kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மிஷனரி ஊழியம்....


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
மிஷனரி ஊழியம்....


மிஷனரி ஊழியம்....

 

ஒரிஸாவில் கிறிஸ்துவை அறிவிக்கச்சென்ற ஒரு மிஷனரிக்கு நடந்த சம்பவத்தை பதித்து தன்னுடைய அனுதாபத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அதிலும் நம் பெயரை இழுத்துள்ளார். நம்மிடமிருந்து கிறிஸ்தவர்களை பாதுகாக்கிறாராம்.

ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலைப்பட்டதாம்.

போ அல்லது அனுப்பு என்ற வசனத்தில் இவர்களுக்கு மிகவும் பிடித்த பகுதி 'அனுப்பு'தான். போனால் என்ன ஆகும் என்று தெரிந்துதான் அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்கள்.

இதில் பலி ஆடுகள் அனுப்பப்படுபவர்கள்தான்.

நீ போகாவிட்டல் யார் போவார்கள்? என்று பிரெய்ன் வாஷ் செய்து நாங்கள் உங்களைத் தாங்குகிறோம் என்பார்கள். மற்றவர்களைக் அதற்காகக் கொடுக்கச்சொல்லி அப்பாவி ஜனங்களை பாஷைதெரியாத ஊருக்கு அனுப்பி மிஷனரிப்பட்டம் கொடுத்துவிடுவார்கள்.

இவர்கள் இங்கே மூணுவேளைக்கு நாலுவேளையாக மொக்கிவிட்டு, மதுபானம் பண்ணுவதைக் குறித்து அலசுவார்கள். 

அவ்வப்போது இம்மாதிரி வரும் சம்பவங்களுக்கு அனுதாபம் தெரிவித்து தங்களை மேன்மையான கிறிஸ்தவனாகக் காண்பித்துக்கொள்வார்கள்.

 

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இப்படி 'சுவிசேஷபணி'யில் இருக்கும்போது இப்படி சம்பவங்களிலிருந்து தப்பிவிட்டால் தேவன் அருமையாய் வழிநடத்தி ஊழியரைக் காப்பாற்றினார் என்ற சாட்சி செய்திவரும்.

இல்லாவிட்டால் இப்படி அனுதாபத்திற்கு அதை பயன்படுத்திக்கொள்வார்கள்.

 

இவர்களோ பக்கத்து வீட்டில்கூட கிறிஸ்துவை அறிவித்திருக்க மாட்டார்கள். இவர்கள் கூற்றுப்படி ஒரு தெருவுக்கு ஒரு 'கிறிஸ்தவன்' பொறுப்பெடுத்துக்கொண்டாலே இன்னேரம் பாதி இந்தியாவுக்கு இவர்கள் கூறும் நற்செய்தி போயிருக்கவேண்டும்.

 

நற்செய்தி என்னவென்றே தெரியாமல், நற்செய்தி அறிவிக்கிறார்களாம்.கோடாகோடிப்பேர் நரகத்துக்குப்போவது இவர்களுக்கு 'நற்செய்தி'!

 

என்ன கொடும சரவணன் சார்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஜோசப் //இவர்களுக்கு கிறிஸ்துவின் பணிக்காக ரத்தம் சிந்துதல் அவ்வலவு கேவலமாக இருக்கும், ஆனால் பாருங்கள் இந்த நற்செய்தியை அறிவித்ததனால் தான் இயேசுவின் சீடர்கள் அனைவரும் (யோவான் நீங்கலாக) படுகொலை செய்யப்பட்டனர். அனைவருக்குமே ரட்சிப்பு என அவர்கள் பிரசங்க்கித்திருந்தால் அவங்களை ஏன் சார் கொலை செய்திருக்கப்போறாங்க//

 

இயேசுகிறிஸ்து அவரது சீடர்களுக்கு நேரடியாகக் கொடுதத கட்டளையை அவர்களனைவரும் செய்து ரத்தசாட்சிகளாக மரித்தார்கள்.

அதை 2000 வருடம் கழித்துபடித்துவிட்டு ஏதோ இவர்களுக்கு சொன்னதாக எண்ணிக்கொண்டு போய் உதைவாங்கிவிட்டு அதை 'கிறிஸ்துவின் பணிக்காக' என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

வேதத்தில் யார் யாருக்கு என்ன சொன்னார்கள் என்பதை விளங்கிக்கொள்ளாமல் நடக்கும்போது இத்தகைய விபரீதங்கள்தான் நடக்கும். 

'நீ போய் செய்வதை சீக்கிரமாய்ச் செய்' இந்த வசனத்தைப்படித்துவிட்டு என்ன செய்வார்களோ? ஓ அது யூதாஸுக்குச் சொன்னது...

ஆனால் ...

 

18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

 

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

 

அவர்களை நோக்கிச் சொன்னதை இவர்கள் என்னை நோக்கி என்று வாசிப்பார்கள் போலும்.

சகல ஜாதிகளையும் முதலில் சீஷராக்கச் சொன்னார்.. இங்கே இன்னும் இவர்களே சீஷர்கள் ஆகவில்லை.... இவர்கள் போய்...

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி...  

முதலில் இவர்கள் கைக்கொள்கிறார்களா...?

 

லூக்கா 16:15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.

 

யோவான் 9:19 அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள்.

 

யோவான் 9:41 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

 

இந்த அவர்களை நோக்கி மட்டும் இவர்களுக்கல்ல, அந்த அவர்களை நோக்கி மட்டும் இவர்களுக்கு மட்டுமல்ல, இதை வாசிக்கும் எல்லாருக்கும் பொருந்தும்

 

யோசிக்கவே மாட்டார்கள் போல‌...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//எனது உறவினர் ஒருவர் தனது மகன் (அவன் எவ்வளவு திறமைசாலி என்பதை அவனோடு பழகியவர்களுக்கு தான் தெரியும்) மிஷனரியாக செல்ல ஆசைப்பட்டபோது எந்த தயக்கமும் இல்லாமல் அவனை அனுப்பிவைத்தார், இன்றைக்கு அவனை தேவன் எப்படியெல்லாம் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்பதை கண்கூடாக காண்கிறோம், அவனும் கோயம்புத்தூரு தாங்கோ...//

 

ஏ...யப்பா, கோயமுத்தூரில் ஒருத்தர்விடாமல் ஆத்தும ஆதாயம் செய்தாகிவிட்டது, கோயமுத்தூரில் எல்லாரும் பரலோகத்துக்குத் தகுதியாகிவிட்டார்கள் (எங்களைத் தவிர) ஆகையால் உறவினர் மகன் மிஷனரியாக வேறு ஊர் போய்விட்டானாக்கும்... அவ்வளவு தெறமையையும் அவர் விட்டுக்கொடுத்துவிட்டு ஆத்தும ஆதாயம் செய்கிறாராக்கும். அவன் ஏன் ஆசைப்பட்டான், பாவம் யார் அவனை மூளைச்சலவை செய்து ஆசைப்பட வைத்தார்களோ? 

 

ஆமா... மிஷனரிப்பணியை ஒர் உன்னதமான பணி என்று எக்கச்சக்க ஃபீலிங்கோட எழுதுறீங்க. நீங்கள் ஏன் ஆசைப்படவில்லை? போனா ஆண்டவர் கோச்சுக்குவாரோ? 

ஓஹோ நீங்கள்தான் நோகாம நோம்புக்கஞ்சி குடிச்சிட்டு 'அனுப்புற' ஊழியம் மட்டும் செய்வீர்களோ? 

மொதல்ல அவனவன் தெருவுல சொல்லவேண்டியதுதானே, ஏன் அடிச்சா வாங்கி ரத்தசாட்சியா மரிங்க‌... யாராவது வேணான்னு சொன்னாங்களா? 

 

"நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்" இதைச் செய்வதற்கு முதலில் ஒரு நபர் 'கட்டளையிட்ட யாவையும்' தான் கைக்கொள்ளவேண்டும். அப்படி 'யாவையும்' கைக்கொண்ட யாரயாவதுதான் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் ஒருத்தன்கூட அகப்படல, உங்களுக்கு அப்படி யாரையாவது தெரிந்தால் சொல்லுங்களேன், அந்தப் பரிசுத்த முகத்தைப் பாக்கனும்போல ஆர்வமா இருக்கு.

 

"இவனுகளே கைக்கொள்ள மாட்டானுகளாம்; இதுல அடுத்தவன கைக்கொள்ளச் சொல்லுவானுகளாம்" யாராவது இளிச்சவாயன் கிடைப்பான் உங்கள் உபதேசத்தைக் கேட்பதற்கு அவனிடம் போய் சொல்லுங்கள்.

 

சீஷர்கள் அதைக் கைக்கொண்டதால்தான் ஆண்டவர் அவர்களுக்கு அப்படிச் சொன்னார்;

அதெப்படி ஒருத்தன் சீஷனாகாமல் அடுத்தவன சீஷனாக்க முடியும்.

என்னய்யா எழுதுகிறீர்கள்?..



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//நீர் சாட்சியாய் வாழ்ந்து எத்தனை ஆத்துமாக்களை உமது சுற்றுப்புறத்தில் சீஷராக்கியிருக்கிறீர், அடுத்தவனை பத்தி பேச மட்டும் நாக்கு வெத்தல போட்ட மாதிரி இருக்காக்கும்

 

ஆத்தும ஆதாயம் செய்பவர்கள் ஞானவான்கள் என்ற வசனம் தெரியாதாக்கும் பெரிசா பேச வந்துட்டாரு.//

 

மறுபடியும் ஏ...யப்பா? ஆத்துமாக்கள் என்றால் என்னவென்றே தெரியாது, ஆதாயம் செய்கிறார்களாம். நாங்கள் ஒன்றும் பரிசுத்தவான் வேஷம் போட்டு அடுத்தவனைக் குழப்பி லோக்கல் சபைகளுக்கு ஆள் சேர்க்கும் மிஷனரிக் கூட்டம் அல்ல. அந்த அவசியமும் எங்களுக்கு இல்லை.

 

 தமிழில் வேதாகமம் பற்றி இன்னொரு பகுதியில் பதித்துள்ளேன். மிஷனரிகள் வந்து அப்படியே இந்தியா முழுவதும் இப்போது கிறிஸ்தவ நாடாக ஆகிவிட்டது, அவர்கள் வந்து 'ஸ்தாபித்த' சபைகளின் லட்சணம் உங்களுக்குத் தெரியுமே. பயன் என்ன‌? ஏன் சார்?

 

நண்பர் சொன்னது போல உங்கள் அகராதிப்படி மிஷனரி ஊழியம் அப்போஸ்தலருக்கும், சீஷருக்கும் கொடுக்கப்பட்டது. இங்கே நேரத்தை வீணடிக்கும் சமயத்தில் உங்கள் பக்கத்து வீட்டில் ஆத்தும ஆதாயம் செய்திருக்கலாம். ஏன் உங்கள் தெருவிலுள்ளவர்கள் நரகத்துக்குப்போனால் பரவால்லயா?

 

ஆத்தும ஆதாயம் செய்பவன் ஞானவான் என்ற வசனம் காண்பிக்கவும்.

ஆத்துமா என்பதற்கும் விளக்கமளித்தால் தேவலாம்....

நான் ஏற்கனவே கேட்ட 'இதுவரை கேள்விப்படாதவர்கள் கதி'?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இவர்கள் மூலமாக மட்டுமல்ல எல்லா பாஷைகளிலும்தான் பைபிள் வந்திருக்கிறது வந்துகொண்டிருக்கிறது. ஆறுமுக நாவலர்என்ற இந்துமத பண்டிதர்கூட‌ மொழிபெயர்த்ததாக சரித்திரம் சொல்கிறது. பணத்தைக் கொடுத்தால் இன்னும் நேர்த்தியாக வேதத்தை மொழிபெயர்க்க நிறைய PhD க்கள் உள்ளனர். ஏன் இன்று மிகப்பிரபலமாக இருக்கும் NIV ஆங்கில மொழிபெயர்ப்புக்குழுவில் ஆத்திகர்கள் கூட இடம் பெற்றுள்ளனர்.

வில்லியம் கேரி கல்கத்தா போய் இன்று கல்கத்தா முழுவதும் கிறிஸ்தவமயமாக ஆகியிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.... 

இன்று அந்த மிஷனரிகளை அனுப்பிய நாடுகளே மோசம்போய்க் கொண்டிருப்பது கண்கூடு. இத்தனை மிஷினரிகள் வந்து என்ன புண்ணியம், 99.9 சதம் நரகத்துக்குப்போகிறார்களே(இல்லை என்று சொல்லமுடியுமா?). அதற்கு ஏன் இந்தப்பாடு?

 

சுவிசேஷம் கேள்விப்படாதவர்கள் நிலை என்ன என்று கேட்டால் ஏதோ காதே கேட்காதமாதிரி நடிக்கிறீர்களே நடிப்பில்கூட PhD பட்டம் வாங்கியிருக்கிறீர்களா?

 

இரட்சிப்பு இலவசம்; ஆகவே எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று சொன்னனால் உமக்கேன் எரிகிறது. 

 

ஆத்துமா பற்றி கொல்வின் வசந்தகுமார் எடுத்த வாந்தியை அப்படியே கக்கியிருகிறார். 'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்'  'நீ சாகவே சாவாய்' மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்' என்று வசனம் சொன்னால் இவர் பிசாசு சொன்ன நீங்கள் சாகவே சாவதில்லை என்பதற்கு வக்காலத்து வாங்குகிறார். கிறிஸ்து தன் ஆத்துமாவை மரணத்திலூற்றினார் என்பது எப்படி? ஆத்துமாவாகவே எல்லாரும் இருந்துவிட்டுப்போகலாமெ எதற்கு மீண்டும் சரீர உயிர்த்தெழுதல். 

மரணம் என்ற விஷயத்தில் தெளிவில்லாதவரை உங்களை யாராலும் திருத்த முடியாது....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எங்களோடு ஒத்துப்போகாவிட்டால் எங்களுக்கு ஒரு மயிர்கூட நஷ்டம் கிடையாது. உண்மையில் அதிக வசனங்களைத் தேடி இன்னும் அதிகமாய் சத்தியத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறோம். மேலும் நம் வாதங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நடுநிலையாளர்களில் யாரேனும் ஒருவருக்கு நாங்கள் சொல்வது சரியென்று தோன்றும் பட்சம் வெற்றியே! 

வேசி மார்க்கத்திலிருந்து துருபதேசத்திலிருந்து வெளியேறுவது அத்தனை சுலபமில்லை.....

 வசனம் பதியச் சொன்னால் வேதத்தில் இல்லாத மிஷனரி, கடல் கடந்து வந்த வெள்ளைக்காரர்கள் கதை இதையெல்லாம் பதிக்கத்தெரிகிறது, அவர்கள்  இந்தியாவை அப்படியே புறட்டிப்போட்டு இன்று இந்தியா கிறிஸ்தியாவாக மாறிவிட்டதாக்கும்.

 

தேவனுடைய சித்தம் அறியாமல் அவர் சித்தத்துக்கு எதிராக செயல்பட்டால் இப்படித் தோல்விதான். இந்த உலகத்தில் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், சிலரைத்தவிர என்று வேதம் சொல்வது இவர்களுக்குப் பொறுக்கவில்லை. அந்த சிலரை பலராக்குவதற்காக இவர்கள் எடுக்கும் பிரயாசம் விருதா. ஏனென்றால் அது தேவ சித்தமே அல்ல. பாவத்தின் சம்பளம் மரணம்; பாவ மன்னிப்பின் பலன் ஜீவன். அது கிறிஸ்துவின் மூலம் பலிக்கும். யார் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்...

 

அப்படி சுவிசேஷம் சொன்னால் ஒருவரை நரகத்திலிருந்து தப்புவிக்கலாம் என்று உண்மையிலேயே நீங்கள் நம்பினால் ஒரு வினாடி கூட விரயமாக்காமல் ஓடி ஓடி ஆத்தும ஆதாயம் செய்து ஞானவான்களாக வேண்டியதுதானெ. ஏன் தாமதம்? யார் தடுத்தார்கள்? 

அப்படி சுவிசேஷம் சொல்லும்போது யாராவது கிறிஸ்துவைக் கேள்விப்படாதவர்கள் என்ன ஆவார்கள் என்று கேட்டால் பேந்தப் பேந்த முழிப்பீர்கள் போலுள்ளதே. வெக்கக்கேடு.....

ஆத்தும் ஆதாயம்னா என்ன? கிறிஸ்துவை அறிவிப்பதுதான் ஆத்தும ஆதாயம் என்றால், நீதிமொழிகளின் காலத்தில் எப்படி ஆத்தும ஆதாயம் செய்து ஞானவான்களாவார்கள்.

நைஸா நழுவப்பார்க்கக்கூடாது..


-- Edited by soulsolution on Wednesday 15th of June 2011 04:16:57 PM



-- Edited by soulsolution on Wednesday 15th of June 2011 04:27:34 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சூப்பர் சகோதரரே!!

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா!! இந்த கூட்டணிக்காரர்கள் சிலர் ஒன்று கூடி, 2010ல் இந்திய "கிறிஸ்தியா"வாக மாறும் என்றெல்லாம் "தீர்க்கதரிசனம்" சொன்னவர்கள் தான்!! கேட்டால் மாறும்........... ஆனா.........!!??

சுவிசேஷம் என்றால் என்ன என்கிற அடிப்படை அறிவில்லாதவர்களிடம் இத்துனை நாட்கள் நாம் சொல்லிக்கொண்டது VMK  கூட்டத்திற்கு புரியுதோ, புரியவில்லையோ, அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறார்களோ, அல்லது சபைக்கும், பாஸ்டர்களுக்கும், "தேவ மனுஷர்களுக்கு" பயந்து எல்லாருடைய இரட்சிப்பிற்காக தான் கிறிஸ்து இரத்தம் சிந்தினார் என்பதை இவர்கள் புறகனித்தாலும், தேவன்  அவருக்கு சித்தமானவர்களை நிச்சயமாக கூட்டி சேர்பார் (அறுப்பு உலகத்தின் முடிவு)!!

மிஷனரிகளை தலை மேல் தூக்கி வைத்து ஆடுவதினாலும், அவர்களை இரத்த சாட்சிகளாக அனுப்பி வைத்து அதை வீடியோ எடுத்து வெளியிடுவதாலும் கிறிஸ்தவர்களாக ஜனங்கள் மாறி விடுவார்கள் என்றால், யப்பா, இந்நேரம் உலகமே மாறியிருக்குமே!! இவர்கள் ஏன் சூதான், உகாண்டா இன்னும் அரபு தேசங்களுக்கு போவதில்லை!! கேட்டால் இரகசியமாக சொல்லுகிறோம் என்பார்கள்!! ஒரிஸாவில் சொல்லுவது போல் அரபு தேசங்களில் போய் சொல்ல வேன்டியது தானே!! மாட்டார்கள்!! கேட்டால் கர்த்தர் எங்களை ஒரிஸா பிஹார் போன்ற இடங்களுக்கு தான் அனுப்பினார் என்பார்கள்!!

தேசத்தை கிறிஸ்துவிற்காக மாற்றுகிறோம் என்று தேவ சித்தத்திற்கு விரோதமாக ஜெபித்தால் நடந்துவிடுமோ!!

முதலில் இந்த கூட்டம் மரணம், ஆத்துமா, இரட்சிப்பு என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளட்டும், அவர்களின் "நல்ல வேதாகம கல்லூரிகளிலிருந்து"!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//அப்போதிருந்த பயண வசதிகளைக்கொண்டு சீஷர்கள் அதிகபட்சம் ஆசிய மைனர் மற்றும் ஆப்பிரிக்காவின் வட பகுதிகள் ஏன் ஸ்பானியா, இத்தாலியா தேசம் வரைக்கும் போக முடிந்தது, அதே சமயத்தில் அந்த சீஷர்களின் வாழ்வும் (பலர் ரத்த சாட்சியாக) நிறைவுற்றது, அப்ப மீதியுள்ள இந்தியா, சீனா, ஆஸ்திரேலிய கண்டம் இன்னும் பல பகுதிகளில் உள்ள மக்கள் இந்த சகல ஜாதிகள் கேட்டகிரியில் வரமாட்டார்களா? என்ன சார் காமெடியா இருக்கு. வேதம் சொல்லப்பட்டவங்களுக்கு மட்டும்ன்னா அப்ப 10 கட்டளைகளும் இஸ்ரவேலருக்கு மட்டும் தான் பொருந்துமா.//

பேதுரு ரோமில் தான் மரித்தார்!!
அந்திரேயா (ANDREW) சோவியத் ரஷியா, ஏஷியா மைனர், துர்க்கி, க்ரீஸ்
தோமா (THOMAS) சிரியா, இந்தியா
ஃபிலிப் (PHILIP) வட ஆஃப்ரிக்கா, ஏஷியா மைனர்
மத்தேயு (MATTHEW) பர்சியா, எத்தியோப்பியா
பர்த்தொலொமேயு (BARTHOLOMEW)   தோமாவுடன் இந்தியா, அர்மேனியா, எத்தியோபியா, தென் அராபியா
அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு (James the son of Alphaeus) சிரியா
செலோத்தே என்னப்பட்ட சீமோன் (SIMON THE ZEALOT) பர்சியா

ஏன் உலகம் முழுவதும் போகவில்லை, இவர்கள் போன இடம் போக இவர்களின் எழுத்து போனது!! And that is what we call "The Holy Scriptures" or "The Bible"

10 கட்டளைகளை நீங்களும் பின்பற்றுங்கள், ஏனென்றால் வேதத்தில் எது யாரிடம் சொல்லப்பட்டது என்பது உங்களுக்கு புரியாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//எல்லா ஜ‌ன‌ங்க‌ளும் ர‌ட்சிக்க‌ தான் இயேசு வ‌ந்தார் நீங்க‌ எப்ப‌டிவேணுமின்னாலும் இருன்துகொள்ளுங்க‌ள் கிறிஸ்துவை ந‌ம்பி விசுவாசித்தாலும் ச‌ரி விசுவாசிக்காவிட்டாலும் ச‌ரி, இதுக்கு பெய‌ர் உப‌தேச‌மே இல்லையே, இதுக்கு பேசாம ம‌ல்லாக்க‌ ப‌டுத்துட்டு விட்ட‌த்தை பாத்துட்டே இருக்க‌லாம். அன்றைக்கு அனேக‌ அடிக‌ள் ப‌ட்டும் தான் சீட‌ர்க‌ள் ந‌ற்செய்தியை அறிவித்த‌ன‌ர். //

அதுதாங்க சொன்னேன், அவர்கள் போதித்தது அன்று புதிய உபதேசமாக இருந்தது!! ஆகையால் தான் அடிப்பட்டார்கள், இது தேவனின் சித்தமாக இருந்தது!! அன்றைக்கு அநேக அடிகள் பட்டது துருபதேசமான "நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நரகத்திற்கு போவீர்கள்" என்று சொன்னதற்கா?? இல்லை, இயேசு கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிறா புதிய போதனையை தான் அவர்கள் சொன்னார்கள்!!

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருந்துக்கொள்ளுங்கள் என்று நாங்கள் போதிப்பது இல்லை!! அதையே தெரியாமல், என்னத்த.......!! நாங்கள் சொல்லுவது, என்னவென்றால், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்களும், அவரை தெரியாமல், கேட்காமல், வேதத்தை வாசிக்காமல், இப்படி எல்லா விதமானவர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்பது தான்!! இதன் மூலம் நாங்கள் தேவன் எங்களுக்கு வெளிப்படுத்திய அவரின் அன்பை வெளிப்படுத்துகிறோம்!! ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் போனால் நீங்கள் சாத்தானுடன் தான் வாழ்வீர்கள் என்று போதிப்பது யாருடைய அன்பைக்கொண்டோ!! அதான் நீங்கள் சாகவே சாவதில்லை என்கிற போதனையை கொண்டு வந்தானே, அவன் தான் இப்படி மனிதர்களை தேவனின் அன்பை புரியவிடாமல் பண்ணுவான், அதை தான் மெனக்கெட்டு நீங்கள் நவீன காலத்து மிஷனரிகள், கோபுரங்கள், வாசல்கள், மூன்று நாள் உபவாசக்கூட்டம் போட்டு சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!

//இவர்களுக்கு நானும் ஒன்றை சொல்லிக்கொள்ள விழைகிறேன், எங்களில் யாரும் மேசியாவின் எதிரிகளோடு சேரப்போவதில்லை, ஒத்துப்போகப் போவதுமில்லை. இவர்கள்  என்ன தான் சொன்னாலும் நமது தலை மயிர் கூட இவர்கள் சொல்வதை அங்கீகரிக்க போவதில்லை, கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியம் என்னை இப்படி எழுத தூண்டுகிறது.

இதற்கு அதிக பட்சம் என்ன செய்வார்கள் ஏதாவது நாய், பன்னி, பன்னாடை என்று திட்டுவார்கள், கிறிஸ்துவுக்காக அடியெல்லாம் பட்டதில்லை ஆனால் இந்த திட்டையாவது வாங்கிக்கொள்கிறோம். ஆனானப்பட்ட மேசியாவையே சிலுவையில் அறையும் முன் தூஷித்தவர்கள் இருந்தபோது கேவலம் நான் எம்மாத்திரம்..? எது சத்தியம் என்பதை காலம் இவர்களுக்கு உணர்த்தும் அப்புறம் அறிந்துகொள்வார்கள்..!//

என்னடா Ph. D. டாக்டர் தன் சுயரூபத்தை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்று பார்த்தேன், அவர் மனதில் இருக்கும் வார்த்தைகளை எழுதிவிட்டார், நாங்கள் அப்படி திட்டுவோம் என்று!! சபாஷ்!!

உங்களை யாரும் எங்களுடன் சேர கூப்பிடவில்லை, எப்பாவது அப்படி எழுதியிருக்கிறோமா!! உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இருக்கனும்!! உங்களை யாரும் எங்களுடன் ஒத்து போகவும் சொல்லவில்லையே!! ஆனால் கிறிஸ்துவின் மேல் உள்ள வைராக்கியம் உங்களை இப்படி எழுதவைக்கிறது என்று சொல்லுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!! அவர் உலக இரட்சக்கர் என்று சொல்லிக்கொண்டு, ஆனால் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று போதிக்கும் உங்களுக்கு கிறிஸ்துவின் மேல் வைராக்கியம் இருப்பது எல்லாம், சும்மா...சும்மா...!!! சாராயம் குடிப்பதெல்லாம் சரியா, என்று விவாதிக்கும் நேரத்தில், கிறிஸ்து சிந்திய இரத்தம் யாருக்கு என்று வாசித்தால் நல்லா இருக்கும்!! கத்தோலிக்க சபையில் மரியாளின் சேனை போல், இவர் "மிஷனரிகளின் சேனை" வைத்திருப்பார் போல், இவருக்கு கிறிஸ்துவின் மேல் வைராக்கியத்தை விட மிஷனரிகளின் மேல் தான் வைராக்கியம் இருக்கிறது என்பதற்கு இவரின் பதிவுகளே சாட்சி!! தயவு செய்து அன்றைய அப்போஸ்தலர்களுடன் இன்றைய "மிஷனரிகளை" ஒப்பீட்டு பேசி அப்போஸ்தலர்களையும் அவர்கள் சொன்னா சுவிசேஷத்தையும் அவமாக்காதீர்கள், திரு ஜோசப் அவர்களே!!

அய்யா நீங்கள் இன்று போதித்துக்கொண்டு இருக்கும் "சத்தியத்தை" சில ஆண்டுகளுக்கு முன்னால் உங்களை விட வைராக்கிய்மாக போதித்துக்கொண்டு தான் இருந்தோம்!! இப்ப வெளியேறிவிட்டோம்!!

இயேசு கிறிஸ்துவால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்று தானே சொல்லுகிறீர்கள்!! எப்படி எங்களை மேசியாவின் எதிரிகள் என்று சொல்ல தோன்றுகிறதோ!! தொடரட்டும் உங்களது வைராக்கியம்!! யப்பாஆஆஆஅ!!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சோல்சொல்யூஷன்:

//நைஸா நழுவப்பார்க்கக்கூடாது..//
 
ஜோசப்:
//யார் நழுவப்பாக்குறா? நீர் வசனத்தை கேட்டீர் நான் சொன்னேன், சரி அப்ப நீதிமொழிகள் காலத்திலே ஆத்தும ஆதாயம் செய்ததுன்ன என்ன, உமக்கு தெரியுமா, நீங்க தான் மூல பாஷையிலேயே பிரித்து மேய்பவர்கள் ஆச்சே, தாவீதுக்கே ரட்சகரான இயேசுவை பத்தி தெரிஞ்ச்சிருக்கு, இவ்வளவுக்கும் அவர் கத்தி, வில்லை தூக்கிட்டு அலஞ்ச்சவர். பெரிய ஞானியான சாலொமொனுக்கு தெரிஞ்ச்சிருக்காதா என்ன, இயேசு என்ன 2000 வருஷத்துக்கு முன் தான் வந்தாரா? என்னய்யா கேள்வி கேட்கிறீர்.//

நழுவீட்டார்ல‌............!!

//அரபு தேசங்க்களில் ஊழியம் நடப்பதில்லை என்பது உமக்கு தெரியுமா? நான் கேட்ட பகிரங்க சவாலை இன்னும் ஒத்துக்க முடியல, உங்களுக்கு மனசாட்சி என ஒன்னு இருந்தா இந்தியாவில் ஆதி முதல் இப்போது வரை நடந்த ஊழியங்கள் எல்லாத்தையும் நிராகரிக்கிறேன் என சொல்லுங்களேன். //

உமக்கு தெரியுமா!! வேதத்தை காட்டிலும் இது போன்ற விஷயங்களை தான் அதிகம் ஆறாய்வீர் போல்!! நீங்கள் கிறிஸ்தவர் என்றால் "கிறிஸ்துவால் எல்லாருக்கும் இரட்சிப்பு கிடையாது" என்று பகிரங்கமாக சொல்லுங்களேன்!!!!! பிறகு பேசலாம் அரபு தேசத்தில் நடக்கும் ஊழியங்களை குறித்து!!

கிறிஸ்து பாத்திரமாக பயன்ப்படுத்திய பவுலின் வார்த்தைகள்:

I கொரிந்தியர் 1:13 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?

1 கொரிந்தியர் 3:5. பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. 6. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 7. அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.

இதை முதலில் வாசித்தீர்களென்றால் அப்போஸ்தலர்கள் யார் என்றும், இன்றைய மிஷனரிகள் யார் என்றும் புரியும்!! நிச்சயமாகவே அப்போஸ்தலர்களுடன் ஊழியம் செய்தவர்களை நாங்கள் ஒரு போதும் குறை சொல்லமாட்டோம், அது தேவையற்றது, ஏனென்றால், அப்போஸ்தலர்களுடன் இருந்து அவர்களினால் கைகள் வைத்து அனுப்பட்டவர்கள், நிச்சயமாக உங்கள் "சத்தியத்தை" போதித்ததில்லை!! நாங்கள் சொல்லுவது நவீன கால மிஷனரி வெஷதாரிகளையே!!

sjchristopher wrote:
//இந்த replies எல்லாம் படிக்கும் போது BP எகுருதுங்க... எப்படி இப்படி எல்லாம் அவங்களால யோசிக்க முடியுது...missionaries பாதி அவங்க சொல்றத என்னால ஜீரணம் பண்ண முடியல... உண்மைய சொன்னா கண்ணீர் தான் வருது... கர்த்தரிடம் வேண்டுவதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை.....//

உங்கள் அவதார் படத்தில் நீங்கள் தானென்றால் உங்களை தம்பி என்று கூப்பிடலாம்!! ஆனாலும் சின்ன வயசில் எதற்கு BP எகுருதுங்க தம்பி!! நீங்கள் சில்சாம் எழுதுவதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!! ஏனென்றால் வசனத்தை தவிர அவருக்கு எல்லாம் தெரியும்!! கொலையும் செய்வாராம்!! அவர் எழுதினது தானுங்கோ!! உங்கள் படத்தை பார்த்தால் ஏதோ ஏர்கண்டிஷன் ரூமில் வேலைப்பார்ப்பது போல் இருக்கிறது!! நீங்களும் மிஷனரிகளின் காவியங்களை வாசித்து கண்ணீர் விடுபவராக இருப்பீர்கள் போல்!! அப்போஸ்தலர்களுடன் இருந்த ஊழியர்களை தப்பாக சொல்லவில்லை, இன்று அதாவது, இந்த ஆவிக்குறிய சபைகள் பெறுகிய பிறகு தங்களை அப்போஸ்தலர்கள் என்றும், மிஷனரிகள் என்றும், ஊழியர்கள் என்றும் சொல்லி மாய்மாலம் செய்பவர்களை தான் சொல்லுகிறோம்!! வெளியே வந்து பாருங்க தம்பி!! கர்த்தரிடம் வேண்டுங்கள், சிலரின் கண்கள் திறக்கப்படும்படி, அதாவது, வரித்துறையில் அதிகாரிகளின் கண்கள் திறக்கப்பட கண்டிப்பாக ஜெபியுங்கள்!! எத்துனை கோடி வருதுனு பாருங்க‌!!

தயவு செய்து மிஷனரிகளை கடவுளாக மாற்றி விடாதீர்கள்!! அன்று எளிமையாக வந்து பள்ளிகளையும் கல்லூரிகளையும் திறந்தார்கள், இன்று அவைகள் இருக்கும் நிலை தெரியும் என்று நினைக்கிறேன், இல்லாவிட்டால் அதற்கு ஒரு தனி பதிவு இடுகிறேன், வாசித்து விட்டு அதன் பின் என்ன விதமான கண்ணீர் வருது என்று பாருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//எழுத்து எப்ப‌டி போகும் ந‌டந்தா போகும், இல்லை விங் க‌மாண்ட‌ர் மாதிரி ப‌ற‌ந்து போகுமா, என்ன‌ய்யா எழுதுகிறீர்?//

எழுத்து எப்படி போனது என்று தெரியாதா!! எழுதுவது ப்ப் க்கு புரியவில்லை போல்!! எழுத்து வடிவில் வந்த பிறகு அதை யார் வேண்டுமென்றாலும் கொண்டு போனார்கள்!! கொண்டு போனவர்கள் அனைவரையும் மிஷனரி என்று சொல்லுவீர்கள் போல்!! மிஷனரிகளினார் உண்டான பயனை சொன்னீர்கள், நல்லது,

//1) த‌ர‌மான‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், ப‌ள்ளிக‌ள் கிடைத்த‌ன‌, அவை இப்போதுள்ள‌ நிலைக்கு அவ‌ர்க‌ள் கார‌ண‌ம‌ல்ல‌, அவ‌ர்க‌ள‌து நோக்க‌ம் உன்ன‌த‌மான‌ நோக்க‌ம் என்ப‌தை யாரும் ம‌றுக்க‌ முடியாது

2) வ‌ட‌ இந்தியாவில் ச‌தி என்ற‌ கொடூர‌ ப‌ழ‌க்க‌ம் ஒழிந்த‌து, இத‌ற்கு வில்லிய‌ம் கேரி, ஜோஷ்வா மார்ஷ்ம‌ன், வில்லிய‌ம் வார்ட் ஆகியோர் ராஜா ராம் மோக‌ன் ராயுட‌ன் எதிர்த்து போராடின‌ர்

3) தென் த‌மிழ‌க‌த்தில் மேல் ச‌ட்டை அணிய‌ (அதுவும் பெண்க‌ள்) அனும‌தி  ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌ நிலை ஒழிந்த‌து, ப‌னை ஏறியோர் க‌ல்வி க‌ற்ற‌ன‌ர்.

4) க‌ள‌வு தொழில் செய்து கொண்டிருந்த‌ ஒரு சில‌ ஜாதியார் வாழ்வில் பெருமாற்ற‌ம் ஏற்ப‌ட்ட‌து

5) பெண்க‌ல்வி ஊக்குவிக்க‌ப்ப‌ட்ட‌து.//

இதை தான் நாங்களும் சொல்லுகிறோம்!! மிஷனரிகள் ஒரு மதத்தை சார்ந்து அதை வைத்து சமூக சேவைகளை பிரதானமாக செய்து வந்தார்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், கல்லூரிகள், இன்னும் பலது செய்தார்கள்!! நீங்களோ மத்தேயு 28ல் கிறிஸ்து அப்போஸ்தலர்களை மிஷனரிகளாக கொடுத்த கட்டளையை சொல்லுகிறீர்கள்!! அப்படி என்றால் பேதுரு யோவான் போன்றோர் மிஷனரிகளாக போய் எந்த ஊரில் எந்த ஆஸ்பத்திரி, கல்லூரிகளை கட்டினார்களோ!! மிஷனரி என்ன செய்தார் என்று அழகாக சொல்லிவிட்டு, இந்த கட்டளையை அதாவது மிஷனரிகளாக போக கிறிஸ்து கட்டளையிட்டதாக சொல்லுகிறீர்களே அதை தான் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை!! மிஷனரிகள் சமூகை சேவை செய்தார்கள், எல்லாருக்கும் இரட்சிப்பு என்று சொல்லவில்லை, சுவிசேஷத்தை, நற்செய்தியை எழுதியப்படி சொல்லவில்லை!!

//இன்னும் அடுக்கிக்கொண்டே போக‌லாம், இதே போன்ற‌ ச‌மூக‌ அவ‌ல‌ங்க‌ளையும் எதிர்த்து இப்போதுள்ள‌ மிஷ‌ன‌ரிக‌ளும் போராடி வ‌ருகின்ற‌ன‌ர்.
உல‌க‌த்தின் முடிவு ப‌ரிய‌ ந்த‌ம் உங்க‌ளோடிருப்பேன் என்ற‌வ‌ர் இப்போதும் அவ‌ர்க‌ளுட‌ன் இருப்பார், இருக்கிறார்.
ஒருவேளை மிஷ‌ன‌ரிப்ப‌ணி தேவையில்லாத‌ ஒன்று என‌ நீங்க‌ள் நினைத்தால்..... அப்புற‌ம் உங்க‌ இஷ்ட‌ம்... ஒண்ணும் சொல்வ‌த‌ற்கில்லை//

தயவு செய்து வசனத்தை சரியாக வாசித்து விட்டு பிறகு எழுதுங்கள்:

மத்தேயு 28:    20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மிஷனரிப்பணியை நாங்கள் சத்தியத்தை சொல்லும் பணியாக இல்லை, நிச்சயமாக சமூக சேவையாக எடுத்துக்கொள்கிறோம்!!

ஆனால் கிறிஸ்துவினால் எல்லோருக்கும் இரட்சிப்பு இல்லை என்று இதுவரையில் நீங்கள் சொல்லவில்லையே!! மிஷ்னரிகள் இருக்கிறார்களோ, தேவையோ, இல்லையோ, ஆனால் கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு, உண்டு, இதில் எந்த மாற்றமும் இல்லை!! கிறிஸ்து மனிதர்களின் தயவினால் காரியங்களை செய்வது அல்ல‌!!

தயவு செய்து நற்செய்தி சொன்னல் பேதுரு பவுல் போன்றோரையும் மிஷனரிகளின் சமூக சேவை பணியையும் குழப்பிக்கொள்ளாதீர்கள்!!

நீங்கள் ஏதோ அப்போஸ்தலர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டி செல்லவில்லை என்று சொன்னதற்காக தான் அந்த லிஸ்ட்டை போட்டேன்!! உங்களை திருப்திப்படுத்த அல்ல மாறாக நீங்கள் தெரிந்துக்கொள்ளும்படி தான்!!

//மிஷ‌ன‌ரிக‌ள் (இந்த‌ வார்த்தை உங்க‌ளுக்கு பிடிக்காட்டியும் சொல்ல‌னும் பாருங்க‌) இங்கு பெருவ‌யிற்று சோம்பேறிக‌ளாக‌ வ‌ர‌வில்லை அவ‌ர்க‌ள் உழைத்தே சாப்பிட்ட‌ன‌ர், இன்னைக்கு வ‌ட‌இந்தியாவில் ஊழிய‌ம் செய்ப‌வ‌ர்க‌ளும் கூடார‌ மிஷ‌ன‌ரிக‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ர் (அஃதாவ‌து ஒரு ஆசிரிய‌ராக‌வோ, தொழில் முனைவோராக‌வோ இருந்து, ச‌ம்பாதித்து த‌ங்க‌ள‌து சாட்சிக‌ள் மூல‌மாக‌ க‌ள‌ப்ப‌ணி செய்கின்ற‌ன‌ர்) //

மிஷனரிகளை நீங்கள் கோவிலில் வைத்து கும்பிடுங்கள், அல்லது உங்களுக்கு தோன்றியதை செய்யுங்கள்!! அவர்கள் செய்த பணியான சமூக சேவையை யாரும் குற்றம் சொல்லவில்லை, நாங்கள் சொல்லுவது அவர்கள் சத்தியத்தை சத்தியமாக சொல்லவில்லை!! அவர்கள் வந்தார்கள், உழைத்து சாப்பிட்டார்கள் என்பது எல்லாம் உண்மையாக இருக்கலாம், ஆனால் இன்றையவர்கள் அப்படி இருக்கிறார்களா என்பதை பாருங்கள்!! பிறகு சொல்லுங்கள்!! "அனுப்பட்டவர்" ப்ரெயின்வாஷ் செய்து அனுப்பட்டுவிடுகிறார், அவரை தாங்கும்படியாக ஒரு நடுவர் இருந்து பங்கு போடுகிறார், இது மறுக்க முடியாத உண்மை, உங்களுக்கு பிடிக்கிதோ பிடிக்கவில்லையோ, ஆனால் இது உண்மையே!!

//எதுக்கு இந்த‌ ச‌மாளிப்பு, நான் தான் இந்தியாவில் ந‌டைபெற்ற‌ ஒட்டுமொத்த‌ மிஷ‌ன‌ரி ப‌ணியும் கால‌விர‌ய‌மும், தேவையில்லாத‌துமான‌ ஒன்று என‌ டிக்ளேர் ப‌ண்ணுங்க‌ன்னு கேட்டேனே, அப்புற‌ம் எதுக்கு அவ‌ர்க‌ள் எளிமையாக‌ வ‌ந்து க‌ல்லூரிக‌ளையும் ப‌ள்ளிக‌ளையும் திற‌ந்தார்க‌ள் என்கிறீர்க‌ள், ஆர்.எஸ்.எஸ்-கார‌னுக்கு புரிஞ்ச‌துகூட‌ உங்க‌ளுக்கு புரிய‌வில்லை போல‌. அஃதாவ‌து மிஷ‌ன‌ரிக‌ள் க‌ல்விப்ப‌ணிக்காக‌வும் ம‌ருத்துவ‌ ப‌ணிக்காக‌வும் வ‌ந்தாலும் அவ‌ர்க‌ள‌து மைய‌நோக்க‌மே சுவிசேஷ‌த்தை அறிவிப்ப‌து தான், இத‌த்தான் த‌மிழ் ஹிந்து த‌ள‌த்திலும் ஆர்.எஸ்.எஸ்-சின் ஆர்க‌னைச‌ர் த‌ள‌த்திலும் எழுதுகிறார்க‌ள். ந‌ம்ம‌ நாடு கூட‌ இப்போது இருக்கும் நிலை உங்க‌ளுக்கு க‌ண்ணீர் விடும் நிலையில் இருக்குன்னு தெரியும் அப்புற‌ம் ஏன் சார் 20 வ‌ருஷ‌த்தை விமான‌ப்ப‌டையில் சேர்ந்து வேஸ்ட் ப‌ண்ணினீர்க‌ள்?//

என்னத்தை சமாளித்தேன்!! மிஷனரிப்பணி என்றால் என்னவென்று தெரியும், அதையும் நற்செய்தியுடன் ஒப்பீட்டு பேசுவது சரியில்லை!! எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஐ குறித்து தெரியவேண்டிய அவசியம் இல்லை!! அவர்கள் என்ன புரிந்துக்கொண்டார்கள் என்பதை குறித்து எனக்கு அக்கறையும் இல்லை!! அவர் அவர் புரிந்துக்கொள்ளுதல் அவர் அவருக்கு!! நீங்கள் வேதத்தை கையில் வைத்தே அறியாமையில் இருக்கிறீர்கள்!! கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்பது கேவலமான ஒரு ஸ்டேட்மெண்ட்!! அவிசுவாசத்தின் உச்சி!! Height of Blasphemy!!

நீங்கள் 20 வருடம் நிம்மதியாக தூங்க நாங்களும் ஒரு காரணமாக இருந்திருக்கிறோம்!! இதுவும் ஒரு மிஷன் தான்!! உங்கள் தேசத்தின் தலைவர்கள் கொண்டு வரும் சட்ட திட்டங்களுக்கு கீழ்ப்படிவதும் தேவனின் சித்தமே!! அப்படி பார்த்தால் நான் 20 வருடம் தேசத்தின் விமானப்படையில் சேர்ந்து நிச்சயமாக வேதத்தின்ப்படியே நடந்திருக்கிறேன்!! அதை கொச்சைப்படுத்தும் நீங்கள் அனைவரும் தேசதுரோகிகள் என்றாலும் மிகையாகாது!!

//"தேவ‌ன் த‌ம்முடைய‌ ஒரே பேரான‌ குமார‌னை விசுவாசிக்கிற‌வ‌ன் எவ‌னோ, அவ‌ன் கெட்டுப்போகாம‌ல் நித்திய‌ ஜீவ‌னை அடையும்ப‌டிக்கு அவ‌ரை த‌ந்த‌ருளி இவ்வ‌ள‌வாய் இ ந்த‌ உல‌க‌த்தில் அன்புகூர்ந்தார்"//

//இயேசு உல‌க‌ ர‌ட்ச‌க‌ர் தான் ஆனால் அவ‌ர‌து ர‌த்த‌ம் அவ‌ரை ஏற்றுக்கொள்ளாத‌வ‌னையும் ர‌ட்சிக்கும் என்ற‌ வினோத‌ உப‌தேச‌த்தை ப‌ர‌ப்பிவ‌ருகிறீர்க‌ளே//

இயேசு உலக இரட்சகர் தான் என்று ஒரு தான் போட்டு உங்கள் விசுவாசத்தை தான் வெளிப்படுத்துகிறீர்கள்!! அதாவது நீங்களே ஒரு கண்டிஷன் போட்டுக்கொள்கிரீர்கள்!! நீங்கள் காண்பித்த வசனமும் அவரால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்பதே கிடையாது!! விசுவாசிக்கிறவன் கெட்டு போவதில்லை என்பது தானே!!

யோவான் 3:17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.

இந்த வசனத்தை எப்படி பார்க்கிறீர்கள் திரு ஜோசப் அவர்களே!! நீங்கள் காண்பித்த வசனம் இரட்சிப்பை குறித்து இல்லை, ஆனால் 17ம் வசனம் சொல்லுவதை வாசிக்கவில்லையா!! புரியுது, புரியுது, அடுத்த வசனம் இதை தானே சொல்லுகிறது என்று சொல்லுவது கேட்கிறது,

யோவான் 3:18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.

ஆக்கினைத்தீர்ப்பு அல்லது ஆக்கினை என்கிற வார்த்தையை உங்கள் போதகர்கள் உங்களுக்கு "அக்கினி" என்று சொல்லிக்கொடுத்திருப்பார்கள் போல்!!

இயேசு கிறிஸ்துவால் அனைவரையும் மீட்க, இரட்சிக்க முடியும் என்பதற்கு ஏகப்பட்ட வசனம் இருக்கிறது, அதில் எதிலும் கண்டிஷன் கிடையாது, அதாவது மனிதர்கள் ஏற்றுக்கொண்டால் தான் கிறிஸ்துவால் இரட்சிக்க முடியும்!!

இப்பவும் கேட்க்கிறேன், கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, அதற்காக அவர் மனிதர்களின் ஒத்துழைப்பை சார்ந்திருக்கிறார் என்று சொல்லி உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துங்களேன்!!

//I am not running away but I am running away from EVIL//

I know you are not running away, you are shying away from TRUTH!! and the TRUTH you treat as EVIL!! What a Faith, What a belief!!

Dr Joseph Daniel Ph. D., can you give one PURE verse which says, It is not possible for Christ Jesus to SAVE ALL human beings without intervention of human beings!!

Luke 18:8................Nevertheless, when the Son of man cometh, shall he find faith on the earth?

And that's working!! The majority of the people will not be in Faith, and that's what the verse says!! And you people are seriously working against the verse!! And this is what Satan does through you ALL!! There will be NO faith on the EARTH means NO faith at all!! Which surely means in your faith, that the whole earth will go to "Fiery Hell"!! Funny!!

//I know what I am made of, my conscience and my beliefs and people who know me will understand, it is disgusting to see myself being stamped as ------- which I know that I am not of//

Yes, and that's what I say, you have more trust on your conscience and your belief than FAITH in the Scriptures which says, Christ is Saviour for ALL (R) ALL!! What a love in this statement!! We don't stamp you as you call us EVIL!! We stamp on you only one thing, that you have not tasted the LOVE of God and never know the depth and breadth of HIS love!!

1 Timothy 2:3 This is good and acceptable in the sight of God our Saviour; 4 who would have all men to be saved, and come to the knowledge of the truth.

What this verse says is that God WANTS ALL men to be SAVED and will have all men saved through His Son Jesus Christ!! And once the people are saved, they will be made know of the TRUTH!! and that includes the mass Christiandom!!

தொடரும்.............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//என்ன‌ ஒன்று, இவ‌ர்க‌ளுட‌ன் மோதி, வேத‌த்தை இன்னும் அதிக‌ க‌ருத்தோடு க‌ற்க‌ வேண்டும் என‌ ஒரு உத்வேக‌ம் என‌க்கு ஏற்ப‌ட்டுள்ள‌து. இது ஒன்று தான் க‌டைசியில் மிஞ்சிய‌து, இன்னும் நான் நிறைவேற்ற‌ வேண்டிய‌வைக‌ள் அதிக‌ம் இருப்ப‌தால் இப்போதைக்கு விடைபெறுகிறேன். //

இதை தான் நாங்கள் சொல்லுகிறோம், முதலில் வேதத்தை இன்னும் அதிக கருத்தோடு கற்றுக்கொள்ளுங்கள், பிறகு விவாதிக்கலாம்!! பாஸ்டர்மார்களும், மிஷனரிகளும், ஊழியர்களும் சொல்லுவதை வேதமாக என்னாமல், வேதத்தை கருத்தாக பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்!! இயேசு கிறிஸ்துவினால எந்த ஒரு கண்டிஷனும் போடாமல் எல்லாரையும் மீட்க முடியும் என்பது விளங்கும்!! கூடவே அன்பும் பெறுகும்!! அநத அன்பு இருந்தாலே ஒரு மனிதனும் அழிந்து போக கூடாது என்று தான் யோசிப்பீர்கள்!!

//ந‌ம்து போராட்ட‌த்தின் ஒரு சில‌ ப‌குதிக‌ள் இந்த‌ இணைய‌ம் என‌ ஒன்று இருக்கும் வ‌ரை இவ‌ர்க‌ளை முள்ளாக‌ குத்திக்கொண்டிருக்கும் என்ப‌தில்  ச‌ந்தேக‌மில்லை//

சாரி நீங்கள் இப்போ "வைராக்கியமாக" போதிக்கிறது சில ஆண்டுகள் முன் நாங்கள் உங்களை விட வைராக்கியமாக போதித்திருக்கிறோம்! இப்பாவாவது பேசி விவாதிக்க இப்படி பட்ட தளங்கள் இருக்கிறது, ஆனால் அன்று இதற்காகவே ஓடினோம்! என்ன, அன்றே மனிதர்களுக்கு பயப்படாமல், வேதத்தில் உள்ள தேவனுக்கு மாத்திரமே ஊழியம் செய்தோம்!! ஊழியத்தினால் பணம் சம்பாதிக்கவில்லை, மாறாக எங்கள் பணத்தை செலவு செய்து இதை செய்தோம்!!

ஆகவே நீங்கள் எழுதிய கருத்துக்கள் எங்களுக்குள் நீங்கள் நினைப்பது மாதிரி முள்ளாக குத்த வாய்ப்பே இல்லை!! ஆனால் உங்கள் தூஷனங்களை நீங்கள் ஒரு நாள் உனர்ந்துக்கொள்ள உங்கள் எழுத்து உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும்!! அதிலும் இயேசு கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது போன்ற தேவ தூஷனங்கள்!! நீங்களோ மிஷனரிகளையும் கிறிஸ்துவையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்கிறீர்கள்!!

//நானும் ப‌ல‌முறை கேட்டாகிவிட்ட‌து, இப்பார‌த‌ பூமியில் ந‌டைபெற்ற‌ மிஷ‌ன‌ரிப்ப‌ணிக‌ளை நிராக‌ரிக்கிறீர்க‌ளா என‌, அத‌ற்கு இக்கோழைக‌ளுக்கு ப‌தில் சொல்ல‌ துப்பில்லை மாறாக‌ இக்கால‌ மிஷ‌ன‌ரி அது இது என‌ உள‌றுகிறார்க‌ள். க‌டைசியில் ஒரு கேள்வி இவ‌ர்க‌ளுக்கு, ஆதியாக‌ம‌த்தில் தேவ‌ன் இவ்வுல‌கை ப‌டைத்தார் என‌ ஆர‌ம்பிக்கும் வேதாக‌ம‌ம், வெளிப்ப‌டுத்தின‌ விஷேஷ‌த்தில் இயேசுவின் வ‌ருகையை ஏங்கி நிறைவுறுகிற‌து, ஏன் இப்ப‌டி அப்போது யெகோவா தேவ‌ன் எங்கு இருந்தார். தேவ‌னும் ஆட்டுக்குட்டியான‌வ‌ருடைய‌ சிங்காச‌ன‌ம் என‌ வ‌ருகிர‌தே அப்படியென்றால் என்ன‌?//

ஓடிப்போகிறவர் எங்களை கோழை என்று சொல்ல தகுதியில்லை!! நாங்கள் பதில் கொடுக்கிறோம், அது உங்களுக்கு ஏற்றது அல்ல என்று சொல்லுங்கள், ஏனென்றால் நாங்கள் பதில் கொடுக்கவில்லை என்றால் உங்களுக்கு பக்கங்களை நிறப்ப சரக்கு இல்லை!! வேதத்தில் சொல்லப்பட்ட ஊழியங்களில் மிஷனரி என்கிற ஒரு வார்த்தையோ ஒரு ஊழியமோ இல்லை!! நீங்கள் நினைப்பது போலவே இவர்கள் சமூக சேவை செய்தார்கள், விழிப்புனர்வுகளை ஏற்படுத்தினார்கள், சமூதாயத்தில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வந்தார்கள்!! இதை எல்லா மதத்தினரும் ஏதாவது ஒரு மிஷனரி என்கிற பெயரில் தான் செய்கிறார்கள்!! அவர்கள் அனைவருமே மதிப்புக்குறியவர்களே!! நீங்கள் கிறிஸ்தவர் என்கிற ஒரே காரணத்திற்காக கிறிஸ்தவ மிஷனரிகளை ஒய்யாரப்படுத்துகிறீர்கள்!! மற்றபடி சேவை என்கிற அர்த்தத்தில் பார்த்தோமென்றால் யார் செய்வதில்லை, கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்களும் தான் கல்லூரிகளும், ஆஸ்பத்திரிகளும் நடத்துகிறார்கள்!! இக்கால மிஷ்னரிகள் என்றால் "பணம்" குறிக்கோளாக வைத்திருப்பவர்களை சொல்லுகிறோம்!! அடிவங்குகிறவன் மிஷ்னரி இல்லை, அவன் அனுப்பப்பட்டவன்!! மூளைச்சலவை செய்து அனுப்பப்பட்டவன்!! மிஷ்னரி மிஷ்னரி என்று பிதற்றிக்கொண்டு இருப்பவர்கள், அவர்களை போல், ஒரிஸாவிற்கோ, காட்டுக்கோ போக மாட்டார்கள், உங்களை போல்!! உங்களுக்கு மிஷ்னரிகள் மேல் இருக்கும் நம்பிக்கை கூட கிறிஸ்துவின் மீது இல்லை என்று நினைக்கும் போது வேதனையாக தான் இருக்கிறது!! மிஷ்னரி என்கிற பெயரில் அதை பிர‌பலப்படுத்துவோர், அந்தமானுக்கு அனுப்புறோம், அஸ்ஸாமுக்கு அனுப்புறோம் என்று சொல்லுபவர்கள் அவர்களே போகமாட்டார்கள், அப்படியே போனாலும் பத்திரமான ஒரு சபை வரை சென்று இந்த மூளச்சலவை செய்தவர்களை "அனுப்பிவிட்டு" தமிழ்நாட்டிலோ அல்லது வேறு ஒரு நல்ல சொகுசானா இடத்தில் (அது பிஹாராகவும் இருக்கலாம்) உட்கார்ந்துக்கொண்டு அனுப்பட்டவர்களை தாங்குவதர்காக "காணிக்கைகள்" அனுப்புங்கள் என்று ஆரம்பிப்பார்கள்!! இந்த "அனுப்புகிறவர்களிடம்" நீங்கள் ஏன் இப்படி போவதில்லை என்று கேட்டுப்பாருங்கள், உடனே, பிரதர், எனக்கு அதற்கான அழைப்பு இல்லை என்பார்கள்!! நல்ல தமாசு தான்!!

சேவை செய்வதை நாங்கள் குறை சொல்லவில்லை, ஆனால் இது தான் கிறிஸ்து சொன்ன ஊழியம் என்று சொல்லுவது முட்டாள்த்தனம்!! வேதத்தில் நீங்கள் சொல்லும் இந்த ஊழியம் இல்லையே!!

எபேசியர் 4:13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

ஏற்படுத்தினார் என்றார், ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை என்பதை ஜான் போன்றோர் ஆங்கிள இலக்கனத்துடன் எடுத்துறைத்ததாக ஞாபகம்!! அவர் சிலரை மிஷனரிகளாகவும் ஏற்படுத்தினார் என்றிருந்தால் கூட சரி நாங்கள் தப்பாக சொல்லுகிறோமோ என்றாகும்!! இந்த ஒரு வசனத்தை வைத்துக்கொண்டு தானே, நாங்கள் அப்போஸ்தலர்கள், நாங்கள் தீர்க்கதரிசிகள் என்று இன்றைக்கு மோசம்போக்கிக்கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம்!!

//இனி இவர்கள் முகத்தை நான் காண்பதில்லை.//

இப்படி எல்லாம் சிகப்பில் அவசரப்பட்டு எழுதாதீர்கள்!! ஏனென்றால் நீங்கள் இதை எழுதுவது உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை, ஆனால் நாங்களோ தேவனை நம்புகிறோம்!! அவரால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லை என்பதை நம்புகிறோம்!! இந்த சத்தியத்தை இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள், அவரின் சித்தப்படியே அனைவரும், அதிலும் "இயேசு கிறிஸ்துவினால் எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு, கண்டிஷன் இல்லாமல்" என்பதை அவசியம் ஏற்றுக்கொள்வீர்கள், ஏற்ற காலத்தில்!!

பீட்டர்சாமுவேல்:
// சகோதரரே, மனிதன் தேவனோடு நெருங்கக்கூடாது என்பது தான் சாத்தானின் ஒரே நோக்கம். அதற்காக அவன் பலவிதமாய் மனிதனை தூண்டிக்கொண்டே இருப்பான். எந்த விதத்தில் வேண்டுமானாலும்!!!.//

அய்யா இதை நீங்கள் தான் செய்துக்கொண்டு இருக்கிறீர்கள், அதை தான் தந்திரமாக இயேசு கிறிஸ்துவினால் எல்லா மனிதர்களையும் இரட்சிக்க முடியாது!! அப்படி என்றால் நீங்க இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்கிறோம் என்பது எல்லாம் வெறும் மாயையே!! நீங்கள் தொழுதுக்கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு ஆனால் அவருக்கு லிமிட்டட் வல்லமை தான் இருக்கிறது, அவரால் மனிதர்கள் இரட்சிக்கப்படவேண்டுமென்றால் முதலில் மனிதர்கள் அவரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நீங்கள் யாரை தொழுதுக்கொள்கிரீர்கள் என்பதே தெரியாமல் செய்வதால் தான்!!

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், அதன் பின் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமாக இருக்கிறார் என்றால் நீங்களோ அது சாத்தியம் இல்லை என்று போதிப்பவர் சரி என்று சொல்லுகிறீர்கள்!! ஆமா, நீங்கள் இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை கற்றுக்கொண்டீர்களா அல்லது..............??

நாங்கள் யெகோவா சாட்சிகள் என்று உங்களுக்கு மூளைச்சலவை செய்தாகிவிட்டது என்று என்னுகிறேன்!! அல்லது உங்களுக்கு யேகோவா சாட்சிகளை குறித்து தெரியாது போல்!! இருக்கும் 2000 சபைகளிலும் திரித்துவத்தை போதிப்பதினால், நீங்களும் கத்தோலிக்கர் ஒன்றா என்கிற சிம்பிளான கேள்விக்கு பதில் சொல்லி விட்டு அதன் பின் யெகோவா சாட்சிகளை நீங்கள் எந்த அளவிற்கு தெரிந்திருக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்!!

இவர்களுடன் என்ன பேச்சு என்று நீங்கள் விறகு கட்டையால் அடி வாங்கியதால், அதை வைத்து யாருக்கும் பதில் சொல்லும் கடமையில்லை என்றால் ஏன் மினக்கெட்டு மற்ற மார்க்கத்தாரிடம் போய் ஏதோ ஒரு விதையை தூவி இது தான் சுவிசேஷம் என்கிறீர்கள்!! ஏனென்றால் உங்களுக்கு பதில் தெரியவில்லை, அல்லது உங்களுக்கு போதிக்கப்பட்டது அப்படி!! நான் உஙக்ளை பதில் பதிய கேட்கவில்லை, நீங்கள் எங்களை ஓநாய்கள் என்று எழுதியதால், நீங்கள் உங்கள் மனசாட்சிக்கு பதில் சொல்ல கடமையிள்ளவராக இருக்கிறீர்கள்!! நீங்கள் திரித்துவத்தை சொல்லுவதால் நீங்கள் ஒரு கத்தோலிக்கர் என்று நான் உங்களை சொல்லுவது எவ்வுளவு அபத்தமோ அதே தான் நீங்கள் எங்களை யெகோவா சாட்சிகள் என்று நினைப்பது!!

யார் ஜனங்களை தேவனை விட்டு பிரித்து சாத்தானுக்கு பரிந்து பேசுகிறார்கள்!! நாங்களா, நிச்சயமாக இல்லை!! எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவார்கள் என்று வேதம் சொல்லுவதை சொல்லுவதால், எல்லா மனிதர்களும் தேவனை தெரிந்தவர்களாக இருப்பார்கள் (இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிந்துக்கொள்வது தேவ சித்தம்) என்று எல்லா மனிதர்களையும் தேவனிடத்தில் தான் சேர்க்கிறோம்!! ஆனால் உங்கள் போதனையோ, இல்லை இல்லை, நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நீங்கள் சாத்தானுடம் போவீர்கள் என்று போதித்து இருப்பவர்களை எல்லாம் சாத்தானிடத்திற்கு அனுப்புகிறீர்கள்!! யார் எந்த பணியை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று, இதை யார் எழுதுகிறார்கள் என்று பார்க்காமல், என்ன எழுதியிருக்கிறது என்று படித்து யோசியுங்கள்!!

நாங்களோ நற்செய்தியாக சொல்லுவதே, எல்லா மனிதர்களுடம் தேவனிடத்திற்கு வருவார்கள் என்பது தான்!! இப்படி சொல்லுவது ஒரு போதும் சாத்தானுக்கு துனை போவதாக கிடையாது!! ஆனால் உங்கள் கூட்டம் சொல்லுவது என்னவென்றால், "கிறிஸ்துவினால் ஆகாது, அவருக்கு எல்லாரையும் இரட்சிக்க முடியாது" என்று சொல்லி சாத்தானின் எண்ணங்களை நிறைவேற்றுகிறீர்கள்!! யார் யாருடைய‌ வாயாக இருக்கிறார்கள் என்பதை நிதானித்து எழுதுங்களேன்!!

நீங்கள் எல்லாரும் எழுதுவது உங்களின் சொந்த அனுபவங்களையும், உங்களுக்கு நேர்ந்ததையும் வைத்து தான்!! ஆனால் வேதம் என்ன சொல்லுகிறது என்கிற அனுபவத்தில் பார்த்தால் தானே உண்மை விளங்கும்!!

மேசியாவின் எதிரிகள் என்று எழுதும் உங்கள் தள தலைவருக்கே கிறிஸ்துவினால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது என்கிற நம்பிக்கை தான்!! யார் மேசியாவின் எதிரி என்று தெரியாமல் ஒரு கூட்டம் சேர்த்து அதற்கு தலையாக இருக்க பிரயாசிக்கும் சில்சாமிற்கு ஒரே ஒரு வரி, உங்கள் கூட்டத்தார் நாங்கள் சொல்லுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ நாங்கள் ஒரு போதும் சொல்லுவதில்லை, இது வரை சொல்லியதும் இல்லை!! நீங்கள் எழுதாமல் போனாலும் எழுதிக்கொண்டாலும் நாங்கள் கிறிஸ்துவின் இந்த செய்தியை அறிவித்துக்கொண்டே தான் இருப்போம்!! எல்லாருக்கும் இரட்சிப்பு என்பதை உங்களை போன்ற "நல்" மனது கொண்டவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பது நீங்கள் எல்லாம் யாருடைய அன்பிலும் பராமரிப்பிலும் இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது!! ஆகவே நீங்கள் எழுதாமல் போனால் எங்களுக்கு கொண்டாட்டம் என்பது எல்லாம் தேவையற்ற கமெண்ட்ஸ்!!

நாங்கள் உம்மை போன்று கூட்டம் சேர்க்கும் ஆட்கள் கிடையாது!! ஏனென்றால் இரட்சிப்பு என்பது எல்லாருக்கும் தான் என்பதில் எங்களுக்கு வேதத்திற்கு புறம்பான கருத்து கிடையாது!! வேதம் சொல்லுவதை அப்படியே சொல்லுகிறோம், தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்போம்!

ஏதோ உங்களுக்காக துவங்கப்பட்ட தளமாக இந்த தளத்தை நினைக்க வேண்டாம், இது உங்கள் தளத்திற்கும் முன் துவங்கப்பட்டது!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தெளிவில்லாத மனம்தான் துயரப்படும். விலகி ஓடும்; தனிமையை நாடும். குளத்தோடு கோபித்துக்கொண்டு ... கழுவாமப் போன கதைதான் ஞாபகம் வருகிறது. நஷ்டம் குளத்துக்கல்ல.

இன்னும் அதிகம் வேதம் கற்க வேண்டுமென்றால் முற்றிலும் திறந்த மனதுடன் ஆராய்ந்தால்தான் முடியும். முதலில் நான் அநேகமுறை மீண்டும் மீண்டும் கேட்ட கேள்வியான "கிறிஸ்துவை அறியாமலேயே மரிப்பவர்களின் கதி என்ன?" என்ற கேள்விக்கு உங்களுக்கு முழுதிருப்தியளிக்கும், சமாதானமளிக்கும் பதிலைத் தேடுங்கள், மற்ற சத்தியங்கள் வெட்ட வெளிச்சமாகும். இதற்கு நீங்கள் யார் உதவியையும் நாடலாம்; அண்ணன் அகஸ்டின் ஜெபகுமார் முதல் நீங்கள் போற்றிக்கொண்டாடும் எல்லா மிஷினரிகளையும் அவர்கள் எழுதிய புத்தகங்களையும்கூட துணைக்கு அழைத்துக்கொள்ளலாம். ஏன் உங்கள் தளத்தில் உங்கள் கூட்டாளிகளுடன் கலந்து எல்லாருக்கும் ரட்சிப்பா? வுக்குப்பதில் "கிறிஸ்துவை அறியாமல் மரித்த , மரிக்கும் மற்றும் மரிக்கப்போகும் மனிதர்களின் எதிர்காலம் என்ன?" (என்ற அதிமுக்கியமான கேள்வி) என்ற‌ ஆக்கப்பூர்வமாக விவாதம் தொடங்கலாமே? வசனம் சார்ந்ததாகவே இருக்க வேண்டும். எங்கே யாரையாவது ஒரு பதிவு ஏற்றுக்கொள்ளும்படி பதியச் சொல்லுங்கள் பார்க்கலாம். நண்பரே ஒரு விஷயம் செய்தால் அது செய்யாதபட்சம் நேரும் விளைவுகளை அறிய வேண்டும்.

மாற்கு 16ல் பிற்பகுதி வசனங்களை, அது இப்போதும் நடக்கிறது என்ற வாதம் உங்கள் தாயார் விஷயத்திலேயே பொய்யாகிவிட்டதே? உயிர்தெழுதலில்தான் அவர்கள் முழுசுகத்துடன் எழுந்து வருவார்கள். இப்போது நித்திரையில் இருக்கிறார்கள் அவ்வளவே. அற்புதங்களை இன்னும் நம்பும் நீங்கள் இந்த அற்புதங்கள் நீங்கள் உயர்த்திக்கொண்டாடும் மிஷினரிகளுக்கே நடக்கவில்லை தெரியுமா? (ஏதோ சாது சுந்தர் சிங் விஷம் குடித்தும் பிழைத்தார் என்ற ஆதாரமற்ற தகவல்களைத் தவிர) நடந்திருந்தால் அவர்கள் மருத்துவமனைகள் கட்டியிருக்கமாட்டார்கள், சுகமளிக்கும் கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள்...

நீங்கள் எங்கள் தளத்தைப்பார்க்கப்போவதில்லை என்பதால், அருமை நண்பர் கொல்வின் இதற்கு ஆவன செய்வார் என்று நம்புகிறேன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard