kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேப்பையில் நெய் வழியுதையா!


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:
கேப்பையில் நெய் வழியுதையா!


கேப்பையில்

நெய் வழியுதையா!

 

 

கேட்பாரிங்கெவருமில்லையா !

அன்றோர்நாள் மாதசஞ்சிகை !

கண்ணைப் பறிக்கமெல்லப்பிரித்தேன்!

பளபள வென  வழவழகாகிதம் !

பரலோகம் பலமுறைசென்றசேதியை !

பரபரப் பானகதைபோல்கண்டேன்-ஆயின்

சட்டென பிரித்தேன்சத்தியவேதம் !

"நச்சென "  இயேசுசொன்னதைபடித்தேன் !

யோவான் முன்றுபதினாறில் !

அவரன்றி பரம்ஏறினவரில்லை!

என்றென் மீட்பர்  சொன்னதுபொய்யோ !!!

பாமரரென்று நினைத்தாரோ -நாம்

புதியவரென்று புகன்றாரோ??

மூளையில்லாத முட்டாள்களென்றே

 

முடிவாய் துணிந்துகணித்தாரோ ?

 

பரலோக வீதிகள்பார்த்துரசித்திட

பல முறைசென்றேதிரும்பிவந்தாராம் 

{பாஸ்போர்ட் , விசாவெல்லாம்தந்ததுயாரோ ?}

நினைத்த நேரம்பிதாவினருகில்

அமர்ந்து டிஸ்கஷ 

ன்  புரிந்திடுவாராம் !!!!!

ஜீவ புத்தகத்திலிவர்பெயரிருக்காவென

கிராஸ் செக்கிங்செய்திடுவாராம் !

பரலோக வாழ்வே  நிரந்தரமாக

இருக்கனும் என்பதுபவுலின்ஏக்கம் !

 

 

பரலோக விதியில்நடந்தபின்னாலே

புவனம் இவர்கள்திரும்பினதேனோ ?

செத்தவர் மீண்டும்உயிர்த்தால்வீட்டில்

சேர்ப்பதர்க்காயிரம் யோசனைசெய்வார் !

இயேசுவின் கரங்கள்பிடித்தேநரகம்

ஒருமணி நேரம்உலவினவரிங்கு

திரும்பி வந்தால்சேர்த்திடுவாரோ???- இது

"கேத்தரின்குல்மான்" சொன்னதுதானோ ?

 

 

தொல்லைகளின்திரட்சி சொப்பனம்என்று

திருமறைதெளிவாய் சொல்லிஇருக்க

தைரியம், விசுவாசம், பரலோகபாதை

தருமாம்சொப்பனம்அட எங்கேபோய்முட்ட !!!!

வசனத்தைவிட்டு விலகின௬ட்டம்

விசனம்இவர்  பின்னால்திரள்பெருங்௬ட்டம்!!

அஞ்சும்இரண்டும் அளிப்பீர்என்று 

அடுக்கடுக்காகபுதுப்புதுதிட்டம்

 

 

அற்புதம்என்றே பெயரொன்றுசூட்டி!

சொற்பகாசையும் பறிப்பார்தட்டி

கேன்சர்வியாதியின் வேதனைதொல்லை !

தீர்ந்ததென்றிவர் உரைத்தசொல்லை

நம்பிசெத்தார் லாரன்ஸ்அவர்ஊர்நெல்லை

ஆயினுமிவர் பின்செல்லும்௬ட்டம்  குறைவதேயில்லை !

பொய்கள்புரட்டுகள் புனைந்துரைக்கதைகள்

எத்தனைஎத்தனைஇவரதுநாவில்

 

 

பொய்யைநம்புவோர் இருக்கின்றவரைக்கும்

இவரதுபெட்டிகள் நிரம்பித்தான்இருக்கும் !

அடடா "நாக்கே" நரம்பில்லையதினால்!-உன்

பொய்க்கோரெல்லை புலப்படவில்லையோ ?

திருமறைவார்த்தைகள் புறக்கணித்திவர்கள்!

பெருகித்திரிவதை கண்டபின்னாலும்

திருமறையறிந்தோர் வாளாவிருந்தால்!

 

உருப்படுமா சபைஉயிர்ப்பெறுமா ??

 

 

 

பொய் உதடுகள்அருவெருப்பென்றவர்!

விரைந்து வந்தேதீர்ப்பளித்திடனும் !

துய்ய ஆவியேதீமைகளைந்திட

தலைமையேற்று நீர்சமர்புரிந்திடணும்!!!!

 

                                      --------- ஆற்றாமையுடன்

                                                        "குரு*

 



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரலோக வீதிகளை கூட்டி தெளித்துவிட்டு வருவார்களோ!!

தெளிவில்லாத, கேள்விகள் கேட்காத "சாதாரன விசுவாசிகளை" பேரும் புகழும் பணமும் சேர்த்துக்கொண்ட "தேவ தாசர்கள்" "தேவ மனிதர்கள்" "தேவ ஊழியர்கள்" படுத்தும் பாடு இருக்கிறதே!! இவர்கள் வித விதமாக பரலோகம் போய் விட்டு வருவது!! மூன்றாம் வானம் எனும் பரதீசு என்றால் என்னவென்று தெரியாமல், குழம்பி போய் குழப்பி கொண்டு இருக்கும் ஊழியர்களை என்ன செய்வது!! சரி ராஜியத்தில் எல்லாம் பார்த்துக்கொள்வார் "யெகோவா யீரேஹ்"!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//யோவான் முன்றுபதினாறில் !//

 

திருத்தம் 

மூன்று பதிமூன்றில்..




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//உருப்படுமா சபைஉயிர்ப்பெறுமா ??//

 

இச்சபையைத்தான் குழப்பசபை

பாபிலோன் வேசியென்று

ஒதுக்கிவ்ட்டாரே...

 

அவர்தம் சபையை, தலையாகிய அவரே

பூரணப்படுத்தி வருகிறாரே!

யார்தயவும் அவருக்குத்தேவையில்லை

வெளியேறப் பணிக்கப்பட்டவர்களை

வெளியேற்றி தேவசித்தம் இம்மிபிசகாமல்

ஈடேறும்.

 

போலிச்சபை உயிர்பெறாது

விழும், விழும், விழும்.

அவளுக்கு நேரிடும் வாதைக்கு விலகி

வெளியேறுவோம், வெளியேறுவோம்

வெளிப்படுத்தல் பதினெட்டு நான்கின்படியே!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard