kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நோவாவின் காலம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நோவாவின் காலம்!!


மத்தேயு 24:37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.

மத்தேயு 24:38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும்,

லூக்கா 17:26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

லூக்கா 17:27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது.

நோவாக்காலத்துடன் ஏன் இயேசு கிறிஸ்துவின் வருகை ஒப்பீடப்பட்டிருக்கிறது!?

அப்படி என்ன தான் நோவாக்காலத்தில் நடந்தது! இந்த பூமிய அழிக்க மழையை அனுப்புவேன், அதற்கு முன் நீயும் உன் குடும்பத்தாரும் ஒரு பேழையை செய்து, அதற்குள் பிரவேசியுங்கள் என்றார். அதன் படியே நோவாவும் செய்தான். கூடுதலாக மற்ற மனிதர்களிடம் தேவன் தன்னிடத்தில் சொன்னதையும் சொன்னான், அதை யாரும் ஜலப்பிரலயம் வரும் வரை உணரவில்லை! தேவன் பூமியின் மேல் உயிரோடு இருக்கும் அனைத்தையும் அழித்து, நோவாவையும் அவன் குடும்பத்தையும் தப்பிக்கசெய்து, இந்த பூமியை அப்படியே விட்டு விடவில்லை! மீண்டும் இந்த பூமி மனிதர்களால் நிறம்பும்படி செய்தார்!! தேவ சித்தம் பூமியை அழித்து மீண்டும் புதிய சிருஷ்ட்டிகளை நடமாடவிடுவதாக இருந்தது, நோவா என்ன தான் அத்துனை பேரிடமும் அதை சொன்னாலும், தேவனின் சித்தமே நிறைவேறியது!!

மேலே உள்ள வசனங்களும் நமக்கு தீர்க்கதரிசினம் சொல்லுவது அதுவே! தேவன் தெரிந்திருக்கும் ஒரு சிறிய கூட்டத்தாரை தவிர கிறிஸ்து என்னும் அந்த பேழைக்குள் பிரவேசிப்பவர்கள் யாரும் இல்லை!! இன்று ஒரு கூட்டத்தார் இந்தியாவை இயேசுவிற்காக மாற்றுவோம், உலகத்தை இயேசுவிற்காக மாத்துவோம் என்று நோவாவின் முயற்சியில் இருக்கிறார்கள்!! ஆனால் இயேசு கிறிஸ்து சொல்லுவது என்னவென்றால், நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மனுஷக்குமாரன் வரும் காலத்திலும் நடக்கும் என்கிறார். அதாவது நோவாவின் பிரசங்கத்தை கேட்டு யாரும் மனந்திரும்பவில்லை, அது போலவே தாங்கள் செய்வது மிகவும் சரி என்று இன்றும் எங்களின் முயற்சியால் இந்த உலகத்தையே கிறிஸ்துவிற்காக ஆதாயப்படுத்திவிடுவோம் என்கிற நோவாவின் முயற்சியில் இருக்கிறார்கள், தேவனின் சித்தம் அது இல்லை என்று புரிந்துக்கொள்ள விரும்பாமல். அன்று நோவாவும் அவ‌ர‌து சிறிய‌ குடும்ப‌மும் காப்பாற்ற‌ப்ப‌டுவ‌து தேவ‌னின் சித்த‌த்தினால் உண்டான‌து போல், ம‌னுஷ‌க்குமார‌ன் வ‌ரும் நாட்க‌ளில் அவ‌ருட‌ன் பேழைக்குள் பிர‌வேசிப்ப‌வ‌ர்க‌ள் மிக‌ சிறிய‌ கூட்ட‌மே!

இப்ப‌டி தான் ச‌த்திய‌த்தை பேசும் கூட்ட‌ம் நோவாவின் கூட்ட‌த்த்யாரை போல் சிரிய‌தாக‌ இருக்கும், ஆனால் அவ‌ர்க‌ள் தான் தூஷிக்க‌ப்ப‌டுவார்க‌ள்! பேரும் கூட்ட‌ம் எந்த‌ ப‌க்க‌ம் இருக்கிற‌து என்று தெரிந்த‌தே!! ம‌னுஷ‌க்குமார‌ன் வ‌ரும் நாட்க‌ளிலும் நோவாவின் கால‌த்தில் போல் தான் ந‌ட‌க்கும் என்று கிறிஸ்து திட்ட‌வ‌ட்ட‌மாக‌ சொல்லிவிட்டாலும் த‌ங்க‌ளை ஊழிய‌ர்க‌ள் என்று அழைத்துக்கொண்டு இந்தியாவையும், உல‌க‌த்தையும் கிறிஸ்துவிற்கு ஆதாய‌ப்ப‌டுத்த‌ கிள‌ம்பியிருக்கிற‌து பெரும்வாரியான‌ "கிறிஸ்த‌வ‌" கூட்ட‌ம். நோவாவின் கூட்ட‌த்தார் போல் ச‌த்திய‌ விரும்பிக‌ளின் கூட்ட‌ம் சின்ன‌தாக‌ தான் இருக்கும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

லூக்கா 17:26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.

இங்கு கவனிக்கப்படவேண்டிய விஷயம் "மனுஷகுமாரனுடைய நாட்களிலும்" என்பதுதான். மனுஷ குமாரன் வரும் முன் நடக்கும் என்றில்லை. மனுஷகுமாரனுடைய நாட்களிலும் என்றால் அவர் "வந்த பின்" என்பதில் எந்த மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

நோவாவின் நாட்களில் நடந்ததுபோல என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாத "போதக ஜென்மங்கள்" கடைசிகாலத்தில் எல்லா தேசங்களும் கிறிஸ்தவராவார்கள் என்று முட்டாள்தனமாக போதித்துக் கொண்டிருக்கிறார்கள். நோவா காட்டுக்கத்து கத்தியும் அவன் குடும்பத்தைத் தவிர ஒருத்தன் கூட அவன் "பிரசங்கத்தைக்" கேட்கவில்லை. கேட்கக் கூடாது என்பது தேவ திட்டம். எறும்பு முதல் யானைகள்வரை தேவனுக்குக் கீழ்ப்படிந்து பேழைக்குள் பிரவேசித்தனவே!

அக்காலத்து ஜனங்கள் "மனம் திரும்பி" ஏற்றுக்கொள்ளும் பட்சம் நோவாவின் பேழை இன்னும் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் ஒருவர்கூட வரமாட்டார்கள் என்று அறிந்துதான் தேவன் ஏற்கனவே பேழையின் நீள, அகல, உயரங்களை முன்பே தீர்மானித்திருந்தார். எல்லாரும் பேழைக்குள் பிரவேசித்திருப்பார்களேயானால் நோவா 1200 வருடங்கள் பேழை செய்துகொண்டிருக்க வேண்டியதுதான். தேவசித்தமான "ஜனங்களை அழிப்பது" பூரணமாக அப்போது நிறைவேறியது. நல்ல வேளை நோவா தற்காலத்து ஊழியக்காரனைப் போல இருந்திருந்தால் ஜனங்களை இரட்சியும் தேவனே என்று முழங்கால் யுத்தம், முழுஇரவு ஜெபம் என்று நடத்தி இப்போது நடப்பதுபோல முட்டாள்தனம் செய்து, காமெடி பீஸ் ஆகி  தோல்வியடைந்திருப்பான்.

இந்தியாவை எனக்குத்தாரும் ஆண்டவரே? (சீனா எக்கேடு கெட்டாவது போகட்டுமோ?),
திறப்பின் வாசல்,
ஜெப கோபுரங்கள்., என்று இன்றைய முட்டாள் ஊழியர்கள் தேவனுக்கே திட்டங்கள் போட்டுத்தருகிறார்கள்.

இவர்கள் கடைசியில் சொல்லவருவது இதுதான் "அட அறிவில்லாத ஆண்டவரே, நோவாவின் காலத்தில் நடந்ததுபோல மனுஷகுமாரனின் நாட்களில் நடக்க விட மாட்டோம், நாங்கள் சுவிசேஷம் அறிவித்து உலகத்தையே உமது பேழைக்குள் கொண்டுவந்து விடுவோம், எங்களை என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர், உமது வசனத்தைப் பொய்யாக்குவோம்" என்பதே.

சிந்திக்கும் கிறிஸ்தவர்கள் யோசிப்பீர்களா?

உங்கள் போதகப் பிதாக்களிடம் இந்த வசனத்தைக்குறித்துக் கேள்வி கேட்டுப்பாருங்கள்; பேந்த பேந்த விழித்து உளறிக்கொட்டுவார்கள்.


 



-- Edited by soulsolution on Thursday 30th of September 2010 07:52:10 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard