kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வரிசை!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வரிசை!!


1 கொரி 15:23. அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான்,

இதில் சொல்லப்பட்ட வரிசை என்ன, அதற்கு ஏதாவது ஆதார வசனம் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தோம்!!

வாசிக்க

மத். 20:8. சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலி கொடு என்றான்.

அந்த வரிசைக்கு இந்த வசனம் ஒரு விளக்கம் தருகிறது போல் இருக்கிறதே!! அதாவது கடைசி முதல் உயிர்த்தெழுதல் ஆரம்பிக்கும் என்று!! இதை குறித்து பகிர்ந்துக்கொள்ளுவோர் விவாதத்தில் பங்குபெறலாமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

வரிசையாவது மண்ணாவது,  மேலே வாசிங்க‌...

உயிர்த்தெழுதல்னா என்னா நெனச்சிட்டிருக்கீங்க பிரதர்?
உங்களுக்கு ஒன்னுமே தெர்ல. இப்ப இயேசுகிறிஸ்துவை ஏத்துக்கிட்டு செத்தவுங்க, இனிமேல் சாகப்போறவுங்க எல்லாம் நேரே பரலோகத்திலதான் இருப்பாங்க ஆனா ஒடம்பு இல்லை. அவுங்கள்ளாம் ஒரு 'ஆத்துமாவா' இருக்காங்க. மத்தவுங்க எல்லாம் 'அவிசுவாசிகள்' இவுங்கள்ளாம் பாதாளத்துல வேதனை அனுபவிச்சிட்டு இருப்பாங்க. இவுங்களும் ஒடம்பு இல்லாமலேயே வேதனைப்படுறாங்க. சரியா?
ஆனா உயிர்தெழுதலின் போது எல்லாரும் அட்டடையிம்ல மாமிச சரீர ஒடம்புக்குள்ள மறுபடியும் வந்துருவாங்க. அதாவது ஆத்துமாவோ, ஆவியோ சும்மா சர்ர்ர்ர்ர்ர்னு வந்து இவுங்க ஒடம்புக்குள்ள பூந்துக்கும். பழைய பூமிக்குரிய 'பாடி'லயே எழுந்து வந்து நாயத்தீர்ப்புக்கு ரெடியாவாங்க. ஒடனே நாயத்தீர்ப்பு சொல்லீருவாங்க.
என்ன சொல்லுவாங்க தெர்மா?
"விசுவாசிகளா இருந்தவுங்க எல்லாம் இந்தாண்ட வாங்க. நீங்கள்ளாம் பரலோகம் போங்க‌.
அவிசுவாசிகளான மத்தவுங்கள்ளாம் நரகத்துக்குப்போங்க" இதான் நியாயத்தீர்ப்பு பிரதர்.
ஒருவேள வரிசை வரிசையா நிக்கவெப்பாங்களோ இன்னாவோ?

அதாவது, ஏற்கனவே பரலோகத்துல என்ஜாய் பண்ணவுங்க மறுபடியும் அவுங்கவுங்க சொந்த ஒடம்போட பரலோகம் போவாங்க, ஏற்கனவே பாதாளத்துல வேதனப்பட்ட பெருங்கூட்டம் மறுபடியும் மாம்ச ஒடம்போட மறுபடியும் நரகம்னு சொல்ற அக்கினிக்கடலுக்குள்ள போயி இந்தவாட்டி சரீரத்தோட வேகுவாங்க‌.... வேகுவாங்க‌.... இப்படி வெந்துக்கிட்டே இருப்பாங்க முடிவே இல்லாம‌.

இந்தப் பூமி மொட்டையா இருக்கும் காலியா. இதுல ஒரு 1000வருசம் நம்ம தலீவரு பூமிய ஆளுவாருன்னுவேற சொல்லிக்கிறாங்க‌...
நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அம்புட்டுத்தேன்....

எங்க பாஸ்டரு எறக்கொறய இதத்தேன்ஞ்ஜொல்றாரு.

அதுனாலதான் பிரதரு நம்மல்லாம் ஓடி ஓடி சுவிசேஷஞ்ஜொல்லனும்ன்றது. "ஆமா ஒங்க அப்பாம்மா எங்க போவாக"ன்னு பாஸ்டர கேட்டா பே முழி முழிக்கிறாரு.

நமக்கேன் வம்புன்னு நாயித்துக்கெழம சரிச்சுக்குப் போனமா, காணிக்கையப் போட்டமா வந்து கறியெடுத்துச்சாப்ட்டமான்னு ஒதுங்க்கிக்கிறது இப்பெல்லாம்.

கேள்வி, ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு பிரதரு...
ஒழுங்கா மனுசன்ஞல பொழப்பு நடத்த வுடமாட்டீக போல‌....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard