kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: The Earth


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
The Earth


பூமியின் மகிமையான எதிர்காலம்

ஆதியிலே !

வானம் எனக்கு சிங்காசனம் பூமி எனக்குப் பாதப்படி     ஏசா.  66:1

என் பாத ஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன்                 ஏசா.  60:13

பொதுவாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மோட்ச‌த்தைக்குறித்து அடிக்க‌டி பேசுகிறார்க‌ள் ஆனால் இந்த‌ பூமியின் எதிர்கால‌த்தைக் குறித்து சிந்திக்கிற‌தில்லை. ஏசா. 45:8- ல் எகோவா தேவ‌ன் த‌ம‌து தீர்க்க‌ன் மூல‌மாக‌ இவ்வாறு கூறுகிறார் ‍  வான‌ங்க‌ளை சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்க‌ச் சிருஷ்டியாம‌ல் அதைக் குடியிருப்புக்காக‌ச் செய்து ப‌டைத்து அதை உற்வேற்ப‌டுத்தினார். பேதுரு த‌ன்னுடைய‌ நிருப‌த்தில், வான‌மும் பூமியும் வெந்து உருகிப்போம் என்று அடையாள‌ பாஷையில் குரிப்பிட்டு, அவ‌ருடைய‌ வாக்குத்த‌த்தின் ப‌டியே நீதியுள்ள‌வ‌ர்க‌ள் வாச‌ம் செய்யும் புதிய‌ வான‌க்க‌ளும், புதிய‌ பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம் ( 2 பேதுரு 3 :13)  என்கிறார்.

ஏன் இந்த‌ புதிய‌ - புதுப்பிக்க‌ப்ப‌ட்ட‌ பூமி ?

Henry F Hill  (ஹென்றி எப் ஹில்) என்ற‌ வேத‌ வ‌ல்லுன‌ர் இந்த‌ பூமி அழிக்க‌ப்ப‌டாம‌ல் அது ஏதேனின் ம‌கிமைக்கு ‍-அல்ல‌து - அதைக் காட்டிலும் சிற‌ந்த‌தாக‌ புடுப்பிக்க‌ப்ப‌டும் என்கிறார். தேவ‌னுடைய‌ வார்த்தைக‌ளைத் துல்லிய‌மாக‌ ஆராய்ந்து பார்த்தால் இது புல‌ப்ப‌டும் என்கிறார். நாமும் வேத‌த்திலிருந்து சில‌ காரிய‌ங்க‌ளைக் குறித்து சிந்திப்போம்.ஏசாயா 26:9 - ல் உம்முடைய‌ நியாய‌த்தீர்ப்பு பூமியிலே ந‌ட‌க்கும் பொழுது பூச்ச‌க்க‌ர‌த்துக் குடிக‌ள் நீதியைக் க‌ற்றுக்கொள்வார்க‌ள். பூர‌ண‌ புருஷ‌னும் அவ‌னுடைய‌ சுற்றுப்புற‌ சூழ‌லையுங் குறித்து ஏசாயா 35 -ம் அதிகார‌த்தில் ஒவ்வொரு வ‌ச‌ன‌மாக‌த் தியானித்தால் - பெரும் பாதையின் ப‌ரிசுத்த‌த்திற்கு - விழுந்து போன‌ ம‌னித‌ன் திரும்புவ‌தைக் காண்கிறோம். இழ‌ந்து போன‌ உரிமையை மீண்டும் பெற்றுக்கொண்டு இந்த‌ புதுப்பிக்க‌ப்ப‌ட்ட‌ பூமியில் வாச‌ம் செய்வ‌தைக் குறித்து பேதுருவின் தேவால‌ய‌ செய்தி மூல‌ம் அறிகிறோம். இவ்வாறு வ‌ர‌ப்போகும் ம‌கிமையான‌ எதிர் கால‌த்தில் ம‌னித‌னுக்காக‌ தேவ‌ன் ஆய‌த்த‌ம் ப‌ண்ணும் இந்த‌ புதிய‌/புதுப்பிக்க‌ப்ப‌ட்ட‌ பூமியைக் குறித்து இன்னும் விரிவாக‌ சிந்திப்போம்.

ச‌மாதான‌ம், செழிப்பு இன்னும் அத‌ற்கு மேல்

இயேசு கிறிஸ்துவின் இராஜ்ய‌ம்

உம்முடைய‌ இராஜ்ய‌ம் வ‌ருவ‌தாக‌ -உம்முடைய‌ சித்த‌ம் ப‌ர‌லோக‌த்தில் செய்ய‌ப்ப‌டுவ‌து போல‌ பூமியிலேயும் செய்ய‌ப்ப‌டுவ‌தாக‌ - ( ம‌த்.  6 : 10 )

தேவ‌னுடைய‌ இர‌ட்சிப்பின் திட்ட‌த்தில் இயேசு கிறிஸ்துவின் 1000-ம் வ‌ருட‌ பூமியின் அர‌சாட்சி அனேக‌ருக்கு புரியாத‌ புதிராக‌ உள்ள‌து. இந்த‌ இராஜ்ய‌த்தைக் குறித்துத்தான் அன்றே இயேசு கிறிஸ்து ஜெபிக்க‌க் க‌ற்றுக் கொடுத்தார். இந்த‌ இராஜ்ய‌ம் ஆபிர‌காமுக்கு ( ஆதி. 22:17 )-ல் கொடுத்த‌ வாக்குத்த‌த்தின் நிறைவேறுத‌ல். இந்த‌ புதிய‌ வான‌ம், புதிய‌ பூமியைக் குறித்தே ஏசாயா, பேதுரு, யோவான் ஆகியோர் எழுதியிருக்கிறார்க‌ள். ( ஏசா. 65:17,  2 பேது. 3:13,  வெளி. 2:11 )  கிறிஸ்துவின் இராஜ்ய‌ம் இர‌ண்டுவித‌ ப‌ங்குடைய‌தாய் இருக்கிற‌து. ஒன்று ஆவிக்குரிய‌து ம‌ற்ற‌து பூமிக்குரிய‌து. ஆவிக்குரிய‌ இராஜ்ய‌த்தைக் குறித்து ஆபிர‌காமின் ஆசீர்வாத‌த்தில் பார்க்கிறோம் " வான‌த்து ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள் "  ( ஆதி. 22:17 )  கிறிஸ்துவும் அவ‌ரைப்பின்ப‌ற்றும் ச‌பையும் ( க‌லா. 3:16, 29 ) இங்கு கிறிஸ்துவும், ச‌பையும் பூமியைச் சுத‌ந்திரிப்ப‌வ‌ர்க‌ளை ஆய‌த்த‌ப்ப‌டுத்துவ‌தைக் குறித்து வாசிக்கிறோம்.

இந்த‌ பூமிக்குரிய ஆபிரகாமின் ஆசீர்வாத‌ம் அது யாக்கோபுக்கும் பொருந்தும். இத‌னை ஆதியாக‌ம‌ம் 28:13,14-ல் வாசிக்கிறோம். யாக்கோபின் ஆசீர்வாத‌த்தை 14-ம் வ‌ச‌ன‌த்தில் வாசிக்கிறோம்.  " உன் ச‌ந்த‌தி பூமியின் தூளைப் -- உன்  நிமித்த‌ம் பூமியின் குடிக‌ள் ஆசீர்வ‌திக்க‌ப்ப‌ட்டிருக்கும் " புதிய‌ உட‌ன்ப‌டிக்கையினால் ஆன‌ கிறிஸ்துவின் இராஜ்ய‌ம் யாக்கோபின் ச‌ந்த‌தியைக் கொண்டு இந்த‌ பூமியை நிர‌ப்புவார்க‌ள். இந்த‌ இராஜ்ய‌த்தின் நோக்க‌மே இழ‌ந்துபோன‌ ஏதேனின் ஆசீர்வாத‌த்தை (ஆதித்த‌க‌ப்ப‌ன் ஆதாமின் கீழ்ப‌டியாமையினால்) திரும்ப‌ப் பெற்றுக் கொள்வ‌தேயாகும். இந்த‌ப் புதுப்பித்த‌ல் ம‌னித‌ குல‌த்துக்கு அழிவில்லாத‌ வாழ்க்கையையும், ப‌ரிபூர‌ண‌ சுக‌த்தையும், ச‌ல‌த்தையும் ஆளும் ஆளுகையையும், எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ தேவ‌னோடே - ம‌க‌ன் உற‌வையும் புதுப்பிக்கும். இந்த‌ புதுப்பித்த‌ல் தேவ‌னுக்கு எதிராக‌ செய‌ல்ப‌டும் செய்கைக‌ளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் - இர‌ண்டு வித‌த்திலும் ஆவிக்குரிய‌திலும், பூமிக்குரிய‌திலும் என்று காண்கிறோம். தேவ‌னுக்கு எதிராக‌ செய‌ல்ப‌டும் ச‌க‌ல‌ செய‌ல்பாடுக‌ளுக்கும் முடிவு ஏற்ப‌ட்டு,  1கொரி. 15:28-ல் உள்ள‌ப‌டி ஆதாமின் கீழ்ப‌டியாமையினால் ஏற்ப‌ட்ட‌ ம‌ர‌ண‌ம் அழிக்க‌ப்ப‌ட்டு தேவ‌னே ச‌ல‌த்திலும் ச‌க‌ல‌முமாய் இருப்பார். இந்த‌ இயேசு கிறிஸ்துவின் இராஜ்ய‌த்தின் எல்லை உல‌க முழுவ‌தும் வியாபித்திருக்கும். ஆதாமின் ம‌ர‌ண‌ம் என்னும் சிறையிலிருந்து ம‌னுக்குல‌த்தை விடுவித்துவிடும் ( ஏசா. 42:7,  49:9,  61:1  ). இப்பொழுது பூமியில் இருக்க‌க் கூடிய‌ இராஜ்ய‌ங்க‌ள் ஒன்றிணைக்க‌ப்ப‌ட்டு ஒரு ப‌ரிசுத்த‌ இராஜ்ய‌மாக‌ எழுப்ப‌ப்ப‌டும்.  ( ச‌ங். 2:9,  தானி. 2:44, வெளி. 2:27 ). ச‌க‌ல‌ருக்கும் தேவ‌னைக்குறித்து போதிக்கும் ( எரே. 31:34,  ஏசா. 11:9,  ஆப‌கூக் 2:14 ) . த‌ற்பொழுது உல‌கில் காண‌ப்ப‌டும் பாவ‌ங்க‌ளையும், த‌ன்ன‌ல‌த்தையும் மாற்றி ரோம‌ர் 8:19-ல் கான‌ப்ப‌டும் ஆசீர்வாத‌ங்க‌ளைக் கொண்டுவ‌ரும்.

இந்த‌ இராஜ்ய‌த்தின் அங்க‌ங்க‌ள்

இந்த‌ இராஜ்ய‌ம் ஆவிக்குரிய‌ இராஜ்ய‌மாக‌ இருக்கும். இந்த‌ ப‌ரிசுத்த‌ ந‌க‌ர‌ம் - புதிய‌ எருச‌லேம் தேவ‌னிட‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ருகிற‌து. ( வெளி. 21: 2 ) இந்த‌ இராஜ்ய‌ம் கிறிஸ்துவை மைய‌மாக‌ வைத்து செய‌ல்ப‌டும். மெல்கிசெதேக்கின் முறைமையின்ப‌டி  (எபி.5:6,8-10)  அந்த‌ ஆசாரிய‌த்துவ‌மும், இராஜாங்க‌மும் ம‌னித‌னுடைய‌ ச‌மூக‌, ஆத்மீக‌ முறைக‌ளும் வெளி. 1:6 , 5:10-ல் வாசிக்கிற‌ப‌டி காண‌ப்ப‌டும். இந்த‌ இராஜ்ய‌த்தின் ஆளுகையின் ஆர‌ம்ப‌த்திலேயே இயேசு கிறிஸ்துவின் இர‌த்த‌ம் - ஆதாமின் சாப‌த்திலிருந்து ம‌னுக்குல‌த்தை மீட்டு புதிய‌ உட‌ன்ப‌டிக்கையின் ஆசீர்வாத‌த்தை முத்திரிக்கும். ( ம‌த். 26:28,  ரோ. 5:18- 19 ). இது ம‌னுக்குல‌த்தை இயேசு கிறிஸ்துவை நோக்கித் திருப்பி அவ‌ரே இவ‌ர்க‌ளுக்கு ப‌ரிகாரியாக‌ செய‌ல்ப‌ட‌ வ‌ழிவ‌கை செய்யும் ( எபி. 12:24 ). இந்த‌ கிறிஸ்துவே 1000-ம் வ‌ருட‌ அர‌சாட்சியின் மூல‌ம் பூர‌ண‌ ப‌ரிசுத்த‌த்தில் எல்லோரையும் வ‌ழி ந‌ட‌த்தி தேவ‌னோடே இசைவாக்கி வ‌ழி ந‌ட‌த்துவார். ( ஏசா. 35:8 ). இந்த‌ அர‌சாட்சியின்போது கிறிஸ்துவும் அவ‌ரோடு சேர்ந்து ச‌பையும் பூமியை ஆளுவார்க‌ள். அவ்வ‌ம‌ய‌ம் எல்லா ம‌னித‌ ஆளுகைக‌ளும் அவ‌ருடைய‌ க‌ட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவ‌ர‌ப்ப‌ட்டு எல்லா ம‌த‌ம் சார்ந்த‌ காரிய‌ங்க‌ளை அவ‌ருடைய‌ த‌ன்மைக்கு மாற்றி, பொருளாதார‌, ச‌மூக‌, க‌லாச்சார‌, அர‌சிய‌ல் கிறிஸ்துவின் க‌ட்டுப்பாட்டிற்குள் கொண்டுவ‌ர‌ப்ப‌டும் ( நாகூம் 1:5, வெளி. 19:15 ).  " இருப்புக்கோலால் " அர‌சாளுவார் என்று எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து. எந்த‌ ச‌க்தியும் இந்த‌ ஆட்சியை எதிர்க்க‌வோ அல்ல‌து எதிரிடையாக‌ செய‌ல்ப‌ட‌வோ முடியாது ( ச‌ங். 2: 1 - 9,  வெளி. 2 : 27 ). ஆவிக்குரிய‌ இந்த‌ இயேசு கிறிஸ்துவின் அர‌சாங்க‌த்திலே பூமிக்க‌டுத்த‌ பிர‌திநிதிக‌ளும் இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளைத்தான் நாம் ப‌ழைய‌ ஏற்பாட்டு ப‌ரிசுத்த‌வான்க‌ள் என‌ அழைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் சிலுவை ம‌ர‌ண‌த்திற்கு முன்பாக‌ ப‌ழைய‌ ஏற்பாட்டின் நிய‌ம‌ன‌த்தின்ப‌டி விசுவாசித்து  கீழ்ப‌டிந்த‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ளே. ( எபி. 11: 4 - 38 வ‌ரை காண்க‌ ) இவ‌ர்க‌ள் இந்த‌ " பூமியின் இராஜாக்க‌ளாக‌ " கிறிஸ்துவினாலும் அவ‌ருடைய‌ ச‌பையினாலும், " எருச‌லேமிலிருந்து தேவ‌ வார்த்தையை " தெரிய‌ப்ப‌டுத்துவார்க‌ள் ( ச‌ங். 45:16,  ஏசா. 2 :3 ). இந்த‌ த‌னிப்ப‌ட்ட‌ ப‌ழைய‌ ஏற்பாட்டு ப‌ரிசுத்த‌வான்க‌ள் ஆபேல், நோவா, ஆபிர‌காம், சாராள், யோசேப்பு, மோசே, இராகாப் .. இன்னும் எபிரேய‌ர் 11-ம் அதிகார‌த்தில் குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ இவ‌ர்க‌ள், ம‌ண‌வாட்டி ச‌பையோடு இணைந்து தேவாதி தேவ‌னின் குணாதிச‌ய‌ங்க‌ளையும், அவ‌ர‌து ச‌த்த்ய‌த்தையும், நேர்மையையும் ப‌ற்றி த‌ங்க‌ள் அனுப‌வ‌த்தின் மூல‌மாக‌ ம‌னுக்குல‌த்தை ந‌ல்வ‌ழிப்ப‌டுத்துவார்க‌ள். இந்த‌ பூமி இஸ்ரேலை மைய‌மாக‌க் கொண்டு செய‌ல்ப‌டும். இயேசு கிறிஸ்துவின் ராஜாங்க‌த்தின் அஸ்திபார‌ம் புதிய‌ உட‌ன்ப‌டிக்கையாக‌ இஸ்ரேலுட‌ன் ஸ்தாபிக்க‌ப்ப‌டும் ( எரே 31: 31 - 33, எபி. 8: 8 - 10 ). உல‌கமெங்கும் சித‌றிக்கிட‌க்கும் இஸ்ர‌வேல‌ர்க‌ளை மீண்டும் திரும்ப‌க்கூட்டிச் சேர்த்து யாக்கோபின்  உப‌த்திர‌வ‌ங்க‌ளிலிருந்து அவ‌ர்க‌ளை தேவ‌ த‌ய‌வினால் மீட்டு புதிய‌ உட‌ன்ப‌டிக்கையின் ப‌ங்காளிக‌ளாக‌ உறுதிப்ப‌டுத்த‌ப்ப‌டுவ‌ர் ( எசே. 20 : 37 ) இந்த‌ புதிய‌ உட‌ன்ப‌டிக்கையின்ப‌டி தேவ‌ன் இஸ்ர‌வேல‌ரை அவ‌ர்க‌ள் அசுத்த‌த்திலிருந்து சுத்திக‌ரித்து ச‌தையான‌ இருத‌ய‌த்தை அவ‌ர்க‌ளுக்குக் கொடுத்து அவ‌ர்க‌ளுடைய‌ இருத‌ய‌ங்க‌ளில் அவ‌ருடைய‌ க‌ட்ட‌ளைக‌ளை எழுதுவார். அவ‌ருடைய‌ ஆவியை அவ‌ர்க‌ளுக்குக் கொடுத்து அவ‌ருடைய‌ நீதி நியாய‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளை ந‌ட‌க்க‌ச் செய்வார். அவ‌ர்க‌ள் அவ‌ருடைய‌ பிள்ளைக‌ளாவார்க‌ள், அவ‌ர் அவ‌ர்க‌ள் தேவ‌னாயிருப்பார் ( எசே. 36 : 24 - 28 ). மீத‌மான‌ ம‌னித‌குல‌ம் இந்த‌ மாறுத‌ல்க‌ளுக்கு த‌ங்க‌ளை ஒப்புக்கொடுத்து இந்த‌ புதிய‌ உட‌ன்ப‌டிக்கையின் ஆசீர்வாத‌ங்க‌ளைச் சுத‌ந்த‌ரித்துக்கொள்ள‌ வாஞ்சிப்பார்க‌ள் ( எசே 36: 36 ). இந்த‌  தேவாதி தேவ‌னை ப‌ணிந்து ப‌ற்றிக்கொள்ள‌வும், தேடி விண்ண‌ப்ப‌ம் ப‌ண்ண‌வும் எருச‌லேமுக்குச் செல்வார்க‌ள். எல்லாவித‌ பாஷைக்கார‌ரும் ஒரு யூத‌னுடைய‌ வ‌ஸ்திர‌த்தொங்க‌லைப் பிடித்துக்கொண்டு தேவ‌ன் உங்க‌ளோடே இருக்கிறார் என்று கேள்விப்ப‌ட்டோமாகையால் உங்க‌ளோடே கூட‌ப்போவோம் என்று சொல்லி அவ‌னைப் ப‌ற்றிக்கொள்வார்க‌ள் ( ச‌க‌. 8 : 21 - 23 ) இஸ்ர‌வேல் ஆசீர்வாத‌த்துக்கு உதார‌ண‌மாயிருப்பார்க‌ள். ம‌ற்ற‌ ஜாதிக்கார‌ர்க‌ள் இத‌னைப்பார்த்து தாங்க‌ளும் இஸ்ர‌வேல‌ர்க‌ளாகி இந்த‌ ஆசீர்வாத‌ங்க‌ளைச் சுத‌ந்த‌ரித்துக்கொள்ள‌ வாஞ்சிப்பார்க‌ள் ( ச‌க‌: 8 : 13 ) இத்த‌கைய‌ ஆசீர்வாத‌த்தாலே யாக்கோபின் வித்து பூமியின் தூளைப்போல‌ மேற்கிலும், கிழ‌க்கிலும்,வ‌ட‌க்கிலும்,தெற்கிலும்வியாபித்திருக்கும்(ஆதி.28:14 )                                               -------இன்னும் வ‌ரும்

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard