kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா?


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா?


மேலே கூறிய கேள்விக்கு அமைய இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா? என்ற கேள்வியே வேத வசனத்தின் படியே பார்ப்போம்!! 
இந்தக் கேள்விக்கு பல பேர் பல விதத்தில் தர்க்கம் பண்ணுவதால் நானும் இதற்கு பதிலை சொல்ல முனைகிறேன்!!!


I பேதுரு 3 : 8. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.

பதில்:- இயேசு மரித்தோரிலிருந்து உயிர்பிக்கப் பட்டபோது, ஆவி உடலில் உயிர்பிக்கப்பட்டார். கிரேக்க மூலவாக்கியத்தில் "மாம்சம்" மற்றும் "ஆவி'' என்றச் சொற்க்கள் ஒன்றுக்கொன்று நேர்மாறாக வைக்கப்பட்டிருகின்றனர், அவை இரண்டுமே நான்காம் வேற்றுமையில் இருகின்றன; ஆகையால் "ஆவியால்" என்பதை ஒரு மொழிபெயர்ப்பாளன் பயன்படுத்தினால், ''மாம்சத்தால்" என்றும் அவன் நிலையைச் சொல்லிவரவேண்டும். அல்லது ''மாம்சத்தில்'' என்பதை அவன் பயன்படுத்தினால் ''ஆவியில்'' என்றும் அவன் சொல்லவேண்டும். தொடரும் ...



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
RE: இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா?


அப்போஸ்தலர் 10 : 40. மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார்.
41. ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார்.

பதில்:- மற்றவர்களுக்கும் ஏன் அவரைப் பார்க்கவில்லை? ஏனெனில் அவர் ஆவி சிருஷ்டியாய் இருந்தார் மேலும் கடந்த காலத்தில் தேவதூதர்கள் செய்தது போல் தம்மைக் காணச் செய்ய மாம்ச உடல்களில் புலப்படச் செய்தபோது, தம்முடைய அப்போஸ்தளரின் முன்னிலையில் மாத்திரமே அவ்வாறு செய்தார்.

I கொரிந்தியர் 15 : 45. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது, பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார்.

ஆதாம் சிருஷ்டிக்கப் பட்டபோது இருந்ததுபோல் பரிபூரனராய் இருந்த இயேசு கிறிஸ்து உயிர்ப்பிக்கிற ஆவியானார்



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard