kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாபிலோனிய ஊழியர்கள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பாபிலோனிய ஊழியர்கள்!!


பாபிலோனிய கிறிஸ்தவர்கள், அதான் திரித்துவ போதகர்கள் சொல்லும் ஒரு மிகவும் கொடிய போதனை!! ஏன் கொடியது என்றால் இதை வைத்துக்கொண்டு இவர்கள் வேதத்திற்கு புறம்பாக எப்படி எல்லாம் பிழைப்பு நடத்திக்கொண்டு சாதாரன விசுவாசிகளை பயத்தில் பதற வைத்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால் வேத வசனங்களை நிதானிக்கிற நமக்கோ, இவர்கள் எப்படி எல்லாம் சொல்லுகிறார்கள் என்று கவனித்து அதை வேத வசனத்தை கொண்டே உடைத்து போடுகிறோம்!!

இவர்களின் கதைகள்; இங்கே நான் என்று உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை நீங்கள் அறிந்த யாராவது ஒரு பிரபல ஊழியராக (!!) இருக்கலாம்!!

1.  நேற்று இரவு நான் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று என் அறை முழுவதும் வெளிச்சம் உண்டாயிற்று, என்னை கரம் பிடித்தவரை பார்த்தால் அங்கே கிறிஸ்து இயேசுவே நின்றுக்கொண்டு இருந்தார்!!

யோவான் 14:3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 4. நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார்.

அதாவது பரலோகம் சென்ற கிறிஸ்து இயேசு இனி மீண்டும் வருவது இப்படி நடு நடுவே சிலரை தரிசிக்க அல்ல என்பது வேதத்தில் இருக்கிறது!!

அப்போஸ்தலர் 3:21. உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

எல்லா தீர்க்கதரிசினங்களும் நிறைவேறி தீரும் வரையில் கிறிஸ்துவை பரலோகம் ஏற்றுக்கொண்டு, அதாவது கிறிஸ்து பரலோகத்தை விட்டு இந்த பூமிக்கு வருவதில்லை ஒரு குறிப்பிட்ட காலம் நிறைவேறும் வரையில் என்று வேதம் சொல்லியும் இந்த ஊழியர்களின் கைகளை வந்து பிடித்திருப்பது கிறிஸ்து இயேசு தானா என்று யோசிப்போம்!!

இப்படி ஒவ்வொரு ஊழியரும் ஒவ்வொரு விதத்தில் இயேசு கிறிஸ்துவை (சிலர் ஒருபடி அதிகமாக போய் தேவனையே பார்த்தோமென்பார்கள்) பார்த்தோம் என்றும், எங்கள் அறையில் பார்த்தோமென்று, என்னுடன் காரில் வந்தார் என்றும், என் மேல் வீட்டு அறையில் வந்தார் என்றும், வித விதமாகவும் கலர் கலராகவும் ரீல் சுற்றுவது வேதத்தை அறியாதவர்களுக்கு சுவாரசியமாக இருக்கலாம், ஆனால் வசனங்கள் இப்படி பிதற்றிக்கொண்டு இருப்போரை கள்ள போதகர்கள் என்றும் வஞ்சிக்கும் கூட்டம் என்றும் சொல்லுகிறதே!!

மத்தேயு 24:4. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.; 23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

ஏதோ ஒரு பதிவில் ஜோஸப் அவர்கள் என்னை கேட்டிருந்தார், இது போன்ற கூட்டங்களுக்கு போவதில்லையா என்று, மத்தேயு 24ஐ வாசித்து விட்டும் அது போன்ற கூட்டத்திற்கு போகிறவன் ஒன்று வஞ்சிக்கப்பட்டிருக்கவேண்டும், அல்லது அறியாமையில் இருக்க வேண்டும்!! இப்படி பட்ட கள்ளகிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் தான் அன்றாடம், இயேசு எங்களுடன் பேசினார், எங்கள் கைகளை பிடித்து எங்களை பரலோகத்திற்கும், நரகத்திற்கும் ஒருவர் மாற்றி ஒருவரை கூட்டி சுற்றி காண்பித்து வந்திருக்கிறார், அங்கே பரலோகத்தில் எனக்கு (அந்த ஊழியருக்கு தான்) ஆயத்தமாகும் பங்களா (அப்பவும் பாருங்கள் மண்ணாசை தான்) தோட்டம் போன்றவற்றை பார்த்து வருவதும், சிலர் நரகத்திற்கு (!!) சென்று அங்கே வேதனையில் வரும் தன் பாட்டி, கொள்ளு தாத்தா, சில சமயம் தனக்கு பிடிக்காத ஊழியரும் தான், அங்கே வேதனையுடம் கத்திக்கொண்டு இருப்பதும், இவர்களிடம் தண்ணீர் கேட்பதும், இவர்களை அங்கே இருக்கும் வேதனைகளை குறித்து எச்சரிப்பதாகவும் இங்கே தன் போதனைகளை மசாலா சேர்த்து சொல்லுவார்கள்!! இவர்களை நம்பலாமா!??

மரித்து உயிர்த்தெழுதல் அதன் பின் நியாயத்தீர்ப்பு நடக்கும் முன்னமே அவர்கள் தண்டனையில் (!!) இருக்கிறார்கள் என்றால், நியாயத்தீர்ப்பு எதற்கு!! யாராவது யோசிப்பாங்கலா, இல்லை இது போன்ற கட்டு கதைகளையும், செவிக்கு இனிதாக இருக்கிறது என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார்களா!!

சில கேள்விகள்:

1. கிறிஸ்து அடிக்கடி பூமிக்கு வந்து போகும் நபரா?
2. தேவனை (யெகோவா) அவர் சிங்காசனத்தில் பார்க்க முடியுமா (ஒருவர் ஒரு முறை சொல்லுகிறார், அவர் அப்படி ஒரு விசை ஆவியில் பரலோகத்தில் இருக்கும் போது, அங்கே சிங்காசனத்தில் தேவனை கானவில்லையாம்!! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்!! என்ன ஒரு துனிச்சல்!!)?
3. நியாயத்தீர்ப்பு நடக்கும் முன்னமே பரலோகத்திலும் பங்களாக்களும், நரகத்திலும் (!!) தண்டனையையும் பெற்றுக்கொண்டு இருப்பதாக வேதம் போதிக்கிறதா!!??


வேதத்திற்கு புறம்பாக நடக்கும் இவைகளை வெளிப்படுத்துவது தொடரும்.........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 24:24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

கள்ளத்தீர்க்கதரிசிகள் நமக்கு தெரியும்!! தேவன் சொல்லாததை சொன்னர் என்றும், இல்லாததை ஆமாம் என்றும் சொல்லும் கூட்டமே இந்த கள்ளத்தீர்க்கதரிசிகளின் கூட்டம்!! இவர்கள் புதிய ஏற்பாட்டு காலத்தில் மாத்திரம் அல்ல, பழைய ஏற்பாட்டு காலத்திலிருந்து இருக்கும் ஒருகூட்டம்!!

ஆனால் இந்த வசனம் கள்ளக்கிறிஸ்து என்று ஒரு கூட்டத்தை குறித்து சொல்லுகிறது!! கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்!! இப்படி தன்னையே அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் என்று ஒரு கூட்டம் கிறிஸ்துவத்தை கெடுத்து கொண்டும் கெட்டு கொண்டும் இருப்பது வேதத்தை புரிந்துக்கொள்ளாத கூட்டத்தாருக்கு பெரிய காரியமாக இருக்கலாம்!! கிறிஸ்து தேவனால அளவில்லாமல் அநாதிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறார், அவரின் அபிஷேகத்திற்கும் இன்று மாய் மாலம் செய்துக்கொண்டு, நாங்கள் அபிஷேகம் பெற்றிருக்கிறோம், எங்கள் உடையில் அபிஷேகம் இருக்கிறது, எங்கள் கைக்குட்டையில் அபிஷேகம் இருக்கிறது, இதோ நாங்கள் எழுதும் பேணாவில் அபிஷேகம் இருக்கிறது, என்று அபிஷேக அரசர்களாக இருக்கும் இவர்களை குறித்து தான் வேதம் கள்ள கிறிஸ்துக்கள் என்று சொல்லுகிறது!!

ஒரு சம்பவம்:

திருச்சியை சேர்ந்த ஒரு அபிஷேக ஊழியரும், வெளிநாட்டிலிருந்து வந்திருந்த ஒரு அபிஷேக ஊழியரும் ஒரே மேடையில் சந்தித்துக்கொண்டார்கள்!! இருவரும் அருகில் வந்து கைகளை தொட்டு பேச வந்த போது, இருவரும் பின்னால் தள்ளப்படுகிறார்கள், பிறகு சொல்லும் போது, இருவருக்குள்ளேயும் இருக்கும் அபிஷேகம் இருவரையும் இப்படு தள்ளுகிறதாம்!! ச்சே, இவர்களின் கூற்றுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது!! இவர்களை தான் கள்ளகிறிஸ்துக்கள் என்று வேஎதம் சொல்லுகிறது!! இவர்கள் யாரை வஞ்சிக்கிறார்கள் என்றால், தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையே பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கொண்டு வஞ்சிக்கிறார்களாம்!! ஒவ்வொரு மேடையிலும் சாட்சி என்று சொல்லிக்கொண்டு ஒரு 100 பேர் வரிசையில் நின்று அந்த குறிப்பிட்ட ஊழியர் மூலம் அவரின் ஊழியத்தில் நடந்த காரியங்களை விவரிப்பார்கள்!!

  • அந்த பிரதர் ஜெபிக்கும் போது, அப்படியே மின்சாரம் வந்து தாக்கியது போல் இருந்தது, என்னை ஆவி நிறப்பியது!!
  • ஜெபிக்கும் போது அந்த பிரதர் கை வைத்தார் அப்படியே அக்கினி எனக்குள் இறங்கியது போல் இருந்தது!!
  • இந்த பிரதர் ஜெபிக்கும் போது எனக்குள் இருக்கும் கான்ஸர் கட்டியை கிறிஸ்து இயேசு அப்படியே பிடிங்கி வெளியே போடுவதை என் கண்களால் பார்த்தேன்!!


இன்னும் இது போன்ற பல அடையாளங்கள் அற்புதங்கள் நடக்கும்!! ஆனால் வேதம் இப்படி எல்லாம் செய்ய சொல்லியிருக்கிறதா!! இதை எல்லாம் செய்தால் தான் கிறிஸ்தவம் என்கிறதா!! இதன் மூலம் கள்ள கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் வருவார்கள் என்கிறா வேத வார்த்தை நிறைவேறுகிறது, இது தான் வேதத்தை தியானிக்கும் நமக்கு உற்சாகத்தை தருகிறது!! தேவனின் வார்த்தைகள் எத்துனை உண்மையுள்ளது என்று, நாம் இவர்களின் செய்லகளின் மூலம் தெரிந்துக்கொள்ள தேவன் நம் கண்களை திறந்திருக்கிறார்!!


தொடரும்......................................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 19
Date:

Similar to that "SSS" once told that while he was travelling in a Car in Singapore...he suddenly heard a loud Trumpet sound.....he looked around and saw only he was the one hearing and not the driver of the car. Then he looked up the sky and saw an Angel blowing a Trumpet and Jesus told him that this was the First Trumpet thats blown.

The same way the partner of SSS - VS once told that he was praying in his room and suddenly Jesus appeared and sat besides him. VS touched him and was really amused to see the same kind of fleshly body he had.

Its all been told in the Channel of SSS....

Eppadi ippadi....karpanaiku ettatha alavuku yosikirangannu theriyala....makkal than yemarukirargal....

Enna ketta Sujatha mathiri periya writera varalam....pinna Movies kooda yedukalam....Athula niraya panam varum...ippadi appavi visuvasigala yematravendiyathu illa..


Its all like Science Fiction what they are telling...


__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

danny wrote:

The same way the partner of SSS - VS once told that he was praying in his room and suddenly Jesus appeared and sat besides him. VS touched him and was really amused to see the same kind of fleshly body he had.


 

இந்த கள்ள தீர்க்கதரிசிகள் ஒரு விஷயம் புரிந்துக்கொள்ளவே மாட்டார்கள்!! அது என்னவென்றால் எல்லோருமே அவர்களைன் வஞ்சகத்திற்கு உட்பட்டவர்கள் இல்லை, அவர்கள் சொல்லும் பாபிலோனிய கதைகளுக்கு தலையாட்டிக்கொண்டு இருப்பதற்கு!!

1 பேதுரு 3:18. ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.


இதில் இரண்டு உபதேசங்கள் இருக்கிறது

1. நீங்கள் சொன்ன அந்த கள்ளத்தீர்க்கதரிசன கூட்டனிக்கு கிறிஸ்து இயேசு ஆவியில் தான் உயிர்ப்பிக்கப்பட்டார் என்று தெரியாது!! ஏனென்றால் இந்த கூட்டம், வேதத்தை அட்டைக்குள் வைத்து, நினைவுகளை பாபிலோனிய கதைகளில் வைத்திருப்பதால், இவர்கள் இப்படி பட்ட துனிச்சலை பேச முடிகிறது!! ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்ட கிறிஸ்து இயேசுவை இவர் மாம்சமாக தொட்டு பார்த்தார் என்றால் என்ன அர்த்தம்!! இவர் தொட்டு பார்த்தது கிறிஸ்துவை அல்ல, வேறு எதையோ!! அது தான் வஞ்சிக்கும் ஆவி, இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசு!! அதை வைத்துக்கொண்டு தான் இவர்கள் இத்துனை வித்தைகளை காண்பிக்க முடிகிறது!!

2.  கிறிஸ்துவும் பிதாவும் ஒன்று தான் என்று பிதற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கும் இந்த வசனம் இடியாக இருக்கும்!! கிறிஸ்து நம்மை தம்மிடத்தில் அல்ல, மாறாக தேவனிடத்தில் சேர்க்கும்படியே மரித்தார்!! பிதாவினால் மரிக்க முடியாது!! இருவரும் ஒருவரே ஒரே தன்மை (Nature and essence) கொண்டு இருப்பவர்களென்றால் கிறிஸ்துவினாலும் மரிக்க முடியாது!!

தொடருங்கள் நண்பர் டானி அவர்களே,

உங்களுக்கு தமிழில் டைப் செய்ய

Please type this in your address bar and then you can submit your posts in Tamil, just have a try brother!!
http://www.christiansmobile.com/Default.aspx?tabid=161
இங்கே செல்லுங்கள்!!

தேவன் உங்களை வழி நடத்தட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard