kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: குழப்பமே இல்லாத கிறிஸ்தவம்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
குழப்பமே இல்லாத கிறிஸ்தவம்...


குழப்பமே இல்லாத கிறிஸ்தவம்...

1.ஒரேதேவன் ஆனால் மூன்று தேவர்கள்.(இரகசியம்)

2.இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை.(இதுவரை கிறிஸ்துவை கேள்விப்படாதவர்கள் மற்றும் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடிப்பேர் என்னாவார்கள்?... தெரியாது)

3.விசுவாசித்தால் மட்டும் போதுமா பரலோகம் கேரண்டியா? ஹி ஹி தெரியாது, பரிசுத்தமாக (கூடுமானவரை???) கடைசிவரை வாழ வேண்டும்.

4.மனிதன் சாவானா? இல்லை! மரித்தபின்(?) அவன் பாதாளத்திலோ, பரதீசிலோ. ஆபிரகாம் மடியிலோ, பரலோகத்திலோ இருப்பான். நியாயத்தீர்ப்புவரை. அதன்பின் மறுபடியும் பரலோகத்துக்கோ, பாதாளத்துக்கோ(நரகம்) போவான். (மீண்டுமா.....?)

5.எல்லா கிறிஸ்தவ சபைகளும் உண்மையான சபைகளா? நோ நோ கத்தோலிக்கம் கிறிஸ்தவமே அல்ல, பாரம்பரிய புரோட்டஸ்டான்டு சபைகள் ஆவியில்லாத சபை; பெந்தெகொஸ்த் சபைகள் எல்லாமே சரி என்று சொல்ல முடியாது...நான் போற சபை கொஞ்சம் பரவாயில்லை

6. மனிதன் தூங்கும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? தூங்கும்.
மனிதன் சாகும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? சாகாது.

7. விசுவாசிகள் பரலோகத்துக்கும் அவிசுவாசிகள் நரகத்துக்கும் போவார்கள். வெகு சிலர் மட்டுமே பரலோகம் போவார்கள் மற்ற எல்லாருமே நித்திய நரகத்துக்குத்தான்

8.பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தாரா? ஆமா. ஒருசில பாவிகளையா எல்லா பாவிகளையுமா? எல்லா பாவிகளுக்காகவும்தான்.

சரி எல்லா பாவிகளையும் இரட்சிப்பாரா? அதெப்புடி? அவரை ஏற்றுக்கொள்ளும் கொஞ்சப்பேரை மட்டும்தான் அவர் இரட்சிப்பார்.

9.  இரட்சிக்கக் கூடாதபடிக்கு அவர் கை குறுகிவிட்டதா? ஆமா பிரதர் இரட்சிப்பு தேவன் கையில் இல்லை அது மனிதன் கையில்தான் இருக்கிறது.

10. அது சரி ஏற்றுக்கொண்ட எல்லா கிறிஸ்தவர்களுமாவது பரலோகம் போவார்களா? அதெப்புடீ, சான்ஸ் கம்மி பிரதர். எந்தக் கிறிஸ்தவன் முழுமையான பரிசுத்த ஜீவியம் செய்கிறான்? கஷ்டம்தான்....

11. ஆமா அப்ப பெரும்பாலோர் நரகத்துக்குப் போனால் மெஜாரிடியை நரகத்துக்குத் தள்ளிய சாத்தான் பெரியவனா? அவர்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போன தேவன் பெரியவரா? அது வந்து பிரதர் தேவன் எண்ணிக்கையை பார்ப்பதில்லையாக்கும்; அவருக்கு குவாலிடிதான் முக்கியம்.

12.'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்' என்று வசனம் சொல்கிறதே ஆத்துமா உண்மையில் சாகுமா? அது வந்து..... ஹி ஹி... போங்க பிரதர் நீங்க் கொழப்புரீங்க‌... நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சாரி பிரதர்,  நீங்கள் இன்னும் "இரட்சிப்பின் அனுபவம்" பெறவில்லை போல்!! நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்று அந்நிய பாஷை பேசீயவரா!! முதலில் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வாருங்கள்!! தேவன் என்ன செய்வார் என்ன செய்யம்மாட்டார் என்று எல்லாம் கேள்விகள் கேட்க கூடாது என்று எங்கள் பாஸ்டர் சொல்லியிருக்கிறார்!!

எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்படுவார்கள் தான்..........ஆஆஆஆஆஆஆஆஆஆனா........... நீங்க கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும், இது தான் ஒரே கண்டிஷன்!!

எல்லா மனுஷருக்காகவும் தம்மை எந்த ஒரு கண்டிஷனும் இல்லாமல் மீட்கும் பொருளாக ஒப்பு கொடுத்த கிறிஸ்து அனைவரையும் இரட்சிக்க வல்லமையில்லாதவர், ஆகவே நீங்கள் தான் அதற்கு (இரட்சிப்பிற்கு) முயற்சிக்கனும்!! ஆனாலும் இவர்கள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டு விட்டதாக வேறு சொல்லுகிறார்களே!! போங்க பிரதர், இவர்களுக்கு இரட்சிப்பென்றாலே குழப்பம் தான்!!

நேற்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், நீங்கள் எந்த சபைக்கு போகிறீர்கள் என்று, நான் சொன்னேன், எங்களுக்கு என்று ஒரு சின்ன ஐக்கியம் இருக்கிறது, நாங்கள் என்று அனைவரும் ஒன்று கூடுகிறோமோ, அன்றே தேவனை ஆராதித்து, துதித்து அவருக்கு நன்றி ஏறெடுப்போம், மற்றபடி 8 மணி ஆராதனை, 10 மணி ஆராதனை என்று சென்றால் தான் ஆசிர்வாதம் என்பதை நாங்கள் பின்பற்றுவதில்லை என்றேன்!! அதற்கு அவர், இல்ல பிரதர், வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, வாரத்தின் முதல் நாள் என்று, அது ஞாயிற்றுக்கிழமை தானே என்றார்!! நான், "அய்யா, யூதர்கள் அதை எழுதினார்கள், வாரத்தின் முதல் நாள் என்பது சனிக்கிழமை சாயங்காலம்" என்றேன்!! உடனே அவர், இப்படி எல்லாம் meticulousஆக பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை!! மேலும் பழய ஏற்பாடு (யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது) எல்லாம் கிறிஸ்து நிறைவேற்றி விட்டார், இனி நாம் அதை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை!! நான், "சரி பிரதர், நீங்கள் தசமபாகம் தருவீர்களா" அவர், "ஆமா, ஆமா, தருவோம் என்றார்"!!

அப்படி என்றால் உங்கள் விசுவாசம் தான் என்ன, சற்று முன்பு தான் கிறிஸ்து அனைத்தையும் நிறைவேற்றி தீர்த்துவிட்டார், இனி பழயதை நாம் பின்பற்ற வேண்டியது கிடையாது என்று சனி, ஞாயிறு விஷயத்திற்கு சொன்னவரருக்கு 'தசமபாகம்" என்பதும் பழைய ஏற்பாட்டு கட்டளை தான் என்பது புரியவில்லையா, அல்லது புரிய மாட்டேன் என்கிறீர்களா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஜான்//1.ஒரேதேவன் ஆனால் மூன்று தேவர்கள்.(இரகசியம்) //

 முன்று தேவர்கள் அல்ல மூன்று ஆள்ததுவங்கள். எங்க நீங்க சொல்லுங்க மொத்தம் எத்தனை தேவர்கள்? What is God? என்றால் ஒன்று (அதாவது Essence  மற்றும் substance )  Who is God என்றால் மூன்று ஏனென்றால் அது ஆள்தத்துவம்.//

இதைத்தானே குழப்பமே இல்லாத வாதம் என்கிறோம்? What is God? என்றால் அது என்ன ஒரு வஸ்துவா? என்னய்யா உளறுகிறீர். வேதம் ஒரே தேவன் என்கிறதா அல்லது *போட்டு *Conditions Apply, என்கிறதா?

எங்கே தேவன் மூன்றாக இருக்கிறார் என்று ஒரு வசனம் காண்பியும் பார்க்கலாம்?

அதென்ன வெறும் மூன்று ஆள்தத்துவங்கள்? விட்டால் முப்பத்து முக்கோடி ஆள்தத்துவங்கள் என்றுகூட சொல்வீர்களோ?

 //இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை.(இதுவரை கிறிஸ்துவை கேள்விப்படாதவர்கள் மற்றும் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து மடிந்த கோடாகோடிப்பேர் என்னாவார்கள்?... //

 

 இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை என்பது உண்மையென்றால் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து அவரை அறியாமல் மடிந்த கோடாகோடிப்பேர் நரகம் போவார்கள் இதில் என்ன குழப்பம்? யோபுவுக்கு கிருஸ்துவை தெரியும் அவன் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன்.//

 யோபு ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன் என்பது என்ன உங்களுக்கு 'ஆவியானவர்' வெளிப்படுத்தினாரா? புதுக் கதை விடுகிறீர். வசனம் உண்டா?

கோடா கோடிப்பேர் நரகம் போவார்களா? சூப்பர்மா? இப்பதான் இந்தக் கேள்விக்கே 'தெளிவான' பதில் சொல்லியிருக்கிறீர்கள். ஆக ஆதாம் தொடங்கி, இன்றுவரை அவரை அறியாமலேயே மரித்த, மரித்துக்கொண்டிருக்கும் யாவரும் நரகத்தில் நித்திய வாதை அனுபவிப்பார்கள். இப்போதும் 4பில்லியன் ஜனங்கள் கிறிஸ்துவை 'ஏற்றுக்கொள்ளாதவர்கள்' அல்லது அறியாதவர்கள். ஆக 200கோடி விசுவாசிகள் எல்லாம் பரலோகம் கண்டிப்பாக போவார்கள். 400கோடியை தேவன் நரகத்தில் தள்ளுவார். சூப்பர் 'நற்செய்தி'. 

ஒருத்தனுக்கு செய்தியே கொடுக்காமல் தண்டிக்கும் ஒரு அநீதியின் தேவனையா வேதம் சொல்கிறது? பிறவிக்குருடு, செவிடு, பைத்தியக்காரர்கள், சிறுவயதிலேயே இறந்துபோகும் ஜீவன்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமலேயே அநேக நற்கிரியைகள் (மன நலக் காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் நடத்துபவர்கள்) எல்லாருமே நரகத்துக்குத்தான்.

தாவீது கூட பரலோகத்துக்கு எழுந்து போகவில்லையே அப்2:34. அப்ப அவன் எங்கு போவான் நரகத்துக்கா?

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னே வாழ்ந்த கோடா கோடி ஜனங்கள் அவரை ஏற்றுக்கொள்ளாததால்(?) நரகத்துக்குப் போவார்கள் என்று 'ஆணித்தரமாக' விளக்கியிருக்கிறீர்கள். அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார் என்று மழுப்புவார்களே தவிர உம்மைப்போல் எந்த ஊழியனும் எந்தக்காலக்கட்டத்திலும் இப்படி ஒரு அபத்தத்தைச் சொன்னதில்லை. ஆக யோபுவைத்தவிர பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்த எல்லாரும் நரகம் போவார்கள்..... 

தேவ அன்பை இப்படி வெளிப்படுத்தியதற்காக நன்றி! கடைசிவரை இதே நிலையில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஆச்சரியம் என்னவென்றால் "ஆணித்தரமான‌" உம்முடைய இந்த அறிவுகெட்ட பதிவுக்கு அந்தத் தளத்திலிருந்து ஒரு எதிர்ப்பும் இல்லை என்பதுதான். 

நீங்கள் சொல்லும் 'பிரதான' கட்டளையாகிய "நீங்கள் புறப்பட்டுப் போய்...." என்ற கட்டளையே அவர் உயிர்த்தெழுந்தபின்னரே கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் உடனடியாக உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் 'நற்செய்தி' அறிவித்து விடவில்லை. வேதாகமமே கி.பி 1611 க்குப் பிறகுதான் வெளிவர ஆரம்பித்தது. அதுவும் தமிழில் வெகு சமீபத்தில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. வேதம் வாசிக்காமல் (உமது வசனமே சத்தியம்) ஒருவன் விசுவாசியாக முடியும் என்பதெல்லாம் கேலிக்கூத்து. வேத வாக்கியங்களை அதுவும் ஆராய்ந்து பாருங்கள் அவைகளில் நித்திய ஜீவன் உண்டு என்றுதான் கர்த்தர் சொல்லியிருக்கிறார்.

கிறிஸ்துவை அறியாமலேயே மரித்தவர்கள் நரகத்துக்குப் போவார்கள் என்ற மாபெரும் தேவதூஷணத்தை உங்கள் கைப்பட பதித்துள்ளீர்கள்....

நிச்சயம் கணக்கொப்புவிக்க வேண்டும்...





-- Edited by soulsolution on Friday 8th of July 2011 10:33:07 AM



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//விசுவாசித்தால் மட்டும் போதுமா பரலோகம் கேரண்டியா? ஹி ஹி தெரியாது, பரிசுத்தமாக (கூடுமானவரை???) கடைசிவரை வாழ வேண்டும்.//

 விசுவாசித்தால் மட்டும் போதும். பரிசுத்த வாழ்கை அல்லது வாழ முயற்சிப்பது என்பது விசுவாசத்தின் அடிப்படையில் நடக்கும் கிரியை. ரோமர் 6 அதிகாரத்தை வாசித்தால் பவுல் இதற்கு தெளிவாய் பதில் சொல்லுகிறார். கிருபை பெருகும் படி பாவத்தில் நிலை நிற்கிறேன் என்று உண்மையிலே கிருபையை பெற்றவன் சொல்லமாட்டான் ஏனென்றால் அது அவன் தரித்துக்கொண்ட புதிய சுபாவத்திற்கு எதிரானது.//

மத்தேயு 10:22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.

மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

I பேதுரு 4:18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

எதில் நிலைநிற்கச்சொல்கிறார்?

மத்தேயு 10:38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.

 

எங்கே சிலுவையை எடுத்துக்கொண்டு அவரைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லும் ஒரு ஆளைக் காண்பியுங்கள்...

 

பாத்திரன் அல்ல என்றால் நரகம்தானே?

 

ரோமர் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

30. எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

என்னுடைய கேள்வி அப்ப முன்குறிக்காதவர்களை 'நரகத்துக்கு' முன்குறித்திருக்கிறாரா?

 

அப்ப யார் யாருக்கு பரலோகம் யார் யாருக்கு நரகம் என்று தேவனே முன்குறித்துவிட்டபடியால் இங்கே நமக்கென்ன வேலை. தேவன் முன்குறியாதவர்களை யாரும் பரலோகத்துக்குத் தகுதியாக்க முடியுமா?



-- Edited by soulsolution on Friday 8th of July 2011 10:33:51 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/மனிதன் சாவானா? இல்லை! மரித்தபின்(?) அவன் பாதாளத்திலோ, பரதீசிலோ. ஆபிரகாம் மடியிலோ, பரலோகத்திலோ இருப்பான். நியாயத்தீர்ப்புவரை. அதன்பின் மறுபடியும் பரலோகத்துக்கோ, பாதாளத்துக்கோ(நரகம்) போவான். (மீண்டுமா.....?)//

 

மனிதன் மரித்தபின் அவனுடைய ஆவி தேவனிடத்திலும்  சரிரம் மண்ணுக்கும் திரும்பும். பின்பு இறுதி நியாயத்தீர்ப்பில் நரகமோ (இரண்டாவது மரணமோ, நித்திய ஆக்கினை ) அல்லது நித்திய ஜீவனோ பெறுவான்

 

ஓஒ அப்ப மரிக்கும் எல்லா மனிதரின் ஆவியும் தேவனிடத்திற்கு பரலோகத்துக்குப் போய்விடும் (பாவியானாலும் பரிசுத்தவானானாலும்). அங்கே தேவனோடு ஒன்றிவிடும். பின் எதற்கு சரீர உயிர்த்தெழுதல், நியாயத்தீர்ப்பு? அப்படியே விட்டுவிடலாமே.

பின்பு இறுதி நியாயத்தீர்ப்பில்(?) இரண்டாவது மரணமோ(?) நித்திய ஆக்கினை அல்லது நித்திய ஜீவனோ பெறுவான் என்கிறீர்கள். அப்ப முதல் மரணத்தில் ஆவி தேவனிடத்திற்கும், சரீரம் மண்ணுக்கும் போகிறது சரி. இரண்டாம் மரணத்தில் ஆவி சரீரம் இரண்டுமே நித்திய வாதைக்குப் போகிறது இல்லையா? நித்திய ஜீவனை சுதந்தரிப்பவர்களின் ஆவி சரீரத்துக்குள் வந்து பின்னர் தேவனோடு பரலோகத்தில் இருப்பார்களா? முதலில் ஆவிமட்டும் இருந்தது இப்போது சரீரமும் சேர்ந்து இருக்கும் அப்படித்தானே... கொஞ்சம் கூட குழப்பமே இல்லை. 

அப்ப ஐசுவரியவான், லாசரு உண்மைச் சம்பவத்தில் நடப்பவைகளுக்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள் நண்பரே? ஆபிரகாம் உயிர்த்தெழுந்து விட்டாரா? அல்லது ஆவிக்கும் 'மடி' யெல்லாம் கூட இருக்குமா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//மனிதன் தூங்கும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? தூங்கும்.

மனிதன் சாகும்போது அவன் ஆத்துமா என்ன செய்யும்? சாகாது.//

 ????? மனிதன் துங்கும் போது அவன் இருதயம் தூங்காது அவன் சாகும்போது துங்கும். சாவதும், துங்குவதும் ஒன்றா? தூங்கியது  போதும் சிக்கிரம் எந்திரிங்கப்பா!!//

 

ஹலோ ஆத்துமாவைப் பற்றிக் கேட்டால் ஏதோ மேதாவித்தனமாக எண்ணிக்கொண்டு இருதயம் பற்றிப் பேசுகிறீர். இப்படி உளறுவதற்கு தூங்குவததே தேவலாம்..

 

//விசுவாசிகள் பரலோகத்துக்கும் அவிசுவாசிகள் நரகத்துக்கும் போவார்கள். வெகு சிலர் மட்டுமே பரலோகம் போவார்கள் மற்ற எல்லாருமே நித்திய நரகத்துக்குத்தான்//

சரி அதுனாலே என்ன? எல்லாரும் பரலோகம் (அல்லது பரதிசு..கொடுமை) போவர்கள் என்று சொல்லிவிடலாமா?

அதுனால என்னன்னு பொசுக்குனு கேட்டுட்டீங்க. வெகு சிலரை பரலோகத்துக்கும் மற்றவர்களை நரகத்துக்கும் அனுப்ப எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்.

 //பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தாரா? ஆமா. ஒருசில பாவிகளையா எல்லா பாவிகளையுமா? எல்லா பாவிகளுக்காகவும்தான்.//

ஒரு சில பாவிகளைத்தான். அதே நேரத்தில் எல்லா  பாவிகளுக்கும் அழைப்பு இருக்கிறது.  "அழைக்கப்பட்டவர்கள் அநேகர் ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர்."  வாசித்தது இல்லையா?  எந்த பாவியும் தேவன் என்னை அழைக்கவில்லை என்று சொல்ல முடியாது. ரோமர் 1 ஆம் அதிகாரத்தை வாசிக்கவும்.

 வாசிச்சாச்சுங்கோ, ஆமா தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் சிலர்ன்றீங்க யாரால் எதுக்காகத் தெரிந்து கொண்டார். அப்ப தெரிந்து கொண்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள் மட்டும்தானே பரலோகம் பின் ஏன் எல்லாருக்கும் சுவிசேஷம் சொல்கிறீர்கள். ஓஒ யாரை அவர் தெரிந்துகொண்டார்னு தேடித்தேடி கண்டுபிடுக்கும் வெளயாட்டு வெளயாடுறீங்களா?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//இரட்சிக்கக் கூடாதபடிக்கு அவர் கை குறுகிவிட்டதா? ஆமா பிரதர் இரட்சிப்பு தேவன் கையில் இல்லை அது மனிதன் கையில்தான் இருக்கிறது.//

மனிதன் கையில் மண்ணுதான் இருக்கிறது. இரட்சிப்பும், நித்திய ஆக்கினையும் தேவன் கையில் மட்டுமே இருக்கிறது//

மறுபடியும் கொழப்புறீன்ங்க இயேசுவை ஏற்றுக்கொள்வதும் (இரட்சிப்பு) அவரை மறுப்பதும் (நரகம்) மனிதன் கையில்தான் இருக்கிறது என்றுதானே நீங்கள் எல்லாருமே வாதாடினீர்கள். இப்ப என்ன தடால் பல்டி...

  //அது சரி ஏற்றுக்கொண்ட எல்லா கிறிஸ்தவர்களுமாவது பரலோகம் போவார்களா? அதெப்புடீ, சான்ஸ் கம்மி பிரதர். எந்தக் கிறிஸ்தவன் முழுமையான பரிசுத்த ஜீவியம் செய்கிறான்? கஷ்டம்தான்....//

இயேசு கிருஸ்துவை ஏற்று கொண்ட எல்லாரும் பரிசுத்தவான்கள்தான். விபச்சார பாவத்தில் சிக்கியிருந்த கொரிந்து சபை விசுவாசிகளை பவுல் பரிசுத்தவான்கள் என்று அழைக்கவில்லையா?//

ஆக ஏற்றுக்கொண்டு என்ன வேணா செய்யலாம் ஏத்துக்காம நல்லது செஞ்சாக்கூட நரகம்தான். பேஷ் பேஷ்! அப்புறம் ஏன் ஏற்றுக்கொண்ட அநேக பரிசுத்த ஊழியர்களை உங்கள் தளத்தில் சாடுகிறீர்கள். அவர்கள்தான் ஏற்றுக்கொண்டவர்களாயிற்றே... 

 //ஆமா அப்ப பெரும்பாலோர் நரகத்துக்குப் போனால் மெஜாரிடியை நரகத்துக்குத் தள்ளிய சாத்தான் பெரியவனா? அவர்களை அவனிடமிருந்து காப்பாற்ற முடியாமல் போன தேவன் பெரியவரா? //

 சாத்தான் யாரையும் நரகத்தில் தள்ளுவது இல்லை மறுபடி மறுபடி ஏன் நாங்கள் சொல்லாததை உளறிக்கொண்டு திரிகிறீர்கள்? நரகத்தில் தள்ளுவது தேவனே!//

  சாத்தான் யாரையும் நரகத்துக்குத் தகுதியாக்குவதில்லையா? அப்ப யாரை விழுங்கலாம் என்று வகைதேடி சுற்றித்திரிகிறான் என்ற வசனம் அவனது பசியைக்குறித்துச் சொல்கிறதோ?

 //'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்' என்று வசனம் சொல்கிறதே ஆத்துமா உண்மையில் சாகுமா? அது வந்து..... ஹி ஹி... போங்க பிரதர் நீங்க் கொழப்புரீங்க‌... நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம்...//

 

வசனம் சாகும் என்று சொன்னால் சாகும். நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம் என்று நான் சொல்லமாட்டேன். கடைசிவரை இதை தொடர்ந்தால் நீங்கள் இரட்சிக்கபடவே மாட்டீர்கள் !//

ஆத்துமா சாகவே சாகாது என்று நீர் சார்ந்திருக்கும் சபையில்தான் ஓய் போதிக்கிறார்கள்.... சாகாது என்று சொல்லிப்பாரும்.

நாங்கள் இரட்சிக்கப்படவே வேண்டாம் பிரதர், கிறிஸ்துவை அறியாத அநேக குடும்பங்கள், நண்பர்கள், உறவினர்களை மற்றும் என் சகோதரர்களாகிய மனிதர்கள் எல்லாரையும் நரகத்தில் வேதனைப்படவிட்டு விட்டு நான் மட்டும் பரலோகம் போகவே வேண்டாம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சோல்சொல்யூஷன்:
//அல்லது ஆவிக்கும் 'மடி' யெல்லாம் கூட இருக்குமா?//

என்ன பிரதர் இப்படி கேட்டீங்க!! உங்களுக்கு தெரியாத ஆவிக்கு கால் இருக்கிறது, பாதம் இருக்கிறது, பின்ன மடி இல்லாமல் கால் என்ன அந்தரங்கத்திலா தொங்கும்!! இது கூட தெரியவில்லை கோவை கூட்டத்தாருக்கு என்று உங்களுக்கு குரல் கேட்கவில்லையா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//முன்று தேவர்கள் அல்ல மூன்று ஆள்ததுவங்கள். எங்க நீங்க சொல்லுங்க மொத்தம் எத்தனை தேவர்கள்? What is God? என்றால் ஒன்று (அதாவது Essence  மற்றும் substance )  Who is God என்றால் மூன்று ஏனென்றால் அது ஆள்தத்துவம்.//

அப்படி சொன்னால் இப்படி!! சரி மூன்று ஆளத்துவத்துடன் ஒரே தேவன் என்றாவது வசனம் இருக்க வேண்டுமே!!

ஒரே தேவன் தான், ஆனால் மூன்று ஆளத்துவங்கள்!! மூவருக்கும் ஒரே வல்லமை, ஒரே நிலை!! பிதா குமாரன் பரிசுத்த ஆவி என்று மூன்று நாமங்களில் (தன்மைகளில்) அழைக்கப்பட்டாலும் மூவரும் ஒருவரே!! எல்லாவற்றையும் விட இது ஒரு இரகசியமாம்!!

தேவன் ஒருவரே!! அவரின் குமாரன் இயேசு கிறிஸ்து!! இவர்களின் ஐக்கியமே பரிசுத்த ஆவி!! பிதாவிற்கும் குமாரனாகிய கிறிஸ்துவிற்கும் தனி தன்மைகள் இருக்கிறது!! ஒருவரால் மரிக்கவே முடியாது, மற்றொருவர் மரித்தார்!! ஒருவர் பிதா இன்னோருவர் குமாரன்!! இதை தான் வேதம் தெளிவாக போதிக்கிறது!! வேதம் எழுதப்பட்ட பிறகு சிலரின் விளக்கத்தையும் அந்த புஸ்தகத்தினாலும் கத்தோலிக்க டாக்மாஸ் (போப் கொடுத்த கோட்பாடுகள்) போன்றவற்றாலும் திரித்துவம் என்கிற ஒரு புதிய வார்த்தையை உருவாக்கி அந்த வார்த்தைக்குள் தேவனை அடுக்குவது தான் இவர்களுக்கு தெரிந்த இரகசியம்!!

//இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு 'விசுவாசித்தால்' பரலோகம் இல்லாவிட்டால் நரகத்தில் நித்திய வாதை என்பது உண்மையென்றால் கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்து அவரை அறியாமல் மடிந்த கோடாகோடிப்பேர் நரகம் போவார்கள் இதில் என்ன குழப்பம்? யோபுவுக்கு கிருஸ்துவை தெரியும் அவன் ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவன். //

தேவ அன்பில் நிறைந்த சீஷர்கள் நீங்கள் எல்லாம்!! தேவனின் (பிதாவின்) கிருபையினால் ஒவ்வொரு மனுஷனுக்காகவும் மரணத்தை ருசிப்பார்த்த கிறிஸ்து இயேசு (எபி 2:9); எல்லா மனுஷர்களுக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக கொடுத்த கிறிஸ்து இயேசு (1 தீமோ 2:6)!! இப்படி இரத்தம் சிந்தியதை விசுவசிக்கிறவனுக்கு மாத்திரமே இரட்சிப்பு என்று சொல்லுவது எத்துனை பெரிய தேவ தூஷனம் என்று இன்னும் அறியாமல் இருக்கிறீர்கள்!! இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்கிறோம் என்று சொல்லி இப்படியா அவரின் வல்லமையை அவமாக்குவது!!

//மனிதன் மரித்தபின் அவனுடைய ஆவி தேவனிடத்திலும்  சரிரம் மண்ணுக்கும் திரும்பும். பின்பு இறுதி நியாயத்தீர்ப்பில் நரகமோ (இரண்டாவது மரணமோ, நித்திய ஆக்கினை ) அல்லது நித்திய ஜீவனோ பெறுவான் //

அப்படி என்றால் இரண்டாவது மரணத்தில் மீண்டும் மனிதர்களின் "ஆவி" தேவனிடத்தில் போகும், அவர்கள் சரீரம் மண்ணுக்கு திரும்பும், அப்படி தானே, இதில் என்ன ஆக்கினை அதுவும் நித்திய ஆக்கினை இருக்கிறது!! ஏனென்றால் மரணம் என்றால் ஆவி தேவனிடத்தில் போகிறது என்றால் இரண்டாம் மரணம் என்றால் இரண்டாம் முறை ஆவி தேவனிடத்திற்கு தானே போக வேண்டும்!! இரண்டாம் மரணத்தை நித்திய ஆக்கினை என்று சொன்னால் முதலாம் மரணத்தில் தர்காலீக ஆக்கினை இருக்குமோ!!

வசனம் எதற்கும் இல்லை போதனைகளுக்கும், இவர்களின் ஆவியானவரின் வெளிப்பாடுகளும் குறைச்சல் இல்லை!!

//சபை எனபது denomination கிடையாது. சபை என்பது கண்ணுக்கு புலப்படாத கிறிஸ்துவின் சரிரம். யார் அதில் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கும் , தேவனுக்கும் மட்டுமே தெரியும். ஒருவனுடைய  கனிகளை வைத்து சற்று நிதானிக்கலாம். நிச்சயமாக ரசலின் சிஷர்கள் சபையில் இல்லை என்று என்னால் உறுதியாய் கூறமுடியும்//

தேவன் யார் என்றே தெரியாமல் தேவனின் நாமத்தில் வியாபாரம் செய்துக்கொண்டு இருக்கும் உங்கள் சபையை காட்டிலும் ரஸ்ஸலின் சீஷர்கள் எவ்வளவோ மேல்!! சிலுவை தூக்குங்கள் என்று கிறிஸ்து போதிக்க சொன்னால், தசமபாகம், காணிக்கைகளை வைத்து அடுத்தவன் முதுகில் சிலுவையை சுமத்தி, அடுத்தவன் வருமானத்தில் வையிற்றை நிறப்பும் திரித்துவ கூட்டத்தாரும் அவர்களின் போதனைகளும் குப்பையே!! தன்னையே நீதிமான் என்று சொல்லிக்கொள்பவன் வேதத்தை பொறுத்தவரை வயிற்றை தேவன் என்று கொண்டிருப்பவர்களே!!

நான் பாவி என்றும் என்னை போன்றவர்களை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு இரத்தம் சிந்தினார் என்று நாங்கள் விசுவசிக்கிறோம்!! ஆனால் நீங்களோ உங்களையே நீதிமானாக பாவிக்கிறீர்கள்!! உங்களுக்கு எத்துனை துனிச்சல் இருந்தால் அடுத்தவன் நரகத்திற்கு போவான் என்று தீர்ப்பு சொல்ல!! கிறிஸ்துவின் நாமத்தை தூஷிக்கும் சபைகளில் ஒட்டிக்கொண்டு, ஒன்றான மெய் தேவனை கூறு போட்டு வியாபாரம் செய்துக்கொண்டும் அதினால் பலர் பிழைப்பு நடத்திக்கொண்டும் இருந்து தங்களை நீதிமான்கள் என்று எண்ணிக்கொண்டு இருப்பது அதிலும் பெரிய கொடுமை!! கிறிஸ்துவால் அனைவரையும் இரட்சிக்க முடியாது என்று சொல்லாமல் சொல்லும் நீங்கள் எல்லாம் ராஜியத்தில் கற்றுக்கொள்வீர்கள் என்று தேவனின் அன்பை தான் நாங்கள் வெளிப்படுத்துவோம்!! முடிந்தால் வசனத்துடன் விவாதம் செய்யவும், யாரையும் தீர்ப்பிடும் ஸ்தானம் எல்லாம் உங்களை போன்றோருக்கு சம்பந்தமே இல்லாதது!! முதலில் நீங்களே பரலோகத்திற்கு போவீர்களா என்று நிதானித்துக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//????? மனிதன் துங்கும் போது அவன் இருதயம் தூங்காது அவன் சாகும்போது துங்கும். சாவதும், துங்குவதும் ஒன்றா? தூங்கியது  போதும் சிக்கிரம் எந்திரிங்கப்பா!!//

நாங்கள் எல்லாம் எழுந்தாகிவிட்டது, தேவனே எங்களை உளையான சேற்றிலிருந்து தூக்கிவிட்டார்!! உங்களுக்கு கைய்யை நீட்டினால், இல்லை பரவாயில்லை, நாங்கள் குப்பையிலேயே இருந்துக்கொள்கிறோம் என்கிறீர்கள்!! என்ன செய்வது?!!

எழும்பவே முடியாமல் இருந்த மரணத்தை கிறிஸ்து வந்து நித்திரையாக மாற்றினார் என்பது எல்லாம் திரித்துவர்களுக்கு புரியாது!! தாங்கள் நீதிமான்கள் என்கிற ஆனவத்தில் இருக்கும் யாருக்கும் இது புரியாது!!

யோவான் 11:11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.

மரணமெல்லாம் நித்திரையாக மாறிவிட்டது என்று கூட தெரியாமல் இன்னும் தூங்கிக்கிட்டு இருக்கிறது புரியுது!!

தூங்கிறவனை எழுப்பலாம், ஆனால் திரித்து பேசும் திரித்துவர்கள் தூங்கிற மாதிரி நடிக்கிறார்களே............!!

//சரி அதுனாலே என்ன? எல்லாரும் பரலோகம் (அல்லது பரதிசு..கொடுமை) போவர்கள் என்று சொல்லிவிடலாமா?//

திரித்துவர்களுக்கு தேவ அன்பு என்னவென்றே தெரியாது!! ஒன்றான மெய் தேவனை மூன்றாக கூறு போட்டு வியாபாரம் செய்வோர்க்கு தெரிந்த இரண்டு இடங்கள், ஆனவம் பிடித்த சுயநீதிமான்கள் செல்லும் இடமான இவர்களுக்கு தெரிந்த பரலோகம், மற்ற அனைவரையும் கிறிஸ்துவால் இரட்சிக்க முடியாது என்று அவர்களை அனுப்பும் இடமான "நரகம்"!!

மரித்து கொஞ்ச நாட்கள் ஆவி தேவனிடத்தில், அல்லது ஆபிரகாமின் மடிக்கு, (ஏனென்றால் இது தான் உண்மை நிகழ்சியாச்சே) செல்லுமாம்!! அப்படி என்றால் ஆபிரகாமின் ஆவி எங்கே போயிருக்கும்!! அவர் மட்டும் சரீரத்துடன் எங்கே தான் உட்கார்ந்திருக்கிறாரோ!! எதைற்குமே விளக்கம் இல்லாத திரித்து பேசும் திருத்துவர்கள் வியாபார கூட்டத்திடம் வேறு என்னத்தை எதிர்ப்பார்க்க முடியும்!!

//சாத்தான் யாரையும் நரகத்தில் தள்ளுவது இல்லை மறுபடி மறுபடி ஏன் நாங்கள் சொல்லாததை உளறிக்கொண்டு திரிகிறீர்கள்? நரகத்தில் தள்ளுவது தேவனே!//

இயேசு கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லாரும் இரட்சிக்கப்பட முடியாது!! தேவன் தான் நரகத்தில் தள்ளுகிறார்!! நல்ல போதனைகள் தான்!! ஜமாயுங்கள்!!

//வசனம் சாகும் என்று சொன்னால் சாகும். நீங்க இரட்சிக்கப்படுவது ரொம்ப கஷ்டம் என்று நான் சொல்லமாட்டேன். கடைசிவரை இதை தொடர்ந்தால் நீங்கள் இரட்சிக்கபடவே மாட்டீர்கள் !//


வசனம் தான் சொல்லுதே!! உங்கள் போதகர்கள் தான் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!! பிழைப்பு போய்விடுமே!!

இயேசு கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று போதிக்கும் நீங்கள் ஏது வேண்டுமென்றாலும் சொல்லலாம்!! அதை கேட்க்கவும் ஒரு பெரிய கூட்டம் இருக்கும்!! இது நீங்கள் கிறிஸ்துவை அறிந்திருக்கும் இலட்ச்சனம்!!

கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லா மனுஷர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது நாங்கள் போதிக்கிறோம், அந்த எல்லாரிலும் நாங்களும் இருக்கிறோம் என்று எங்களை இரட்சிக்க வல்லமையுள்ள தேவன் மேலும், அவரின் குமாரன் சிந்திய இரத்தத்தின் மேலும் விசுவாசம் வைத்திருக்கிறோம்!!

நீங்கள் என்ன பரலோக கமிட்டியின் புதிய உறுப்பினரா!! ஏனென்றால் ஏற்கனவே நிறைய திரித்துவர்கள் அடிக்கடி அங்கே போய் வந்து புதிய புதிய கோட்பாடுகளை உறுவாக்கியிருக்கிறார்கள்!! நாங்கள் இரட்சிக்கபடவே மாட்டோம் என்று நீங்கள் வைத்திருக்கும் தேவனும், நீங்கள் போவோம் என்று நம்பும் பரலோகத்தில் இருப்போரும் போட்ட தீர்மானமா!! போய் வேதத்தை ஒழுங்காக வாசியுங்கள்!! தேவன் தன் திட்டங்களை அன்புடன் விளக்கியிருக்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//எங்கே தேவன் மூன்றாக இருக்கிறார் என்று ஒரு வசனம் காண்பியும் பார்க்கலாம்?//
 
எங்கே ஈசாய் சாலமோனுக்கு தாத்தா என்று ஒரு வசனம் காண்பியுங்களேன்?

இதை தான், தேவனை அறிகிற அறிவில்லாதவர்கள் என்று சொல்லுவது!! தேவன் மூன்றாக இருக்கிறார் அல்லது நீங்கள் எழுதுவது போல் மூன்று ஆளத்துவங்களில் இருக்கிறார் என்பதற்கு வசனம் கேட்டால், ஈசா சாலமோனுக்கு தாத்த்தாக்கு வசனம் கேட்டு, முலங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போட்டுக்கிட்டு..............

ஈசாய் சாலமோனுக்கு தாத்தாவா என்பது விசுவாசத்திற்கு உதவாது, முதலில் தேவனை தெரிந்துக்கொள்ளுங்கள்!! வேதத்தில் தேவனுக்கு நீங்கள் வைத்திருக்கும் இடம் என்னவென்று உங்கள் பதிலே காட்டுகிறது!!

//அது யோபு வாழ்ந்த உத்ஸ் தேசம் ஆபிரகாம் (அல்லது முற்பிதாக்கள்) வாழ்ந்த காலத்திய தேசம் என்பதால் கொள்ளப்பட்ட ஒரு அனுமானம். எப்படி இருந்தாலும் கிறிஸ்துவிற்கு முன்பும் வாழ்ந்து கிருஸ்துவை ஏற்று கொண்டு மரித்த ஜனங்களை நாம் வேதத்தில் காணமுடியும்.//

அனுமானத்தில் தானே வேதத்தையே வாசிக்கிறீர்கள்!! ஆகவே தானே இந்த காலத்து நீதிமான்களும் பரிசுத்தவான்களும் (என்ன கண்றாவியோ) எழுதிய புத்தகங்களை வேதத்தைவிட அதிக மதிப்பு கொடுத்து வாசித்து வருகிறீர்கள்!! அனுமானத்தில் பிறந்த உபதேசம் தானே "திரித்துவம்"!! அனுமானத்தை வைத்து கிறிஸ்துவிற்கு முன்பு யோபு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார் என்று சொல்லி அதை வேதத்தில் வேறு கானமுடியும் என்று சொல்லியிருப்பது அதை விட கொடுமை!!

//கிருஸ்துவை ஏற்று கொள்ளாமல் யாரும் 'நற்கிரிகை' செயமுடியாது.//

அப்படியா!! கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், ஏன் தேவனே இல்லை என்று சொல்லுபவர்கள் உங்களை விட அதிகமாக நற்கிரியை நடப்பித்து வருகிறது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போல்!! எல்லா மனிதர்களும் தேவ சாயலில் இருப்பதால் தேவனின் பன்புகள் எல்லா மனிதர்களிடமும் காணப்படுகிறது!!

இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். (யோவான் 6 :29 )

தப்பான ஒரு மொழிப்பெயர்ப்பை தளங்களில் பதியும் முன் தயவு செய்து ஆறாயந்துவிட்டு போடுங்கள்!! பரிசுத்த வேதாகமம் அநேக பிழைகள் நிறைந்த மொழிப்பெயர்ப்பு, இந்த ஒரு மொழிப்பெயர்ப்பை மாத்திரம் வைத்து உங்கள் விசுவாசத்தை வளர்த்தீர்களென்றால் தவறாகிவிடும்!! நீங்கள் கொடுத்த வசனம் பரிசுத்த வேதாகமத்தின்படி, "மனிதர்கள் தேவனை விசுவாசிப்பது தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது" என்கிற அர்த்தம் கொண்டிருக்கிறது!! தவறு, வசனம் எப்படி இருக்கு தெரியுமா,

அவர் அனுப்பினவரை நாம் ஏற்றுக்கொள்வது தேவனால் உண்டான காரியமாக இருக்கிறது என்பது தான் சரியான மொழிப்பெயர்ப்பு!! என்னமோ தேவனை நம்புவது உங்களால் ஆன காரியம் என்று நினைத்தீர்களா!!

KJV with Strong's
John 6:29. Jesus answered and said unto them This is the work of God that ye believe on him whom he hath sent

Darby Translation (DARBY)
John 6:29. Jesus answered and said to them, This is the work of God, that ye believe on him whom *he* has sent.

இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பது தேவனின் செயலாக இருக்கிறது என்று இருக்கவேண்டிய வசனம், மனிதனின் செயலை பிரதானப்படுத்தி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது!! தேவனை அறிகிற அறிவு இல்லாதவரை வசனத்தை அறிகிற ஆர்வம் இருக்காது!! அனுமானத்திலேயே காலத்தை ஓட்ட வேண்டியது தான்!!

ஜான் அவர்களே, தயவு செய்து வசனத்தை ஆறாய்ந்து பார்ப்பதை கேலியும் கிண்டலும், நையாண்டியாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம்!! இத்துனை விபரீதமாக ஒரு மொழிப்பெயர்ப்பு வைத்துக்கொண்டு அதை மாத்திரம் நம்பி போதிப்பது சரி இல்லை!! மற்றப்படி உங்கள் விருப்பம்!!

//யாரையும் Please பண்ண வேண்டும் என்று நான் சொல்லுகிறது இல்லை வேதம் சொல்லுகிறதையே நம்புகிறேன், சொல்லுகிறேன். இரட்சிக்கபடுகிறவர்கள் எப்போதும் தேவன் பேரில் விசுவாசம் வைத்து அந்த விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டர்கள்.//

அந்த விசுவாசமே தேவன் தானே தருகிறார்!! மனிதனின் சொந்த முயற்சியிலா விசுவாசம் வருகிறது!! அப்படி என்றால் வசனம் தவறாகிவிடும்!! விசுவாசத்தை ஆரம்பிப்பதும் முடித்து வைப்பதும் கிறிஸ்து!! அப்படி என்றால் தேவனே சிலருக்கு விசுவாசத்தை கொடுத்துவிட்டு மற்றவர்கள் எல்லாம் அழிந்துபோகட்டும் என்று அவர்களுக்கு விசுவாசத்தை கொடுப்பதில்லையா!! விசுவாசம் என்பதே ஒரு ஈவு என்று வேதம் சொல்லும் போது விசுவாசத்தினால் தான் இரட்சிக்கப்படுவார்கள் என்பது தேவனின் வசனங்களை பொய்யாக்குவதாகும்!! யாரையும் ப்ளீஸ் பண்ண வேண்டும் என்கிற அவசியம் யாருக்கும் இல்லை, ஆகவே தான் இருப்பதை இருப்பதாக சொல்லி நாங்கள் அநேகருக்கு பகைஞராக இருக்கிறோம்!!

//நான் தான்! சிலுவை என்பது இயேசுவை விசுவாசிப்பதின் நிமித்தம் மற்றவர்களால் வரும் எதிர்ப்பு மற்றும் பாவத்தை வெறுப்பதால் வரும் நஷ்டம் . உதாரணம் எனக்கு சிலுவை நீங்கள்தான் //

இயேசுவை விசுவாசிப்பதின் நிமித்தம் நமக்கு வரும் எதிர்ப்புகள் சிலுவை கிடையாது!! இயேசுவின் நிமித்தம் எல்லாவற்றையும் விட்டு விட்டு, தன் விட்டையாவது, உறவினர்களையாவது, இப்படி எல்லாவற்றையும் விட்டு விட்டு இயேசுவிற்கு பின் செல்பவர்கள், அதன் பின் அதினால் ஏற்படும் நிந்தைகள் தான் சிலுவை!! சும்மா வசனத்திற்கு அர்த்தம் தெரியாமல் அர்த்தம் கொடுத்துவிட்டு நாலு ஜனங்களை பகைச்சுக்கிறது எல்லாம் சிலுவையே கிடையாது!! நாங்கள் உங்களை சிலுவையாக எண்ணுவது கிடையாது, நீங்களும் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிந்துக்கொள்வீர்கள் என்று தான் சொல்லுகிறோம்!!

//உங்க வாத்தியார் ரசலின் 'நற்செய்தியை' பவுல் பேலிக்சிடம் சொல்லியிருந்தால் அவன் ஏன் பயப்பட வேண்டும்.  சொதப்பாம சொல்லணும் ஓகேவா?//

திரித்து பேசும் உங்கள் திரித்துவ வாத்திமார்கள் எல்லாருக்கும் நற்செய்தி அறிவித்துவிட்டார்களா!! உங்கள் பக்கத்து வீட்டுக்காரனுக்கு சுவிசேஷம் சொல்லு அவர்களை கிறிஸ்தவர்களாக மாற்றி விட்டீர்களோ, உங்கள் தெரு உங்களால் கிறிஸ்தவ தெருவாகிவிட்டதோ!! தேவனே ஒருவனுக்கு விசுவாசத்தை கொடுக்காவிட்டால், நீங்கள் எல்லாம் உங்கள் வீட்டின் மரத்தில் தலைகீழாக தொங்கி சுவிசேஷம் சொன்னாலும் ஒருவனும் மாறபோவதில்லை!! ரஸ்ஸல் சொன்னது எல்லாம் வேதத்தில் இருந்து தான், உங்களை போல் அனுமானத்தில் எல்லாம் விசுவாசத்தை வளர்க்கவில்லை!! நான் ரஸ்ஸலை பின்பற்றுகிறேன் என்று இதற்கு அர்த்தம் இல்லை, நான் உங்களை தேவனை மூன்றாக கூறு போட்டு வியாபாரம் செய்யும் திரித்துவர்களை எதிர்க்கிறேன் என்பதற்காகவே இதை சொல்லுகிறேன்!! நீங்கள் திரித்துவம் பேசுகிரீர்கள், போப் பெனெடிக்ட் திரித்துவம் பேசுகிறார், அப்படி என்றால் போல் பெனென்டிக்ட் உங்கள் வாத்தியாரா? சொதப்பாம சொல்லணும், ஓகேவா??!!

அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான் (அப்போஸ்தலர் 24:25 )

ஏனென்றால் தேவன் அவனை அப்பொழுது விசுவாசிக்கும்படியாக நியமிக்கவில்லை, ஃபெலிக்ஸும் ராஜியத்தில் தெரிந்துக்கொள்வான்!! ஆனால் உங்கள் திரித்துவ ஊழியர்கள் இப்படி எத்துனை மந்திரிகளை எம்.எல்.ஏ க்களை பார்த்து தைரியமாக சொல்லிவிட்டார்களாம்!! பேடி பசங்க!! பவுல் சொல்லியதை எல்லாம் காட்டி இன்றைய ஊழியர்களின் தரத்தை உயர்த்த நினைக்கவேண்டாம்!! உண்மை இல்லாததால் இவர்களுக்கு தைரியமில்லை!!! நீதி, இச்சையடக்கம் இல்லாதவர்கள் இன்றைய ஊழியர்கள்!! தயவு செய்து இவர்களை பெரிய ஆளாக்க வேண்டாம்!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/ஒருத்தனுக்கு செய்தியே கொடுக்காமல் தண்டிக்கும் ஒரு அநீதியின் தேவனையா வேதம் சொல்கிறது?//

 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. (ரோமர் 1 : 19 - 20 )//

அவர்களுக்கு வெளிப்படுத்தின தேவன் இப்போதும் எல்லாருக்கும் வெளிப்படுத்தியிருக்கலாமே. முழுவதும் வாசிங்க சகோதரரே

19. தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

20. எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.

21. அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.

22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.

24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார்.

25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

26. இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்...

28. தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்.

தேவனே அவர்களை கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். அவரே ஒப்புக்கொடுத்துவிட்டு அவரே தண்டிப்பாரோ?

25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.

சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்துக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவம். 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அவர் அனுப்பினவரை நாம் ஏற்றுக்கொள்வது தேவனால் உண்டான காரியமாக இருக்கிறது என்பது தான் சரியான மொழிப்பெயர்ப்பு!! என்னமோ தேவனை நம்புவது உங்களால் ஆன காரியம் என்று நினைத்தீர்களா!! //
 
நான் அப்படி நினைக்கவில்லை. தேவனை விசுவாசிக்கும் படி கட்டளை கொடுக்கப்பட்டு உள்ளது ஆனால் அந்த விசுவாசம் தேவனால் உண்டாகிறது. அப்படியானாலும் விசுவாசிக்காமல் ஒருவன் செய்கிற எந்த கிரியையும் நற்கிரியை அல்லது தேவனுக்கு ஏற்கும் கிரியை அல்ல. மேலும் தமிழ் வேதாகமம் மட்டுமே நான் வாசிக்கிறேன் என்பது உங்களுடைய அறியாமையையும், பெருமையையும் காட்டுகிறது. ஏன் தமிழ் வேதாகமம் அவ்வளவு கேவலமா?

ஜான் அவர்களே, நான் தமிழ் வேதாகமத்தை கேவலம் என்று விவாதிக்கவில்லை, மாறாக அதில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் பல வசனங்கள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்று தான் சொல்லுகிறேன்!! மேலும் நீங்கள் நினைக்கவில்லை என்பதற்காக தேவனின் வசனம் மாறிவிடாது!! நீங்கள் யோவான் 6:29ன் படி தேவனுக்கு அடுத்த கிரியைகள் என்று எழுதியதால் அதை சரியான முறையில் விளக்கியிருக்கிறேன்!! சுய கிரியைகள் அல்லது சுயநீதிமான் என்று என்னுவது தேவனுக்கு அறுவருப்பு!! ஏனென்றால் நாம் எதை கிரியைகள் என்று என்னுகிறோமோ, அது தேவனுக்கு முன்பாக கந்தையாக இருக்கிறதாம்!! நீங்கள் தமிழ் வேதாகமத்தை மாத்திரம் தான் வாசிக்கிறீர்கள் என்று சொல்லுவது என் அறியாமையாக இருக்கலாம், ஆனால் எந்த விதத்தில் "பெருமையை" காட்டுகிறது என்று எனக்கு புரியவில்லை!!

//விசுவாசத்தால் நிதிமான் பிழைப்பான் என்பது பொய்யா? தேவனுடைய ஈவாக இருந்தாலும் விசுவாசம் இல்லாமல் ஒருவனும் இரட்சிக்கப்படமாட்டான்.//

ஐய்யா அந்த ஈவு எல்லாருக்கும் இல்லை என்பது தான் வேதம் சொல்லுகிறது!! விசுவாசத்தை கொடுக்காமல் ஏன் விசுவாசிக்கவில்லை என்று நிச்சயமாக தேவன் கேட்க மாட்டார்!! அவரின் வழிகளும் அவரின் எண்ணங்களும் மனிதனை போல் கீழ்த்தரமானது கிடையாது, அது உயர்வானது!!

//பேலிக்சை பார்த்து பவுல் நீ ராஜ்யத்தில் தெரிந்து கொள்ளுவாய் என்று சொன்னவுடன் அவன் பயந்து விட்டானா??? ம்ம்ம்....நீங்க அப்படி சொல்லி யாராவது பயந்து இருக்கிறார்களா? ராஜ்யத்தில் தெரிந்து கொள்ளுவதற்கு என்ன பயம் விளக்குவீர்களா?//

நாங்கள் அப்படி சொல்லி யாரும் பயப்படவில்லை, ஏனென்றால் அப்படி ஒன்று இருப்பதாக அவர்கள் நம்புவதில்லை!! வசனத்தை காட்டிலும் விசிட் அடித்து வந்தவர்களை நம்புகிறது கிறிஸ்தவம்!! என்ன செய்ய‌!!!

//நானும் ரொம்ப நாளாய் கேட்கிறேன். "நித்திய ஆக்கினை" என்றால் என்ன என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்....ஒழுங்கா கேள்வியை வாசிங்க நான் "நித்திய அக்கினி" பற்றி கேட்க வில்லை "நித்திய ஆக்கினை" பற்றி கேட்கிறேன்.

அன்னை தெரசாவிற்கு எப்போது பாபிலோனிய வேசிசபையில் இருந்ததற்கான தண்டனை கிடைக்கும்? வரப்போகிற ராஜ்ஜித்திலா? ஓ ஒருவேளை ராஜ்யத்தில் கற்று கொள்ளுவது தான் நித்திய ஆக்கினையோ????

எங்களுக்கு எப்ப நித்திய ஆக்கினை கிடைக்கும்??

பெரேயன் குழு பரலோகம் போகுமா அல்லது பரதீசிலே (இங்கே பூமியிலே) இருக்குமா ?

உங்களுடைய முதாதயர்களுக்கு சுவிசேஷம் சொன்ன மிஷினரிகள் செய்தது தவறா அல்லது சரியா?//

முட்டாள்த்தனமான கேள்விகளா, அல்லது விரக்தியா!! ஆக்கினை என்றால் சிட்சை!! இங்கே இப்பொழுது தெரிந்துக்கொள்ள மறுப்பவர்கள் சிட்சிக்கப்பட்டு அதன் பின் ராஜியத்தின் அறிந்துக்கொள்வார்கள்!! பெரேயன் குழு பரலோகம் போகும் என்று ஒரு போதும் ஒரு பதிவிலும் பதியவில்லை!! எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது எங்கள் போதனை, பரலோகம் கூட்டி செல்வது அவரின் சித்தம், எங்களுக்குள் அது நியமிக்கப்பட்டிருந்தால் அதை உங்களால் தடுக்க முடியாது என்பதை மாத்திரம் சொல்லிக்கொள்கிறேன்!!

முதாதயர்களுக்கு வேதப்புத்தகம் தரப்பட்டிருக்கிறது, சுவிசேஷம் சொன்னார்கள் என்பதெல்லாம் பொய்!! நரகத்தை காட்டி பயப்படுத்தி கிறிஸ்தவராக இருப்பது ஒன்றும் சுவிசேஷம் கிடையாது!! மிஷனரிகள் சேவைகள் செய்தார்கள்!!

என்ன திடீரென்று அன்னை தெரசாவின் மீது அத்துனை கரிசனம்!! ஓ பாபிலோனிய சபைகள் எல்லாம் ஒன்று சேரும் காலமாக இருப்பதாலா??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நானும் ரொம்ப நாளாய் கேட்கிறேன். "நித்திய ஆக்கினை" என்றால் என்ன என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்....ஒழுங்கா கேள்வியை வாசிங்க நான் "நித்திய அக்கினி" பற்றி கேட்க வில்லை "நித்திய ஆக்கினை" பற்றி கேட்கிறேன்.

அன்னை தெரசாவிற்கு எப்போது பாபிலோனிய வேசிசபையில் இருந்ததற்கான தண்டனை கிடைக்கும்? வரப்போகிற ராஜ்ஜித்திலா? ஓ ஒருவேளை ராஜ்யத்தில் கற்று கொள்ளுவது தான் நித்திய ஆக்கினையோ????

எங்களுக்கு எப்ப நித்திய ஆக்கினை கிடைக்கும்??

பெரேயன் குழு பரலோகம் போகுமா அல்லது பரதீசிலே (இங்கே பூமியிலே) இருக்குமா ?

உங்களுடைய முதாதயர்களுக்கு சுவிசேஷம் சொன்ன மிஷினரிகள் செய்தது தவறா அல்லது சரியா?//

முதலில் 'நித்திய' என்ற வார்த்தை ஆங்கில என்ற பதம் மூல பாஷையில் இல்லை என்பதை அறிக. (ஓ உங்களுக்குத்தான் அது தேவையில்லையோ, யார் எப்படி மொழிபெயர்த்திருந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வீர்களே) ஆக்கினை என்ற தமிழ் வார்த்தையை நான் வேதாகமம் தவிர வேறெங்கும் கேள்விப்பட்டதே இல்லை. அது தண்டனையைக் குறிக்கலாம். தண்டனை என்பதே குறிப்பிட்ட கால கட்டத்துக்குள்தான் இருக்கவேண்டும், சாகும்வரை தண்டனை என்றால் கூட அதுவும் காலத்துக்குட்பட்டதே. 

பாபிலோனிய வேசி சபைக்கு தண்டனை உண்டு என்று நாங்கள் எப்போதையா சொன்னோம்?

உலகத்திலேயே கேடுகெட்டவர்கள்கூட‌ ராஜ்ஜியத்தில் கற்றுக்கொண்டு நித்திய ஜீவனை அடைவார்கள் என்றுதானே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

பாவியான மனிதனுக்குக் கிடைக்க வேண்டிய மரணதண்டனையைத்தான் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டு மரணத்தை ருசிபார்த்தாரே. அன்னை தெரசாவுக்கும், காந்திக்கும், ஹிட்லருக்கும், வீரப்பனுக்கும் ராஜ்ஜியத்தில் கற்றுக்கொடுக்கப்படும். என்ன அன்னையும், காந்தியும் எளிதில் கற்றுக்கொள்வார்கள் மற்ற இருவருக்கும் கொஞ்சம் சமயம் தேவைப்படும். 

உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே நித்திய ஆக்கினை கிடையாது.

பெரேயன் குழு பற்றி எனக்குத்தெரியாது. நான் முழுநிச்சயமாய் பரலோகம் போகப்போவதில்லை. அந்தத் தகுதியுடைய, பவுல் போல் வாழும், யாரையும் நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.  

"பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் என்னிடத்தில் வாரான்" என்பதால் யார் பரலோகத்துக்கு யார் பூமிக்கு என்று தேவன் முன்குறித்திருக்கிறார். தலையாகிய கிறிஸ்துவுக்கு அப்படியே கீழ்ப்படியும் சிறு மந்தை மட்டுமே பரலோகத்தின் முதல் வாசஸ்தலத்துக்கு (கிரேடு) தகுதியாகும். 

ஆனால் இந்தப் பூமியிலே உயிர்த்தெழுந்து என்னுடைய சக உடன்பிறப்புக்களான எல்லா மனிதர்களுடனும் நித்திய நித்தியமாக வாழுவேன் என்ற விசுவாசம் மலைபோல் உள்ளது.

இந்த 'ராஜ்ஜியத்தின்' சுவிசேஷத்தை யாரும் எந்த மூதாதையரிடமும் சொன்னதாகத் தெரியவில்லை. வேறொரு சுவிசேஷம் இல்லை. ஆகவே அது சரியா தவறா என்ற கேள்விக்கே இடமில்லை.

பிதா யார் குமாரன் யார் என்று சொல்லத்தெரியாதவன் என்ன 'சுவிசேஷம்' சொல்லி என்ன பயன்?



-- Edited by soulsolution on Saturday 9th of July 2011 11:57:17 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/என்னுடைய கேள்வி அப்ப முன்குறிக்காதவர்களை 'நரகத்துக்கு' முன்குறித்திருக்கிறாரா?//

 கட்டாயமாக!

 தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். ( I தெசலோனிக்கேயர் 5:9 )

 //அப்ப யார் யாருக்கு பரலோகம் யார் யாருக்கு நரகம் என்று தேவனே முன்குறித்துவிட்டபடியால் இங்கே நமக்கென்ன வேலை. தேவன் முன்குறியாதவர்களை யாரும் பரலோகத்துக்குத் தகுதியாக்க முடியுமா?//

 தேவன் யாரை முன்குறித்தார் என்று நமக்கு தெரியாதே!!//

ஓஹோ தேவன் யாரை முன்குறித்தார் என்பதைக் கண்டுபிடிக்கத்தான் இத்தனை பிரயாசமோ? இது தெரியாமப் போச்சே! சரி கண்டுபிடிச்சி என்னபண்ணப்போகிறீர்கள்? அல்லது நீங்கள் கண்டுபிடிக்காவிட்டால் அவர் பரலோகம் போகும் வாய்ப்பை இழந்துவிடுவாரா?

ஒன்று செய்யுங்கள், இதுவரை தேவன் யார் யாரை பரலோகத்துக்கென்று முன் குறித்திருக்கிறார் (உங்களுக்குத் தெரிந்தவர்கள்) என்று பதிய முடியுமா? உங்கள் தளத்திலிருந்தே ஆரம்பிக்கலாம்...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//எனக்கு தெரியாது!  எனக்கு என்ன தெரியவேண்டுமே அதை தேவன் தெளிவாய் எழுதி வைத்து உள்ளார். காணாதவைகளில் நுழைகிற இழிவான பழக்கம் எனக்கு இல்லை //

தேவன் எழுதித்தந்த மொழியில் உள்ளப்படியே வாசிக்க சொன்னால் உங்களுக்கு வெறுப்பாக இருக்கிறது!! நீங்கள் யோவான் 6:29ல் உள்ள வசனத்தை எப்படி தவறாக மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் என்று சொன்னால், நான் அப்படி நினைக்கவில்லை என்று தட்டி கழிக்கிறீர்கள்!! பிறகு என்ன, நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அப்படிபட்ட வேதத்தை நீங்கள் வாசித்துக்கொள்ளுங்கள்!! காணாதவைகளில் நுழைகிறதினால் தானே இல்லாத "நரகத்தில்" வெந்து போவார்கள் என்றும், பரலோகத்தில் எனக்காக வீடு கட்டுகிறார்கள், நான் பார்த்து வந்தேன் என்று சொல்லுபவர்களை பிரபலமான ஊழியர்கள் என்றும் அவர்கள் சொல்லுவதை வைத்து வேதத்தை புரிந்துக்கொள்ளுகிறீர்கள்!! இதெல்லாம் தான் காணாதவைகளில் நுழைவது!!

இதோ யோவான் 6:29, தேவன் கொடுத்த மொழியில், இதில் தேவனுக்கடுத்த கிரியை என்று எங்கே அய்யா உள்ளது?? தேவனுடைய செயல் என்பதை தேவனுக்கு அடுத்த கிரியை என்று மொழிப்பெயர்த்து அதை வைத்து பிரசங்கிப்பது சரியா?? இது காணாதவைகளில் நுழைகிற இழிவான பழக்கம் தானே!!

 

Jesus answered and said unto them This is the work of God that ye believe on him whom he hath sent


GreekTransliterationStrong'sMorphologyEnglish
ἀπεκρίθηapekrithē611V-ADI-3Sanswered
o3588T-NSMthe
Ἰησοῦςiēsous2424N-NSMJesus
καὶkai2532CONJand
εἶπενeipen2036V-2AAI-3Ssaid
αὐτοῖςautois846P-DPMto them
τοῦτοtouto5124D-NSNThis
ἐστινestin2076V-PAI-3Sis
τὸto3588T-NSNof
ἔργονergon2041N-NSNwork
τοῦtou3588T-GSMthe
θεοῦtheou2316N-GSMGod
ἵναina2443CONJthat
πιστεύητεpisteuēte4100V-PAS-2Pyou believe
εἰςeis1519PREPon
ὃνon3739R-ASMwhom
ἀπέστειλενapesteilen649V-AAI-3She has sent
ἐκεῖνοςekeinos1565D-NSMwhom


அதாவது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது, அவர் அனுப்பியவரை நீங்கள் விசுவசிப்பது தேவனின் செயல்!! ஆனால் நம் மொழிப்பெயர்ப்பை வாசித்தோமென்றால், அவரை விசுவாசிப்பது தேவனுக்கு பிடித்த கிரிய என்று இருக்கும்!! இதற்கு தான் ஆறாய வேண்டும்!! இதை நீங்கள் எப்படி வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளலாம்!!

 

 

//கிருஸ்துவை விட உங்களுக்கு உறவினர்கள் முக்கியம் என்று எனக்கு தெரியும். அப்படி தாயையும், தகப்பனையும் கிருஸ்துவை ஏற்று கொள்ள இடைஞ்சலை உண்டாக்கும் பட்சத்தில் அவர்களை  விட்டுவிடுவது தான் ராஜா சிலுவை!//

அதாவது அப்போஸ்தலர்களுக்கு மாத்திரம் தாய் தகப்பன் வேலை இவை எல்லாம் இடஞ்சலாக இருந்தது, அவர்கள் விட்டு விட்டு சிலுவையை ஏற்றுக்கொண்டார்கள், ஆனால் அதன் பின் நவீன போதகர்கள், தங்களை (கள்ள) அப்போஸ்ச்தலர்கள் என்று சொல்லிக்கொபவர்கள் யாருக்கும் இது போன்ற சிலுவையே இல்லையே!! இயேசு கிறிஸ்து சொன்னவுடன் "எல்லாவற்றையும்" விட்டுவிட்டு பின்பற்றிய சீஷர்கள் எங்கே, "எல்லாவற்றையும்" வைத்துக்கொண்டு நானும் சிலுவை சுமக்கிறேன் என்று சொல்லுபவர்கள் எங்கே!!

எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

இந்த விசுவாசமே உங்களால் (அதாவது நம்மை போன்ற மனிதர்களின் முயற்சியால்) உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு (Gift) என்று வசனம் சொல்லியும் அதை ஏற்றுக்கொள்ளாதது காணாதது துனிந்து நுழைவது தானே!! இந்த ஈவு அவர் யாருக்கு கொடுப்பார் என்பது அவரின் சித்தம்!!



-- Edited by bereans on Sunday 10th of July 2011 12:53:00 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard