kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஜான் கொல்வின் விவாத பகுதி !!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஜான் கொல்வின் விவாத பகுதி !!


ஜான்:

//என்னென்னமோ பதில் சொல்லுறீங்க ஆனால் ஏசாயா யாரை பார்த்தார்? ஆபிரகாம் விட்டிற்கு வந்தது யார் என்று மட்டும் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள்!  ஆராய்ச்சி செய்து "Cult" உருவாக காரணமாய் இருந்த ரசல் (இரஸலின் யெகோவாவின் சாட்சிகள் மற்றும் பேத மாணவர்கள்) , ஜோசப் ஸ்மித் (மர்மனிசம்)  போன்றவர்களை நாகரிகமாக மட்டும் திட்ட விரும்புவதால் பொறம்போக்கு என்று முடித்து கொள்ளுகிறேன்.//

என் பதில் உங்களுக்கு பைபிள் புரியாதது போல் புரியாது!! வேதம் எனக்கு சொல்லுகிறது,

யோவான் 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை;

1 தீமோத்தேய் 6:16.................... மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; ...........

போன்ற வசனங்கள் உன்மையாக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ஏசாயா பார்த்தானா, பார்த்தானா, ஆபிரகாம் பார்த்தானா என்பது உண்மையாக இருக்க வேண்டும்!! எனக்கு தெரிந்தது தேவனை ஒருவரும் ஒரு போதும் பார்த்தது இல்லை, அப்படி என்றால் ஏசாயா தேவனை அல்ல, தேவனின் ரூபத்தில் இருந்த தேவ குமாரன் கிறிஸ்துவை தான் பார்த்திருக்க வேண்டும்!!

ஆராய்ச்சி செய்பவர்கள் ரஸ்ஸல், ஜோசப் ஸ்மித் மாத்திரம் அல்ல!! வேத பண்டிதர்கள் யாவரும் தான்!! ஆகவே தான் உங்கள் பாணியில் அனைவருமே பொறம்போக்கு என்று நாகரீகமாக நானும் சொன்னேன்!! இதில் யார் கல்ட் என்பது அவர் அவர் கொண்டிருக்கும் விசுவாசம், புரிந்துக்கொள்ளுதலை வைத்து தான் முடிவு செய்கிறோம்!! நீங்கள் என்னை கல்ட் என்று சொல்லும் எத்துனை உரிம்மைக்கொண்டிருக்கிறீர்களோ, அதே உரிமை உங்களை கல்ட் என்று சொல்ல எனக்கும் இருக்கிறது!!

உங்கள் அனைவருக்கும் ஒரு குழப்பம் என்னவென்றால், நான் எழுதுவது ரஸ்ஸலை ஆகவே ரஸ்ஸல் எழுதியதை மாத்திரமே வைத்து அதே வேவ்லெங்த்தில் என் பதிலை வாசிப்பதினால், ஏற்படுகிற ஒரு மாயையை தான் நீங்கள் மீண்டும் மீண்டும் சொல்லுகிறீர்கள்!!


 Wiki list of cults


இதோ ஒரு இனையத்தளம் வெளியிட்ட கல்ட் தொகுப்பு:


3

A

B

C

D

E

F

G

H

I

J

K

L

M

N

O

P

Q

R

S

T

U

V

W

X

Y

Z



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:
//அன்பு நண்பர்கள்  பெரேயன் , அன்பு மற்றும் டினோ உள்ளிட்ட வேத மாணவர்களே . நீங்க வெளியில் சொல்லவேண்டாம் உங்கள் ஜெபத்தில் நீங்கள் தேவனிடம் கேளுங்கள். வசனம் தெளிவாக சொல்லுகிறது ஏசாயா கர்த்தரை(Not Adonai but யேகோவா , h3068 -  LORD  , יְהוָה ) கண்டான். கர்த்தர் (Not Adonai but யேகோவா , h3068 -  LORD  , יְהוָה )  ஆபிரகாமின் விட்டிற்கு வந்தார் ஆனால் நீங்கள் மேலே குறிப்பிட்ட வசனகளில் தேவனை (பிதாவை) ஒருவரும் கண்டதில்லை என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. இதற்க்கு என்ன விடை என்று கேளுங்கள். மிகாவேலை தேவன் என்று சொல்லலாம் ஆனால் யேகோவா என்று சொல்லலாமா? கேளுங்கள் தேவன் பேசுகிறவர் கட்டாயம் பேசுவார். நீங்கள் ரோமன் கதோலிகத்தில்  (அல்லது வேறு பெயர் கிறிஸ்தவ சபையில்)  இருந்து வெளியேறியது மகிழ்ச்சியே! ஆனால் "இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்." (யோபு 20:24) போல நேராதபடி பார்த்துகொள்ளுங்கள். //

தேவன் கானக்கூடாதவராக இருக்கிறபடியால், அவரை ஒருவரும் காணமுடியாது என்பதற்காக, அவரை காண்பவன் அதமாகிவிடுவான் என்பதை தெரியப்படுத்தவும் வசனம் தேவையே!! இதை அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்!! நானும் அன்பும் நீங்கள் நினைக்கும் வேத மாணவர்கள் கிடையாது, அப்படியே நீங்கள் நினைத்தாலும் அதை நான் ஒன்றும் பெரிதாக நினைக்க போவதில்லை!! இதற்கு இது தான் விடையாக இருக்க முடியும்!! ஒன்று தேவனை ஒருவரும் காண முடியாது என்பதை நம்ப வேண்டும், அல்லது இவர்கள் கண்டார்கள் என்பது உண்மையாக இருக்க வேண்டும்!! தேவனை ஒருவரும் ஒருபோதும் காணமுடியாது என்பதால் தான் ஒருவன் கண்டு அதமாகிறான் என்று வசனம் சொல்லுகிறது, அப்படி என்றால் தேவனை ஒருவரும் கண்டதில்லை என்பதே உண்மை!!

மிகாவேல் அல்லது மிக்கேல் என்பது மிக் மற்றும் ஏல் என்பதின் கூட்டு வார்த்தை!! மிக் என்றால் தற்சொரூபம், ஏல் என்றால் தேவன்!! ஆக தேவனின் தற்சொரூபமானவர் மிக்கேல் (மிகாவேல்)!! வேதம் சொல்லுகிற‌,

கொலோசெயர் 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும்,

Colossians 1:15 The Son is the image of the invisible God

மிகாவேல் யெகோவா கிடையாது, ஆனால் மிகாவேல் யெகோவா தேவனை வெளிப்படுத்தும் அவரின் தற்சொரூபம்!! The Express image of God (Jehovah)!!

நீங்கள் யோபின் வசனத்தை சுட்டி காண்பித்து எனக்கு பயத்தை கொடுக்கலாம் என்று பார்க்கிறீர்களோ!! இந்த வசனம் எனக்கு அல்ல, ஊழியம் ஊழியம் என்கிற பெயரில் பணத்தை சம்பாதிக்க அதை நோக்கமாக வைத்திருப்பவர்களுக்கு தான் என்பதை அதிகாரத்தை வாசித்து புரிந்துக்கொள்ளுங்கள்!! எனக்கு பணம் நோக்கம் அல்ல, தேவன் எனக்கு அனுதினமும் போஷிக்கிறார், என் தேவைகளை சந்திக்கிறார், நான் அவரை நம்பியிருக்கிறேன், ஆனால் இந்த வசனம் பலருக்கு தேவை, அவர்களுக்கு இது போகட்டும்!!

சபைகள் எல்லாம் சரி என்றால் ஏத் இத்துனை சபைகள் வளர வேண்டும்!! கத்தோலிக்கம் சரியாக இருந்திருந்தால், ஏன் ஒரு மார்ட்டீன் லூத்தர், அதன் பின் ஏன் பெந்தகோஸ்தே சபைகள், அதில் அத்தனை பிரிவுகள்!! ஒரு சபை சரி இல்லை அல்லது வசதிபடவில்லை என்று தானே மற்றோரு சபை தோன்றுகிறது!! இப்படி இருக்க என்னை மாத்திரம், பாராட்டுவதற்கு என்ன அர்த்தம்!! தேவன் வசனக்த்தில் சொல்லியிருக்கிறார்,

வெளி 18:4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.

ஆக நான் வெளியேற்னேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:

//நீண்டநாட்களாக இதே போன்ற ஒரு காரியத்தை சிந்தித்து கொண்டு தளத்திற்கு வரும் சகோதரர்களிடம்  கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன். என்னுடைய நிறைய கேள்விகளுக்கு கிறிஸ்தவன்  என்று சொல்லியும்   "இயேசு கிறிஸ்துவை தொழ மறுப்பவர்களிடம்"  பதிலை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் ஆகையால் இது போன்ற ஒரு ஏற்பாடு இந்த விவாதத்தை நல்ல முறையிலும், விரைவாகவும் நடத்த உதவும் என்று நம்புகிறேன். அதேபோல அவர்கள் என்னுடைய விசுவாசத்தை குறித்து எழுப்பும் எல்லா கேள்விகளுக்கும் வேதத்தில் இருந்து மாத்திரம்  என்னால் பதிலளிக்கமுடியும் என்று விசுவாசிக்கிறேன்; அப்படி பதிலளிக்க முடியவில்லை என்றால் என்னை மாற்றி கொள்ளவும் தயாராக இருக்கிறேன்; ஏனென்றால் வேதத்தில் இல்லாத ஒன்று விடாப்பிடியாக நம்புவது மூடத்தனம்..!//

இயேசு கிறிஸ்துவை தொழுபவர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் இயேசு கிறிஸ்துவை தொழ மறுப்பவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதே ஒரு வீண் கருத்து!! வேதம் தெளிவாக சொல்லியிருக்கிறது, கிறிஸ்துவின் சீஷர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்று, வேதத்தில் இல்லாத ஒன்றை விடாப்பிடியாக நம்புவது மூடத்தனம் என்று சொல்லிக்கொண்டு இப்படி நம்புவதை என்னவென்று சொல்லுவது!! சீஷன் என்றால் ஒருவரை பின்பற்றி செல்பவனே அன்றி அவரை துதிப்பவனோ, ஆராதிப்பவனோ, தொழுதுக்கொள்பவனோ இல்லை!! பின்பற்றுவது என்றால் அவர் என்ன சொல்லிதந்திருக்கிறாரோ, அதை கைக்கொள்வது!! கிறிஸ்து தன் பிதாவை ஆராதிக்க சொல்லி தந்திருக்கிறார் என்றால் நாமும் பிதாவை ஆராதிப்பது தான் பின்பற்றுதலாகும்!! அவர் பிதாவை ஆராதிக்கட்டும், ஆனால் நான் கிறிஸ்துவை ஆராதிக்கிறேன் என்று சொல்வதினால் ஒருவன் தன்னை கிறிஸ்துவன் என்று சொல்லுவதும் வேதத்தில் இல்லாத ஒன்று தானே!! இதையும் விடாப்பிடியாக நம்பித்தானே வருகிறீர்கள்!!

விவாதிப்பது ஒரு பெரிய காரியம் அல்ல, ஆனால் விரக்தியின் உச்சத்தில் வந்து சபிப்பதும், தான் சொல்லுவதை ஏற்றுக்கொள்ளாதவனை தூஷிப்பதும், அவர் குடும்பத்தையும் சந்ததியையும் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதும், இன்னும் பல வேண்டாத எழுத்துக்களை எழுதி பலரை காயப்படுத்துவதும் நோக்கம் கொண்டிருந்தால் அப்படி பட்ட ஒரு விவாதம் தேவையற்றதாகும்!!

ஒரே விசுவாசத்தில் இருப்பவர்கள் 2000 சபைகளாக ஒரே தெருவில் 12 சபைகள் வைத்து நடத்துபவர்களாக இருக்க முடியாது!! இது ஒன்றே இந்த சபைகள் வேதத்தை விசுவாசிக்கிறதா, அல்லது தங்களின் சபை போதகர்களை விசுவாசிக்கிறாதா என்பதற்கான விடையாகும்!!

வேதத்தில் ஒரு வசனம் மற்ற வசனத்திற்கு நேர்மாறாக இருப்பதை போன்று கூட இருக்கிறது, அதை அதில் ஒரு வசனத்தை மாத்திரம் பிடித்துக்கொண்டு கேள்விகள் எழுப்புவது ஆரோக்கியமான ஞானம் அல்ல!! மாறாக வசனங்கள் ஏன் அப்படி தோன்றுகிறது என்பதை ஆறாய்ந்து கேட்பதே ஞானமாகும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஜான்:

//நாதர் என்பது "Lord" ன் தமிழாக்கம். Jesus The Lord என்று சொல்லுவது தவறா? Gracious Lord என்று சொல்லுவது தவறா? Lord of the Cross என்று சொல்லுவது தவறா?//

இதை தான் சொன்னேன் வேதத்தில் இல்லாததை போதிப்பது என்று!! வேதம் அவருக்கென்று ஒரு நாமத்தை கொடுத்திருக்கிறது, இயேசு கிறிஸ்து!! இதை விட்டு விட்டு, இயேசப்பா, இயேசு சுவாமி, இன்னும் மேலே கூறியுள்ள பல நாமங்களினால் யாரை அழைக்கிறார்களோ!! இது தவறா அது தவறா என்பது கிறிஸ்தவத்திற்கு ஒன்றும் புதிது அல்ல!! இது தவறா என்று கேட்டால் இது தவறே என்பேன்!! அவரின் நாமம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அன்றி அருள் நாதர் போன்ற இஷ்ட நாமங்கள் கிடையாது!!

மேலும் நாதர் என்பதே நாதன் என்பதிலிருந்து உருமாறியதாக இருக்கும்!! இதற்கு ஒரு அர்த்தம் சர்வவல்லமையுள்ளவர் என்பதாகும்!! ஆனால் வேதம் அவரை வல்லமையுள்ள தேவன் என்றே சொல்லியிருக்கும் போது, அவரை சர்வவல்லமையுள்ள தேவன் என்று சொல்லி பிதாவாகிய தேவனின் மகிமையை குறைக்கிறார்கள், ஆகவே இப்படி சொல்லுவது தவறே!! அப்படியே நாதர் என்பது தமிழாக்கம் என்றால் ஏன் அதை வேதத்தில் இது வரை உபயோகபடுத்தவில்லை!! இப்படி தேவை இல்லாத பதங்களினால் ஒரு உணர்ச்சியை தூண்டி அதினால் விசுவாசத்தை வளர்ப்பதை காட்டிலும், வேதத்தில் உள்ளதையே சொல்லி உண்மையான விசுவாசத்தை வளர்க்கலாமே!!

//அமென்! நீங்கள் மேலே எழுதின அனைத்தையும் ஏற்று கொள்ளுகிறேன்!! ஆனால் இதற்கும் இந்த விவாதத்திற்கும் என்ன தொடர்பு?//

ஆக கிறிஸ்துவின் பிதாவே நம் பிதா என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? பிதாவை இனியும் யெகோவா தேவன் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை, அவரை அப்பா பிதாவே என்று கிறிஸ்து அழைப்பது போல் நாமும் அழைக்கிறோம்!! நாமும் கிறிஸ்துவும் ஒருவரையே பிதா என்று அழைக்கும் போது, கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்கிற வாதம் எப்படி எழும்பும்!?

// முட்செடியில் தரிசனமான தேவதூதனானவர் யார்? அவரை தேவனாகிய கர்த்தர் என்று அழைக்கலாமா?//

முட்செடியில் தரிசனமானவரை தான் வேதமே கர்த்தரின் தூதனானவர் என்று சொல்லும் போது தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் எப்படி அழைக்கலாம்? இப்ப தான் நீங்கள் நெருங்கி வருகிறீர்கள்!! நல்லா யோசியுங்கள், சிந்தியுங்கள்!! கர்த்தரின் தூதனானவர் யாராக இருக்க முடியும் என்று!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

ஜோன் எழுதுகிறார்!!!

  • //அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. (யாத்திராகமம் 3:2)

  • ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். (யாத்திராகமம் 4:5)

  முட்செடியில் தரிசனமான தேவதூதனானவர் யார்? அவரை தேவனாகிய கர்த்தர் என்று அழைக்கலாமா?

தேவனாகிய கர்த்தர் பிதா மட்டுமே என்றால் தரிசனமான அவர் எப்படி தரிசனமாக முடியும்? ///

நண்பர் ஜோன் அவர்களே; இங்கு கூறப்பட்ட கர்த்தருடைய தூதனானவர் இயேசு கிறிஸ்துவே !!!  இதில் எமக்கு சந்தேகமே இல்லை. உங்களின் அடுத்த கேள்வி  எனக்கும் கொஞ்சம் குழப்பமாக இருந்தாலும் பின்வரும் வசனம் எமக்கு சரியான விளக்கத்தை கூறுகிறது. 

யோவான் 1:18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.


யோவான் 6:46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர்.

I யோவான் 4:12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.

இங்கு மேலே கூறிய வேத வசனத்தின் படி தேவனை யாரும் கண்டதில்லை என்றும் குமாரனாகிய இயேசுவை தவிர யாரும் கண்டதில்லை என்று இருக்கும் போது நீங்கள் கேட்ட கேள்விகள்  //அவரை தேவனாகிய கர்த்தர் என்று அழைக்கலாமா?தேவனாகிய கர்த்தர் பிதா மட்டுமே என்றால் தரிசனமான அவர் எப்படி தரிசனமாக முடியும்? ///
உங்கள் கேள்விக்கான   முடிவை நிங்களே எடுங்கள்!!!!  அப்படி உங்களின் வாதம் சரி என்று நீங்கள் சொன்னால் இயேசு சொன்ன வார்த்தை பொய்யாகவோ  அல்லது  தவறான மொழிபெயர்ப்பாகவோ இருக்கவேண்டும்!!  முடிவு உங்களுடையது. நன்றி



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//அந்த வேத புரட்டர்களை ஏசாயா கண்ட யேகோவா யார் என்று சொல்ல சொல்லுங்கள். யாரை பார்த்து சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று கேருபீன்களும், செராபீன்களும் துதித்து கொண்டு இருந்தார்கள்?

ஆபிரகாம் வீட்டுக்கு வந்த யேகோவா யார்?//

நாங்கள் கேட்ட எத்துனையோ கேள்விகளை கிடப்பில் போட்டுவிட்டு இவர்கள் பிடித்திருக்கும் கேள்விக்கு பதில் இல்லை என்று போல் பதிந்தே தன் பதிவுகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டிருக்கும் திரு ஜான் அவர்களே, வெளிப்படுத்தின விசேஷம் எல்லாம் தேவனே புரிய வைக்காவிட்டால் உங்களுக்கு புரியாது!!  ஏசாயா கண்ட யெகோவா, ஆபிரகம் கண்ட யெகோவா யார் என்பது எல்லாம் சொல்லி சொல்லி அழுத்து போச்சு, தேடி பாருங்கள் எங்கள் தளத்தில் விடைக்கிடைக்கும்!!

கிறிஸ்து என்ரால் அபிஷேகம் பன்னப்பட்டவர் என்று அர்த்தம் இருக்கிறது, அப்படி என்றால் அபிஷேகம் பண்ணினவர் யார்?? இருவரும் ஒருவரா!!

அனுப்பட்டவரை விட அனுப்பியவர் பெரியவர் என்றால் இருவரும் ஒருவரா??

இது போன்ற என்னற்ற கேள்விகள் வேதத்தில் இருக்கிறது!!

தாவீது பரலோகத்திற்கு ஏறி செல்லவில்லையே என்று வேதம் சொன்னாலும், உங்களின் ஊழியக்கார கூட்டம் இவர்களை எல்லாம் பரலோகத்தில் சந்தித்து பேசி வந்ததாக பிதற்றுவது சரியா??

ஒரு சபையில் அந்நிய பாஷை இருக்கிறது, மற்றொன்றில் இல்லை, ஆனால் இருவரும் திரித்துவம் போதிக்கிறார்கள், இது சரியா??

அற்புத பெருவிழாவில் கிட்னி சரியாகிவிட்டது, அதை இயேசு கிறிஸ்துவே சரி செய்தார் என்று சாட்சி கொடுத்து வந்து, 4வது நாள் மரித்து போகிறார் என்றால் ஊழியக்காரன் பிதற்றியது சரியா??

முதலில் உங்கள் சபைகளை சீர்ப்படுத்துங்கள், ஒன்றாக வாருங்கள், பிறகு பார்க்கலாம்!!

// என்னது? இயேசு கிறிஸ்து சர்வவல்ல தேவன் இல்லையா? வாயை பினாயில் போட்டு கழுவசொல்லுங்கள்//

சரி பினாயில் போட்டு கழுவியாச்சு!! இப்ப சொல்லுங்க!! கிறிஸ்து சர்வவல்லமை தேவன் என்றால் யெகோவா யார்?

எல் ஷடாய் என்றால் சர்வவல்லமையுள்ள யெகோவா தேவன்
எல் கிப்போர் என்றால் வல்லமையுள்ள தேவன் கிறிஸ்து என்று ஏசாயா எழுதியது!!

நான் பினாயில் போட்டு கழுவியாச்சு, வெளிப்படுத்தின விசேஷத்திலிருந்து வசனத்தை கொடுத்து கொக்கரிக்க வேண்டாம், அது எல்லாம் திரித்துவர்களுக்கு புரியாது!! அதில் மகா வேசி என்கிற பாபிலோன் என்று இருக்கிறது, அதை எல்லாம் கேட்டால் அழுதுவிடுவீர்கள்!! நேரடியான வசனத்திற்கே பதில் தெரியாதவர்கள், வெளிப்படுத்தின விசேஷத்தில் ஒரு வசனத்தை சம்பந்தமே இல்லாமல் காட்டி இருக்குது இருக்குது என்று பிதற்றிக்கொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்!!

ஜோடு வசனங்கள் என்றால் என்ன, ஒத்த வாக்கிய வசனங்கள் என்றால் என்ன என்று தெரிந்துக்கொண்டு பிறகு போராடுங்கள்!! மெய்ப்பர் என்று தேடிப்பார்த்தால் ஆயிரம் வசனம் கிடைக்கும், ஆனால் அவை எல்லாம் ஜோடு வசனங்கள் கிடையாது ஒத்த வாக்கிய வசனங்கள்!! வித்தியாசம் தெரியாமல் சும்மா எழுதவேண்டும் என்று எழுதி கைத்தட்டு வாங்குவதற்கு சீப்பான பட்டி மன்றங்கள் இருக்கிறது, கை கொடுக்கும் என்றும் சொல்லுங்கள்!! ஒரே வார்த்தையை கொடுத்து இது ஜோடு வசனம் என்று நினைக்க வேண்டாம், இது எல்லாம் புரியாதுங்க, விட்டு விடுங்க‌!!!

தீங்கை வகையறுத்து மாரல் என்றும் இம்மாரல் என்றும் ஒரே வார்த்தைக்கு வேறு அர்த்தங்கள் கொடுத்து விளக்கியிருக்கிறார் ஒருவர், ஆனால் எல் ஷடாய் என்று ஒருவரையும் எல் கிப்போர் என்று இன்னோருவரையும் வேதம் சொல்லியிருக்கும் போது, எங்களை பினாயில் போட்டு கழுவி பார்க்க சொல்லும் உங்களுக்கு உங்க ஆள் ஒரே வார்த்தையை திரித்திருப்பது கண்ணுக்கு தெரியவில்லையா!!
யெகோவா தேவன் சர்வவல்லமையுள்ளவர், கிறிஸ்து இயேசு வல்லமை தேவன் என்று தான் வேதம் சொல்லுகிறது!! உங்களுக்கு இது புரியாது, ஏனென்றால் உங்களுக்கு இவரும் அவரும் ஒருவரே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

John writes:

//சாத்தான் மட்டும்தான் நரகம் போவான் என்பதற்கு என்ன வசன ஆதாராம் வைத்து இருக்கிறீர்கள்?//

எசேக்கியல் 28:18. உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

யோவான் 16:11. இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார்.

சஙீதம் 52.

இவைகளில் சாத்தான் மாத்திரமே நரகத்திற்கு (என்றென்றைக்கும் அழிந்துபோவது) தள்ளப்படுவதாக உள்ளது!! மற்றபடி மனிதர்களும் தேவதூதர்களும் நியாயந்த்தீர்க்கப்படுவார்கள்!! சாத்தான் ஒருவனே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான் என்று வேதம்சொல்லுகிறது!!

//மாம்சமான யாவரும் என்பது இங்கே யூதர்கள் மாத்திரம் அல்ல புறஜாதியாரும் தேவனுடைய ரட்சிப்பை காண்பார்கள் என்பதை குறிக்கும். இரட்சிப்பு என்பது ஒரு "Present Continues" வார்த்தை.//

நாங்கள் இதை ஒரு போதும் மறுத்ததே கிடையாதே!! இதை தானே இந்த தளம் தொடக்கம் முதல் சொல்லி வருகிறது!! மாம்சமான யாவரும் என்பது யூதர்கள் மாத்திரம் இல்லை உலகத்தில் இருக்கும் அனைவரும் தான் என்பதை தானே நாங்கள் வேதத்தில் இருக்கிறபடி சொல்லி வருகிறோம், இதை எங்களுக்கே பூமரெங் செய்கிறீர்கள்!! "ரட்சிப்பை காண்பார்கள்" என்கிற வருங்காலத்தை குறித்து சொல்லப்படும் ஒரு பகுதியில் இரட்சிப்பு மாத்திரம் "Present Continuous" ஆகிவிட்ட வார்த்தையோ!! இரட்சிப்பு என்றால் என்னவென்று எழுதுங்கள் பிறகு அது "Present Continuous" என்று பார்க்கலாம்!!

கண்டிப்பாக (ஏசாயா 66:23,24) கொடுக்கப்பட்ட "பாதகம் செய்த" மனிதர்களை குறித்து எழுதுகிறேன்!! சற்றே அவகாசம் கேட்டு கொள்கிறேன்!!

//எல்லாரும் வெள்ளை சிங்காசன தீர்ப்பின் பொது உயிர்பிக்கப்படுவர்கள் என்பது எல்லாருக்கும் தெரியும். உயிர்ப்பிக்க பட்ட எல்லாரும் கிறிஸ்துவோடு பரலோகம் போகமாட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறது//

ஐய்யா ஜான் அவர்களே, அனைவரும் பரலோகத்திற்கு போக முடியாது, அந்த தகுதியும் கிடையாது!! தேவன் இந்த பூமியை மனிதர்கள் இதில் என்றென்றைக்கும் குடியிருக்கும்படியாகவே படைத்திருக்கிறார் என்கிறது வேதம்!! ஆகவே தான் "உம்முடைய ராஜியம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலங்களில் செய்யப்படுவது போல் இந்த பூமியிலும் செய்யப்படுவதாக" என்று கிறிஸ்து இயேசு இந்த பூமியில் வரயிருக்கும் ஒரு ராஜியத்தை குறித்து ஜெபிக்க கற்றுக்கொடுக்கிறார்!! இப்ப, இந்த காலத்தில் (சுவிசேஷ காலத்தில்) மிக சிலர் கிறிஸ்துவோடு பரலோகம் செல்ல தேர்வு செய்யப்படுகிறார்கள், ஆனால் மீதமானவர்கள் அனைவருமே இதே பூமியில் உயிர்த்தெழுந்து வருவார்கள்!!

//மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல் (வெளி 20:5)//

உயிரடையவில்லை என்று எழுதிவிட்டு அதை உயிர்த்தெழுதல் என்று சொல்லுகிறதே வசனம் என்பதை கவனிப்பது கிடையாதா?? மரணமடைந்த மற்றவர்கள்...........உயிரடையவில்லை என்பது கத்தோலிக்கர்கள் சேர்த்துக்கொண்ட ஒரு வசனம், அதை வேண்டுமென்றால் ஏன் சேர்த்துக்கொண்டார்கள் என்பதை வேறு திரியில் விரிவாக எழுதுகிறேன்!!

முதலாவது நியாயத்தீர்ப்பு என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ள வேண்டும்!! அதன் பிறகு தான் நியாயத்தீர்ப்பு என்றால் ஆக்கினையா என்பதும் புரியும்!! மேலும் ஆக்கினை என்றால் "அக்கினி" கிடையாது என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்!!

//இது ஒரு சுலபமான புரிந்து கொள்ளக்கூடிய வசனம். பிறக்கிற எல்லா மனிதனும் ஆதாமுக்குள்ளாக பிறக்கிறான் ஆனால் எல்லாரும் கிறிஸ்துவுக்குள் பிறப்பது இல்லை. அவரை ஏற்று கொள்ளுகிறவர்கள் மட்டுமே பிள்ளைகளாக முடியும்//

இது சுலபமாக புரிந்துக்கொள்ளக்கூடிய வசனமாக இருந்திருந்தால் இத்துனை குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறாது!! மேலும் கிறிஸ்துவுக்குள் பிறப்பதை பற்றி சொல்லவில்லை!! இதை தான் நீங்கள் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை என்கிறேன்!! கிறிஸ்துவுக்குள் "உயிர்த்தெழுவார்கள்" என்பது பிறப்பதில்லை!! இங்கே அவரை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்பதெல்லாம் கிடையாது!! அவரை ஏற்று கொள்ளுகிறவர்கள் மட்டுமே பிள்ளைகளாக முடியும் என்பதை இங்கே எழுத காரணமே இல்லையே!!

இந்த வசனம் சொல்லுவது என்னவென்றால், எப்படி ஆதாமின் அந்த முதல் பாவத்தினால் மரணம் எல்லாரயும் (ஒன்று விடாமல், ஆதாமை தெரிந்தவரோ, தெரியாதவரோ அனைவரையும் மரணம் அனைவருக்கும் உண்டு); அப்படியே கிறிஸ்துவுகுள் அனைவரும் (கிறிஸ்துவை அறிந்தவர்களும் அறியாதவர்களும் அனைவரும் தான்) உயிர்த்தெழுவார்கள்!! இதை உங்கள் போதனையில் இருப்போர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது!! ஏனென்றால் உங்கள் போதககர்கள் தங்களின் போதகத்துக்கு க்ரெடிட் (Credit) எதிர்ப்பார்ப்பவர்கள்!! அதாவது, நான் இத்துனை போதித்து என்ன பயன் என்பார்கள்!! ஆனால் அந்த போதகர்களினால் அல்ல மாறாக கிறிஸ்து சிந்திய இரத்தம் உலகத்தில் ஆதாம் தொடங்கி இனி பிறக்கவிருக்கும் ஒவ்வொருவருக்காகவும் சிந்தப்பட்டிருக்கிறதே என்பதை உங்கள் போதகர்கள் புரிந்துக்கொள்ளுவதில்லை!! நாங்கள் போதித்தும் ஏற்றுக்கொள்ளாத மனுஷர்கள் எப்படி உயிரோடு வருவார்கள் என்கிற ஆதங்கம் தான் அவர்களுக்கு, வேறு ஒன்றும் இல்லை!!

//எல்லாரும் சத்தியத்தை அறிந்து இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார் ஆனால் அது நிறைவேறவேண்டும் என்று அவர் பிரயாசபடுவதில்லை.//

தேவனுடைய சித்த நிறைவேற அவர் பிரயாசப்படுவதில்லை என்பது தேவனை இழிவுப்படுத்தி எழுதப்பட்ட ஒரு வாக்கியமாகும்!! எப்படி இதை எல்லாம் யோசிக்கிறீர்கள்!!

ஏசாயா 14:24 நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.

ஏசாயா 46:10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

தயவு செய்து உங்களுக்கு புரியவிருப்பம் இல்லாவிட்டல் விட்டுவிடுங்கள்!! எனக்கு சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று நான் தேவனை ஊக்கப்படுத்தவில்லை, அது அவரே சொல்லுகிறார்!! அப்படியே தான் இன்னும் வராததை குறித்தும் அவர் தொடக்கத்திலிருந்து சொல்லியும் இருக்கிறார்!! உங்களுக்கு புரியவில்லை!! தேவன் தன் சித்தம் செய்வதை பிரயாசப்படுவதில்லை என்பது மட்டமான மிகவும் மோசமான ஒரு வாக்கியம், தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள்!!
 
//தேவனுக்கு இரண்டு சித்தங்கள் உண்டு. ஒன்று அவருடைய 'Will of Commandment" மற்றொன்று அவருடைய 'Will of Decree". உதாரணமாக யூதாசை குறித்த அவருடைய "Will of Command" அவன் இயேசு கிறிஸ்துவை காட்டிகொடுக்க கூடாது என்பதே ஆனால் அவருடைய "Will of Decree" என்பது அவன் கிறிஸ்துவை காட்டிகொடுக்க வேண்டும் என்பது.
பார்வோனை குறித்த "Will of Command" அவன் இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய உடனே அனுப்ப வேண்டும் என்பதே ஆனால் "Will of Decree" அவனை கடினபடுத்தி தம்முடைய வல்லமையை காண்பிப்பதே! தேவன் தம்முடைய "Will Of Decree" ஐ மட்டுமே நிறைவேற்றுவார். //

தேவனுக்கு இரண்டு சித்தங்கள் உண்டு என்றெல்லாம் மெத்த படித்த மேதாவிகளின் சுய வார்த்தைகள்!! சரி, யூதாஸ் காட்டி கொடுக்க கூடாது என்பதும் தேவனின் சித்தம் தான் என்பதை எல்லாம் எப்படி தான் யோசிக்கிறீர்களோ!! கிறிஸ்து காட்டிக்கொடுக்கப்படுவார் என்பது பழை ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசினமாகும்!!

இனியும் தேவனின் சித்தம் நிறைவேறும்.......... ஆனால் நிறைவேறாது என்பது போல் சொல்லாதீர்கள்!! எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என்றால் அவரின் சித்தம் நிறைவேறாது என்பது சாத்தானின் போதனை!! இந்த வசனத்திற்கு இனை வசனம் தான் லூக் 3:5ல் உள்ள மாம்சமான யாவரும் தேவனின் இரட்சிப்பை காண்பார்கள் என்பது!!

தயவு செய்து வசனங்களை வாசியுங்கள், யாரோ எழுதும் அவரின் புரிந்துக்கொள்ளுதலான "Will of Commandment" மற்றும் "Will of Decree"ஐ அல்ல!!


//நீங்க பதில் கொடுத்த லட்சனத்தைதான் எல்லாரும் பார்த்தார்களே. ஏசாயா பார்த்த யேகோவா யார்? ஆபிரகாம் விட்டுக்கு வந்த யேகோவா யார்?
 
உங்கள் முதல் பதில்: பிதாவாகிய தேவன்
இரண்டாம் பதில்: இயேசு கிறிஸ்து
மூன்றாவது பதில்: பிதாவாகிய தேவன்
நான்காவது பதில்: கடைசியாக இயேசு கிறிஸ்து//

மண்ணிக்கனும், உங்கள் யூகங்களை என் பதிலாக மாற்ற வேண்டாம்!!

//அல்லது எனக்கு வசனம் தெரியவில்லை என்று வழக்கமான பாட்டு பாடுவீர்களா?//

கண்டிப்பாக!! இதில் என்ன சந்தேகம்!!

//எல்லாரையும் "அலிகள்" என்று அழைத்தாரே ஒரு "வீரத்திருமகன்" நீங்கள் இந்த கருத்தரங்குக்கு அழைக்கும் "விபச்சார (வேசி) சபை மக்களிடம்" "இயேசு ஒரு தூதன்" , "இயேசு தொழத்தக்கவர் இல்லை" என்று Notice அடித்து கொடுத்துவிட்டு அழைக்க "தில்" இருக்கா? வருகிறவன் செருப்போடுதான் வருவான் (Sorry to say it but Truth must be told)//

நோட்டிஸ் அடித்து விளம்பரப்படுத்தி பெயர் புகழ் சேர்ப்பது உங்கள் ஆட்களின் தந்திரம், எங்களுக்கு கூட்டம் தேவையில்லை, ஏனென்றால் கூட்டக் இருக்கும் இடத்தில் சத்தியம் இருக்காது, அவர்கள் கிறிஸ்துவிடம் வந்து சாப்பிட்டு போகிறவர்கள் மாத்திரமே!! அவர்களால் பென்ஸிலும், ஹோண்டாக்களிலும் சுற்றி திரிய முடியும், சிலுவை சுமக்க முடியாது!! ஆகவே சிறு கூட்டமான அவரின் அப்போஸ்தல கூட்டம், அவரின் சீஷர்கள் கூட்டம் இருந்தால் போதும்!! பிதா ஒருவனை இழுதுக்கொள்ளாவிட்டால் நீங்கள் தலைகீழாக குட்டிகரனம் போட்டு, நானும் கிறிஸ்தவன் தான் நானும் கிறிஸ்தவன் தான் என்று சொல்லுவதால் நீங்கள் கிறிஸ்தவனாவது கிடையாது!! ஆகவே நோட்டிஸ் அடிக்கும் அவசியம் எங்களுக்கு இல்லை!! இதே தளத்தில் தலைப்புகளையும் கொடுத்திருக்கிறேன்!! இத்துனையும் எழுதுவது "தில்" இருக்கிறது என்பதால் அல்ல, தேவனின் கிருபையும், கிறிஸ்துவின் துனையும், ஆவியின் (ஆவியான தேவன் என்று நினைக்காதீர்கள்) நடத்துதலும் இருப்பதால் தளத்தில் எழுதிக்கொண்டு தானிருக்கிறேன்!! இதை வாசிப்பவர் உங்கள் தளத்தில் இருப்பது போல் பெரும் கூட்டத்தார் அல்ல என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!! 12 அப்போஸ்தலர்கள் எங்கே, 5000 ஆண்கள் எங்கே!! நாங்கள் 12 பேரோடு இருக்கிறோம், நீங்கள் 5000 ஆண்களோடு இருக்கிரீகள்!! உங்கள் சத்தியம் செருப்பில் தான் அடங்கியிருக்கிறது என்பதை தெரிவித்ததற்கு மிக்க நன்றி!! செருப்போடு வருபவன் செருப்பில்லாமல் வருவோரையும் நாங்கள் வரவேற்போம்!!!

இயேசு கிறிஸ்து என்று அவரை முழுமையாக கூட உச்சரிக்க முடியாத கூட்டத்தில் இருக்கிறவர் நீங்கள்!! இயேசு கிறிஸ்து ஒரு தூதன் என்று சொல்லவில்லை, இயேசு கிறிஸ்து பிரதான தூதனாக இருந்த மிக்காஹேல் தூதன் என்று தான் எழுதியிருக்கிறேன்!! தயவு செய்து எல்லாவற்றையும் திரிக்காதீர்கள்!! அவர் இருந்த நிலை, அவர் மாம்சத்தில் வந்து தன்னை பலியாக ஒப்புக்கொடுத்த பிறகு உயர்த்தப்பட்ட நிலை அனைத்தும் எழுதியும் வம்பு எழுதுகிறீர்களே!! 'இயேசு கிறிஸ்ட்ஷு தொழத்தக்க தேவன்" என்கிற ஒரு வசனத்தை காண்பிக்க உங்களுக்கு முடியவில்லை!! ஏன் அதையே திரும்ப திரும்ப பேசுகிறீர்கள்!! உங்களுக்கு தொழ வேண்டும் என்றால் தொழுதுக்கொள்ளுங்கள், நான் என்ன உங்களை தடையா பண்ணுகிறேன்!! வசனம் சொல்லுகிறது,

யோவான் 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்;

ஆனால் எங்கும் பிதாவை தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது என்று கிறிஸ்து சொன்னதில் இன்று இல்லாவிட்டலும், அவரின் ராஜியத்தில் அவசியம் தெரிந்துக்கொள்வீர்கள் என்பது நிச்சயமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கொல்வின்:
////வந்தவுடன் தொடங்கியாச்சுப்பா!! அட பாதத்திற்கு அர்த்தம் தெரியாத கூட்டமே, பூமி தேவனுக்கு பாதப்படி என்று எழுதியதையும் அப்படியே புரிந்துக்கொள்ளுங்கள்!!//
எவ்வளவுதான் விளக்கம் கொடுத்தாலும் உமக்கு புத்தி வருவதில்லை. கால் இல்லாமல் பாதம் ஏது. எமது காலை நான் எடுத்து விடுகிறேன். பாதத்தை மட்டும் பொருத்திக் கொள்ள வேண்டும் சம்மதமா?

மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.(Ps 92:6)
ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது.(Prov 10:14)//

பரவாயில்லை நீங்கள் ஞானமுள்ளவராகவே இருந்துக்கொள்ளுங்கள், ஆனால் நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே!! பூமி தேவனின் பாதப்படி என்றால் தேவன் காலை தொங்கப்போட்டு பூமியின் மேல் தன் பாதங்களை வைத்திருக்கிறார் என்று தான் அர்த்தமா? இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்!! பாதம் என்பதற்கு வேதத்தின்படியான அர்த்த என்னவோ அதை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர அதை அப்படியே மாம்சத்தின்படி அர்த்தம் எடுத்துக்கொண்டால் விபரீதமாக தான் புரிந்துக்கொள்ள முடியும்!! கிறிஸ்துவை ஆட்டுக்குட்டியானவர் என்று எழுதியிருப்பதால், கிறிஸ்து ஆட்டுக்குட்டி கிடையாது என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்!!

1 கொரிந்தியர் 1:27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.

நீங்கள் ஞானியாகவே இருந்துவிட்டு போங்கள்!! நாங்கள் பைத்தியமானவர்களாகவே இருந்துவிட்டு போகிறோமே!! நான் மிருகுணமுள்ள மனிதன் என்பதற்கு என்ன ஆதாரம், தெரிந்துக்கொள்ளலாமா!! வசனம் கொடுத்தாலும் பொருத்தமாக கொடுத்துப் பழகுங்கள், இன்னோரு சில்சாமா உருமாறாதீர்கள்!!

//அதையேதான் நானும் சொல்லுகிறேன். மற்றர்கள் கலக்ஷன் மன்னர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு முதலில் ஆதாரத்தை வெளியிடுங்கள். சகோ. சில்சாம் அப்படிதான் இருக்கிறார் எனில் அதற்கான ஆதாரம் தேவை. நீங்கள் ஆதாரம் தரும் பட்சத்தில் நான் சொல்லும் குற்றசாட்டுக்கும் ஆதாரம் தருவேன். //

ஆதாரத்தை நான் என்ன தருவது, உலகத்தில் வரும் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நீங்களே பார்க்கலாம்!! காட் டீவி, ஆசீர்வாதம் டீவி, போன்ற முழு நேர டீவிக்களும், இன்னும் இன்ஸ்டால்மென்டில் தங்களை வெளிப்படுத்தும் ஊழியர்கள், கேட்கும் ஒரே விஷயம், "இந்த ஊழியத்தை தாங்குங்கள்", "நீங்கள் எங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம், காசோலையாக அனுப்பலாம்,........" போன்ற பேச்சாளர்கள் (அதான் ஊழியர்கள்) இருப்பதை நீங்கள் கேட்டதேயில்லையா!!?? மேலும் வேலை செய்ய சோம்பல் உள்ள எந்த மனிதனும், தன் ஆகாரத்திற்கு என்ன செய்வார்கள்?? அப்படி சில்சாம் வேலை தான் பார்க்கிறார் என்றால் எழுதட்டும், நான் எழுதியதை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன்!!  இந்த ஆதாரமே போதுமானதாக இருக்கும்!! இந்த ஊழியத்தை தேவன் தந்தார் என்று சொல்லிவிட்டு, பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும், கூட்டங்களிலும் ஏன் கலெக்ஷனையே குறியாக வைத்திருக்கிறார்கள் என்பதற்கு என்ன பதில்? சரி சாப்பிடும் அளவிற்கு வாங்கிக்கொள்ளட்டும், அது என்ன பென்ஸ் காரில் சென்றாலோ, அல்லது ஹோண்டா அக்கார்ட் காரில் சென்றால் தான் ஊழியமா!! இது எல்லாம் தங்களின் சொந்த உழைப்பில் வாங்கினார்கள் என்றாலும் பரவாயில்லை, கலெக்ஷனில் வாங்குவதில் தானே!! பாவம் ஆட்டோ ஓட்டுபவர் ஆட்டோ ஓட்டிக்கொண்டே இருக்கிறார், தசமபாகமும், காணிக்கையும் கொடுத்து கொடுத்து, அவரின் தரம் அப்படியே இருக்கிறது, ஆனாலும் உழைக்கிறார்!! அரசாங்க உத்தியோகத்தை உதறிவிட்டு  தேவனுக்கு ஊழியம் செய்ய வந்திருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, உழைப்பை உதறிவிட்டு சொகுசாக வாழ்வது யார் பணத்தில்!! இதை தான் கலெக்ஷனில் வாழ்வது என்பது!!

நான் இப்படி கலெக்ஷன் வாங்குவதும் கிடையாது, கொடுப்பதும் கிடையாது!! எங்களை கலெக்ஷனில் வாழ்கிறோம் என்று தாங்கள் சொல்லியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு!!

//சம்பந்தமில்லாமல் திருத்தந்தையர்களை இதில் நுழைக்க வேண்டாம்.//

ஏன் சம்பந்தமில்லை!! தங்களை தந்தையர்கள் என்றும் திருத்தந்தையர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுவதில் பெறுமித்தம் கொள்கிறவர்கள் தானே!!

1 தீமோத்தேயு 4:2. விவாகம்பண்ணாதிருக்கவும்,

யார் இதை கொண்டு வந்தது!! யார் இதை பின்பற்றுகிறார்களாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நோட்டீஸ் கொடுத்து கொடுத்து நீங்கள் எத்தனை பேரை பரலோகத்துக்குத் தகுதியாக்கியுள்ளீர்கள்?

 நண்பரே வேத வசனங்களைப் புரிந்துகொள்ள தேவனுடைய கிருபை வேண்டும் என்று நான் விசுவாசிக்கிறேன். நானும் சற்று முன்னர்வரை இயேசு கிறிஸ்துவை தொழுதுகொள்வதில் தவறில்லை என்றுதான் சகோ.அன்பு அவர்களுடன் விவாதித்திருக்கிறேன். ஏனென்றால் நான் நேசிக்கும் அருமை இரட்சகராம் கிறிஸ்துவைத் தொழுது கொள்வதில் தவறிருப்பதாக நான் எண்ணவில்லை. ஆனால் சர்வ வல்ல தேவனாகிய,  கிறிஸ்துவே தொழுதுகொள்ளும், அவரே தேவன் என்று அழைக்கும் பரம பிதாவின் மகிமைக்கு ஒப்பாக ஆயிரம் கிறிஸ்துகள் வந்தாலும் போதாது என்பதை உணர்ந்தேன். மேலும் கிறிஸ்து ஆணித்தரமாக போதிக்காத ஒன்றை நாம் ஏன் பின்பற்றவேண்டும். அவர் தன்னை தேவகுமாரன் என்பதைவிட மனுஷகுமாரன் என்பதை அதிகம் முறை பயன்படுத்தியுள்ளார். பிதாவின் மகிமையை நம் அற்ப மூளைகொண்டு அறிய முடியாது. அத்துனை மகத்துவம் நிறைந்த தேவனை யாரோடும் ஒப்பிடவோ, யாருக்கும் நிகராகவோ எண்ணினாலே அது பாவம்.

மேலும் பிதாவின் வலதுபாரிசத்தில் இருக்கிறார் என்பதற்கு அர்த்தமே வலது கையாக, அவரது கட்டளைகளை நிறைவேற்றிக் கீழ்ப்படியும் ஒரு மகனாகவே கிறிஸ்து இருக்கிறார்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்ற பதத்தை சரிவர நாம் விளங்கிக்கொள்ளாததால் வந்த வினைதான் இது.

வீரத்திருமகன் என்று புதிய பட்டம் கொடுத்ததற்கு நன்றி. வீரத்தைவிட விவேகம் முக்கியம் என்பதால்தான் 'முத்துக்களை பன்றிகளுக்கு ' முன்னால் நோட்டீஸ் அடித்துப் போடவேண்டாம் என்றுதான் அந்த முட்டாள்தனத்தைச் செய்யவில்லை. இந்த தளத்துக்கு வரும் பன்றிகளே எங்களைப் பீறிப்போட எத்தனிக்கின்றன‌...

கற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் திறந்த மனதுடன், மனத்தாழ்மையுடன் இருந்ததால்தான் என்னால் இந்த சத்தியங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. நாங்களும் உங்களைவிட இந்த நாறிப்போன பெந்தெகொஸ்தே ஊழியத்தின் உளையில் மிகவும் வைராக்கியமாக இருந்தோம் என்பதை அறிக‌!

உள்ளுக்குள் கனன்றுகொண்டிருந்த கேள்விகளுக்கு வேதவசனங்கள் மூலமாக விடை கிடைத்ததாலதான் ஏற்றுக்கொண்டோம். கழுகுகளுக்குத்தேவை பிணம் போன்ற திடமான ஆகாரம். கரிச்சான் குஞ்சுகளுக்கு அது தேவையில்லை...



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard