kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம் - ஒரு கேள்வி.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
திரித்துவம் - ஒரு கேள்வி.


திரித்துவம் ஒரு தேவதூஷணம் என்று அறியாமல், கிறிஸ்துவை பிதாவாகிய தேவன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் முட்டாள் கிறிஸ்தவர்களுக்கு...

நீங்கள் நம்புவதுபோல இயேசுகிறிஸ்துதான் பிதாவாகிய தேவன் என்றால், இயேசுகிறிஸ்துவுக்கு ஏன் அதை அப்பட்டமாக ஜனங்களிடம் சொல்ல முடியவில்லை. "நானே நீ ஆராதிக்கும் பிதாவாகிய யேகோவா தேவன்" என்று ஒரு முறையாகிலும் நேரடியாக சொல்லியிருக்கலாமே. எங்கே ஒரு வசனம் காண்பிக்க முடியுமா?

நான் யார்? என்று பேதுருவிடம் கேட்டபோது பேதுரு அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி "நீரே சர்வத்தையும் படைத்த சர்வ வல்ல தேவாதி தேவனாகிய யேகோவா" என்று சொல்லியிருக்கலாமே. அதை விடுத்துவிட்டு கிறிஸ்துவும், சீடர்களும் மாய்மாலம் பண்ணினார்கள் என்றா சொல்லவருகிறீர்கள்?

எனது கேள்வியெல்லாம். அட்லீஸ்ட் ஒரு முறை, ஒரே ஒரு முறை இயேசுவோ அல்லது சீடர்களோ மிகத்தெளிவாக அவரைப் பிதாவாகிய தேவன் என்று சொல்லியிருக்கலாமே என்பதுதான். அவர்களுக்கு அவர் குமாரன் என்று தெளிவாகத்தெரிந்ததால்தான் மீண்டும் மீண்டும் அதையே வலியுறுத்தினார்கள். 'கர்த்தராகிய இயேசுகிறிஸ்து' என்ற பதத்தில் வரும் 'கர்த்தர்' புரியாத காரணத்தினால் வந்த வினை.


பிதாவாகிய தேவன் எத்துனை மகத்துவம் நிறைந்தவர், , ஒருவரும் காணாதவரும், காணக்கூடாதவருமான மகிமை நிறைந்தவர்... அத்தகைய உன்னததேவன் மனிதனாகப் பிறந்து முகத்தில் உமிழப்பட்டு, கேவலமான மனிதர்களால் அவன், இவன், ஏன் பிசாசு, பிசாசுகளின் தலைவன் என்றெல்லாம் வசைபாட அனுமதிப்பாரா? கடவுளை நீங்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். "நான் நானே கர்த்தர், எனக்கு முன் ஒரு தேவன் இல்லை, எனக்குப் பின் ஒரு தேவன் இல்லை" என்றெல்லாம் அவர் முழங்க வேண்டிய அவசியமில்லை.

சமமாக இருக்கும் பட்சம் ஒருவருக்கு ஒருவர் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?
பிதா என்னிலும் பெரியவர், பிதாவைத்தவிர நல்லவன் ஒருவவனுமில்லையே, என்றெல்லாம் சொல்லியிருக்க வேண்டிய அவசியம் என்ன? பிதாவும் நானும் ஒன்றாயிருக்கிறோம் என்பதற்குபதிலாக நானே அந்தப் பிதா என்றிருக்கலாமே?

இந்தக்குளறுபடிகளுக்குக் காரணம், தேவன், தேவதூதர்கள் மற்றும் மனிதன் பற்றிய‌ சரியான அறிவின்மைதான். மனிதன் தேவதூதரிலும் சற்று சிறியவன் என்பதை எந்த அளவு விளங்கிக்கொண்டோமோ அதைப்போல இயேசுகிறிஸ்து தேவதூதரிலும் பெரியவர் என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை. பிதாவால் உருவாக்கப்பட்ட முதலும் கடைசியுமான (அல்பா, ஒமேகா) ஒரே சிருஷ்டி கிறிஸ்து, ஒரே பேறான குமாரன், சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் என்று வேதம் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மனதில்லை,

ஏனென்றால் எப்பவோ ஆரம்பித்து மெஜாரிட்டி கூட்டத்தால் 'அங்கீகரிக்கப்பட்ட' ஒரு விஷயம், இதில் தவறிருக்க வாய்ப்பில்லை என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்கிறது இந்த போலிக் கிறிஸ்தவம். உலகில் உள்ள எல்லா முட்டாள்தனமான கோட்பாடுகளும் பெரும்பான்மை முட்டாள்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவைகள்தான், பெரும்பான்மை என்பதால் அவை உண்மை என்றாகிவிட முடியாது...!

 



-- Edited by soulsolution on Friday 6th of May 2011 08:13:39 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

The vote of Majority fails in case of all worldly doctrines including Trinity!!

ஆதியாகமம் 2:23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்;

என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள் என்பது இருவரும் ஒருவர் என்கிற அர்த்தமோ!!??

ஒன்றாக இருக்கிறோம் என்பதற்கும் ஒருவராக இருக்கிறோம் என்பதற்கு நிறைய வித்தியாசம் இருப்பதை திரித்துவ போதகர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்!!

எங்கள் குடும்பம் முழுவதும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை நாங்கள் 7 பேர் என்றால் 7 பேர் அல்ல, அந்த 7 பேரும் சேர்ந்து ஒருவரே என்பது அபத்தமான புரிந்துக்கொள்ளுதலாகும்!! ஒன்றாக இருக்கிறோம் என்றால் சேர்ந்திருப்பது, ஒருவராக இருப்பது அல்லவே!!

இப்படி தானே நானும் என் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம்!! நானும் என் பிதாவும் ஒருவரே என்று சொல்லியிருந்திருந்தால் இந்த குழப்பங்களுக்கு இடமே இல்லையே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

திரித்துவர்கள் சொல்லிக்கொண்டு இருப்பது போல் தேவன் தான் கிறிஸ்துவாக வந்தார் என்பதை முற்றிலுமாக மறுக்கும் ஒரு வசனம் இந்த வசனம்!!

யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

இந்த வசனத்தை கொண்டு குழம்பியும் குழப்பியும் கொண்டு இருக்கும் திரித்துவர்களின் வாதம், வார்த்தை தேவனாக இருந்தது என்பதை கொண்டு தானே!! சரி தேவனாக இருந்த வார்த்தை தேவனோடு இருந்ததாக சொல்லப்பட்ட இருக்கிறதே, அப்படி என்றால் இரு தேவர்கள் ஒரே வல்லமை, ஒரே கால முதல் ஒன்றாக இருக்கிறார்களோ!!

தேவனுடைய வார்த்தை (தேவனுக்கு பதிலாக மனிதர்களோடு தொடர்பு கொள்ள படைக்கப்பட்ட வார்த்தையான கிறிஸ்து) தேவனுக்கு அடுத்த வல்லமையோடு இருக்கிறார்!! சர்வவல்லமையுள்ள தேவனோடு சேர்ந்து செயல்ப்படும்  வல்லமையுள்ள தேவன்!! நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது!! வார்த்தையாக இருந்தவர் நிச்சயமாக சர்வவல்லமையுள்ள தேவன் கிடையாது, ஏனென்றால் வார்த்தையான தேவன் இன்னோரு தேவனோடு இருந்தார் என்று வசனம் சொல்லுகிறது!!

இனி மீண்டும் யோவான் 1:14,

இந்த வசனத்தின்படியும் அந்த வார்த்தை தான் மாம்சாமாகி நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்று உள்ளது!! எந்த வார்த்தை!! சர்வவல்லமையுள்ள தேவனோடு இருந்த வல்லமையுள்ள தேவனாகிய வார்த்தை (கிறிஸ்து)!! அப்படி என்றால் கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் யார் நமக்குள்ளே வாசம் செய்ததாக வசனம் சொல்லுகிறது!! வார்த்தையை தானே!! வார்த்தை ஒரு தேவனோடு இருந்ததாக சொல்லப்பட்டிருக்கிறதே, அந்த தேவன் மாம்சமாகி வந்ததாக அப்போஸ்தலன் இங்கே எழுதவில்லை, மாறாக அந்த சர்வவல்லமையுள்ள தேவனோடு (ஹோ தியோஸ்) இருந்த ஒரு தேவனான் (தியோஸ்) கிறிஸ்து தான் மாம்சத்தில் வந்தார் என்று தெளிவாக வசனம் சொல்லியிருக்கிறது!!

மேலும் கிறிஸ்துவின் மகிமையானது பிதாவின் மகிமையாக இருந்தது என்றும் வசனம் இல்லை, மாறாக மிகவும் தெளிவாக, அந்த மகிமை பிதாவின் ஒரேபேறானவரின் மகிமைக்கு ஏற்ற மகிமையாக இருந்தது என்கிறது வசனம்!!

அப்படி என்றால் மாம்சத்தில் வந்தவர் சர்வவல்லமையுள்ள யெகோவா தேவனோ, அல்லது கிறிஸ்துவின் ஆவியினால் அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற தேவனோ அல்ல மாறாக மாம்சத்தில் வந்தவர் வார்த்தையான கிறிஸ்துவே!!

இனியும், 1 தீமோ 3:16ஐ வாசிக்கும் போது, "தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்பதை "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்று வாசித்தால் தான் சரியாக இருக்க முடியும்!! மேலும் கிறிஸ்து தான் மாம்சத்தில் வந்தார் என்பதற்கு இனை வசனங்கள் இருக்கிறது!!

யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.

1 யோவான் 4:3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல;

இந்த இரண்டு வசனங்களுமே, 1 தீமோத்தேயு 3:6ஐ "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டர்" என்பதற்கான இனை வசனங்கள்!! ஆனால் "தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்பதற்கு இனை வசனம் கிடையாது!!

1 யோவான் 1:3.............எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

யோவான் எழுதும் போது, எங்களுடைய ஐக்கியம் பிதாவாகவும் குமாரனாகவும் இருக்கிற இயேசு கிறிஸ்துவோடு இருக்கிறது என்று எழுதவில்லையே!! மிகவுல் தெளிவாக, அங்கே இருவர், இரு தனிபட்ட நபர், பிதாவுக்கு முக்கியத்துவம் தந்து, முதலாவது ஐக்கியம் பிதாவோடும், பின்பு அவரின் குமாரனான கிறிஸ்து இயேசுவோடும் இருக்கிறது என்று தானே எழுதியிருக்கிறார்!!

மேசியாவின் எதிரிகள் யார் என்றால் இயேசு கிறிஸ்து காண்பித்து கொடுத்த பிதாவை கனம் பண்ணாதவர்களே!!

என்னால் அன்றி ஒருவனும் பிதாவிடத்தில் வரான் என்று சொன்னவர், என்னால் அன்றி ஒருவன் என்னிடத்தில் வரான் என்று சொல்லியிருந்திருக்கலாம்!! சத்திய வசனங்கள் சத்தியத்தை சொல்லும் வேத புரட்டர்கள் அதை புரட்டு புரட்டுன்னு புரட்டி எடுத்து ஒரிஜினல் மேசியாவின் எதிரிகளாக நிற்கிறார்கள்!!

மேசியா கற்று கொடுத்ததை கைக்கொள்ளாதவர்களே மேசியாவின் எதிரிகளாக இருக்க முடியும்!! கிறிஸ்து தான் மாம்சத்தில் வெளிப்பட்டர் என்பதை மறுதலித்து பிதா தான் மாம்சத்தில் வெளிப்பட்டர் என்று சொல்லு கூட்டமே மேசியாவின் எதிரிகள்!! மொத்தத்தில் கிறிஸ்துவின் போதனைகளை யூகங்களாக மாற்றி பிரசங்கித்து வரும் கூட்டத்தார் தான் மேசியாவின் எதிரிகள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இயேசுகிறிஸ்து தன்னை சிநேகிதன் என்றும், மணவாளன் என்றும் தாயும் சகோதர்களும் என்றும், நாம் ஒன்றாயிருக்கிறோம் என்றும் சொல்லி தன்னைத்தாழ்த்தி 'மனுஷகுமாரன்' என்றுதான் தன்னை அழைத்துக்கொண்டார். கிறிஸ்து நமக்காகப் பரிந்து பேசுகிற பிரதான ஆசாரியராயிருக்கிறார் என்று வாசித்தாலும் இந்த மடையர்கள் ஆசாரியரைத் தொழுதுகொள்வோம் என்று பிதாவுக்கு, கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பின தேவனுக்கு செலுத்த வேண்டிய ஆராதனையை குழப்பிக்கொண்டு தேவதூஷணம் செய்கிறார்கள்.

இயேசுகிறிஸ்துவுக்கு 'நானே கடவுள்' என்று தெளிவாக சொல்ல தைரியமில்லையா? ஏன் இதைச் சொல்லி தன்னை சர்வவல்ல தேவன் என்று நிரூபித்திருக்கலாமே? ஏன் மீண்டும் மீண்டும் நான் அனுப்பப்பட்டவன், தேவனுடைய குமாரன் என்று சொல்லவேண்டும்?

யோசிக்கவே மாட்டார்களா? மூளை அத்துனை மழுங்கியா போய்விட்டது?



 



-- Edited by soulsolution on Monday 27th of June 2011 11:05:45 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

1கொரிந்தியர் 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்,

 

6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

 

7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. 

 

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

 

எனவே எல்லாருக்கும் இந்த அறிவு இருக்க வேண்டுமென்று அவசியமில்லை. அதனால்தான் திரித்துவத்தை உருவாக்கி கிறிஸ்துவைப் பிதாவுக்கு நிகராக்கி அவரையும் தொழலாம் என்ற தேவ தூஷணத்திற்கு துணைபோகிறது இந்த போலிக் கிறிஸ்தவம்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard