kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மகா பாபிலோனின் முழுப்பெயர் என்ன?


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
மகா பாபிலோனின் முழுப்பெயர் என்ன?


///பூமியிலுள்ள அருவருப்புகளுக்குத் தாய் என மகா பாபிலோனைக் குறித்து இவ்வசனம் கூறுவதால், மகா பாபிலோன் என்பது பூமியிலுள்ள சகல அருவருப்புகளுக்கும் பிறப்பிடமாகவும் இருக்க வேண்டும் என அறிகிறோம்.

இன்றைய நிலவரப்படி பார்க்கையில், பல கத்தோலிக்க சபைகளில் ஹோமோசெக்ஸ் போன்ற அருவருப்புகள் அங்கீகரிக்கப்பட்டுவருவதாக செய்திகள் மூலம் அறிகிறோம். புராட்டஸ்டண்ட் சபைகளிலும், மத்தேயு 5:32-க்கு மாறாக, விவாகரத்து செய்வதும் மறுமணம் செய்வதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இதையெல்லாம் வைத்து, இவ்வமைப்புகளை “பூமியின் அருவருப்புக்கு தாய்” எனக் கூற முடியுமா என்பதே கேள்வி.///

சகோதரர்  அன்பு அவர்களே, நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்றே பதில் சொல்லவிரும்புகிறேன்!!!  பூமியின் அருவருப்புக்கு தாய் என்ற சொல் வெளிப்படுத்தல்  17:5 - ல் இவ்வாறு    வாசிக்கிறோம்:-   மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.  இதை அடிபடையாக கொண்டு நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலை விரிவாக ஆராய்வோம்!!!

முதலாவது மகா பாபிலோனின் முழுப்பெயர்  என்ன?  அதன் உட்பொருள் என்ன?
எவ்வகையான மிருகத்தை அந்த மகா வேசி சவாரிசெய்ய தேர்ந்துஎடுகிறாள்? மகா பாபிலோனாகிய அந்த அடையாளக் குறிப்பான வேசியே யோவான் எப்படி விவரிக்கிறார் ? போன்ற கேள்வியே முதலில் ஆராய்வோம்!!!!

அந்த மகா வேசி சவாரிசெய்வதற்கு ஆபத்தான மிருகத்தை தெரிந்துகொண்டு இருப்பதை குறித்து யோவான்  விரைவில் கற்றுக்கொள்ள இருக்கிறார். எனினும், முதலில், அவர் மகா பாபிலோனிடமே தன கவனத்தை திருப்புகிறார். அவள் ஆடம்பரமாக தன்னை அலங்கரித்து இருக்கிறாள், ஆனால் என்னே அருவருக்கதக்கதாய் இருக்கிறாள்!!   ''
அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். (வெளி 17 : 4 -6)

பூர்வ ரோமில் இருந்த பழக்கவழக்கத்தின்படி இந்த வேசி அவளுடைய நெற்றியில் எழுதப்படிருந்த பெயரினால் அடையாளம் கண்டுகொள்கிறாள். அது ஒரு பெரிய பெயராய் இருக்கிறது: "மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமிலுள்ள அருவருப்புக்கும் தாய்." அந்தப் பெயர் "இரகசிய" மாக இருக்கிறது. மறைவான பொருளைக் கொண்டிருக்கக் கூடிய ஏதோவொன்று. ஆனால் கடவுள் தம்முடைய உரிய காலத்தில், அந்த இரகசியத்தை விளங்கச் செய்வார். உண்மையில், இந்த விவரவிளக்கத்தை உடைய பெயரின் முழு உட்பொருளையும் பகுத்தறிந்து கொள்வதற்கு அந்தத் தூதன் இன்றுள்ள உண்மை வணக்கதவர்களுக்கு வேண்டிய தகவலை யோவானுக்கு கொடுக்கிறார். மகா பாபிலோன் எல்லா பொய் மதங்களயுமே உள்ளடக்குகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள பெரும்பான்மையான பிரிவுகள் உட்பட உலகத்தில் உள்ள எல்லா தனிப்பட்ட பொய் மதங்களும் அவளுடைய குமாரத்திகளாக, அவளைப் பின்பற்றி ஆவிக்குரிய வேசித்தனத்தை செய்வதின் நிமித்தம் அவள் "வேசிகளுக்குத் தாய்" ஆக இருக்கிறாள். விக்கிரகாராதனை, ஆவயுலகத் தொடர்பு, குறிசொல்லுதல், சோதிடம், கைரேகை பார்ப்பது, மனித பலி, ஆலய வேசித்தனம் மற்றும் அன்பு சொன்னது போன்று //இன்றைய நிலவரப்படி பார்க்கையில், பல கத்தோலிக்க சபைகளில் ஹோமோசெக்ஸ் போன்ற அருவருப்புகள் அங்கீகரிக்கப்பட்டுவருவதாக செய்திகள் மூலம் அறிகிறோம். புராட்டஸ்டண்ட் சபைகளிலும், மத்தேயு 5:32-க்கு மாறாக, விவாகரத்து செய்வதும் மறுமணம் செய்வதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன//  பொய்த் தேவர்களைக் கனப்படுதுவதத்க்கு குடித்து வெறித் இருத்தல் மற்றும் மற்ற கெட்ட பழக்கவழக்கங்கள் போன்ற அருவருப்பான சந்ததியே அவள் பிறப்பித்த நிமித்தம் அவள் "அருவருப்புகளுக்கும்"  தாயாக இருக்கிறாள்.

மற்றும் அன்பு கேட்ட கேள்வியே பல கேள்விகள் கேட்டு விவரிக்க முயலுகிறேன்!!!
அதாவது மகா பாபிலோன் "இரத்தாம்பரமும் சிவப்பான" ஆடை தரித்து இருப்பதாக காணப்படுவதும்  "பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்" பட்டிருப்பது ஏன் பொருத்தமானது?
அருவருப்புக்களால் நிறைந்த பொத்பாதிரத்தில்  இருந்தது எதற்கு அடையாளமாக இருந்தது? இந்த அடையாளக்குறியான வேசி எக்கருத்தில் குடித்து வெறித்திருகிறாள்?  என்பதையும் எனது அடுத்த பதிவில் ஆராய்வோம் !!!

மகா பாபிலோன் "இரத்தாம்பரமும் சிவப்பான ஆடை" யையும் தரித்திதிருக்கிறாள், அரச குடும்பத்தின் வண்ணங்களாக அவை இருக்கின்றன. மேலும் அவள் "பொன்னினாலும் இரத்தத்தினாலும், முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்"திருக்கிறாள். எவ்வளவு பொருத்தமா  இருக்கிறது!!!  காணப்படுகிற அணைத்து மகத்தான கட்டிடங்கள், அரிதாக காணப்படும் சிலைகள் சித்திரங்கள், விலைமதிப்புள்ள உருவச்சிலைகள், மற்ற மத உபகரணங்கள், இந்த உலக மதங்கள் சேர்த்துவைக்கும் சொத்துக்கள் மேலும் பெரும் நிதித்தொகைகள்  போன்றவற்றை சற்று நினைத்துப்பாருங்கள். வாடிகானிலும் ஐக்கிய மாகாணங்களில் இஸ்தாபிக்கப் பட்டிருக்கிற டிவி சுவிசேஷங்கள் இருக்கும் இடத்திலும் கிழக்கத்திய நாடுகளில் இருக்கும் கவர்சிகரமான தொட்டிகளிலும் ஆலயங்களிலும் மகா பாபிலோன் பெருஞ் செல்வதைக் குவித்துவைத்து இருக்கிறது- சிலசமயங்களில் இழந்துவிட்டும் இருக்கிறது. 

இப்பொழுது அந்த வேசி தன் கையில் என்ன வைத்திருக்கிறாள் என்று பாருங்கள். யோவான் அதைக் கண்டு மலைத்துப் போயிருக்கவேண்டும்.- 'தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த  பொற்பாத்திரம்'!!!  "தன் வேசித்தனமாகிய உக்கிரமான மது" வைக்கொண்ட பாத்திரமாக இது இருக்கிறது. இதையே அவள் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாள்.

வெளி 14 : 8. வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.

வெளி 17 : 4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

அது வெளியே பார்ப்பதற்கு மிகவும் அழகாய் இருக்கிறது, அதிலுள்ளதோ அருவருப்பாயும் அசுத்தமாயும் இருக்கிறது  ( மத்தேயு 23 :25 ,26 ஒப்பிட்டு பாருங்கள் )

25. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும், அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.
26. குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

அந்த மகா வேசி தேசங்களை ஏமாற்றி, தன்னுடைய செல்வாக்கின் கிழ அவர்களை கொண்டுவருவதற்குப் பயன்படுத்திய எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களையும் பொய்களையும் அந்தப் பாத்திரம் உடையதாய் இருக்கிறது. அந்த வேசி குடித்து வெறித்து இருப்பது  தானே யோவானுக்கு பார்ப்பதற்கு இன்னும்  அருவருப்பாய் இருக்கிறது.  அவள் கடவுளுடைய ஊழியர்களின் இரத்தத்தைக் குடித்திருகிறாள்.!!! உண்மையில், வெளி 18 : 24. தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்". என்று வாசிக்கிறோம். எத்தகைய பெருத்த இரத்தப்பழி!!!!  தொடரும் ...

பின்குறிப்பு:  என்பதிவுகள் அனைத்தும் இந்த தளத்துக்கு வரும்  புதியவர்கள் கற்றுக் கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டது. மாறாக வேறு தளத்தில் உள்ளவர்களுக்கும் எனக்கும் விவாதம் செய்யும் நோக்கில் எழுதவில்லை. இனி நான் யாருடனும் விவாதம் செய்யப்போவதில்லை. இது என் மூப்பராகிய சகோதரர் பெறேயான்ஸ்யின் வேண்டுகோள்.



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிற மகா பாபிலோன் நகரமாகிய வேசி என்பவள் யார்?


கடந்த பல நூற்றாண்டுகளாக, பொய் மத உலக பேரரசு பெரும் இரத்தத்தைச் சிந்தி இருக்கிறது. உதாரணமாக; ஜப்பானில், இடைநிலைக் காலப்பகுதியில், கியோடோவில் இருந்த ஆலயங்கள் புகலிடங்களாக மாற்றப்பட்டன. "புத்தருடைய பரிசுத்த பெயரில்" பிரார்த்தனை செய்துவந்த வீரசன்நியாசிகள் தெருக்களில் பெரும் இரதம் ஓடுமளவுக்கு ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டனர். கிறிஸ்தவ மண்டல குருவர்க்கதினர், இந்த நூற்றாண்டில், அவரவர்களுடைய நாட்டின் யுத்தப் படைகளோடு சேர்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் கொலை செய்து இருகின்றனர். இதினால் குறைந்தபட்சம் பத்துக் கோடி ஆட்கள் உய்ரிழந்து இருகின்றனர். ஐ. மா.- வின் முன்னாள் ஜனாதிபதி, நிக்ஸன் அக்டோபர் 1987 -ல் இவ்வாறு கூறினார்: " சரித்திரத்திலேயே 20 :ம் நூற்றாண்டு தானே பெருமளவுக்கு இரத்தத்தைச் சிந்தி இருக்கிறது. இந்த நூற்றாண்டு ஆரண்பிப்பதட்க்கு முன்பு நடந்த போர்களைக் காட்டிலும் இந்த நூற்றாண்டில் நடந்த எல்லா யுத்தங்களில் அநேகர் மாண்டு இருகின்றனர்''. இவ்வெல்லா காரியங்களிலும் அவை ஈடுபடுவதன் காரணமாக உலகத்திலுள்ள மதங்கள் தங்களுக்குக் தீங்குண்டாக்கும் அளவுக்கு கடவுளால் நியாயம் தீர்க்கப்படுகின்றனர் ; தேவன் "முற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கையே'' வெறுக்கிறார்.

நீதிமொழிகள் 6 : 16. ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.

17. அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை...

முன்னர், யோவான் பலிபீடத்தில் இருந்து ஒரு மகா சத்தத்தைக் கேட்டார்: வெளி 6 : 10. ''அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர்''?  வேசிகளுக்கும் பூமியில் உள்ள அருவருப்புக்களுக்கும் தாயாக இருக்கிற மகா பாபிலோன் அந்தக் கேள்விக்குப் பதிலளிப்பதட்குறிய காலம் வரும் பொது புரியும் ....நன்றி



-- Edited by Dino on Saturday 30th of April 2011 01:11:21 PM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மகா பாபிலோனின் முழுப்பெயர் என்ன?


மகா பாபிலோன் என்கிற வேசி சபையை குறித்தும் அவள் கொடுத்திருக்கும் மதுவில் மயங்கியிருப்போரையும் குறித்து இந்த தளத்தில் வாசியுங்கள்:


துருபதேசங்கள்


தொடர்ந்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் பக்கங்களையும் வாசிக்க கோருகிறேன்!! உண்மையை சொல்லப்போனால் இந்த பக்கங்களை தங்களை ஆவிக்குறிய சபைகள் என்று சொல்லி ஆதரித்த பல சபைகள் இன்று கத்தோலிக்க சபையுடன் கைக்கோர்த்திருப்பதால் இதை எல்லாம் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை!!

அந்திகிறிஸ்து என்கிற ஒரு சிஸ்ட்டத்தை, எங்கெல்லாமோ தேடிக்கொண்டு இருக்கிறது இன்றைய கிறிஸ்தவ மண்டலம், தாங்களும் அதே அமைப்புடன் கைகோர்த்திருக்கிறோம் என்பதை கூட தெரியாமல்!!

"VICARIVS FILII DEI." -- V-5, I-1; C-100, I-1; V-S, I-1; L-50, I-1; I-1; D-500, I-l — Total, 666.

இந்த பெயரில் தான் போப் தன்னை அழைத்துக்கொள்கிறார்!! என்ன ஒரு ஒற்றுமை!! மகா வேசியான பாபிலோன் சபை என்னவென்றும் இந்த 666 என்கிற எண்ணை இங்கே காண முடியும்!! அதை டாலர் பில்லிலும், கம்ப்யூட்டரிலும், w.w.w.விலும், பார் கோடிலும் (Bar code), ஐடிக்கார்டிலும் (ID card) தேடிக்கொண்டு இருப்பதை காட்டிலும் இதை புரிந்துக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard