kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரலோகத்தில் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பரலோகத்தில் பழைய ஏற்பாட்டு நீதிமான்கள்!!


ரூவா ஊழியங்கள் நடத்தி வரும் ஆல்வின் தாமஸ் என்பவர் நேற்று (24/04/2011; 12:30 pm) தொலைக்காட்சியில் ஒரு செய்தி கொடுத்துக்கொண்டு இருந்தார், ஈஸ்டர் செய்தி!!

அதில் ஒரு வசனத்தை கொடுத்து அதன் பின் அதற்கு விளக்கத்தை கொடுத்தார் பார்க்கனுமே:

எபேசியர் 4:8. ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். 9. ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா?

அதாவது, கிறிஸ்து மூன்றாம் நாள் உயிர்த்தெழும் முன் நடந்த சம்பவங்கள்,

1. முதல் நாள் சிலுவை பாடுகள், மரண்ம்!!
2. இரண்டாம் நாள் அமைதல்!!
3. மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல்!!!

ஆனால் இந்த இரண்டாம் நாள் அமைதலில் ஒரு அர்த்தம் இருக்கிறதாம்!! உலகத்துக்கு அமைதி இருந்தது போல் இருந்தாலும், கிறிஸ்து ஆவியாக வெளியே போய், காவலில் உள்ள ஆவிகளை விடுவித்து பரலோகத்திற்கு கூட்டி சென்றாராம்!!

யார் காவலில் உள்ள ஆவிகள் என்றால், நோவா, ஆபிரகாம் என்று தொடங்கி வேதத்தில் பழைய ஏற்பாடு நீதிமான்கள் என்று சொல்லப்படுவோரை பிசாசானவன் தன் பிடியில் வைத்திருக்கிறானாம், அங்கே இருந்து அவர்களை விடுவித்து, இந்த நீதிமான்களை பரலோகம் கூட்டி சென்றாராம், ஏனென்றால் பரலோகத்தின் சாவி அவர் கைய்யில் வந்து விட்டதாம்!!

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு பிறகு நடந்த ஒரு சம்பவம்:

அப்போஸ்தலர் 2:34. தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே.

கிறிஸ்து இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்கள் சென்ற பின் தான் பரமேறினார் என்கிறது வேதம், ஆனால் ரூவா ஊழியங்களின் போதகர் ஆல்வின் தாமஸின் போதகத்தின்படி, நீதிமான்களை கிறிஸ்து இயேசு மரித்து 2ம் நாள் ஆவியில் சென்று பழைய ஏற்பாட்டு நீதிமான்களை பரலோகத்திற்கு கூட்டி சென்றிருக்கிறாராம்!! இவரின் போதகத்தில் உள்ள சில விஷயங்களை ஆறாயலாம்:

1.  இவரின் போதனையின் படி கிறிஸ்து மரிக்கவில்லை என்று தான் புரிந்துக்கொள்ள முடியும், ஏனென்றால் அவர் இரண்டாம் நாளில் கல்லறையில் இருந்து வெளியேரியிருக்கிறார்!! இப்படி அவர் இரண்டாம் நாள் கல்லறையிலிருந்து வெளியேறினார் என்பதற்கு எந்த ஒரு ஆதார வசனமும் கிடையாது!!

2. கிறிஸ்து ஒருவரை தவிர பரலோகத்திற்கு யாரும் ஏறவும் இல்லை, இறங்கவும் இல்லை என்கிறார் கிறிஸ்து!! இந்த போதகர் சொன்னார் பழைய ஏற்பாட்டு நீதிமான்களை கிறிஸ்து பரலோகத்திற்கு கூட்டி சென்றார் என்று, அப்படி என்றால் அப்போஸ்தலர் 2:34ல் உள்ள தாவீது யார்?? இல்லை இவரின் வேதத்தில் இந்த வசனம் ஒரு வேளை இல்லையோ!!

3.  நியாயத்தீர்ப்பு நடக்கும் முன்னமே சிலரை பரலோகத்திற்கும் பலரை நரகத்திற்கு அனுப்பும் ஊழியர்களின் கூற்று வேதத்தின் படி தவறு!! இதை தான் வேதத்தை புரட்டுவது என்பது!! புதிது புதிதாக போதிக்கும் ஆர்வத்தில் வேதத்தில் இல்லாததை சொல்லுவதும் இருப்பதை விட்டு விடுவதும் அதைவிட பெறிய தவறு!!

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அங்கே அமர்ந்திருந்தவர் இதற்கு எல்லாம் ஆற்பரித்துக் கொண்டிருந்தார்கள், ஆமென் என்றும் அல்லேலூயா என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள், வசனம் என்ன சொல்லுகிறது என்று பார்க்காமலே!! ஏற்கனவே இந்த போதகரின் பல பாடல்களை ஒரு க்ளப் நடனத்திற்கு ஒப்பாக இருப்பதை பல வீடியோக்களில் காண நேர்ந்திருக்கிறது, இப்படி பட்ட போதனைகள் வேறு!!

I தீமோத்தேயு 4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.

II தீமோத்தேயு 4:3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்கமனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு,

II தீமோத்தேயு 4:4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.

இதோ நடந்துக்கொண்டு இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆல்வின் தாமஸ் ஒரு வேசிசபையின் குளறுபடி போதகங்களுக்கு எடுத்துக்காட்டு. வேதப்புரட்டன். இந்த முட்டாள் ஊழியர்களைத் தலையில் வைத்துக் கொண்டாட ஒரு மூடக்கிறிஸ்தவம்....

நடக்கட்டும்.

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Member

Status: Offline
Posts: 19
Date:

allwin thomas oru poyyan endru innum theriyamal irukkirarhal antha sabayil ullavarhal. sumaaar moonru varudamaaga aandavar than sabaikku oru idam tharuvathaaga sollivarugirar. enakku therinthe valasaravakkaththil oru idaththai aandavar kaanbithar endru solli angu oru koottam pottar, antha idaththai yeno avarhal aandavar maatrivittaar, pinbu kodambaakkaththil 35 kodi rubaaikku oru idaththai kodukka pogiraar endru sabaiyil padam ellam ottinaar, intha idaththaiyum avarhal aandavar yeno theriyavillai maatrinaar, pinbu avarudaya thahappanaar chennai muluvathum alainthu thirinthu idam theduhiraar endraar, appothum avarhal aandavar yeno oru idam kooda kaanbikkavillai. ippoluthu veru idathukku maari innum vaadakai koduthu kondu irukkiraar.
Sabai makkal thangalin pothagar janavari maatham onru sonnaal pipravari maatham athai maranthuvidukinranar. pothagar onru pona maatham sonnare, athu nadanthathaa enru sinthikkum mananilaiyil kooda illathapadi manthamaai irukkiraarkal aagave thaan ivarhal ellorum pilaippai ottikkondu irukkiraarkal.
2008 aam aandu puthu varuda theerkatharisanam enru solli aarpattam seivvaargale, andru aalvin thomas sonnaar oru prabala nadigai  intha varudam suttukkollappaduvaal endru, naanum indru varai ellaa tholaikaatchi, seithithaal, internet ena ellaavatrilum thedukiren appadi oru sambavam moonru varudamaga nadanthathaaga theriyavillai....ellaa tholaikkaatchiyilum paarppirkal enru vera uthaar uttaar .....ithellaam namakku therigirathu paavam appaavi makkal adikkappadum aadugal maathiri antha aal pinnaadi pogiraargal....



__________________


Member

Status: Offline
Posts: 19
Date:

how to type in Tamil, tell me the way to do..

thanks

__________________


Member

Status: Offline
Posts: 19
Date:

நேற்று ராஜ் தொலைக்காட்சியில் ஒர் காமெடி... biggrinசாது செல்வராஜ் biggrinஇரண்டாம் வருகையை குறித்து ஏதோ சொன்னார், அவர் சொல்லும்போது தொலைக்கட்சியில் வந்த படம் மிக அருமை....நல்ல கற்பனை...... ஒரு ஆள் தப்பட்டை என்கிற வாத்தியத்தை வைத்துக்கொண்டு "ஏ பொன்னம்மா, என்று சத்தமாக கூப்பிடுகின்றார், உடனே கல்லறை திகில் படத்தில் வருவது போல் திறக்கிறது, அவருடைய மகனோ, சர்று தொலைவில் நின்று பார்க்கிறார்.... கல்லறையில் இருந்து பொன்னம்மா வெளியே வருகிறார்..... இது போன்று சாதுவின் கன்னம்மா, சுப்பம்மா போன்றோர் வெளியே வருவதை காண்பித்தார்......படம் மிக அருமை.......

பி.கு. எல்லாரும் திரும்ப திரும்ப பார்க்கவேண்டிய ஒரு நகைச்சுவை படம்!!!!!!

நான் பார்த்தேன்.......அப்போ நீங்க‌!!!!!!!!!



-- Edited by bereans on Monday 25th of April 2011 07:41:41 PM

__________________


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அப்போஸ்தலர் 13:36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

தாவீதும் தன் முற்பிதாக்களைப்போலவே தானும் அழிவைக்கண்டான்.

அப்2:34. தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே.

 

யோவான்3:13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

 

ஏசாயா 53:12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி,(அழிந்து) அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்;

 

வெளி 1:18 மரித்தேன்,(அழிந்தேன்!) ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.

 

அப்போஸ்தலர் 3:15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்(அழித்தீர்கள்); அவரை தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்(அழிந்து போனவர்களிடத்திலிருந்து); அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்.

 

ரோமர் 10:9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து(அழிந்தோரிடத்திலிருந்து)  எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.

 

I பேதுரு 1:21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து(அழிந்து போனவர்களிலிருந்து) எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.

 

இயேசுகிறிஸ்து எங்குமிராதபடி அழிக்கப்பட்டு தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார். 

முன்னோர்கள் அழிவைக் கண்டார்கள்; தாவீது அழிவைக்கண்டான்,

ஆனால் குழப்பக் கிறிஸ்தவர்கள் அழியாமல் யேசப்பாவ பாத்தேன், பவுலைப்பார்த்தென், பேதுருவைப் பார்த்தென், யோவான் ஸ்நானகனைப் பார்த்தேன். என்று எத்தனை துணிகரமாகச் சொல்கிறார்கள்?

மரித்தவுடன் உடனடியாக பரலோகம்தான் நான் ஸ்டாப் சர்வீஸ்...  

ஆத்துமா அழியாது என்ற (சாத்தானின் நீங்கள் சாகவே சாவதில்லை)ஒரு மாபெரும் பொய்தான் இன்றைய எல்லா தப்பறைகளுக்கும் மூலகாரணம்.

விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்.... அறியாமை இருள் மெல்ல அகன்றுகொண்டிருக்கிறது.... அவருடைய பிரசன்னமாகுதலின் முதற்கட்டம்... 

"உம்முடைய ராஜ்ஜியம் வருவதாக‌"



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard