kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


Senior Member

Status: Offline
Posts: 125
Date:
RE: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


///ஹி..ஹி.. ஹி..இந்த கோணல்புத்திகாரனின் பதிவை வாசிக்கும் யாரும் உணர்ந்து கொள்வார்கள். நான் ஆசிரியர், பெயர், பக்க இலக்கம் இவற்றை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இப்படி எழுதுவன் எப்படிப்பட்ட புத்தியுள்ளவனாக இருக்க வேண்டும். சும்மா எழுதினால் சொல்லலாம். சகோ. வசந்தகுமார் என்ற எந்த பதிவிலாவது குறிப்பிட்டுள்ளேனா? அனைத்திற்கும் ஆசிரியர்களின் பெயர் குறிப்பிட்டுள்ளேன். அல்லவா. கண்ணைத் திறந்து நன்றாக பாருங்கள். Citation என்றால் என்ன என்பதை அறிந்துவிட்டு வாருங்கள். எப்படிதான் Theses செய்து University இல் Pass பண்ணினீர்களோ தெரியாது

இன்னும் நான் கேட்ட யோவான் 1) 1 இற்கு பதில் தர துப்பில்லை. இந்த இலட்சணத்தில்....... முதலில் ரசலின் நூலிருந்து எடுத்த விபரங்களை பக்க இலக்கங்களுடன் தரப் பழகுங்கள். அதன் பிறகு என்னுடன் பேச வாருங்கள்.  முதலில் ரசல் வேதப்புரட்டனின் ஆக்கங்கள் 7ம நாள் அட்வாந்து சபையிலிருந்து திருடப்பட்டது. அதை ஆதாரத்துடன் பதிந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.

யெகோவா சாட்சிகளின் விபரங்களை நான் பதித்தால் உங்களுக்கென்ன? சாத்தானுக்கு இயேசு தெய்வமில்லை என்று தெரியும் என்று பபிலோனியக் கதைகளை சொல்பவன் நான் அல்ல. நான் பதித்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள். நேற்று மாலையே தருவதாக சொல்லிவிட்டு ஓடிப்போனவர்தானே நீர். .?////

நீங்கள் யெகோவாவின் சாட்சிகாரங்களை பற்றி என்ன வேண்டும் என்றாலும் சொல்லிவிட்டு போங்கள் ... அது உங்கள் பகுதி. எம்முடன் தர்க்கம் செய்யும் போது யேகோவா சாட்சி பற்றியோ ரசளைப் பற்றியோ எமக்கு விளக்கம் தரவேண்டாம். நான் எனது விசுவாச பிரமாணத்தை Our Faith / எங்கள் விசுவாசம் என்ற திரியில் கொடுத்து இருக்கோம். வாசித்து பார்க்கவும். அடுத்து எமது தளத்தில் சகோதரர் கேட்கும் கேள்விக்கு வேத ஆதாரம் கொடுத்து விளக்கம் கொடுங்கள். அப்படி இல்லாவிட்டால்  எங்களுடன் வாதாடி முடியாது போகும் சந்தர்பத்தில் கள்ளப் போதகன் சில்சாம்முடன்  சேர்ந்து நீங்களும் விவாதத்தை திசை திருப்ப  ரசளையும்    ஏழாம் நாள்காரர்கலையும் எங்கள் விவாதத்துக்கு உள்  நுழைத்து குழப்பம் செய்யும்  உங்களின் தந்திரப் புத்தி எமக்கு தெரியும் .      உங்களின் எல்லா டேக்னிகளும் எங்களுக்கு அத்துப்படி.  அடுத்து கொல்வின் அவர்களே, இந்த தளத்தில் என்னால் இயன்ற அளவு கருத்துக்கள் எழுத நேரம் ஒதுக்க முயற்சிக்கிறேன். கள்ளப் போதகன் போல விசுவாசிகளின் பணத்தில் வாழ்பவன் அல்ல நான். பொதுவாக இந்த நாட்டு சட்டப் படி ஒருவர் 8 மணித்தியாலம் வேலை செய்து ஆகவேண்டும். ஊழியம் செய்தால் கூட எங்கள் சொந்தப் பணத்திலே செய்கிறோம். இங்கு இருந்து எமது வேத மாணாக்கர் சகோதர சகோதரிகளுக்கு  இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கபோர் போன்ற நாடுகளுக்கு எமது பணத்திலே புத்தகம் அனுப்புகுறோம். இதுவெல்லாம் வேலைக்கு போனால் தான் முடியும்........


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///(மேசியாவின்) எதிரிகள் சற்றும் அறிவில்லாமல் தேவத்துவத்தை கணிதத்தில் தேடுகிறார்கள்;நாம் இதுபோன்று ஏதாவது உதாரணத்தைச் சொன்னால் உடனே மறுப்பவர்கள் தங்கள் வசதிக்காகவும் எப்படியாவது வேதத்தை மறுக்கவும் அதுகூறும் சத்தியத்தைப் பொய்யாக்கவும் இயன்றமட்டும் முயற்சித்து வருகிறார்கள்;ஆனால் வேதத்துக்காக நிற்பது போலவும் அதன் மாணவர் என்பதாகவும் நாடகமாடுகின்றனர்;ஒரு மாணவன் தன்னை  தான் மாணவன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது;அவன் தன் ஆசிரியனால் மாணவன் என்று புகழப்படவேண்டும்..!

கையில் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு எந்த வேலைக்கும் போகாமல் மாநகரப் பேருந்துகளில் கல்லூரி மாணவர் என்ற போர்வையில் சுற்றி வந்து இளம்பெண்களை சூறையாடும் சமுதாயத்தில் கலகங்களையும் கலவரங்களையும் உண்டாக்கும் குண்டர்களைவிட கேவலமானவர்கள் இவர்கள்; இவர்களை எங்காவது பார்த்தால் கல்லால் அடிக்கவேண்டும்;சாகக் கிடந்தாலும் இயேசுவே தெய்வம் என்று சொல்லும் வரைக்கும் பச்சைத் தண்ணீர் கூடக் கொடுக்கக்கூடாது..!

நாம், ஒரு ஊரிலே ஒரு ஒண்ணு இருந்துச்சாம் என்ற கதையில் சொல்ல வந்ததைப் புரிந்துகொள்ள முடியாத ஞானஸூன்யங்கள் அதை வைத்து வேறு கணக்கைப் போட்டு காட்டுகின்றன;அதாவது,

1+1+1=1 "ஒன்று"  என்று முட்டாள்தனமாக திரித்துவவாதிகள் போதிக்கின்றனராம்;இதுக்கு தான் அமாவாசை இருட்டுல ஒண்ணுக்கு போகக் கூடாது'ன்னு கிராமத்திலே சொல்லுவாங்க;நீங்க சொல்ற ஒண்ணுக்கு நாங்க போகலே;நாங்க சொல்ற ஒண்ணு வேற கணக்கு,அது வேதக்கணக்கு; அதாவது 1x1x1=(?) இப்ப கூட்டி கழிச்சு பாரு தம்பி கணக்கு சரியா வரும் /////
 
கள்ளப் போதகன் சில்சாம் உளற ஆரம்பித்து விட்டான்.  ஐயா போதகரே இன்று தங்களின் சபையில் எவ்வளவு கலக்சன் வந்தது.  வாழ்வு தான் நைனா உமக்கு. ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருக்கச் தான் செய்வான்.  அது சில்சாம் உமக்கே பொருந்தும். இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு பணம் சம்பாரிக்கவே கஷ்டம். எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிப்பானுவல் அதப் போய் பிடுங்கி திங்குறியே ::::  பிச்சக்காரப்பயன்.......  அதுவும் இயேசு தொழத்தக்க தேவன் என்று சொல்லி சொல்லி விசுவாசிகளை ஏமாற்றி சம்பாரிகிரானுவல்::::::::  வேக்கம் கேட்ட பயனுவல் ............... 


__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Executive

Status: Offline
Posts: 425
Date:
பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


dino wrote:
//அதுவும் இயேசு தொழத்தக்க தேவன் என்று சொல்லி சொல்லி விசுவாசிகளை ஏமாற்றி சம்பாரிகிரானுவல்://

இவ்வரி 100-க்கு 100 உண்மையானது.

இன்றைய “போதகர்கள்” “பாஸ்டர்கள்” “குருக்கள்” பலருக்கு ஆராதனைக்குரிய தேவன் “பிதாவாகிய தேவன் மட்டுமே, குமாரனாகிய இயேசு அல்ல” எனும் உண்மை நன்றாகவே தெரியும்.

ஆனால் இயேசுவையே தெய்வமாகக்காட்டி அவரையே ஆராதனை செய்யும்படி சொல்லி வந்த மக்களிடம், இதுவரை தாங்கள் சொன்னதும் செய்ததும் தவறு எனச் சொல்வதற்கு அவர்களின் சுயகவுரவம் ஒத்துக்கொள்வதில்லை; இதைவிட முக்கியம் இயேசுவையே தெய்வமாக நம்பி ஆராதனை செய்து தங்களுக்கு காணிக்கை கொடுத்து வந்த மக்கள், உண்மையைச் சொன்னால் தங்கள் ஆலயத்திற்கு வரவும் மாட்டார்கள், காணிக்கை கொடுக்கவும் மாட்டார்கள் என்ற பயமும் அவர்களுக்கு இருப்பதால், உண்மையை ஒத்துக்கொள்ளாமலும், உண்மையைச் சொல்பவர்களிடம் தரங்கெட்ட விதமாய் போராடிக் கொண்டும் இருக்கின்றனர்.

உருவத்தைப் பார்த்து வழிபட்டு பழகிப் போன ஜனங்களுக்கு, தெய்வம் மாறினாலும் தாங்கள் வழிபடப்போகிற புது தெய்வத்திற்கு ஓர் உருவம் வேண்டும் என்பதால்தான், கிறிஸ்தவர்களின் தெய்வம் இயேசு எனச் சொல்லி, அவரது உருவத்தையும் காட்டி ஜனங்களை ஏமாற்றி வருகின்றனர்.

இயேசுதான் மெய்யான தெய்வம் என்ற சுலோகத்தைச் சொல்லாமலும், இயேசு உங்கள் வியாதியைக் குணமாக்குவார், பிரச்சனைகளைத் தீர்ப்பார், ஐசுவரியத்தைத் தருவார், தேர்வில் வெற்றி தருவார் என்பது போன்ற செவித்தினவு வார்த்தைகளையும் சொல்லாமல், இவர்களின் மதமாற்ற முயற்சி பலிக்காது என்பதால்தான், வேதத்திற்கு விரோதமான தெய்வ வணக்கத்தைச் சொல்லி, வாக்குறுதிகளை அள்ளிவீசி தங்கள் பிழைப்பை ஓட்டுகின்றனர்.

எனவே டினோ சொன்ன கருத்து 100-க்கு 100 சரியே.

உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் எனும் பழமொழிக்கு ஏற்ப, மேலே சொன்ன உண்மைகளைப் படித்ததும் ஒரு சிலருக்கு உடம்பெரிச்சல் மிக அதிகமாகவே வரும். அந்த உடம்பெரிச்சலைத் தணிக்க, வழக்கம்போல் நம்மீது சாக்கடையை வீசவும் செய்வார்கள். ஆனால் அதையெல்லாம் நான் பொருட்படுத்தின காலம் மலையேறிவிட்டது. சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதுபோல அவர்கள் என்ன வேண்டுமானாலும் குரைத்துவிட்டுப் போகட்டும். எல்லாவற்றையும் தேவன் பார்த்துக்கொள்வார்.


-- Edited by anbu57 on Wednesday 9th of March 2011 08:13:54 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: பிதா, குமாரன், பரிசுத்த ஆவி பற்றிய வேத விளக்கம்.


////1+1+1=1 "ஒன்று"  என்று முட்டாள்தனமாக திரித்துவவாதிகள் போதிக்கின்றனராம்;இதுக்கு தான் அமாவாசை இருட்டுல ஒண்ணுக்கு போகக் கூடாது'ன்னு கிராமத்திலே சொல்லுவாங்க;நீங்க சொல்ற ஒண்ணுக்கு நாங்க போகலே;நாங்க சொல்ற ஒண்ணு வேற கணக்கு,அது வேதக்கணக்கு; அதாவது 1x1x1=(?) இப்ப கூட்டி கழிச்சு பாரு தம்பி கணக்கு சரியா வரும் /////

1 + 1 + 1 = 1 என்பது திரியேகத்துவம் சொல்லுவோரின் கணக்கு, அதாவது ஒரு பிதா, ஒரு குமாரன், ஒரு பரிசுத்த ஆவியான தேவன் (!?) ஆனால் மூவரும் ஒருவரே!!

1 X 1 X 1  = 3 என்பது திரித்துவம் சொல்லுவோரின் கணக்கு, அதாவது ஒரே தேவன் தான், அவர் விட்டலாச்சாரியர் போல் தேவையான போது பிதாவாகவும், தேவையான போது குமாரனாகவும், தேவையான போது பரிசுத்த ஆவியான தேவனாகவும் (!?) மூன்றாக ஒரே Nature and Essenceல் இருப்பவர்கள்!!

சில்சாமுக்கு வேதம் கேட்டால் தெரியாது என்பார், வரலாறு கேட்டால் தேவையில்லை என்பார், கடைசியில் கணக்கிலும் அப்படி தான் இருக்கிறார் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லையே!! நாங்கள் ஒன்றாக இருக்கிறோம் என்றால் ஒருவரே என்பது வேதத்திலிருந்து இந்த திரித்துவர்கள் (ஆனால் இந்த இடத்தில் கூட இருவரை குறித்து தான் வேதம் சொல்லியிருக்கிறது, மூன்றாம் ஒரு நபர் (!!) இல்லையே) போடும் தப்பு கணக்கு, அதை பிறரிடம் போதிப்பது இவர்களுக்கு பொழுதுப்போக்கு!! வேதத்தின் தேவன் விஞானம், கணக்கு அனைத்தையும் அறிந்திருக்கிறார்!!

மேலும் நாங்கள் எழுதி ஒருவனை ஆதாயப்படுத்தும் அதுவும் உங்களிடமிருந்து ஆதாயப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை, உங்களை போன்றோரின் பிழைப்பில் மண்ணை அள்ளி போட நாங்கள் ஒருபோதும் முயற்சித்ததில்லை!! பிதா ஒருவனை கிறிஸ்துவின்டத்திற்கு இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவனும் கிரிஸ்துவிடத்திற்கு வரான் என்பதை நாங்கள் அறிந்து, பிதாவிடம் கூட்டி செல்லும் வழியான கிறிஸ்துவிடம் எங்களை கூட்டி கொண்டு விட்டதே பிதா தான் என்பதை நாங்கள் தெளிவாக தெரிந்திருக்கிறோம்!! ஆகவே யாரை தொழுதுக்கொள்ள இயேசு கிறிஸ்துவே வேதத்தில் எங்களுக்கு சொல்லியிருக்கிறாரோ அவரையே நாங்கள் தொழுதுக்கொள்கிறோம், ஆனால் உங்களுக்கு இயேசு கிறிஸ்துவை தொழுதுக்கொள்ள பட்டி தொட்டி, Citation and Referenceக்கென்றே பல பெந்தகோஸ்தே எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!! வேதம் தெரியாததினால் அதில் உள்ள வார்த்தைகள் உங்களுக்கு இருட்டாக இருப்பதால் உலகத்தின் வெளிச்சம் உங்களுக்கு ஏதை சொல்லுகிறதோ அதை தொடர்ந்து செய்யுங்கள்!! எத்துனை "ஆத்துமாக்களை" வேண்டுமென்றாலும் ஆதாயப்படுத்திக்கொள்ளுங்கள், ஏனென்றால் அவர்கள் இப்ப இல்லாட்டி ராஜியத்தில் தெரிந்துக்கொள்வார்கள் என்பது எங்களுக்கு இருக்கும் நிச்சயம்!! நீங்கள் பயப்படுத்தும்படியோ, சபிக்கும்படியோ ஒருவரும் "அவியாத அக்கினி"க்கு எல்லாம் போக போவதில்லை!! ஏனென்றால் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்பதே வேதம் எங்களுக்கு தந்திருக்கும் நிச்சயம்!!

1 தீமோத்தேயு 2:4. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

இரட்சிப்பை கொடுத்து தேவன் சத்தியத்தை கற்றுக்கொள்ள செய்வார், உங்களை போன்று சபைகளில் ஆட்களை சேர்க்கவும், ஞானஸ்நானம் எத்துனை பேருக்கு கொடுத்தேன் என்று மார் தட்டிக்கொள்ள எங்களுக்கு தெரியாது!! ஏனென்றால் நீங்கள் மனிதர்களையும், அவர்களின் எழுத்துக்களையும் சார்ந்து வாழ்பவர்கள், நாங்களோ, தேவனின் வார்த்தையினால் வாழ்பவர்கள்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 9
Date:

//அதுமட்டுமா?  ''வார்த்தை'' என்றும் கூட இயேசுவை அழைக்கப்படுகிறார். (யோவான் 1: 14 ) கடவுளின் சார்பாக அவர் பேசினார் என்று இது அர்த்தப்படுத்துகிறது. அப்படி என்றால், பிதாவின் மற்ற ஆவி குமாரர்களுகும் மானிட குமாரர்களுகும் அவர் செய்திகளையும் கட்டளைகளையும் அறிவித்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது போன்ற பதிவுகளின் மேலதிக விளக்கத்தை பெற எனது நண்பன் தேநீர் பூக்கள் எழுதிய பிரதான தூதனாகிய மிகாவேல் யார் ? என்ற திரியில் வாசித்து பார்க்கலாம்//

அர்த்தப்படுகிறது என்கிறீர்களே, இது யார் அர்த்தப்படுத்தியது, நீங்களா?ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்றபின், வார்த்தை மாம்சமாகி என வருகிறது, உங்களுக்கு இதில் என்ன குழப்பம்.


__________________


Member

Status: Offline
Posts: 9
Date:

பிச்சைக்காரப்பயன், பிடுங்கித்திங்கிறவன், நல்லா இருக்குய்யா உம் வார்த்தை நாகரீகம்

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வாங்க நண்பர் ஜோஸப்ஸ்நேகா அவர்களே,

நல்ல விஷயங்களை தாங்களும் பதிவு செய்ய விரும்புகிறேன்!!

//பிச்சைக்காரப்பயன், பிடுங்கித்திங்கிறவன், நல்லா இருக்குய்யா உம் வார்த்தை நாகரீகம்//

சில்சாம் எழுதுவதை வாசிக்க நிறுத்திவிட்டீர்களோ நண்பரே!! உங்களுக்கு இந்த வார்த்தைகளில் நாகரீகத்தை தேடுகிறீர்கள் என்றால், சில்சாமின் வார்த்தைகளுக்கு வாந்தி எடுத்திருக்கனும்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

///அர்த்தப்படுகிறது என்கிறீர்களே, இது யார் அர்த்தப்படுத்தியது, நீங்களா?ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்றபின், வார்த்தை மாம்சமாகி என வருகிறது, உங்களுக்கு இதில் என்ன குழப்பம்.///

///பிச்சைக்காரப்பயன், பிடுங்கித்திங்கிறவன், நல்லா இருக்குய்யா உம் வார்த்தை நாகரீகம்///

நண்பர் josephsneha அவர்களே, வணக்கம்.
 தங்களின் கேள்விக்கு நன்றி. இதே கேள்வியே நண்பர் கொல்வின் கூட கேட்டார்.  அவரின் கேள்விக்கு நான் பதில் கொடுக்க விரும்பவில்லை. காரணம் இதே கேள்வியே இத்துடன் அவர் பல தடவை கேட்டுவிட்டார். நாங்களுக்கு மினக்கட்டு இவரின் கேள்விக்கு பந்தி பந்தியாக பதில் கொடுத்தாலும் இவர் இறுதியாக விதண்டாவாதமே பேசுவார். இல்லாவிடில் ரசலையோ அல்லது ரதபோட்டோ யெகோவாவின் சாட்சி போதனைகளை இந்த விவாதத்துக்குள் கொண்டு வந்து அனாவசியமாக எல்லோருடைய நேரத்தையும் வீணடிப்பார். அவருக்கு தெரிந்தது எல்லாம் வசந்தகுமார் என்ற படைப்பாளியின் ஆக்கங்களே. அதுவே அவரது இறுதியான ???????::::::::::: 
 
அதை விடுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் இதோ .....
UV என்ற பைபல் படி ''ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது; அந்த வார்த்தை தேவனாய் இருந்தது. அவர் ஆதியிலே தேவனோடு இருந்தார்.''  இதைப் போலவே ஒரு சில
மொழிபெயர்ப்பாகிய KJ , Dy ,JB ,NAB  வேதப்பதிவுகள் இதைப் போன்றே சொல்கின்றனர்.  எனினும், ஜேர்மன் மொழிகளில் மொழிபெயர்த்த பைபளில் '' ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை கடவுளுடன் (god ) இருந்தது, அந்த வார்த்தை ஒரு கடவுளாய் இருந்தது (a  god ). இவர் ஆதியில் கடவுளுடன் இருந்தார்''  என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது:
 
இதை KJ  என்ற மொளிபெயர்ர்பின் படி விளக்குவது என்றால் யோவான் 1 :1 ,2  -இன் எந்த மொழிபெயர்ப்பு சூழமைவுடன் ஒத்திருகிறது?  யோவான் 1 :18  - ல் பின்வருமாறு சொல்லிருகிறது. ''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.'' 14  ஆம் வசனம் ''அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்'' என தெளிவாக சொல்லிருகிறது. மேலும் ஆதியில் அவர் ''தேவனோடு'' இருந்தார் என்று 1  ஆம் 2  ஆம் வசனங்கள் சொல்கிறது. எவராவது ஒருவரோடும் அதே சமயத்தில் அந்த ஆள் ஆகவும் இருக்க முடியுமா?  யோவான் 17 :3   - ல் இயேசு பிதாவை ''ஒரே மெய்த் தேவன்'' என அழைக்கிறார்; ஆகவே இயேசு ''ஒரு கடவுளாக'' வெறுமெனே தம்முடைய பிதாவின் தெய்வீகப் பண்புகளை பிரதிபலிக்கிறார். --  எபி 1 : 3  இதற்கு நல்ல உதாரணம் '
 
''இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்''.

''ஒரு கடவுள்'' (a god ) என்ற மொழிபெயர்ப்பு கிரேக்க இலக்கண விதிகளோடு ஒத்து இருக்கிறதா?  அந்தக் கிரேக்க மூலவாகியம் ''அந்த வார்த்தை தேவனாய் இருந்தது'' என்றே மொளிபெயர்கவேண்டும்மென சில குறிப்புரை வற்புறுத்தி விவாதிக்கின்றனர். ஆனால் எல்லாம் அதை ஒப்புக்கொள்ளவில்லை. ''பண்படிப்படையான  சார்படையற்ற பயநிலைப் பெயர்ச்சொற்கள் ::::  மாற்கு 15 :39  மற்றும் யோவான் 1 :1 '', என்ற தன் கட்டுரையில், பிலிப் B  ஹோர்னர்; யோவான் 1 :1  - ல் இருப்பதைப் போன்ற அத்தகைய தனி எழுவாய் பயனிலை உடைய வாக்கிய உறுப்புக்கள், ''வினைச் சொல்லுக்கு முன்னாள் சார்படையற்ற பயனிலை வருகையில், முதன்மையாய் அர்த்தத்தில் பண்படிப்படையானவாய் இருகின்றனர். அந்த லோகாஸ், தியாஸின் பண்புடையவர்ரென அவை சுட்டிக் காட்டுகின்றனர்.''  என்று சொன்னார். அவர் ஆலோசனை கூறுவதாவது::::  ''அந்த வாக்கிய உறுப்பு, 'அந்த வார்த்தை கடவுளைப் போன்ற அதே பண்புடயவராய் இருந்தார்,' என ஒருவேளை மொழிபெயர்க்கப்பட்டு இருக்கலாம்.''  ( பைபல் சம்பந்த இலக்கியங்களின் பத்திரிகை, 1973 ,பக்கம் 85 ;87  ) இவ்வாறு, இந்த வசனத்தில், தியாஸ் என்ற சொல் இரண்டாவது தடவை வருகையில் திட்டமான சுட்டிடைச் சொல் (ஸோ) சேர்க்கப் பட்திராததும் கிரேக்கிலுள்ள இந்த வாக்கியத்தில் வினைச் சொல்லுக்கு முன்னாள் வைக்கப் பட்டிருப்பதும்  தனிக்கவநிபுக்குரியது. கவனத்தை கவருவதை, யோவான் 1 :1  ஐ ''அந்த வார்த்தை தேவனாய் இருந்தது'' என்ற மொழிபெயர்ப்பதை வற்புறுத்தும் மொழிபெயர்ப்பாளர்கள், வினைச் சொல்லுக்கு முன்னாள் ஒருமை சார்படையற்ற பயநிலைப் பெயர்ச் சொல் வரும் மற்றப் பகுதிகளை தாங்கள் 
மொழிபெயர்ப்பதில் பொதுநிளைச் சுட்டிடைப் (ஒரு) பயன்படுத்த தயங்குகுரதில்லை. இவ்வாறு யோவான் 6 :70  - ல் JB  மற்றும் KJ  ஆகிய இரண்டும் யூதாஸ் ச்கரியோத்தை ''ஒரு பிசாசு'' என்று, குறிப்பிடுகின்றனர், மேலும் யோவான் 9 :17  - ல் இயேசுவை ''ஒரு திர்க்கதரிசி'' என்று விவரிக்கப் படுகின்றனர்::::     தொடரும் ... 



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Member

Status: Offline
Posts: 9
Date:

இந்தியாவில் ஏன் உலகத்துக்கு சுவிஷேஷம் அறிவிக்கப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகின்றன, அதில் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு சற்றேறக்குறைய 400 வருடங்கள் ஆகின்றன, ஜொர்மன் மொழியில் அப்ப்டி இருந்தது, ஸ்வீடிஷ் மொழியில் இப்படி இருக்கிறது, ஆங்கில பிரதியில் இப்படி இருக்கிறது என தெரியாமலே பல தமிழக கிறிஸ்தவர்கள் 400 வருடங்களாக இயேசுவை தெய்வமாகவும் இரட்சகராக தொழுது வந்திருக்கின்றனர்.... பாவம் என்ன செய்ய, அவங்களுக்கெல்லாம் நரகம் தான் என சொல்வீர்கள் போல.
அதுபோக 2000 வருடங்களாக ஆதி கிறிஸ்தவர்கள் ஜெர்மன் பைபிள் தெரியாமல் தான் சிங்கங்களுக்கும், பட்டயத்துக்கும் இரையானார்கள், என்னே பரிதாபம் போங்கள்.



__________________


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

நண்பர்  josephsneha  அவர்களே,  தாங்கள் எழுதிய கருத்தில் இருந்தே புரிகிறது, இயேசுவை தெய்வமாக தொழுபவர் என்று.  அதாவது பழைய, பாரம்பரிய நண்பிக்கைகளை கொண்டுள்ளவர் என்று.  அதில் உங்களின் தவறு இல்லை. நான் கூட ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்க விசுவாசப் பிரிவை காலம் காலமாக கொண்டவன். அத்துடன் கொழும்பில் இருக்கும் ''கிறிஸ்துவுக்காக இளைஞ்சர் சங்கம்''  என்ற   ஒரு  சமய  கழகத்தின்  மூலம் 
சத்தியம் என்றால் என்னவென்று அறிந்துகொண்டேன்.  அதாவது அன்று தான் பைபல் வாக்கியங்களையும், இயேசு தொழத்தக்க தெய்வம் என்றும் அறிந்துகொண்டேன். மற்றும் ரோமன் கத்தோலிக்கம் இருந்த போதே இயேசு தொழத்தக்க தேவன்  என்ற அதே விசுவாசம். பின்பு வேதத்தை வாசிக்க வாசிக்க திருத்துவத்தின் ஒரு சில விஷயங்கள் ஆராய ஆரண்பித்த பின்பு தான் புரிந்துகொண்டேன். இயேசு
தொலத்தக்கவர் இல்லை என்பதும், மற்றும் அழியாத ஆத்துமா  இன்னும் பல;  வேதத்துக்கு மாறான கோட்பாடுகளை கொண்டு இருப்பதை. அதுமட்டும் இல்லாமல்  வாசித்து வேத ஆதாரப்படி இந்த சத்தியம்  சரியாக இருக்கா என்ற பின்பே  சத்தியத்தை ஏற்றுக்கொண்டேன்.  இயேசு கிறிஸ்து சொல்கிறார்:-
 
யோவான் 6:44  ''என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்''.  

ஆகவே தேவனின் தெரிவின் அடிப்படையிலே நாம் இருக்கிறோம். உங்களைப் போன்றே நாமும் இயேசுவை விசுவாசிக்கிறோம். ஆனால் அவர் தொழத்தக்க தெய்வம் என்று மட்டும் நாங்கள் விசுவாசிக்கமாடோம்.  இதற்கு மிக முக்கிய காரணம் வேதம் அவ்வாறு எமக்கு கற்பிக்கவில்லை. நீங்கள் கூட உங்களின் பாரம்பரிய விசுவாசத்தை ஒரு தடவை ஒதுக்கிவிட்டு எமது தளாத்தில் கொடுக்கும் வேதப்பதிவுகளை ஆராய்ந்து பார்த்து நலமானதை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி



__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நரகத்தை குறித்தான பதிவுகளை நாங்கள் இந்த தளத்தில் பதிந்திருக்கிறோமே!! மாம்சமான யாவரும் தேவனின் இரட்சிப்பை காண்பார்கள் என்றால் அதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை!! 400 வருடங்கள் என்ன 4000 முன்னே வாழ்ந்தவர்கள் கூட இன்று பிரபலமாக போதிக்கப்பட்டு மிரட்டப்படும் அந்த "நரகம்" என்கிற கற்பனையான இடத்திற்கு போக முடியாது, அப்படி ஒரு இடத்தை நம்மவர்கள் இருப்பதாக தங்கள் கணவுகளிலும், காட்சிகளிலும் பார்த்து வந்து அங்கே தங்களின் பாட்டி, தாத்தா, போன்றோர் எரிந்து கத்திக்கொண்டு இருப்பதாக சொல்லும் இவர்கள் வேத புரட்டர்கள்!! உயிர்த்தெழுதல் நடக்காத போது இது போன்று தங்களின் தாத்தா பாட்டியை பார்த்து வந்தேன் என்று சொல்லுபவர்கள் உயிர்த்தெழுதல் நடந்தாகிவிட்டது என்று போதிப்பதகா தானே அர்த்தம்!!

நண்பர் ஜோஸப்ஸ்நேகா அவர்களே, நீங்கள் சொல்லியிருக்கும் 2000 வருடங்களில் இருண்ட காலம் என்று ஒன்று இருந்தது, சுமார் 1200 வருடங்கள் வேதம் இருந்து இல்லமால் இருந்த காலம் அது, மனித போதனைகளினால் ஒரு சபை நடந்துக்கொண்டு இருந்தது, அதன் வழியாக வந்த மற்ற சபையாரும் அதே பாரம்பரியங்களை கற்றுக்கொண்டு பிறகு அந்த பாரம்பரியங்களை வைத்து வேதத்தை வாசிப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றினாலும் உண்மை அப்படி அல்ல‌!!

பாரம்பரியத்தை சற்றே ஒதுக்கி வைத்து, அடடா உலகமே இதை தானே நம்பிக்கொண்டு இருக்கிறது, நான் மட்டும் எப்படி வேறு பட்டு இருக்க முடியும் என்று யோசிக்காமல் வசனத்தை தேவன் எழுதியதால் தேவனின் பார்வையில், தேவனின் ஞானத்தில், தான் வாசித்து புரிந்துக்கொள்ள வேண்டுமே அன்றி மனிதர்களின் செவிக்கு தினவான வார்த்தைகளால் அல்ல‌!!

நன்றி!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard