வேதத்தில் உள்ள வசனங்கள் அனைவருக்கும் அவர் அவர் அதை வாசிக்கும் காலத்திற்கு பொருந்தும், அதை அப்படியே நமக்கு தான் சொல்லப்பட்டது என்று எடுத்துக்கொள்ளும் நண்பர்கள் இந்த வசனத்தை எப்படி ஏற்றுக்கொள்வார்களோ,
I கொரிந்தியர் 15:6. அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள்.
இந்த வசனம் அப்படியே நமக்கு தான் என்றால் அன்று உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை பார்த்தவர்களின் இன்று வரை அநேகர் இருக்கிறார்கள் சிலர் மாத்திரமே மரித்திருக்கிறார்கள் என்றாகி விடாதா!! அதாவது சுமார் 2000 வருடங்கள் உயிருடன் இருப்பவர்கள் என்கிற ஆச்சரியமான தகவல் கிடைக்கிறது. ஆக வேதத்தில் யாருக்கு எந்த காலத்தில் சொல்லப்பட்டது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பக்தே நாங்கள் பின்பற்றும் முறை. ஏனென்றால் இந்த வசனத்தை காண்பித்தே, இன்றைய கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ள போதகர்களும் நாங்களும் இயேசு கிறிஸ்துவை பார்த்தோமென்று சொல்லி வருகிறார்கள்!!