kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தலைப்பு வாரியாக படித்தல் - TOPICAL STUDY


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தலைப்பு வாரியாக படித்தல் - TOPICAL STUDY


தலைப்பு வாரியாக படித்தல் - TOPICAL STUDY

திருவசனத்தை பகுத்து போதித்தல் - Rightly dividing the word of God) 2 தீமோ 2:15

 - தலைப்புவாரியாகப் படித்தல் என்றால் என்ன‌?
 - எந்தத் தலைப்புகளை ஆராய்வது?
 - எப்படி ஆராய்வது?

பரிசுத்த வேதகமம் என்னும் தேவதிட்டத்தின் சில முக்கிய அம்சங்களைத் தலைப்புகளாகத் தேர்ந்து எடுத்து அதன் முழுவிவரத்தையும் தெளிவாக ஆராய்கின்ற இந்த முறையானது பைபிளை தெளிவாகப் படித்தறிய கையாள வேண்டிய (அநேக முறைகளில்) அவசியமான ஒரு முக்கிய முறையாகும். அன்றியும் வேதவசனங்களின் இருபுறத்தையும் ஆராய்ந்து அறிவதே இதன் விசேஷமாகும்.

எடுத்துக்காட்டு:

நியாய‌த்தீர்ப்பு, இர‌ண்டாம் வ‌ருகை, திரித்துவ‌ம், ந‌ர‌க‌ம், இஸ்றாயேல், தூத‌ர்க‌ள், தேவ‌ராஜ்ஜிய‌ம், 1000 வ‌ருட‌ அர‌சாட்சி, இது போன்ற‌ த‌லைப்புக‌ளில் ஆராய்ச்சிக‌ளை மேற்கொள்ளுத‌ல்.

இவ்வாறு நாம் ஒரு த‌லைப்பை தேர்ந்தெடுத்து ஆராய்த்துவ‌ங்கும் போது அந்த‌ த‌லைப்பைப‌ற்றிய‌ ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ எல்லா வாக்கிய‌ங்க‌ளையும் கிர‌ம‌மாக‌ முழுமையாக‌ மூல‌ பாஷைக‌ளின் அர்த்த‌ம் உட்ப‌ட‌, தீர‌ ஆராய்ந்து அத‌ன்மூல‌ம் ஒரு ப‌டிப்பினையை (ச‌த்திய‌த்தை) க‌ற்றுக்கொள்ளுத‌ல் என்ப‌து இவ்வ‌கையான‌ ஆராய்ச்சியின் விசேஷ‌மாகும்.

இம்முறையான‌து, ஏதாவ‌து ஒரு சில‌ வ‌ச‌ன‌ங்க‌ளை ம‌ட்டும் பொருட்ப‌டுத்தி ஒரு முடிவுக்கு வ‌ருகின்ற‌ முர‌ட்டுத்த‌ன‌த்திலிருந்து இது ந‌ம்மை இர‌ட்சிக்கும். ஏனெனில், வேத‌வாக்கிய‌ங்க‌ளின் இருபுறத்தையும் க‌ருத்தில் கொண்டு ஆராய்வ‌து சிற‌ந்த‌து த‌விர‌, ஏதாவ‌து ஒரு சில‌ வ‌சன‌ங்க‌ளை ம‌ட்டுமோ அல்ல‌து வ‌ச‌ன‌த்தின் ஒரு புற‌த்தை ம‌ட்டுமோ ஆராய்ந்தால் த‌வ‌றான‌ உப‌தேச‌ங்க‌ள் பிற‌க்கும்.

மேலும், இவ்வாராய்ச்சிக்கு உத‌வியாக‌ இக்கால‌ங்க‌ளில் ஒத்த‌வாக்கிய‌ அக‌ராதிக‌ள், மூல‌பாஷை அக‌ராதிக‌ள், ப‌ல்வேறு புதிய‌ திருத்திய‌ மொழிப்பெய‌ர்ப்பு வேதாக‌ம‌ங்க‌ள் யாவும் வெளிவ‌ந்துள்ள‌ன‌.

இவ்வாராய்ச்சியில் சில‌ த‌லைப்புக‌ளைக் குறுகிய‌ சில‌ நேர‌த்திலேயே ஒரு சில‌ வ‌ச‌ன‌ங்க‌ளைக் கொண்டே எளிதில் புரிந்து கொள்ள‌ முடியும். ஆனால்; சில‌ த‌லைப்புக‌ள் நீண்ட‌ நேர‌த்தை செல‌வ‌ழித்து ப‌ல‌ப‌குதிக‌ளாக‌ ப‌குத்தும் கூட‌ ஆராய் வேண்டிய‌ நிலையும் நேர‌லாம். மொத்த‌த்தில் பைபிள் ஆராய்ச்சி என்ப‌து வ‌ழ‌க்க‌மான‌ ஞாயிறு ஆராத‌னையில் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் செய்தி அல்ல‌. அல்ல‌து ஒரு 45 நிமிட‌ம் அல்ல‌து ஒரு ம‌ணிநேரா தியான‌மும் அல்ல‌. இத‌ற்கு அதிக‌ சிர‌த்தையும் பொறுமையும் அவ‌சிய‌ம்.

ஏனெனில் துர் உப‌தேச‌ங்க‌ள் நிறைந்து காண‌ப்ப‌டும் இச்ச‌பைக‌ளை சீர்த்திருத்த‌ வேண்டுமானால் நாம் சிர‌த்தை எடுத்து ப்தைய‌லை தோண்டி எடுப்ப‌து போல் ஆழ்ந்து வ‌ச‌ன‌ங்க‌ளை தோண்டி எடுத்துதான் ச‌த்திய‌ங்க‌ளைப் போதிக்க‌ வேண்டியுள்ள‌து. மேலும் இம்முறையில் நாம் மிக‌ முக்கிய‌மாக‌ க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து யாதெனில், ந‌ம்முடைய‌ சொந்த‌ க‌ருத்துக்க‌ள் (நம் சபை பாஸ்டர் உட்பட‌)அபிப்பிராய‌ங்க‌ளுக்குகு ஏற்ப‌ ஆராய்ச்சியின் முடிவான‌து இல்லாம‌ல் போனாலும் பைபிள் வ‌ச‌ன‌ங்க‌ள் கொடுக்கும் ய‌தார்த்த‌மான‌ அர்த்தங்க‌ளையே நாம் முடிவாக‌ எடுத்துக்கொள்ள‌ வேண்டும் என்ப‌தே.

மேலும் இந்த‌ முறையான‌து பாலுண்ணுகிற‌ குழ‌ந்தைக‌ளுக்கு அடுத்த‌ ப‌ல‌மான‌ ஆகார‌த்தை உண்டு பூர‌ண‌ராகும் நிலையில் ஆர‌ம்ப‌மாகும்.

(இவ்வாறு த‌லைப்புவாரியாக‌ ப‌டித்த‌றியும் போது மிக‌க்குறுகிய‌ கால‌த்திலேயே பைபிளின் முழு விசேஷ‌ங்க‌ளையும் அறிந்துகொள்வ‌து ந‌ம‌க்கு எளிதாகிற‌து. அல்லாம‌ல் வ‌ழ‌க்க‌ம் போல் தொட‌ர்ச்சியாக‌ நாம் பைபிளை ப‌டித்து வ‌ருவ‌து போல் ம‌ட்டுமே ப‌டித்து வ‌ந்தால் க‌டைசி புத்த‌க‌த்தை ப‌டிக்கும் போது முத‌ல் புத்த‌க‌த்தில் ப‌டித்த‌வைக‌ள் யாவையும் நாம் ம‌ற‌க்க‌ நேரிடும்)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard