kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீர்க்க‌த‌ரிச‌ன‌ம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தீர்க்க‌த‌ரிச‌ன‌ம்!!


பழைய ஏற்பாட்டில் சொன்னது போல் தீர்க்கதரிச்னம் யோவானோடு முடிந்து விட்டது, அதாவது ஆவிக்குரிய அர்த்தம் இல்லாமல், நேரடியாக வரப்போகும் (கொச்சயாக சொல்ல வேண்டுமென்றால், குறி சொல்லுவது) ஆனால் இன்றும் குறி சொல்லுவதை தான் தீர்க்கதரிசனம் என்று பலர் பிழைப்பு நடத்திக்கொண்டு வருகிறார்கள்!! வசனம் சொல்லுகிறது,

மத். 11:13. நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.

இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனம் மூல பாஷையில்
Strongs--------G4395  propheteuo  prof-ate-yoo'-o
from G4396;
to foretell events, divine, speak under inspiration, exercise the prophetic office.
KJV: prophesy.

அடுத்து ஆவிக்குரிய காரியத்தை சொல்லுவது (கிறிஸ்துவின் வார்த்தைகளை சொல்லுவது) தீர்க்கதரிசனம் என்று வேதம் சொல்லுகிறது

ரோம் 12:6. நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.

இந்த‌ இட‌த்தில் தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் என்று த‌மிழில் சொல்லியிருந்தாலும், அத‌ன் மூல‌ பாஷை என்ன‌வென்றால்,
Strongs------G4394  propheteia  prof-ay-ti'-ah
from G4396 ("prophecy");
prediction (scriptural or other).
KJV: prophecy, prophesying.

வெறும் த‌மிழ் வேதாக‌ம‌த்தை வைத்துக்கொண்டு, நான் ஏன் ஆறாய்ந்து வாசிக்க‌ வேண்டும் என்று அட‌ம் பிடிப்ப‌வ‌ர்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ இரு தீர்க்க‌த‌ரிச‌ன‌த்தை புரிந்துக்கொள்ள‌ விரும்ப‌ மாட்டார்க‌ள்!! தீர்க்க‌த‌ரிசன‌ம் என்கிற‌ வார்த்தையை வேத‌த்தில் எங்கே பார்த்தாலும் அது குறி சொல்லுவ‌து தான் என்று வாதிடும் ப‌ல‌ர் இருக்கிறார்க‌ள்! அதாவ‌து காதை அடைத்து வைத்து என‌க்கு ஒன்றுமே கேட்க‌ மாட்டேன் என்றும், என‌க்கு ஒன்றும் புரிய‌வில்லை என்றும் சொல்லுப‌வ‌ர் இருக்க‌ தான் செய்கிறார்க‌ள்!

ந‌ட‌க்க‌ இருக்கும் காரிய‌ங்க‌ளை (குறி சொல்லுவ‌து போல்) கூட‌ வேத‌ம் தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் என்று தான் சொல்லுகிற‌து ஆனால் அது யோவான் வ‌ரையில் தான் என்று வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து. ஆவிக்குரிய‌ காரிய‌ங்க‌ளை சொல்லுவ‌தும் தீர்க்க‌த‌ரிச‌ன‌ம் தான். இது மூல‌ பாஷையில் பார்த்தோமென்றால் வித்தியாச‌ம் புரியும்!! பார்க்க‌ மாட்டேன் என்ப‌வ‌ர்க‌ள் க‌ண் இருக்கும் குருட‌ர்க‌ள், காதிருக்கும் செவிட‌ர்க‌ளே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard