kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோவான் 17: 3-திருத்துவ‌ம்!?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யோவான் 17: 3-திருத்துவ‌ம்!?


யோவான் 17: 3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இன்று கிறிஸ்தவத்தில் இருக்கும் சுமார் 2000க்கும் மேற்பட்ட பிரிவனர்களுக்கு இந்த வசனம் தெரியும். ஆனால் இதில் சொல்லப்பட்ட ஒன்றான மெய்த்தேவனையும் அவர் அனுப்பிய கிறிஸ்து இயேசுவை தெரியுமா? இவர்களை அறிவது சுலபமா? யார் இவர்கள், இருவரா, மூவரா, மூன்றில் ஒன்றா, ஒன்றாகிய மூன்றா? இன்று சபைகளில் இப்படி தான் இவர்களை தெரியுமே தவிர, இந்த இருவரை தெரியாது என்று அடித்து சொல்லலாம்!! எல்லோரும் ஒரே வேதம், ஒரே ஆவி என்று இருப்பினும், இந்த பிதா, அவர் அனுப்பிய குமாரன், இன்னும் அநேகர் (பெரும்பாளுமானோர்) அறிவது இல்லை. இதை அறிவ‌தை நினைப்ப‌தும் இல்லை. அவ‌ர்க‌ள் ச‌பைக‌ளில் அவ‌ர்க‌ளுக்கு எவ்வாறு போதிக்க‌ப்ப‌ட்ட‌தோ, அப்படியே அறிந்துவைத்திருக்கிறார்க‌ள், இந்த‌ அறிவு க‌த்தோலிக்க‌ ச‌பை தேவ‌னை புரிந்துக்கொண்ட‌ப்ப‌டியே இருக்கிற‌து. திருத்துவ‌ம் என்றும் திரியேக‌த்துவ‌ம் என்ப‌து மூன்று தேவ‌னை குறித்தான‌ இரு ந‌ம்பிக்கைக‌ளாகும். ஒரு சாரார் தேவ‌ன் திருத்துவ‌மாக‌ இருக்கிறார் என்றும், ம‌ற்றோர் சாரார் தேவ‌ன் திரியேக‌த்துவ‌மாக‌ இருக்கிறார் என்றும் சொல்லுவார்க‌ள்!!

திருத்துவ‌ம் என்றால் ஒரே தேவ‌ன்  இருப்ப‌து திரியேக‌த்துவ‌ம் என்றால் மூன்று வ‌ல்ல‌மைக‌ள் ஒன்றாக‌ இருப்ப‌து.

இர‌ண்டுமே வேத‌த்தின் இல்லாத‌ ந‌ம்பிக்கைக‌ள்!!

யோவான் 17:5. பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

இயேசு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவ‌ரே என்றால் ஏன் ஒருவ‌ர் ம‌கிமையை த‌ர‌ வேண்டும், ஏன் ம‌ற்றொருவ‌ர் அதை பெற்றுக்கொள்ள‌ வேண்டும். த‌ருப‌வ‌ரும் பெறுப‌வ‌ரும் ஒன்றான‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியுமா!! குழ‌ப்ப‌வாதிக‌ல் இதை "தேவ‌ இர‌க‌சிய‌ம்" என்று சொல்லி, தேங்காய் தொட‌ங்கி ஐஸ் க‌ட்டி வ‌ரை உதார‌ன‌ங்க‌ளை வைத்து சொல்லுவார்க‌ள் இல்லாத‌ ஒன்றை நிறுபிக்க‌!! இதையே தான் ப‌வுலும் எத்துனை அழ‌காக‌ இன்றைய‌ குழ‌ப்ப‌வாதிக‌ளுக்கு அறிவு இல்லை என்ப‌தை தெளிவாக‌ சொல்லியிருக்கிறார்,

I கொரிந்தியர் 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

இப்ப‌டி போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ளை வாசித்த‌ பிற‌கும் இவ‌ர்க‌ள் எப்ப‌டி தான் யோவான் 17:3ஐ விசுவ‌சிக்கிறார்க‌ளோ. இப்ப‌டி தேவ‌னையும் குமார‌னையும் அறிவ‌தே நித்திய‌ ஜீவ‌ன் என்று வ‌ச‌ன‌ம் சொல்லியும், திருத்துவ‌த்தை சொல்லும் இவ‌ர்க‌ள் எப்ப‌டி நித்திய‌ஜீவ‌னை போதிக்கிறார்க‌ளோ!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Newbie

Status: Offline
Posts: 2
Date:

vasanathai mattum kaatti vidaama solla vanthatha thelivaa sollidunga aiyano

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வசனம் தெளிவாக இருப்பதால் இதற்கு மேல் இதில் விளக்கம் அளிக்க ஏதும் இருக்கிறதா, ஐய்யா என்று எழுதி என்னை குழப்பியிருக்கிறீர்கள்!! நான் ஐய்யா (பாஸ்டர், போதகர் அல்லது குருவோ) கிடையாது!! என்னை பெரேயன்ஸ் அல்லது நண்பர் அல்லது அன்பர் என்று குறிப்பிடலாமே!! உங்க‌ளுக்கு இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளில் ஏதாவ‌து புரிய‌வில்லை என்றால் எழுதுங்க‌ள், அதை பார்க்க‌லாமே!!

கூட‌வே க‌டைசியாக‌ இருக்கும் அந்த‌ emoticonக்கு என்ன‌ அர்த்த‌மோ!!

நீங்கள் தமிழில் எழுதலாமே!! அதற்காக உங்களுக்கு தொடுப்பு தருகிறேன், முயன்று பாருங்களேன்!!

http://www.christiansmobile.com/Default.aspx?tabid=161



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard