kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பொய்யர்கள்!! Liars!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பொய்யர்கள்!! Liars!!


I தீமோத்தேயு 4: 1. ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

2. விவாகம்பண்ணாதிருக்கவும்,

3. விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.

இது தன்னை தாய் திருச்சபை என்று பிறகடண‌ப்படுத்திக் கொண்ட கத்தோலிக்க சபையை குறித்தான தீர்க்கதரிசனமே! பாதரியார்கள் திருமனம் செய்துக்கொள்ள கூடாது என்று ஒரு சட்டத்தை அந்த சபைக்கொண்டு வந்தது. அது போலவே லெந்த் நாட்கள் என்று ஒரு 40 நாட்களை அனுசரிக்க சொல்லி "சாதாரன விசுவாசிகள்" அந்த நாட்களில் கறி, மீண் போன்றவற்றை சாப்பிட கூடாது என்று உத்தரவிட்டது. அதோடு நிற்காமல், இன்று தங்களை ஆவியில் நிறைந்து "அந்நிய பாஷைகளை" பேசி வரும் பெந்தெகோஸ்தே சபையினரும் இந்த திருமணக்காரியத்தை பின்பற்றி வருகிறார்கள். பவுல் இப்படி பட்டவர்களை "பொய்யர்கள்" என்கிறார். ஆனால் நம் "சாதாரன விசுவாசிகள்" இப்படி பட்டவர்களை "தேவ மனிதர்கள்" என்றும், "தேவ ஊழியர்கள்" என்றும் "தேவ செய்தி" கொடுப்பவர்கள் என்றும் சொல்லி வருகிறார்கள். வேதம் சொல்லும் பொய்யர்களுக்கு இப்படி பட்ட அடைமொழிகள் தேவை தானா!!

பிற்காலங்கள் என்றால் கடைசிக்காலம் இல்லை, பவுல் மரித்து சென்றவுடன் அந்த காலம் ஆரம்பித்து விட்டது.

1 தீமோ. 4:14. மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே.

இன்று பொய்யர்கள், என்னை தேவன் தான் இந்த ஊழியத்திற்கு வர சொன்னார், என்னோடு வந்து இராத்திரியெல்லாம் கெஞ்சி இந்த பாரமான ஊழியத்தை நீ தான் செய்ய வேண்டும் என்று தேவனே வந்து சொன்னார் என்றும், என்னோடு காரில் வந்தார், ஸ்கூட்டரில் வந்தார், பைக்கில் வந்தார் போன்ற நவீன கதைகளை சொல்லும் வெளிவேடக்காரர்கள் சொல்லுகிறர்கள். ஆனால் பவுலுடன் சேர்ந்து ஊழியம் செய்த தீமோத்தியுவிடம் எந்த தேவனும் வந்து பேசவில்லை, மாறாக மூப்பரின் சங்கம் (அப்போஸ்தலர்கள்) தான் அவன் மேல் கைகளை வைத்து இப்படி ஊழியம் செய்ய வேண்டும் என்று தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்கள். இன்று ஜெட்டில் பறந்து வந்து ஊழியம் செய்துக்கொண்டு போகும் இந்த பொய்யர் கூட்டம் தங்களை அப்போஸ்தர்கள் என்று சொல்லிக்கொள்வதில் சற்றும் அச்சம் கொள்வதில்லையே!! ஆனால் தீமோத்தேயு தன்னை ஒரு போதும் அப்போஸ்தலன் என்று உயர்த்திக்கொள்ளவில்லை, ஏனென்றால் உண்மையான தேவ ஆவியில் நிரம்பியிருப்பவன், அப்போஸ்தலர்கள் 12 பேர்கள் தான் என்று தெரிந்திருப்பார்கள்!!

இன்றைய கள்ள அப்போஸ்தலர்களிடம் எச்சரிக்கையாக இருக்க இப்படி வேதத்தில் அநேக வசனங்கள் இருக்கிறது, ஆனாலும் "சாதாரன விசுவாசிகள்" இப்படி பட்ட "தேவ மனிதர்களை" நம்பி ஏமாந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard