kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கீதம் 67


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சங்கீதம் 67


சங்கீதம் 67 அதிகாரம்

1. தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
2. தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.)
3. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4. தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.)
5. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6. பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7. தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

ஆபிரகாமிற்கு ஆதி 22:16 ‍ 18ல் கொடுக்கப்பட்ட ஆசீர்வாதத்தை உறுதிப்படுத்தும் ஒரு சங்கீதம்!! இந்த சங்கீதம் மிகவும் அழகாக வரயிருக்கும் தேவ ராஜியத்தையும், எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட்டு தேவனை அறிகிற அறிவை அடைவார்கள் என்று சொல்லியிருக்கிறது!! அதை இந்த பூமியில் நிறைவேற்ற ஆபிரகாமிர்க்கு சொன்ன பிரகாரமான பூமிக்குரிய பிரபுக்களாக (சங். 45:16) வைக்கப்பட்ட சிலரால் (தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள் மேல் பிரகாசகிக்கப்பண்ணும்) இதை தேவன் நடப்பிப்பார் என்கிறது சங்கீதம்!!

சகல ஜனங்களையும் நரகத்தில் போட்டு அவிக்க இல்லை, மாறாக சகல ஜனங்களும் என் தேவனை துதிப்பார்கள் என்கிற காலம் விரைவில் வரயிருக்கிறது!! ஏசாயா சொல்லுகிறபடி, நிறைவேறும் காலம் வருகிறது!!

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

24 மணி நேரத்திற்குள் அனைவரும் நியாயம்தீர்க்கப்படுவார்கள் (நியாயத்தீர்ப்பின் நாள்) என்று சபைகள், போதகர்கள் போதிப்பதற்கு மாறாக இங்கே எழுதப்பட்ட படி தேவன் ஜனங்களை நிதானமாய் தான் நியாயந்தீர்ப்பார்!! இந்த நியாந்தீர்ப்பின் போது எல்லா மனிதர்களையும் தேவனே நடத்துவார் ஆகவே அனைவரும் சந்தோஷத்தில் மகிழ்ந்திருப்பார்கள்!! இனியும் நியாயந்தீர்ப்பின் நாளை குறித்தான் பயம் வேண்டாம்!! தேவன் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்க இருக்கும் ஒரு பெரிய ஆசீர்வாதம் தான் நியாந்தீர்ப்பு!! இந்த நியாந்தீர்ப்பு இருப்பதால் ஜனங்கள் நரகத்திற்கு அல்ல, மாறாக் தேவனை துதிப்பார்களாம், அதுவும் ஒரு சிலர் மாத்திரம் இல்லை, மாறாக சகல ஜனங்களும் என் தேவனை துதிப்பார்களாம்!! பூமி பழைய படி ஏதேன் தோட்ட நிலைக்கு சென்றவுடன், இந்த பூமி ஆதியில் எப்படி எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டு, இருந்ததோ, அதே நிலைக்கு மீண்டும் திரும்பி, பூமியில் பலன் வெளிப்படும்!! இன்று போதகர்கள் ஜனங்களை ஆசீர்வதிப்பது போல் அல்லாமல், தேவனே ஜனங்களை ஆசீர்வதிப்பார்!! பூமியில் எல்லைகளெல்லாம், அதாவது எல்லா ராஜியங்களும் தேவனுக்கு பயந்திருக்கும்!!

பயந்திருக்கும் என்றால் அவரை விரோதி என்று பாவித்து அல்ல, மாறாக அவரின் மகத்துவங்களை நினைத்து, அவர் தந்த இரட்சிப்பை நினைத்து, மரணத்திலேயே இருந்திருக்க வேண்டியவர்கள், அவரால் உயிர்ப்பிக்கப்பட்டார்கள் என்பதை நினைத்து தேவனுக்கு பயந்து இருப்பார்களாம்!!

இதுவே இன்று சபைகளில் சொல்லப்பட வேண்டிய நற்செய்தி!! ஆனால் இன்று இதை எல்லாம் விட்டு விட்டு, நியாந்தீர்ப்பை குறித்தான் ஒரு அச்சத்தை ஏற்படுத்துவது, தேவனை ஒரு ரட்சகராக இல்லாமல் ராட்சதராக சித்தரித்து, நீ பாவம் செய்தால் அவ்வுளவு தான் உன்னை நரகத்தில் போட்டு வேகவைத்திடுவார் என்கிற பயம் காட்டி போதனைகள் தருவது, அதை வைத்து தாங்கள் பணம் பார்ப்பது போன்ற நிகழ்வுகளில் தான் இன்றைய ஊழியங்கல் நடக்கிறது!! என் சபைக்கு வாருங்கள், என் ஜெப கோபுரத்திற்கு வாருங்கள், என் திறப்பின் வாசலுக்கு வாருங்கள், என் பண்ணைக்கு வாருங்கள், ஆசீர்வாதம் டீவியை பார்த்து ஆசீர்வாதம் பெறுங்கள், இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியின் மூலம் ஆசீர்வாதம் பெறுங்கள், கண்மணிகளா, தீர்க்கதரிசிகளுக்கு கொடுக்கிறவன் தீர்க்கதரிசியின் பலனை அனுபவிப்பான் என்கிற ஏஞ்சல் டீவி சாது நிகழ்சி போன்ற அருவருப்பான போதனைகள் தான் கேட்க முடிகிறதே தவிர, தேவனின் நீதியான நிதானமான நியாயத்தீர்ப்பை குறித்து ஒரு சபையாவது போதிப்பதை கேட்டது உண்டா!!

இந்த சங்கீதத்தை நிதானமாக வாசித்து தியானியுங்கள்!! இது நடந்தேறிய விஷயம் இல்லை, இனிமேல் நடக்கவிருக்கும் நிகழ்வே!! வேத வசனங்கள் இப்படி எல்லா ஜனங்களுமே தேவனால் இரட்சிக்கப்பட்டு அவரை  ஆராதிப்பார்கள் என்று சொல்லியிருந்தும், நம்மவர்கள் அவரை கொலைக்கார தேவனாக தான் சித்தரித்து வருகிறார்கள்!! ஏசாயா சொன்னது போல்,

ஏசா 60:2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்;

என்பது தான் இன்று நடந்துக்கொண்டு இருக்கிறாது!! அன்புள்ள கிறிஸ்தவர்களே, சஙீதங்களில் நம் தேவனின் இரட்சிப்பின் திட்டம் மிகவும் தெளிவாக அநேக இடங்களில் இருக்கிறது, நிதானமாய் தியானியுங்கள்!!

சங்கீதம் 48:11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக.
சங்கீதம் 72:2 அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
சங்கீதம் 97:8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள்.
சங்கீதம் 119:39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
சங்கீதம் 119:62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
சங்கீதம் 119:75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
சங்கீதம் 119:137 கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard