kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Daily Manna 04/01/2010


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
Daily Manna 04/01/2010


" எகோவா தேவனுக்கே காத்திரு, உன் இருதயத்தில்  பலன் கொண்டு  தைரியமாயிரு. எகோவா தேவனுக்கே காத்திரு. "          (சங். 27:14)

தேவ திட்டத்தில் காலங்கள் ஒரு முக்கியமான காரியமாகும்.

 நாம் கேட்டவைகளைப் பெற தாமதமாகி, சோதனைகளினால் நாம் பலமாக ஈடுபடும் போது சோர்ந்து அதிர்ப்தி அடைதல் கூடாது.

தேவன் உலக சிருஷ்டிப்பிலே குறித்த காலத்தின்படி மனுஷனை அதில் குடியேற்றினார்.

பாவத்திலே மனிதன் விழுந்தபோது, இரட்சகரை உலகில் அனுப்பும் வரை குறித்த காலத்திற்கு தீங்கை பூமியிலே வைத்தார்.

கிறிஸ்துவோடு மகிமையிலே ஆட்சி செய்ய, திருச்சபையை தேர்ந்தெடுக்க    குறித்த காலத்தை வைத்திருக்கிறார்.

ஏற்ற காலத்திலே, நம் ஜெபத்திற்கும் தாமதமின்றி மறவாமல் பதிலளிப்பார். 

கண்ணியில் அகப்படவிருக்கிற குருவியின் கூக்குரலுக்குச் செவிமடுப்பவரும், நமது தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட காரணகர்த்தாவாக இருப்பவரும் தம்மை நோக்கி வேண்டிக்கொள்ளும் எளிமையானவனின் மென்குரலை அலட்சியப்படுத்தமாட்டார்.

அவர் சித்தமில்லாமல் எதுவும் நடவாது.

தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் எகோவா நல்லவர். அவர் இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருப்பது நல்லது.

    (புலம்பல் 3:25 - 26, ஆபகூக், 2:3)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard