kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவ‌ கோட்பாடுகள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
திரித்துவ‌ கோட்பாடுகள்!!


திரித்துவ‌ கோட்பாடுகளை சொல்லி வருபவர்கள் உபயோகப்படுத்தும் சில வசனங்கள் (ஆனால் இதில் ஒன்றிலும் மூன்று பேர் என்று இல்லை ஆனால் இயேசுவும் பிதாவும் ஒருவரே என்கிற கோட்பாட்டை இந்த வசனங்கள் சொல்லுவது போல் அவர்கள் புரிந்துக்கொண்டதால் வந்த வினை):

ஏசா 9:6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

பார்த்தீர்களா, இங்கே தான் இயேசு கிறிஸ்துவை வல்லமையுள்ள தேவன் என்றும் நித்திய பிதா என்றும் எழுதியிருக்கிறதே!! அப்படி என்றால் அவரும் இவரும் ஒருவரே என்று சொல்கிறார்கள் திருத்துவவாதிகள்!!

வல்லமையுள்ள தேவன் என்கிற தமிழ் மொழியாக்கத்தின் எபிரேய வார்த்தை எல் கிப் போர் (El Gib·bohr) ஆகும்!! இந்த எல் (El) கீழ்க்கண்ட அர்த்தங்களை கொண்ட வார்த்தையாகும்:

1) god, godlike one, mighty one - தேவன், தேவனை போல், வல்லமையுள்ளவன்
 1a) mighty men, men of rank, mighty heroes - வல்லமையுள்ள மனிதர்கள், அதிகார பதவி கொண்ட மனிதர்கள்,
 1b) angels - தேவ தூதர்கள்
 1c) god, false god, (demons, imaginations) - தேவன், பொய்யான தேவன் (ராட்சதர்கள், கற்பனை கடவுள்கள்)
 1d) God, the one true God, Jehovah - தேவன், ஒன்றான மெய் தேவன், யெகோவா
 2) mighty things in nature - வல்லமையுள்ள சுபாவம்
 3) strength, power - வல்லமை

இந்த குறிப்பிட்ட வசனத்தில் இயேசு கிறிஸ்துவை ஏசாயா வல்லமையுள்ள தேவன் [எல் கிப் போர் (El Gib·bohr)] என்றே எழுதியிருக்கிறார்!! சர்வவல்லமையுள்ள யெகோவா தேவனுக்கு இருக்கும் எபிரேய பாஷை என்னவென்றால் எல் ஷடாய் (El Shad dai) ஆகும்! எபிரேய பாஷை தான் புரியவேண்டாம் ஆனால் வல்லமைக்கும் சர்வ வல்லமைக்கும் உள்ள வித்தியாசம் தெரியலாமே!! எல் ஷடாய் என்கிற இந்த பதம் பிரெத்தியேகமாய் யெகோவா தேவனுக்கு மாத்திரமே பயன்ப்படுத்தப்படும் வார்த்தையாகும்!!

அடுத்து, நித்திய பிதா!! பிதா என்று குறிப்பிடும் சொல் அப் (Ab) என்பதாகும்! இந்த வார்த்தை ஆபிரகாமிற்கும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும்! இவர் ஆபிரகாமைவிட பெரியவர் ஆனால் பரலோக பிதாவை (யெகோவ தேவன்) பார்க்கிலும் பெரியவர் என்று சொல்லுவது மனித கோட்பாடே தவிர வேதத்தில் இல்லை!!

ஒரு வசனத்தையோ, ஒரு வார்த்தையையோ நிச்சயமாக அந்த சூழ்லுக்கு (context) ஏற்றதாக பார்க்க வேண்டும் ஆனால் அதே சமயம் அந்த அர்த்தம் மற்ற இடங்களில் வரும் வார்த்தைகளின் அர்த்தத்துடன் ஒத்து போக வேண்டும்!! உங்கள் பிதாவிடத்திற்கும் என் பிதாவிடத்திற்கும் போக வேண்டும் என்று சொல்லுகிற இயேசு கிரிஸ்து நிச்சயமாக திருத்துவவாதிகள் சொல்லும் பிதாவாக இருக்க முடியாது (இவரே இவரிடத்திற்கு செல்லுவது என்பது மிகவும் மோசமான புரிந்துக்கொள்ளுதலாகும்), ஆனால் குமாரன் தன் பிதாவினடத்திற்கு போவது சரியாக இருக்கும்!!

நித்திய ஜீவனை இனி அனைவருக்கும் தரவிருப்பதால், அவரை நித்திய பிதா என்று சொல்லுவதில் தவறில்லை ஆனால் அவர் பரலோக பிதா கிடையாது!! நாம் தேவன் தரும் ஆவியில் தான் தேவனை அறிய முடியுமே தவிர ஒரு முக்கோனம், வட்டம், தேங்காய், முட்டை போன்ற பொருட்களை வைத்து சொல்லும் மனித போதனைகளை வைத்து தேவனை (திருத்துவத்தை) விளக்குவது அபத்தமாகிவிடும்!!

தொடர்ந்து இந்த பகுதியில் திருத்துவவாதிகள் தங்கள் கோட்பாட்டிற்கு ஆதாரமாக உபயோகிக்கும் அவர்களுக்கே பிரதேயகமான வசனங்களை பார்ப்போம்!! விரும்புகிறவர்கள் இந்த தொடரில் பதிவுகளை தரலாம்!!

இவர்கள் உபயோகிகும் ஒன்று இரண்டு வசனங்களை தவிர, "திரித்துவ‌ம்" என்கிற அர்த்தத்தில் கூட வசனங்கள் கிடையாது, ஆனாலும் தேவன் என்றவுடன் அது மூன்று பேர் ஒன்றாக இருப்பது தான் என்கிற மனோபாவத்துடன் பார்ப்பவர்களுக்கு வசனங்கள் அப்படியே தான் புரியும்!! புரிந்துக்கொள்ளுதலை மனிதர்களின் போதனையினால அல்ல, அதன் தெளிவான அர்த்தத்தை கொண்டு பாருங்கள், தேவன் தாமே வழி நடத்துவார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

திரித்துவ‌ கோட்பாட்டை வைத்திருப்போரு சொல்லும் இன்னோரு முக்கியமான வசனம் (!!):

1 யோவான் 5:6. இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். 7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.

தமிழ் வேதாகமம் மொழிப்பெயர்க்கப்பட்ட கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பை தவிர வேறு எந்த மொழிப்பெயர்ப்பிலும் இந்த வசனமே கிடையாது.டெக்ஸ்டஸ் ரிசப்டஸ் (Textus Receptus) என்கிற கிரேக்க புத்தகத்திலிருந்து மொழிப்பெயர்த்த கிங் ஜேம்ஸ் வேதாகமத்தின் மொழிப்பெயர்ப்பாளர்கள் ஒத்து கொள்வது என்னவென்றால் இந்த வசன பகுதி அந்த கிரேக புத்தகத்தில் அடிகுறிப்பாக (Foot note) தான் இருந்தது என்று!! மற்ற மொழிபெயர்ப்புகளில் பார்த்தோமென்றால்,

WBTC வெளியீடான‌ "ப‌ரிசுத்த‌ பைபிள்ள்"

1 யோவான் 5:6 இயேசு கிறிஸ்துவே ந‌ம்மிட‌ம் வ‌ந்த‌வ‌ர். இயேசு நீரோடும் இர‌த்த‌த்தோடும் வ‌ந்த‌வ‌ர். இயேசு நீரினால் ம‌ட்டும் வ‌ர‌வில்லை. இயேசு நீரினாலும் இர்ர‌த்த‌த்தினாலும் வ‌ந்தார். இது உண்மையென்று ந‌ம‌க்கு ஆவியான‌வ‌ர் கூறுகிறார். ஆவியான‌வ‌ர் உண்மையான‌வ‌ர். 7. என‌வே இயேசுவை குறித்து ந‌ம‌க்கு கூறும் மூன்று சாட்சிக‌ள் இருகின்ற‌ன‌. 8. ஆவி, நீர், இர‌த்த‌ம், இந்த‌ மூன்று சாட்சிக‌ளும் ஒப்புக் கோல்கின்ற‌ன‌.

த‌மிழ் பொதும்மொழிபெய‌ர்ப்பான‌ "திருவிவிலிய‌ம்",

1 யோவான் 5:6 நீராலும் இர‌த்த‌த்தாலும் வ‌ந்த‌வ‌ர் இயேசு கிறிஸ்து, அவ‌ர் நீரால் ம‌ட்டும் அல்ல‌; நீராலும் இர‌த்த‌த்தாலும் வ‌ந்தவ‌ரென‌ தூய‌ ஆவியார் சான்று ப‌க‌ர்கிறார். தூய‌ ஆவியாரே உண்மை. 7. என‌வே சான்று அளிப்ப‌வை மூன்று இருக்கின்ற‌ன‌. 8. தூய‌ ஆவியும் நீரும் இர‌த்த‌முமே அவை. இம்மூன்றும் ஒரே நோக்க‌ம் கொண்ட‌வை.

ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தில் மாத்திர‌ம் 7வ‌து வ‌ச‌ன‌த்தை ஒரு குறியிட்டிற்குள் [] போட்டிருக்கிறார்க‌ளோ!!

1 John 5:6-8

King James Version (KJV)
6This is he that came by water and blood, even Jesus Christ; not by water only, but by water and blood. And it is the Spirit that beareth witness, because the Spirit is truth.  7For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.  8And there are three that bear witness in earth, the Spirit, and the water, and the blood: and these three agree in one.

New International Version, ©2010 (NIV)

 6 This is the one who came by water and blood—Jesus Christ. He did not come by water only, but by water and blood. And it is the Spirit who testifies, because the Spirit is the truth. 7 For there are three that testify: 8 the[a] Spirit, the water and the blood; and the three are in agreement.

Footnotes:
1 John 5:8 Late manuscripts of the Vulgate testify in heaven: the Father, the Word and the Holy Spirit, and these three are one. And there are three that testify on earth: the (not found in any Greek manuscript before the fourteenth century)

English Standard Version (ESV)
Testimony Concerning the Son of God

6This is he who came by water and blood—Jesus Christ; not by the water only but by the water and the blood. And the Spirit is the one who testifies, because the Spirit is the truth. 7For there are three that testify: 8the Spirit and the water and the blood; and these three agree.

Darby Translation (DARBY)

6This is he that came by water and blood, Jesus [the] Christ; not by water only, but by water and blood. And it is the Spirit that bears witness, for the Spirit is the truth. 7For they that bear witness are three: 8the Spirit, and the water, and the blood; and the three agree in one.

New King James Version (NKJV)
The Certainty of God’s Witness
  
6 This is He who came by water and blood—Jesus Christ; not only by water, but by water and blood. And it is the Spirit who bears witness, because the Spirit is truth. 7 For there are three that bear witness in heaven: the Father, the Word, and the Holy Spirit; and these three are one. 8 And there are three that bear witness on earth:[a] the Spirit, the water, and the blood; and these three agree as one.
 
Footnotes:
1 John 5:8 NU-Text and M-Text omit the words from in heaven (verse 7) through on earth (verse 8). Only four or five very late manuscripts contain these words in Greek.

நியு கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பின் அடிகுறிப்பை கவனிக்கவும்!! ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரம் ஒரு புள்ளியை கூட்டவும் குறைக்கவும் கூடாது என்பதை தப்பாக புரிந்துக்கொண்டு, செய்த தப்பையே இன்னும் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள்!!

தொடரும்........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சேர்த்துக்கொள்ளப்பட்ட அந்த சர்ச்சைக்குறிய 7வது வசனம் (தமிழ் பரிசுத்த வேதாகமத்தில் குறியிட்டிற்குள் தான் அந்த வசனம் இருக்கிறது) எப்படி புதிய ஏற்பாட்டில் நுழைந்தது?

1516ல் கத்தோலிக்க பாதரியார், வேத பண்டிதரான எராஸ்மஸ் (Erasumus) என்பவர் அந்த வருடத்தில் முதன் முறையாக வெளியிடப்பட்ட கிரேக்க புதிய ஏற்பாட்ட தொகுத்தார். இந்த பதிப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 7வது வசனம் இல்லை. இதன் மறுபதிப்பு 1519ல் வெளியானது, அதிலும் இந்த வசனம் இல்லை. லத்தீன் மொழியில் இந்த வசனத்தை நன்கு அறிந்து வைத்திருந்த மற்ற கத்தோலிக்க குருக்கள் எராஸ்மஸை (Erasumus) விமர்சித்தார்கள்!! ஏராஸ்மஸ் சொன்ன பதில், இந்த பகுதி நான் பார்த்த எந்த கிரேக்க கையெழுத்து பிரதகிகளில் இல்லாததால் இதை போடவில்லை, அப்படி ஒரே ஒரு கையெழுத்து பிரதியில் கிடைத்தால் கூட இந்த பகுதிய நான் "சேர்த்து"க்கொள்கிறேன் என்றார்!!

எராஸ்மஸ் இப்படி சொன்னதை ஐய‌ர்லாந்தை சேர்ந்த‌ ஒரு க‌த்தோலிக்க‌ துற‌வி ப‌ய‌ன்ப்ப‌டுத்தினார். கையெழுத்து பிர‌தி எண் 61ஐ அவர் எழுதினார், அதில் தந்திரமாக 7வது வசனத்தை சேர்த்தார். இந்த பிரதியோ, விசேஷமான தாளில் எழுதப்பட்டிருந்தது. இந்த ஒரு கையெழுத்து பிரதியை வைத்து 16ம் நூற்றாண்டு துவங்கி இந்த தப்பிதமான வசனம் சேர்த்துக்கொள்ளப்பட்டது. எராஸ்மஸ் (Erasumus) இந்த விவாதத்துக்குரிய வசனத்தை தனது 3ம், 4ம் மற்றும் 5ம் கிரேக்க பதிப்புகளில் பயன்ப்படுத்தினார்!! ஆனாலும் இது தப்பிதமான சேர்த்துக்கொள்ளப்பட்ட வசனம் என்றும் போராடி தன் எதிர்ப்பை பதிவு செய்தார்!!

19ம் நூற்றாண்டு வரையில் எராஸ்மஸ் (Erasumus) வெளியிட்ட கிரேக்க புதிய ஏற்பாட்டை வைத்தே அந்த 7வது வசனத்தை சேர்த்துக்கொண்டு வந்தார்கள்!! ஆனால் அதன் பின் தீர ஆய்வும் ஆராய்ச்சியும் செய்து அதன் பின் வெளிவந்த பெறும்பாளுமான மொழிப்பெயர்ப்புகளில் ஒன்று அந்த வசனத்தை குறியீட்டிற்குள் [] போட்டிருப்பார்கள் அல்லது அந்த வசனமே இல்லாமல் இருக்கும்!!

விக்லிஃப (Wiclyff) முதல் டிண்டேல் (Tyndale) வரை அனைவரும் இந்த வசனத்தின் உண்மையை குறித்து நம்பாமல் அதை அடைப்புகுறிக்குள் போட்டு வந்தார்கள்!! 1551ம் வருடத்தில் தான் வசனங்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டது, ஆனால் பெரும்பாளுமான மொழிப்பெயர்ப்புகளில் இந்த வசனத்தை நீக்கி விட்டு அதை அடிகுறிப்பாக மாத்திரமே உபயோகித்தார்கள், ஏனென்றால் இந்த வசனத்தை யோவான் எழுதாமல் ஒரு மனுஷன் எழுதி சேர்த்துக்கொண்டதால்!!

இந்த ஒரு வசனம் மாத்திரமே திருத்துவத்தில் உள்ள மூன்று ஆட்களையும் (!!) ஒன்றாக சொல்லியிருக்கிறது, ஆனால் இது தந்திரமாக ஒரு மனிதன் சேர்த்துக்கொண்டதாயிற்றே!! இயேசு கிறிஸ்து ஒரு போதும் திருத்துவத்தை சொல்லிக்கொடுக்கவில்லை, மாறாக நம் தேவனை அவர் தன் தேவனாகவும், அவர் பிதாவை நம் பிதாவாகவே சொல்லுகிறார்!! சில‌ திருத்துவ‌வாதிக‌ள் சொல்லுவார்க‌ள், மாம்ச‌த்தில் தான் இருவ‌ரும் வேறு வேறு, உயிர்த்தெழுந்த‌ பிற‌கு இருவ‌ரும் (மூவரும்!!) ஒன்று தான் என்று, அவ‌ர்க‌ளுக்காக‌வே தேவ‌ன் இப்ப‌டி வ‌ச‌ன‌ங்க‌ளையும் வேத‌த்தில் த‌ந்திருக்கிறார்,

யோவான் 20:17. இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

வேத‌த்தில் இல்லாத‌ ஒரு கோட்பாட்டை ம‌னித‌ ஆவி கொண்ட‌வ‌ர்க‌ள் பார‌ம்ப‌ரிய‌ ந‌ம்பிக்கைக‌ளால் பின்ப‌ற்றினாலோ, போதித்தாலோ,

2 தீமோ 3:16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, 17. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

இந்த‌ வ‌ச‌ன‌த்தில் ப‌டி ந‌ட‌ந்துக்கொள்ள‌லாம்!!

இயேசு கிறிஸ்துவை பிதா என்கிற‌ ஸ்தான‌த்திற்கு அல்ல‌தி இயேசுவும் பிதாவும் ஒன்று தான் என்கிற‌ கோட்பாட்டின் விளைவாக‌, ம‌ரியாள் தேவ‌னின் தாய் என்று கத்தோலிக்கர்கள் சொல்லுவதில் என்ன தவறு!! இயேசு கிறிஸ்துவை ஆராத‌னை செய்த‌தால், ம‌ரியாள் ஆராதிக்க‌ப்படலாமே (தேவ தாய்), இயேசு கிறிஸ்து பாவ‌ம் இல்லாத‌தினால், ம‌ரியாள் பாவ‌ம் இல்லாத‌வ‌ள் ஆனால்!! அதை தொட‌ர்ந்து புனித‌ர் வ‌ன‌க்க‌ம், அவ‌ர்க‌ளுக்கு செலுத்தும் ஆராத‌னைக‌ள் போன்ற‌வைக‌ள் கத்தோலிக்கர்கள் பின் பற்றுவதில் என்ன தவறு இருக்கிறது!! சபைக்குள் திருத்துவம் என்கிற புதிய அஸ்திபாரம் பொடப்பட்டதால் விதவிதமான கற்களும் அதினால் வித விதமான கட்டிடங்களும் தான் வந்ததே தவிர, விசுவாசம் அல்ல‌!!

ஆனால தேவன் இதையும் அனுமதிக்கிறார்! இன்று கிறிஸ்துவத்தில் பெறும் பகுதியினர் திருத்துவ கோட்பாடு உள்ளவர்கள் தான்!! இவர்கள் மத்தியில் தேவன் சிலருக்கு அந்த உண்மையான ஞானத்தை, அறிவை தருகிறார்!!  பெரிய மேதாவிகள் தான், ஆனாலும் அநேகருக்கு இந்த அறிவு இல்லை!!

1 கொரி. 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை


தொடரும்............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard