kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கி.பி. 30000000000000 ல் ஆதாம் RECAP


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
கி.பி. 30000000000000 ல் ஆதாம் RECAP


சகோதரர்களே, இன்றைய கிறிஸ்தவம் போதிக்கும் விஷயங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதை(?) சுவாரசியமாக இருக்குமென்று நம்புகிறேன்.
 
கி.பி. 30000000000000 ல் ஆதாம்
என் பெயர் ஆதாம். பூமியின் முதல் மனிதன். தேவன் என்னை மண்ணினால் உருவாக்கி தன் ஆவியாகிய ஜீவசுவாசத்தை ஊதி என்னை உயிரடையச் செய்தார். அவர் சாயலாக சிந்திக்கும் திறனுடன் என்னை உருவாக்கினார். என்னை உருவாக்கும் முன்பே அவர் நான் உயிர்வாழத் தேவையான எல்லாவற்றையும் ஏற்கனவே படைத்திருந்தார். எனக்கு இந்த பூமி, ஆகாயம், நட்சத்திர மண்டலங்கள், சூரியன், சந்திரன், நதிகள், ,மலைகள், விலங்குகள், கடல்வாழ்பிராணிகள் அனைத்தும் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. எல்லாவற்றுக்கும் நானே பெயர் வைத்தேன். தேவனின் அன்பையும் ஐக்கியத்தையும் நினைத்து பிரமித்தேன்ஒரு நாள் அவர் என்னை உறங்க வைத்து என் விலா எலும்பை எடுத்து அதன்மூலம் ஒரு 'பெண்ணை' உருவாக்கினார். அவளையும் அவர் எனக்காகவே உருவாக்கித்தந்தார். அதுமுதல் நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருந்தோம். இத்தனையும் செய்த தேவனுக்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று எண்ணிய வேளையில் அவரது கட்டளை நினைவுக்கு வந்தது. அதாவது "தோட்டத்தின் மத்தியில் இருக்கிற நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை மாத்திரம் நீ புசிக்கவேண்டாம், அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்" என்ற தேவ கட்டளைதான் அது. ஆக நாங்கள் அதைப் புசிக்காதவரை அவ்ருக்கு கீழ்படிந்து நடந்து அவருக்கு எங்கள் அன்பை தெரிவிப்பதாக அர்த்தம். இவ்வாறு நானும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தோம். இவ்வண்ணமாக அவர் எங்களை நாங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்பவும், சகலத்தையும் ஆண்டுகொள்ளவும் ஆசீர்வதித்தார். இந்த இடத்தில் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மனுக்குலம் பூமியில் நித்திய நித்தியமாய் இருந்து வாழ்வதற்குத்தான் எனக்கு இந்த பூமியில் வாழ்வதற்கேற்ப உடலமைப்பை தந்திருந்தார். நான் உன்னை பரலோகத்திற்கு கூட்டிச்செல்வேன் என்றெல்லாம் ஒரு முறைகூட அவர் என்னிடம் வாக்களிக்கவில்லை. மகிழ்ச்சியாய் ஏதேனில் வலம்வந்து தேவன் எங்களோடு சஞ்சரித்து ச்ந்தோஷமாக இருந்த வேளையில்தான் 'அது' நேர்ந்தது...
 
 

ஆம், சர்ப்பம் என்ற ஒரு ஜந்து ஏவாள் தனிமையில் இருக்கும்போது அவளை வஞ்சித்து "விலக்கப்பட்ட அந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் தேவனைப்போல ஆகிவிடுவீர்கள்" என்று பொய் சொன்னது. இந்த ஏவாளும் வஞ்சிக்கப்பட்டு அந்தப்பழத்தை உண்டு எனக்கும் கொடுக்க நானும் அதை சாப்பிட்டேன். அதன்பின் நாங்கள் எங்கள் மகிமையை இழந்து நிர்வாணிகளாயிருப்பதை உணர்ந்து தேவசமூகத்தை விட்டு ஓடி ஒளியவேண்டியதாயிற்று. அன்பே உருவானதேவன் எங்கள் நிமித்தம் விசனமடைந்து அவரது சாபத்துக்குள்ளானோம். சர்ப்பத்தையும், ஏவாளையும், என்னையும் அவர் சபித்து ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டோம். எங்கள் வாழ்வு சாபத்தினிமித்தம் கடினமானது. ஏவாள் வேதனையோடு பிள்ளை பெற்றாள். காயீன் மற்றும் ஆபேல் என்ற இரு குமாரர்கள் பிற்ந்தனர். அவர்கள் வள‌ர்ந்தபோது தேவனுக்கு பலி செலுத்தும் விஷயத்தில் பொறாமைகொண்ட காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொலைசெய்தான்.
 
மனுக்குலத்தின் முதல் மரணமே கொலைசெய்ததனால் சம்பவித்தது. அதுவரை சாவு என்றால் என்னவென்று அறியாத நாங்கள் அனேக நாட்கள் ஆபேலின் சரீரத்தை வைத்திருந்தோம், அவன் எழவேயில்லை. ஐயோ! இதுதான் மரணமா? இதைத்தான் தேவன் 'சாகவே சாவாய்', 'மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லியிருந்தாரா? என்றெண்ணி மிகவும் துக்கித்து அழுதோம். மகன் ஆபேல் மறுபடி எழவே மாட்டானா என்ற அதிர்ச்சி நாங்கள் செய்த முதல் பாவத்தின் கொடுமையான விளைவை உணர்த்தியது. ஐயோ! இனி என் சந்ததி முழுவதற்குமே மரணம் சம்பவித்து மண்ணுக்குத் திரும்பிவிடுமே என்ற உண்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அதன்பின் எங்களுக்கு 'சேத்' பிறந்தான், அனேக பெண்பிள்ளைகளும் பிறந்து பூமியில் மனித இனம் பெருகவாரம்பித்தது, கூடவே பாவமும் பெருகியது. அதன்பின் நானும் என்னுடைய 930 வயது சென்று மரித்தேன்.
 
கதை இதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தேவன் எவ்வளவு கொடூரகுணமுள்ளவர் என்று நான் 'மரித்த' பின்புதான் அறிந்துகொண்டேன். அந்தக் கொடுமையை தொடர்ந்து படியுங்கள்.
 
 

என் சரீரம் செயலிழந்து மண்ணுக்குத்திரும்பியதே ஒழிய 'நான்' ஆதாம், ஒரு ஆத்துமாவாக "உயிரோடுதான்" இருந்தேன். ஆம்! சாத்தான் சொன்னதுதான் சரி, நான் சாகவில்லை!! அப்போதுதான் தெரிந்தது தேவன் சொன்னது அப்பட்டமான பொய்! அதன்பின் இன்னொரு மஹா பயங்கரம் நடந்தது. நான் (என் ஆத்துமா) உடலைவிட்டு வெளியே வந்ததும் உடனடியாக 'பாதாளம்' என்று சொல்லப்படும் அக்கினி ஓயாமல் எரிந்து கொண்டிருக்கும் ஒரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன். அன்றுமுதல் அங்கு எரியும் நெருப்பில் வேதனைப்பட ஆரம்பித்தேன்.
 
இதென்ன கொடுமை? எனக்கு சரீரமே இல்லை ஆனாலும் உண்ர்வு இருக்கிறது, யோசிக்க முடிகிறது, பார்க்கிறேன், பேசுகிறேன். இந்த அக்கினியில் போடப்பட்டும் நான் சாகவே இல்லை. ஆக சாத்தான் சொன்னதுதான் உண்மை. தேவன் என்னை ஏமாற்றிவிட்டாரா? "இதைப் புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்", மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்" என்று சொன்னாரே தவிர "நீ சரீரத்துக்குள் குடியிருக்கும் ஒரு ஆத்துமாவாக இருக்கிறாய், பாவம் செய்த உன் ஆத்துமா சாகாது, நீ சரீரத்தைவிட்டு பிரியும்போது பாதாளம் என்னும் ஓர்டத்தில் நித்திய நித்தியத்துக்கும் வேதனைப்படுவாய்" என்று முன்பே விளக்கமாக சொல்லியிருந்தால் நான் "ஆண்டவரே, இந்தப் பழவிவகாரமே எனக்கு வேண்டாம், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நான் அதை புசிக்க நேரிட்டு நித்திய வாதைக்குள்ளாவேன். ஆகையால் என்னை முன்புபோல் நான் இல்லாமலே போகும்படிக்கு என்னை அழித்துவிடும். எனக்கு ஏதேனும் வேண்டாம், ஏவாளும் வேண்டாம், பாதாளமும் வேண்டாம்" என்று சொல்லியிருப்பேனே!
 
இப்படியாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது தொலைவில் மகன் ஆபேலைக் கண்டேன். அவ்னும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். அவன் சவுக்கியமாக இளைப்பாறிக்கொண்டிருந்தான் மேலும் பின்பு ஆபிரகாம் என்பவர் வந்தபின்பு அவர் மடியில் போய் அவனும் படுத்துக்கொண்டான். அடடா நான் கூட ஒரு ஆட்டை தேவனுக்கு பலியாக செலுத்தியிருந்தால் தப்பியிருப்பேனோ, ஆபிரகாம் மடியில் உள்ள கூட்டத்தில் நானும் போய் விடப்பட்டிருப்பேனே, தெரியாமல் போனதே என்று எண்ணினேன். பின்னர் ஏவாளும் பாதாளத்தில்தான் இருக்கிறாள் என தெரியவந்தது (பெண்கள் ஐக்கியமோ என்னவோ?). இப்படியாக கிட்டதட்ட 6000 வருடங்கள் வேதனையில் இருந்த்தேன். ஓஹோ, வருடக்கணக்கெல்லாம் எப்படித்தெரியும் என்கிறீர்களா? அது யார் புதிதாக வருகிறார்களோ அவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்வேன்.
 
கி.பி.33வரை மரித்த ஏராளம்பேர், அதாவது ஒரு சில பழைய ஏற்பாட்டு ப‌ரிசுத்தவான்கள்தவிர, எல்லா யூதர்களும் மற்றும் தேவனை அறியாத கோடிக்கணக்கான புறஜாதி(?)யாரும் பாதாளத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அதேபோல அனேக பிச்சைக்கார நோயாளிகள் 'ஆபிரகாம் மடியில்' இளைப்பாரவும், ஆரோக்கியமான ஐசுவரியவான்கள் பாதாளத்தில் வேதனைப்படவும் வந்துகொண்டே இருந்தார்கள். ஒரு ஐசுவரியவான் ஆபிரகாமுடன் பேசியதாகக்கூட பாதாளவட்டாரத்தில் பேசிக்கொண்டார்கள். அதுவும் அந்த முட்டாள் ஐசுவரியவான் ஒரே ஒரு சொட்டு தண்ணீர் மட்டும் கேட்டு அவன் நாவை குளிரப்பண்ணும் என்றானாம். அடப்பாவி! கேட்டது கேட்டாய் ஒரு நாலு பீப்பாயாகக் கேட்டிருந்தால் கொஞ்சம்பேராவது குடிக்கலாமே. ஒரு துளி நீர் பாதாளம் வரும்முன்னே ஆவியாகிவிடுமே, இவன் இங்கு வந்தது சரிதான் என நினைத்தேன். மேலும் என்மூலம் வந்த எல்லா சந்ததியும் ஒரே ஜாதிதானே, இதில் புறஜாதி எங்கிருந்து வந்தது என இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
 
இப்படியாக வருடங்கள் செல்லச் செல்ல கூட்டம் பாதாளத்தில் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட நூற்றுக்கு 99பேர் இங்குதான் வந்தனர். ஒருவர் மட்டும்தான் ஆபிரகாம் மடி. இத்தனைக்கும் முதல் ஆதாமாகிய நான் செய்த் பாவத்தைப் போக்க இரண்டாம் ஆதாமாக தேவகுமாரன் இயேசுகிறிஸ்து வந்து கிரயம் செலுத்தியும் இதே விகிதாச்சாரம்தான்.
 
 

ஆனால் திடீரென்று ஒரு நாள் எங்களுக்கு ஒரு விடுதலை கிடைத்தது! ஆம் சரீர உயிர்த்தெழுதல்தான் அது. அப்பாடா பாதாளத்தில் இத்தனை வருடங்கள் வேதனைப்பட்டதற்கு ஒரு முடிவு வந்தது என்றறு நினைத்தேன். அதுவரை ஆத்துமாக்களாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அனைவரும் மீண்டுமாக சரீரத்தில் எழுப்பப்பட்டோம். எழுந்தபின் சில நிமிடங்கள் ஒன்றுமேபுரியவில்லை. ஆனால் ஒரு பெரிய நிம்மதி, பாதாள வேதனை இப்போது இல்லை. சரி என்ன நடக்கிறது என்று மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தேன். அட! இந்த பூமி முழுவதுமே ஏதேனுக்கு ஒப்பாக மாறியிருந்த்தது.
 
இதுவரை சரீரத்தில் மரித்த அனைவருமே எழுப்பப்பட்டிருந்தார்கள். எல்லார் முகங்களிலும் பாதாள வேதனையிலிருந்து கிடைத்த விடுதலையின் நிம்மதி தெரிந்தாலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும் கூடவே இருந்தது. எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம், எல்லாரும் என்னுடைய பிள்ளைகள்! மெதுவாக பக்கத்தில் நின்றவரிடம் பேச்சுக் கொடுத்தேன் "ஐயா, நான் ஆதாம், நீங்கள்?" என்றேன். அத்ற்கு அவர் "ஸ்..ஸ்..ஸ் சத்தம் போடாதீர்கள், இன்று நியாயத்தீர்ப்பு நாள்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு 6000+ வருடங்கள் வேதனையான தண்டனை அனுபவித்தயிற்றே? இனியென்ன நியாயத்தீர்ப்பு என குழம்பினேன். ஏனென்றால் பாதாளத்தில் நான்தான் சீனியர் எல்லாரையும்விட அதிகம் வாதிக்கப்பட்டவன். சரி என்னதான் நடக்குமென்று பார்க்கலாம் என வேறொருவரிடம் "ஐயா நீங்களாவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் என்றேன். அதற்கு அவர் தன்னை ஒரு கிறிஸ்தவப் போதகர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார் "ஐயா நான் கி.பி.2009ல் மரித்த ஒரு கிற்ஸ்தவ போதகர், பெரிய ஊழியக்காரனாகத்தான் வாழ்ந்தேன் ஆனால் ஊழியத்தின் கடைசி காலத்தில் பின்வாங்கி உலகப்பிரகாரமான சொத்து சேர்க்க ஆரம்பித்து மரித்து, பாதாளத்தில் வேதனைப்பட்டுவிட்டு தற்போது கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் முடிந்து சரீரத்தில் எழுப்பப்பட்டுள்ளேன். தற்போது 1000 வருட கிறிஸ்துவின் ஆட்சிக்குப்பிறகு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்காக எல்லா மரித்தவர்களும் நம்மைப்போல எழுப்பப்பட்டுள்ளனர்" என்றார். எனக்கோ இன்னும் குழப்பம் அதிகமானது. ஏன் தேவன் கடைசியில் பிறந்த ஒரு சாராரை மட்டும் தனது பூலோக ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும்? அதற்கு முன்னால் பிற‌ந்தவர்கள் மட்டும் சாத்தான் ஆளுகை செய்த உலகத்தில் தீமை அனுபவித்து துன்பப்பட்டு மரிக்க வேண்டும். யாரிடம் கேட்பதென்று குழம்பினேன். கொஞ்சம் தொலைவில் வினேதமான மீசையுடன் ஒருவர் கோபமாக நின்றுகொண்டு இருந்தார். மீண்டும் அந்த 2009 போதகரிடம் "அதோ அவரைத் தெரியுமா?" என்றேன். அவரும் பார்த்துவிட்டு "அவரைப் பற்றி படித்திருக்கிறேன், அவர் பெயர் ஹிட்லர் சுமார் 60லட்சம் யூதர்களை கொன்று குவித்திருக்கிறார். அவர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்ததால் கோபமாக இருக்கிறார் போலும்" என்றார். "அடப்பாவி, அவர் எவ்வளவு காலம் பாதாளத்தில் வேதனைப்பட்டார்" என்று கேட்டேன். போதகரும் கொஞம் யோசித்துவிட்டு "கிட்ட தட்ட 1100 வருடங்கள் இருக்கும்" என்றார்.
 
எனக்கோ பயங்கர கோபம் வந்தது, என்ன அநியாயம் இது, ஒரு பழம் சாப்பிட்டதற்கு 6000 வருட தண்டனை, 60 லட்சம்பேரைக் கொன்று குவித்தவனுக்கு வெறும் 1100 வருடங்கள்தானா? எப்படியோ கடவுளுக்கே வெளிச்சம், இப்போதைக்கு வேதனை இல்லை அதுவே பெரிய காரியம் என்றெண்ணினேன். ஜனங்கள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். எல்லாரும் மரித்து உயிர்த்தெழுந்திருந்தாலும் தாங்கள் நேசிக்கிறவர்களிடம்கூட ஏதும் பேசவில்லை. அனேகமாக அனைவருமே பாதாளத்திலிருந்து வந்ததால் மிகவும் பயந்திருந்தார்கள்.
 

அப்போது, "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் இந்தப்பக்கம் வாருங்கள்" என்ற பெரிய சத்தம் கேட்டது. "இதென்ன அவரைப்பற்ரி அனேகம் பேர் கேள்விப்படவே இல்லையே, எப்படி விசுவாசித்திருப்பார்கள்? அவர் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் கதி?", அதேபோல எவ்வளவோ அன்புள்ளம் கொண்டு தாங்கள் உயிரோடிருந்த நாட்களில் தங்கள் அன்பு மற்றும் தியாகச் செயல்களினால் மற்றவர்களின் துயர் தீர்த்த அனேகருக்கும் இதே விளக்கம்தான் "அதெல்லாம் கிடையாது நீ செய்த நன்மைகள் ஆயிரம் இருந்தாலும் நீ இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லையே" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. அவரை ஏற்றுக்கொண்டவர்கள் கூட்டம் மிக சொற்பமாக இருந்தது, 1%கூட இல்லை! அதிலும் ஒருவர் சலித்துக்கொண்டார் "சே ஆபிரகாம் மடியில் இளப்பாறிக்கொண்டிருந்த என்னை மறுபடியும் சரீரததில் இந்த பூமிக்கு எதற்கு கொண்டுவந்தார்களோ?" என்று.இப்படியாக பெரிய புத்தகங்கள் திறக்கப்பட்டு ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்படாதவர்களை நோக்கி சிங்காசனத்திலிருந்த இயேசுகிறிஸ்து "பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ள அக்கினிக்கடலிலே போங்கள்" என்று உரத்த குரலில் சொன்னார். அந்த சத்தம் எல்லாரையும் நடுங்க வைத்தது. அந்த நொடியே எல்லாரும் மறுபடியும் படப்போகும் வேதனையை நினைத்து மகாதுக்கத்தோடு அழுது புலம்பினார்கள். "அதெல்லாம் கிடையாது இவர்கள் எல்லாம் உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே பரலோகத்துக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள், என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மற்றவர்களெல்லாம் நரகத்துக்குதான். யோவான் 3:17ல் "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பாமல் உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்" என்ற புதிய ஏற்பாட்டு வசனங்களெல்லாம் பொய் என்றார்கள். எனக்கும் மபெரும் துக்கம். என் சந்த்ததியில் பெரும்பாலோர் பாதாளத்திலிருந்து கொண்டுவரப்பட்டு இப்போது 'நரகத்துக்கு'த் தள்ளப்படுவதை நினைத்து நான் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. முதலில் பாதாளத்தில் சரீரம் இல்லாமல் வேதனை அனுபவித்த என் ஜனங்கள் இப்போது சரீரத்தோடு அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலிலே வேதனைப்படுகிறார்கள், நானும்தான்.
 

அந்த நியாயத்தீர்ப்பு முடிந்து தற்போது 30000000000000 வருடங்கள் முடிந்தும் வேதனை குறையவில்லை. இது முதலிலேயே தெரிந்திருந்தால் நான் வாழ்க்கையில் எந்தப்பழத்தையுமே சாப்பிடாதிருந்திருப்பேனே என்று நொந்துகொண்டேன். இடையிடையே இந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றி பக்கத்தில் வெந்துகொண்டிருக்கும் பாஸ்டரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர்தான் மேசியா என்ற கிறிஸ்துவாம். தேவகுமாரனாம், இரண்டாம் ஆதாம் என்றுகூட அழைக்கப்படுகிறாராம். அவர் பாவத்தில் விழுந்த உலகத்தை, பாவிகளை இரட்சிக்க அனுப்ப்ப்பட்டு, பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து மரண்த்தை ஜெயித்தாராம். என்ன ஜெயித்து என்ன பயன் 99.9% ஜனங்கள் நரகத்தில் நித்திய வாதையில் இருக்கிறார்களே? இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் புதிய பூமி காலியாக இருந்தது! 1000வருட கிறிஸ்துவின் ஆட்சியில் ஏதேனுக்கொப்பாக மாற்றப்பட்ட பூமி வெந்து உருகிப்போயிற்று. புதிய பூமி வந்து காலியாக உள்ளது. அதாவது விசுவாசிகள், பரிசுத்தவான்கள் யாவரும் பரகலோகம் சென்றுவிட்டனர். மீதி பாவிகளாகிய நாங்கள் எல்லோரும் நரகத்தில் முடிவில்லா வதையில் இருக்கிறோம், ஆகவே புதிய பூமி காலியாக உள்ளது. இதுதான் தான் உண்டாக்கின மனிதனைக் குறித்த தேவனுடைய திட்டம் போலும்

இப்படிக்கு,
முடிவில்லா வாதையில்'
ஆதாம்

[பின் குறிப்பு:‍ என் சாவைப்பற்றி சொன்ன தேவன் பரலோகம், பாதாளம், நரகம் மற்றும் ஆத்துமா பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது எனக்கு இன்னும் வருத்தமே.]


-- Edited by soulsolution on Monday 2nd of May 2011 11:36:49 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரரே, ஆதாம் தொடங்கி நியாயத்தீர்ப்பு நாள் வரையில் மரித்த பின் பாதாளத்திற்கு எந்த நிலையில் போனார்கள்?

அத்துமாவாகவா, ஆவியாகவா, சரீரத்திலா அல்லது வேறு ஏதாவது ரூபமிருந்ததா??

ஹிட்லர், காந்தி, நம்ம ஊரில் மென்டலி ரிடார்டர்ட் ஒருவர் பஸ் நிலையத்தில் படுத்தே இருந்தாரே, இவர்கள் அனைவரும் அதே அக்கினியில் தான் போடப்பட்டார்களா!! ஒரே காரணம் இவர்கள் வாழ்ந்த போது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தானா?? ஹிட்லராவது சரி பல கொலைகளை செய்திருக்கிறான், காந்திக்கும் அந்த இரண்டாவது நபருக்கும் ஹிட்லருக்கு உள்ள அதே தண்டனையா?? இது தான் நியாயத்தீர்ப்பா!! அதாவது நியாயமான தீர்ப்பா?? ஆனால் காணிக்கை பிரித்தே தின்னு பெறுத்து போன ஊழியர்கள் எல்லாரும், அதிலும் அந்த பிஷப் சரவணன் மாதிரியானவர்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்தினால் பரலோகத்தில் இருப்பாரா!!

இன்னும் கொஞ்சம் விளக்குங்களேன்!!!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மிக நல்ல கேள்வி. இது கிறிஸ்தவ மண்டலத்தில் கேட்கப்பட வேண்டிய கேள்வி ஆனாலும் என்னால் முடிந்த பதில் சொல்கிறேன்.

அதாவது இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத எவருமே பரலோகம் போகப்போவதில்லை. ஆக நரகம் ஒரு கியாரண்டிதான். ஆனால் ஏற்றுக்கொண்டவர்கள் எல்லாருமே பரலோகம் போவார்களா என்றால் அதிலும் சற்று சிக்கல்தான்.

அவரை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு பெறவேண்டும்;

அதன்பின் பாவம் செய்யாமலிருக்க பிரயாசப்படவேண்டும்(?).

நல்ல ஒரு சபைக்கு(?)போகவேண்டும் ஆனால் எது அந்த நல்ல சபை என்றுமட்டும் கேட்டுவிடாதீர்கள்;

ஊழியருக்குக் கட்டுப்பட்டு இருக்கவேண்டும்,

மற்றவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கவேண்டும்,

வேதம் வாசிக்க வேண்டும்,

ஆராதனைக்குத் தவறாமல் போகவேண்டும்,

சிகரெட், பீடி மூச்,

தண்ணியடிக்கக்கூடாது,

எல்லா ஊழியங்களையும் தாங்க வேண்டும்,

வேதத்தில் சந்தேகங்கள் இருந்தால்  அதைப்பற்றி ஊழியர்களிடம் கேட்கக்கூடாது.

இயேசுதான் பிதாவாகிய தேவன் என்பதில் துளிகூட சந்தேகப்படக்கூடாது.

ஞானஸ்நானம் எடுக்கவேண்டும்(முழுக்கோ, தெளிப்போ, அல்லது நல்ல கள்ளனைப்போல எம்ர்ஜன்ஸி வேளைகளில் அது தேவையில்லை)

 ஆக உத்தமமான முறை எல்லா அக்கிரமமும் செய்துவிட்டு சாவதற்கு முன் 'உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது என்னை நினைவுகூறும்" என்ற ஒரு சிங்கிள் விண்ணப்பத்தில் அன்றைக்கே பரதீசு போய்விடலாம்.

அல்லது லாசருவைப்போல பிச்சைக்காரர்களாக இருக்கவேண்டும்,

உடம்பு முழுவதும் பருக்கள் இருந்து அதை நாய்வந்து நக்கவேண்டும்,

நல்லதுணி உடுத்தக்கூடாது, நல்ல சாப்பாடு சாப்பிடக்கூடாது(ஐஸ்வர்யவான்),

வியாதியஸ்தர்களை பார்க்கவேண்டும்,

பட்டினியாயிருப்பவர்களுக்கு உணவளிக்கவேண்டும்,

சிறையில் இருப்பவர்களை பார்க்கவேண்டும்,,,,

நியாயப்பிரமான கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்.

உஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணக்கட்டுதா.....?

இதெல்லாம் இருந்தாலும் பவுல் சொன்ன முறைகளின்படி வாழவேண்டும்.

இன்னும் நெறைய இருக்கு பிரதர்... அதனால்தான் சிலர் மட்டுமே போவாங்க‌... அந்த சிலர்ல சத்தியமா நான் இருக்க வாய்ப்பே இல்ல‌... ஒருவாட்டிகூட நான் ஜெயிலுக்குப்போயி யாரையும் பார்த்ததில்லயே...

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரலோகம், பரதீசு, ஆபிரகாமின் மடி (இது பரதீசா, பரலோகமா என்று தெரியாத கூட்டம்) இது எல்லாமே ஒரே இடம் என்பார்கள்!! அபிஷேகம் பெற்றோம் என்று ஒருவர் மின்சாரம் பாய்ந்ததாகவும், இன்னோருவர் குதித்து விழுந்ததாகவும், இன்னோருவர் புரியாத, விளங்காத ஒரு பாஷையை பேசுவாராம், ஆனால் இவர்கள் எல்லாரும் பரலோகம் போவார்கலாம்!!

ஒருவர் திரித்துவம் என்பாராம் இன்னோருவர் திரியேகத்துவம் என்பாராம், ஆனாலும் ஒன்று தானாம், மூன்று தானாம்!! இப்படியே ஒன்றிலிருந்து மூன்றுக்குள்ளே குழம்பி, குழப்பி, ஒரு வழியாக்குவார்களாம், ஆனாலும் இவர்கள் எல்லாரும் பரலோகம் போவார்கலாம்!! அப்படியா சகோதரரே!!

அபிஷேகத்தை குறித்து ஒரு காமேடி பீஸ் எழுதியிருக்கிறார் பினாமி பெயரில் எழுதி வரும் ஒரு சகோ(தரி)!! நீங்களும் வாசியுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இப்பதிவை ஒரு சிலர் ஏதோ நான் கூறிய தீர்க்கதரிசனமாக ரொம்ப சீரியஸாக எடுத்துக்கொண்டு விமர்சிக்கிறார்கள்.

 

இது இன்றைய கிறிஸ்தவ மண்டலத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் உபதேசத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். மரித்தவுடன் ஆத்துமா பாதாளத்திற்கோ (ஐசுவரியவான்) அல்லது பரதீசிற்கோ(சிலுவைக்கள்ளன், லாசரு) போகும் என்றும், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் இவர்கள் மீண்டும் 'உயிர்த்தெழுந்து' நரகத்துக்கோ(அக்கினிக்கடல்) அல்லது பரலோகத்திற்கோ போவார்கள் என்ற பேய்த்தனத்துக்கடுத்த உபதேசத்தைத்தான் நையாண்டித்தனமான் கற்பனையுடன் எழுதியுள்ளேன்.

 

இதன் அபத்தங்கள் ஒருசிலரின் கண்களைத் திறந்திருக்கக்கூடும்.

 

மற்றவர்கள் பற்றி கவலையில்லை...

 

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கண்கள் இருப்பவர்கள் ஏதோ திறந்து பார்க்க முயற்சிப்பார்கள் ஆனால் சிலருக்கு கண்களும் இல்லை, காதுகளும் இல்லையே!! சிலர் முகமுடி அனிந்து கண்கள் இருப்பது போல் காட்சியளிக்கிறார்கள்!! இன்றைய கிறிஸ்தவ சபைகள் இப்படிப்பட்டவர்களால் நிறம்பியிருக்கிறது!!

மத்தேயு 15:14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard