kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பக்கத்துவீட்டு நகைச்சுவை!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பக்கத்துவீட்டு நகைச்சுவை!!


பக்கத்து வீட்டு பதில்களில் ஜான்:
//அருமையான பதில்கள் சகோ. சில்சாம். உங்களுடைய பதில்களுக்கு ஆதாரமான சில வசனங்கள்
"இயேசுவை அநாதியானவர் என்றே வேதம் சொல்லுகிறது."
எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது. (மீகா 5:2)
//நேரடியான கேள்வி: வேதம் ஒரே தேவன் என்று சொல்கிறதா அல்லது மூன்று தேவர்கள் என்று சொல்கிறதா?//
இதற்கு உங்கள் பதில் என்ன?
இயேசு கிறிஸ்துவுக்கு இரண்டு சுபாவம் இருந்தது . அவருடைய மனுஷ சுபாவத்திலே அவர் பிதாவை சார்ந்து, அவர் சித்தம் கேட்டு அதன் படி நடந்தார். அவருக்கு களைப்பு, பசி, சிலுவை பாடுகளை குறித்த வேதனை எல்லாம் இருந்தது.//

சரியோ தவறோ பாராட்டுவதில் என்ன தவறு!! இப்படி வந்தது தானே "அருமையான பதில்கள்"!! ஒன்றுக்காவது வசனத்தை கொடுத்திருக்கிறீர்களா!! இல்லையே!! கொடுத்தது பதில் அல்ல, கருத்துக்கள், அவ்வளவே!!

மீகா 5:2 சொல்லப்பட்டிருக்கும் புறப்படுதல் என்பது தேவனின் திட்டமே!! அதை அப்படி வாசித்தோமென்றால், அநாதி காலமுதல் புறபட்டு வந்துக்கொண்டே இருக்கிறார் என்று தான் அர்த்தம் கொள்ள முடியும்!!

இயேசு கிறிஸ்துவிற்கு இரண்டு சுபாவம் இருந்தது எல்லாம் உங்கள் கருத்து, வசனம் இல்லாத கருத்து!! சரி பிதாவை சார்ந்திருக்கிறார் என்றால் எப்படி தான் பிதாவே கிறிஸ்துவாக வந்தார் என்று சொல்ல முடிகிறது!!

ஜான் அவர்களே,

கிறிஸ்து தான் பிதாவா?
பிதா தான் கிறிஸ்துவா?

ஏனென்றால் நீங்கள் தான் கிறிஸ்து பிதாவை சார்ந்திருந்தார் என்று எழுதியிருக்கிறீகள்!! அப்படி என்றால் பிதா வேறு தானே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பக்கத்துவீட்டு கொல்வின்:
//அருமையான பதில்கள் சகோ சில்சாம்.

இதற்கும் ஏதாவது நொண்டி சாக்கு சொல்வார்கள்,வேண்டுமானால் பாருங்கள் உங்கள் பதில் தவறாக இருந்தால் ஏன் தவறு என்று சொல்லவும் மாட்டார்கள். சரியானால் கூட அதையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்;இப்படியானால் தவறு சொன்று நீங்களே சொல்லிவி்ட்டீர்களே என்று சத்தம் எழுப்புவார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

கேள்விக்கு பதில் அளித்தால் அது சரியா பிழை என்று பதில கூற இந்த ஆத்மகோமாளிக்கு துப்பில்லை; தனககுத்தானே soulsolution என்று அதாவது ஆத்ம (மீகத்) தீர்வு என கள்ளத்தீர்க்கதரிசி மாதிரி பெயர் வைக்கத் தெரியும். ஆத்தும தீர்வினை தருபவர் தேவன் மடடுமே. இந்த கள்ளத் தீர்க்கதரிசிக்கு இது எங்கே புரியப்போகிறது. இவர் தான் தன்னை தேவனுக்கு சமன் என்கிறாரே..!?

மற்றவர்களை நியாயம் தீர்க்குமுன் இவர் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும். இவர் எல்லாம் போதிக்க வந்துட்டார்... //

மீண்டும் ஒரு அருமை!!

கொல்வின் அவர்களே, நொண்டி சாக்கு எல்லாம் சொல்லவில்லை!! இவர் எழுதிய பதில் ஏன் தவறு என்றும் எழுதியாகிவிட்டது!! உங்களின் பார்வை படவில்லை போல்!! சரியானதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோர் நாங்கள்!!

எங்களை பதம் பார்க்கும் அளவிற்கு உங்களுக்கு ஞானமில்லை என்றே சொல்லுவேன்!!

உங்கள் அளவு பாதத்தை குறித்து பேசுவது மாத்திரமே!! அதையும் நான் கேட்டு நொந்து போய்விட்டேன்!! ஆனால் பதில் இல்லை!! இப்பவும் கேட்க்கிறேன்!! பாதம் என்கிற வார்த்தையை அப்படியே எடுத்துக்கொண்டால், தேவன் தன் பாதம் முழுவதையும் இந்த பூமியின் மேல் வைத்திருக்கிறாரோ!! பதில் தேவை!!

நீங்கள் மட்டும் தவறான எழுத்துகளை கொண்டு எழுதுவதே இல்லையா!! எழுதியும் இருக்கிறீகள்!! அடுத்தவர்களை சொல்லும் போது நீங்களும் போதித்து தான் வருகிறீகள் என்று நினைவில் இருக்கட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பக்கத்து வீட்டு ஜோசப்:
//தேவன் அன்பானவர் என்ற வார்த்தை உண்மையானது, தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகையால் அவர் ஆதியிலே அன்புடன் தான் இருந்திருப்பார். ஆதியில் தனியாக இருந்த தேவன் (அஃதான் உங்க கணக்குப்படி கிறிஸ்துவை படைக்குமுன்) யாரிடம் அன்புடன் இருந்திருப்பார், தனியாக உலகத்தோற்றத்திற்கு முன் இருந்த ஒருவர் யார் மீதாவது அன்புடன் இருந்திருக்க முடியுமா?//

தேவனை மனிதர்களின் பார்வையில் பார்க்க வேண்டாம்!! தொடக்கம் முதல் அனைத்தும் அவருக்கு முன்பாக தான் இருக்கிறது!! அவரே அன்பாக இருக்கும் போது, அவரின் அன்பை வெளிப்படுத்தவே படைப்பின் வரிசையே!! இந்த மனிதன் பூமி படைக்கப்பட்டவுடன் வரவில்லை!! விஞானம் சொல்லுவது போல் பூமி பல ஆண்டு காலங்கள் பழையது தான்!! இந்த பூமியை மனிதன் வாழும்ப்படியாக சீர்ப்படுத்தவே பல்லாயிர வருடங்கள் ஆகியிருக்கும்!! தேவன் எதையும் ஜீம்பூம்பா முறையில் செய்யவில்லை!!

அவரின் ஒவ்வொரு படைப்பிலும் அன்பு இருந்தது!! ஆகவே தான் இத்துனை படைப்புகள்!! ஏதோ கண்மூடி கண் திறப்பதற்குள் அனைத்தும் படைக்கப்பட்டுபடவில்லை!! மனிதனின் அன்பு அவரின் சாயலில் ஒரு சிறு துளியே!! இன்னோரு மனிதன் இருந்தால் தான் அன்பு செலுத்த முடியும் என்கிற மனிதனின் நிலையில் இருந்து தேவனின் அன்பை அளவிட வேண்டாம்!! தேவனே முழுவதும் அன்பாக இருப்பவர்!! அவரின் அன்பு படைப்புகளில் வெளிப்பட்டது, அவரின் அன்பு, மனிதர்கள் பாவம் செய்த போது, அவர்களுக்காக தன் குமாரனையே ஜீவப்பலியாக கொடுக்கும் அளவிற்கு இருந்தது, அவரின் அன்பு மனிதர்கள் அழிந்து போக அல்ல, ஜீவனை பெற்றுக்கொள்ளும்படியாகவே இருக்கிறது!!

ஏதோ எதிர்த்து கேட்கவேண்டும் என்கிற நோக்கத்தோடு மாத்திரம் எதையும் கேட்காதீர்கள், ஜோசப் அவர்களே!! தேவனின் அன்பை மனிதர்களின் அன்புடன் ஒப்பீட்டு பேச முடியாத காரியம்!! நீங்கள் ஏதோ புத்திசாலித்தனமாக கேட்க்கிறீர்கள் என்றும், அதற்காக உங்கள் சகாக்கள் உங்களை பாராட்டுகிறார்கள் என்பதை நினைத்து நீங்கள் தேவனை தான் தூஷிக்கிறீர்கள்!! அவ்வளவே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

'ஆத்துமா' என்றால் என்னவென்றே தெரியாத கிறிஸ்தவ மண்டலத்தில், ஆத்துமா என்றால் என்னெவென்று வசன ஆதாரங்களுடன் தெளிவடைந்தபின்னர்தான் நான் அடுத்த விஷயங்களில் ஆர்வம் காட்டினேன். என் பதிவுகளிலிருந்து அதை உணரமுடியும்.

ஆகவேதான் மரணம் என்றால் வேதம் என்ன சொல்கிறது என்ற அடிப்படை விஷயத்திலேயே தெளிவில்லாததால்தான் மற்ற விஷயங்கள் புரிவதில்லை. அதனால்தான் மீண்டும் மீண்டும் மரணம் என்றால் வேதம் என்ன சொல்கிறது என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்த அடிப்படை விஷயத்திலேயே இத்தனை குளறுபடிகளை வைத்துக்கொண்டு அடுத்த காரியங்களை விவாதிப்பதே வீண் என்று மறுபடி மறுபடி வலியுறுத்துகிறோம்.

'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்' என்று வேதம் திட்டவட்டமாக சொன்னாலும் 'ஆத்துமா சாகாது' என்று வாதிடும் கூட்டத்துக்கு என்ன சொல்லிப் புரியவைக்கமுடியும்?

 

ஆத்துமா பற்றிய குழப்பத்துக்கு என்னால் வசன அடிப்படையில் தீர்வு சொல்லமுடியும்! 

 

வேதத்தை ஆராயாமல் ஒரே ஒரு மொழிபெயர்ப்பை வைத்துக்கொண்டு அதை வேதவாக்காக எடுத்துக்கொண்டால் அது சாத்தியமே இல்லை என்பதுதான் நிதர்சனம்.

 

'நீ சாகவே சாவாய்' என்று முதல் மனிதனிடம் சொன்ன தேவனைச் சார்ந்து இருக்கிறோம் நாங்கள். 'நீங்கள் சாகவே சாவதில்லை'(ஆவியாகவோ, அல்லது ஆத்துமாவாகவோ ஏதாவது ஒரு வடிவில் உயிரோடுதான் இருப்பீர்கள்) என்று சாத்தானைச் சார்ந்து இல்லை நாங்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

'மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்' என்பதை நம்புகிறோம். 'ஆத்துமாவாய் இருக்கிறாய் பாதாளத்துக்கோ, பரதீசுக்கோ, பரலோகத்துக்கோ, நரகத்துக்கோ திரும்புவாய்' என்று தேவன் சொல்லவேஏஏஏஏஏ இல்லை என்பதில் முழு நிச்சயமாக இருக்கிறோம்.

 

நம்முடைய அறிவு குறைவுள்ளது; தேவனை அவருடைய தன்மையை, வல்லமையை நம்மால் கிரகிக்கக்கூட முடியாது. 

நாள், மணி, வினாடி எல்லாம் பூமிக்குத்தான், மனிதனுக்கு மட்டும்தான். ஒரு நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக்கொள்ள எடுக்கும் நேரம் என்பதை நாம் அறிவோம். பூமிக்கு வெளியே?

அங்கு காலம் நேரம் எல்லாம் கிடையாது. நம் சிந்தைக்கு அப்பாற்பட்டது....

அநாதி என்றால் துவக்கமில்லாத எப்பொழுதும் இருக்கிற ஒரு பதம். அது பிதாவாகிய தேவனுக்கே பொருந்தும் என்றுதான் வேதம் சொல்கிறது. அதேபோல ஆதியென்றால் ஒரு ஆரம்பம் என்றும் அறியலாம்... ஆரம்பம் என்றாலே அதற்கு முன் இல்லை என்றுதான் நாங்கள் பொருள் கொள்கிறோம்....

 

கிறிஸ்துவைக் கிறிஸ்துவாகவே வேதத்தின்படி ஏற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவானவர் 'பிதா' அல்ல.

பிதாவாகிய தேவன், கர்த்தராகிய இயேசு 'கிறிஸ்து' என்று எத்தனை வசனங்கள் இருந்தாலும் உங்கள் வாழைப்ழக்காமெடியை அவர்தான் இவர் என்று சொன்னால் அதுதான் 'பெஸ்ட் காமெடி ஆஃப் த யுகம்' என்றுதான் சொல்லமுடியும்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//எத்துனை வசனங்கள்? எப்போது நான் உங்களைபோல மழுப்பினேன் நண்பரே? மாம்சமான யாவரும் தேவனுடைய ரட்சிப்பை காண்பார்கள் என்றால் "எல்லா மனிதரும் முடிவிலே இரட்சிக்கபடுவார்கள் என்று நீங்கள் தவறாக (ரசலின் உபதேசப்படி) முடிவு செய்கிறீர்கள் ஆனால் வேதம் மாம்சமான யாவரும் என்ற பதத்தை "பழைய ஏற்பாட்டில் யூதர்களுக்கு மட்டுமே என்று இருந்த தேவனுடைய வாக்குதத்தங்கள் மற்றும் இரட்சிப்பு புறஜாதியினருக்கும் (எல்லாருக்கும்) உரியது என்ற பொருளில் "மாம்சமான யாவரும்" என்ற பதம் உபயோகபடுத்தப்பட்டு உள்ளது. இதை ஏசாயா 66:23 -24 வசனங்கள் உறுதிபடுத்துகிறது! சிமியோனும் அதே உறுதிபடுத்துகிறான்.//

அப்படியா!!! பார்த்தேன் உங்கள் பதில்களை எல்லாம்!!

நீங்கள் என்ன விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே மீண்டும் வாசித்து பாருங்கள்!! நான் சொன்னதை தான் சுற்றி வழைத்து சொல்லியிருக்கிறீர்கள்!! மாம்சமான யாவரும் என்றால் எல்லாரும் (நீங்கள் பழைய ஏற்பாட்டு யூதர்கள் அதன் பின் புறஜாதியனர் அனைவரும்) தான்!! சிமியோன் மாத்திரம் இல்லை, முழு வேதமே எல்லாருக்கும் இரட்சிப்பு என்கிறது (உங்கள் போதனையில் இருப்பவர்களை தவிர‌)!!

//தங்களுக்கு என்ன நேர்ந்தது??? தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர் தேவன் ஒருவர்தான், தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளவர் எவரும் தேவன்தான் என்று சொன்னேன். எனக்கு தேவத்துவம் பரிபூரனமாய் உள்ளது என்று சொன்னேனா? நான் என்ன புரட்டன் ரசலா? //

எத்துனை தேவன்!!?? உங்களுக்கு என்ன ரஸ்ஸல்ஃபோபியாவோ!!?? நானும் நீங்களும் விவாதிக்கிறோம், உங்கள் கருத்து, என் கருத்து என்று இருக்கும் போது அது என்ன ஊறுக்காயா ரஸ்ஸல்!! இதை தானே எழுதியிருந்தீர்கள்:

//ஒழுங்கா வாசியுங்கள் "தேவத்துவம்" பரிபூரனமுள்ளவர்கள் எல்லாரும் தேவனே! நம்முடைய (கிறிஸ்தவனுடைய) ஜீவன் அவருக்குள் மறைந்து இருகிறதினால் அவருக்குள் விசுவாசியின் ஜீவன் பரிபூரனப்படும்.//

மீண்டும் கேட்க்கிறேன் யார் அந்த "எல்லாரும்"!!

//இயேசு கிறிஸ்து பிதாவின் வலதுபாரிசத்திலே வீற்று இருக்கிறார் என்பதை ரசலின் சீஷர்கள் அறியாமையினால் எதோ அது ஒரு தாழ்மையான இடம் என்று நினைக்கிறீர்கள். ஏசாயா சொல்லுகிறார் "கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது" (இயேசு கிறிஸ்துதான் அந்த புயம்" . நீதியின் வலது கரம் இயேசு கிறிஸ்து! பார்வோன் கண்ட "கை வல்லமை" இயேசு கிறிஸ்து! . யோவான் சொல்லுகிறார் "பிதாவின் மடியில் இருக்கிற குமாரன்". வலது பாரிசம் என்பது கிறிஸ்துவின் வல்லமையை குறிக்கும் சொல். இதில் எது வேத விரோதம் என்று எழுதினால் நான் பதிலளிக்க தயாராய் இருக்கிறேன். //

உங்கள் பதிவின் ஒவ்வொரு பதிலிலும் ரஸ்ஸல் கூடவே இருக்கிறாரே!!

வலதுபாரிசத்திலே வீற்றிருக்கிறார் என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியும்!! இப்படி இருவரும் வேறு வேறு தான் என்று ஒப்புக்கொண்டது பாராட்டுக்குறியது!! சரி இருவரும் வேறு என்று சொல்லுகிறீர்கள், ஆனால் ஒரே வல்லமையோடு இருப்பவர்கள் என்றால் ஏன் ஒருவர் மற்றவருக்கு புயமாக இருக்கவேண்டும்!! வலது பாரிசம் என்பது ஒரு அந்தஸ்து!! சிலர் சொல்லுவது போல், இவன் என் வலது கை என்றால், அவனுக்கு நம்பிக்கைக்கு உறியவன், ஆனால் சொன்னவனின் தகுதி அல்லது அதே அந்தஸ்து வலது கைக்கு கிடையாது!! ஆகவே இருவரும் ஒரே அந்தஸ்தில் இருப்பவர்கள் கிடையாது!! கிறிஸ்து தேவனுக்கு வலது கரமாக, தேவனுக்கு கீழ்ப்பட்டவராக இருக்கிறார் என்பதே வேதமும் சொல்லுகிறது!! (1 கொரி. 15. 27,28)!!

உங்கள் சகாக்கள் எப்படி பாதத்தை பாதமாக எடுத்துக்கொள்கிறார்களோ, அப்படி தானே வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்றால் உண்மையில் ஒரு சிங்காசனத்தை போட்டு உட்கார்ந்திருப்பார் என்று விளக்குவார்கள்!! நீங்கள் சற்றே உண்மையை சொல்லியிருக்கிறீற்கள்!! இப்படி எழுதியவர் இருவரும் ஒரே நிலையில் (கிறிஸ்து இயேசு வலது கரமாக இருந்தாலும்) இருக்கிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல‌!!

//ரசலின் அடியார்கள் இப்படித்தான் வேத(?) ஆராச்சி(!!) செய்வீர்களோ? நீங்கள் வேத ஆராச்சி செய்யும் அழகை பார்க்க நிச்சயம் காமடியாய் இருக்கும். கேள்வியை மீண்டும் படியுங்கள், புழு, புச்சி, அக்கினி பற்றி கேட்கவில்லை

மாம்சமான யாவரும் என்பது எல்லோரும் என்றால் பாதகம் செய்த மனுஷர் யார் என்பது கேள்வி? //

மீண்டும் மீண்டும் ரஸ்ஸல்!!

இது தான் ஆராய்ச்சி!! உங்களுக்கு வசனத்தில் உள்ள மாம்சம் தெரிந்தது, ஆனால் அந்த மாம்சம் என்னவென்று தெரியவேண்டுமென்றால் அந்த முழு வசனமும் முக்கியமே!! அதில் உள்ள அக்கினி, பூச்சி எல்லாமே தான்!! அவர் எழுதியது உங்களுக்கு நிச்சயமாக விளங்காது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//நீங்க சொல்லுங்க கிறிஸ்துவுக்குள் எந்த ஒரே ஒரு சுபாவம் இருந்தது?//


அவர் மாம்சத்தில் வரும் முன் பிதாவுடன் லோகோஸாக இருந்தார்!! யோவான் 1:1. தேவனின் செல்ல பிள்ளையாக இருந்தார் (நிதி 8:22 முதல்)!! பிதாவினால் அனுப்பபட்டார்!! சுயமாக வரவில்லை, பிதாவினால் அனுப்பபட்டார்!! இப்படி எல்லாவற்றிலும் பிதாவை சார்ந்து அவருக்கு கீழ்ப்பட்டிருப்பதே அவரின் சுபாவம்!! அவர் மாம்சத்தில் வந்த போது கூட, பிதாவினால் அவருக்கு சரீரம் கொடுக்கப்பட்டது, பிதா அவரை அள‌வில்லாமல் ஆவியில் நிறப்பினார்!! அவர் ஆவியாக இருந்த போதும் சரி, மாம்சத்தில் வந்த போதும் சரி அவரின் ஒரு சுபாவம் பிதாவிற்கு கீழ்ப்பட்டிருப்பது மாத்திரமே!!
 
//உருவாக்கப்பட ஒன்றுக்கு அல்லது மனிதனுக்குள் எப்படி "தேவத்துவம்" பரிபூரனமாய் இருக்க முடியும்?//


இது தான் அந்த இரகசியம்:


யோவான் 3:34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார், தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
அளவில்லாமல் தேவனின் ஆவியை பெறுகிற ஒருவர் எப்படிப்பட்டவராக இருக்க முடியும்!!
 
உருவாக்கப்பட்ட ஒருவர் எப்படி சர்வ வல்லவராக இருக்கமுடியும்?
"சர்வ வல்லவர்" பிதாவாகிய தேவன் ஒருவரே!!
ஏசாயா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
கிறிஸ்துவை சர்வவல்லமையுள்ள தேவன் என்று சொல்லி பிதாவை தூஷிக்கிறீர்கள்!!

கிறிஸ்து வல்லமையுள்ள தேவன்
பிதா (யேகோவா) சர்வவல்லமையுள்ள தேவன்!!

இது வேதம் சொல்லுகிறது!! உங்களுக்கு தேவனையே மூன்றாக கூறு போட தெரியும் போது, கிறிஸ்துவை சர்வவல்லமையுள்ள தேவனாக எழுதுவது என்ன முடியாத காரியமா!!
 
//அவர் வெறும் மனிதன் மட்டுமே என்றால் எப்படி தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஆக இருக்க முடியும்?//


மத்தியஸ்தராக ஆகும் படி தான் பிதாவினால் அனுப்பப்பட்டார்!! அவர் உயிர்த்தெழுந்து பிதாவிடம் சென்ற பிறகு தான் பரிந்து பேசுகிறார் என்கிறது வசனம்!! கிறிஸ்து இந்த பூமிக்கு வரும் போது வெறும் மனிதனாக தான் அனுப்பப்பட்டார்!! ஆகவே தான் அவரால் மரிக்க முடிந்தது!! மரணம் என்றால் முழுவதும் ஒன்றும் இல்லாமல் போவது!! உங்களுக்கு இதுவும் தெரியாது!!

I யோவான் 2:1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.

1 தீமோத்தேயு 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

இந்த வசனம் எங்காவது அவர் மனிதனாக இருந்த போது மத்தியஸ்தராக இருப்பதாக சொல்லுகிறதா!! நான் திரும்பவும் சொல்லுகிறேன், எங்களை எதிர்த்து (எங்களை விட ரஸ்ஸலை எதிர்க்கும் ஆவியில் இருக்கிறீர்கள்) எழுதுவதை மாத்திரமே நோக்கமாக இருக்கிறீர்கள்!! அந்த மத்தியஸ்தார் யார் என்று தான் வசனம் சொல்லுகிறதே தவிர, அவர் மனுஷனாக இருந்த போது மத்தியஸ்தம் செய்ததாக வசனம் சொல்லவில்லை!!
 
//என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள் என்று சொல்லுகிறான் தாவிது. அவர் பிறப்பிலே பாவமில்லாத தேவ சுபாவமும் (No man is Good except God) , பாவம் செய்ய முடிகிற (Potential to Sin)   மனித சுபாவத்தோடும் பிறந்தார்.//

பாவமில்லாமல் பிறந்தது அவரின் தெய்வீக பிறவி!! He was not conceived because of union of Man and Woman!! மாம்ச கலப்படம் இல்லாமல் பரலோக திட்டத்தின்படி பிறந்தவர் கிறிஸ்து இயேசு, ஆகவே அவருக்குள் தாவீது சொன்ன "என் தாய் என்னை பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்" என்பது இல்லை!! பலியாகும்படியான மாசற்ற (பாவமற்ற) ஆட்டுகுட்டியாக வந்தவர் கிறிஸ்து இயேசு!! பாவம் செய்ய முடியவில்லை என்பதற்கும் அவர் மீது தேவன் அளவற்ற ஆவியை ஊற்றினார் என்பதே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//கிறிஸ்து தான் பிதாவா? பிதா தான் கிறிஸ்துவா? ஏனென்றால் நீங்கள் தான் கிறிஸ்து பிதாவை சார்ந்திருந்தார் என்று எழுதியிருக்கிறீகள்!! அப்படி என்றால் பிதா வேறு தானே!!//
 
ஆமா! வேறுதான் அப்புறம்???

அப்புறமென்ன!! இதை தான் நாங்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்!! முதலில் உங்கள் தேவன் யார் என்று அறிந்துக்கொள்ளுங்கள், பிறகு நிறைய பேசலாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//இதை..இதை..இதைதான் எதிர்பார்த்தேன்! அது விபச்சாரம் இல்லையா? இப்போ சொல்லுங்க சபையின் மணவாளன் கிறிஸ்துவா (மிகாவேல் தூதனா) அல்லது பிதாவா? ஒழுங்கா சொல்லணும் மழுப்பக்கூடாது ஒகே வா?//

சபை, கிறிஸ்து பூமிக்கு மாம்சத்தில் வரும் முன் வரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை!! மாம்சத்தில் வந்தவுடனோ அல்லது மாம்சத்தில் வருவதற்கு முன்போ கிறிஸ்து சபைக்கு மணவாளனாக இருந்ததில்லை!! மணவாளன் என்பதும் ஒரு பதவி இல்லை ஒரு ஒப்பீடு!! யாரும் கிறிஸ்துவை போய் திருமனம் செய்துக்கொள்ள போவதில்லை!!

தேவனின் முதன் சிருஷ்டியான கிறிஸ்து இருந்த நிலை ஆவிக்குறிய ஜீவியான தேவனின் லோகாஸ்ஸாக!! அவருக்கு உண்டான பெயர் தான் "மிகாஹேல்"!! மிகாஹேல் என்றால் "தேவனின் தற்சொரூபமானவர்"!! Who is like God!! that's it!! It doesn't mean Who is God!! God in the sense of Supreme God and not god!!

கிறிஸ்துவை குறித்தும் இதுவே தான் சொல்லப்பட்டிருக்கிறது:

கொலோசெயர் 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்,

அவர் அதரிசனமான தேவன் கிடையாது, மாறாக அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்!! தேவன் என்பதற்கு அர்த்தங்கள் பல உறை சொல்லியாயிற்று!! இந்த அர்த்தத்தில் மாத்திரமே அவர் மிகாஹேல் என்று சொல்லுகிறோம்!! நேரடியாக எங்கேயும் தேவனின் முதற் சிருஷ்டி மிகாஹேல் தூதன் என்று இல்லை!! அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம் என்பதால் தான் கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் ஆவி ரூபியாக இருக்கும் போது இருந்த நிலை அல்லது பெயர் தான் மிகாஹேல்!! பழைய ஏற்பாட்டில் கிறிஸ்து மாம்சத்தில் இல்லை, ஆனால் கர்த்தரின் தூதனானவர் என்கிற நபரை குறித்து பல இடங்களில் உள்ளது!! யார் அந்த தூதனானவர்!! கிறிஸ்துவே மாம்சத்தில் வரும் முன் கர்த்தரின் தூதனானவர்!! இது கிறிஸ்து மாம்சத்தில் வரும் முன் உள்ள நிலை!!

அவர் மாம்சத்தில் "இயேசுவாக" அனுப்பப்படார்!! அவர் சுயமாக வரவில்லை, பிதாவிற்கு கீழ்ப்படிந்து இருந்ததினால் பூமிக்கு வந்தார்!!

எபிரெயர் 10:5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;

கிறிஸ்து தன் ஆவிக்குறிய நிலையினை விட்டு விட்டு, பிதாவிற்கு கீழ்ப்படிந்தவராக அவரிடம் ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்து இயேசு என்கிறா நாமத்தில் உன்னதமானவரின் குமாரன் (கவனிக்கவும், உன்னதமானவர் என்று இல்லை) என்று மரியாளிடம் பிறந்தார்!!

அதன் பின் மாம்சாத்தில் தன்னை ஜீவப்பலியாக தேவனின் சித்தத்தின்படியே ஒப்புக்கொடுத்தார், உயர்த்தப்பட்டார், சகல அதிகாரங்களையும் பெற்றார், ஆனாலும் தேவனிடத்தில் தான் எந்த நிலையில் இருந்தாரோ, அதே நிலையில் அவருக்கு கீழ்ப்பட்டவராக இருக்கிறார்!!

அவர் சபையை தன் சாயலில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்!! 1000 வருட அரசட்சியில் அவருடன் சேர்ந்து ஆளுகை செய்து இந்த உலகத்தில் மரித்து உயிர்த்தெழுந்த, கிறிஸ்துவை அறியாதவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், மறுதலித்தவர்கள் அனைவரைக்கும் நீதியை கற்றுகொடுக்கவும், சத்தியத்தை தெரியப்படுத்தவும் வருவார்!!

கிறிஸ்து மூன்றாக இல்லை!! அவர் ஒரு நிலையிலிருந்து, மாம்சத்தில் வந்து, இப்பொழுது சகலத்துக்கும் (சகலம் என்றால் பிதாவிற்கும் மேல் அல்ல) மேலாக உயர்த்தப்பட்ட நிலையில் இருக்கிறார்!!

இத்துனையிலும் ஒரு நைய்யாண்டியோ, மழுப்பலோ கிடையாது!! நிஜ்ஜம்மா!! ஆனால் நீங்கள் கண்டிப்பாக இதையும் நக்கலாக தான் எழுதுவீர்கள் என்பதும் தெரியும்!!

கிறிஸ்துவை நாங்கள் ஒரு போதும் பிதா என்று சொன்னதில்லை, மாறாக அப்படி சொல்லுவோரை எதிர்த்து எழுதுகிறோம்!! ஆனால் எங்களிடத்திலேயே நீங்கள் கேட்ட கேள்வி தமாசாக தான் இருக்கிறது:
இப்போ சொல்லுங்க சபையின் மணவாளன் கிறிஸ்துவா (மிகாவேல் தூதனா) அல்லது பிதாவா?

கிறிஸ்து இப்ப மிகாஹேல் தூதன் கிடையாது!! தன்னை ஜீவ பலியாக ஒப்புக்கொடுத்த பிறகு பிதாவிடத்திலிருந்து அனைவருக்கும் நித்திய ஜீவனை தரும் அதிகாரத்தை, நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம், பெற்றுக்கொண்டார்!! அவர் இனி சாவாமையை பெற்றுக்கொண்டார்!! எப்படி பிதா தன்னில்தானே ஜீவன் உள்ளவராக இருக்கிறாரோ, அதே நிலையில் இருக்கிறார்!! ஆனால் பிதாவிற்கு கீழ்ப்பட்டவராக, ஏனென்றால் அவர் அனைத்தையும் பிதாவிடத்திலிருந்து பெற்ருக்கொண்டவர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஜான்:

//இதை..இதை..இதைதான் எதிர்பார்த்தேன்! அது விபச்சாரம் இல்லையா? இப்போ சொல்லுங்க சபையின் மணவாளன் கிறிஸ்துவா (மிகாவேல் தூதனா) அல்லது பிதாவா? ஒழுங்கா சொல்லணும் மழுப்பக்கூடாது ஒகே வா?//

ஏன் ஜான் சர்வவல்லராகிய பிதாவாகிய தேவனை 'மணவாளன்' என்று சொல்வதற்கு தயக்கமாக இல்லை? ஒருவரும் காணக்கூடாதவராயிருக்கிறார் அவர். 

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்றுதான் வேதம் கூறுகிறது. அந்த சபை தலையாகிய கிறிஸ்துவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும் அவருடைய தன்மையாகிய சாவாமைக்கு சபை உயர்த்தப்படவும் வேண்டும் என்பதற்காகவே நமக்குப் புரியும்படி 'மணவாட்டி' என்று நேர்த்தியாக அழைக்கப்படுகிறது.

 

I கொரிந்தியர் 12:27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்.

எபேசியர் 4:12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

 

கொலோசெயர் 1:24 இப்பொழுது நான் உங்கள் நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்தில் நிறைவேற்றுகிறேன்.

 

மேலும் சபையும் கிறிஸ்துவைப் போன்றே தேவனுடைய பிள்ளைகள் ஆகவேண்டும் என்று வசனங்களில் காணலாம். தேவனுடைய மணவாட்டியல்ல, புத்திர சுவீகாரம்.

ரோமர் 8:14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள்.

ரோமர் 8:15 அந்தப்படி, திரும்பவும்பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.(எனது மணவாளனே என்று கிறிஸ்துவை அழைக்கலாம், நிச்சயமாக பிதாவை அல்ல‌)

ரோமர் 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

 

ரோமர் 8:23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

 

கலாத்தியர் 4:4 நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக,

 

கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

 

கலாத்தியர் 4:7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய்.

 

எபேசியர் 1:6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன் குறித்திருக்கிறார்.

 

எபிரெயர் 12:7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ?

 

எபிரெயர் 12:8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.

 

உலகத்தோற்றத்துக்கு முன்பே தேவன் தெரிந்து கொண்ட சபை; அதாவது தன்னுடைய குமாரனைப்போல சாவாமைக்கு உயர்த்தப்படப்போகும் 'சிறு மந்தை'யை பிதாவானவர் உலகத்தோற்றத்துக்கு முன்பாகத் தெரிந்துகொண்டார். அவர் 'தெரிந்துகொண்ட' நபரைத்தவிர வேறு யாரும் 'தற்செயலாக'க்கூட சபை ஸ்தானத்துக்கு உயர முடியாது. இந்த சிறு மந்தைதான் பின்னர் ஆயிர வருட கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் பூமியை ஆளுகை செய்யப்போகிறது.

இவர்களுக்கு மாம்ச சரீர உயிர்த்தெழுதல் இல்லை; இமைப்பொழுதிலே மறுரூபமாகி ஆவிக்குரிய சரீரங்களை இவர்கள் பெறுவதால்தான் 'முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவன் பாக்கியவான்' ஆகிறார்கள்.

ஆகவேதான் ஜீவகிரீடத்தைப் பெற சபை எவ்வாறெல்லாம் பாடுபடவேண்டும் என்று பவுல் விலாவாரியாக எழுதுகிறான். இதையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, அறிக்கைசெய்துவிட்டு ஞானஸ்நானம் எடுத்தாலே 'பரலோகம்' போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவ மண்டலம். 

பிதாவால் இழுக்கப்படாத (முன்குறித்திருக்கிறாரே) எவனும் மணவாட்டி சபையில் பங்கடையப்போவதில்லை.

 

ஆனாலும் சபையல்லாத மற்றவர்கள் அனைவருமே பூமியிலேயே மாம்ச சரீரத்தில் உயிர்த்தெழுந்து நித்திய ஜீவனுக்குத்தகுதியாவார்கள்.

 

மனிதன் பூமியில் சதாகாலமும் வாழவேண்டும் என்ற தேவசித்தம் பரிபூரணமாக நிறைவேறும்.

 

 எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,

 

 

ஆமென்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard