kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள்!!


எபே. 4:13. அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும், போதகராகவும் ஏற்படுத்தினார்.

எதற்காக ஏற்படுத்தினார்?

12. பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்,

கிறிஸ்துவின் சரீரமாகிய சபை பக்திவிருத்தி அடைவதற்கு!!

12ம் வசனத்தை வைத்து இப்பொழுதும் அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர், மேய்ப்பர்கள், போதகர்கள் இருக்கிறார்களா!? இருக்கிறார்கள் என்று தான் பெந்தெகோஸ்தே பிரிவினர் அடித்து சொல்லுகிறார்கள், ப்ரொடஸ்டண்ட் சபையும் கத்தோலிக்க சபைகளும் இவர்களை வேறு பெயர்களை வைத்து அழைக்கிறார்கள்!!

ஆனால் எது வரையில் கொடுத்தார் என்பதைவிட எதற்காக கொடுத்தார் என்பதைத் தான் வசனம் சொல்லியிருக்கிறது!! "அவர் சிலரை" என்கிறபடி மொழிப்பெயர்த்தினால் தான் பிரச்சனையே!! மாறாக சபை பக்திவிருத்தி அடைவதற்கு "சில" அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை ஏற்படுத்தினார் என்பதே சரியான மொழிப்பெப்யர்ப்பு!!

ஏன் சில (some) அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை ஏற்படுத்தினார் என்றால், நம் கைகளில் இருக்கும் இந்த வேத வார்த்தைகள் நம் கைகளில் கிடைக்கவே!! இது நாள் வரையில் இந்த பதவிகள் இருந்துக்கொண்டு இருந்தால் இன்னும் வேதம் நிறைவேறியிருக்காது, ஏனென்றால் அவர் ஏற்படுத்திய சில அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை கொண்டு தான், நமக்கு வார்த்தைகள் கிடைத்தது!!

ஏன் அப்படி சில அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை ஏற்படுத்தினார்?
14. நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், 15. அன்புடன் சத்தியத்தைக் கைகொண்டு தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார்.

இந்த‌ அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை அவ‌ர் ஏற்ப‌டுத்த‌திய‌னால் தான் இன்று கள்ள‌‌ உப‌தேச‌ர்க‌ள் போதிக்கும் மனித போத‌க‌ங்க‌ளை துளியும் ச‌த்திய‌ம் இல்லாத‌து என்று ந‌ம்மால் தைரிய‌மாக‌ ஒதுக்க‌ முடிகிற‌து!! ஆனால் இவ‌ர்க‌ளோ த‌ங்க‌ளை இன்னும் அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை என்று  சொல்லிக்கொண்டு ச‌த்திய‌த்தை விட்டு எங்கோ பிரிந்து சென்று விட்டார்க‌ள்!!

ஆக, எபே 4:13 என்கிறதான வசனம் தொடர்ந்து அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார் என்று இல்லாமல், நாம் கள்ள‌ உபதேசங்கள், மனித போதனைகள் போலி அப்போஸ்தலர்களின் கபட போதனைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் படி, அவர் ஏற்படித்தியுஅ சில அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்கள் மூலமாக நமக்கு சத்திய வசனங்களை தந்தார்!! இந்த சத்தியம் நமக்கு கிடைக்கும் மட்டுமே அவர் சில அப்போஸ்தர்கள், தீர்க்கதரிசிகள் சுவிசேஷகர்கள், மேய்ப்பர்கள், போதகர்களை ஏற்படுத்தினார்!!

ஆக இனியும் நான் அப்போஸ்தலர்ன், என் சபையில் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள் என்று ஏமாற்றவும் வேண்டாம், ஏமாறவும் வேண்டாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard