kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும்!!


மாற்கு 13:32. அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

இருவரும் ஒருவராம், பிதாவே கிறிஸ்துவாக வந்தாராம் என்கிற திரித்துவர்களுக்கு இந்த வசனம் வாசித்ததாக ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ!!

ஏகப்பட்ட நூலகளை எழுதிய வசந்தகுமார் எழுதுகிறார்; (உபயம் கொல்வினின் பதிவு): (இல்லாவிட்டால் இதை வேறு ஒரு சர்ச்சையாக்கிவிடுவார்கள்):

//இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்தில் மானிட வரையறைக்கு உட்பட்டிருந்தமையால் “தமது தெய்வீகத் தன்மைகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தார்.//

ஆனால் வசனம் சொல்லுகிறது,

கொலோசெயர் 2:9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.

இந்த வசனத்தை ஏனோ வசந்தகுமார் தனக்கு தேவையான இடத்தில் உபயோகிப்பார் போல், எப்படி என்றால் பிதாவும் கிறிஸ்துவும் ஒன்று என்று நிரூபிக்க உபயோகிப்பார்!! இப்பொழுது இந்த வசனம் அவர் பார்வையில் படவில்லை போல்!!

பிதா வேறு கிறிஸ்து வேறு என்று ஒப்புக்கொள்வோருக்கு இந்த வசனம் சுலபமாக புரியும்!! யெகோவா சாட்சிகளை எதிர்ப்பது மாத்திரமே கோட்பாடாகவும் கொள்கையாகவும் வைத்திருப்பவர்களுக்கு இது புரிய நியாயம் இல்லை!!

கிறிஸ்து மாம்சத்தில் இருந்த போது, மெய்யாகவே அவருக்கு தெரியவில்லை ஏனென்றால் பிதாவினால் அவருக்கு சகல ஆதிகாரமும் கொடுக்கப்படவில்லை!! ஆனால் கிறிஸ்து தன்னை ஜீவப்பலியாக ஒப்புக்கொடுத்த பிறகு அவரின் அந்தஸ்து மாறியது!!

மத்தேயு 28:18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்தப்பட ஒரு காலக்கட்டம் இருந்தது, அதன் பிறகே அவர் மேலே உள்ளதை சொல்லுகிறார்!!

ஒரு பக்கம் தேவனே மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றும் சொல்லுகிறார், ஆனால் மாம்சத்தில் வந்த பிறகு தேய்வீகத்தன்மையை முழுமையாக வெளிப்படுத்தமுடியவில்லையாம், ஆனாலும் தேவத்துவத்தின் பரிபூரணம் அவருக்குள் வாசமாக இருந்ததாம்!!

என்ன நண்பர்களே, இது குழப்பத்தின் உச்சியக இவர்களுக்கு தெரியவில்லையா!! நம்மை எதிர்க்க வேண்டும், யெகோவா சாட்சிகளை எதிர்க்க வேண்டும், ரஸ்ஸலை எதிர்க்க வேண்டும், வேத மாணாக்களை ஏதிர்க்க வேண்டும் என்பதற்கு இவர்கள் வசனத்தை எப்படி எல்லாம் வளைக்கிறார்கள் என்பது இவர்களுக்கே தெரியுதா என்னமோ!! இதோ வசந்த குமார் எழுதிய விளக்கம்!!

//இயேசுக்கிறிஸ்து பிதாவைவிடத் தாழ்வானவர் என்பதற்கு யெகோவா சாட்சிகள் சுட்டிக் காட்டும் இன்னொரு வசனம் அவர் தம் மறுவருகையின் காலம் எப்போது என்று தமக்குத் தெரியாது என்று கூறியதாகும். “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.“ (மாற். 13:32) என்று இயேசுக்கிறிஸ்து கூறியமையால் , தம் வருகையின் காலத்தை அறியாதிருந்த இயேசுகிறிஸ்து சகலமும் அறிந்தவரல்ல என்றும், இதனால் அவர் தேவனாய் இருக்க முடியாது என்றும் யொகோவா சாட்சிகள் கூறுகின்றனர் (24) உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகுதலை (யோவான் 1:14) சரியான விதத்தில் அறிந்து கொள்ளாத வரையில், அவரது இக்கூற்று யெகோவா சாட்சிகளின் தர்க்கத்தை உண்மை என்று நிரூபிப்பது போலவே தென்படும்.(25) நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து  மாமிசமாகுதல்  தெய்வீகத் தன்மைகளைத் துறப்பதையல்ல, மாறாக மானிடத் தன்மைகளை சேர்ப்பதாகவே இருந்தது. (26) ஆரம்பத்தில் தெய்வத்தன்மையுடையவராயிருந்த இயேசுக்கிறிஸ்து  மனிதராகிய போது மானிடத் தன்மைகளையும் சேர்த்துக் கொண்டார். எனவே அதன் பின்னர் இரு தன்மைகளையும் கொண்டவராகவே இருந்தார். எனினும், தேவத் தன்மைகளுடன் இருந்தவர் மானிடத் தன்மைகளை சேர்த்துக் கொண்டபோது அவர் தேவத் தன்மைகளை மானிடத் தன்மையின் வரையறைக்குள் அடக்கி வைத்திருந்தார். இதனால் தேவத்தன்மையான சகலவற்றையும் அறியும் அறிவை மானித் தன்மையான சகலவற்றையும் அறியாதிருக்கும் தன்மைக்குள் அடக்கி வைத்திருந்தார். சகலவற்றையும் அறியும் ஆற்றல் மிக்க தேவத்தன்மை உடையவராய் அவர் இருந்தும் சில விடயங்களை அறியாதிருந்தமைக்கு (27) குறிப்பாக தனது மறுவருகையின் காலத்தை அறியாதிருந்தமைக்கு இதுவே காரணமாகும். அறியாமை மானித் தன்மையின் முக்கியமான ஒரு அம்சமாய் இருப்பதனால், உண்மையான மானிடத் தன்மையைத் தம்மோடு சேர்த்துக் கொண்ட இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் சில விடயங்களை அறியாதவராகவே இருந்தார்.

 

இயேசுக்கிறிஸ்து மானிடத் தன்மையின் வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதர்களைப் போலவே சில விடயங்களை அறியாதிருந்தபோதும் சில சந்தர்ப்பங்களில், மனிதர்களால் எவ்விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத விடயங்களை அறிந்திருந்தமைப் பற்றியும் சுவிஷேசப் புத்தகங்களில் நாம் வாசிக்கலாம். அவர் மனிதர்களுடைய உள்ளங்களில் இருப்பதையும் அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை விபரங்களையும் எதிர்கால சம்பவங்களையும் அறிந்திருந்தார். (29) இதற்குக் காரணம் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்தின்படியான பணியைச் செய்வதற்காக இவ்வுலகுக்கு  வந்தமையால் , அப்பணியைச் செய்வதற்கு வேண்டிய அளவு தெய்வீக அறிவு அவருக்குகு இருந்தது. ஆனால், அவர் தாம் செய்ய வந்த பணியோடு  தொடர்பில்லாத விடயங்களைப் பொறுத்தவரை, மானிடத் தன்மையின் வரையறை காரணமாக அவற்றை அறியாதவராகவே இருந்தார். (30)

 

இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்தில் மானிட வரையறைக்கு உட்பட்டிருந்தமையால் “தமது தெய்வீகத் தன்மைகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தார்.(31) எனினும் இவ்வரையறை தெய்வீகத் தனமைகளை அவரிலிருந்து அகற்றிவிடவில்லை. தெய்வீகத் தன்மையின் செயற்பாடுகள் மானிடத் தன்மையால் மட்டுப்படுத்தப் பட்டிருந்த்து. (32) யெகோவாவின் சாட்சிகள் இயேசுக் கிறிஸ்துவின் “மாமிசமாகுதலை“ அதாவது, தெய்வீகத் தன்மைகளோடு அவர் மானிடத்  தன்மைகளையும் கருத்திற் கொள்ளாததினால் அவரது மானித் தன்மை தெய்வீகத் தன்மையில் ஏற்படுத்திய வரையறைகளை அறியாதவர்களாக, இத்தகைய வரையறைக்கு உட்பட்ட காலத்தில் அவர் கூறிய சில கூற்றுக்களை அடிப்படையாகக் வைத்து, அவரது தேவத்துவத்தை மறுதலித்து வருகின்றனர். இயேசுக்கிறிஸ்து மானிட வரையறைக்கு உட்பட்டிருந்த காலத்திலும் தேவத் தன்மை உடையவராகவே இருந்தார் என்பதை கொலோசெயர் 2:9 அறியத் தருகிறது. (33)//



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

அப்ப அங்க வரார் இங்க வந்துட்டார் ன்னு சொல்றதெல்லாம் 

 என்னதுங்க ???????????????????????????????????????



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 14:3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.

அவர் வருவது அவருடன் சேர்த்துக்கொள்ள தானே அன்றி கள்ளத்தீர்க்கதரிசிகளிடம் தீர்க்கதரிசனம் சொல்ல இல்லை!! அடிக்கடி வந்து போவதாக அவர் சொல்லவும் இல்லை!! அவர் சொல்லாததை இந்த குட்டத்தார், என் காரில் வந்தார், என் பைக்கில் வந்தார், என் வீட்டில் வந்தார் என்றால் என்னங்க அர்த்தம்!! ஒன்று இவர்கள் மெண்டல் அல்லது துனிகரமாக கிறிஸ்துவின் நாமத்தை சொல்லிக்கொண்டு பொய் பேசுபவர்கள்!!

நமக்கு அகஸ்டின் ஜெபக்குமார் என்றோ, வின்செண்ட் செல்வகுமார் என்றோ சாது என்றோ தினகரன் என்றோ ஆலன் பால்................... என்றோ வித்தியாசம் இல்லை!! கள்ள தீர்க்கதரிசனம் சொல்லுபவர்கள் கள்ள தீர்க்கதரிசிகளே!! சில தளங்களில் இந்த கள்ள தீர்க்கதரிசிகளுக்குள்ளும் தரம் பிரித்து எழுதுவது உண்டு!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard