kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரதீசு / Paradise


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பரதீசு / Paradise


இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தப்பின் 40 நாட்கள் பரலோகம் போகவில்லை (யோவான் 20:7). கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

பரதீசு என்பது "அபிரகாமின் மடி" என்று வேதத்தில் இயேசுவால் உவமையாக சொல்லப்பட்ட இடம் என்று கருதுகிறேன்! பழைய ஏற்ப்பட்டு பரிசுத்தவான்கள் இளைப்பாறிய இடம் அதாவது சாமுவேல் போன்றவர்கள் இளைப்பாறிய இடம்!


அது பூமிக்கு அடியில் இருக்கிறது இயேசு மரித்த உடன் அங்குதான் சென்றுஇருக்க  கூடும். ஐஸ்வர்யாவான் லாசரு சம்பவம்படி பார்த்தல் அதற்கும் பாதாளத்துக்கும் இடையே ஒரு பெரும் பிளவு இருந்ததாக கூறப்படுகிறது.


இயேசு அந்த கள்ளனை நோக்கி இன்று என்னோடுகூட பரதீசில் இருப்பாய் என்று குறிப்பிட்டது அந்த இளைப்பாறுதல் தளத்தையே குறிக்கும் அது பரலோகத்தை குறிக்க வாய்ப்பில்லை என்றே நான் கருதுகிறேன்.


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரதீசு என்பது "அபிரகாமின் மடி" என்று வேதத்தில் இயேசு உவமையாக எங்கு சொல்லியிருக்கிறார். அல்லது "அபிரகாமின் மடி" என்கிற பதம் பரதீசு என்று எப்படி முடிவு செய்து இருக்கிறீர்கள். 'பரதீசு' என்பது ஒரு பாரசீக வார்த்தையாகும். இதற்கு "தோட்டம்" அல்லது "பூங்கா" (சோலை, நந்தவனம்) என்று மட்டுமே அர்த்தம். மேலும் மரித்த பிறகு எதுவும் எங்கும் போய் இளைப்பாறுகிறாது கிடையாது என்கிறது வேதம். சரீரம் மண்ணிற்கும், ஆவி தேவனிடத்திற்கும் சென்று விடுவது (பிரசங்கி 12:7) தான் மரணம் என்கிறது வேதம். புற மத பழக்க வழக்கங்களிருந்து கிறிஸ்துவத்திற்குள் தளுவிய ஒரு விஷயம் தான் இந்த ஆவியோ ஆத்துமாவோ, மரணத்திற்கு பிறகு எங்கோ செல்கிற கருத்து.

அது எங்கும் பூமிக்கடியில் இல்லை, ஏனென்றால் பவுல் அந்த பர்தீசை தான் மூண்றாம் வானத்தில் பார்த்ததாக சொல்லுகிறாரே. இயேசு மரித்தவுடன் சென்ற‌ இட‌ம் க‌ல்ல‌றையே த‌விர‌ வேறு எங்கும் இல்லை. இந்த‌ ப‌ர‌தீசு தான் ஏசா. 35ம் அதிகார‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் ப‌டி ம‌ல‌ர‌ போகும் தேவ‌னின் ராஜிய‌ம். மேலும் க‌ள்ள‌ன் கேட்ப‌தை க‌வ‌னியுங்க‌ள், "இயேசுவே, நீர் உம்முடைய‌ ராஜிய‌த்தில் வ‌ரும் போது என்னை நினைவு கூர்ந்த‌ருளும் என்கிறான்". அத‌ற்கு இயேசு சொன்ன‌து என்ன‌வென்றால், "இன்றே நான் உன‌க்கு சொல்லுகிறேன், நீ என்னுட‌ன் ப‌ர‌தீசில் இருப்பாய் என்று." அது இந்த‌ கேள்வி கேட்ட‌ க‌ள்ள‌னுக்கு மாத்திர‌ம் இல்லை, கேள்வி கேட்காம‌ல் ம‌ரித்த‌ அந்த‌ ம‌ற்ற‌ க‌ள்ள‌னுக்கும் பொருந்தும். பிற்ப்பாடு நிற‌வேற‌ போகும் ஒரு காரிய‌த்தை தான் இயேசு கிறிஸ்து அந்த‌ க‌ள்ள‌னுக்கு வாக்க‌ளித்தார், ஏனென்றால், அவ‌ரே மூண்று நாட்க‌ள் ம‌ரித்து இருக்க‌ வேண்டும், பிற‌கு பிதாவினால் உயிர்ப்பிக்க‌ப‌ட‌ வேண்டும் என்று அவ‌ர் ந‌ன்றாக‌ அறிந்திருந்தார். அப்ப‌டியே வ‌ச‌ன‌த்தை எழுத்தின்ப‌டி புரிந்துக் கொண்டோம் என்றால், அந்த‌ க‌ள்ள‌னுட‌ன் இயேசு இன்று வ‌ரை அந்த‌ ப‌ர்தீசில் தான் இருந்திருக்க‌ வேண்டும். "நீ இன்றே என்னுட‌ன் ப‌ர‌தீசில் இருப்பாய்". ஆனால் இயேசுவோ பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் ப‌ர‌லோக‌த்தில் இருப்ப‌தாக‌ தான் வேத‌ம் கூறுகிற‌து.

  ஆக‌வே, இயேசு கிறிஸ்துவின் ராஜியமாக ம‌ல‌ர‌ போகும் ப‌ர‌தீசில் அந்த‌ க‌ள்ள‌ன் க‌ண்டிப்பாக‌ இருப்பான், அவ‌ன் மாத்திர‌ம் இல்லை, ப‌ர‌லோக‌ம் செல்லாத‌ ம‌ற்ற‌ அனைவ‌ரும் அங்கு தான் வ‌ர‌ போகிறார்க‌ள். அத‌ற்காக‌ தான் இந்த‌ ம‌னித‌னும், இந்த‌ பூமியும் ப‌டைக்க‌ப்ப‌ட்டது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:
/ மேலும் மரித்த பிறகு எதுவும் எங்கும் போய் இளைப்பாறுகிறாது கிடையாது என்கிறது வேதம்./ 

மரித்தபின் முடிவு மட்டும் இளைப்பாறும் இடம் உள்ளது என்று வேதம் போதிக்கிறது  

நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான். தானி 12:13
தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான் 1சாமு:28:!4 


bereans wrote:

/இயேசு மரித்தவுடன் சென்ற‌ இட‌ம் க‌ல்ல‌றையே த‌விர‌ வேறு எங்கும் இல்லை./ 


இந்த கருத்து சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அவர் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று வசனம் சொல்கிறேது 


ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபே:4:9)



மேலும் அவர்  நோவா காலத்தில் மரித்து காவலில் வைக்கப்பட்டிருக்க்ம் ஆவிகளுக்கு  பிரசங்கித்தார் என்று வசனம் சொல்கிறது


அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 


 

 



-- Edited by RAAJ at 19:05, 2009-02-26

-- Edited by RAAJ at 19:07, 2009-02-26

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தானியேலை இளைப்பாற‌ சொன்ன‌து அவ‌ன் ம‌ர‌ண‌த்தை குறித்து மாத்திர‌மே, ஏனென்றால் ம‌ர‌ண‌த்தை நித்திரைக்கு ஒப்பிடுகிற‌து வேத‌ம். ம‌ர‌ண‌ம் என்ப‌து ஒரு நித்திரை அடைந்த‌ நிலை. மேலும் ச‌வுல் ம‌ரித்த‌ சாமுவேலை குறித்த‌ ச‌ம்ப‌வ‌த்தை ஒரு த‌னி ப‌குதியாக‌வே நான் ப‌திவு செய்கிறேன், இப்பொதைக்கு இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் அசுத்த‌ ஆவிக‌ளின் கிரியை என்ப‌தை தெரிவித்துக்கொள்கிறேன், அந்த‌ ஸ்திரி ஒரு குறி சொல்லும் ஸ்திரி.

அடுத்து நீங்க‌ள் கொடுத்திருக்கும் எபே. 4:9,10 என்ப‌து பிற்பாடு த‌ப்பான‌ கோட்பாடுக‌ளினால் சேர்த்துக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ஒரு வ‌ச‌ன‌மாகும். த‌ய‌வு செய்து உங்க‌ளிட‌ம் NIV, KJV, NKJV, ASV ப‌திப்புகள் இருந்தால் அதில் வாசித்து பாருங்க‌ள். ஆக‌ சேர்த்து கொண்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ளை எந்த‌ வாத‌த்திற்கும் எடுத்து கொள்ளாதீர்க‌ள்.

ச‌ரி யார் இந்த‌ நோவா கால‌த்தில் ம‌ரித்து காவ‌லில் வைக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஆவிக‌ள்? இவ‌ர்க‌ளுக்கு ஏன் இயேசு பிர‌ச‌ங்கிக்க‌ வேண்டும்? என்றாவ‌து யோசித்து பார்த்தீர்க‌ளா? இந்த‌ ஆவிக‌ள் ம‌னித‌ர்க‌ளின் ஆவிக‌ள் இல்லை மாறாக‌, யூதா எழுதிய‌து போல், "த‌ங்க‌ள் ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாம‌ல், த‌ங்க‌ளுக்குரிய‌ வாச‌ஸ்த‌ல‌த்தை விட்டுவிட்ட‌ தூத‌ர்க‌ளையும், ம‌காநாளின் நியாய‌த்தீர்ப்புக்கென்று நித்திய‌ ச‌ங்கிலிக‌ளினாலே க‌ட்டி, அந்த‌கார‌த்தில் அடைத்துவைத்திருக்கிறார்" (யூதா. :6). இந்த‌ ஆவிக‌ளை குறித்து தான் பேதுரு எழுதுனார், "பாவஞ்செய்த‌ தூத‌ர்க‌ளை தேவ‌ன் த‌ப்ப‌விடாம‌ல், அந்த‌கார‌ச் ச‌ங்கிலிக‌ளினாலே க‌ட்டி ந‌ர‌க‌த்திலே த‌ள்ளி நியாய‌த்தீர்ப்புக்கு வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌ ஒப்புகொடுத்து...:" (2 பேது 2:4).

யார் இந்த‌ தூத‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் தான் நாம் காவ‌லில் உள்ள‌ ஆவிக‌ள் என்று வாசிக்கிறோம். இவ‌ர்க‌ள் ஏன் காவ‌லில் இருக்க‌ வேண்டும்? ஏனென்றால் இவ‌ர்க‌ள் பாவ‌ம் செய்த‌ தூத‌ர்க‌ள். என்ன‌ பாவ‌ம்? அது தான் ஆதி. 6ம் அதிகார‌த்தில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ தேவ‌குமார‌ர்க‌ள் இச்சைக்கொண்டு ம‌னுஷ‌குமார‌த்திக‌ளை ம‌ன‌ந்துக்கொண்டு ராட்ச‌த‌ர்க‌ளை ஜெனிப்பித்த‌ பாவ‌ம். நீங்க‌ள் கொடுத்த‌ வ‌ச‌ன‌த்தை கூர்ந்து வாசித்தீர்க‌ள் என்றால், அந்த‌ ஆவி நோவா கால‌த்தில் பாவ‌ம் செய்த‌ ஆவிக‌ள் மாத்திர‌மே. ஏன் அத‌ற்கு முன்பு யாரும் பாவ‌ம் செய்ய‌வில்லையா, அல்ல‌து இயேசு கிறிஸ்து ம‌ரித்து ப‌ர‌லோக‌ம் செல்லும் வ‌ரை யாரும் பாவ‌ம் செய்ய‌வில்லையா? இந்த‌ நோவா கால‌த்தின் ஆவிக‌ளை குறித்து இன்னும் விரிவாக‌ ஒரு த‌லைப்பின் ப‌திகிறேன். ஆக‌ நோவா கால‌த்தில் பாவ‌ம் செய்த‌ தூத‌ர்க‌ளையும், ம‌னித‌னிட‌ம் உள்ள‌ ஆவியையும் போட்டு குழ‌ப்பி கொள்ளாதீர்க‌ள்.

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

RAAJ wrote:

மேலும் அவர்  நோவா காலத்தில் மரித்து காவலில் வைக்கப்பட்டிருக்க்ம் ஆவிகளுக்கு  பிரசங்கித்தார் என்று வசனம் சொல்கிறது


அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். //




1பேதுரு3:19ல் "அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்" என்றுதான் உள்ளது. "மரித்து" என்பது நீங்கள் சேர்த்துக்கொண்ட வார்த்தையாகும். வசனத்தைக் கூட்டாதீர்கள் சகோதரரே. மேலும் மரித்தவனோடு பேசக்கூடாது என்று உபாகமம் சொல்கிறது


 




 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard