kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்சிப்பு / Salvation!!


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: இரட்சிப்பு / Salvation!!


soulsolution wrote:
//"இறுதிவரை நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்" என்பது இந்த சுவிசேஷ யுகத்தில் இயேசுகிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக, பவுலைப்போல ஓட்டத்தை முடிப்பவர்களுக்கு கிடைக்கப்போகும் பரலோக வாழ்வாகும். இவர்கள் ஆளுகைக்கு என்று தெரிந்துகொள்ளப்பட்ட 'சிறுமந்தை' ஆவார்கள்.//

anbu57 wrote:
//சகோ.ஆத்துமா அவர்களே!
தங்கள் கருத்துக்கு வசன ஆதாரம் தராதபோதிலும், தற்போதைக்கு தாங்கள் சொல்வதை சரியென வைத்துக் கொள்வோம்.//

சிறுமந்தை தான் இறுதிவரை நிலைத்திருப்பவர்கள் என தாங்கள் சொன்னதை தற்போதைக்கு சரியென வைத்துக் கொள்வோம் என முன்பு கூறியிருந்தேன் அல்லவா? இப்போது சொல்கிறேன், இவ்வுலக வாழ்வின் இறுதிவரை உபத்திரவங்களைச் சகித்து, சோதனைகளை மேற்கொண்டு, நற்கிரியைகளைச் செய்து நித்திய ஜீவனைப் பெற தகுதி பெறுகிற அனைவரும் இறுதிவரை நிலைத்திருந்து இரட்சிக்கப்படுபவர்களே.

விதைக்கிறவன் உவமையில், கற்பாறையில் விழாமல் (உபத்திரவங்களால் பின்வாங்காமல்), முள்ளுகளில் விழாமல் (உலக இச்சை எனும் சோதனையில் விழுந்துபோகாமல்), நல்ல நிலத்தில் விழுந்து பலன் கொடுக்கிற (நற்கிரியைகளைச் செய்கிற) விதைக்கு ஒப்பான அனைவரும் நித்திய ஜீவனுக்குத் தகுதியுள்ளவர்களே (மத்தேயு 13:18-23); அதாவது இறுதிவரை நிலைத்திருந்து இரட்சிக்கப்படுகிறவர்களே!

ஆகிலும் ஒரு விதை 30-ம், மற்றொன்று 60-ம், மற்றொன்று 100-ம் பலன் கொடுக்கிறபடி, நித்தியஜீவனுக்கு தகுதியாவோரிலும் சிலர் 30 பலன் கொடுக்கிற விதைக்கு ஒப்பாகவும், சிலர் 60 பலன் கொடுக்கிற விதைக்கு ஒப்பாகவும், சிலர் 100 பலன் கொடுக்கிற விதைக்கு ஒப்பாகவும் இருப்பார்கள். அவர்களில் 100 பலன் கொடுக்கிற விதைக்கு ஒப்பானவர்கள்தான் சிறுமந்தையைச் சேர்ந்தவர்கள் என்பது எனது கருத்து.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சரி சகோதரரே, 2 வெள்ளாடுகள் மட்டுமே! ஏற்றுக்கொள்கிறேன்.

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

//ச‌கோத‌ர‌ர் அவ‌ர்க‌ள் எங்க‌ள் மேல் என்ன‌ கோப‌த்தில் இருக்கிறார் என்று தெரிய‌வில்லை.// 

 ஐயோ கோபம் எதுவும் இல்லை சகோதரர் பெறேயன் அவர்களே.

நீங்கள் காட்டும் வழி என்பது "ஒன்றுமே செய்யவேண்டாம், நீங்கள் எப்படிபட்டவர்களாக இருந்தாலும் சரி  உங்களுக்கு நிச்சயம் நித்யஜீவன் உண்டு" என்று இடுக்கமான வாசலை விரிவாக்கி எல்லோரையும் சோம்பேறி ஆக்கிவிடும் போல் இருக்கிறது      

இயேசு எல்லோருடய ரட்சிப்புக்காகவும் மரித்தாலும் "அவரை விசுவாசிப்பவனே கெட்டுபோகாமல் நித்ய ஜீவனை அடைவான் என்றும் விசுவாசியாதவனோ அக்கினைக்குள்ளாக தீர்க்கபடுவான்" என்று வசனம் தெளிவாக சொல்லும் பட்சத்தில், 

எல்லாமே தேவனுடைய திட்டப்படி தேவனுக்கு முன்னே தெரியுமென்றால், நான் என்னசெய்து என்னவாகிவிட போகிறது நான் எப்படிவேண்டுமானாலும் நடப்பேன் தேவன் போட்ட திட்டம்தானே நடக்கபோகிறது என்று ஏனோதானோ வாழ்க்கைக்கு வழி வகுக்கிறது. பிறகு இவ்வளவு பெரிய பைபிளை கொடுத்து "நீ இப்படி நட, அப்படி நட அல்லது உன்னை தண்டிப்பேன்" என்று தேவன் சொல்வது எல்லாம் வெறும் நாடகமாகி விடுகிறது.

இயேசுவின் அன்பை ருஷித்தவன் எவனும் கடைசி நிமிடம்வரை சுவிசேஷம் சொல்லலாம். அதேபோல் இயேசுவின் வருகையின் கடைசி நிமிடம் வரை இரட்சிப்பு உண்டு.  என்ற கருத்தைவிட்டு, சுவிசேஷம் என்றால் என்னவென்பதை அறிந்தவன்தான் சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றால் உங்களைபோல ஒரு பத்து பதினைதுபெர்தான் சுவிசேஷம் சொல்ல முடியும் அவ்வாறு நடந்திருந்தால் நீங்கள் கூட இன்று  இயேசுவை அறிந்திருக்க முடியாது என்று நான் கருதுகிறேன்.

வேதவசனத்தின் உண்மை சாத்தியங்களை அறிந்து வழிநடத்தும்  பரிசுத்த ஆவியானவரின் வல்லமைகளை மட்டுப்படுத்தி ஒரு வசனத்தின் உண்மை பொருளை அறியவிடாமல் வழிமாற செய்கிறது. கொடியவனுக்கு நரகம் இல்லை பாதாளம் என்ற இடமும் இல்லை அக்கினி சூளை இல்லை, அழுகை பறகடிப்பு இல்லை அக்கிநிக்டல் இல்லை நித்யவாதை இல்லை என்று வேதம் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் மறுத்து எல்லாம் வெறும் உவமானம் மொழி பெயர்ப்பு தவறு  என்று சொல்லி எத்தனையோ பரிசுத்தவான்கள் சேர்ந்து மொழிபெயர்த்த வேதத்தை  தவறாக மொழிபெயர்ப்பு என்று சொல்லி வேதத்தில் இன்னும் என்னென்ன தவறாக இருக்குமோ என்று வேதத்தின் பேரிலேயே ஒரு சந்தேகத்தை ஏற்ப்படுத்துகிறது.

இப்படி இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். இத்தனை குழப்பத்திற்கு காரணம் நீங்கள் பரிசுத்த ஆவியானவரை சரியாக அறியவில்லை எனவே  வேதம் சொல்லும் உண்மை என்னவென்று உங்களுக்கு புரியவில்லை என்பது எனது கருத்து.

   



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//சரி சகோதரரே, 2 வெள்ளாடுகள் மட்டுமே! ஏற்றுக்கொள்கிறேன்.//

ஏற்றுக் கொண்டதற்கு நன்றி சகோதரரே!

soulsolution wrote in ஆதாமின் பாவம் தேவனுக்கு முன்பே தெரியுமா?:
// தேவனுக்கும் மனிதன் 'பாவம்' செய்வான் என்பது தெரியும்.

மேலும் இப்படி ஒருமனிதன் பாவம் செய்தால் பரவாயில்லை ஆனால் அவன் சந்ததியே பாவம் செய்கிறதே? சாத்தான் மனிதனை வஞ்சிப்பான், வஞ்சனையில் விழுவதே பாவம் என்றுகூடவா தேவனுக்குத் தெரியாது? ஆக தேவனுடைய அனுமதிய்ல்லாமலா 'சர்ப்பம்' தோட்டததுக்குள் நுழைந்த்தது? அல்லது தேவன் அதையும் அறிய முற்படவில்லையா? யூதாஸ்கரியோத் கிறிஸ்துவை காட்டிக்கொடுப்பான் என்று தெரியுமே ஏன் தடுக்கவில்லை? ஏனென்றால் இவைகளெல்லாம் நடந்தே தீரவேண்டும் என்பது தேவதிட்டம்.//

அவ்வாறெனில் 2 வெள்ளாடுகள் (அநீதிமான்கள்) நித்திய அழிவைப் பெறவேண்டும் என்பதும் தேவனின் திட்டமா? 2 பேரை இழந்துபோவதுதான் மனிதனின் இரட்சிப்புக்கான தேவனின் திட்டமா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:


ராஜ் அவர்களே? வேதம் சொல்லும் உண்மை எங்களுக்குப் புரியவில்லை என்றால் 'புரிந்த' நீங்கள் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்களேன்?




...பிறகு இவ்வளவு பெரிய பைபிளை கொடுத்து "நீ இப்படி நட, அப்படி நட அல்லது உன்னை தண்டிப்பேன்" என்று தேவன் சொல்வது எல்லாம் வெறும் நாடகமாகி விடுகிறது.



என்று பதித்துள்ள நீங்கள் 'இவ்வளவு பெரிய பைபிளை' உங்களுக்கு மட்டும்தான் கொடுத்துள்ளார். உங்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டன்மார் யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழ் 'பைபிள்' வந்தே 200 வருடங்கள்தான் ஆகும். அதிலும் 'பைபிள்' வாசிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேரோ? மேலும் கிறிஸ்துவின் நாமத்தில்தான் இரட்சிப்பு என்றால் அவருக்கு முன் வாழ்ந்தவர்களீன் கதி என்ன?



"மாம்சமான யாவரும் தேவனுடைய ரட்சிப்பைக் காண்பார்கள்" லூக்3:5 ல் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?



நீங்கள் எழுதியது கொடியவனுக்கு நரகம் இல்லை பாதாளம் என்ற இடமும் இல்லை அக்கினி சூளை இல்லை, அழுகை பறகடிப்பு இல்லை அக்கிநிக்டல் இல்லை நித்யவாதை இல்லை என்று வேதம் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் மறுத்து எல்லாம் வெறும் உவமானம் மொழி பெயர்ப்பு தவறு என்று சொல்லி எத்தனையோ பரிசுத்தவான்கள் சேர்ந்து மொழிபெயர்த்த வேதத்தை தவறாக மொழிபெயர்ப்பு என்று சொல்லி...




மூலபாஷையில் நீங்கள் சொல்லும் எதுவும் இலலை சகோதரரே. பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமே. மேலும் "மொழிபெயர்த்தவர்கள் எல்லாரும் பரிசுத்தவான்கள்" என்றால் தமிழ் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் அக்கால ஆங்கிலம் அறிந்த இந்து பிராமணர்கள்தான்' என்பது வரலாறு. மொழிபெயர்க்க 'பரிசுத்தம்' தேவையில்லை. மொழிப்புலமை இருந்தால் போதும்.





நாங்கள் வேதத்தின் பேரில் சந்தேகம் கொள்ளவில்லை. அது பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மொழிபெயர்ப்பில் ஏகப்பட்ட 'அபத்தங்கள்' நிறைந்துள்ளது. எனவேதான் வேத்ததை 'ஆராய்ந்து பாருங்கள்' என்ற கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஆராய்கிறோம். ஆகவே குழப்பங்கள் இல்லை.

 




 



-- Edited by soulsolution on Tuesday 13th of October 2009 06:03:10 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ராஜ் எழுதுகிறார்:
"சுவிசேஷம் என்றால் என்னவென்பதை அறிந்தவன்தான் சுவிசேஷம் சொல்லவேண்டுமென்றால்"

அப்ப‌டி என்றால் சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளையும், ச‌ம்ப‌ந்தில்லாம‌ல் வ‌ரும் த‌ரிச‌ன‌ங்க‌ளையும், க‌ண‌வுக‌ளையும் பார்த்து, மேலும், நேற்று இராத்திரி தான் இயேசு கிறிஸ்து என் முன்னே தோன்றினார் என்றும், என்னை வ‌ந்து கையை பிடித்து (!!) ப‌ர‌லோக‌ம் அல்ல‌து என‌து மூதாதையரை காணும்ப‌டி ந‌ர‌க‌ ட்ரிப் கூட்டி வ‌ந்தார், அல்ல‌து ப‌ரிசுத்த‌ ஆவியான‌ தேவ‌ன் நாற்காலி போட்டு பேசினார் என்றும், ஜெப‌ கோபுர‌ங்க‌ளை க‌ட்ட‌ சொன்னார் என்றும், ஜெப‌ மைய‌ங்க‌ளையும், திற‌ப்பின் வாச‌ல்க‌ளை க‌ட்ட‌ சொன்னார் என்று சொல்லுவ‌து தான் சுவிசேஷ‌மா. இல்லை ச‌கோத‌ர‌ரே,இது எல்லாம் சொந்த‌ புக‌ழ்சியும், தேவ‌னை ம‌ட்டு ப‌டுத்தும் காரிய‌ங்க‌ள் ஆகும்.

சுவிசேஷ‌ம் என்றால் என்ன‌வென்று தெரியாம‌ல் பிர‌ச‌ங்கித்த‌தினால் தான் இன்று ச‌பைக‌ளில் இத்துனை குழ‌ப்ப‌ங்க‌ள் இருப்ப‌தை பார்க்க‌ முடிகிற‌தே. எல்லா ச‌பைக‌ளிலும் இயேசு கிறிஸ்துவை தான் போதிக்கிறார்க‌ளாம், ஆனால் ஒரு ச‌பை விசுவாசி (!!) வேறு ச‌பைக்கு சென்று விட்டால் அந்த‌ முத‌ல் ச‌பை பாஸ்ட‌ர் விடும் சாப‌ங்க‌ளை கேட்க‌னுமே. இது தான் சுவிசேஷ‌மா.

ஒன்றை கேட்கிறேன், உங்க‌ள் தெருவில் இருப்ப‌வ‌ர்க‌ள், விடுங்க‌ள், உங்க‌ள் ப‌க்க‌த்துவிட்டில் இருப்ப‌வ‌ர்க‌ள் எல்லோருடித்திலும் நீங்க‌ள் சுவிசேஷ‌ம் (!!) சொல்லிவிட்டீர்க‌ளா? இல்லை ச‌பைக‌ள் ந‌ட‌த்தும் பாஸ்ட‌ர்க‌ள் தான் அப்ப‌டி செய்து விட்டார்க‌ளா. த‌ங்க‌ளின் தெருவையே இவ‌ர்க‌ள் ந‌ட‌த்த‌ முடிய‌வில்லை என்றால், இவ‌ர்க‌ள் என்ன‌ சுவிசேச‌ஷ‌ம் சொல்லுகிறார்க‌ள். பேசுவ‌து எல்லாம் ந‌ர‌க‌மும், எரி ந‌ர‌க‌மும், சாப‌ங்க‌ளும், நித்திய‌ வேத‌னை என்றால், யார் தான் அப்ப‌டி ப‌ட்ட‌ ப‌ய‌ங்க‌ர‌மான‌ தேவ‌னிட‌த்திற்கு வ‌ருவார்க‌ள்? ஏன் இதை சொல்லுகிறார்க‌ள் என்றால் இவ‌ர்க‌ளுக்கு சுவிசேஷ‌ம் என்றால் என்ன‌வென்று தெரிய‌வில்லை. வேத‌த்தில் உள்ள‌தை எந்த‌ வித‌ பூச‌லும் மெறுக‌லும் இல்லாம‌ல் சொல்ல‌ட்டுமே. ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை. ஏன் தேவ‌ன் பெய‌ரில் மிர‌ட்ட‌ வேண்டும்? இது தான் சுவிசேஷ‌மா? இந்த‌ சுவிசேஷ‌த்தை சொல்லி தான் இந்தியாவின் 5%த்தை காத்துக்கொண்டிருக்கிறார்க‌ளா இந்த‌ சுவேஷ‌க‌ர்க‌ள்? இவ‌ர்க‌ள் சுவிசேஷ‌ம் சொல்லும் இட‌ங்க‌ள் எங்கே? அவ‌ர்க‌ள் சொந்த‌ ச‌பையாக‌ இருக்கும், அல்ல‌து அவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள் ச‌பையாக‌ இருக்கும். திற‌ந்த‌ வெளி மைதான‌த்திற்கு யார் செல்லுகிறார்க‌ள்? அந்த‌ ஊர் பாஸ்ட‌ர் ஃபெளோஷிப் என்று ஒரு அன்பின் (!?) இயக்க‌ம் இருக்கும், அவ‌ர்க‌ளின் அன்பு க‌ட்ட‌ளையின் பேரில் ச‌பைய‌ன‌ர் சென்று மைதான‌த்தை நிற‌ப்புவார்க‌ள், வேறு என்ன‌? இது தான் உல‌க‌ம் முழுவ‌தும் சுவிசேஷ‌ம் சொல்லுவ‌தா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:
 ///இவ்வளவு பெரிய பைபிளை' உங்களுக்கு மட்டும்தான் கொடுத்துள்ளார். உங்கள் தகப்பனார், பாட்டனார், முப்பாட்டன்மார் யாருக்கும் கொடுக்கவில்லை. தமிழ் 'பைபிள்' வந்தே 200 வருடங்கள்தான் ஆகும். அதிலும் 'பைபிள்' வாசிக்கத் தெரிந்தவர்கள் எத்தனை பேரோ? மேலும் கிறிஸ்துவின் நாமத்தில்தான் இரட்சிப்பு என்றால் அவருக்கு முன் வாழ்ந்தவர்களீன் கதி என்ன?///


9. முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும்.
10. முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.
11. தேவனிடத்தில் பட்சபாதமில்லை.
12. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள்.


சகோதரர் அவர்களே,  நியாயபிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் அதற்க்கு ஏற்றாற்போல் நியாயம் தீர்க்கபடுவார்கள், மனசாட்சி பிரமாணத்தின் கீழ் வாழ்ந்தவர்கள் மனசாட்சியின் அடிப்படையில் நியாயம்தீர்க்கப்படுவார்கள். புதிய உடன்படிக்கை கீழ் வாழ்பவர்கள் அதன் அடிப்படையில் நியாயம்தீர்க்கபடுவார்கள். எவர்களை எதன அடிப்படையில் நியாயம் தீர்க்கவேண்டும் என்று தேவனுக்கு நிச்சயம் தெரியும் அவர் சர்வலோக நியாதிபதி.

வெள்ளை சிங்காசன நியாய தீர்ப்பின் போதும் இதுதான் சொல்லப்படுகிறது "அவரவர் செய்த கிரியயின்படி நியாயதீர்ப்படைந்தார்கள்" என்பது. கிரியையின் அளவுகோல் அவர்கள் எந்த பிரமாணத்தின் அடிப்படையில் வாழ்ந்தார்கள் என்பதன் அடிப்படையில் உள்ளது.      

////"மாம்சமான யாவரும் தேவனுடைய ரட்சிப்பைக் காண்பார்கள்" லூக்3:5 ல் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?///

மாமிசமான யாவரும் இயேசுவின் மரணத்தின் மூலம் இரட்சிப்பை காண்பார்கள் ஆனால் எத்தனைபேர் நித்யஜீவனுக்கு தகுதிபெருவார்கள் என்பதுதான் இங்கு கேள்வி.  


/// மூல
பாஷையில் நீங்கள் சொல்லும் எதுவும் இலலை சகோதரரே. பாவத்தின் சம்பளம் மரணம் மட்டுமே. மேலும் "மொழிபெயர்த்தவர்கள் எல்லாரும் பரிசுத்தவான்கள்" என்றால் தமிழ் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் அக்கால ஆங்கிலம் அறிந்த இந்து பிராமணர்கள்தான்' என்பது வரலாறு. மொழிபெயர்க்க 'பரிசுத்தம்' தேவையில்லை. மொழிப்புலமை இருந்தால் போதும்.///

சரி! தமிழில் மொழி பெயர்த்தவர்கள்தான் இந்து புராண அடிப்படையில்  பாதாளம் நரகம் என்று தவறாக மொழி பெயர்த்துவிட்டனர், ஆங்கில வேதாகமத்தை மொழி பெயர்த்த அறிஞர்கள் எத்தன அடிப்படையில் HELL/HADES/EVERLASTING FIRE  என்று மொழி பெயர்த்தனர்? ஏனெனில் அதிலிருந்துதானே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இந்து புராணம் தெரிய நியாயமில்லையே!

ஆக மொத்தம் தேவனுக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த ஆயிரம் ஆயிரம் மேலைநாட்டு மற்றும் உள்நாட்டு அறிஞர்கள் தேவமனிதர்கள்  எல்லோரும் கால காலமாக  தவறான உபதேசத்தில் வாழ்ந்து முடித்துவிட்டனர்.
தேவனுக்காக தங்கள் ஜீவனையே கொடுத்த அவர்களுக்கெல்லாம் தேவன் உண்மையை உணர்த்தவே இல்லை அதாவது அவர்களுக்கு உண்மையை அறியும் ஞானம் இல்லை. ஆனால் நீங்கள் மூல பாஷயை ஆராய்ந்து வசனம் சொல்லும்  நரகம்/ பாதாளம்/ நித்யஅழிவு இல்லை என்ற உண்மையை கண்டுபிடித்துவிட்டீர்கள், நல்லது!  

////////நாங்கள் வேதத்தின் பேரில் சந்தேகம் கொள்ளவில்லை. அது பரிசுத்த ஆவியானவரின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மொழிபெயர்ப்பில் ஏகப்பட்ட 'அபத்தங்கள்' நிறைந்துள்ளது. எனவேதான் வேத்ததை 'ஆராய்ந்து பாருங்கள்' என்ற கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஆராய்கிறோம். ஆகவே குழப்பங்கள் இல்லை////


அதாவது எப்பொழுதோ நடந்த உண்மைகளை எழுத்தின் மூலம் இன்றுவரை உலகுக்கு கொடுத்து பாதுகாத்து வரும் ஆவியானவர்.  இந்த மொழி பெயர்ப்பு விஷயத்தில் மட்டும் உதவி செயாமல் விட்டுவிட்டார். அதாவது வேதம் ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ தவறாக மொழி பெயர்க்கப்படுவதை அவரால் மானிடர் பண்ண முடியவில்லை எனவே இஸ்லாமியர் சொல்வதுபோல் வேதத்தில் சொந்த கருத்துக்கள் புக அனுமதித்துவிட்டார். அப்படித்தானே?  

வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று இயேசு யூதர்களை நோக்கித்தான் சொன்னார் அவர் சொன்ன நாட்களில் பழைய ஏற்ப்பாடு மட்டும்தான் இருந்து அது பல மொழிகளில் இருந்திருக்க நியாயமில்லை.  மேலும் அவர்கள் இயேசுவை நம்பாததால் அதில்  நித்யஜீவனை குறித்தும் தன்னை குறித்தும் சாட்சி இருக்கிறது என்பதை ஆராய்ந்து கண்டுபிடிங்கள் என்றுதான் சொன்னார். புதிய ஏற்பாட்டு காலத்தில் வேதத்தை குறித்து கண்டித்து உணர்த்துபவர் பரிசுத்த ஆவியானவரே ஆராய்ச்சிகள் அல்ல என்றே நான் கருதுகிறேன்.    
 

 




 

 


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உங்கள் வாதம் சரி என்றால், இன்று ஒரே ஆவியானவர் நடத்துகிறார் என்றால், ஏன் இத்துனை சபைகள்? இதற்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள்.

ஆவியானவர் வந்து இயேசு கிறிஸ்து சொல்லிக்கொடுத்த காரியங்கள் சரி என்று தான் போதிப்பாரே தவிர, இன்று கனவுகளும் காட்சிகளும் கான்பவர்களும், பரலோகமும், நரகமும் ட்ரிப் அடித்து வருபவர்களும் சரி என்று சொல்ல மாட்டார்.

சரி, ஆவியானவர் தான் இத்துனை மொழிப்பெயர்ப்புகளையும் உருவாக்க உதவினார் என்றால், நீங்களே சொல்லுங்கள் ஏன், இத்துனை மாறுமாடுகள், ஏன் சில வேதாகமங்களில் வசனமே இல்லை, சிலவற்றில் அதே வசனங்களை அடைப்பு குறிகளுக்குள் () போட்டு இருக்கிறார்கள். ஏன் சிலவற்றில் ஃபுட்நோட் பகுதியில் "இந்த வசனம் அல்லது பகுதி 16ம் நூற்றாண்டிற்கு முன் அல்லது பழமையான தோல்சுறுலில் இல்லை" என்று இருக்கிறது.

சகோதரரே, ஆவியானவரின் துனைக்கொண்டு எழுதப்பட்ட வேதம் மூல பாஷையில் உள்ள‌து மாத்திர‌மே. அதை அப்ப‌டியே காப்பி எடுக்கும் போது கூட‌ சில‌ வார்த்தைக‌ள் கூடியிருக்க‌லாம், சில‌து குறைந்திருக்க‌லாம், ஆனால் அர்த்த‌ங்க‌ள் மாற‌வில்லை. ஆனால் மொழிபெர்க்க‌ புத்த‌க‌ங்க‌ள் அனைத்துமே ம‌னித‌ ஞான‌த்தில் ம‌னித‌ முய‌ற்சியில் வ‌ந்த‌வைக‌ள் தான். ஆனால் அதிலும் சில‌ர் முய‌ற்சி எடுத்து மூல‌ பாஷைக‌ளை ஆறாய்ந்து பார்த்து அத‌ன் ப‌டி எழுதுகிறார்க‌ள். உதார‌ன‌த்திற்கு ம‌ஃபெட் என்கிற‌ ஒரு மொழிப்பெய‌ர்ப்பில் ந‌ர‌க‌ம், பாதாளம் என்று எழுதாம‌ல், மூல‌ பாஷையாகிய‌ "ஷியோல்" ஹேட‌ஸ்" போன்ற‌ வார்த்தைக‌ளை போட்டு தெளிவு ப‌டுத்தியிருக்கிறார்க‌ள். ஆக‌வே தான் ந‌ம‌க்கு அதிக‌ மொழிப்பெய‌ர்ப்புக‌ள் தேவை என்று சொல்லுகிறோமே த‌விர‌, அதை அப்ப‌டியே எடுத்துக்கொள்வ‌த‌ற்க‌ல்ல‌.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

Anbu wrote

//மற்றபடி, இயேசுவை அறியாதவர்களில் துன்மார்க்கர்களும், இயேசுவை அறிந்துள்ள போதிலும் அவரது கற்பனைகளின்படி நடக்கமுயலாமல் அலட்சியமாய் இருந்தவர்களும் 1000 வருட அரசாட்சியில் பங்கடையாமல் நேரடியாக இறுதி நியாயத்தீர்ப்பை சந்தித்து 2-மரணத்தில் பங்கடைவார்கள் எனக் கருதுகிறேன்.//



நீதிமான் ஒருவனாகிலும் இல்லை, எல்லாரும் பாவம் செய்து..., ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறது போல கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள், பிரேதக்குழியிலுள்ள அனைவரும்,   போன்ற வசனங்கள் மிகத்தெளிவாக மரணம் எல்லாருக்கும் உண்டு என்றும், அதேபோல உயிர்த்தெழுதலும் எல்லாருக்கும் உண்டென்றும் அறிவிக்கின்றன. நேரடியாக 2ம் மரணம் என்பது வேதத்தில் இல்லை. அப்படி இருந்தால் இயேசுகிறிஸ்துவின் பாடு, இரத்தம் சிந்துதல், மரணம், உயிர்த்தெழுதல் அனைத்தும் ஒரு உபயோகமற்றதாகிவிடும்.

கிருபை என்பது அர்த்தமற்றதாகிவிடும். கிருபை மனிதன் தகுதியை வைத்தல்ல தேவனது அன்பைச்சார்ந்தது. அந்தக் கிருபையின் நிமித்தம்தான் அவர் 'இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்'.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard