kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பயங்கரமான குழியும் உளையான சேறும்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
பயங்கரமான குழியும் உளையான சேறும்!!


சங். 40:2. பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி,

அநேகர் இந்த வசனம் வேறு மார்க்கத்திலிருந்து கிறிஸ்தவம் என்கிற இன்னோரு மார்க்கத்தில் பிரவேசித்ததையே நினைக்கிறார்கள்!! ஆனால் கிறிஸ்தவர்களே இன்னும், எத்துனை விதமான மனித கோட்ப்பாடுகள் என்கிற "பயங்கரமான குழியிலும், உளையான சேற்றிலும்" இருந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறிவது இல்லை!!

களை என்பது ஏதோ வேறு இடத்தில் இல்லை, அது கோதுமைக்கு நடுவே இருப்பது போல் தான், கிறிஸ்தவ சபைகளுக்குள் இன்று இருக்கும் கோட்பாடுகள் பெரும்பாலுமானது மனிதர்களால் சுய இச்சையினாலும், பெருமை பாராட்டுதலினாலும், அறியாமையினாலும் கொண்டு வந்தது தான்!! உண்மையான தேவனை அறியாமல் நாங்களும் கிறிஸ்தவர்கள் தான் என்று எத்துனையோ விதமான போதனைகள், மனித கோட்பாடுகள், பிரிவினைகள் இருக்கிறது, இதை காட்டிலும் "பயங்கரமான குழியும், உளையான சேறும்" இருக்க முடியுமா!?

கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்கள் என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள், அங்கு நடக்கும், சிலை வழிப்பாடுகளும், இறந்த புனிதர்களின் ஆராதானைகளும், மன்றாட்டுகளும், கிறிஸ்துவை தவிர மரியாளிடம் பரிந்துரைக்கும் ஜெபங்களும் சரியா!? பெந்தகோஸ்தே என்கிற சபைகளில் மரித்தவர்களின் ஆராதனை இல்லை, ஆனால் "ஊழியர்கள்" "போதகர்கள்" அல்லது "பாஸ்டர் ஐய்யா" "பாஸ்டர் அம்மா" என்கிற ஆராதனை இருக்க தான் செய்கிறது, இதுவும் சரியா?

தேவன் ஒருவரே, என்பதை இன்று சபைகள், 'ஒருவரே மூன்று" அல்லது "மூவருமே ஒன்றாக" என்பது போன்ற கோட்பாடுகள் 'பயங்கரமான குழியும், உளையான சேறும்" இல்லையா!?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard