kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சுவிசேஷ‌ம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சுவிசேஷ‌ம்


2 கொரி 4:4. தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.

கிறிஸ்து இயேசு தேவனின் சாயலாக இருக்கிறவர். He is the express image of God, the Father.  இன்னும் பலர் முக்கியமாக திருத்துவ கோட்பாடுகளில் இருக்கிறவர்கள் இதை புரிந்துக்கொள்ளவே மாட்டார்கள்!! இமேஜ் அல்லது சாயல் என்றால் என்ன‌,

Strongs
G1504  eikon  i-kone'
from G1503;
a likeness, i.e. (literally) statue, profile, or (figuratively) representation, resemblance.

இதில் ஒரு அர்த்தம் கூட ஒருவரே, அல்லது அவராக (அதாவது தேவனாகவே) இருக்கிறார் என்று இல்லையே. கிறிஸ்து தேவனின் தற்சொருபானவர் என்று கொலோ1:15ம் சொல்லுகிறது,

கொலோ1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்

சரி இங்கு விஷயம் திருத்துவத்தை சொல்ல இல்லை, சுவிசேஷத்தை பற்றி மாத்திரமே. கிறிஸ்துவின் இந்த‌ சுவிசேஷ‌மான‌து இர‌க‌சிய‌மாக‌ இருந்த‌து, தீர்க்க‌த‌ரிசிக‌ளின் வாயிலாக‌ ப‌ழைய‌ ஏற்பாட்டிலும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! கிறிஸ்துவே அந்த‌ சுவிசேஷ‌ம்!!

ரோம‌ 1:4. இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர்,

சுவிசேஷ‌ம் என்றால் ந‌ல்ல‌ செய்தி, ந‌ற்செய்தி!! ஆனால் இப்பொழுந்து ப‌ல‌ ஊழிய‌ர்களால் அறிவிக்க‌ப்ப‌டுவ‌து சுவிசேஷ‌மே அல்ல‌!! அவ‌ர்க‌ள் கிறிஸ்துவின் ந‌ல்ல‌ செய்தியை அறிவிக்காம‌ல், த‌ற்போது உள்ள‌ சுக‌ங்க‌ளையும், ஐசுவ‌ரிய‌ங்க‌ளையும் பெற்று த‌ரும் ஏஜ‌ண்டுக‌ளாக‌ இருக்கிறார்க‌ள்!! ஏனென்றால் உண்மையான‌ சுவிசேஷ‌ம் தெரியாத‌தினால் அவ‌ர்க‌ளால் உண்மையான சுவிசேஷத்தை அறிவிக்க முடியவில்லை!

அவர்களிடத்தில் என்றால் அவிசுவாசிகள் என்று முந்தய வசனம் சொல்லுகிறது!! யார் அவிசுவாசிகள், புறஜாதிகள் மாத்திரமா, அல்லது கிறிஸ்துவின் பெயர் தெரிந்த அனைவரும் விசுவாசிகளா!! இல்லை, கிறிஸ்தவர்களிலும் அவிசுவாசிகள் இருக்கிறார்கள்!! தேவன் யார் என்று தெரியாதவர்கள், தேவனை மூன்றாக சொல்லுபவர்கள், தேவனின் மகிமையை அறியாதவர்கள், இப்பொழுது கிடைக்கும் சுகத்திற்காக ஊழியம் செய்பவர்கள், கிறிஸ்துவினால் வாரவிருக்கும் மகிமையான ராஜியத்தை குறித்து அறியாதவர்கள், இவர்கள் யாவரும் அவிசுவாசிகளே!! ஏற்கனவே கிறிஸ்துவை தெரியாதவர்களை எப்படி அவிசுவாசிகள் என்று சொல்ல முடியும், அவர்கள் தான் அறியவில்லையே!! அறிந்தவர்கள் தான் விசுவசியாமல் இருப்பதால் அவிசுவாசிகள் ஆகிறார்கள்!!

2 தெச‌ 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இந்த‌ அவிசுவாசிக‌ள் கிறிஸ்த‌வ‌த்திற்கு வெளியே இல்லை, மாறாக‌ ச‌த்திய‌மான‌ கிறிஸ்துவை கிறிஸ்து என்று ஏற்றுக்கொள்ளாம‌ல், அவ‌ர் தான் பிதா என்று சொல்லுப‌வ‌ர்க‌ள்!! இத்துனை பெரிய‌ பொய்யை விசுவ‌சிப்ப‌தினால் தேவ‌ன் தாமே இவ‌ர்க‌ளை இன்னும் குழ‌ப்பி வைத்திருக்கிறார்! அத‌ற்கு துனையாக‌ இருப்ப‌வ‌ன் தான் "இப்பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌னான‌வ‌ன்". அதாவ‌து சாத்தான்!! இவ‌ன் இவ‌ர்க‌ளின் ம‌ன‌க்க‌ண்க‌ளை குறுடாக்கி வைத்திருப்பதினால் ச‌த்திய‌த்தின் வெளிச்ச‌த்தை இவ‌ர்க‌ள் உன‌ர்ந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை!! அதாவ‌து ம‌கிமையான‌ சுவிசேஷ‌த்தை, "அனைவ‌ருக்கும் இர‌ட்சிப்பு" என்கிற‌ உன்ன‌த‌மான‌ ச‌த்திய‌த்தை ஏற்றுக்கொள்ள‌ ம‌றுக்கிறார்க‌ள்!! தேவ‌னுக்கு எதிரியான‌ பிசாசின் என்ன‌ம் தான் அனைவ‌ரையும் கொலை செய்வ‌தாகும், ஆனால் ம‌கிமையான‌ சுவிசேஷ‌ம் சொல்லுவ‌து "அனைவ‌ரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டுவார்க‌ள்" என்று!!

பொதுவாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள், இர‌ட்சிக்க‌ப்ட்டோம், அல்ல‌து இர‌ட்சிப்புக்குள் இருக்கிறோம் என்றாலே ப‌ர‌லோக‌ம் சென்று விடுவோம் என்கிற‌ த‌வ‌றான‌ போத‌னை அல்ல‌து போதையில் இருக்கிறார்க‌ள்!! இர‌ட்சிப்பு என்றால் ம‌ர‌ண‌த்திலிருந்து இர‌ட்சிப்பு என்கிற‌ மாபெரும் உண்மையை தெரியாம‌ல் இருப்ப‌தால், இன்னும் குறுட்டாட்ட‌த்திலேயே இருக்கிறார்க‌ள்!! இர‌ட்சிப்பு தான் சுவிசேஷ‌ம் என்றால், பேரும்பாலுமானோர் ந‌ர‌க‌த்திற்கு போவார்க‌ள் என்ப‌து சுவிசேஷ‌மாக‌ இருக்க‌ முடியுமா!! ந‌ல்ல‌ இருத‌ய‌ம் உள்ள‌வ‌ர்க‌ளே ச‌ற்று சிந்தித்து பாருங்க‌ளே!!

தொட‌ரும்......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

2 தெச‌ 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

இந்த அவர்கள் யார்? வேற்று மதத்தாரா? இல்லை, இவர்கள் கிறிஸ்தவர்கள் என்கிற போர்வையில் இருக்கும் ஓநாய்களே!! இவர்கள் சுவிசேஷம் என்கிற தேவனின் உன்னதமான இரட்சிப்பின் திட்டத்தை விசுவசியாமல் அஸ்திபாரத்தையே தலையாக்கி பெரும் பொய்களை சபைகளுக்குள் புகுத்தி, இப்படி பட்ட மாபெரும் பொய்யை விசுவசிக்கசெய்தவர்கள், விசுவசிப்பவர்கள் ஆகியவருக்குள் தான் தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்பினார்!!

இந்த வஞ்சகத்தினால் தான் கிறிஸ்தவம் பல்வேறு துர்போதனைகளில் தவழ்ந்துக்கொண்டு இருக்கிறது!! ஏனென்றால்,

மத். 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

சுவிசேஷத்தை சுவிசேஷமாக சொல்லாமல் துர்போதனையாக மாற்றி கிறிஸ்துவின் "மீட்கும் பொருளை" கண்டுக்கொள்ளாத கிறிஸ்தவர்கள் தான் அநேகர் இருக்கிறார்கள்!!

தொடரும்.......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard