"தயவுள்ள சித்தத்தின் இரகசிய"த்தை உலகத்தில் உள்ள எல்லாருமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று வாஞ்சிப்பது எவ்வளவு அபத்தம் என்பதை அறியாமல் இன்றைய கிறிஸ்தவம் வேதம் உலகத்தாருக்குக் கொடுக்கப்பட்டது என்று நம்புகிறது. இதை என்ன சொல்ல?
அவருடய சித்த்தம் இப்படியாக இருப்பதனால்தான் இன்று வேதப்புத்தகம் உலகமுழுவதும் பிரபலமாக இருந்தாலும் அதிலுள்ள சத்தியத்தைத் தெளிவாக அறிந்தவர்கள் அரிதாக இருக்கிறார்கள். தேவன் அதை 'ரகசியமாக' வைத்திருப்பதால்தான் வேதம் வாசிப்பவர்களெல்லாம் சத்தியத்தை அறிந்து கொள்வதில்லை. 'உமது வசனமே சத்தியம்' என்றாலும், அந்த சத்தியம் தேவனால் மிக சிரத்தையாக உலகத்திலும், உலக நோக்கத்துடன் செயல்படும் எவருக்குமே மறைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் மனுஷகுமாரன் வரும்போது(பரோஷியா) விசுவாசத்தைக் காண்பாரோ என்று வசனம் கூறுகிறது.