kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரித்தவுடன் மகிமையா!?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மரித்தவுடன் மகிமையா!?


பெரிய‌ ஊழியர்கள் அல்லது தேவ மனிதர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் என்று அறியப்படுபவர்கள் மரித்தவுடன் மகிமைக்குள் பிரவேசிப்பார்களா!?

ஒரு மனிதன் மரித்தவுடன் என்ன ஆகிறான் என்று வேதம் குழப்பமே இல்லாமல் தெளிவான போதனை தருகிறது!!

தேவனின் இருதயத்திற்கு பிரியமான தாவீது,

அப்போஸ்தலர் 2:34 தாவீது பரலோகத்திற்கு எழுந்துபோகவில்லையே.

அப்போஸ்தலர் 13:36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.

மரணம் என்றாலே அழிந்து போவது, ஒன்றும் இல்லாமல் போவது தான்!! இப்படி ஒன்றும் இல்லாமல் போவதிலிருந்து தான் தேவன் எழுப்புகிறார் அது தான் கர்த்தராகிய கிறிஸ்துவினால் நமக்கு உண்டாகும் கிருபை!! அதற்காகவே கிறிஸ்து "அனைவருக்காகவும்" தம்மை மீட்கும் பொருளாக கொடுத்திருக்கிறார்!!

இயேசு கிறிஸ்துவும் மரித்து 3 நாட்கள் கல்லறையில் தான் இருந்தார்!! அவர் "மரித்தோர்களிலிருந்து" தான் எழுப்பப்பட்டாரே அன்றி, உயிரோடு இருப்பவர்களின் மத்தியிலிருந்து அல்ல!! அவரே எழவில்லை, மாறாக தேவன் அவரை எழுப்பினார் என்று தான் வேதம் சொல்லுகிறது

அப்போஸ்தலர் 2:24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

அப்போஸ்தலர் 2:32 இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

அப்போஸ்தலர் 3:26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

அப்போஸ்தலர் 5:30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,

அப்போஸ்தலர் 10:40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படிசெய்தார்.

அப்போஸ்தலர் 13:30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

அப்போஸ்தலர் 13:34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.

மரணத்தில் அழிந்து போயிருந்த கிறிஸ்துவையும் முன்றாம் நாளில் தேவன் வல்லமையாக எழுப்பி, அவரைக்கொண்டே அனைவரையும் எழுப்புவார் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்!!


இப்படி அழிவிற்காக நியமிக்கப்பட்ட மரணத்திலிருந்து உயிர்த்தெழ ஒரு காலத்தை தேவன் நியமித்திருக்கிறார், அப்பொழுது தான் அனைவரும் நியாயம்த்தீர்க்க எழுப்புவார் என்று வசனம் சொல்லுகிறது,

அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

வசனம் இத்துனை தெளிவாக இருந்தும், பலர், முக்கியமாக துவக்கத்தில் எழுதியபடி ஊழியர்கள், பாஸ்டர்கள், அப்போஸ்தலர்கள் போன்றோர் மாத்திரம் மரித்தவுடன் எப்படி தான் மகிமைக்குள் பிரவேசிக்கிறார்களோ! அதிலும் டீஜிஎஸ் அவர்கள் மரித்து இப்பொழுது பரலோக சங்கத்தில் இயேசு கிறிஸ்துவிற்கே இந்தியாவின் இரட்சிப்பை குறித்து ஆலோசனை சொல்லும் பதவியில் இருப்பதாக சொல்லுகிறார்கள்!! இத்துனை வசனங்கள் இருந்தும் எத்துனை துனிச்சலாக ஏமாற்றுகிறார்கள், அதை கேட்டு வசனத்தை கூட பார்காமல் சொல்லுவதை 'உறுக்கமாக" சொன்னதால் நம்பும் ஒரு "கிறிஸ்தவ" கூட்டம் வேறு!! என்ன கொடுமையான போதனையோ!!

அப் பவுல் கூட அவர் பெற இருக்கும் அந்த வெற்றியின் கிரீடம் கிறிஸ்து வரும் நாளில் தான் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருந்தார், ஏனென்றால் அவருக்கு தெரியும், கிறிஸ்து வரும் நாளில் தான் அவருக்கு உயிர்த்தெழுதல் என்று!! அந்த அப்போஸ்தலன் எங்கே, ஆனால் இன்று ஒரு சபையை துவக்கும் "அப்போஸ்தலன்" ஒரு ஊழியத்தை நிறுவும் "தேவ மனுஷன்" இப்படிப்பட்டவர்கள் மரித்தவுடன் "மகிமைக்கும்" "ஆலோசனை சங்கத்தில்" இருப்பதாக சொல்லுவதும், நம்புவதும் எத்துனை அபத்தமாக இருக்கிறது!!

இது ஏனென்றால் மரணம் என்றால் என்ன என்கிற தெளிவு இல்லாமல் இருப்பது தான் இதற்கு காரணம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது!!

ஆதியாகமத்தில் தேவன் சொன்னது,

ஆதி 2:17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆனால் சற்றே பின்பு சாத்தான் சொன்னது,

ஆதி 3:4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை;

தேவ‌னுடைய‌ பிள்ளைக‌ள் என்று சொல்லிக்கொண்டாலும் ந‌ம்புவ‌தும் சொல்லித்த‌ரும் போத‌னை சாத்தான் சொன்ன‌து தானே!!

தேவ‌ன் சொன்ன‌து, நீங்க‌ள் உண்மையிலேயே சாவீர்க‌ள் என்று, ஆனால் சாத்தான் சொன்ன‌து, இல்லை இல்லை, நீங்க‌ள் சாக‌வே சாவ‌தில்லை என்று!! தேவ‌னுடைய‌ வார்த்தை தெளிவாக‌ இருந்தாலும் ச‌பை போதிக்கும் போத‌னை என்ன‌வென்றால், செத்த‌வ‌ர் உண்மையாக‌வே சாக‌வில்லை, அவ‌ர் ப‌ர‌லோக‌த்தில், அல்ல‌து பாதாள‌த்தில் அல்ல‌து ந‌ர‌க‌த்தில், ஏதோ ஒரு ப‌க்க‌ம் இருக்க‌ தான் செய்கிறார் என்று!! இத‌ற்கும் சாத்தான் சொன்ன‌, சாக‌வே சாவ‌தில்லை என்ப‌த‌ற்கும் என்ன‌ வித்தியாச‌ம்!! அப்ப‌டி என்றால் இன்று ச‌பைக‌ள் ந‌ம்புவ‌து எதை, ம‌னித‌ன் ம‌ரிக்கிறானா அல்ல‌து ம‌ரிப்ப‌தில்லையா!?

ம‌ரித்த‌வுட‌ன் ம‌கிமைக்குள் பிர‌வேசிக்கிறார் என்றால் என்ன‌ அர்த்த‌ம்? ம‌ரிக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்!!

அன்புள்ள‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, ம‌னித‌ன் ம‌ரிக்கிறான் என்றால் ம‌ரித்தே போகிறான், அழிந்து போகிறான், ஒன்றும் மிஞ்சுவ‌து கிடையாது!! அவ‌ன் தோல், எழும்பு எல்லாம் ஒரு கால‌ம் முடிந்த‌வுட‌ன் ஒன்றும் இல்லாம‌ல் போய் விடும்!! இது தான் நீங்க‌ள் சாக‌வே சாவீர்க‌ள்!! இந்த‌ ம‌ர‌ண‌ம் என்ப‌தை நித்திரையாக‌ மாற்றி ந‌ம‌க்கு மாத்திர‌ம் இல்லை சர்வ‌ லோக‌த்திற்கும் உயிர்த்தெழுத‌லை த‌ர‌வே கிறிஸ்து இயேசு இந்த‌ உல‌க‌த்திற்கு வ‌ந்தார்!! ஆக‌வே தான் அவ‌ர் உல‌க‌ இர‌ட்ச‌க‌ர்!! உல‌க‌ இர‌ட்ச்ச‌க‌ர் என்று ஆல‌ய‌த்திற்கு பெய‌ர் வைத்தால் மாத்திர‌ம் போதாது அத‌ன் அர்த்த‌த்தையும் புரிந்துக்கொள்ள‌னும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மரணம்:

ஆதி 3:17  நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.

ஆதி 3:19  நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.

உயிரோடிருக்கும் நாளெல்லாம் என்றால் உயிரில்லாம‌ல் இருக்கும் நாட்க‌ள் வ‌ரும்!!

ம‌ண்னிலிருந்து ஆதாமை உண்டுப்ப‌ன்னி அவ‌னுக்குள் "ஜீவ‌ சுவாச‌ம்" ஊற்றி அவ‌னை ஜீவ‌ ஆத்துமாவாக்கினார்! அதாவ‌து உயிரில்லாத‌ ம‌ண்ணினால ஆன ஆதாமுக்குள் அவ‌ன் சுவாசிக்கும்ப‌டியான‌ ஜீவ‌ காற்றை கொடுத்து அவ‌னை உயிருள்ள‌வ‌னாக‌ மாற்றினார்!! அவ‌ன் ம‌ரித்த‌ பொழுது, அவ‌ன் மூச்சு வாங்க‌வும் உயிரோடு இருக்க‌வும் அவ‌னுக்கு கொடுக்க‌ப்ப‌ற்ற‌ அந்த‌ "ஜீவ‌ சுவாச‌ம்" அவ‌னை விட்டு எடுத்துக்கொண்ட‌தால் , அவ‌ன் எப்ப‌டி முன்பு இருந்தானோ, அதாவ‌து ம‌ண்ணாக‌ இருந்தானோ, அப்ப‌டியே மீண்டும் ம‌ண்ணாக‌ போகிறான்!! இது தான் ம‌ர‌ண‌ம்!!

ப‌ல‌ர் சொல்ல‌க்கூடும், அது எப்ப‌டி, அந்த‌ ஜீவ‌ சுவாச‌ம் தேவ‌னின் ஆவி, அத‌ற்கு உயிர் இருக்கிற‌து என்றும், அது ச‌ரீர‌ம் ம‌ரித்தவுட‌ன் த‌னியாக‌ பிரிந்து ஒரு உயிராக‌ அல்ல‌து ஒரு பொருளாக‌ அது செல்கிற‌து!! எங்கே என்று கேட்டால் சில‌ர் அது ப‌ர‌லோக‌த்திற்கும், சில‌ர் அது ந‌ர‌க‌த்திற்கும், இன்னும் ஒரு கூட்ட‌த்தார் அது உத்த‌ரிக்கிற‌ ஸ்த‌ல‌த்திற்கும், இன்னும் ப‌ல‌ இட‌ங்க‌ள் சொல்லுகிறார்க‌ள்!! யாருக்கும் அதில் தெளிவு இல்லை!! ஏனென்றால் வேத‌த்தை பார்க்காம‌ல் பார‌ம்ப‌ரிய‌ம் சொல்லும் பாட்டி க‌தைக‌ளினால் விசுவாச‌ம் வ‌ளார்த்தார்க‌ள்!!

ச‌ங் 146:4. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.

இது தான் தேவ‌ன் சொன்ன‌து, அவ‌னுக்கு கொடுத்த‌ ஆவி அவ‌னைவிட்டு பிரியும், அவ‌ன் மீண்டும் ம‌ண்ணாகி போவான், ஒரு யோச‌னையும், ஞான‌மும், வித்தையும், செய‌ல்ப்ப‌டுக‌ளும், துதித்த‌லும், அவ‌னுக்கு இருக்காது!! இது தான் உண்மை!! இதை விட்டு விட்டு, அவ‌ர் ம‌ரித்த‌வுட‌ன் ம‌கிமைக்குள் சென்றார், அவ‌ர் ம‌ரித்த‌வுட‌ன் ஆலோச‌னை ச‌ங்க‌த்தில் அம‌ர்ந்தார் போன்ற‌ அல‌ங்கார‌ வார்த்தைக‌ள் பொய்யான‌ உப‌தேச‌ங்க‌ள் ஆகும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பல கிறிஸ்தவ போதகர்கள் போதிப்பது உண்டு, நமக்கு தேவன் தந்த ஜீவ சுவாசம் (அதை தேவனின் ஆவி என்று நினைத்திருப்பதால்) மேலானது,ஆகவே அதுவும் ஒரு உயிராக இருக்கிறது, ஆகவே தான் மரித்தவுடன் அது "பரலோகம்" "நரகம்" "உத்தரிக்கிற ஸ்தலம்" போன்றவற்றுக்கு போய் விடுகிறது என்றும், நியாயத்தீர்ப்பு நாளில் மீண்டும் தன் சரீரத்திற்குள் சேர்ந்து வரும் என்று!! வசனம் சொல்ல்வது என்னவென்றால்,

பிரசங்கி 3:19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே இவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.

இது தான் உண்மை!! ஜீவனோடு இருக்கும் எல்லாருக்கும் சுவாசம் ஒன்று தான்!! அது மனிதன் ஆனாலும் சரி மிருகம் ஆனாலும் சரி!! அந்த ஜீவ சுவாசம் என்பது இன்று நாம் அழைக்கும் "ஆக்ஸிஜன்" தான் அன்றி வேறு ஒன்றுமே கிடையாது!! ஐ சி யுவில் இருக்கும் ஒருவ‌ருக்கு ஆக்ஸிஜ‌ன் கொடுத்த‌ அவ‌ரை இய‌ங்க‌ வைத்துக்கொண்டு இருக்கிறார்க‌ளே!! அப்ப‌டி தான் முத‌ல் முத‌லில் ஆதாமுக்கும் ச‌ரி ம‌ற்ற‌ மிருக‌ங்க‌ளுக்கும் ச‌ரி உயிர் வாழ‌ தேவையான காற்றான‌ ஆக்ஸிஜ‌னை தேவ‌ன் கொடுத்தார்!! இந்த‌ ஆக்ஸிஜ‌னை தான் இன்று ஊழிய‌ர்க‌ள் மிகைப் ப‌டுத்தி அதுவும் ஒரு உயிர் போல் பாவித்து அது தான் ச‌ரீர‌ம் செத்த‌வுட‌ன் என்று குழ‌ம்பி போய் குழ‌ப்பி கொண்டு இருக்கிறார்க‌ள்!!

நீ சாக‌வே சாவாய் என்று தான் தேவ‌ன் சொன்ன‌தே த‌விர‌, உன் ச‌ரீர‌ம் சாகும் என்று சொல்ல‌வில்லை, அவ‌ன் (ஆதாம்) ஜீவாத்துமா ஆனானே த‌விர‌ அவ‌னுக்குள் ஆத்துமா போக‌வில்லை!! அதாவ‌து ஜீவ‌னுள்ள‌ ஆத்தும‌ (Living Soul) அவ‌ன் ம‌ரித்த‌வுட‌ன் செத்த‌ ஆத்துமா (Dead Soul)!!

தொட‌ரும்............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard