kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: கோமாளித்தளத்தின் கூறுகெட்ட பதிவுகள்...


//அப்படியா? பரிசுத்த ஆவியானவருக்கு பேர் வைக்கவில்லை என்று கிண்டல் பண்ணுகிறாரே உங்க நண்பர் சோல், அந்த பேரில்லாத ஆவியானவரா உங்களுக்கு கற்றுத் தருகிறார்?? //

உங்களுக்கு பரிசுத்த ஆவி பெயர்வைக்கப்படாத ஒரு "ஆள்"!! எங்களுக்கு பரிசுத்த ஆவி தேவனின் சிந்தை, தேவனின் வல்லமை!! உங்களுக்கு புரியாது, விட்டு விடுங்களேன்!! நீங்கள் ஒரு ஆளாகவே நினைத்துக்கொண்டு அவருக்கு ஒரு பெயரை தேடிக்கொண்டு இருங்களேன்!!

//இங்கே சொல்லப்பட்டிருக்கும் நரகம் நரகமா, அல்லது கல்லறையா? அல்லது வேறு ஏதாவதா?? ஏன்?//

தமிழில் நரகம் என்று மொழிப்பெயர்க்கப்பட்ட மூல பாஷை "டார்ட்டரு"

மற்றா இடங்களில் ஹேடஸ் என்கிற வார்த்தைக்கு தான் நரகம் என்று தமிழில் உள்ளது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இந்த தகுதியெல்லாம் நமக்கும் இல்லையா?? பவுலுக்குதான் அவர் தகப்பனா? உங்களுக்கு இல்லையா? பவுல் ஜெபத்தைத்தான் கேட்பாரா? உங்க ஜெபத்தைக் கேட்க மாட்டாரா? ஆண்டவர் பட்ச பாதம் உடையவர் அல்ல. உங்களையும் தரிசனம் கொடுத்து பயன்படுத்த அவர் சித்தமுள்ளவராகத்தான் இருக்கிறார். நீங்க ஆண்டவருக்காக ஒரு துரும்பையும் அசைக்கமாட்டோம் என்று உறுதியாக இருப்பதால், ஆண்டவரும் அமைதியாக இருக்கிறார்.//

நீங்கள் தேவனின் வல்லமையை அறியாமல் விளையாடுகிறீர்கள்!! பரலோகத்தில் இருந்து இறங்கிய தேவ குமாரனான கிறிஸ்து இயேசு ஒரு இரவு முழுவதும் ஜெபித்து விட்டு தான் தன் அப்போஸ்தலர்களை பிதாவின் சித்தத்தின்படி தெரிந்துக்கொள்கிறார்!! அதில் ஒருவனை காட்டி கொடுக்கும் பாத்திரமாகவும் தேர்ந்தெடுக்கிறார்!! இவர்களில் யாரும் நீங்கள் சொல்லும் துரும்பையும் அசைக்கவில்லை!! பவுல் கிறிஸ்தவர்களை கொலை செய்ய புறப்புடும் போது தான் கிறிஸ்துவால் தெரிந்துக்கொள்ளப்படுகிறார்!!

மனுஷரால் எதுவும் கூடாதது தான், தேவனால் தான் எல்லாம் கூடும் என்கிற வசனம் எங்களுக்கு பெரும் தெம்பை கொடுக்கும் வசனம்!! அப்படியே தேவன் ஒருவனை சேர்த்துக்கொள்ளாவிட்டால் அவன் ஒரு போதும் கிறிஸ்துவிடத்திற்கு வருவதில்லை என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்!! ஆண்டவருக்காக துரும்பை அசைப்பது என்றால், சோஃபாவில் உட்கார்ந்து தன்னை தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொண்டு பிதற்றுவதா!! ஆண்டவர் அமைதியாக இருந்திருந்தால் நாங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் போய் இருப்போம்!!

தேவனின் வல்லமையை தேவனின் தன்மையை நாங்கள் எடுத்து சொல்லுகிறவர்களாக இருக்கிறோம்!! உங்கள் கூட்டத்தாரை போல், இதோ என் சபைக்கு வாருங்கள், அது நடக்கும் இது நடக்கும் என்று மனித மகிமையை பேசுவோர் இல்லை நாங்கள்!! தேவன் எல்லா அற்புதங்களையும் செய்கிறவர் என்பதை உங்களை விட நன்கு அறிவோம்!! தேவனின் வல்லமை புரியாமல் தான் உயிர்த்தெழுதலை ஒரு "மாஜிக்" ஷோ என்று எழுதுகிறீர்கள்!! மனிதனை மகிமை படுத்தவே சாதுவையும் விசெயையும் அப்போஸ்தலர்கள் தரத்திற்கு உயர்த்துகிறீர்கள்!! இவர்களாக எங்களை தேவன் அழைத்தார் என்று தங்களை தீர்க்கதரிசி என்றும் ஊழியர் என்றும் சொல்லிக்கொண்டால் உங்களை போன்றோர் உட்கார்ந்து நம்பிக்கொண்டு இருங்கள், எங்களுக்கு என்ன‌!!??

பவுல் மெத்த படித்த மேதாவி தான், சங்கத்து உறுப்பினர், மிகவும் வசதி படைத்தவன் தான், ஆனால் எல்லாவற்றையும் குப்பை என்று உதறி தள்ளி விட்டு வந்தவன்!! ஆனால் தங்களை (கள்ள)தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்ளும் இந்த ஜென்மங்கள் தா...தா... என்று கையை விரித்தும் வங்கி எண்களையும் தந்து, பணம் எப்படி எல்லாம் செலுத்தலாம் என்று உலகத்தாரை போல் பாடிக்கொண்டு இருப்பது உங்கள் கண்களுக்கு தேவ பக்தியாக தெரிகிறது போல்!!

தேவனின் எங்களுக்கு நடத்திய பெரிய அற்புதமே எங்களை உளையான சேற்றிலிருந்து தூக்கி எடுத்தது!! மற்றபடி அனுதினமும் எங்களுக்கு அவர் அற்புதங்களை செய்துக்கொண்டே தான் இருக்கிறார்!! எங்களை ஜீவனோடு வைத்திருக்கிறார், போஷிக்கிறார், உடுத்துகிறார், எங்கள் தேவைகளுக்கு எங்களை உழைக்க வைக்கிறார், வேறு என்ன வேண்டும்!!?? தேவனின் பெயரை சொல்லிக்கொண்டு களவாடுவோரை நீங்கள் ஊழியர்கள் என்று நினைத்துக்கொண்டிருங்கள், ஆனால் கிறிஸ்துவை போல் சாட்டை எடுப்பது தான் எங்களுக்கு இருக்கும் நடத்துதல்!!

நாங்கள் தேவனுக்கு செய்வதை தேவன் அறிவார், மனிதர்களில் அறியவேண்டியவர் அறிந்துக்கொள்வார்!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//எப்படித்தான் இப்படி வழி விலகிப் போறாங்களோ!!
நீங்க ஆவியில் நிரம்பி ஜெபித்து அற்புதங்கள் பெற்றுக் கொண்டதாக சொல்லியிருக்கிறீர்கள்.இந்த ஆத்துமாக்கள் உருப்படணும் என்றும் ஜெபம் பண்ணிக் கொள்ளுங்கள்! அது பெரிய அற்புதமாக இருக்கும்.//

ஜெபித்து ஜெபித்து 2000 வருடங்களாக 3% தக்க வைத்துக்கொண்டு இருப்பதிலிருந்தே உங்களை போன்றோரின் வல்லமை தெரிகிறது!! இவர்கள் தேவன் தந்த தீர்க்கதரிசனத்தை மாற்றும் சூறாவலி போல்!! பார்த்து கழுத்து சுலுக்கிக்க போகுது!! உங்களுக்கும் வசனத்துக்கும் வெகு தூரம், ஆனாலும் வேதம் வாசிப்பீர்களென்றால் இவைகள் நடக்கும் என்றும் உங்கள் கேவலமான ஜெபங்கள் அதை மாற்றாது என்றும் நினைவில் இருக்கட்டும்!! வாசியுங்கள் 2 திமோ. 3:1 முதல் 6 வரை!! தேவனின் திட்டங்களை மாற்றுபவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவி உள்ளவனாக தான் இருக்க முடியும்!! வேறு என்ன‌!!

போங்க, உங்கள் வல்லமையான ஜெபங்களுக்காக பல ஆஸ்பத்திரிகளும் காத்துக்கிட்டு இருக்கிறது!! ஏற்கனவே சாது போன்றோர் சோஃபாக்களில் உட்கார்ந்து உறுப்படாத ஜெபங்களை வாறிக்கொண்டு தேவ சித்தத்தை மாற்றும் முயற்சியில் இருக்கும் போது, அவர்களை தன் மான்சீக குருவாக ஏற்றுக்கொண்டு விவாதிக்கும் கோல்டா போன்ற விசுவசிகள் (!!) இப்படி பட்ட உறுப்படாத ஆலோசனைகள் தான் தர முடியும்!! தேவ சித்தத்திற்கு விரோதமாக ஜெபிக்கும் எவனும் அந்தி கிறிஸ்துவின் ஆவியுள்ளவனே!! உங்க்ளுக்கு தான் முழங்காள் யுத்தம் போன்ற கோஷ்டிகளும் இருப்பார்களே!! ஜெபிக்க வேண்டியது தானே சோமாலியா,கென்யா போன்ற நாடுகளுக்காக!! அங்கே போனால் தானும் பட்டினியாக கிடக்க வேண்டும் என்பதாலே நம்மூரில் சோஃபா ஊழியர்களில் ஒருவனும் அதை குறித்து பேச துப்பில்லாதவனாக இருக்கிறான்!! வந்தாட்டாரு ஜெப வீரர்!!

// யாராயிருந்தாலும் சரியாகத்தான் சொல்லியிருக்கிறது. அப்படியே கேள்வி கேட்காமல் இதை ஏற்றுக்கொண்டால் நிச்சயம் அந்த ஆத்துமா உருப்படும்!!!//

அதுங்க சோஃபா என்றால் இது குட்டி சோஃபா தான்!! இதுக்கு ஆத்துமா என்றால் என்னவென்று தெரியாது, யாரிடம் எதற்காக ஜெபிக்கிறோம் என்று கூட தெரியாது!! கண்களை மூடினால் இதுங்களுக்கு தேவன் காட்சி கொடுப்பாராம், இப்பிரபஞ்சத்தின் தேவனாக தான் இருக்க முடியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அத்துடன் அவர்கள் கட்டப்பட்டிருந்தாலும் எங்கும் அலைந்து திரிவார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டார்கள் என்றல்லவா வசனம் சொல்கிறது. வசனமே உங்களுக்கு விரோதமா சாட்சியிடுகிறதே!//

உங்க ஊரிலே பாதாள சாக்கடை என்றால் எட்டி பார்க்காத அளவிற்கு ஆழமாக இருக்கும் போல்!! கட்டி வைப்பது என்றால் அவர்களின் சுதந்திரத்தை பறித்ததே!! அவர்கள் மீண்டும் மாம்சத்தில் வராதபடிக்கு அவர்களின் சுதந்திரத்தை கட்டி வைத்திருக்கிறார்!! அவ்வளவே!!

Pin drop silence என்றால் Pin விழ காத்ததுக்கொண்டிருப்பீர்கள் போல்!!

//நரகத்திலே தள்ளி என்று வசனம் போட்டிருக்கிறது. அப்ப நரகத்திலிருந்தும் பார்க்கலாம் போல. பயங்கரமான பவர்ஃபுல் கண்ணுதான்!!//

உங்கள் ஆளுங்க மாம்சத்தில் இருந்துக்கொண்டே பெரிய பெரிய மாயாஜாலமெல்லாம் செய்கிறார்கள்!! ஒருத்தன் வானத்தில் எனக்கு கட்ட படுகிற வீட்டை பார்த்தேன் என்கிறான், இன்னொருத்தன் நரகத்தில் முப்பாட்டன் எல்லாம் எரிந்துக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வந்தேன் என்கிறான், இன்னொருத்தன் காரில் உட்கார்ந்துக்கொண்டே தேவனிடத்தில் பேசினேன் என்கிறான், இன்னொருத்தன் எக்காளச்சத்தத்தை கேட்டதாக சொல்லுகிறான்!! இப்படி எல்லாம் கேட்டு கேட்டு சத்தியத்திற்கு செவிமடுக்க மறுக்கிறது உங்கள் காதுகள்!! வேறு ஒரு கோளாறும் கிடையாது!! என்னடா, எத்துனை கோடி ஜனங்கள் என்ன லூசுங்களா, நாம் பின்பற்றுவதை தானே பின்பற்றுகிறது என்கிற மமதை தான்!! இதுங்க 2,3 பேரா இருந்துக்கிட்டு சொல்லுவதா சத்தியமாகிவிட போகிறது என்கிற எகத்தாலம் தான்!! உங்க ஆட்களுக்கு தான் ஆவிஜீவிகளுக்கு கண்ணு காது மூக்கு எல்லாம் இருக்குமே!! உண்மையிலே பவர்ஃபுல்லான கண்ணுதான்!!

//என்ன ஆம்? அந்த தேவ தூதரும், இந்த தூதரும் ஒன்றா?//

இந்த உலகத்தின் கண்களையே குருடாக்கிக்கொண்டிருக்கும் லூசிஃபரும் அதே தூதர் தான்!! எல்லாரும் ஆவி ஜீவிகள் தான்!! பின் லேடன் தீவிரவாதி என்பதால் அவனுக்கு ரெண்டு கொம்பும், காந்தி அஹிம்சை வாதி என்பதால் அவருக்கு ரெண்டு இரக்கையும் கிடையாது!! அப்படியே தான் ஆவி ஜீவிகளும்!! இந்த தூதரும், அந்த தூதருமென்றால் என்ன, எல்லாமே ஆவி ஜீவிகள் தான்!!

பாவம் செய்த தூதர்களை என்று தான் வசனம் சொல்லுகிறதே!! உங்கள் சாது சொல்லாட்டி எல்லாமே பொய்யாகிவிடுமா!!??

//உண்மையாகவா? அப்புறம் என்ன ஆச்சு? உங்களால சோல் கெட்டாரா? அல்லது சோல் உங்களை ஏமாத்தினாரா? அல்லது உங்க இருவரையும் வேற யாராவது ஏமாத்தினாங்களா?//

உங்களை போல் மனுஷ தேவர்களை நாங்கள் நம்புவதில்லையே!! தேவனே எங்களை உளையான சேற்றிலிருந்து தூக்கிவிட்டிருக்கிறார் என்கிற பதிவு உங்கள் கண்களுக்கு படவில்லையா!!

//நல்ல காமெடி பெரேயன்ஸ் அவர்களே! வேதம் சத்தியம் என்று நம்புகிறேன் என்று சொல்லவேண்டியதுதானே! ஏன் மொழிபெயர்ப்பையும் சேர்த்து சொல்கிறீர்கள். பேசாமல் Greek, Hebrew எல்லாம் படித்தீர்கள் என்றால், ஒரிஜினலையை எப்பவும் வாசிக்கலாம்!//

தேவன் நடத்திய பிரகாரமே தான்!! உங்களுக்கு எப்படி சாது சொல்லுவது வேதமோ, அப்படியே எனக்கு வேதமே சத்தியம்!! கிரேக்கம், எபிரேய மொழி பழகினால் நல்லது தான், முடியவில்லையே!! இத்துனை மொழிப்பெயர்ப்பில் வேதம் வந்திருக்கிறது காரணம் இருக்குது!! ஆனால் உங்களுக்கு வழக்கம் போல் புரியாது!!

//ஏன் மரித்தபின் தான் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்?//

ஏனென்றால் பாவம் இருப்பதினால் தான் மரணமே!! பாவத்துடன் தான் மரிக்கிறோம்!!! பாவத்தின் சம்பளமே மரணம்!! உயிர்த்தெழுதல் நடக்கிறது என்றாலே பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டதால் தான்!!

//உயிரோடு இருக்கையில் ஏன் உங்கள் பாவங்களை மன்னிக்க மாட்டேன் என்கிறார்?? அப்படி மன்னித்தார் என்றால் மரணம் இல்லாமலே நீங்க வாழலாமே.//

இதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!! உங்கள் ஆட்கள் தான் பரிசுத்தவான்களாச்சே, அவர்களுக்கு பாவங்களுக்கு ஏணிவைத்தால் கூட எட்டாதே!! அவர்கள் எல்லாம் தேவனை தரிசிப்பவர்களாயிற்றே!! என்னென்னமோ கேட்க்கிறார்கள், பாவத்திலிருந்து நித்திய விடுதலை கேட்க வேண்டியது தானே!! எப்பவுமே வாழ்ந்துக்கொண்டு தலைமுறை தலைமுறையாக குடும்ப தொழிலாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கலாமே!!

//ஒவரா யோசிக்காம, இப்படி, லாஜிக்கா யோசிங்க!//

எது!!?? எக்காளச்சத்தம் கேட்பதையா, பரலோகத்தை பார்த்ததையா, இயேசுகிறிஸ்து மேடையில் நடமாடுவதையா, பரிசுத்த ஆவியானவர் அசைவாடுவதையா!! இப்படி பட்ட லாஜிக்கில்லா மெஜிக்கையா!!??

சாதுவும் இயேசுவை பார்க்கிறார், அவர் பேசும் போதும் பரிசுத்த ஆவியானவர் அசைவாடுகிறாராம், உங்களுக்கு பிடிக்காத ஆல்வின் தாமஸ் நடத்தும் (ஆபாச‌)நடன ஆராதனையிலும் இயேசு வருகிறாராம், பரிசுத்த ஆவியானவர் அசைவாடுகிறாராம்!! என்ன கூத்து நடத்துகிறீர்களோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//II பேதுரு 2:4 பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

அத்துடன் அவர்கள் கட்டப்பட்டிருந்தாலும் எங்கும் அலைந்து திரிவார்கள் என்று சொன்னீர்கள். ஆனால் அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டார்கள் என்றல்லவா வசனம் சொல்கிறது. வசனமே உங்களுக்கு விரோதமா சாட்சியிடுகிறதே!//

நரகத்தில் தள்ளுவதே தண்டனைதானே பின்னே என்ன நியாய்த்தீர்ப்புக்கு "வைக்கப்பட்டவர்களாக" ஒப்புக்கொடுப்பது. ஏன் நரகத்திலிருந்து வெளியே எடுத்து நியாயத்தீர்ப்பு செய்து மீண்டும் நரகத்தில் தள்ளவா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//சோல் என்ன கதை சொல்வார் என்று பார்ப்போம்!//

அம்மணி, அந்த ஆவிகள்.... கீழ்ப்படியாமல் போனவைகள் என்ற சாதாரணத்தமிழ் கூடவா புரியாது?

ஆவிகளுக்கு அதாவது தூதர்களுக்கு மாமிட சரீரம் கிடையாது. கீழ்ப்படியாமல் போன ஆவிதூதர்களைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்களூக்கு அப்படி ஆவி இருக்குமானால், அவைகளுக்கு பிரசங்கித்து இரட்சிப்புக்குள் நடத்தமுடியுமானால்... கிறிஸ்து எல்லாரும் மரித்தபின் எல்லா ஆவிகளுக்கும் ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு சூப்பரான பிரசங்கம் செய்து அவர்களை இரட்சிக்க வைக்கலாமே... எதற்கு இவ்வளவு பிரயாசம்?

உங்கள் வல்லமையான ஜெபங்களைக் கேட்டு அப்படியே எல்லாரும் சூப்பர் சுகமும், பரிசுத்த வாழ்க்கையையும் பெற்றுக்கொண்டு மில்லியன் கணக்கில் இரட்சிக்கப்படுகிறார்கள் என்ற நினைப்பா? 

முட்டாள் கிறிஸ்தவர்களின் மூடத்தனத்தை வைத்து வியாபாரம் நடத்தி வெட்கங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் ஈனத்தனத்தை தேவனுக்கு ஊழியம் என்று கூச்சமில்லாமல் எப்படித்தான் ஏற்றுக்கொள்கிறீர்களோ? 

சாது, வி செ, ஆ.தா போன்றவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஊழியக்காரர்களும் ராஜ்ஜியத்தில் வெட்கித்தலைகுனிவார்கள். அக்கிரம செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று போங்கள் என்ற வசனம் நிறைவேறும். எல்லாமே அவர் நாமத்தினாலேதான் செய்தார்கள்... கிரமப்படி செய்யாமல் அக்கிரமமாக செய்தார்கள். கிரமமாக விதைக்க வேண்டிய நேரத்தில் விதைக்கும் ஊழியம் செய்யப் பணித்ததை, அறுக்க வேண்டிய நேரத்தில் 'விதைத்தால்' எந்த எஜமானன் தான் தாங்கிக்கொள்வான்.

'ஆவி'க்கு மீண்டும் ஏதோ பிதற்றியிருக்கிறீர்கள். ஆவி சாகாது என்று புதுக்கதை. ஆவிதான் தன்னைத்தந்த தேவனிடத்துக்குப் போகிறாதே பின்னே ஏன் நோவா காலத்து கிழ்ப்படியாமல் போன மனிதர்களுடைய ஆவிகளை மட்டும் நரகத்தில் தள்ளிவிட்டார்.

முதலில் அந்த சாதுக்கூமுட்டையிடமாவது, உங்கள் அபிமான வி.செ பிதற்றல்காரனிடவாது ஆவி என்றால் என்ன? ஆத்துமா என்றால் என்ன என்று தெளிவடையுங்கள். மரணத்திலேயே நிற்கிறது வண்டி... நகரக்காணோம்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//விலங்குகளுக்கு ஆத்துமா உண்டா இல்லையா? இல்லை என்றுதான் சொல்வீர்கள். ஏன்னா விலங்குகளுக்கு ஆத்துமா இருக்கு என்று வசனம் இல்லையே!!//

கண்ணை கட்டிக்கொண்டு உலகமே இருட்டாக இருக்குது, செவிகள் மந்தமாக இருந்தாலும் சாதுவின் எக்காளச்சத்தம் மட்டும் கேட்குமாம்!!

இதுக்கு முன்னால் நான் இதை குறித்து எழுதினதை எல்லாம் படிக்கைவில்லை என்றால் இப்பொழுது படித்துக்கொள்ளுங்கள்:

ஜீவிக்கிற எல்லாமே ஆத்துமா (Soul) தான்!! அது மிருகமானாலும் சரி, மனிதனானாலும் சரி!! விலங்குகளுக்கு ஆத்துமா உண்டா இல்லையா என்பதெல்லாம் கிடையாது, ஏனென்றால் விலங்குமே ஒரு ஆத்துமா தான்!! மனிதனுக்குள் அல்லது மிருகத்திற்குள் ஆத்துமா இருக்கிறது என்பதற்கு வசனமே இல்லாத போது நான் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்!! மனிதனும் மிருகமும் ஆத்துமா தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது!! சாது விசெ போன்றோரிடம் கற்றுக்கொள்ளும் நேரம் போக வேதம் வாசித்தீர்கள் என்றால் பிரசங்கி 3ம் அதிகாரத்தை வாசித்து கற்றுக்கொள்ளுங்கள்!!

//மறுரூப மலையில் இயேசுவோடு கூட மோசேயும், எலியாவும் பேசினார்கள். அவர்கள் ஆவி(ஆத்துமாவுடன்) உயிரோடு இருப்பதால்தான் அது சாத்தியமாயிற்று?//

மத்தேயு 17:9. அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

Matthew 17:9 And as they descended from the mountain, Jesus charged them, saying, Tell the vision to no one, until the Son of man be risen up from among [the] dead.

தரிசனம் (Vision)  என்றால் என்னவென்று உங்களுக்கு தெரியும் என்று நம்புகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அப்ப உங்களிடம் பேச மாட்டார்??//

உங்களிடமும் உங்கள் குருநாதர்களான சாது விசெ போன்றோரிடம் யார் பேசுகிறான் என்பதையும் அறிவோம்!! எங்களிடம் கிறிஸ்துவின் வசனமும், அவரின் அப்போஸ்தலர்கள் கொடுத்த வசனமுமே பேசுகிறது!! அது தான் எங்களின் விசுவாசம்!! புதிதாக ஒருவன் வந்து பேசுகிறானென்றால் அவன் யார் என்றும் நாங்கள் அறிவோம்!!

யோவான் 14:26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

சொந்த சரக்கு எல்லாம் (எக்காளச்சத்தம் கேட்டேன், நரகத்தை பார்த்தேன், பரலோகத்தில் பில்டிங் பார்த்தேன்) கற்றுக்கொடுக்க மாட்டார்!!

எபிரெயர் 1:2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்.

இந்த கடைசி காலம் என்றவுடன் ஏதோ நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தை சொல்லவில்லை!! ஆத்துமா, மரணம் என்றாலே என்னவென்று தெரியாத உங்கள் கூட்டத்தாருக்கு காலங்கள் புரியாது!! கிறிஸ்து இயேசு சொன்னது வேதத்தில் மாத்திரமே இருக்கிறது!! இதை தவிர பேசுபவன் எல்லாம் கள்ளத்தீர்க்கதரிசி, கள்ள போதகன், கள்ள கிறிஸ்து!!

யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அப்போஸ்தலர்கள் எழுதியதை வைத்து நாங்கள் கிறிஸ்துவை விசுவாசிக்கும்படியாக எங்களுக்காக அவரே வேண்டுதல் செய்திருக்கிறார்!! நீங்கள் உங்கள் சாதுவின் எக்காளச்சத்தத்தில் விசுவாசத்தை வைத்திருக்கிறீர்களே!! சரிதான்!!

//உங்களுக்கு என்ன, நீங்க அந்திக்கிறிஸ்துவுக்கு ஜால்ரா அடிச்சிட்டு இருங்க!//

என்னை விட்டு அகன்று போங்கள், அக்கிரமசெய்கைக்காரர்ளே என்று சொல்லும் போது, யார் அந்திக்கிறிஸ்துவுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்தார்கள் என்பது தெரிய வரும்!!

//ஊழியக்காரர்கள் எல்லாம், சோஃபா வில் உட்கார்ந்து பேசுறாங்க என்று அநியாயத்திற்கு  வருத்தப்படும் பெரேயன்ஸ் அவர்களே, சோஃபா வில் உட்கார்ந்துதான் பேச முடியும், நின்று கொண்டு அல்ல!!//

உங்களுக்கு இருந்தாலும் நகைச்சுவை உணர்வு அதிகம் தான்!! சோஃபாவில் உட்கார்ந்து பேசுபவன் சொந்தமாக சம்பாதித்து உட்கார்ந்து என்ன படுத்துக்கொண்டே பேசட்டும்!! உழைக்காதவன் சாப்பிட அருகதை இல்லாதவன் என்கிறது வேதம்!!

//ஆண்டவர் பூமியில் இருக்கும் போதே பாவங்களை மன்னித்தார்.//

பாவங்களை மன்னிக்க அதிகாரம் உண்டு என்பதை காண்பித்தார்!! சிலரை மரணத்திலிருந்து எழுப்பினார், உயிர்த்தெழச்செய்யும் அதிகாரம் உண்டு என்பதை காண்பித்தார்!! பாவங்கள் மன்னிக்கப்பட்ட மனிதன் மீண்டும் பாவம் செய்யவதே கிடையாதா!!

//என்றால் சிலருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வில்லை என்றுதான் அர்த்தம்.//

இது தான் உங்கள் மூலமாக சாத்தான் கொண்டு வரும் துருபதேசம்!!

1 யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

//சிலர் பாவங்கள் மன்னிக்கப்படு்வதில்லை என்று சொல்லப்படுகிறது. அப்ப அவங்க எல்லாம் உயிர்தெழ மாட்டாங்களா?//

ஒரே நிலையில் ஒரு விஷயத்தை கூட உங்களுக்கு எழுத முடிவதில்லை!! எல்லாரின் பாவங்களும் மன்னிக்கப்படவே கிறிஸ்து இயேசு வந்தார் தன்னை ஈடுபலியாக கொடுத்தார் என்று வசன‌ங்கள் சொல்லுகிறதை எப்படி தான் திரிக்கிறீர்களோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நம்ப மாட்டீங்க. நேற்று(7.8.11) ஆலன் பால் சொன்னது : //

ஆலன் பால், ஆட்டுக்குட்டி சொல்லுவதை எல்லாம் காதுவழியாக ஏற்றி உங்கள் மூளை குழம்பி போய் இருக்கிறது!! பீலாவின் உச்சத்தில் இருக்கும் சாது விசெ போன்றோரின் அண்ட புளுகு, ஆகாச புளுகு எல்லாம் உங்களுக்கு அனுதின டானிக்!!  ஒருத்தருக்கு டிவி நடத்த சொல்லி இன்னோருத்தருக்கு காட்சி தருவதை எல்லாம் நம்புவார்களாம்!! ஆனால் வேதம் சொல்லுவதை நம்பாத ஜென்மங்கள்!! ஏதோ ஆலன் பாலும், சாதுவும், விசெயும் சேர்ந்து வேதத்தை எழுதியது என்று நினைத்திருக்கிறீர்கள் போல்!! பாவம்.............

ஆலன் பால் கூட தேவன் காரில் எல்லாம் சவாரி செய்திருக்கிறார், ரயிலில் எல்லாம் வந்து அவரை எங்கோ கூட்டிக்கொண்டு போயிருக்கிறாராம்!! யெப்பா......வேதத்தை மிஞ்சுகிற கூட்டம் உங்கள் கூட்டம்!!

இன்னோருத்தர் ஏதோ வெளிநாட்டில் காரில் போய்கிட்டு இருக்கும் போது, ஓட்டுனருக்கு கேட்காமல் இவருக்கு மட்டும் எக்காலச்சத்தம் கேட்டுச்சாம்!! கள்ள தீர்க்கதரிசிகள்...................

//யோசிங்க. ஒரு ஆவிக்குரிய தரிசனத்தில் இப்படிப்பட்ட interaction இருக்குமா??//

உங்கள் புத்திக்கு எட்டுவது தானே எழுதுவீர்கள்!! வேதத்தில் நடந்ததை எழுதினால் அதுவே உங்களுக்கு காமெடியாக தான் இருக்கும்!! ஆனால் சோஃபா காமெடியன்கள் கண்டதை பார்த்து (உழைக்காமல் சோறு சாப்பிட்டால் எல்லாம் தெரியும் போல்) விஷன், காட்சி, தரிசனம் என்று பீலா சுத்துவதை கொஞ்சமாவது வேதத்தின்படி இருக்கிறதா என்கிற பகுத்தறிதல் இல்லாமல் பார்க்கும் மூடர்களின் கூட்டம்!!  தரிசனம் என்று கிறிஸ்து சொன்னதையே நம்பாத கூட்டத்தின் ஒரு அங்கத்தினர் தானே நீங்களும்!!

ரே ஸ்மித் தேவனை நம்பியிருப்பது உங்களுக்கு தமாசாக தானிருக்கும்!! ஏனென்றால் உங்கள் அற்புத ஊழியர்கள், அற்புத சுகம் தரும் ஊழியர்கள், அடுத்தவனுக்கு சுகம் பெற ஜெபிக்கும் ஊழியர்கள் தேவனை நம்புவதில்லை, சிங்கபூர், அமேரிக்கா என்று மருத்துவமனையை நாடும் கூட்டம்!! இப்படி ஊரை ஏமாற்றி பிழைப்பதை விட ரே ஸ்மித் உத்தமர்!! உங்களுக்கு ரே ஸ்மித் போன்றோரை பேசுவதற்கே அருகதை கிடையாது!! தெரியுதா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//யாக்கோபு 5:20 - அர்த்தம் என்ன?

தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

சொல்லுங்க சோல் அண்ட் பேரேயன்ஸ்//.

யே யப்பா அப்டியே இந்த அம்மணி கேள்வி கேட்டு மடக்கிட்டாங்களாம்...

 ஆக ஆத்துமாதான் மரிக்கும் என்று இப்பவாவது ஒப்புக்கொண்டீர்களே. 

ஆத்துமா என்றால் ஆள், நபர் என்றுதான் அர்த்தம். ஆத்துமா data center என்று கேனயன் சொன்னால் கேட்கிற உங்களுக்கு புத்தி எங்கே போயிற்று. மூளைதான் data center. மூளை செயலிழந்தால்....

யாத்திராகமம் 31:14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

ஆத்துமா வேலை செய்கிறான். அறுப்புண்டு போவான்.

லேவியராகமம் 7:25 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

கொழுப்பை ஆத்துமா புசிக்கிறான்

லேவியராகமம் 23:30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன்.

ஆத்துமா வேலை செய்தால் அழிப்பார்???

எண்ணாகமம் 15:31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

அறுப்புண்டு என்றால் அழியும் என்றுதான் அர்த்தம்.

சங்கீதம் 22:20 என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.

சங்கீதம் 22:29 பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.

சங்கீதம் 35:7 முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள்.

சங்கீதம் 78:50 அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.

சங்கீதம் 89:48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)

நீதிமொழிகள் 13:4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.

இதெல்லாம் தெரியாது இவர்களுக்கு.... கேட்டால் சங்கீதம் என்றால் பாட்டுதானே, நீதி மொழிகள் என்றால் தத்துவம்தானே என்று மழுப்பல்...

மனிதன் தான் ஆத்துமா என்று ஏகப்பட்ட வசனம் பதித்தாயிற்று. 



-- Edited by soulsolution on Tuesday 9th of August 2011 07:31:42 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அலன்பால் பைத்தியக்காரனுக்கு ஒரு சேனல், சாது சு செல்வராஜ் என்ற அயோக்கியனுக்கு ஒரு சேனல். பணம் கொடுக்க லூசுக்கூட்டம் இருக்கும்வரை இந்த கோமாளிகளுக்கு கொண்டாட்டம்தான்.

ரே ஸ்மித் கால்தூசுக்குக்கூட பெறமாட்டார்கள் இவர்கள்.

இந்த லூசுகளின் எல்லாக் கேள்விகளுக்கும் சாட்டையடி பதில் பதித்திருப்பதால் அந்தக் பக்கமே போக மாட்டார்கள். 

சாதுவைத்தான் உங்கள் தளத்திலேயே காறித்துப்புகிறார்களே....

இதிலிருந்தே தெரியவில்லை.

செந்தில் சொன்னதுபோல "இந்த மூஞ்சிக்கே உங்கள பிடிக்கல" என்பதுதான் ஞாபகம் வருகிறது...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Soul Solution:

//ஆத்துமா வேலை செய்கிறான். அறுப்புண்டு போவான்.//

இவர்களின் ஆத்துமாவின்படி உள்ளான மனிதன் தான் வேலை செய்கி(றது)றான்!!


Soul Solution:
//கொழுப்பை ஆத்துமா புசிக்கிறான்//

அய்யே உள்ளான மனிதன் எப்படி கொழுப்பை புசிக்கிறான்!! இவர்களுக்கே வெளிச்சம்!!


Soul Solution:
//ஆத்துமா வேலை செய்தால் அழிப்பார்???//

உள்ளான மனிதன் வேலையும் செய்வானா!!??

எக்காலச்சத்தம் கேட்டுச்சுன்னு பீலாவிடுபவனை எல்லாம் கைக்கொட்டி ரசிக்கும் ஒரு பட்டாளம்!! காணக்கூடாத தேவனை காரில் உட்கார வைத்து ஊழிய காரியங்களை பேசிக்கொண்டு போனேன் என்கிற ஓநாய்களை ரசிக்கும் இந்த கூட்டம்!! பரலோகத்தில் கான்க்ரீட் வீடு கட்டி வோக்ஸ்வேகன், பென்ஸ், ஜம்போ ஜெட் என்று இவர்களில் பார்க்கிங்கில் பார்த்துவிட்டு, அப்படியே நரகத்தில் இவனுங்களுக்கு பிடிக்காத ஊழியக்காரர்கள் உட்பட எரிந்துக்கொண்டு இருப்பதையும் பார்த்து விட்டு வரும் ஏமாற்று கூட்டத்தாரை ரசிக்கும் இந்த கூட்டம்!!

ஆத்துமா என்றால் மனிதன் என்றும் எடுத்துக்கொள்ளலாமாம், உள்ளான மனிதன் என்றும் எடுத்துக்கொள்ளலாமாம்!! நல்ல தமாசு பிரதர், இந்த கூட்டத்தோடு!!

ரே ஸ்மித்தின் பதில்களை படித்து விட்டு, தேள் கொட்டியது போல் இருந்திருக்கும்!! இந்த தளத்தை விட காரசாரமாக இருந்திருக்கும்!! இவர்கள் அப்படி பட்ட பதில் எல்லாம் இது வரையில் கேட்டிருக்க மாட்டாத்துங்க!! சோஃபாவில் தேச்சுக்கிட்டு, ஓசியில் தின்னதை உபவாசம் என்கிற பெயரில் பேனர் கட்டி கொழுப்பு குறைக்கும் ஒரு சடங்கை வைத்துக்கொண்டு இவர்களின் தலைகள் பன்னும் வித்தைகள் இருக்குதே, தாங்க முடியவில்லை!! ரே ஸ்மித் தன் வியாதி சுகம் பெற தேவனை நம்பியிருப்பது எல்லாம் இவர்களுக்கு ஒரு குற்றமாம்!! ஏனென்றால் இவர்களின் தலைகள் நோய் வந்தவுடன் தேவனை மறந்து உலகின் சிறந்த மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் நாடுவார்கள், அதுக்கு செலவு செய்யவும் ஒரு ஏமாளிக்கூட்டம் இருக்குமே!! ஊருக்கே சுகம் தரும் இந்த ஓநாய்கள் தங்களின் சுகத்திற்கு தேவனை நம்புவதில்லை!! மருந்தே எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிக்கும் ஒரு கூட்டத்துக்கு கண்ணாடி மட்டும் வேண்டுமாம், அது மருத்துவம் சம்பந்தப்பட்டது கிடையாது போல்!! நோயாளிக்கு மருத்துவன் தேவை என்று கிறிஸ்து இயேசு சொன்னாலும், இவர்களுக்கு தங்கள் மேல் அத்துனை நம்பிக்கை!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அதானே. பாதிக்கண்ணு குருடாகிப்போன பரதேசி நாய்கள் கண்ணாடியோ, கான்டாக்ட் லென்ஸோ வைத்துக்கொண்டு அடுத்தவன் வியாதிக்கு ஜெபிக்கும் கேவலமெல்லாம் அங்குதான் நடக்கும். அற்புதங்கள் எல்லாம் அடுத்தவனுக்குத்தான் இந்த மொள்ளமாறிக்கூட்டம் உள்ளுக்குள் நோயால் அவதிப்பட்டுக்கொண்டு ஸ்பெஷலிஸ்ட்களைத் தேடிக்கொண்டு மாத்திரை மருந்தால் காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு சுகமாக்கும் ஊழியர் ஒரு அஞ்சறைப் பெட்டிபோல விதவிதமான மாத்திரைகள் வைத்திருப்பார். நம்புவதற்குத்தான் கேனப்பய கூட்டம் இருக்கே.

புத்தியில்லாத கிறிஸ்தவரே......



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கோல்டா:
//உண்மைதான். பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலத்தில்தான் இருக்கிறோம்.//

பிதா யார் என்றே தெரியாத கூட்டத்தார் எந்த பிதாவை தொழுதுக்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை!! "இயேசப்பா" என்று கிறிஸ்துவையே அப்பாவாக்கி விட்டிருக்கிறார்களே!! அப்படி என்றால் கிறிஸ்து ஒருவரை அப்பா என்று கூப்பிடுகிறாரே, அவர் யார்?? அவரே இவர், இவரே அவர், போன்ற ஃபார்முலாவை வைத்து இருக்கிறது இந்த கூட்டம்!!

//ஆனாலும்,ஒவ்வொரு ஊழியத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஏஞ்சல் டிவியின் ஒரு அழைப்பு இஸ்ரவேலின் இரட்சிப்பிற்காக ஜெபிப்பதும், எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டுவதும்.//

வசனம் தெரியவில்லை என்று எப்படி வேண்டுமென்றாலும் ஏமாறும் ஒரு கூட்டம் இருக்கும் வரையில் சோஃபாவில் உட்கார்ந்து என்னை இதற்காக அழைத்தார், அதற்காக அழைத்தார், இமயமலையில் பணிக்கட்டி அப்படியே இருக்க ஜெபிக்க ஒரு கூட்டம், கடல் தண்ணீர் வற்றி போகாமல் இருக்க ஜெபிக்க ஒரு கூட்டம்!! கோமாளிகல்!! இஸ்ரவேலின் இரட்சிப்பிற்காக இவர்களை ஜெபிக்க தேவன் இவர்களை அழைத்திருக்கிறாராம்!! அப்படி என்றால் இந்த வசனம்,

யோவான் 12:40 அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.

ரோமர் 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.

இப்படி தேவன் இஸ்ரவேலரிலரிலொரு பங்குக்கு இருதயத்தை கடினப்படுத்தியிருக்கிறார், ஆனால் இவர்கள் தேவனின் சித்தத்திற்கு விரோதமாக ஜெபம் செய்கிறார்களாம்!! தேவ தூஷனம்!!

இவர்கள் தங்களையே தேவன் என்று நிரூபிக்க பார்க்கிறார்கள்!! அதாவது தேவன் செய்ய வேண்டியதை இவர்கள் செய்ததாக பெயர் எடுக்க இப்படி ஒரு முயற்சி!!

//எருசலேமில் conference ஆண்டவர் நடத்தச் சொல்வதால் நடத்துகிறார். Live Telecast வந்ததென்றால், எல்லோரும் சீனாய் மலைக்கு வீட்டிலிருந்தே சென்று விடலாம்.//

எந்த ஆண்டவர் என்று தான் தெரியவில்லை!! இவர்களின் ஏசு சுவாமியா, எசப்பாவா, அன்புள்ள ஆண்டவரா!! இந்த பிரபஞ்சத்தின் தேவன் இவர்களின் கண்களை அளவிற்கு அதிகமாக தான் குருடாக்கி வைத்திருக்கிறான்!! எது எப்படியோ, இயேசு கிறிஸ்து என்கிற தேவ குமாரன், உலகத்தின் மீட்பர் இது போன்ற ஓநாய்களிடம் பேச மாட்டார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!

நல்ல நகைச்சுவை!! ஆனால் கெவலமான தொழில்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//பழைய ஏற்பாட்டில் ஊழியம் செய்த லேவியர்களை ஆண்டவரே போஷித்தார். இக்காலத்திலும் முழு நேரமாக உழியத்திற்கு அழைக்கப்பட்டவர்களை அவர் தான் போஷிக்கணும்.//

"முழு நேர ஊழியர்கள்" என்பதை யார் நிச்சயிப்பது!! பவுலை அழைத்த தேவன் அதை அனனியா என்கிற சீஷனிடமும் தெரிவிக்கிறார்!! ஆனால் இந்த சோஃபா பேர்வழிகள் மாடிவீட்டு அறையில் தேவன் வந்து இவர்களை எல்லா வேலைகளையும் விட்டு விட்டு முழு நேர ஊழியத்திற்கு கூப்பிட்டார் என்பார்கள்!! இவர்கள் பார்த்துக்கொண்டு இருந்த வேலைகளில் ஒரு பைக்கோடு சுற்றியிருப்பார்கள், ஆனால் பென்ஸ் முதல் ஹோண்டா அக்கார்டின் சுகம் யாரை வேண்டாம் என்கிறது!! பழைய ஏற்பாட்டு லேவியர்கள் தங்களின் சாப்பாட்டிற்கு மாத்திரமே வைத்துக்கொண்டார்கள், வழிப்போக்கர்கள், விதவைகள், அனாதைகள் போன்றோருக்கு உதவி செய்வதற்காக வாங்கினார்கள்!! ஆனால் இங்கோ இதை ஒரு குடும்ப தொழிலாக (இவர்கள் குடும்பங்கள் மாத்திரம் தேவனால் முழு நேர ஊழியத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்) நடத்துகிறார்கள்!! ஊர் காசில் டிவி நடத்துக்கொண்டு தங்களையும் தங்கள் குடும்பத்தையும், ஏன் இன்னும் ஒழுங்காக பேச முடியாத பிள்ளைகளிடமெல்லாம் அபிஷேகம் என்கிற மாயையில் கேவலமான தொழில் செய்கிறார்கள்!! பழைய ஏற்பாட்டு லேவியர்கள் ஆடம்பரத்திற்காக ஊழியத்தை செய்யவில்லை!!

நம்ம ஜனங்க தான் கதை கேட்டு கதை கேட்டு வளர்ந்தவர்களாயிற்றே!! அதை சரியாக பயன்ப்படுத்துகிறார்கள் இந்த சோஃபா பேர்வழிகள்!!

//உங்க கருத்துப்படி, செத்தபின் தான் மன்னிப்பு. சரி. ஆணடவர் பாவத்தையெல்லாம் மன்னித்து உயிர்த்தெழசெய்து விட்டார் என்றால், எதற்கு ஆயிரம் வருட அரசாட்சியில் நியாயத்தீர்ப்பு அவனுக்கு தேவைப்படுகிறது? அவன் தான் இப்ப பாவமற்ற பரிசுத்தவானா இருக்கிறான் அல்லவா.//

பாவம் தான் போகும், தேவனை அறிகிற அறிவில் வளரனுமே!! சத்தியத்தை அறிகிற அறிவில் வரனுமே!! அதற்கு தான் நியாயத்தீர்ப்பு!! "அக்கிரமசெய்கைக்காரர்களாக" இருக்கும் இந்நாள் சோஃபா பேர்வழிகளை விட மற்றவர்கள் தேவனை ஏற்றுக்கொள்வதில் சிரமமே இருக்காது!! இப்ப பாவமற்ற பரிசுத்தவானா இருக்கிறான் என்று உங்களை போன்றோர் தான் சில சோஃபா பேர்வழிகளுக்கு டைட்டில் கொடுத்து உட்கார வைத்திருக்கிறீகள்!! நாங்கள் பாவங்கள் முழுமையாம மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுதல் அனைவருக்கும் என்று தான் சொல்லிவருகிறோம்!! நீதிமான் ஒருவனும் இல்லை என்று தான் வேதம் சொல்லுகிறது, அதிலும் சிலர் சுயநீதியில் அதிக பிரியமாக இருக்கிறார்கள்!! அது தேவனுக்கு முன்பாக அழுக்கும் கந்தையுமாக இருப்பதை உணராமல்!!

//இது என்ன புது வெளிப்பாடா?? சாத்தானா வசனங்களை எழுதி வைத்திருக்கிறான்?//

நீங்கள் வசனமா எழுதுகிரீர்கள்!!

//ஆண்டவர் சுகம் தருவார் என்று அவர் எதிர்பார்ப்பது, உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா?//

கோமாளி கூட்டத்தார் போல் தேவனுக்கு நாங்கள் கட்டளையிடுவது கிடையாது!! "இப்பவே செய்யும்", "இப்பவே இறங்கும்" போன்ற கட்டளைகள் உங்கள் சோஃபா பேர்வழிகளிடம் தான் இருக்கும்!! இதில் அதிர்ச்சி ஒன்றும் இல்லையே, ஏனென்றால் நாங்கள் எல்லாவற்றுக்கும் தேவனை தான் நம்பியிருக்கிறோம், கட்டளையிடுவது இல்லை!! தேவனுக்கு சித்தமானால் ரே ஸ்மித் சுகம் பெறுவார்!!

//எனக்கு என்ன வருத்தம் என்றால் சாது, விசெ போன்றோர் இப்படி உங்க வாயில் விழ வேண்டியிருக்கே என்பதுதான்.//

அவர்கள் அதற்கு தான் லாயக்கு!!

//நல்ல நோய் எதிர்ப்பு சக்தி இருக்குமானால், கிருமிகள் நம்மை ஒன்றும் செய்யாது. அது போல் ஆண்டவருக்குள் நல்லா புஷ்டியா வளர்ந்திருந்தோமானால், எந்த ரே ஸ்மிதின் துர் உபதேசமும் நம்மை ஒன்றும் செய்யாது.//

கிருமிகளாகவே இருப்பதினால் தான் நோய் என்றால் என்னவென்று தெரியாமல் இருக்கிறீர்கள்!! ரே ஸ்மித்தின் எழுத்து கிருமியல்ல, கூரான கத்தி!! ஏனென்றால் தேவன் பேசினார் என்று அவர் எழுதமாட்டார் மாறாக தேவனின் வசனம் பேசியது என்று உண்மையை எழுதுவார்!! உங்க சோஃபா பேர்வழிகளுக்கும் இதற்கும் ரொம்ப தூரம்!! துர்நாற்றம் எடுக்கும் எத்துனையோ தொடுப்புகளை கொடுக்க முடியும், அதை வாசித்தால் உங்களுக்கே தாங்காது, எல்லாம் உங்கள் சோஃபா பேர்வழிகளை குறித்து தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//உள்ளான ஆத்துமா பற்றிய வசனங்கள்.//

ஆத்துமா என்று தான் ஒவ்வொரு வசனமும் சொல்லுகிறதே தவிர "உள்ளான" ஆத்துமா என்று இல்லை!!

லூக்கா 12:20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

Luke 12:20  "Just then God showed up and said, 'Fool! Tonight you die. And your barnful of goods—who gets it?'

Tonight you die is transformed as your soul will be taken out!! That's the comedy of Tamil translation!!

//இத்தனை வசனம் கொடுத்தாச்சு.இப்ப என்ன செய்யப் போறீங்க??//

சாத்தானும் கிறிஸ்துவுக்கு முன் வசனம் கொடுத்தான் என்ன ஆச்சு என்று தெரியுமா!!?? அது தான் உங்கள் நிலையும்!! உள்ளான ஆத்துமாவை குறித்து எழுத போய் கடைசியில் அது என்ன சொல்லுகிறது என்று கூட தெரியாமல் வசனங்களை பதிவிட்டிருக்கிறீர்கள்!! தேடலில் போய் "ஆத்துமா" என்று தேடி பிடித்து செலெக்ட் செய்த வசனங்களை காப்பி பேஸ்ட் செய்து டயலாகா!!??

உள்ளான ஆவி என்கிற இன்னோரு புதிய வார்த்தை!! ஆத்துமா என்றால் என்னவென்று புரிந்துக்கொண்டீர்களென்றால் சோஃபா பேர்வழிகளின் ஏமாற்று வேலையெல்லாம் புரியவரும்!! அது வரையில் இப்படியே எதற்கு வசனம் பதிகிறோம் என்று கூட தெரியாமலே வசனங்கள் பதிவு செய்வீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சாது என்ற காவி (ஓ)நாயையும், வி செ என்ற பன்றியையும் சொன்னால் உங்களுக்கென்ன கோவம் வருகிறது. உங்கள் தளத்திலேயே அவர்களை செருப்பாலடிக்காத குறையாக விமர்சிக்கிறார்களே. ஏன் உங்களையே சில்சாம் அதே கேட்டகரியில்தானே வைத்துள்ளான். எதிர்த்து ஒரு பதிலையும் காணோம். நாங்கள் பதித்தது மட்டும் உறுத்துதோ?

அந்த கேடுகெட்ட நாய்களைத் திட்டினால் தேவ கோபாக்கினை எனக்குத்தானெ வரும் . அதை நான் பார்த்துக்கொள்கிறேன். பிசாசின் மகனே என்ற பவுலின் பதத்தைவிட இதொன்றும் கடினமானதல்ல. அந்த வேசி மார்க்கத்தாரின் முடிவு எங்களுக்குத் தெரியுமென்பதால் பெரிதுபடுத்துவதில்லை. 

 

உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுமானால்... என்றால் நீ செத்துப்போனால் என்ற ஒரே அர்த்தம்தான் உண்டு.

லூக்கா12:19. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

20. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.

ஆத்துமாவா புசித்துக் குடிக்கிறது? அறிவே இல்லையா? ரே ஸ்மித் டாய்லட் கழுவக்கூட அருகதையில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//வெளிப்பிரகாரமான சாப்பாடுதல், வேலை எதுவும் இந்த ஆத்துமா செய்கிறதில்லை. //

என்ன ஒரு கண்டிபிடிப்பு!! எவனோ பாடுகிறதை அறைகுறையாக கேட்டு இங்கே பதிக்க வந்துவிடவேண்டியது!! ஆத்துமா சாப்பிட்டு, புசித்து இளைப்பாறவும் செய்கிறது என்றால் உங்கள் Context படி இது வெளிப்புற ஆத்துமா, ஆனால்,

லூக்கா 12:19. பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான்.

அடுத்த வசனமே இது உள்ளான ஆத்துமாவாக மாறிவிடுகிறது!! நல்லா விளக்குறீங்க Context படி வசனங்களை!! போய் சாதுவின் பாதத்தில் அமர்ந்து வசனங்களை கேளுங்கள் தெளிவான "ஞானம்" பிறக்கும்!!

20. தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார்.



//மற்ற வசனங்களும் பிழைதானா?
இப்படி கண்ணையும் காதையும் மூடிக் கொண்டால் எப்படி உருப்பட?//

வசனங்கள் பிழை என்று சொல்லவில்லை, உங்களின் புரிந்துக்கொள்ளுதல் தான் பயங்கரமான பிழையை கொண்டது!! எக்காலச்சத்தத்தில் காலத்தை ஓட்டுவோருக்கு வசனம் புரிய நியாயம் இல்லை!! கண்ணையும் காதையும் யார் மூடிக்கொண்டு இருக்கிறார் என்பது உங்களின் பதிவுகள் வெளிப்படுத்துகிறது!! தன் இஷ்டத்திற்கு ஆத்துமாவை உள்ளான மனிதன் என்றும் மனிதன் என்றும் புரிந்துக்கொள்ளுதலிலிருந்து உங்களின் "ஞானம்" புரிகிறது!! உங்களுக்கு ஆத்துமா என்றால் என்னவென்று புரியாது!!

//நீங்க மரத்தில ஏறி வசனங்களைப் பறிச்சிட்டு வர்றீங்களா??//

ஆமா!! ஆகவே தான் எதற்கு எந்த வசனம் கொடுக்கவேண்டுமோ அதற்கு அந்த வசனத்தை கொடுக்கிறோம்!! ஆத்துமா என்று போடப்பட்ட வசனங்கள், ஆவி என்று போடப்ப்ட்ட வசனங்கள் எல்லாவற்றையும் போட்டு விட்டு ஏதோ பெரிய சாதானை செய்ததாக நினைப்பா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//சில்சாம் நிலை தடுமாறி(!) ஏதாவது எழுதினாலும், பின் அன்பு சகோதரி, அருமை சகோதரி என்று ஏதாவது சொல்லி compensate செய்வார்.//

உங்களை தானே அன்பு சகோதரி அருமை சகோதரி என்று எழுதி @@@ செய்வார்!! சாது போன்றரை குறித்து அவரின் நிலைப்பாடு அதே தானே!! பிறகு என்ன!!

//எனக்கு யார் ஊழியக்காரர்களை கண்டபடி எழுதினாலும் வருத்தமாகத்தான் இருக்கும். I have expressed my objection more than once here//

நீங்கள் ஊழியக்காரர்கள் என்று சொல்லுபவர்கள் தானாக தோன்றிய ஊழியர்கள்!! அவர்களை யாரும் ஊழியம் செய்ய சொன்னதில்லை!! ஏதோ தேவனே அவர்களிடத்தில் வந்து அவர்களை ஊழியம் செய்ய கட்டாயப்படுத்தியது போல் பில்டப் செய்கிறார்கள்!! அவர்கள் பேராசை பிடித்தவர்கள்!! அந்த பேராசைய நிறைவேற்ற அவர்கள் உழைப்பதில்லை!! உங்களை போன்ற விசுவாசிகளிடம்(!!) அவர்களுக்கும் அவர்களின் சந்ததிகளுக்கும் வேண்டியதை கறந்து விடுகிறார்கள், ஊழியம் என்கிற பெயரை சொல்லி!! நீங்கள் எட்டி நின்று இவர்களை பார்க்கிறீர்கள், நான் கிட்டே இருந்து இவர்களின் மோசடிகளை அறிந்தவன்!! திருடனை திருடன் என்று தான் சொல்ல முடியும்!!

Your objections should carry proper explanations!! Just because you like something and dislike something is your personal opinion!! This is not a quality to be expressed if you are in a public forum or a debate!! If you feel we are writing really wrong, prove it by showing how we are wrong!!

//ஒழுங்கா பதில் சொல்ல துப்பில்லாத காரணத்தால், வேற எதையோ துப்புகிறார் சோல். அவர் தெரிந்து கொள்ளப்பட்ட சிறு மந்தையாய் இருப்பதால்தான் இவ்வளவு decent ஆ பேசுகிறார் போல.//

ஒழுக்கமாக எழுதுவதை குறித்து உங்கள் தளத்திலிருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்!! மற்றபடி எங்கள் எழுத்து அநேகரின் (வேதத்தில் சொல்லப்படும் அநேகர் தான்) தப்பிதங்களை வெளிப்படுத்துவது கூட அநேகருக்கு எரிச்சல் உண்டாக்கும், நீங்களும் அந்த அநேகரின் கருத்துக்களை பின்பற்றுபவராக இருப்பதினால் உங்களுக்கு அப்படி தோன்றும்!! மற்றபடி நீங்கள் உங்கள் பதிவுகளை பார்த்தீர்களென்றால் ஒழுக்கத்தை குறித்து பேச மாட்டீர்கள்!!

எடுத்துக்காட்டாக:

சோல்சொல்யூஷன் பிசாசினால் வஞ்சிக்கப்பட்ட கதை!!

கோவை மங்கீஸ்(Kovai Monkeys)!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆனால்,லேசா ரே ஸ்மித்தின் கொள்கையைப் பற்றி பேச ஆரம்பித்தவுடனே, தரக்குறைவான பேச்சு வர ஆரம்பித்து விட்டது. யாரு யாரை hero worship பண்றாங்கன்னு, யார் யார் பாட்டைக் கேட்கிறார்கள் என்று இதிலிருந்து தெரியவில்லையா?//

ரே ஸ்மித் சாது போல் சொந்த சரக்கு எல்லாம் விற்பது கிடையாது!! நான் தீர்க்கதரிசி என்று ஒரு போதும் சொல்லுவது இல்லை!! என்னை போன்ற தீர்க்கதரிசிக்கு கொடுத்தால் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று மாய்மாலம் செய்வதில்லை!! முக்கியமாக அடுத்தவன் கிட்டே காசு வாங்கி சோஃபா போட்டு பேசுவதில்லை!! வேதத்திற்கு மதிப்பு தருகிறார், வசனங்களின் படி எழுதுகிறார், தன்னை ஒரு சாதாரன மனிதன் என்றே சொல்லுகிறார்!! ரே ஸ்மித் நிறம் என்னவென்று கூட எங்களுக்கு தெரியாது, பிறகு என்ன ஹீரோ வர்ஷிப்!! அவர் எழுதியதை தான் வாசிக்க சொன்னோம், அதை வாசிக்க கூட உங்கள் கூட்டத்தாருக்கு தைரியம் கிடையாது, உடனே ரே ஸ்மித்தை எவனாவது குறைத்து எழுதியிருந்தால் அதை தொடுப்பாக கொடுப்பது, வேறு என்ன தெரியும்!!

//கோவை மங்கீஸ்(Kovai Monkeys)!!! - Monkeys are cute creatures. You should be happy that I compared you to monkeys!//

தேவனின் சாயலில் படைக்கப்பட்டவர்களை குரங்கு என்று சொல்லுவதற்கு தேவனிடத்தில் நீங்கள் கணக்கு கொடுத்தால் சரி தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 4 5  >  Last»  | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard