kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது...!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பரிசுத்த ஆவி நம்மிடத்தில் வரும்போது...!!


வேத புத்தகத்தை வாசிக்கும் அநேகர், வேதத்தை வாசிக்கும் போது "பரிசுத்த ஆவியான தேவன்" என்கிற ஒரு தேவன் கூட இருந்தால் தான் வேதத்தின் இரகசியங்கள் புரியும் என்றும், "புதிய வெளிப்பாடுகளை" தந்து நமக்கு வேதத்தை விளக்குவார் என்றும் பிரசங்கித்தும் வருகிறார்கள்!!

இதற்கு ஆதாரமாக வேத புத்தகத்தை அல்ல பிரபலமான ஊழியர்கள் (!!) பெயரை சொல்லி, அவர்களுக்கு போதிக்கப்பட்டது போல் எனக்கும் வெளிப்படுத்துங்கள் என்று சொல்லுவார்கள்!! சாதுவிற்கு தரிசனமான தேவன் எனக்கும் தரிசனமாகவேண்டும் என்று ஜெபிப்பார்கள்!! தினகரனிடம் பேசிய தேவன் என்னிடத்திலும் பேச வேண்டும் என்று ஜெபிப்பார்கள்!!

வேதத்தில் கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்து பரலோகம் சென்ற பின் ஒரு முறை பவுலுக்கும் அதன் பின் யோவானுக்கு கடைசியான வெளிப்படுத்தல் கொடுக்கவே தரிசனமாகிறார், அதிலும் ஒருவர் மூன்று நாட்கள் குருடாகியும், மற்றொருவர் கிறிஸ்துவின் மகிமையை கண்டு செத்தவனை போல் விழுகிறார்!! இன்றைய ஊழியர்கள் யாரும் பவுலுக்கு தரிசனமானவர் அல்லது யோவானுக்கு வெளிப்பாடுகளை தந்தவர் எனக்கு தரிசனமாக வேண்டும் என்று கேட்கமாட்டார்கள், மாறாக வேதம் எழுதி முடித்து அதில் உள்ள பல கலப்படங்களை போதித்து பிரபலமாகிப்போன திரித்துவ போதகர்களிடம் வந்து பேசிய தேவன் தங்களிடமும் வந்து பேச வேண்டும் என்று சொல்லுவார்கள்!! அந்த தேவன் இவர்களிடத்தில் மூன்றாம் நாள் அல்லது தங்களை மேன்மைப்படுத்த, நான் 40 நாட்கள் இதற்காக உபவாசித்து, அந்த தேவனை கண்டேன் என்பார்கள், புதிய தீர்க்கதரிசனங்களை (ஜப்பானில் சுனாமி, ஆஃப்கானிஸ்தானில் பூகம்பம், யுத்தங்கள் போன்றவைகள் தான் இவர்களுக்கு தீர்க்கதரிசனங்கள்) கொடுத்து சபையில் பெயரும், கரண்சியும் சம்பாரிப்பார்கள்!!

உண்மையில் பரிசுத்த ஆவியான தேவன் என்கிற ஒருவர் வேதத்தை வாசிக்கும் போது நம்மிடத்தில் வருவதாக வேதம் சொல்லுகிறதா!! பலர் சொல்லுவார்கள் நான் இதை அனுபவித்திருக்கிறேன் என்று, ஆனால் அந்த அனுபவம் அவருக்கு வருவதற்கு இன்னோரு ஊழியர் தான் காரணமாக இருப்பாரே தவிர வேதம் இருக்க முடியாது!!

வேதத்தை வாசிக்கும் போது நமக்கு இருக்க வேண்டியது பரிசுத்தரின் சிந்தை, தாழ்மை, அறிந்துக்கொள்ளும் ஆர்வம், அதை தேவனிடத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் ஞானம்!!

தொடரும்....................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard