kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள்...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள்...


மத்தேயு 24:5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

மத்தேயு 7:13 இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள்...

இந்தக் தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காணலாம். 

கடைசி நாட்களில் அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற் தீர்க்கதரிசன வார்த்தையைப் பொய்யாக்க இந்தக் கிறிஸ்தவம் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்துகொண்டிருக்கிறது. இவர்கள் போய் 'ஆத்தும ஆதாயம்' செய்வார்களாம்; தேவன் கிரியை செய்து அநேகரை இரட்சிப்பாராம்.

லட்ச லட்சமாக கூட்டம் கூட்டி அநேகரை இவர்கள் மூலமாகவே வஞ்சிக்கவைத்து இவர்களைக் கொண்டே இந்தத் தீர்க்கதரிசனத்தை தேவன் நிறைவேற்றிக்கொண்டிருப்பது இவர்களுக்கே தெரியாது...



லூக்கா 18:8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.


ஓ நிறைய காண்பாரே என்கிறது போலிக்கிறிஸ்தவம்!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard