயேசு)

இவ்வசனங்களைப் படிக்கிற சோல்சொல்யூஷன், இப்படியும் சொல்வாரோ?

//இரக்கம்பாராட்டவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை இயேசு மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

இரக்கம் பாராட்டவேண்டுமென்று இயேசு சொல்லித்தான் உலகிலிருப்பவர்கள் இரக்கம் பாராட்டுகிறார்கள். வேறு எந்த ஒரு நபரும் இரக்கம் பாராட்ட சொல்லிக்கொடுக்கவேயில்லை. ஏன் இயேசுவுக்கு முன் கி.பி ல் வாழ்ந்த ஒருவருக்குக்கூட இரக்கம் என்றால் என்னவென்றே தெரியாது. மலைப்பிரசசங்கம் கேட்ட ஐயாயிரம் சொச்சம் ஜனங்கள் அப்படியே இரக்க சீலர்களாய் மாறிவிட்டார்கள்.

மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

இவ்வசனத்தைப் படிக்கிற அன்பு, இவைகளையும் செய்கிறார் (தசமபாகம்) அவைகளையும் விடாதிருக்கிறார்.

கொலோசெயர் 3:12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; 13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.

இவ்வசனங்களைப் படிக்கிற அன்பு இப்படித்தான் சொல்கிறார்.

உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள், இவை எல்லாவற்றின்மேலும் பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத்தரித்துக்கொள்ளுங்கள் ஆனால் இவைகளையெல்லாம் எதிர்பார்க்கிற பிதா இவைகளில் ஒன்றைக்கூட செய்யமாட்டார். 

குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதற்கு எதற்கு இரக்கம், தயவு, மன்னிப்பு? 

மேலும் அன்பு அவர்களின் வேதத்தில் பின் வரும் வசனங்கள் *குடன் காணப்படும்.

1கொரிந்தியர்13:4. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு* நினையாது,

*இரக்கமில்லாத பட்சம் தீங்கு நினைக்கும்.

6. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும்.

7. சகலத்தையும்* தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும்* சகிக்கும்.

*இரக்கம் செய்யாதவர்கள் தவிர‌

I பேதுரு 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை* மூடும்.

*இரக்கம் செய்யாத பாவம் தவிர‌

1 பேதுரு 3:8 நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, 9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள்.

இவ்வசனங்களைப் படிக்கிற அன்பு இப்படித்தான் சொல்கிறார்.

தீமைக்குத் தீமைசெய்து சபியுங்கள்.

//சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

இவ்வசனத்தைப் படிக்கிற சோல்சொல்யூஷன் இப்படியும் சொல்வாரோ?

ஏழைகளுக்கு வாரியிறைத்து கொடுக்கவேண்டுமென்பது தேவன் மனிதனுக்கு இயற்கையாகவே கொடுத்த சுபாவம், அதை சங்கீதக்காரன் மூலமாக போதிக்கவேண்டும் என்ற கட்டாயம் தேவனுக்கில்லை.//

இந்த சங்கீதத்தைப் படித்துவிட்டுத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தார்கள், கொடுக்கிறார்கள் எம் ஜி ஆர் தொடங்கி பில்கேட்ஸ் வரை. ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டாலே போதும் பரலோகம் கியாரண்டி.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//கடனை திருப்பி கொடுக்கும்படியாக தான் அவனை உபாதிக்கிறவர்களிடத்தில் விட்டார்!! ஆனால் நீங்களோ அவனை 2ம் மரணத்திற்குள் விட்டார் என்று அல்லவா போதிக்கிறீர்கள்!!//

ஒருவழியாக “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது உபாதையைத் தருவதாக இருக்கும் என ஒத்துக்கொண்டீர்கள்; அது 2-ம் மரணமா இல்லையா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

உதாரணத்தின்படி, இரக்கமில்லாத ஊழியக்காரன், தனது கடனைத் தீர்க்கும்வரை உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டான் என பார்க்கிறோம்.

உதாரணத்தில் கூறப்பட்டுள்ள கடன் என்பது மனிதனின் பாவங்களைக் குறிப்பதாக உள்ளது. இரக்கமில்லாத ஊழியக்காரனின் கடன் மன்னிக்கப்படவில்லை என உதாரணம் கூறுகிறது. எனவே இரக்கமில்லாத மனிதர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என அறிகிறோம்.

பெரியன்ஸ்:

//கடனை திருப்பி கொடுக்கும்படியாக தான் அவனை உபாதிக்கிறவர்களிடத்தில் விட்டார்!! ஆனால் நீங்களோ அவனை 2ம் மரணத்திற்குள் விட்டார் என்று அல்லவா போதிக்கிறீர்கள்!! இதைத் தான் நீதியை கற்றுக்கொடுக்கப்படும் என்று நாங்கள் சொல்லுகிறோம்!!//

அதாவது, உதாரணத்தில் “உபாதிக்கிறவர்களிடத்தில் விட்டார்” என்பது, நிஜத்தில் “நீதி கற்றுக்கொடுக்கப்படுதல்” என்கிறீர்கள். அதாவது 1000 வருட அரசாட்சியில் “நீதி கற்றுக்கொடுக்கப்படுதல்” என்கிறீர்கள்.

உதாரணத்தின்படி, இரக்கமில்லாத ஊழியக்காரனின் கடன் மன்னிக்கப்படாமல் உபாதிக்கிறவர்களிடத்தில் விடப்பட்டான் எனப் பார்க்கிறோம்.

எனவே நிஜத்தில் “நீதி கற்றுக்கொள்ளும்படியாக” 1000 வருட அரசாட்சியில் விடப்பட்டவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என அறிகிறோம். அதாவது 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்தவர்களில் பலரது பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என அறிகிறோம். அதாவது, பாவங்கள் மன்னிக்கப்படாமலேயே பலர் உயிர்த்தெழுவார்கள் என அறிகிறோம்.

இவ்வுண்மையைத்தான் சோல்சொல்யூஷனின், “அறிந்ததும் அறியாததும்” திரியில் கேட்கப்பட்ட “ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?” எனும் கேள்விக்குப் பதிலாகக் கூறியிருந்தேன்.

எனது பதில் தவறு என்று சொல்லி, “அறிந்ததும் அறியாததும்” திரியில் நீங்கள் பெரும் விவாதம் செய்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

மத்தேயு 18:23-35 வசனங்களிலுள்ள உதாரணம் மற்றும் அதற்கொப்பான நிஜம் ஆகியவற்றை சற்று கவனியுங்கள்.

உதாரணம்

1. ராஜா, 2. ஊழியக்காரர்கள், 3. கடன், 4. கடன் பட்டவன், 5. பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன், 6. 100 வெள்ளிப்பணம் கடன்பட்டவன், 7. பதினாயிரம் தாலந்து கடன்பட்டவனை ராஜா மன்னித்தல், 8. 100 வெள்ளிப்பணம் கடன்பட்ட சக ஊழியக்காரனை மன்னிக்க மறுத்தல், 9. சகஊழியக்காரனை மன்னிக்க மறுத்தவனின் கடனை மன்னிக்க ராஜா மறுத்தல், 10. கடன்களைக் கொடுத்துத் தீருமளவும் உபாதிக்க ஒப்புக்கொடுத்தல்

நிஜம்

1. தேவன், 2. தேவனுக்கு ஊழியம் செய்யவேண்டிய மனிதர்கள், 3. பாவம், 4. பாவம் செய்த மனிதன், 5. ஏராளமான பாவம் செய்தவன், 6. சில குற்றங்களைச் செய்தவன், 7. ஏராளமான பாவம் செய்தவனை தேவன் மன்னித்தல், 8. தனக்கு விரோதமாக சில குற்றங்களைச் செய்தவனை மன்னிக்க மறுத்தல், 9. சகமனிதனின் குற்றங்களை மன்னிக்க மறுப்பவனின் பாவங்களை தேவன் மன்னிக்க மறுத்தல், 10. பாவங்கள் தீரும்வரை உபாதிக்க ஒப்புக்கொடுத்தல்

உபாதை என்பது உதாரணத்திலும் சரி, நிஜத்திலும் சரி, அது வேதனையுள்ளதாகத்தான் இருக்கும்.

அடுத்து, உதாரணத்தில் “அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்” எனும் வரியின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்ப்போம்.

உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒருவன், தனது கடனைத் தீர்க்கும்படி வெளியில் வேலைசெய்து பணம் சம்பாதிக்க இயலுமா? நிச்சயம் இயலாது. ஆக, உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டவன் பணம் சம்பாதிக்கவும் இயலாது, தனது கடனைத் தீர்க்கவும் இயலாது. ஆக, சாகும்வரை அவன் உபாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டிவரும்.

இதுபோலவே, நிஜத்திலும் தன் பாவங்கள் மன்னிக்கப்படாத ஒருவன், உபாதையைத்தான் அனுபவிக்க முடியுமேயொழிய தன் பாவங்களை ஒருபோதும் போக்க இயலாது. எனவே “பாவத்தின் சம்பளம் மரணம்” எனும் தீர்ப்பின்படி அவன் மரணத்தைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த மரணத்தைத்தான் 2-ம் மரணம் என வேதாகமம் கூறுகிறது; நானும் கூறுகிறேன்.

இப்பொழுதாவது “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது 2-ம் மரணமே என ஒப்புக்கொள்வீர்களா, சகோ.பெரியன்ஸ் அவர்களே?



-- Edited by anbu57 on Tuesday 26th of July 2011 09:57:01 AM



-- Edited by anbu57 on Wednesday 27th of July 2011 04:24:11 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உங்கள் கருத்துக்களை தயவு செய்து என்னில் தின்னிக்க முயற்சிக்காதீர்கள் அன்பு சகோதரரே!!

//ஒருவழியாக “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது உபாதையைத் தருவதாக இருக்கும் என ஒத்துக்கொண்டீர்கள்; அது 2-ம் மரணமா இல்லையா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.//

எதை எப்ப பார்க்க வேண்டுமோ அப்ப தான் பார்க்க முடியும்!! உபாதையை தருவதாக சொல்லப்பட்டதை தான் "நீதியை கற்றுக்கொள்வார்கள்" என்று நான் அல்ல வேதம் தான் சொல்லுகிறது!! வேதம் அதை உம்முடைய நியாயத்தீர்ப்பின் நாட்களில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்கிறது!!

//அதாவது, உதாரணத்தில் “உபாதிக்கிறவர்களிடத்தில் விட்டார்” என்பது, நிஜத்தில் “நீதி கற்றுக்கொடுக்கப்படுதல்” என்கிறீர்கள். அதாவது 1000 வருட அரசாட்சியில் “நீதி கற்றுக்கொடுக்கப்படுதல்” என்கிறீர்கள்.//

உவமை என்பது நிஜம் நிழல் கிடையாது!! உவமையையும் வேதத்தில் உள்ள "நிழல்" "நிஜத்தை" போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்!! உவமை என்பது எடுத்துக்காட்டு அவ்வளவே!! கடன் வாங்கியவன் கடனை திருப்புக்கொடுத்தவுடன் மன்னிக்கப்பட்டான் அவன் மரிக்கவில்லை!! ஆனால் கிறிஸ்துவின் ஈடுபலியினால் பாவங்கள் மன்னிக்கப்பட்டு எழும்பும் மனிதர்கள் அவர்கள் மரிக்கும் முன் அறியாத "நீதியை, சத்தியத்தை" கற்றுக்கொள்வார்கள்!! அவர்கள் அதே பாவத்தில் இருந்தால் மரிப்பதற்கும் முன், உயிர்த்தெழுந்த பின் இரு நிலையிலும் எந்த மாற்றமும் இருக்க முடியாது, நீதியை கற்றுக்கொள்ளவும் முடியாது!! ஆகவே தான் அவர்களை புதிதாக பிறக்கசெய்து (உயிர்த்தெழசெய்து) அவர்களுக்கு நீதியை கற்று தந்து நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள செய்யும் கிறிஸ்துவின் தலைமையில் "சபை"!!

நீங்கள் காண்பிக்கும் உவமையில் எந்த விதமான மரணத்தை குறித்து பேசவில்லை!! ஆனால் நீங்களோ இரண்டாம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறீகள்!!

//எனவே நிஜத்தில் “நீதி கற்றுக்கொள்ளும்படியாக” 1000 வருட அரசாட்சியில் விடப்பட்டவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என அறிகிறோம். அதாவது 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழுந்தவர்களில் பலரது பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்காது என அறிகிறோம். அதாவது, பாவங்கள் மன்னிக்கப்படாமலேயே பலர் உயிர்த்தெழுவார்கள் என அறிகிறோம்.//

இது அறிகிறோம் அல்ல "நான் (அன்பு) அறிகிறேன்" என்று சொல்லுங்கள்!! அது என்ன 1 கொரி 15:22ன் படி உயிர்த்தெழுந்தவர்களில் "பலரது பாவங்கள்" மன்னிக்கப்பட்டிருக்காது?? எந்த வசன ஆதாரத்தில் இப்படி ஒரு அறிவு!! நீங்களே ஒரு கருத்தை வைத்து அதை வசனம் இல்லாமலே "அறிகிறோம்" என்கிறீர்கள்!!

//மத்தேயு 18:23-35 வசனங்களிலுள்ள உதாரணம் மற்றும் அதற்கொப்பான நிஜம் ஆகியவற்றை சற்று கவனியுங்கள்.//

நிழல், நிஜம் என்று முதலில் விளக்கி விட்டு, இப்பொழுது எப்படி அதை உதாரணம், நிஜம் என்று மாற்றி விட்டீர்கள்!! ஒரே பதிவில் இத்துனை மாற்றமா!!

//உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒருவன், தனது கடனைத் தீர்க்கும்படி வெளியில் வேலைசெய்து பணம் சம்பாதிக்க இயலுமா? நிச்சயம் இயலாது. ஆக, உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டவன் பணம் சம்பாதிக்கவும் இயலாது, தனது கடனைத் தீர்க்கவும் இயலாது. ஆக, சாகும்வரை அவன் உபாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டிவரும்.//

இதுவுமே உங்கள் கண்டுபிடிப்பே!! வசனத்தை நன்றாக பாருங்கள்!!

மத்தேயு 18:34. அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.

கடனையெல்லாம் தனக்கு கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் என்றால் நீங்களோ அவன் கடனைத்தீர்க்க இயலாது என்கிறீர்களே!! வசனத்தை திரித்திருக்கிறீர்கள்!! தீர்க்குமளவும் என்றால் அவன் தீர்க்கிறான் என்றே அர்த்தமே தவிர "தீர்க்க முடியாது" என்பது உங்களின் கற்பனை!!

//இதுபோலவே, நிஜத்திலும் தன் பாவங்கள் மன்னிக்கப்படாத ஒருவன், உபாதையைத்தான் அனுபவிக்க முடியுமேயொழிய தன் பாவங்களை ஒருபோதும் போக்க இயலாது. எனவே “பாவத்தின் சம்பளம் மரணம்” எனும் தீர்ப்பின்படி அவன் மரணத்தைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த மரணத்தைத்தான் 2-ம் மரணம் என வேதாகமம் கூறுகிறது; நானும் கூறுகிறேன்.//

நீங்களே ஒரு கற்பனையை கொடுத்து அதாவது பாவங்கள் மன்னிக்கப்படாதவனாக உயிர்த்தெழுவான் என்றும் இரண்டாம் மரணத்திற்குள் போகிறான் என்றும் முடிவு செய்கிறீர்கள் எந்த ஒரு வசன ஆதாரத்தையும் கொடுக்காமல்!! பாவத்துடன் எழும்புவது என்பதில் மன்னிப்பு கிடையாது சகோ அன்பு அவர்களே!! பாவத்தின் சம்பளம் மரணம், பாவத்தோடு இருந்தால் மரணம் தான் இருக்க முடியும் உயிர்த்தெழுதல் இல்லை என்கிற அடிப்படை விஷயத்தை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள்!! பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறது வசனம், உயிர்த்தெழுதல் அல்ல‌!!

//உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒருவன், தனது கடனைத் தீர்க்கும்படி வெளியில் வேலைசெய்து பணம் சம்பாதிக்க இயலுமா? நிச்சயம் இயலாது. ஆக, உபாதிக்கிறவர்களிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டவன் பணம் சம்பாதிக்கவும் இயலாது, தனது கடனைத் தீர்க்கவும் இயலாது. ஆக, சாகும்வரை அவன் உபாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டிவரும்.//

உங்களுக்கு தெரியாதா, ஜெயிலில் இருப்பவர்கள் சம்பாதிப்பார்கள் என்று!! சாகும்வரை உபாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டிவரும் என்பதும் உங்களின் கற்பனையே, ஏனென்றால் வசனம் சொல்லுவதை மீண்டும் வாசியுங்கள்!! அவன் பட்ட கடனெல்லாம் திருப்பிக்கொடுக்கும் மட்டும் என்றால் அவன் திருப்பிக்கொடுக்கிறான் என்று தான் அர்த்தமே தவிர அவன் கொடுக்காமல் செத்துப்போகிறான் என்றல்ல!! உங்கள் மனதில் 2ம் மரணம் என்கிற ஒரு போதனையை கிரியைகளுடன் தொடர்புவைத்துக்கொண்டு வைத்திருப்பதால் மாத்திரமே உங்களுக்கு மன்னிப்பு கூட மரணமாக தெரிகிறது!!

//இப்பொழுதாவது “இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு” என்பது 2-ம் மரணமே என ஒப்புக்கொள்வீர்களா, சகோ.பெரியன்ஸ் அவர்களே?//

அங்கே சுத்தி, இங்கே சுத்தி, எதையோ கோர்த்து விட்டு, உங்கள் தியரியில் முடிக்கிறீர்கள்!! தேவனின் நியாயத்தீர்ப்பை கொச்சைப்படுத்தி, அவரால் ஜனங்களை மன்னிக்க முடியாத ஒரு தேவனாக சித்தரிக்கிறீர்கள்!!

நியாயத்தீர்ப்பை "மரணம்" என்று அர்த்தம் கொண்டவர் நீங்கள் ஒருவராக தான் இருக்க முடியும்!! இதை பார்த்தால்,

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

சங்கீதம் 97:8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.

சங்கீதம் 105:7 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

இந்த நியாயத்தீர்ப்புகள் எல்லாம் மரணத்தை (2ம் மரணத்தை) குறிப்பிடுகிறதோ!! நியாத்தீர்ப்புகள் நல்லவைகள் என்றும், நியாத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும் (அதாவது பூமி முழுவதும் 2ம் மரணத்திற்குள் செல்லும் போல்), மரணத்தை (2ம் மரணத்தை) பார்த்து களிகூர்தலும் நடக்கும் போல்!!

ஒரே தரம் மரிப்பதும் அதன் பின் நியாயத்தீர்ப்பு (2ம் மரணம்) அடைய மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது!! இப்படி தான் யோசிக்கிறீகளா!

உவமையை "நிழல்" என்று பாவிப்பது பெரிய கொடுமை!! நிழல் என்பது மாம்சத்தில் உண்மையில் நடந்த நிகழ்வுகள்!! இது போன்ற உவமைகள் அல்ல நிழல்!! அன்று ஆட்டை பஸ்காவை அனுசரித்தார்கள் (இது உவமை அல்ல), இன்று கிறிஸ்துவே அந்த பஸ்கா என்கிறார் அப்போஸ்தலர்!! இது தான் நிழல் நிஜமே தவிர, நீங்கள் நினைத்து விளக்கியது போல் அல்ல‌!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//உவமை என்பது நிஜம் நிழல் கிடையாது!! உவமையையும் வேதத்தில் உள்ள "நிழல்" "நிஜத்தை" போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள்!!//

எனது பதிவில் நிழல் என்ற பதத்தை ஒருபோதும் பயன்படுத்தவில்லை. தேவையில்லாமல் எனது நேரத்தை வீணடிக்காதீர்கள். இயேசு சொன்ன ஒப்பீட்டு உதாரணம், அந்த உதாரணத்தின்படி நடக்கவிருக்கும் நிஜம் இவற்றைத்தான் நான் பதித்துள்ளேன். நான் பதித்ததைப் படிக்கிற மற்ற யாரும் குழம்பமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. உங்களுக்குக் குழப்பமாக இருந்தால், உதாரணம் எனும் வார்த்தைக்குப் பதிலாக உவமானம் எனப் படியுங்கள்.

பெரியன்ஸ்:

//கடன் வாங்கியவன் கடனை திருப்புக்கொடுத்தவுடன் மன்னிக்கப்பட்டான் அவன் மரிக்கவில்லை!!//

கடன் வாங்கியவன் கடனை திருப்பிக்கொடுத்ததாக உவமானத்தில் கூறப்படவில்லை. உவமானத்தில் கூறப்பட்டுள்ள 2 கடன்காரர்களில் ஒருவன் பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன், மற்றொருவன் 100 வெள்ளிப்பணம் கடன்பட்டவன். இருவருமே தங்கள் கடனைத் திரும்பக்கொடுத்ததாக இயேசு சொல்லவில்லை. கடன் என்பது பாவங்களுக்கு உவமானமாகச் சொல்லப்பட்டுள்ளது என நான் கூறுகிறேன். எனவே நிஜத்தில் இருவரின் பாவங்களும் மன்னிக்கப்படவில்லை என நான் அறிகிறேன். (அறிகிறோம் அல்ல அறிகிறேன். திருப்திதானா சகோ.பெரியன்ஸ் அவர்களே? இதில் என்ன ஈகோ வேண்டிக்கிடக்கிறது? எந்த வார்த்தையைப் பயன்படுத்தினாலும் அறியக்கூடியவர்கள் நிச்சயம் அறிவார்கள், அறியக்கூடாதவர்கள் ஒருபோதும் அறியமாட்டார்கள்)

நிஜத்தில் இருவரின் குற்றங்களும் மன்னிக்கப்படவில்லையென்றாலும், அவற்றில் சிறு வித்தியாசம் உள்ளது.

தேவனுக்கு விரோதமாக ஏராளமான பாவம் செய்தவனின் (ராஜாவிடம் பதினாயிரம் தாலந்து கடன்பட்டவனுக்கு ஒப்பானவன்) பாவங்களை தேவன் மன்னிக்க மறுத்தார்.

ஆனால் ஏராளமாகப் பாவம் செய்த அவனுக்கு விரோதமாக சில குற்றங்களைச் செய்தவனின் (பதினாயிரம் தாலந்து கடன்பட்டவனிடம் 100 வெள்ளிப்பணம் கடன்பட்ட உடன் ஊழியக்காரனுக்கு ஒப்பானவன்) குற்றங்களை ஏராளமாகப் பாவம் செய்த இவன் மன்னிக்க மறுத்தான்.

இயேசுவின் உவமானத்திற்கான விளக்கத்தை நான் தனித்தனியே விரிவாகக் கூறியுள்ளேன். அதேவிதமாக சகோ.பெரியன்ஸ்-ம் அவ்வுவமானத்திற்கான விளக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன். அதாவது, ராஜா என்பவர் யார், ஊழியக்காரன் யார், கடன் என்றால் அது என்ன, உபாதித்தல் என்றால் என்ன என்பதையெல்லாம் விளக்கமாகக் கூறும்படி வேண்டுகிறேன்.

பெரியன்ஸ்:

//அது என்ன 1 கொரி 15:22ன் படி உயிர்த்தெழுந்தவர்களில் "பலரது பாவங்கள்" மன்னிக்கப்பட்டிருக்காது?? எந்த வசன ஆதாரத்தில் இப்படி ஒரு அறிவு!! நீங்களே ஒரு கருத்தை வைத்து அதை வசனம் இல்லாமலே "அறிகிறோம்" என்கிறீர்கள்!!//

இப்படியெல்லாம் கேள்வி கேட்டுக்கொண்டிராமல், முதலாவதாக மத்தேயு 18:23-35-ல் கூறப்பட்டுள்ள உவமானத்தின் கதாபாத்திரங்களின் ஒப்பீடுகளை தனித்தனியே கொடுத்து உவமானத்தின் மொத்த கருத்தை விளக்குங்கள். அப்போது உங்கள் கேள்விக்கு தானாகப் பதில் கிடைத்துவிடும்.

பெரியன்ஸ்:

//உங்களுக்கு தெரியாதா, ஜெயிலில் இருப்பவர்கள் சம்பாதிப்பார்கள் என்று!!//

உவமானத்தில் “ஜெயிலில் போட்டதாகக்” கூறவில்லை; “உபாதிக்கிறவர்களிடத்தில்” எனக் கூறுகிறார். மூலபாஷையில் torturer என அர்த்தம் தரக்கூடிய வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. Torturer என்றால் என்ன அர்த்தம் என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

சரி, உங்கள் புரிந்துகொள்தலின்படி அவன் ஜெயிலில் போடப்பட்டு பணம் சம்பாதித்து கடனை அடைத்தான் என்றே வைத்துக்கொள்வோமே! அப்படியானால் அதற்கான நிஜத்தின் விளக்கமென்ன? அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல், அவனது பாவங்களை அவனே போக்கிக்கொண்டான் என்றல்லவா அர்த்தமாகும்? அப்படியானால் ஒருவன் தனது பாவங்களை தானே போக்கிக்கொள்ள முடியும் என்கிறீர்களா?

பெரியன்ஸ்:

//நியாயத்தீர்ப்பை "மரணம்" என்று அர்த்தம் கொண்டவர் நீங்கள் ஒருவராக தான் இருக்க முடியும்!! இதை பார்த்தால்,

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.

சங்கீதம் 97:8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.

சங்கீதம் 105:7 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.

சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.

இந்த நியாயத்தீர்ப்புகள் எல்லாம் மரணத்தை (2ம் மரணத்தை) குறிப்பிடுகிறதோ!! நியாத்தீர்ப்புகள் நல்லவைகள் என்றும், நியாத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும் (அதாவது பூமி முழுவதும் 2ம் மரணத்திற்குள் செல்லும் போல்), மரணத்தை (2ம் மரணத்தை) பார்த்து களிகூர்தலும் நடக்கும் போல்!!//

ஒரு சாராருக்கு நியாயத்தீர்ப்பு எப்படியிருக்கும் என்பதைத்தான் மேற்கூறிய வசனங்கள் கூறுகின்றன. மற்றொரு சாராருக்கு நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என வசனம் சொல்வதையும் சற்று கவனியுங்கள்.

சங்கீதம் 1:4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

சங்கீதம் 76:7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது, 9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது.

(அதென்ன, சிறுமைப்பட்டவர்களுக்கு மட்டும் இரட்சிப்பு? மற்றவர்களுக்கு இரட்சிப்பு கிடையாதா? நியாத்தீர்ப்பைக் கேட்டு பூமி ஏன் பயந்து அமரவேண்டும்?)

எரேமியா 1:16 அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன்.

எசேக்கியேல் 28:21 மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: 22 கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்: சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 23 நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

ரோமர் 2:2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ?

(நியாயத்தீர்ப்பு என்பது எல்லோருக்கும் ஒரு சுகமான அனுபவம் என்றால் சிலர் ஏன் அதற்கு தப்பிக்க நினைக்கவேண்டும்?)

4 அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

(கோபாக்கினை நாள் என்றால் என்ன? கோபாக்கினை என்றால் என்ன?)

6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். 9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.

(உக்கிர கோபாக்கினை, உபத்திரவம், வியாகுலம் என்றால் என்ன?)

2 தெச. 1:7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, 10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

(நித்திய அழிவாகிய தண்டனை என்றால் என்ன? ஒருவேளை இவ்வசனத்திற்கு இணை வசனம் இல்லை எனச் சொல்லப்போகிறீர்களோ?)

2 பேதுரு 3:7  இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.

(இத்தனை தெளிவாக நியாயத்தீர்ப்பினால் உண்டாகும் அழிவைக்குறித்து வசனம் சொல்வதை படித்தபின்னரும், எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பு நல்லதுதான் எனக் கூறப்போகிறீர்களா?)

எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

(விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினை என்றால் என்ன? பட்சித்தல் என்றால் நீதியைக் கற்றுக்கொடுத்தல் என உங்கள் அகராதியில் உள்ளதோ?)

எபிரெயர் 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

(சிலரை மறுபடியும் புதுப்பித்தல் கூடாத காரியமாமே! கூடாது என்றால் யாரால் கூடாது? இயேசுவின் இரத்தத்தாலும் அது கூடாதா? இவர்களுக்கு இயேசுவின் இரத்தம் வீணாகிப் போனதோ? சுட்டெரிக்கப்படுதல் என்றால் என்ன? ஒருவேளை இதற்கும்கூட “நீதியைக் கற்றுக்கொடுத்தல்” எனும் அர்த்தம்தான் உங்கள் அகராதியில் போட்டிருக்கிறதோ?)

செப்பனியா 1:14 கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். 15 அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். 16 அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். 17 மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும்.

செப்பனியா 2:1 விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், 2 நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள்.
3 தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள்.

மல்கியா 4:1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

இத்தனை வசனங்கள் போதுமா? அல்லது இன்னமும் வசனங்கள் வேண்டுமா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

லூக்கா16:1. பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.

2. அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.

3. அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.

4. உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;

5. தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.

6. அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.

7. பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டைவாங்கி, எண்பது என்று எழுது என்றான்.

8. அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.

9. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.

ஆஸ்தியை அழித்துப்போடும் உக்கிராணக்காரனை எஜமான் மெச்சுகிறாரே?

உவமானம் பற்றிய விவாதம் வந்ததால் பதித்தேன்...

அநீதியுள்ள உக்கிராண‌க்காரனாய் இருந்தாலும் புத்தியாய்ச் செய்தால் மெச்சப்படுவானா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

//ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டாலே போதும் பரலோகம் கியாரண்டி.//

நிச்சயமாக, அதிலென்ன சந்தேகம்? ஆனால் ஒரு சிறு திருத்தம்; பரலோகம் அல்ல, நித்திய ஜீவன். அதெப்படி எனக் கேட்கிறீர்களா? கியாரண்டி கொடுப்பது நானல்ல, வாக்கு மாறாத வேதவசனம்.

சங்கீதம் 41:1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். 2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்;

சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். 10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும். (ஆம், தேவனின் இச்செயல் துன்மார்க்கருக்கு மனமடிவாகத்தான் இருக்கும்)

ஏசாயா 58:6  அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். 9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். (இத்தனை தெளிவாகச் சொன்னபிறகுமா நம்மைக் குறித்த தேவசித்தம் புரியவில்லை?)

மத்தேயு 5:7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

மத்தேயு 22:37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38 இது முதலாம் பிரதான கற்பனை. 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.

இவ்வுண்மை தெரியாமல் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் ஆராய்ந்து, “கடைசிகாலங்களில் ஜனங்கள் அன்பில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள் என பவுலின் தீர்க்கதரிசனம் சொல்கிறது, எனவே யாருக்கும் அன்பைக் குறித்து போதிக்கவேண்டியதில்லைஎனும் மாபெரும் உண்மையைக் கண்டு  கொண்டீர்களாக்கும்?)

அன்புகூருதல் எனும் ஒரே செயலில் “நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என இவ்வளவாய் இயேசு சொன்னபிறகுமா மண்டையில் உரைக்கவில்லை? வசனங்கள் சொல்வதை நான் எடுத்துரைத்தால் அதைப் பரிகசிக்கவா செய்கிறீர்கள்? வேதபாரகர் பரிசேயரைவிட மோசமான நிலையில் நீங்கள் இருப்பதாக நான் அறிகிறேன்.

தேவன் நம்மிடம் பிரதானமாக எதை எதிர்பார்க்கிறார், நம்மைக் குறித்த பிதாவின் பிரதான சித்தம் எதுவென்றுகூட தெரியாமல் வேதஆராய்ச்சி பண்ணுகிறீர்களா? போங்கள், போய் உங்கள் வேதாகமத்தில் இந்த வசனம் இருந்தால் எடுத்துப் படியுங்கள்.

மத்தேயு 9:13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்.

மத்தேயு 12:7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.

பெரேயா பட்டணத்தாரைக் குறித்த வேதாகமக் குறிப்பின் அடிப்படையில் இத்தளத்திற்கு “கோவை பெரியன்ஸ்” என்று  பெயர் வைத்துள்ளீர்களே, அந்த பெரேயா பட்டணத்தார் வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்து எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள் என்பதை சற்று படியுங்கள்.

அப்போஸ்தலர் 17:11 அந்தப் (பெரேயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

வேதாகம பெரியன்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து நற்குணசாலிகளானார்கள்; ஆனால் கோவை பெரியன்களோ வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்து, “நித்திய ஜீவனை சுதந்தரிக்க நற்கிரியை தேவையில்லை, நற்கிரியை செய்தவன்/செய்யாதவன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் நித்திய ஜீவன் உண்டு” எனும் “இல்லாத உண்மையை(?)” கண்டுபிடித்து அதை அறிவித்து, மற்றவர்கள் நற்குணசாலிகளாவதற்கு இடறலாயிருக்கிறார்கள்.

ஏதோ வேதவசனங்களின் அடிப்படையில் நான் அறிந்ததைச் சொல்கிறேன்; இதற்குமேல் உங்கள் இஷ்டம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டாலே போதும் பரலோகம் கியாரண்டி.//

 

நிச்சயமாக, அதிலென்ன சந்தேகம்? ஆனால் ஒரு சிறு திருத்தம்; பரலோகம் அல்ல, நித்திய ஜீவன். அதெப்படி எனக் கேட்கிறீர்களா? கியாரண்டி கொடுப்பது நானல்ல, வாக்கு மாறாத வேதவசனம்.

இதற்குத்தான் முதலிலேயே சொன்னேன். நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்று. முதலில் உங்கள் விசுவாசம் என்ன என்பதை தெளிவுபடுத்துங்கள்.

மேற்கண்ட் உங்கள் கூற்று ஏற்க முடியாததாக உள்ளது. ஏழைகளுக்குக் கொடுப்பவன் எப்படி வாழ்ந்தாலும் பரவாயில்லையா? 

அப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

இந்த நாமம் பற்றி அறியத்தேவையில்லையா? 

நீங்கள் சொல்கிற எல்லா 'நற்கிரியை'களையும் செய்ய வேண்டுமா அல்லது அதில் ஒன்றிரண்டு செய்தாலே போதுமா? உங்களைப் போன்று என்னிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் அறியேன் என்ற அளவுக்கு உத்தமமாகவும் இருக்க வேண்டுமா? உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்றால் எறியுமளவு தகுதி வேண்டுமா?

தெளிவு படுத்துங்கள். நாங்களும் வசனங்கள்தான் பதிக்கிறோம். 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இவ்வுண்மை தெரியாமல் நியாயப்பிரமாணத்தையும் தீர்க்கதரிசனங்களையும் ஆராய்ந்து, “கடைசிகாலங்களில் ஜனங்கள் அன்பில்லாதவர்களாகத்தான் இருப்பார்கள் என பவுலின் தீர்க்கதரிசனம் சொல்கிறது, எனவே யாருக்கும் அன்பைக் குறித்து போதிக்கவேண்டியதில்லை” எனும் மாபெரும் உண்மையைக் கண்டு  கொண்டீர்களாக்கும்?)//

தயவு செய்து எழுதாதை நாங்கள் எழுதியதாக எழுத வேண்டாம்!! நீங்கள் அன்பை குறித்து போதித்தாலும் கடைசிகாலங்களில் இது தான் நடக்க இருப்பது என்பது தீர்க்கதரிசனம்!! இந்த தீர்க்கதரிசனம் உங்கள் போதனையால் மாற போவதில்லை!! வேதத்தில் எழுதியதை நீங்கள் மாற்றும் அளவிற்கு வல்லவரோ!!?? அல்லது உங்களின் போதனை தான் மாற்றிவிடுமோ!!?? மேலும் யாரும் அன்பு செய்யாதீர்கள், எல்லாரும் பாவத்திலே நிலைத்திருங்கள் என்று தாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மேல் சுமத்தும் குற்றம் அர்த்தமற்றது, உங்கள் கற்பனையை எங்கள் மேல் தினிக்க வேண்டாமே!! கிரியை செய்வதே தேவனின் கிருபையினால் தான் என்று வசனத்துடன் காண்பித்தாலும் நீங்கள் சுய கிரியையை போதிக்கிறீர்கள்!!

2 கொரி 1:9ஐ விளக்க சொன்னால், அதை உங்கள் கோட்பாட்டில் திரித்து தீர்த்து விட்டீர்கள்!! நாங்கள் ஒரு வசனம் வைத்தால் அதற்கு அர்த்தம் கேட்டால் நீங்கள் ஒரு வசனத்தை வைத்து அதற்கு உங்கள் அர்த்தம் தருகிறீர்கள்!! சகோ சோல் சொல்யூஷன் தீமையை குறித்தும், கிருபையை குறித்தும் எத்துனை வசனங்கள் கொடுத்தார், அது உங்கள் வேதத்தில் இல்லையா என்று எங்களுக்கு கேட்க தெரியாதா!!??

தேவன் இரட்டை வேஷ தாரி அல்ல!! ஒன்று அவர் அன்பாகவே இருக்க முடியும் அல்லது நீங்கள் வசனங்களை புரிந்துக்கொண்டபடி அவர் கொடுரூமான ஒரு தேவனாக இருக்க முடியும்!! ஆனால் நீங்களோ நீங்கள் பாராட்டும் அன்பை தேவனின் அன்பை விட உயர்ந்ததாக சித்தரிக்கிறீகள்!! உங்கள் நற்கிரியை சொல்லுகிற தேவன், தான் ஒன்றும் செய்வதில்லையோ!! இது தான் உங்கள் புரிந்துக்கொள்ளுதலோ!! அல்லது அவர் கிரியை செய்ய மனிதர்களின் நடவடிக்கையை பொறுத்திருக்கிறதா!!??

//அன்புகூருதல் எனும் ஒரே செயலில் “நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது” என இவ்வளவாய் இயேசு சொன்னபிறகுமா மண்டையில் உரைக்கவில்லை? வசனங்கள் சொல்வதை நான் எடுத்துரைத்தால் அதைப் பரிகசிக்கவா செய்கிறீர்கள்? வேதபாரகர் பரிசேயரைவிட மோசமான நிலையில் நீங்கள் இருப்பதாக நான் அறிகிறேன்.//

இப்படி எழுதுவதிலேயே உங்களின் அன்பு வெளிப்படுகிறது!! நீங்கள் பாராட்டும் அன்பு எதிர்ப்பார்ப்புடையது!! உங்களை பாராட்டினால் நீங்கள் அன்பு செய்வீர்கள், உங்களை எதிர்த்தால் "மண்டையில் உரைக்கவில்லை" என்று தான் சொல்லுவீர்கள்!! இதை தான் மனிதனின் பூரண‌மில்லாத அன்பு என்கிறேன்!! நீங்கள் அன்பை வெளிப்புற அடையாளமாக தேடுகிறீர்கள், உங்கள் அன்பின் கிரியையின் மேல் இருக்கும் நம்பிக்கை கூட உங்களுக்கு தேவனின் அன்பின் மேல் நம்பிக்கை இல்லை!! ஆகவே தான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வசனத்தை காண்பித்தால் அத்துடன் சித்தம் தான்.........ஆனால் என்று தடைகல்லாக இருக்கிறீகள்!! தேவனின் அன்பை சொல்லுவதை காட்டிலும் உங்களின் அன்பை பிரதானப்படுத்துகிறீகள்!! ஏன் நாங்கள் காட்டிய வசனம் உங்களுக்கு புரியவில்லையா என்று நீங்கள் கேட்ட பாணியில் நானும் கேட்கலாம், ஆனால் உங்களுக்கு எனக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும்!! நீங்கள் அன்பை வெளிப்படையான கிரியையில் எதிர்ப்பார்க்கும் உலகத்தாரின் அன்பை விரும்புகிறீகள் என்பது உங்களின் எழுத்து நிச்சயிக்கிறது!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதை வசனத்துடன் காண்பித்தால் அதற்கு ஒரு தான்..........ஆனால் போட்டு தேவனின் அன்பையே இல்லை என்று காண்பிப்பவராக நீங்கள் இருந்துக்கொண்டு தயவு செய்து நீங்கள் அன்புள்ளவராக இருக்கிரீர்கள் என்று தம்பட்டம் அடிக்க வேண்டாம், உங்களின் எழுத்து நிச்சயமாக நீங்கள் போதிக்கும் அன்பை வெளிப்படுத்தவில்லை!! நாங்கள் தேவனின் கிருபையை போதித்தால் அதை காட்டிலும் மனிதனின் கிரியை பெரிது என்று நீங்கள் எத்துனை வசனங்கள் காண்பித்தாலும் அந்த அன்பு தேவனின் கிருபையினால் மாத்திரமே சாத்தியம் என்று நாங்கள் வசனங்களை காண்பித்திருக்கிறோம்!! 2 தீமோத்தேயு 1:9 அதற்கு ஏற்ற வசனம் தான்!! ஆனால் அதை பூசி மழுப்பிவிட்டீர்களே!!

தேவனின் கிருபையை புரிந்துக்கொள்ளாமல் மனிதர்களின் கிரியை மேல் நம்பிக்கை வைத்திருக்கும் உங்களுக்கு நாங்கள் வேதபாரகர் பரிசேயரைவிட மோசமான நிலையில் இருப்பதாக தான் தெரியும்!! நாங்கள் செய்யும் கிரியையை இங்கே பட்டியலிட்டு தான் நாங்கள் பெயர் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை!! எங்கள் விஷயத்தை தேவன் பார்த்துக்கொள்வார், நாங்கள் யார், எந்த நிலையில் இருக்கிறோம் என்று நீங்கள் மனித பார்வையில், கிரியையின் பார்வையில் எங்களை தீர்க்க வேண்டாம் என்று சொல்லிக்கொள்ள பிரியப்படுகிறேன்!! தேவனின் கிருபையை புரிந்துக்கொள்ளாதவர் அன்பை எப்படி தான் புரிந்திருக்கிறீரோ!!

நீங்கள் அன்பை போதித்தாலும் சரி, நாங்கள் அன்பை போதிக்கவில்லை என்றாலும் சரி 2 தீமோத்தேயு 3ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் நடக்க தான் போகிறது!! தேவனின் முன்குறித்தலில் இருப்பவர்கள் நிச்சயமாக அன்பில் நிலைத்திருப்பார்கள், உங்கள் போதனை இல்லாமலே!! உங்களுக்கு தான் தேவனின் முன்குறித்தல் மேல் நம்பிக்கை இல்லையே, வசனத்தை காண்பித்தாலும் அது எல்லாம் கிடையாது என்றுதானே சொல்லுகிறீர்கள்!! தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாது என்கிறீர்களா!!

2 தீமோத்தேயு 1:9. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

எத்துனை தெளிவாக "நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல்" என்கிறது வசனம்!! ஆனால் நீங்கள் உங்களின் கிரியை பிரதானப்படுத்துகிறீகளே!! உடனே இதற்கு இரண்டு இரட்சிப்பு என்று ஏதோ சம்பந்தமில்லாத விளக்கத்தை கொடுத்து வேறு வசனங்களுடன் தொடர்பு படுத்துகிறீர்கள்!! நீங்கள் கிரியை செய்வதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்பதை சொல்லவே இந்த வசனம்!! கிரியை செய்வது எல்லா மதத்த்திலும், எல்லா மார்க்கங்களிலும் தான், ஆனால் நீங்கள் அந்த கிரியை மேல் மேன்மை பாராட்ட வேண்டாம், ஏனென்றால் அவரின் இரட்சிப்பு உங்களின் கிரியையினால் அல்ல, மாறாக அவரின் தீர்மானத்தின்படி தான் என்கிறது வசனம்!!

அப்போஸ்தலர் 17:11 அந்தப் (பெரேயா) பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்.

Original Word: εὐγενής, ές
Part of Speech: Adjective
Transliteration: eugenes
Phonetic Spelling: (yoog-en'-ace)
Short Definition: of noble birth, noble
Definition: (a) of noble birth, of high birth, (b) noble in nature.

நீங்கள் கிரியை விரும்புவதால் உங்கள் இஷ்டத்திற்கு வசனத்திற்கு அர்த்தக் கொடுக்க வேண்டாம்!! நீங்களும் மூல பாஷையை ஆறாய்கிறவராக இருந்துக்கொண்டு "நற்குணசாலிகளாயிருந்தார்கள்" என்றவுடன் கிரியைகளில் இறங்கி விட்டார்கள் என்று அர்த்தம் கொண்டிருந்தால் தயவு செய்து மீண்டும் ஒரு முறை போய் பாருங்கள்!! அங்கே எந்த கிரியையும் சொல்ல இந்த வார்த்தையை சொல்லவில்லை!! அவர்களின் உயர்ந்த பன்பை காண்பிக்கவே, அதாவது எவனாவது வந்து மனித போதனை கொடுத்தால் அதை அப்படியே காதுக்கு நல்லா இருக்குதே என்று கேட்டுக்கிட்டு உட்காராமல், உயரிய பன்பினால் (இன்னும் சொல்ல போனால் அதிகமாக படித்தவர்களாக இருந்தவர்களானபடியால்) இப்படி பிரசங்கிப்பது வேதத்தில் இருக்கிறதா என்பதை தேடிப்பார்த்தார்கள் என்பதை சொல்லவே நற்குணசாலிகள் என்கிற தவறான ஒரு மொழிப்பெயர்ப்பை தந்திருக்கிறார்கள்!! அந்த வார்த்தைக்கு சரியான மொழிப்பெயர்ப்பு "மேன்மையுள்ளவர்களாக" இருந்தார்கள் என்பது தான்!! தயவு செய்து தளத்திற்கு என்ன பெயர் வைத்திருக்கிறோம் என்கிற நக்கலும் நைய்யாண்டியும் தேவையில்லை என்று நினைகிறேன்!! இதை நீங்கள் பல முறை செய்து இருக்கிறீகள்!! இவ்வுளவு தானா உங்கள் போதனைக்கும் உங்கள் செயலுக்கும் உண்டான தொடர்பு!!

//வேதாகம பெரியன்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து நற்குணசாலிகளானார்கள்; ஆனால் கோவை பெரியன்களோ வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்து, “நித்திய ஜீவனை சுதந்தரிக்க நற்கிரியை தேவையில்லை, நற்கிரியை செய்தவன்/செய்யாதவன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் நித்திய ஜீவன் உண்டு” எனும் “இல்லாத உண்மையை(?)” கண்டுபிடித்து அதை அறிவித்து, மற்றவர்கள் நற்குணசாலிகளாவதற்கு இடறலாயிருக்கிறார்கள்.//

யாரும் கிரியை செய்யவேண்டாம், எல்லாரும் பாவம் செய்யுங்கள் என்று நாங்கள் எழுதி போதித்ததாக ஒரு இடத்தை காண்பியுங்கள்!! உங்கள் புரிந்துக்கொள்ளுதலை கேட்கவில்லை, நாங்கள் இப்படி நேரடியாக எழுதியிருந்தால் காண்பியுங்கள்!! ஓஹோ, உங்களுக்கு உங்கள் கிரியை மேல் இருக்கும் விசுவாசமும் நம்பிக்கையும் தேவனின் கிருபையையே மட்டுப்படுத்தும் அளவிற்கு இருக்கிறதே!! எல்லாரையும் இரட்சிக்க கிறிஸ்து இயேசு இந்த பூமிக்கு வந்தார் என்று வசனம் சொன்னால் ஒரு தான்.........ஆனால் போட்டு, தேவனின் சித்தத்தை மனிதனின் போதனைகளுக்கும் செயல்களுக்கும் கீழானது என்று போதிப்பது உங்களுக்கு தேவன் மேல் விசுவாசம் இல்லாமல் உங்களின் கிரியைகளின் மேல் உள்ள நம்பிக்கையை தான் வெளிப்படுத்துகிறது!! தேவனின் கிருபையும் அவரின் சித்தமும் இல்லாமல் மனிதர்களின் கிரியைகளினால் இரட்சிக்கப்படுவீர்கள் என்கிற நவீன போதனையை தான் நீங்கள் தருகிறீர்கள்!! உங்களின் கிரியை சொல்லி, அதில் மேன்மை பாராட்டி, கிறிஸ்து இயேசுவின் இரத்தம் சிந்துதலை அவமாக்கும் ஒரு போதனையை தான் தருகிறீகள்!! கிறிஸ்து இயேசுவின் ஈடுபலி எல்லா மனுஷரையும் இரட்சிக்க முடியாது என்று ஒரே ஒரு வரியை எழுதுங்கள், நான் என் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்!!

தேவனால் எல்லாம் கூடும் என்று வசனம் சொன்னால், கூடும் தான்............ஆனால் என்று உங்களின் கிரியை மேன்மைப்படுத்துபவர் தான் நீங்கள்!! நாங்கள் எழுதாதை எழுதுவது தான் உங்களுக்கு தெரிந்த கிரியையா!!

//ஏதோ வேதவசனங்களின் அடிப்படையில் நான் அறிந்ததைச் சொல்கிறேன்; இதற்குமேல் உங்கள் இஷ்டம்.//

அப்படி என்றால் நாங்கள் வேத வசனம் சொல்லாமல் வேறு எதை சொல்லுகிறோம்!! கிருபை பெறாத மனுஷன் கிரியை செய்ய முடியாது என்பது எங்களின் நம்பிக்கை!! அந்த கிருபையான அழைப்பிற்கு ஒரு சிறிய கூட்டம் நியமிக்கப்பட்டிருப்பதால் தான் கடைசிக்காலங்கள் கொடியதாக இருக்கும் என்று வசனம் கூறுகிறதை எடுத்து சொன்னால், உங்கள் கிரியையின் மேன்மை அதை ஏற்க செய்ய மறுக்கிறது!! அய்யா வசனங்களை நாங்களும் தான் எழுதுகிறோம்!!

எந்தவிதமான் ஆனா....ஆவன்னா..... என்று இல்லாமல் "கிறிஸ்து இயேசுவின் ஈடுபலி எல்லா மனுஷரையும் இரட்சிக்க முடியாது என்று ஒரே ஒரு வரியை எழுதுங்கள், நான் என் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்!!"



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//வேதாகம பெரியன்கள் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து நற்குணசாலிகளானார்கள்; ஆனால் கோவை பெரியன்களோ வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்து, “நித்திய ஜீவனை சுதந்தரிக்க நற்கிரியை தேவையில்லை, நற்கிரியை செய்தவன்/செய்யாதவன் என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் நித்திய ஜீவன் உண்டு” எனும் “இல்லாத உண்மையை(?)” கண்டுபிடித்து அதை அறிவித்து, மற்றவர்கள் நற்குணசாலிகளாவதற்கு இடறலாயிருக்கிறார்கள்.//

வேதத்தில் இல்லாததைச் சொன்னதாக பதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கீழ்கண்ட வசனங்களின் அர்த்தம்தான் என்ன? எல்லாரும், எல்லா மனுஷரும், மாம்சமான யாவரும் என்றால்கூடவா தெரியாது?

யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

யோவான் 17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

கொலோசெயர் 2:15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.

லூக்கா18:26. அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

27. அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

லூக்கா 15:10 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

மேற்கண்ட வசனங்களை ஏற்கனவே பல முறைகள் பதித்தாயிற்று. உலகில் நடக்கும் அத்தனை தீமைகளுமே தேவ சித்தத்தின்படிதான் என்பதையும் விளக்கியாயிற்று. தீமையே இல்லாத ஒரு ராஜ்ஜியத்தில் மாம்சமான யாவரும், பிரேதக்குழியிலிருக்கும் யாவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு, 

சங்கீதம் 65:2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

ஏசாயா 40:5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.

எரேமியா 32:27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

யோவேல் 2:28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; 

மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் அவரால் கூடாதது ஒன்றுமில்லை. 

வெறும் நன்மை செய்தால் மட்டும் போதாது; தேவனுடைய அன்பையும், அவரது ஞானம் மற்றும் வல்லமையையும், பூமியின்மேல் சமாதானமும், மனுஷர்பேரில் உள்ள பிரியத்தையும் உணர முதலாவது அவரது சித்தம் வேண்டும். கிரியைகளை எதிர்பார்த்து செய்வது மனித அன்பு. எதையுமே எதிர்பார்க்காமல் நேசிப்பதே தேவ அன்பு. அவரால் அனுப்பப்பட்ட இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி மனுக்குலத்தை சுத்திகரித்துவிட்டது.

சகோதரர் சொன்னதுபோல. "கிறிஸ்துவின் ஈடுபலி எல்லாரையும் இரட்சிக்கத் தகுதியில்லாதது", அவரால் உலகத்தை இரட்சிக்க முடியவே முடியாது, அது முழுக்க முழுக்க மனிதனின் சித்தம் சம்பந்தப்பட்டது என்று ஒரே பதிவு பதித்தால் இவ்விவாதத்தை நிறுத்திக்கொள்ளலாம்.

தீங்கும், தீமையையும் தேவனுடைய சித்தம் என்றும், உலகில் நடக்கும் சகலமும் அவருடைய சித்தத்தின்படியேதான் நடக்கிறது என்றும் விளக்கியாயிற்று. 

ஏதோ வேத வசனங்களின் அடிப்படையில் நாங்கள் அறிந்ததைச் சொல்லுகிறோம். இதற்குமேல் உங்கள் இஷ்டம். 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

//எந்தவிதமான ஆனா....ஆவன்னா..... என்று இல்லாமல் "கிறிஸ்து இயேசுவின் ஈடுபலி எல்லா மனுஷரையும் இரட்சிக்க முடியாது என்று ஒரே ஒரு வரியை எழுதுங்கள், நான் என் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்!!"//

நீங்கள் முடிக்க வேண்டாம் சகோதரரே! நானே முடித்துக்கொள்கிறேன். முடிப்பதற்கு முன் சில வசனங்கள் மட்டும்.

யோவான் 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.

ஆனால்,

லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

-----------------------------------------------

லூக்கா 3:5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக்காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம்,

ஆனால்,

லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

-----------------------------------------------

I தீமோத்தேயு 2:4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

ஆனால்,

லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

-----------------------------------------------

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

ஆனால்,

மத்தேயு 25:46 இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.

-----------------------------------------------

யோவான் 17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

ஆனால்,

மத்தேயு 5:16 மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

யோவான் 12:25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

-----------------------------------------------

யோவான் 3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

ஆனால்,

18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.

20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்

மத்தேயு 23:14  மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள்.

15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

மாற்கு 3:29 ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்.

-----------------------------------------------

யோவான் 12:47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன்.

ஆனால்,

48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.

-----------------------------------------------

லூக்கா18:26. அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.

27. அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

ஆனால்,

லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

-----------------------------------------------

ரோமர் 5:19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.

ஆனால்,

ரோமர் 2:11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. 12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

-----------------------------------------------

மன்னிக்கவும் சகோதரரே! இந்த “ஆனால்” வார்த்தையைப் பயன்படுத்தமல் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. இப்படி பயன்படுத்துவது இயேசு கற்றுத்தந்த பாடம்.

சாத்தான்:

மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

இயேசு:

மத்தேயு 4:4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

சாத்தான்:

மத்தேயு 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: 6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

இயேசு:

மத்தேயு 4:7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.

நான் தந்த வசனங்களுக்குப் பதில் சொல்லாமல், நான் கிரியையை மேன்மைப்படுத்துவதாகச் சொல்லி, அபாண்டமாக என்னைக் குற்றம்பிடிப்பதில்தான் கவனமாயிருக்கிறீர்கள். ஏராளமான வசனங்களுக்குப் பதில் சொல்லாமல், “மண்டையில் உரைக்கவில்லை” எனும் எனது விமர்சனத்தைத்தான் பெரிதுபடுத்துகிறீர்கள். வசனங்களைப் புரிந்துகொள்ளக்கூடாமல் இப்படி இருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறிவிட்டேன்; அது உங்களைப் புண்படுத்தினால் தயவு செய்து மன்னியுங்கள். 



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

லூக்கா 9:24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

அன்பு சகோதரரே, நாங்களும் இதை தான் சொல்லுகிறோம்!! நாமாக இரட்சிக்கப்பட முடியாது என்று!! நீங்கள் கிரியை என்று போதிக்கிறீர்கள், அதையே சிலர் அற்புதம் செய்தல் என்றும், தீர்க்கதரிசனம் சொல்லுவோர் என்று கைகளை வைத்து வியாதிஸ்தரை சுகப்படுத்துகிறோம் என்கிறார்கள், அதாவது அவர்களின் கிர்யைகளினால் இரட்சிப்பை தேடுகிறார்கள்!! இப்படி செய்தால் இது தான் சட்டம் என்கிறார் கிறிஸ்து, நியாயத்தீர்ப்பு கொடுக்கவில்லை!! இப்படி மனுஷரால் நினைத்தாலும் கூடாதது தான், ஆனால் தேவனால் எல்லாரையும் இரட்சிக்க கூடும் என்கிற வசனத்தை தான் நாங்கள் சொல்லுகிறோம்,

லூக்கா18:26. அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். 27. அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.

நீங்கள் இன்னும் மனிதர்கள் கிரியைகளிலேயே இருக்கிறீர்களே சகோ அன்பு அவர்களே!! நீங்கள் எத்துனை தடவை லூக்கா 9:24ஐ சொன்னாலும், லூக்கா 18:26 தான் அதற்கு பதில்!! மனிதர்களாக நினைத்தால் தங்களை இரட்சித்துக்கொள்ள முடியாது!! இன்று முக்தி என்றும் இரட்சிப்பு என்றும் பல மதங்கள் பல மார்கங்கள் தங்கள் கிரியைகளினால் தான் தேடிக்கொண்டு இருக்கிறது, ஆனால் நமக்கு தான் தேவனின் கிருபையினால் உண்டாகும் இரட்சிப்பு தெரியும், அந்த இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் அல்ல, உலகத்துக்கும் என்பதை தான் நாங்கள் நற்செய்தியாக சொல்லுகிறோம்!! ஆனால் அவர்களை போலவே நம் கிரியைகளினால் தான் இரட்சிப்பு என்று நீங்கள் விவாதம் செய்கிறீகள்!!

//மன்னிக்கவும் சகோதரரே! இந்த “ஆனால்” வார்த்தையைப் பயன்படுத்தமல் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. இப்படி பயன்படுத்துவது இயேசு கற்றுத்தந்த பாடம். //

சாத்தான் எழுதியதை எழுத்தின்படியே எடுத்துக்கொண்டவிதத்தை தான் இயேசு கிறிஸ்து திருத்தம் செய்து தருகிறார் என்பதை வசனத்தை கவனித்து பார்த்தீர்கள் என்றால் தெரியும்!! இயேசு கிறிஸ்து "ஆனால்" எல்லாம் உபயோகிக்கவில்லை மாறாக‌ சாத்தான் தான் "ஆனால்" என்கிற வார்த்தையை பயன்ப்படுத்துகிறான் என்பதை கவனிக்கவில்லையா!!??

மத்தேயு 4:3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.

3 The tempter came to him and said, “If you are the Son of God, tell these stones to become bread.”

Satan uses a IF conditiion!!


மத்தேயு 4:5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: 6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.

6 “If you are the Son of God,” he said, “throw yourself down. For it is written:


Again Satan uses a IF condition. God never gave a condition for Salvation for it is His grace which completes the Salvation process!!

இப்படி "ஆனால்" (IF) என்று எந்த கண்டிஷனும் இல்லாமல் தான் வசனம் இருக்கிறது,

1 தீமோத்தேயு 2:3. நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.

இப்படி தேவனுக்கு நன்மையும் பிரியமுமாயிருப்பது ஏன் உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது??

ரோமர் 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

இந்த பிரபஞ்சம் தன் கிரியைகளை சார்ந்து இருக்கிறது, அதை போல் நீங்களும் இல்லாமல் தேவனின் நன்மையும் பிரியமுமான சித்தம் என்ன வென்று அவர் சொல்லிய இரட்சிப்பின் வசனத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்!! தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தமே எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையசெய்வது என்று வசனங்கள் சாட்சியாக இருக்கிறதே!! இன்னும் என்ன வேண்டும்!!

நீங்கள் எத்துனை தான் வசனங்களை காண்பித்தாலும், உங்களால் நான் கேட்டுக்கொண்டதை எழுத முடியாது, அதாவது, கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லா மனிதர்களும் இரட்சிக்க முடியாது என்பதை உங்களால் எழுத முடியாது, ஏனென்றால் அப்படி ஒரு வரி எத்துனை அபத்தமானது என்பதை நீங்களும் தெரிந்தவர்களாக தான் இருப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

//இயேசு கிறிஸ்து "ஆனால்" எல்லாம் உபயோகிக்கவில்லை மாறாக‌ சாத்தான் தான் "ஆனால்" என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறான் என்பதை கவனிக்கவில்லையா!!??//

இந்த சிறு விஷயத்திலிருந்தே அறிந்துகொள்ளலாம், “விஷயங்களைப் புரிந்துகொள்ளும் சக்தியில் நீங்கள் எத்தனை பலகீனமாக இருக்கிறீர்கள்” என்று.

எந்தவித ஆனா...ஆவன்னா இல்லாமல்” என நீங்கள் condition போட்டது, if எனும் வார்த்தைக்கல்ல, but எனும் வார்த்தைக்காகவே என்பது உங்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் if எனும் வார்த்தையைச் சொல்லி, சாத்தான்தான் அதைப் பயன்படுத்தினான் எனச் சொன்னால் நான் என்ன செய்வது?

நான் வசனங்களுக்கிடையே “ஆனால்” போட்டு ஏராளமான வசனங்களைத் தந்துள்ளேனே, அவற்றில் ஏதாவது ஒரு இடத்திலாவது if எனும் அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தியுள்ளேனா என சற்று கூர்ந்து கவனியுங்கள். அத்தனை இடத்திலும் but எனும் அர்த்தத்தில்தான் பயன்படுத்தியுள்ளேனேயொழிய if எனும் அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்பதை சாதாரண அறிவு படைத்த அனைவரும் அறிவார்கள்.

இயேசுவுங்கூட “ஆனால்” எனும் வார்த்தையை நேரடியாகப் பயன்படுத்தாவிடினும், அவரது எதிர்வாதத்தில் “ஆனால்” எனும் வார்த்தை மறைந்திருப்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் அதைச் சுட்டிக்காட்டினேன். ஆனால் (இந்த ஆனால் if அல்ல but) இச்சிறு விஷயத்தைக்கூட நீங்கள் புரிந்துகொள்ள மறுப்பது எனக்கு மிகவும் ஆச்சரியமாயுள்ளது.

உங்கள் புரிந்துகொள்தலுக்காக, சாத்தானுக்கு இயேசு சொன்ன பதிலை ஆங்கில வேதாகமத்திலிருந்து எடுத்துப் போடுகிறேன்; அதன் பின்னராவது உங்களுக்குப் புரிகிறதா எனப் பார்ப்போம்.

Matt 4:4 Jesus answered, "It is written: 'Man does not live on bread alone, but on every word that comes from the mouth of God.'"  NIV

Matt 4:7 Jesus answered him, "It is also written: 'Do not put the Lord your God to the test.'"  NIV

ஒரு வசனத்தைச் சொன்னால் “ஆனால் இப்படியும் (but, also)” வசனம் சொல்கிறதே எனும் விதமான வாதம் வேண்டாம் என்றுதான் நீங்கள் condition போட்டீர்கள்; ஆனால் இயேசுவுங்கூட அப்படித்தான் வாதம் செய்தார் என்பதை நான் சொல்லியிருந்தேன். நீங்களோ அதைப் புரிந்துகொள்ளாமல் வேறு கோணத்தில் திசை திருப்பி விட்டீர்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோ.பெரியன்ஸ் அவர்களே!

மொத்தத்தில் எதிர்வாதம் செய்ய முடியாத ஒரு நிலைக்கு வந்து விட்டதால்தான்: என்னைத் தனிப்பட்ட முறையில் நான் கிரியையை மேன்மைப்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகிறீர்கள், உவமானத்தைச் சொல்லி விளக்கினால் சம்பந்தமேயில்லாமல் “நிழல், நிஜம்” என்று சொல்லிக் குழப்புகிறீர்கள், “ஆனா ... ஆவன்னா” இல்லாமல் இதைச் சொல்லமுடியுமா எனக் கேட்கிறீர்கள், உங்கள் வசனங்களுக்கு எதிராக நான் வைத்துள்ள ஏராளமான வசனங்களுக்கு விளக்கம் சொல்லாதிருக்கிறீர்கள்.

மிக முக்கியமாக, மத்தேயு 18:23-35-லுள்ள உவமானத்திற்கு விரிவான விளக்கம் தர மறுக்கிறீர்கள். இறுதியாக ஒரே ஒரு வேண்டுகோள்: இந்த உவமானத்திற்கான உங்கள் விரிவான விளக்கத்தைத் தாருங்கள்.

முடிந்தால் நியாயத்தீர்ப்பு சம்பந்தமாக நான் தந்துள்ள வசனங்களுக்கும் விளக்கம் தாருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

//எந்தவிதமான ஆனா....ஆவன்னா..... என்று இல்லாமல் "கிறிஸ்து இயேசுவின் ஈடுபலி எல்லா மனுஷரையும் இரட்சிக்க முடியாது என்று ஒரே ஒரு வரியை எழுதுங்கள், நான் என் விவாதத்தை முடித்துக்கொள்கிறேன்!!"//

//நீங்கள் எத்துனை தான் வசனங்களை காண்பித்தாலும், உங்களால் நான் கேட்டுக்கொண்டதை எழுத முடியாது, அதாவது, கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லா மனிதர்களும் இரட்சிக்க முடியாது என்பதை உங்களால் எழுத முடியாது, ஏனென்றால் அப்படி ஒரு வரி எத்துனை அபத்தமானது என்பதை நீங்களும் தெரிந்தவர்களாக தான் இருப்பீர்கள் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்!!//

எபிரெயர் 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இந்த சிறு விஷயத்திலிருந்தே அறிந்துகொள்ளலாம், “விஷயங்களைப் புரிந்துகொள்ளும் சக்தியில் நீங்கள் எத்தனை பலகீனமாக இருக்கிறீர்கள்” என்று.//

தேவையற்ற விமர்சனம்!!

//நான் வசனங்களுக்கிடையே “ஆனால்” போட்டு ஏராளமான வசனங்களைத் தந்துள்ளேனே, அவற்றில் ஏதாவது ஒரு இடத்திலாவது if எனும் அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தியுள்ளேனா என சற்று கூர்ந்து கவனியுங்கள். அத்தனை இடத்திலும் but எனும் அர்த்தத்தில்தான் பயன்படுத்தியுள்ளேனேயொழிய if எனும் அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்பதை சாதாரண அறிவு படைத்த அனைவரும் அறிவார்கள்.//

தேவன் இரட்சிப்பார் ஆனால்................

God will save you IF you believe!!
God will save BUT you have to believe!!

What's the difference in the essence?? If and but are nothing but conditions!!

இந்த அர்த்தத்தில் நீங்கள் எழுதியது கிடையாதா!!?? இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது!! சரி எங்களுக்கு அந்த சாதாரண அறிவு இல்லை என்றே வைத்துக்கொள்ளுங்கள்!!
நீங்கள் இரட்சிக்கப்படலாம் ஆனால் நீங்கள் விசுவசிக்கனும்!!
நீங்கள் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவீர்கள்!!

என்ன வித்தியாசம்!! உபயோகப்படுத்தும் முறையில் தானே!! சரி நாம் இங்கே இலக்கன வகுப்பு நடத்த வரவில்லை!! இது சாதாரண அறிவு படைத்தவர்களுக்கு பெரிய வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அசாதாரமான தேவனின் வார்த்தைகளை நம்புகிறோம்!!

//மொத்தத்தில் எதிர்வாதம் செய்ய முடியாத ஒரு நிலைக்கு வந்து விட்டதால்தான்://

தேவையில்லாத விமர்சனம்!! எதிர்வாதம் செய்பவர் தான் "சாதாரண அறிவு உள்ளவர்களுக்கு புரிவது கூட புரியவில்லையே" என்றும் "விஷயங்களை புரிந்துக்கொள்வதில் பலகீனமாக இருப்பவர்கள்" என்றெல்லாம் விமர்சிப்பார்களோ!!

Your attack is Psychological and Not in healthy sense!!

நாங்கள் கொடுத்த வசனங்களுக்கு அதுவும் மிகவும் முக்கியமான வசனமான 1 தீமோத்தேயு 2:3,4 மற்றும் 2 தீமோத்தேயு 1:9ற்கு சித்தம் தான்....ஆனால் என்று எழுதுவது மாத்திரம் மிகவும் அரிவுப்பூவமான விவாதமோ!! தேவன் சொல்லுவதற்கே நீங்கள் "ஆனால்" போட்டால் எங்கள் எழுத்து எம்மாத்திரம்!! இரட்சிப்பை குறித்தும் தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்றும், முன்குறித்தல் முனறிந்துக்கொள்ளுதல் குறித்தும் எத்துனை வசனங்கள் வைத்தாகிவிட்டது, எதற்கு தான் நீங்கள் பதில் தந்திருக்கிறீர்கள்!!

இப்பவும் இதை தான் எழுத முடியும், அதாவது "கிறிஸ்துவின் ஈடுபலி எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க போதுமானது அல்ல" என்பதை உங்களால் சொல்ல முடியுமா!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எபிரெயர் 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

நான் கேட்டபடியே எழுதுவதற்கு உங்களுக்கு இன்னும் முடியவில்லை!! பவுல் இங்கே நியாயத்தீர்ப்பு கொடுக்கவில்லை, நீங்கள் நினைப்பது போல், ஏனென்றால் அடுத்து அவர் சொல்லுகிறார்,

9. பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும் நன்மையானவைகளும், இரட்சிப்புக்குரியவைகளுமான, காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.

இவை எப்படி சாத்தியம் என்றால், எல்லாமே தேவனின் சித்தம் தான் என்று என்னை காட்டிலும் பவுலுக்கு அதிகம் தெரியும்,

3. தேவனுக்குச் சித்தமானால் இப்படியேசெய்வோம்.

பவுல் ஒரு நியதியயை, ஒரு சட்டத்தை சொல்லுகிறார்!! ஆனால் அந்த சட்டத்தை நீங்கள் நியாயத்தீர்ப்பாக மாற்றியிருக்கிறீர்கள்!! இது உங்களுக்கு உண்டான அன்பை தான் வெளிப்படுத்துகிறது!! மேலும் நீங்கள் காண்பிக்கும் இந்த வசனம் நீங்கள் நினைக்கும் "அழிவை" சொல்லுவதில்லை!! நீங்கள் இந்த வசனத்தை சொல்லுவீர்கள் என்று அந்த வசனம் என்ன தான் சொல்லுகிறது என்று மூல பாஷையில் பார்த்தால், அது ஒன்றும் நீங்கள் நினைப்பது போல் அல்ல‌,

"மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். " என்பது நீங்கள் நம்பும் 2ம் மரணம் கிடையாது!! இப்படி ஒரு அர்த்தம் நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசம் உடையவர்கள் தான் கொடுக்க முடியும்!! இன்னும் எத்துனை காலம் தான் தேவ ஞானமற்ற இப்படி பட்ட மொழிப்பெயர்ப்புகளினால் உங்கள் விசுவாசத்திற்கு மெருகெற்றுவீர்களோ!! ஆனாலும் தேவனுக்கு எது சித்தமோ அது தான் நடக்கும்!!

If they shall fall away to renew them again unto repentance seeing they crucify to themselves the Son of God afresh and put him to an open shame

Open Shame is not 2nd death, dear bro.

அதாவது அப்படிப்பட்டவர்கள் வெட்கத்திற்குட்படுத்தப்படுவார்கள் என்று தான் வசனம் சொல்லுகிறது!! ஆனால் வழக்கம் போல் அவர்களை அழித்து போடுவார் என்று நம் மொழிப்பெயர்ப்பை நம்பி தேவனின் அன்பை கொச்சை படுத்தி வருகிறீர்கள்!! வெட்கப்படுத்தப்படுவார்கள் என்பதற்கும், அவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம் ஆகவே அது அழிவு தான் என்று நீங்கள் நினைத்திருக்கிறீகள்!! சகோ அன்பு அவர்களே, சாதாரனமாக எல்லாரும் புரிந்து வைத்திருக்கும் தேவ அன்பை தான் நீங்களும் புரிந்து வைத்திருக்கிறீர்கள்!! ஆகவே தான் சாதாரனவர்களுக்கு புரிகிறது கூட நீங்கள் புரிந்துக்கொள்ள முடியாமால் இருக்கிறீகள் என்று என்னை மட்டுபடுத்து எழுதுகிறீகள்!! ஆனால் மேன்மையான காரியமான தேவனின் அன்பையும் அவரின் நீதியையும் என்னமுடியாமல் நீங்கள் தான் இருக்கும் ஒவ்வொரு வசனத்திலும் "அழிவை" தேடி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தி யார் சாதாரனமானவர்கள் என்று வெளிப்படுத்துகிறீர்கள்!! ஆகையால் யார் சாதாரன அறிவு உள்ளவர்கள் என்று ஆராயாமல், தேவனின் அன்பு என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள்!!

எப்படி மத்தேயு 7ல் ஊழியக்காரர்கள் என்று தம்பட்டம் அடிப்பவர்களை வெட்கப்படுத்தும்படியாக "உங்களை அறியேன்" என்கிறாரோ, அதே நிலை தான் இங்கேயும்!! சொல்ல போனால் இந்த இரு கூட்டத்தாரும் ஒன்றானவர்களாக தான் இருக்க முடியும்!! வெட்கப்படுத்துவது அழிவு இல்லை என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!! இப்படி "பரிசுத்த வேதாகமத்தை" மாத்திரமே படித்து அதைக்கொண்டு வியாக்கியானம் செய்பவர் போல் நீங்களும் இருக்க வேண்டாமே!!

அந்த வார்த்தை சொல்லுவது என்னவென்று நீங்களே பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள்!! அதற்கு உபயோகபப்டுத்தப்பட்ட ஒரே வார்த்தையும் அதன் அர்த்தமும் இதோ,

If they shall fall away to renew them again unto repentance seeing they crucify to themselves the Son of God afresh and put him to an open shame


GreekTransliterationStrong'sMorphologyEnglish
καὶkai2532CONJand
παραπεσόνταςparapesontas3895V-2AAP-APMwho fell away
πάλινpalin3825ADVagain
ἀνακαινίζεινanakainizein340V-PANto restore
εἰςeis1519PREPunto
μετάνοιανmetanoian3341N-ASFrepentance
ανασταυροῦνταςanastaurountas388V-PAP-APMcrucifying
ἑαυτοῖςeautois1438F-3DPMto themselves
τὸνton3588T-ASM 
υἱὸνuion5207N-ASMSon
τοῦtou3588T-GSMof
θεοῦtheou2316N-GSMGod
καὶkai2532CONJand
παραδειγματίζονταςparadeigmatizontas3856V-PAP-APMdisgracing publicly

 

Original Word: παραδειγματίζω
Part of Speech: Verb
Transliteration: paradeigmatizó
Phonetic Spelling: (par-ad-igue-mat-id'-zo)
Short Definition: I put to open shame
Definition: I put to open shame, make a public example of, put to disgrace.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//சாரி, இது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!! நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தார்!! வசனத்துடன் சேர்த்து சொல்லுவது நீங்களா நானா!! அதாவது தேவனின் இரக்கத்திற்கு முன்பாகவும் சரி, கிறிஸ்துவின் ஈடுப்பலிக்கு முன்பாகவும் சரி, தேவனின் சித்தத்திற்கு முன்பாகவும் சரி, நீங்கள் செய்யும் கிரியை பெரிது என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!! இப்பொழுது இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பை "இரக்கம் பெறமாட்டய்" என்கிற அளவிற்கு திரித்திருக்கிறீர்கள்!! நீங்கள் நியாயாசனத்தில் உட்கார்ந்து சொல்லுவது போல் இருக்கிறது உங்கள் இந்த பகுதி!!

கிறிஸ்து இரத்தம் சிந்தினார் தான்............. எங்கே இருக்கு வசனம்!! நேரடியா சொல்லப்பட்டதை ஏன் திரிக்கிறீர்கள்!! உங்கள் கிரியை மேன்மைபாராட்ட ஏன் கிறிஸ்துவின் இரத்தத்தையும் தேவனின் கிருபையின் வல்லமையை குறைவாக எழுதுகிறீர்கள்!!//

//தேவனின் கிருபையையும் கிரிஸ்துவின் "எல்லாருக்ககவும்" இரத்தம் சிந்துதலையும் அவமாக்கும் ஒரு விளக்கம் இது!! ஒரு மனிதனின் இரக்கத்தை குறித்து சிந்தையுள்ள தேவனுக்கு இரக்கம் இல்லை என்று நீங்கள் தேவன் மீதே குற்றம் சுமத்துகிறீர்கள்!!//

//நேரடியாக சொல்லப்பட்ட கிருபையை புரிந்துகொள்ள முடியவில்லை!!//

//நீதியின் கிரியை மேல் நீங்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள், இல்லை என்று சொல்லாதீர்கள்!!//

//அன்பு அவர்களே உங்களின் இந்த பதிவு விரக்த்தியின் பதிவாக இருப்பது போல் இருக்கிறது!! சோல் சொல்யூஷனின் பதிவின் ஆழத்தை புரியாமல் அதை மேலோட்டமாக விமர்சனம் செய்யாதீர்கள்!!//

//எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதை வேதம் சொல்லுகிறது!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதில் உங்களுக்கு சந்தோஷம் இல்லை போல்!! இது தான் உங்களின் அன்பின் அளவுக்கோல்!!//

//எந்த வசன ஆதாரத்தில் இப்படி ஒரு அறிவு!! நீங்களே ஒரு கருத்தை வைத்து அதை வசனம் இல்லாமலே "அறிகிறோம்" என்கிறீர்கள்!!//

//இந்த தீர்க்கதரிசனம் உங்கள் போதனையால் மாற போவதில்லை!! வேதத்தில் எழுதியதை நீங்கள் மாற்றும் அளவிற்கு வல்லவரோ!!?? அல்லது உங்களின் போதனை தான் மாற்றிவிடுமோ!!??//

//நீங்களோ நீங்கள் பாராட்டும் அன்பை தேவனின் அன்பை விட உயர்ந்ததாக சித்தரிக்கிறீகள்!!//

//எப்படி நீங்கள் மனிதர்களின் கிரியை மேன்மைப்படுத்தி சொல்லுகிறீர்களோ அதை விட ஒரு படி மேலே தேவனின் கிருபையை எண்ணி நாங்கள் மேன்மை பாராட்டுகிறோம்!! கிரியையா கிருபையா என்றால் கிருபையே என்று வேதம் சொல்லும் பல வசனங்கள் உங்களுக்கு காண்பித்து அதற்கு பல வசனங்களுக்கு அர்த்தம் சொல்லாமல் நீங்கள் தான் பிடித்த பிடிவாதத்தில் நிற்கிறீர்கள்!!//

//உங்கள் எண்ணங்களை வசனத்தின் மேல் திணிக்கிறீகள்!! தேவனை அன்பற்றவர் போல் சித்தரிக்கிறீர்களே!! இது நியாயமா!!//

//நீங்கள் சிந்தனைக்கும் சித்ததிற்கும் நடுவே குழம்பியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!//

//உங்கள் கிரியையினால் நீங்கள் சாதிக்கலாம் என்பது உங்களின் நம்பிக்கை!!//

//தேவன் தந்த ஈவை நீங்கள் கிரியைகள் கொண்டு விலை பேசுகிறீர்கள்!!//

//உங்களின் கிரியை மேன்மைப்பாராட்டி தவறான போதனையை தருகிறீர்கள்!! நீங்களாகவே எல்லாரையும் இரட்சிக்க சித்தம் இருக்கு தான், ஆனால் என்று ஒரு ஆனால் போட்டு தேவனின் சித்தத்தையே கேள்விகேட்டு, அதற்கு மாறாக உங்களின் கிரியை நம்புகிறீர்கள்!!//

//நீங்கள் கிரியைகளினால் இரட்சிப்பு என்று சொல்லுவதால் உங்களுக்கு தேவனின் இரக்கம் தெரிய வாய்ப்பில்லை தான்!!//

//நீங்கள் தேவனுக்கு முன்பாகவே உங்கள் கிரியை குறித்து மேன்மைபாராட்டுகிறீர்கள்!!....தங்களின் கிரியைகளை குறித்து மேன்மைபாரட்ட வேண்டாமே!!//

சோல்சொல்யூஷன்:

//மீண்டும் ஒரு முட்டாள்தனமான வாதம்!//

//சகோ.அன்பு நிச்சயமாக ஒரு யெகொவா சாட்சி என்றுதான் அவரது வாதங்கள் கூறுகின்றன....இவர் வாதங்களை இனி ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டான் என்பது என் எண்ணம். ஏனென்றால் நியாயப்பிரமாண போதகர்களை கள்ளச் சகோதரர்கள் என்கிறது வசனம்...//

If these attacks are Physocological then my attacks are also Physocological.

If these attacks are in healthy sense then my attacks are also in healthy sense.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

//If they shall fall away to renew them again unto repentance seeing they crucify to themselves the Son of God afresh and put him to an open shame

Open Shame is not 2nd death, dear bro.//

Open shame என்பதை நான் 2-ம் மரணம் என்றும் சொல்லவில்லை; him எனும் சொல் மனிதரைக் குறிக்கவுமில்லை.

எபிரெயர் 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

இவ்வசனங்களில் “தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால்” எனும் கூற்றிற்கு இணையாகத்தான் ஆங்கில மொழிபெயர்ப்பில் “they crucify to themselves the Son of God afresh and put him to an open shameஎனும் கூற்று காணப்படுகிறது. இதைக்கூட நீங்கள் புரிந்துகொள்ளாவிடில் .... வேண்டாம், நான் ஏதாவது சொன்னால் உடனே Psychological attack எனக் கூறிவிடுவீர்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//எபிரெயர் 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.//

 

ஒரு சுவாரசியமான பகுதியாகத் தெரிகிறது இவ்வசனம். நிலத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிப்பது நிலத்தின் கையில் இல்லை. முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் நிலமா முளைப்பிக்கிறது? நிலத்தைச் சுட்டெரித்து யாருக்கு என்ன பலன்? ஆராய்ச்சிக்குரிய பகுதி. 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எபிரெயர் 6:4  ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.

இந்த வசனத்தை எந்த விதத்தில் நான் கேட்ட கேள்விக்கு பதிலாக பதிந்தீர்கள் என்று தெரியவில்லை, ஆனால் வசனம் சொல்லுவது என்னவென்றால், எல்லா விதமான ஈவுகளையும் ருசி பார்த்திருந்தும், தேவனுடைய குமாரனை சிலுவையில் மீண்டும் அறைவர்கள் அவமானப்படுத்தப்படுவார்கள்!! இது தான் வசனத்தின் சாரம்!! சிலுவையில் அறைந்து எதற்கு அவமானப்படுத்தவேண்டும்!! சிலுவையில் அறைவதே ஒரு அவமானம் தானே!! அவமானம் அதாவது Put to Shame என்பது அப்படிபட்ட மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டது!! தமிழில் குழப்பிய பல வசனங்களில் இதுவும் ஒன்று தான்!!

கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க முடியாது என்பதற்கு Boldஆக இந்த வசனத்தை கொடுத்து கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லா மனுஷர்களையும் இரட்சிக்க முடியாது என்கிறீர்களா!!?? அதை தான் ஒரே வரியில் எழுதிவிடுங்களே!!

நீங்கள் விசுவாசிக்கும் இரண்டாம் மரணத்திற்கு போகும் போதனையை குறித்து ஒரு கேள்வி!!

நீங்களோ கிரியை செய்யாதவர்கள் தான் இரண்டாம் மரணத்திற்கு போவார்கள் என்று பல பதிவுகளில் பதிந்திருக்கிறீர்கள்!! அப்படி என்றால் இவர்கள் யார்?

வெளி. 21:8. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.

எல்லா விதமான பாவங்கள் செய்தவர்கள் இதில் இருக்கிறார்கள், இவர்கள் எல்லாருமே இரண்டாம் மரணத்திற்கு தான் போகிறார்களே!! சற்றே மேலே,

வெளி. 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

இனி மரணமில்லை என்று சொல்லி விட்டு இப்படி திடீரென்று எல்லா விதமானவர்களையும் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலான (ஏறியான) 2ம் மரணத்திற்குள் போவார்கள் என்றால் என்ன அர்த்தம்!!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard