kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சில்வரா... கோல்டா....?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: சில்வரா... கோல்டா....?


எல்லாவற்றுக்கும் மேல் "எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்படுவார்கள்" என்கிற மாபெரும் சுவிசேஷத்தை தேவன் தமது வசனத்தின் மூலம் விளங்கச்செய்தது எல்லாவற்றிலும் பெரிய சந்தோஷம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தூக்குத்தண்டனை சரியா இல்லையா என்பதே சரியான விவாதமாக இருக்க முடியும்.என்னைக் கேட்டால் எந்த உயிரையும் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதால், தூக்குத் தண்டனையை நீக்கி விடலாம்.//

இது உங்களுக்குள் இருக்கும் தேவ சாயலின் ஒரு பகுதி!! அன்பு!! உங்களுக்கே இப்படி என்றால் அன்பே உருவான தேவன் எப்படிப்பட்டவர் என்று நினைக்க வேண்டாமா!! இதை குறித்து அரசியல்வாதியான டாக்டர் ராம்தாஸ் சொன்னது மிகவும் பொறுத்தமாக இருந்தது!! 21 வருடங்களாக ஒரு தண்டனையை அனுபவித்த அவர்களுக்கு மரணத்தண்டனை கொடுத்தால் அது 2வது தண்டனையாகி விடும் என்றும் அதில் நியாயம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்!!

நீதியுள்ள தேவன் பாவத்தின் ஒரு தண்டனையாக பாவத்தின் சம்பளம் மரணம் என்று வைத்திருக்கிறார், எழுப்பி மீண்டும் இன்னோரு தண்டனையை தருவார் என்று போதிக்கிறீர்களே!! மூவருக்கு தூக்கு என்றவுடன் தமிழகத்திலேயே இது வரை காணாத ஒரு எழுச்சி உண்டாயிற்றே!! இதற்கு அர்த்தம் தெரியுமா!!?? டாக்டர் ராம்தாஸ் சொன்னதை கூட கிறிஸ்துவை தொழுகிறோம் என்று சொல்லி அவரால் எல்லாரையும் காப்பாற்ற முடியாது என்று வேறு சொல்லுகிறீர்களே!!

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

அந்த நியாயத்தீர்ப்படைவது இன்னோரு மரணத்திற்கு என்று கிறிஸ்தவம் எப்படி தான் போதிக்க தொடங்கியதோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; -- சோல்.//

இதை சொன்னது நானல்ல தேவன் தந்தருளிய வேதம்.

எந்த நாயோ ஆங்கிலத்தில் பதித்த குப்பையை நம்ப எத்தனிக்கிறீர்கள். வேத வார்த்தை கண்ணுக்குத் தெரியவில்லை. பரிதாபம்.

இதோ குளறுபடி

Body and soul

From the Hebrew nephesh, or soulish creatures, including birds and mammals

அப்பாடி ஒருவழியாக பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் 'ஆத்துமா' இருக்கிறது என்று ஒத்துக்கொண்டீர்களே.



-- Edited by soulsolution on Tuesday 30th of August 2011 11:48:05 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//சரி பெரேயன்ஸ் அவர்களே! எப்படியும் கொஞ்சம் பேர் தான் பரலோகம் போவாங்க. மீதி அனைவரும், ஆதாம் காலத்திலிருந்து வாழ்ந்த அனைவரும், உயிர்த்தெழுந்து, பூமியிலுள்ள இராஜ்யத்தில்தான் பாடம் படிக்க வேண்டும். எப்படி அத்தனை பேருக்கும் பூமியில் இடம் இருக்கும்? 6 க்கு 4 கூட கிடைக்காது போல??//

தற்போது உலகத்தில் தரைப்பகுதியில் மட்டும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு 51 பேர்தான் வசிக்கிறார்கள். தற்போதைய மக்கள் தொகை 6,940,646,300. அதாவது 7 பில்லியன். மனிதன் தோன்றி 6000வருடங்களில் மொத்த ஜனத்தொகையே ஏறத்தாழ் 50 பில்லியன். அவர்கள் எல்லாரும் உயிர்தெழுந்து வந்தாலும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 

 357 பேர்தான் இருப்பார்கள். 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னா எப்படி பால் குடிக்குங்குழந்தை, பால் மறந்த பிள்ளை, சிறு பையன் எல்லாம் இருக்காங்க?? அத்துடன் மிருகங்களும் உயிர்த்தெழுந்து ராஜ்ஜியத்தில் அராஜகம் பண்ணாமல் வாழ்வது எப்படி என்று கற்றுக் கொள்கிறது போல் தெரிகிறது!//

பால் குடிக்கிற குழந்தை மரித்து போனால் 25 வயது மனுஷனாகவோ மனுஷியாகவோ உயிர்த்தெழாது!! மிருகங்களுக்கு உயிர்த்தெழுதல் இருக்கிறது என்று வேதத்தில் எங்கேயும் இல்லை!! ஆனால் புதிய பூமி வந்தவுடன் அவைகளுக்கு ஒரு வேளை மரண‌ம் இல்லாமல் இருக்கலாம்!! ஆதாம் எப்படி மிருகங்களுடன் வாழ்ந்தானோ அப்படியே தான் உயிர்த்தெழுந்தவர்களும் இருப்பார்கள் என்று ஏசாயா எழுதுகிறான்!! தேவனின் நோக்கமும் அது தானே!!

இந்த பூமி தாங்கும் மட்டும் தான் மனிதர்களின் பிறப்பு இருக்கும்!! இப்பவே பார்த்தீர்களென்றால் குழந்தை பிறப்பு நின்றுக்கொண்டு இருக்கிறது! ஒரு காலத்தில் வீட்டிற்கு 12 குழந்தைகள் என்று பெற்றுக்கொண்டவர்கள் இன்று ஒன்று மட்டுமே வைத்திருக்கிறார்கள்!! விதவிதமான நோய் வந்து எத்துனையோ பேர் மரிக்கிறார்கள்!! விஞானம் முன்னேற்றிய பிறகு மரிப்பதும் அப்படியே தான்! கொத்து கொத்தாக, ரயில் விபத்து, பூகம்பங்கள், சுனாமி, கலவரங்கள், உள் நாட்டு யுத்தங்கள் போன்றவற்றில் அநேகர் மரிக்கிறார்கள்!! பிறப்பு சதவிகிதம் குறைந்து இறப்பு சதவிகிதம் கூடி வருகிறது!! எல்லாமே தேவனின் சித்தத்திற்கு கீழ்ப்படிந்து நேர்த்தியாகவே நடக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ராம்தாஸ் ஒரு பச்சோந்தி அரசியல்வாதி. 3 பேரையும் தூக்கில் போட்டால் அன்புமணிக்கு பதவி உண்டு என்று சொன்னால் இவரே போய் தூக்கில் போட்டு விட்டு வந்து விடுவார்!

அன்பே உருவான தேவன் தான். பட்சிக்கும் அக்கினியாகவும் இருக்கிறாரே!//

இது ராம்தாஸ் என்கிற மனிதரை நீங்கள் பார்க்கும் பார்வை!!  மூன்று உயிர்கள் ஒரு முறை தண்டிக்கப்பட்டாகிவிட்டது, மறுபடியும் ஒரு தண்டனையா என்கிறது நான் பார்த்த பார்வை!!

பட்சிக்கும் அக்கினியான தேவன் சாத்தானை இல்லாமல் செய்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,

8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.

9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

10. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.//

"அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது." இதில் பட்சித்துப் போட்டது என்றால் என்ன‌?

"அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்."

இவர்கள் யார்?

வசனம் பதித்தால் மட்டும் போதாது. விளக்கவும் வேண்டும்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; -- சோல்.

உண்மை என்று கீழ்கண்ட கட்டுரை சொல்கிறது!!! Enjoy!

Differences Between Humans and Animals

by Andrew Lansdown

September 1, 1995//

இப்படி வேத வசனத்துக்கெதிரான அபத்தக் குப்பைகள் ஏராளம் உண்டு. மிருகத்தைப் பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல என்பது வேத வார்த்தை. ஒரு நாயுடைய விளக்கமும் இதற்கு அவசியமில்லை..

You Enjoy the **** that is against the Word of God..


 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அமெரிக்க நிலநடுக்கம், ஐரின் புயல் எல்லாம் பூமியில் நடக்கும் நியாயத்தீர்ப்பு இல்லையா? இதில் குடிகள் தேவ நீதியை கற்றுக் கொள்ள மாட்டார்களா?//

இதை தான் நியாயத்தீர்ப்பு என்று சொல்லும் வசனங்கள் எதாவது இருக்குமா!! சும்மா வெட்டியான புத்தகங்களை படிப்பதற்கு பதில் வேதத்தில் இருந்து கற்றுக்கொண்டிருந்தீர்களென்றால் இப்படி அபத்தம் எல்லாம் சொல்ல மாட்டீர்கள்!!

அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

நியாயத்தீர்ப்பை குறித்த வசனம் தான் இது!! அமெரிக்க நிலநடுக்கம் ஐரின் புயல், ஜப்பான் சுனாமி இது எல்லாம் நியாயத்தீர்ப்பு என்று சொல்லுவது, ஏதோ இப்படி கொத்தாக கொலை செய்வது தான் தேவனின் நியாயத்தீர்ப்பு என்று சொல்லி நீதியான நியாயத்தீர்ப்பு செய்வார் என்று சொல்லுவதை அவமாக்குகிறீர்கள்!!

பூச்சகரத்து குடிகள் இதில் மரித்து போவார்களே, அவர்கள் என்னத்த நீதியை கற்றுக்கொள்வார்கள்!!

நியாயத்தீர்ப்பு (Judgement) என்பதே மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்னர் தான்!! இதை கூடவா உங்க சபை போதகர் அல்லது உங்கள் சாது போதிப்பது கிடையாது!! ஓஹோ பக்கத்தில் பெரிரிரிரிய தீர்க்கதரிசியான விசெ இருப்பதால் அவர் சொல்லும் தீர்க்கதரிசனங்கள் தான் இவர்களுக்கு நியாயத்தீர்ப்பாக இருக்கும் போல்!!

//நீங்க கண்டிப்பா பரலோகம் போக மாட்டீங்க. நம்ம எல்லாம் ராஜ்யத்தில் ஒரே கிளாஸ், ஒரே செக்‌ஷன் தான்!//

ஏன், உங்க சபை போதகர் பல முறை பரலோகம் போய் வந்தும் உங்களுக்கு பரலோகத்தில் ஒரு வீடு பதிவு செய்துவிட்டு வரவில்லையா!! ஏன், சாது எத்துனையோ முறை போயிட்டு வருகிறார், அட் லீஸ்ட் அவரிடமாவது உங்களுகு ஒரு மாளிகையை பரலோகத்தில் புக் செய்துவிட்டு வர சொல்லவேண்டியது தானே!!

//சோல் அவர்களே! உங்க புரிந்து கொள்ளுதல் தவறென்று தோன்றினால் திருத்திக் கொள்வதில் தவறில்லையே! உங்களிடம் தீர்க்கப்படாத ஆவிக்குரிய தாகம் இன்னும் இருக்கிறது. அதனால்தான் விவாதம் பண்ணுகிறீர்கள்.//

உங்களிடம் கற்றுக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை!! உங்கள் குப்பைகளையும் நீங்கள் காட்டும் ஏதோ ஒரு மனிதன் எழுதிய குப்பையை வசனத்துடன் மோதவிட்டு நாங்களும் ஒரு காலத்தில் வேடிக்கை பார்த்தது உண்டு!! தேவ கிருபை எங்களை கற்றுக்கொள்ள வைத்தது!! இப்பவும் உங்களிடம் கற்றுக்கொள்ள உங்களிடம் விவாதிக்கவில்லை, உங்கள் குப்பைகளை வாசிப்பவர்கள் முன் கொண்டு வந்து, இதை தான் இவர்கள் வேதத்திலிருந்து புரிந்திருக்கிறார்கள் என்பதை எடுத்து சொல்ல தான் உங்கள் பதிவுகளுக்கு மெனக்கெட்டு பதில் பதிவு செய்கிறோம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//அக்கினி பட்சித்து போட்டது என்றால் , அவர்கள் சரீரங்கள் அக்கினியால் அழிக்கப்பட்டது என்று அர்த்தம்//

தவறு. அவர்கள் அழிந்துவிட்டார்கள் என்பதே சரி. சரீரமில்லாமல் உயிரோடு இருக்க முடியாது. 

 

//இவர்கள் யார்? 10ம் வசனத்தின்படி பிசாசு, மிருகம், கள்ளத்தீர்க்கதரிசியைக் குறிக்கிறது.//

பிசாசு, மிருகம், கள்ளத்தீர்க்கதரிசி யாவும் தீமையையும், பொய் உபதேசங்களையுமே குறிக்கும். நேரடி அர்த்தம் அல்ல. 

 

//15ம் வசனத்தின்படி இன்னும் சிலரும் அக்கினிக் கடலுக்கு போகிறார்கள்//

இவர்கள் யார்?

 

//15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.//

எல்லாரையும் அக்கினி பட்சித்துப் போட்ட பின் இவன் யார்?

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மனிதனும், மிருகமும் ஒன்றுதான் என்று நம்பும் மனிதர்களிடம் என்ன சொல்லி புரிய வைக்க முடியும்?//

நானோ சகோ சோல் அவர்களோ எழுதியிருந்தால் நீங்கள் நம்ப வேண்டிய அவசியம் இல்லை!! யாரோ ஒரு மனிதன் எழுதியதை காண்பித்து விட்டு, வேதம் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது எப்படி?

பிரசங்கி 3:18. மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் அறியும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்திலே எண்ணினேன்.

19. மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

20. எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.

21. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

மனுஷர்களும் மிருகங்களைப்போல் தான் இருக்கிறார்கள் என்பதை தேவன் தான் அறிய செய்ய விரும்புகிறாராம்!! இது உங்களக்கு பிடிக்காமல் இருக்கலாம்!!

21ம் வசனத்தை போதிக்கும் கிறிஸ்தவ மண்டலம் சொல்லுவது என்னவென்றால், மனுஷனின் ஆவி மேலேயும், மிருகங்களின் ஆவி கீழேயும் போகிறது என்று!! ஆனால் பிரசங்கி சொல்லுவது என்னவென்றால், மனுஷனின் ஆவி மேலேபோகிறது என்றும் மிருகத்தின் ஆவி கீழே தான் போகிறது என்பதை யாரும் சொல்ல முடியாதாம்!! ஏனென்றால் இரண்டு ஆவியும் (ஜீவ சுவாசம்) ஒன்று தானாம்!!

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

ஆகவே பிரசங்கி சொன்னது ஏதோ தன் சுய ஞானத்தினால் அல்ல என்பதை கோல்டா புரிந்துக்கொள்ள வேண்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நேரடி அர்த்தம் கொள்ளக் கூடாது என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?//

அப்படி என்றால் மிருகத்தை மிருகமாக வைத்துக்கொள்வோம்!!

//ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்படாதவர்கள்!

வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.//

இதற்கு முன்னமே உள்ள வசனத்தை வாசிக்காமல் நேரடியாக இங்கே ஜம்ப் செய்து விட்டீர்களா!!??

வெளி 21:4. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.

//சரீரத்தைத்தான் அக்கினி பட்சிக்கும். ஆத்துமா/ஆவியை அல்ல என்று இதிலிருந்து  புரிந்து கொள்ள வெண்டும்!//

ஆமா!! மிகவும் சரியான புரிந்துக்கொள்தல் தான்!! அப்படியே தொடருங்கள்!!

உங்கள் புரிந்திக்கொள்தலின் படி பரலோகத்திலிருந்து குதுரைகளும் இன்னும் பல மிருகங்களும் வரும், அங்கே "ஆட்டுக்குட்டி" தான் இருக்கிறது!! உண்மையிலேயே சிங்காசனம் போட்டு, அங்கே பல அதில் பல மைல் நீண்ட வெளுத்த தாடையை தடவிக்கொண்டு பிதா உட்கார்ந்திருப்பார்!! கேவலம் ஒரு மிருகத்திடம் மோசம் போகும் அளவிற்கு இருக்கிறீர்களே!! ஏனென்றால் மிருகத்தை அப்படியே தானே எடுத்துக்கொள்ள முடியும்!!

வெளி 11:7 அவர்கள் தங்கள் சாட்சியைச்சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும்.

மிருகத்தோடு யுத்தம் செய்து அதிலும் தோற்று போவார்களாம்!!

வெளி 19:20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.

ஐய்யே!! மிருகத்திற்கு முன்பாக எல்லாம் அற்புதங்கள் செய்தால் அதுக்கு புரியுமா!!??

உங்க காமெடி சாது காமெடி எல்லாம் பெரேயன்ஸின் காமெடி என்கிற தலைப்பின் கீழ் விவாதிப்பது ஆட்சேபிக்கப்படுகிறது!!



-- Edited by bereans on Thursday 1st of September 2011 12:54:06 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//என்க்குத் தெரிந்து பைபிளை கையில் வைத்துக் கொண்டு, மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லும் -------------- இந்த உலகத்திலேயே நீங்க இரண்டு பேர் மட்டுமாகத்தான் இருக்கும்!!//

கோல்டா அவர்களே, உங்களுக்கு பிரசங்கியில் இருந்து நேரடியான வசனங்களை காட்டியும் நீங்கள் இப்படி தான் என்றால் ஒன்றும் செய்ய முடியாது!!

மனிதனும் மிருகமும் செயல்பாட்டில் ஒன்று, அல்லது சிந்திப்பதில் ஒன்று என்று அங்கே பிரசங்கியும் சொல்லவில்லை, அல்லது இங்கே தளங்களில் நாங்களும் சொல்லவில்லை!!
We are not saying this for their Mental Status, but this comment is true for the physical status!!

//நாத்திகர்கள் தான் தேவன் அன்புள்ளவர் என்றால் , ஏன் நரகத்தை உண்டாக்க வேண்டும்? ஏன் ஜனங்களை அதில் தள்ள வேண்டும் என்று கேள்வி கேட்பார்கள்.

அவர்கள்தான் பரிணாம வளர்ச்சியின்படி மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் என்று சொல்லி  மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று சொல்வார்கள்.//

நாத்திகர் தேவனின் அன்பை புரிந்துக்கொண்ட அளிவ்ற்கு கூட வேதத்தை கைய்யில் வைத்திருக்கும் உங்களுக்கு புரியவில்லையே!!

நீங்கள் பிரசங்கியை நாத்தீகர் என்கிறீர்களா!! மேலும் பரிணாம வளர்ச்சியின் கோட்பாட்டை இங்கே யார் பேசுகிறார்கள்!! அப்படி பட்ட ஒரு கோட்பாட்டில் எங்களுக்கு உடன்பாடில்லை!! மிருகத்திலிருந்து மனிதனான பிறகு இரண்டும் ஒன்று என்று எப்படி சொல்ல முடியும்!!

இரண்டும் ஒன்று என்பது அவர்களின் முடிவில் தான், அவர்களின் வாழ்வில் அல்ல‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உங்க வியாக்கியானத்தைப் பார்த்து என் கண்களில் வரும் கண்ணீரை யார் துடைப்பார் என்றுதான் தெரியவில்லை!!!//

காரம் அதிகமாக இருந்தால் கண்ணீர் வர தான் செய்யும்!!

//உங்களுக்கு புரியாது. அல்லது புரிய விரும்புகிறதில்லை என்றாலும் சொல்கிறேன்.//

உங்களுக்கு புரிந்த இலட்சனம் தான் தெரிகிறதே; பிரசங்கி ஒரு நாத்திகர் என்கிற முடிவோடு வேதத்தை வாசிப்போரை என்ன செய்வது!!

//வெளி 21:1-5 ஒரு பாய்ண்டை பேசுகிறது.
6-8 - அடுத்த பாய்ண்ட்.
9-27 -இன்னொரு டாபிக்.//

இப்படி தான் உங்கள் சாது சொல்லிக்கொடுத்தாரா அல்லது உங்கள் சபையின் போதனையா!! வேதத்தை வாசிக்க மாட்டீங்களா!! கத்தோலிக்கர்கள் சின்ன குறிப்பிடம் என்று ஒன்று வைத்திருப்பார்கள், அது போல் நீங்கள் மனுஷர்களின் போதனையின் கையேடு எதுவும் வைத்திருக்கிறீர்களா!!

பின்னும், பின்பு, போன்ற வார்த்தைகள் வந்தவுடன் ஸீன் மாறிவிடுகிறதோ!!

பாய்ண்ட் ஒன்றில் மரணம் இல்லை என்று பேசி விட்டு, அதன் பின் பாய்ண்ட் இரண்டில் அச்சச்சோ மரணம் இருக்கிறது என்று சொல்லுவது அபத்தமாக இல்லை!!

புரிய கூடாது என்று தேவன் உங்களுக்கு நியமித்திருப்பது தெரிகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பிரசங்கி 3:21. உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?

Ecclesiastes 3:21

New International Version (NIV)

21 Who knows if the human spirit rises upward and if the spirit of the animal goes down into the earth?”


New King James Version (NKJV)
21 Who knows the spirit of the sons of men, which goes upward, and the spirit of the animal, which goes down to the earth?

[a]
Footnotes:
    Ecclesiastes 3:21 Septuagint, Syriac, Targum, and Vulgate read Who knows whether the spirit . . . goes upward, and whether . . . goes downward to the earth?

New Living Translation (NLT)
21 For who can prove that the human spirit goes up and the spirit of animals goes down into the earth?

Good News Translation (GNT)
21 How can anyone be sure that the human spirit goes upward while an animal's spirit goes down into the ground?

New Life Version (NLV)
21 Who knows that the spirit of man goes up and the spirit of the animal goes down to the earth?

Now You have a chance to prove that human spirit goes UP and animal spirit goes DOWN!! Bible says no one knows but you say that you know that it goes UP because you are not following the scriptures, rather you follow handful of man made notes!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நாத்திகர்கள் தான் தேவன் அன்புள்ளவர் என்றால் , ஏன் நரகத்தை உண்டாக்க வேண்டும்? ஏன் ஜனங்களை அதில் தள்ள வேண்டும் என்று கேள்வி கேட்பார்கள்//

நாத்திகனுக்குத் தெரியும் இறந்தால் ஒன்றுமில்லை என்று. நரகம் என்பது வேதத்தில் மூல பாஷையில் இல்லவே இல்லாத ஒரு பதம்.

//அவர்கள்தான் பரிணாம வளர்ச்சியின்படி மனிதன் மிருகத்திலிருந்து வந்தான் என்று சொல்லி  மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று சொல்வார்கள்.//

நாங்கள் மனிதன்மட்டுமல்ல சகலத்தையும் உண்டாக்கியவர் தேவன் என்றுதான் சொல்கிறோம். மனிதனும் மிருகமும் உயிர்வாழும் விதத்தில் ஒன்று என்றே வேதம் சொல்கிறது, இரண்டுக்கும் மரணம் ஒரேவிதமாக சம்பவிக்கிறது என்றுதான் கூறுகிறோம்/

//என்க்குத் தெரிந்து பைபிளை கையில் வைத்துக் கொண்டு, மனிதனும் மிருகமும் ஒன்றுதான் என்று சொல்லும் -------------- இந்த உலகத்திலேயே நீங்க இரண்டு பேர் மட்டுமாகத்தான் இருக்கும்!!//

எனக்குத் தெரிந்து வேத வசனங்களை நாத்திகன் தன்னிச்சையாக எழுதியது என்று சொல்வது நீங்க மட்டும்தான் இருந்தீங்க இப்போது அந்திகிறிஸ்துவின் சீஷன் சில்லி சாமும் சேர்ந்துகொண்டான். இதைக் கண்டனம் செய்யாத எவனும் அதை ஆமோதிக்கிறான் என்றுதான் அர்த்தம். மேய்ப்ப நாய் பீற்றர் உட்பட‌....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மனிதனும் மிருகமும் உயிர்வாழும் விதத்தில் ஒன்று என்றே வேதம் சொல்கிறது

லூசா நீங்க? நீங்களும் உங்க நாயும்(அல்லது பூனையும்!) ஒன்றா? அது பைபிள் வாசித்து, ஜெபித்து ஆண்டவரைத் துதிக்கிறதா? வேலைக்குப் போகுதா? வீடு கட்ட வேண்டும் என்று நினைக்குதா? பிற ஏழை நாய்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பரிதாபப்படுகிறதா? என்ன பேசுகிறோம் என்று யோசித்துப் பேசுங்க.//

 மூட கோல்டாவே மரணம் பற்றியும் உயிர்வாழும் விதம் பற்றியுமே விவாதிக்கிறோம். மிருகத்துக்கும் காற்று, நீர், ஆகாரம், வெளிச்சம் போன்ற காரியங்கள் வேண்டும் மனிதனும் அப்படியே. அதையும் மரணமும் ஒரெ விதமாக சம்பவிக்கும், (மூச்சு நின்றால் மரணம்) என்றே வேதமும் கூறுகிறது.

மூளை சற்றே வித்தியாசமாக முடிவெடுக்கும் திறனுடன் மனிதனுக்கு‍ படைக்கப்பட்டுள்ளது. இங்கு நாம் விவாதிப்பது மரணத்தைப் பற்றியே. திசை திருப்ப வேண்டாம்.

//இரண்டுக்கும் மரணம் ஒரேவிதமாக சம்பவிக்கிறது என்றுதான் கூறுகிறோம்

எல்லாம் ஒன்றுதான் என்றால் மிருகங்கள் உயிர்த்தெழாது என்று ஏன் உங்க நண்பர் சொல்கிறார்? ஏன் ஆண்டவர் மிருகங்களை இரட்சிப்பதில்லை?//

லூசு கோல்டாவே மரணத்தைப்பற்றி பேசும் போது உயிர்த்தெழுதல் பற்றி ஏன் பிதற்ற வேண்டும்?

//மேய்ப்ப ......பீற்றர் உட்பட‌....//

ஏன் இப்படி நாயே பேயேன்னு பேசுறீங்க. அவர் அப்படி ஏதாவது உங்களை சொன்னாரா?

அந்த சொரணை கெட்டவனுக்கே உறைக்கவில்லை. நீங்க உங்க வேலய மட்டும் பாருங்க. சில்சாம் நாயிகூடத்தான் சாதுவை, ஆல்வின் தாமஸை கன்னா பின்னா என்று விமர்சிக்கிறான். அந்த மோப்ப நாய் சாரி மேய்ப்ப நாயோ எங்களைப்பற்றி விமரிசிக்கும் வரை இதே ட்ரீட்மெண்ட் தான்.



-- Edited by soulsolution on Thursday 1st of September 2011 11:30:49 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//soul:

II தீமோத்தேயு 3:16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,

பிரசங்கியின் புத்தகம் வேண்டாமென்றால் நீக்கிவிடு

இவங்க பேசுவதுதான் காமெடி. புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட வசனங்களை எல்லாம் இது பவுலுக்கு சொன்னது, பேதுருவுக்கு சொன்னது, தீமோத்தேயுவுக்கு சொன்னது என்று கழித்து ஒதுக்கி விடுகிறார்கள்.இவங்களுக்கு பிரசங்கி புத்தகம் மட்டும் வேதத்தில் இருந்தால் போதும்! வேறு எதுவும் வேண்டாம்!//

கோல்டா அவர்களே சும்மா விதண்டா வாதத்துக்கு வரவேண்டாம். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்பது ஒரு கூற்று. இதில் 'கடைபிடிக்க வேண்டிய' கட்டளை ஏதுமில்லை. மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய் என்ற வசனத்தில் கைக்கொள்ள என்ன இருக்கிறது? கட்டளைகள் மற்றும் ஆலோசனைகள் அந்தந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிட்ட நபர்களுக்குச் சொன்னது, எல்லாரும் எல்ல கட்டளைகளையும் கைக்கொள்ளச் சொன்னால் நிலைமை விபரீதமாகிவிடும். 

வேதம் என்றால் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தல் முடிய இருப்பதே. இதில் எவனுக்காவது சந்தேகம் இருந்தால் அவன் பிசாசுக்குப் பிறந்தவன் என்று அர்த்தம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இப்ப ஆலயம் கிடையாது. நாமே ஆலயம்.

பலியாய் கிறிஸ்து வந்த பின் நாம் பலி செலுத்த வேண்டியதில்லை.

எனவே, ஆலயம், பலி சம்பந்தப்பட்ட காரியங்களை  நாம் கைக்கொள்ள  வேண்டியதில்லை.

இது புரிவதற்கு என்ன கஷ்டம்?

சபை என்பது மக்கள் கூடுகை. அன்றும் இருந்தது. இன்றும் உண்டு. சபை என்றால் - assembly of called  out people - என்றுதானே அர்த்தம்.//

மக்கள் கூடுகை என்றால் எல்லா மக்களும் சமமாக இருக்க வேண்டும், ஏனென்றால் எல்லாருமே தானே. பின்னர் எதற்கு மற்ற ஊழியங்கள்?

மரத்தடியில் நடக்கலாம் என்றால் ஏன் சில மேய்ப்ப நாய்கள் மோகன் சீ லாசரஸ் போன்றவர்களை அழைத்து புதிய சபைக் கட்டிடங்களைத் திறக்கின்றன? எல்லாருமே அழைக்கப்பட்டவர்கள் என்றால் எதற்காக மேய்ப்ப நாய்கள்? போதகப் பிசாசுகள்?

//அவர் இவ்வுலகில் இருக்கையில் நன்மை செய்பவராகவும், பிசாசின் பிடியில் அகப்பட்ட யாவரையும் விடுதலை செய்பவராகவும் இருந்தார். அப்படியே நாமும் செயல்பட வேண்டும்.//

நீங்கள் இதுவரை எத்தனை பேரை விடுதலை செய்திருக்கிறீர்கள்?

//சபையாக கூடி வருவது நாம் கற்றுக் கொள்ள, கிறிஸ்துவுக்குள் வளர,  உதவியாக இருக்கும். இரட்சிக்கப்படுகிறவர்களை ஆண்டவர் சபையில் சேர்க்கிறார். அப்படி புதிதாய் பிறந்த குழந்தைகள் வளர்ந்து, தேறி, சீஷர்களாய் மாறி, கிறிஸ்துவின் சேனையில் போர்சேவகர்களாய் பணி செய்ய வேண்டும். ஆனால்,விசுவாசிகளை சொல் பேச்சுக் கேட்கும் ஆவிக்குரிய குழந்தைகளாகவே வைத்திருக்கத்தான் பாஸ்டர்மார் விரும்புகிறார்கள்.//

முழுக்க முழுக்க முரண். எல்லாரையும் சீஷராக்கி, அதன் பின் தான் ஞானஸ்நானம் கொடுக்க கட்டளை. வளர்ந்து தேறி சீஷர்களாய் மாறி என்ப்து பொய். ஏன் இந்த பாஸ்டர்மார் அப்படி வைத்திருக்கிறார்கள்?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சில்சாமை திட்ட வேண்டும் என்பதற்காக இப்படி முட்டாள்தனமாக எதையாவது எழுதாதீங்க பெரேயன்ஸ் அவர்களே!//

ஓஹோ, உங்கள் தலைவர் எங்களை திட்டுவதற்கு மேசியாவின் எதிரி என்று எழுதுவதை நியாயப்படுத்த முடியுமா!!??

//ஆனால், மனிதனுக்கு ஆவி உண்டு என்பதால் அவன் வாழ்வும், மரணமும் பிற ஜீவ ராசிகள் போல் கிடையாது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம். இதை மறுப்பவர்கள் நாத்திகர்கள். வேதம் கையில் எடுக்க தகுதி அற்றவர்கள்!//

அப்படி என்றால் உங்கள் விளக்கத்தின்படி மோசே என்கிற நாத்தீகன் தான் இதையும் எழுதியிருக்க வேண்டும்!! அப்படி தானே கோல்டாஜி!!

ஆதியாகமம் 2:7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம் 6:17 வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.

ஆதியாகமம் 7:15 இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.

ஆதியாகமம் 7:22 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard