kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மகாவேசி!!??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மகாவேசி!!??


வெளி 17 அதிகாரம்

1. ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே;

திரளான தண்ணீர் என்றால் ஜனங்கள், பூமியின் மக்கள் கூட்டம். இந்த கூட்டத்தின் மேல் உட்கார்ந்திருக்கிற அதாவது ஆளுகை செய்கிற வேசி. யார் இந்த வேசி, இந்த வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்கள் என்று இருக்கிறது. யார் இந்த வேசி, யார் இந்த பூமியின் ராஜாக்கள், ஏன் இவர்கள் இந்த வேசியோடு சேர்ந்து வேசிக்த்தனம் பண்ணினார்கள்!? அவளுடன் சேர்ந்து பூமியின் மக்களும் அவள் தந்த மதுவினால் வெறிக்கொண்டிருந்தார்களே என்கிறதை யோவான் காண்கிறாரே!!

வேசி சபை. கத்தோலிக்க சபையிலிருந்து பிரிந்து வந்த மார்ட்டின் லூத்தர் கத்தோலிக்க சபை தான் அந்த வேசி சபை என்று முழங்கினார். அன்று உலகம் முழுவதும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சி இருந்த காலத்தில் போப்புடன் கைகோர்த்துக்கொண்டு உலகம் முழுவதும் ரோம கத்தோலிக்கத்தின் ஆதிக்கம் வந்தது, ரோமாபுரியிலிருந்து உத்தரவுகளை பிறப்பிக்கும் அந்த அதிகாரத்திற்கு பூமியெங்கும் பரவியிருந்த பாதரியார்கள், பிஷப்மார்கள் (ராஜாக்கள்) அடிப்பனிந்தார்கள், இன்று இருக்கும் உலகில் பார்த்தோமென்றால் மார்ட்டின் லூத்தருக்கு பின் முழைத்த பல ஆயிரம் சபைகள் இன்று அதே கத்தோலிக்க கோட்பாடுகளை பின் பற்றிக்கொண்டு (இதுவே அந்த மது), வேதம் என்கிற பொக்கிஷத்தையும், தேவன் யார் என்கிறதை அறிய விரும்பாளும், கத்தோலிக்கர் எப்படி தேவனை விளக்கினார்களோ அதை அப்படியே பிரசங்கித்து (குடித்து வெறித்திருப்பது) வருகிறார்கள்!!

தொடரும்......



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வெளி.17:

4. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.

ஸ்திரீ பொதுவாக சபையை குறிக்கும், இங்கும் ஒரு சபையின் தலைமையை காண்பிக்கிறது. இரத்தாம்பரமும் சிவப்பும் இன்றும் பாப்பரசர்களின் மாளிகையான வத்திக்கன் மாளிகையில் பயன்ப்படுத்துகிறார்கள்! இந்த சபையின் வேசித்தனம் என்னவென்றால், வேதத்தின் வார்த்தையை விட்டு விட்டு சபையின் கோட்பாடுகளை புகுத்தியது தான்!! இப்படி பட்ட சுமார் 95 கோட்பாடுகளை எதிர்த்து தான் மார்ட்டின் லூத்தர் என்கிற கத்தோலிக்க பாதரியார் வெளியேறி போப் மர்றும் அந்த சபையை வேசி என்றும் வேதத்தில் இருக்கும் அந்திக்கிறிஸ்து என்றும் சொல்லிவந்தார்!! இந்த சபை கொண்டு வந்த மனித கோட்பாடுகளே இன்று பிரபலாமான ஆவிக்குறிய சபைகளின் அஸ்திபாரமாக இருக்கிறது!!

5. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.

இந்த தீர்க்கதரிசன வசனம் சொல்லுவதை தான் மேலே எழுதியிருக்கிறேன். இன்று ஆவிக்குரிய சபைகள் என்று மார்த்தட்டி கொண்டு நடப்பவர்களின் தாய் சபை இந்த கத்தோலிக்க சபை தான்! உருவ வழிப்பாடு மற்றும் சிலை, புனிதர்களின் வழிப்பாடுகளை தவிர, மற்ற எல்லா கோட்பாடுகளையும் இன்று இருக்கும் ஆவிக்குரிய சபைகள் அப்படியே பின் பற்றுகிறார்கள்!! திருத்துவம், நரகம், பரலோகம் , மரணம் இன்னும் அநேக மனித கோட்பாடுகளை அப்படியே பின்பற்றுகிறது. வேதம் இவை எல்லாவற்றையுமே வேசிகள் என்று தான் சொல்லுகிறது, அதன் (வேசிகளின்) தாய் (கத்தோலிக்க சபை தங்களை தாய் திருச்சபை என்று தான் சொல்லுகிறது) என்று அந்த ஸ்திரியை சொல்லப்பட்டிருக்கிறதை கவணியுங்கள்!!

6. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

இப்பவாவது நம்புங்கள் யார் அந்த ஸ்திரீ (சபை) என்று!! உண்மையாக கிறிஸ்துவை பின்பற்றினவர்களை கொன்று குவித்து போட்டது இந்த கத்தோலிக்க சபை, ரோம சாம்ராஜியத்துடன் கூட்டனி வைத்துக்கொண்ட பின்பு. இருண்ட காலத்தில் நடக்கப்போவதை (Dark ages!!)  இந்த வசனத்தில் தீர்க்கத்தரிசனமாக எழுதப்பட்டிருக்கிறது!! ஒரு கிறிஸ்தவ சபை இப்படி எல்லாம் போகும் என்பதை பார்த்து யோவான் ஆச்சரியப்பட்டு போகிறார் என்கிறது வசனம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard