kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீர்க்கதரிசிகளா ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்களா!?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தீர்க்கதரிசிகளா ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்களா!?


மத்தேயு 7:15 கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.

ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு கள்ளத்தீர்க்கதரிசிகள் இப்பொழுது இந்த காலத்தில் வசனம் சொல்லுவது போலவே தோன்றியிருக்கிறார்கள். இவர்களுக்கு எச்சரிக்கையாக இருப்போம்! என்னமோ எங்களை போல் பரிசுத்தவான்கள் யாரும் இல்லை என்பது போல் இவர்களின் "தீர்க்கதரிசனம்" இருக்கும்!!

மத்தேயு 7:22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.

இதுவும் இந்த காலத்தில் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது! அநேகர் என்பது ஒரு பெரும் கூட்டத்தை குறித்தே சொல்லப்பட்டிருக்கிறது, "பேஎரின்ப பெருவிழா" "சுகம் அளிக்கும் அற்புத கூட்டங்கள்" போன்ற சுய விளம்பரத்தாரர்களின் முயற்சியால் வசனம் உண்மையாகிறது!!

மத்தேயு 11:13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு.

யோவான் வரைக்கும் தான் தீர்க்கதரிசனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது!! மேலும் 2 பேது.1:21. அந்த தீர்க்கதரிசினங்கள் சபையில் நிறைவேறுகிறது. இதை விட்டு விட்டு, எங்களிடம் ஆண்டவர் பேசினார், ஆட்டுக்குட்டி பேசுச்சு, ஆவியில் நிறம்பி பிதற்றுகிறோம் என்று கூட்டம் கூட்டமாக கிளம்பியிருக்கிறார்கள் ஆட்டு தோலைப் போர்த்திய கள்ள தீர்க்கதரிசிகள்!!

மத்தேயு 24:11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

இதுவும் இந்த காலத்தில் தான் நடந்துக்கொண்டிருக்கிறது. விதவிதமாக போட்டி போட்டு, ஆண்டவர் என்னிடம் இதை சொல்ல சொன்னார், என்னிடம் வந்து இதை பேசினார் என்று கலர் கலராக ரீல் விட்டு, ஒரு மாயைக்கு கிறிஸ்துவ "விசுவாசிகளை" உட்படுத்தும் கள்லத்தீர்க்கதரிசிகள் எழும்பி வசனம் சொல்லுவது போல் வஞ்சித்துக்கொண்டு இருக்கிறார்கள்!! தேவன் பெயரை சொன்னால் மக்கள் ஏமாந்து ஊமையாகி விடுவார்கள் என்று இந்த மாயாவி கூட்டம் நன்றாக தெரிந்திருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: தீர்க்கதரிசிகளா ஆட்டு தோல் போர்த்திய ஓநாய்களா!?


மத்தேயு 24:24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

மாற்கு 13:22 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.

இதுவும் இந்த காலத்திற்கு ஏற்ற வசனம் தான்!! கிறிஸ்தவ போர்வையை போர்த்திக்கொண்டு பில்லி சூனியம் செய்யும் கூட்டம், நாங்களை இத்துனை மரித்தவர்களை எழுப்பினோம் என்று சொல்லும் கூட்டம், எங்கள் ஊழியத்தில் இத்துனை பேருக்கு சுகம் கிடைத்தது என்று புள்ளி விவரம் கான்பிக்கும் கூட்டம், அநேகர் வஞிக்கப்பட்டு தான் போகிறார்கள்!! வசனம் சொல்லுவதால் இது நடந்து தானே ஆகவேண்டும். வசனம் இப்படி சொல்ல, ஏன்னமோ நாங்கள் தான் ஊழியர்களை குறை கூறி எழுதுகிறோம் என்று இப்படி பட்ட மாயாவிகளுக்கு உடந்தையாக இருப்பவர்கள் எங்களை குறித்து எழுதுகிறார்கள்!! வசனம் நிறைவேறுதல் ஆகிறது என்று சந்தோஷப்படாமல், ஏதோ சொல்லாததை சொல்லி விட்டது போல் கான்பிக்கிறார்கள் இவர்கள்!! இந்த மாயாவி கூட்டம் தாங்கள் செய்தோம் என்று சொல்லி "விசுவாசிகளை" வஞ்சிக்கும்படியாக "பெரிய அடையாளங்களும், அற்புதங்களும்" செய்தோம் என்று பெரிய லிஸ்ட்டே வைத்திருக்கிறார்கள்!! தொலைக்காட்ட்சிகள் நடத்தும் ஊழியர்கள் அல்லது தொலைக்காட்ச்சியில் வரும் "ஊழிய" நிகழ்ச்சிகளை பார்த்தீர்கள் என்றால் தெரீயவரும்!!

I கொரிந்தியர் 13:8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்,

தீர்க்கதரிசனங்கள் யோவானோடு முடிந்து போயிற்று என்றும் ஒழிந்து போகும் என்று வசனங்கள் சொல்லுகிறதே!! வசனத்தை நம்புவதா அல்லது கள்ளத்தீர்க்கதரிசிகளையா!!

எபிரெயர் 1:1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

பூர்வகாலத்தில் தான் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசினங்கள் உரைத்தார்கள், கிறிஸ்து வந்த பின் அவரின் வார்த்தைகளும் அப்போஸ்தலர்கள் மூலமாக நமக்கு கிடைத்த கோட்பாடுகளும் தான் தீர்க்கதரிசினங்கள்!!

இந்த வசனங்களை பார்த்த பின்பு இன்னும் தீர்க்கதரிசனம் சொல்லுபவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா!?

II பேதுரு 1:21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

என்கிறார் பேதுரு. தீர்க்கதரிசிகள் பேசினார்கள் என்று "இறந்தக்காலமாக" சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிளத்தில் "Spoke/ Spake" என்று இருக்கிறது. வரும் காலத்தில் இப்படி பேசுவார்கள் என்று சொல்லவில்லையே!

கிறிஸ்தவர்களே!! விழிப்பாயிருங்கள், கள்ளத்தீர்க்கதரிசிகளின் அடையாலங்கள், அற்புதங்கள் அவர்களின் தேன் ஒழுகும் வார்த்தைகளுக்கு மயங்கி போகாதீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேதம் கள்ளத்தீர்க்கதரிசிகளை குறித்து எச்சரிக்கையாக இருக்க சொல்லி எச்சரிப்பதினால், இப்படி பட்ட கள்ள தீர்க்கதரிசிகளை வெளிப்படுத்துவதும், அப்பாவி மக்களை எச்சரிப்பதும் நம் கடமையாகிறது! வேதத்தில் இருப்பதை போதிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றே என்னுகிறேன்!! இப்படி கள்ளத்தீர்க்கதரிசிகளை எடுத்து சொல்லுவது சிலரின் பார்வைக்கு குறை கூறுதலாக இருக்கலாம், அது அவர்களின் கண்ணோட்டம்!!

இப்பொழுது சொல்லப்படுவது தீர்க்கதரிசினமே கிடையாது, அது அநேகர் சொல்லுவது போல் குறி சொல்லுதலே தான். பூர்வகாலத்தில் யோவான் வரை தீர்க்கதரிசிகள் இருந்தார்கள்  என்று வேதம் சொல்லுகிறது அதன் பின் இயேசு கிறிஸ்து சொன்னதும், அவரின் அப்போஸ்தலர்கள் கொடுத்த வார்த்தைகளும் தான் நாம் சொல்ல வேண்டிய தீர்க்கதரிசினங்கள் ஆகும். இதை தவிர ஆண்டவர் என் அறைக்கு வந்து பேசினார், காரில் வந்து பேசினார் என்கிற கள்ளத்தீர்க்கதரிசிகளை நம்பாதீர்கள்! நம்பாதீர்கள்!! நம்பாதீர்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

சவுல் என்ற மனிதன் மகிமையடந்த கிறிஸ்துவின் இடைப்படுதலில் குருடாகி மூன்றுநாட்கள் ஆள் Flat ஆகிவிட்டார். ஆனால் இக்காலத்து வேசியின் பிள்ளைகள்
"ஆண்டவரை முகமுகமாய் தரிசித்தேன்"
"அவர் எனக்கு முதுகு சொரிந்துவிட்டார்" "என்னுடன் டான்ஸ் ஆடினார்"
"அவ்வளவு அழாகாக இருந்தார்" என்றெல்லாம் 'பீலா' விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டவர் கடைசியாக இவ்வண்ணமாக ஒரு மனிதனிடம் இடைப்பட்டது சவுல் என்ற பவுலிடம் மட்டுமே, அதுவும் அவனை அப்போஸ்தலனாக நியமிப்பதற்காகவே. அதன்பின் புதிய ஏற்பாட்டில் அவர் யாருடனும் இடைப்படவேயில்லை.....

இனி எவனாவது இயேசு என்னோடு பேசினார் என்றால் செருப்பைக்கழட்டி தாராளமாக அடிக்கலாம்......



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard