kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அகஸ்டின் ஜெபகுமாரும் சளைத்தவன‌ல்ல‌...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
அகஸ்டின் ஜெபகுமாரும் சளைத்தவன‌ல்ல‌...


 

 

இந்த ஆள் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பதற்கு இதற்குமேல் ஆதாரம் தேவையா?

2009ல் இஸ்ரவேலில் அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லையே...

இவனுக்கு இவன் பேசும் பேச்சுக்கு நிறைய விசிறிகள் உண்டு. பீஹாரை புரட்டிப்போடக் கிளம்பியவன்.

இது எந்த ஆவியில் வந்த தீர்க்கதரிசனமாம்...?



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

உபாகமம் 18:20-22 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

அகஸ்டின் ஜெபக்குமார் என்கிற தீர்க்கதரிசி / மிஷனரி என்று திரு ஜோசப் அவர்களால் ஆதங்கப்பட்டு நம்மை சபிக்கும் அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்த ஒரு ஊழியர்!! இவர்கள் எந்த ஆவியில் தீர்க்கதரிசினம் சொல்லுகிறார்கள் என்பதும், அது நிறைவேறியதா அல்லது நிறைவேரவில்லையா என்பதை குறித்து எல்லாம் இவர்களின் விசிரிகளுக்கு அக்கறை இல்லை!! இஸ்ராயேல் மீது படை எடுக்கும் தேசம் தான் அந்திகிறிஸ்து என்று இவர்களின் வேத அறிஞர்களின் வார்த்தைகளை நம்பி, அப்பொ அப்போ இது போன்று புறுடாக்களில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!! இப்படி பட்ட ஒரு ஆவியில் பேசும் ஒரு மனிதன் உத்தமமான ஊழியனாம், தீர்க்கதரிசியாம், எல்லாவற்றுக்கும் மேல், நமக்கு மிஷனரி என்றால் தெரியாது, இவர்களை போன்றவர்கள் தான் நமக்கு மிஷனரிகள் யார் என்று அடையாளமாக இருக்கிறார்களாம்!! கேடு கெட்ட ஆவியில் இருக்கும் இந்த மனிதர்களின் பேச்சை இன்னும் அதிகமாக பிரபலப்படுத்தி, இந்த கொமாளிகளின் (ஜோசப் அவர்கள் மன்னிக்கவேண்டும், உங்களுக்கு வேண்டுமென்றால் இவர் பிஹாரை கலக்கிய மிஷனரியாக இருக்கலாம், ஆனால் இவரின் ஆணவம் நிறைந்த "தீர்க்கதரிசினம்" இவர் எந்த ஆவியில் சொன்னார் என்று தாங்களும் சிந்திக்க வேண்டும்) வேஷத்தை கலைக்க வேண்டும்!!

வாழ்த்துக்கள் சகோதரரே, தொடர்ந்து இது போன்ற வெளியீடுகளால் "ஊழியர்கள்" யார் என்ரும் "ஓநாய்கள்" யார் என்றும் வித்தியாசப்படுத்திகொண்டு இருங்கள்!! இவர்களுக்கு இனி "அந்தி கிறிஸ்து" வந்து உலகத்தை ஆளப்போறானாம்!! எதை படித்து வாந்தி எடுக்குறாங்களோ!!

ஏசாயா 28:8 போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதற்கெல்லாம் மூச்சே விடமாட்டார்கள் பிரதர்...

ஏனென்றால் இவனுகளும் இதேபோலத்தானே புரூடாவிட்டு, ஜனங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறானுவ‌...

வெக்கங்கெட்டவர்கள்.

கேட்டால் அவர் (அகம்பாவ ஜெபகுமார், அப்போஸ்தலராம்) செய்யும் மற்ற ஊழியங்களைப்பாருங்க, யாருமே Perfect கெடையாது என்றெல்லாம் அறிவுகெட்டத்தனமாக உளறி compromise செய்துகொள்வார்கள். அந்திகிறிஸ்துவின் ஆவிக்குள் இருப்பவர்கள், பாபிலோன் வேசி கொடுக்கும் மதுவின் மயக்கத்தில் இதெல்லாம் புரியாது..

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வேசித்த‌னமென்றால் என்னவென்று புரிகிறதா?

அகஸ்டின் ஜெபகுமார் பற்றி நாங்களும் ஒருகாலத்தில் பெரிய அபிப்ராயம் கொண்டிருந்தவர்கள்தான். ஆனால் அவனும் ஒரு டம்மி பீஸ் என்று தெரிந்தபோது மிகவும் விசனப்பட்டோம். ஜிப்பா போட்டுக்கொண்டு வைராக்கியமால் ஜெபக்குமார் பேசும் பேச்சுக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. ஆனால் அவனும் பாபிலோன் சபையின் 'எக்ஸ்டன்ஷன்' என்றறிந்தபோது மிகவும் விசனப்பட்டோம்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஸ்டாலினும் , ஹிட்லரும் வேசியின் மகன்களா? அவர்கள் என்ன வாதைக்கு உள்ளானார்கள்? இவர்களுக்கு வேசியின் வாதை மரிப்பதற்கு முன்னமே வந்து விட்டதா அல்லது ஆயிரம் வருட அரசாட்சியின் போது வாதிக்கப்பட்டு பின்பு சுவிஷேசம் அறிவிக்கப்படுமா?//

வேசியின் மகன் என்று சொல்லுவது சில்சாம் சொல்லியது போல் அல்லாமல், பாபிலோன் என்கிற மகா வேசியான சபை (கள்ளத்தீர்க்கதரிசினங்களும், கள்ள போதகமும் நிறம்பியிருக்கும் சபைகள்) என்றே அர்த்தம், இல்லாவிட்டால் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட புரிந்துக்கொள்ளுதல் இருக்கும், அதை வைத்துக்கொண்டு பெரிய கலவரத்தை தூண்டிவிடுவீர்கள்!!

ஸ்டாலினும், ஹிட்லரும் என்பவர்கள் இந்த சபைகள் பக்கம் தலைவைத்து படுத்தது கிடையாது!! இங்கே சொல்லப்பட்டிருக்கும் இவர்கள் சபையில் இருந்து கள்ள தீர்க்கதரிசனம் (இஸ்ராயேல் மீது ஈரான் போர் எடுக்கும், தேவன் கைபிடித்து ஸ்டீஃபன் அவர்களை எழுதவைத்து போன்றவை) சொல்லிக்கொண்டும் பிதற்றிக்கொண்டும் இருப்பவர்கள் தான் இந்த பாபிலோனிய சபையின் வம்சத்தார்!! ஸ்டாலினும் (எந்த ஸ்டாலினை சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை), ஹிட்லரும் இரட்சிக்கப்படுவார்கள், சத்தியத்தை அறிந்துக்கொள்ள என்பதே நாங்கள் சொல்லும் நற்செய்தி!! ஆனால் நீங்களோ உங்கள் உள்ளங்களில் இருக்கும் வெறியில், பழி வாங்கும் எண்ணத்துடன் அவர்கள் நரகத்திற்கு (!!) செல்வார்கள் என்றும் போதித்துக்கொண்டு இருக்கிறீர்கள்!!

சகோ அன்பு அவர்களை பொறுத்தவரையில் உங்களை போன்ற கள்ள தீர்க்கதரிசனங்களிலோ, கள்ள போதனைகளிலோ அவருக்கு உடன்பாடு கிடையாது!! தேவனை அறிகிற அறிவு உடைய அனைவரும் சத்தியத்தை அறிந்துக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ தயங்க மாட்டார்கள்!! சகோ அன்பு அவர்கள் நிச்சயமாக தேவனை அறிகிற அறிவை பெற்றிருக்கிறார், அந்த ஞானம் (அபிஷேகம்) அவரை வழிநடத்தும்!! எல்லாருக்கும் இரட்சிப்பு இருக்கா இல்லையா என்பதை அவரும் வசனங்களுடன் புரிந்துக்கொள்வார்!! சகோ அன்பு அவர்களையும் டீவிக்களில் தோன்றும், ஜிப்பா போட்டு கத்தி பேசும் ஊழியர்களையும் ஒப்பீட்டு பேசாதீர்கள்!!

நாங்களும் ஒரு காலத்தில் அகஸ்டின் ஜெபக்குமாரின் ரசிகர்கள் தான், அவர் பேச்சு அப்படி ஆக்ரோஷமாக இருக்கும், ஆனால் இப்ப தான் தெரியுது, அதில் சத்தியம் இல்லைம் வெறும் காற்று தான்!! கள்ள தீர்க்கதரிசினம் தான்!! ஆனால் நீங்கள் எல்லாம் ஊழியர்களை எதிர்த்து பேச மாட்டீர்கள், அப்படி பேச கூடாது என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கும், நீங்கள் தாராளமாக அதை பின்பற்றுங்கள்!! உங்களுக்கு எந்த ஊழியரை பிடிக்கவில்லையோ (சாது, வின்செண்ட் போன்றோர்) அவர்களை மாத்திரம் நீங்கள் விமர்சனம் செய்யுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

அவர் தீர்க்க தரிசனம் சொல்ல வில்லை நான் சொல்கிறேன் என்று தான் சொன்னார், கர்த்தர் உரைக்கிறார் என்றோ ? தேவன் சொல்கிறார் என்றோ ? சொல்லவில்லை 


இது தான் ஆப்பு அடிகிரவன் ஆனி புடுங்கறது


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நல்ல வேளை அவர் தேவனை இழிவுப்படுத்தாமல் விட்டதற்கு!!

அவர் தேவன் சொன்னார் என்றால் என்ன தானாக சொல்லுகிறேன் என்று சொன்னால் என்ன? மொத்தத்தில் அது நடக்கவில்லை தானே!! அவர் தானாக சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஏன் ஒரு சபை தேவைப்படுகிறது, விசுவாசிகள் தேவைப்படுகிறார்கள், கைய்யில் வேதப்புத்தகமும், பின்னால் ஊழியத்தின் பெனரும் தேவைப்படுகிறது!!

இவர் ஒரு படி மேலே போய், தேவன் சொன்னார் என்று சொல்லாமல் "நான்" சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர் யார் என்று நமக்கு புரியவைத்திருக்கிறார்!!

ஆப்பு, ஆனி.........!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"I Prophesise" என்று கொட்டை எழுத்தில் சொல்கிறானே அதற்கு என்ன அர்த்தமாம். மேலும் தேவசெய்தியளிப்பவர் என்றுதானே இந்த ஊழியக்கார குப்பைகள் விளம்பரப்படுத்துகிறது...

சப்பை கட்டு கட்டி ஊழியர்களைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.

கேவலமான பொழப்பு!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

அகஸ்டின் ஜெபக்குமாருடன் என்னை ஒப்பிடுகிறார்களா? விஷயம் தெரிந்தால் அகஸ்டின் வருத்தப்படப் போகிறார்.

உங்களுக்கும் எனக்குமுள்ள ஒரு கருத்து வேறுபாட்டை பெரிதுபடுத்தி நமக்கிடையே சிலர் சிண்டு மூட்டிவிட முயற்சிப்பதை உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன்.

நான் சற்று மதிப்பு வைத்திருந்த அகஸ்டின் ஜெபக்குமாரும் (போலித்) தீர்க்கதரிசனம் உரைத்து மாட்டிக்கொண்டதை இத்திரி மூலம் அறிந்தபோது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆகிலும் அவரது போலித் தீர்க்கதரிசனத்திற்கான ஆதாரத்தைத் தேடிப்பிடித்து வெளியிட்ட soulsolution-க்குப் பாராட்டுக்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு:
//சகோ.பெரியன்ஸ் அவர்களே!
அகஸ்டின் ஜெபக்குமாருடன் என்னை ஒப்பிடுகிறார்களா? விஷயம் தெரிந்தால் அகஸ்டின் வருத்தப்படப் போகிறார்.//


நான் எழுதிய இந்த வரிகளை கொண்டு சகோ அன்பு மேலே எழுதியிருக்கிறார்:
//சகோ அன்பு அவர்களையும் டீவிக்களில் தோன்றும், ஜிப்பா போட்டு கத்தி பேசும் ஊழியர்களையும் ஒப்பீட்டு பேசாதீர்கள்!! //

அன்பு அவர்களே, இது பொதுவாக ஊழியர்களை வித்தியாசப்படுத்தி எழுதிய ஒரு உடையாகுமே தவிர, அகஸ்டின் ஜெபக்குமார் என்பவர் மாத்திரமே இந்த உடைக்கு சொந்தக்காரர் அல்ல!! இதை மனதில் வைத்து நான் உங்களை அகஸ்டின் ஜெபக்குமாருடன் ஒப்பீட்டு எழுதியதாக என்ன வேண்டாம்!! அவரை உங்களுடன் ஒப்பீட்டு பேசும் அளவிற்கு ஒன்றும் கிடையாது!!


//உங்களுக்கும் எனக்குமுள்ள ஒரு கருத்து வேறுபாட்டை பெரிதுபடுத்தி நமக்கிடையே சிலர் சிண்டு மூட்டிவிட முயற்சிப்பதை உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொண்டேன். //

இவர்களது கூட்டம் கத்தோலிக்க சபை முதல் இன்று துவங்கிய ஒரு "ஆவிக்குறிய" சபை வரைக்கும் இருக்கும், அதில் 1000 பேதங்கள், விசுவாச குளறுபடிகள் இருக்கலாம், ஆனால் திரித்துவம் என்கிற ஒரே நூலை பிடித்துக்கொண்டு இவர்களை அனைவரும் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்!! இதில் விஷயம் என்னவென்றால் திரித்துவம் வேதத்தில் இல்லை என்பது நீங்களும் நானும் அறிவோம்!! இவர்களுக்குள் இருக்கும் வேறுபாடுகள் பார்த்தால் இவர்கள் நம்மை குறித்து சொல்ல தகுதியோ விரல் நீட்டவோ கூடாத நிலையில் இருப்பவர்கள்!! சரி ஆசைப்படுகிறார்கள், எழுதுகிறார்கள்!! நமக்கு விஷயம் தெரியும்!! தேவன் யார் என்றும் கிறிஸ்து யார் என்றும் அறிவு இல்லாதவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் சாரி கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிறார்கள்!!

//நான் சற்று மதிப்பு வைத்திருந்த அகஸ்டின் ஜெபக்குமாரும் (போலித்) தீர்க்கதரிசனம் உரைத்து மாட்டிக்கொண்டதை இத்திரி மூலம் அறிந்தபோது சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஆகிலும் அவரது போலித் தீர்க்கதரிசனத்திற்கான ஆதாரத்தைத் தேடிப்பிடித்து வெளியிட்ட soulsolution-க்குப் பாராட்டுக்கள்.//

எந்த மனுஷனும் பொய்யனே என்பதை அகஸ்டின் ஜெபகுமாரும் நிரூபித்திருக்கிறார்!! அவ்வளவே!! தீர்க்கதரிசனம் எல்லாம் எழுதியாகிவிட்ட போது, அதை ஏன் நான் தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன் (I PROHESISE) என்று சொல்லவேண்டும்!! ஒரு காலத்தில் நாங்களும் அகஸ்டின் ஜெபக்குமாரின் ரசிகர்களாக தான் இருந்தோம்!! அவர் பேசிய ஆக்ரோஷமான வார்த்தைகளில் ஏமாந்து போனோம்!! வேதத்தை ஆராய்ந்து பார்த்த போது தான், அகஸ்டின் ஜெபக்குமாரின் வார்த்தைகளில் ஆக்ரோஷம் மாத்திரமே இருக்கிறது, சத்தியம் இல்லையே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இது குறித்து எந்த .... யும் எந்த கிறிஸ்தவ‌தளத்திலும் பதில் கொடுக்க மாட்டாது. எதையாவது சொல்லி அவனை(அ.ஜெ.கு) காப்பாற்றப்பார்ப்பார்கள்.
அவனுக்கும் ஆக்ரோஷமாக சிவாஜி பாணியில் கத்தத்தான் தெரியும். நான் அனுப்பிய கேள்விகளுக்கு மெயிலில் பதில் அளிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டவன் இந்த அ,ஜெ.கு. பென்னிஹின்னை போலி என்று சாடியவன், தினகரன்களை ஏசியவன். பீஹாரைத்திருத்தக் கிளம்பியவன். இவனது ஊழியத்திலும் நாடார் சமூகத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் என்று ஜெம்ஸ்சை சேர்ந்த சிலரே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

ஜிப்பா போட்ட கோமாளி!

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அண்ணன் அகஸ்டினைக் காப்பாற்றும் முயற்சி, இதையும் சேர்த்து ஆராயுங்கள். அபிஷேகம் இழுக்கிறதாம்.


Augustine Jebakumar calls Todd Bentley as God's anointed

 

 

யார் இந்த Todd Bentley?

இதோ , இந்தக் கள்ளத்தீர்க்கதரிசியின் 'அபிஷேகம்'தான் அண்ணனை இழுத்திருக்கிறது... ஆச்சரியமே இல்லை.

 

100% Proof that Todd Bentley is a False Teacher!

 



-- Edited by soulsolution on Sunday 5th of June 2011 07:05:35 AM



-- Edited by bereans on Sunday 5th of June 2011 10:10:43 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அகஸ்டின் ஜெபக்குமாரின் தீர்க்கதரிசனம் பொய்த்துவிட்டது என்பதற்காக அவரின் அபிமானிகள் கொடுக்கும் விளக்கங்கள்:

ஜான்:
//வேதம் எழுதி முடிக்கப்பட்ட பின்பு சொல்லப்படும் எந்த ஒரு தீர்க்கதரிசனமும் குறைவுள்ளதே!//

இதற்கு வசனம்:

நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. (1 கொரி 13 :9 )

1 கொரிந்தியர் 13:8. அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 9. நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. 10. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

எதற்கு இதை சொல்லுகிறார் என்பதை கூடவா புரிந்துக்கொள்ள முடியவில்லை!! தீர்க்கதரிசனம் ஒழிந்துபோம் என்று தெளிவாக சொல்லுகிறாரே பவுல், ஆனாலும் இன்னும் தீர்க்கதரிசனம் (கள்ள தீர்க்கதரிசனம்) சொல்லுகிறோம் பேற்வழி என்று சொல்லி அது நடக்காமல் போனால், அதற்கு இந்த வசனத்தை கோர்த்து விடுகிறார்கள் அபிமானிகள்!!

நிறைவானது வரும்போது, அதாவது வேத வசனம் எல்லார் கைய்யிலும் வந்த பிறகு குறைவானது (தீர்க்கதரிசனம் தான்!!) ஒழிந்துபோம் என்கிறாரே!! இதை எல்லாம் வாசிப்பதே கிடையாதா!!

வெளி. 22:18. இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

வேத புத்தகம் அனைவரின் கைகளிலும் வந்த பிறகு, இன்னும் தேவன் எனக்கு இதை சொன்னார், அதை சொன்னார், இப்படி அப்படி செய்ய சொன்னார், இதற்கு உங்களிடத்தில் தான் காணிக்கையும் வாங்க சொன்னார், யூத்தங்கள் வரும், நிலநடுக்கம் வரும், கடல் கொந்தலிக்கும் போன்றவற்றை வேதம் ஏற்கனவே சொல்லியிருக்கிறது, நிறைவாக சொல்லப்பட்டு விட்டது, இதை குறைந்த புத்தியுள்ள மனிதன் தன்னிடம் தேவன் சொன்னதாக சொல்லி, அது நடக்காமல் போனாலும், அவருக்கு ஆதரவு தர இத்துனை பேர் இருக்கும் போது, இது போன்ற துனிச்சல் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கும்!!

இப்ப இருக்கும் சூழ்நிலைகளில் எந்த நாடு எந்த நாட்டிற்கு விரோதமாக யுத்தம் செய்யும் என்று யூகித்து சொல்ல ஒரு சாதாரன மனிதனே போதும்!! ஆனால் இவர்கள் மேடை போட்டு நான் தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன் என்று சொல்லுவார்களாம், அது நடக்காதாம், ஆனாலும் அவரின் தீர்க்கதரிசி என்கிற அந்தஸ்தோ, ஊழியர், மிஷனரி என்கிற அந்தஸ்தோ அப்படியே இருக்குமாம்!! அப்படி என்றால் நீங்கள் தேவனுக்கு பயப்படுகிறவர்களா அல்லது ஊழியர்களுக்கா!!

தீர்க்கதரிசனங்கள் எழுதப்பட்டு விட்டது, இனி புதிதாக ஒன்றும் இல்லை என்று வேதம் சொல்லியும் இவர்களின் துனிச்சலை பாராட்ட தான் வேண்டும், இவர்களுக்கு இத்துனை ஆதரவு இருக்கும் போது ஏன் இதை செய்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்!!

சில்சாம்:
//இப்போதைக்கு சில வரிகளில் சொல்லுகிறேன், அண்ணன் அகஸ்டின் அவர்கள் உண்மைக்கு மாறாக எதையும் சொல்லவில்லை; இன்னும் அவை நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அப்படியே இருக்கிறது; உரைக்கப்பட்டவற்றில் 2009 -ல் ஈரான் இஸ்ரவேலைத் தாக்கும் என்பதைத் தவிர மற்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதானிருக்கிறது;இவற்றையெல்லாம் ஏற்கனவே செய்தி தாள்களிலும் ஊடகங்களிலும் பார்த்துக்கொண்டுதானேயிருக்கிறோம் என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம்; ஆனால் காரியம் அதுவல்ல, இவை ஏற்கனவே வேதத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் அவை சம்பவிக்கப்போகும் காலக்கட்டம் இதுவே என்பதுவுமே தீர்க்கதரிசனமாகும்; தீர்க்கதரிசனம் என்பதற்கு மூலபாஷையின் ஆதாரத்தில் மேலும் இரு பொருள்களும் உண்டு;அவை உபதேசித்தலும் எச்சரித்தலுமே;

இதையே அண்ணன் அகஸ்டின் அவர்கள் செய்திருக்கிறார்; வருடம் 2009 என்று கணித்தது ஒன்றே எதிரிகளின் தூஷணத்துக்குக் காரணமாக இருக்கிறது; ஆனாலும்,//

அனுதினமும் செய்திகளில் வருகிற ஒரு விஷயத்தை சொல்லுவது தீர்க்கதரிசனம் கிடையாது!! அண்ணன் அகஸ்டின் சொல்லியது அனைத்தும் செய்தி தாள்களில் இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? இவைகள் சம்பவிக்கப்போகும் காலக்கட்டம் இதுவே என்பது தான் தீர்க்கதரிசனமாகும் என்று சொல்லி அது நடக்காமல் போனாலும் அவர் தீர்க்கதரிசியோ!! வேதம் என்ன சொல்லுகிறது,

உபாகமம் 18:22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

வருடம்  2009 என்று கணித்தது ஒன்றே தூஷணத்துக்கு காரணமாக இருக்கிறது என்றாலும் அவர் சரியான தீர்க்கதரிசியோ!! தேவன் சொல்லாததை தீர்க்கதரிசனம் என்று சொல்லுபவருக்கு ஏன் இத்துனை ஆதரவு!! நாங்கள் எதிர்க்கிறோம், ஆகவே எங்களை எதிர்ப்பது ஒன்றே நோக்கமாக வைத்திருப்பது தானே!! நடக்கவில்லை என்றால் அது கள்ளத்தீர்க்கதரிசனம் தான் அதை உறைப்பவர் கள்ள தீர்க்கதரிசி தான் என்று துனிச்சலாக சொல்ல எது தடுக்கிறது!!

உலகில் நடக்கும் எதிர்ப்பாராத விஷயங்களை ஏன் இந்த தீர்க்கதரிசிகள் சொல்லாமல் இருக்கிறார்கள், பின் லேடன் மரித்தது உட்பட!! முடியாது!! ஏனென்றால் அப்படி ஒன்றும் இல்லை!! வேதத்தில் எல்லாம் சொல்லியாகிவிட்டது, அந்த தீர்க்கதரிசனங்கள் சபைக்கு பிரயோஜனமானவைகள்!! இப்பொழுது குறி சொல்லுதல் தான் நடக்கிறது, இதை தீர்க்கதரிசனம் என்று சொல்லி தயவு செய்து தேவனின் நாமத்தை தூஷிக்காதீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

தேவ (பாவ) ஊழியர்கள் அப்படித்தான் மாத்தி மாத்தி  பேசுவார்கள் அதையெல்லாம் நீங்களோ நானோ கேட்டால் தேவ கோபம் நம் மேல் வரும் என்று சபிப்பார்கள் ஜாக்கிரதை !ஃ!!!!!!!



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அபிஷேகம் அண்ணனை பீஹாரிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டுபோய் இருக்கிறது. அமெரிக்காவுக்கு இவன் எதற்குப் போனானோ தெரியவில்லை. 

ஒருவேளை பீஹாரில் ஒரு ஆள்விடாமல் எல்லாரும் இரட்ச்சிக்கப்பட்டுவிட்டார்களோ?

அதுசரி 'தேவன்' போகச்சொல்லியிருப்பார். அங்கிருக்கும் தமிழ் கிறிஸ்தவன் பரலோகம் போக வேண்டுமே.

தினகரன் அமெரிக்கா போனால் ஆடம்பரம்.

இவர் போனால் ஊழியம்...

ஃப்ரீ பாஸ்தான் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

மிகவும் எளிமையான ஊழியர்,

அமெரிக்காவுக்கு நடந்தே போயிருப்பாரோ?

 



-- Edited by soulsolution on Sunday 5th of June 2011 08:35:52 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜோசப்:
//தாமதித்தாலும் நடக்கும் தீர்க்கதரிசனங்களும் உண்டு, ஏன் யோனா கூட அன்னைக்கு நினிவே கவிழ்க்கப்பட்டு போகும் என்றார் ஆனால் கவிழ்க்கப்படாததால் டென்ஷனாகி மண்டை காய்ந்து போனார் என்று வேதத்திலேயே பார்க்கிறோம். கடைசியில் ஆத்துமாக்களை குறித்த கரிசனையை தேவன் அவருக்கு விளக்கியதால் தான் ஏன் நினிவே கவிழ்க்கப்படவில்லை என புரிந்தது. உங்களுக்கு ஏன் அகஸ்டின் ஜெபக்குமார் மேல் அவ்வளவு கோபம், ஓ அவர் மிஷனரி ஊழியம் செய்யுறாருல்ல அதான் உங்களுக்கு பத்திக்கிட்டு எரியுது போல. அவரை சகோதரர்ன்னு நாங்க சொன்னா உமக்கென்னய்யா. அவர் கிறிஸ்துவுக்குள் சகோதரர் தான்.//

தாமதித்தாலும் நடக்கும் தீர்க்கதரிசனம் இருந்தால் அது நடக்க தாமதாமாகிற்று அல்லது தேவனே இதையும் வந்து சொன்னார் என்று சொல்ல வேண்டியது தானே உங்கள் அண்ணன்!! அகஸ்டின் ஜெபக்குமார் மீது எனக்கு அல்லது எங்களுக்கு எந்த பிரகரமான பங்காளி சண்டை கிடையாது, அல்லது கொடுக்கல் வாங்கள் கிடையாது!! கிறிஸ்துவின் நாமத்தில் போதிக்கும் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும், இல்லாததை போதித்தால் இந்த தளத்தில் நிச்சயமாக எழுதப்படும்!! அவர் மிஷனரியாக இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை, அவர் தீர்க்கதரிசியாக இருந்தாலும் எனக்கு ஒன்றும் இல்லை, ஆனால் வேதத்தின் தேவனின் நாமத்தில் தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன் என்று கள்ள தீர்க்கதரிசனம் சொன்னால், நிச்சயமாக நான் எழுதுவேன்!! ஏன் தீர்க்கதரிசனம் சொல்லியும் அது நடக்கவில்லையே, அதை பற்றி வேறு எவரும் கேள்வி கேட்க்கவில்லை, உங்களுக்கு என்னடா, என்று கேட்கிறீர்களோ!! கள்ள தீர்க்கதரிசிகளை தாராளமாக நீங்கள் சகோதரர்கள் என்று அழைத்துக்கொள்ளுங்கள், எனக்கு என்ன ஆட்சேபனை!! யாருக்கு "பத்திக்கிட்டு எரியுது" என்று தெரியவில்லை!! ஆனால் இப்படி எழுதிவிட்டு நாளைக்கு நாகரீகத்தை குறித்து நீங்கள் முதல் ஆளாய் சோல் சொல்யுஷனையும் அவருக்கும் துனை போகிற என்னையும் வசைப்பாடுவீர்கள்!! உங்களுக்கு எல்லாம் இப்படி கேட்க வெட்கமாகவும் இருக்காதே!! தாமதித்தாலும் அவர் சொன்னது நடந்தே ஆகும் என்று உங்களால் உறுதி தர முடியுமா!! இப்படி எல்லாம் ஒரு தனி மனிதனை (கள்ள தீர்க்கதரிசனம் சொல்லி, டாட் பெண்ட்லி என்பவன் அபிஷேகம் பெற்றவன் என்று சொல்லுபவரை) ஆதரிக்க என்ன காரணம் என்று தெரிந்துக்கொள்ளலாமா!! பீஹாரையே அவரது மிஷனரிகள் மாற்றி இப்போ அங்கே அனைவரும் கிறிஸ்துவை அறிந்தவர்களாக மாறி விட்டார்களோ!! என்ன காரணம் என்று சொல்ல முடியுமா!!

//You too have no rights to speak about Bro Augustine.//

I have all the rights to speak on Augustine Jebakumar or so called Preachers who so called Evangelists, or so called People (Servants) of God!! If they speak in the Name of God, and if it doesn't happen, I have all the rights to comment on it!! What bothers you, just because you people belong to same place or same denomination!! What bugs you if a false prophet is exposed!! That means you support false prophets and their false prophesies!! And what bothers you if I or we speak out on false prophets!! It is not that we have any personal grudge or enmity on these people!! When you have all the authority to comment on Russell or Bible Students or Jehovah's witnesses' or some other denomination, don't you think we too have the same authority!! Why are you bothered!!?? I am not pulling down you!! I did not say you prophesied!! But the Bible clearly says about these false prophets:

Deuteronomy 18:22
Amplified Bible (AMP)

22When a prophet speaks in the name of the Lord, if the word does not come to pass or prove true, that is a word which the Lord has not spoken. The prophet has spoken it presumptuously; you shall not be afraid of him.

Deuteronomy 18:22
New International Reader's Version (NIRV)

22 Sometimes a prophet will announce something in the name of the Lord. And it won't take place or come true. Then that's a message the Lord hasn't told him to speak. That prophet has dared to speak on his own authority. So don't be afraid of him or what he says.

Speak what the Bible speaks!! Just to support Augustine Jebakumar don't change tracks!! Don't compare Johna's incident with Augustine Jebakumar and make him so huge!! I think you people are not afraid of the Scriptures, but afraid of these False Prophets!! Pity!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

POINT TO POINT >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> BIHAR TO AMERICA 

BUS NO 420. 



__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Joseph:

//ஆமாண்ணே இவுகளோட மிஷன் ஸ்டேட்மெண்ட்டை நான் முழுசா படிச்சதில்லை. தீர்க்கதரிசனமெல்லாம் கிடையாதாமா? அடங்கொப்புரானே கிழிஞ்சது போங்க. இவுக லிஸ்ட்டுல எது எது இருக்கு இல்லன்னு புரிஞ்ச்சுக்கிறதுன்னே நமக்கு கழண்டுடும் போல.//

குப்பை தனமாகவும் எழுத தெரியும் போல்!!

குறி சொல்லுவதை உங்கள் ஆட்கள் தீர்க்கதரிசனம் என்று கண்களில் ஒத்திக்கொள்கிறார்கள்!! ஜெபக்குமார் சொல்லுவது தீர்க்கதரிசனமாம், அதே வின்செண்ட் செல்வகுமார், சாது கள்ள தீர்க்கதரிசிகளாம்!! அட போங்கைய்யா வெங்காயங்களா!!

அகஸ்டின் ஜெபக்குமாரின் கள்ள தீர்க்கதரிசனத்தை காப்பாற்ற இத்துனை பாடுகள் படுகிறீர்களே, வெட்கமாக இல்லையா!! வசனத்துக்கு விரோதமாக போயும் ஒரு மனுஷனை காப்பாற்ற விரும்புவது உங்கள் புத்தியை காண்பிக்கிறது!! குறி சொல்லுவதை, ஜோஷியம் பார்ப்பதையும் தீர்க்கதரிசனம என்று பிதற்றுவது வெட்ககேடு!!

Chillsam:

//இரஸல் கூட தான் இதைவிட மோசமான கணிப்பையெல்லாம் செய்து கோதுமை வித்தாரு... சிலரு அவருடைய உபதேசத்திலே பிரதான "6" கொள்கையைப் பிடிச்சுகிட்டு தொங்கலையா..? //

ஆமாய்யா கணிப்பை தான் கொடுத்தார், தீர்க்கதரிசனம் சொல்லுகிறேன் என்று பித்தலாட்டம் செய்யவில்லை!! ரஸ்ஸலிடம் இருந்த பணத்தை வாரி இறைத்தார், உங்கள் கள்ள தீர்க்கதரிசிகளை போல் காணிக்கை அனுப்புங்கள் என்று தொலைக்காட்சியில் வாய் கிழிய, பல வங்கி கணக்குகளை வைத்துக்கொண்டு இதில் உங்கள் காசை போடுங்கள் என்று சொல்லுவது, கர்த்தருக்கு கொடுங்கள் என்று தேவனின் நாமத்தில் பகல் கொள்ளை அடிப்பது எல்லாம் ரஸ்ஸலிடம் இல்லைய்யா!! உமக்கு இருக்கும் புத்தியின்படி தானே நீர் யோசிப்பீர்!! கணிப்புக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் வித்தியாசம் தெரியாத கோமாளிகளாக இருந்துக்கொண்டு என்னய்யா கள்ள தீர்க்கதரிசிக்கு வக்கலாத்து!!

இப்ப தான் நாட்டில் ஊழலுக்கு விரோதமாகவும் கருப்பு பணத்திற்கு விரோதமாக குரல் எழும்ப தொடங்கியிருக்கிறது, இன்னும் கொஞ்ச நாட்கள் தான், கள்ள தீர்க்கதரிசிகளும் இதே லிஸ்டில் சேருவார்கள், அப்ப பாரும் பல அண்ணன்மார்கள் என்ன செய்கிறார்கள் என்று!! ஆனா வெட்கங்கெட்டவர்கள், அதையும் கிறிஸ்துவின் நிமித்தம் உள்ள பாடுகள் என்று பிதற்றுவார்கள், அதையும் "விசுவாசிகள்" (ஊழியர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள்) ஆமாம் என்று நம்புவார்களே!! இந்த வசனங்கள் எல்லாம் "அண்ணன்மார்களை" குறித்து தான்:

மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

மாற்கு 13:22 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

லூக்கா 6:26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

II பேதுரு 2:1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

'ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்' என்றுதான் வேதம் சொல்கிறது. வஞ்சனை ஒருபோதும் வெளிப்புறமாகத் தெரிவதில்லை. உள்ளுக்குள்ளேயே இருந்துகொண்டு 'ஆப்பு' வைப்பதுதான் வஞ்சனை. 

இந்தாள் அமெரிக்காவுக்கு எதற்கு 'மிஷனரி' ஊழியத்துக்குப் போனானாக்கும்? அடுத்தவன் பணத்தில் உடல்வளர்ப்பதுமில்லாமல் ஊர்வேறு சுற்றுகிறார்களோ? 

ஏன் Todd Bentley யின் அபிஷேகம் அத்தனை வல்லமையாக இருந்தால் அவனை கூப்பிட்டு இந்தியாவில் கூட்டம் நடத்தலாமே.

 

இந்தாள் பென்னிஹின் கூட்டத்துக்குப்போய் அங்கு 'அபிஷேகமே' இல்லை. அவன் இரட்சிப்பைக் குறித்து பேசவே இல்லை என்றும், தினகரன்கள் பற்றி பல வேளைகளில் நேரடியாகவே கடிந்து பேசியிருக்கிறான். 

'நான் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன்' என்பதே தெரியாமல் நடப்பதுதானே வஞ்சனை....

 

மிஷனரி ஊழியம் அத்தனை உயர்வானதாகத் தெரிந்தால் போகவேண்டியதுதானே, யாராவது தடுத்தார்களா? இல்லை 'அழைப்பு' வரவில்லையா? எங்களைப் பொறுத்தவரை எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

 

மூளைச் சலவை செய்து அனுப்புவதுதான் மிஷனரி ஊழியம். பெரும்பாலும் பரிதாபத்துக்குரிய, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ளவர்களைத்தான் இப்படி ஊர் விட்டு ஊர் அனுப்புவார்கள். 

நல்ல வசதியுள்ளவர்கள் போகவே மாட்டார்கள், ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்.. வசதிபடைத்தவர்கள் அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். மிஷனரியைத் 'தாங்குவார்கள்'.

 

ஆனானப்பட்ட பவுலே அக்காலத்து மெட்ரோசிட்டிகளில் ஏற்கனவே உள்ள சபைகளின் தரத்தை உயர்த்தத்தான் அத்தனை கடிதங்களை எழுதி அந்தந்த சபைகளைதான் விஸிட் செய்துகொண்டிருந்தான்.

படிப்பறிவில்லாதவர்களுக்கும், பாஷையே இல்லாத பழங்குடியினருக்கும், கிராமங்களுக்கும்போய் யாரும் சுவிசேஷம் சொல்லவில்லை. ஏனென்றால் வேதம் வாக்கியங்களை வாசித்தறியாமல் ஒருவனும் தேவதிட்டங்களை புரிந்துகொள்ளவே முடியாது என்பது அப்போஸ்தலருக்குத் தெரியும்.

'பிதாவானவர் ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிறிஸ்துவினிடத்தில் வரவேஏஏஏஏஏ முடியாது' என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இல்லை.

 

ஆனால் இந்த முட்டாள் 'மிஷனரி'கள் தங்கள் வாழ்க்கையையே "அர்ப்பணித்து" மலைவாழ் பழங்குடியினரிடம் பழகி, (பாஷையே தெரியாது) அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் அன்பை விளக்கிச்சொல்லி(?), பவுல் ரேஞ்சுக்கு அவர்களை உருவாக்கி அவர்களை பரலோகத்துக்குத் தகுதியாக்குவார்கள். அவன் பாட்டன், முப்பாட்டன், பூட்டனெல்லாம் விஷயமே தெரியாமல் செத்துட்டான்களே அவர்கள் கதி என்ன என்று கேட்டால்...

"ஹலோ என்ன பிரதர் வேதத்துக்கு விரோதமாகப் பேசுகிறீர்கள்? அவர்களை தேவன் பார்த்துக்கொள்வார்; இப்படிக் குதர்க்கமான கேள்விகளை கேட்கக்கூடாது. உலகமுழுவதும் போய் சுவிசேஷம் அறிவிக்கச் சொல்லப்பட்டிருக்கிறது... நான் சொல்லுவேன். இல்லாவிட்டால் இந்த 'ஆத்துமா' நரகத்துக்குப் போய்விடும்."

என்பார்கள்.

சரி பரலோகம் செல்ல வெறும் விசுவாசம் மட்டும் போதுமா என்றால்.

"விசுவாசம் அவசியம்தான் ஆனால் முடிவுப்பரியந்தம் நிலைநிற்கவேண்டும் அதற்கு ஞானஸ்நானம், ஆவிக்குரிய சபை, வரங்கள், ஊழியங்கள், பரிசுத்தமான வாழ்வு, அபிஷேகம்.... எல்லாம் வேண்டும்" என்பார்கள். 'நீதிமானே இரட்சிக்கபடுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே போவான்?' (நரகத்துக்குத்தான் இதென்ன கேள்வியோ?).

 

இன்னும் புரியாவிட்டால் மனக்கண்கள் மேற்படி "தேவனானவன்" மூலமாய் குருடாக்கப்பட்டுள்ளது என்பதை கன்ஃபார்ம் பண்ணிக்கொள்ளலாம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard