kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மலைப்பிரசஙம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மலைப்பிரசஙம்!!


மத்தேயு 5ம் அதிகாரத்தில் இயேசு கிறிஸ்துவின் மிகவும் முக்கியமான தீர்க்கதரிசன பிரசங்கம் இருக்கிறது. இதை பொதுவாக சபைகளில் மலைப்பிரசஙம் என்று சொல்லுவது உண்டு. அந்த மலை பிரசங்கத்தில் சொல்லப்பட்டவைகள் எல்லாமே, "ஆறுதலடைவார்கள், சுதந்தரித்துக்கொள்ளுவார்கள், திருப்தியடைவார்கள், பெறுவார்கள், தரிசிப்பார்கள், என்னப்படுவார்கள்" என்று தானே!! அப்படி என்றால் இவை எல்லாம் எப்பொழுது நடக்கும்? பிரசங்கித்து முடிக்கப்பட்ட காலம் முதலா அல்லது இதற்கென்று ஒரு காலம் வருகிறதா!?

இன்ரு பெரும்பாளுமான சபை பிரசங்கங்கள் இதை ஒட்டி தான் இருகிறது, இன்று பிரசங்கம் நாளை பலன் கிடைத்துவிடும் போல். ஆனால் இயேசு கிறிஸ்து இந்த மலை பிரசங்கத்தில் சொன்னது, இப்பொழுதே அல்லது இந்த பிரசங்கம் கேட்டவுடன் இதை எல்லாம் அடைவார்கள் என்று அல்ல, மாறாக அதற்கென்று ஒரு காலம் இருக்கிறது, மனுஷக்குமாரன் இந்த பூமியை நீதியாய் நியாயம் தீர்க்கும் காலம், இந்த பூமியை ஆண்டு இந்த பூமியை முந்தய சீருக்கு கொண்டு வரும் காலம் ஒன்று வருகிறது, இலைப்பாறுதளின் காலம் என்று வேதம் அப். 3:19,21ல் மற்றும், ஏசா 35ம் அதிகாரத்தில் சொல்லுகிறது.

ஏசா 35ல் சொல்லப்பட்டவை எல்லாம் மனுஷர்கள் மீட்கப்பட்ட பிறகு (மரணத்திலிருந்து தான்) நடக்கும் சம்பவங்கள்!

ஏனென்றால், துயரப்படுவோர், எளிமையானோர், சாந்தகுணமுள்ளோர், இரக்கம் செய்வோர் அன்று முதல் இன்று வரை அதற்கான அதற்கான இயேசு கிறிஸ்து சொன்ன எங்த பலனை அடையாற்மல் மரித்து போய் இருக்கிறார்களே, அப்படி என்றால் அவர்கள் எல்லம் எப்பொழுது திருப்தியடைவார்கள், பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள், ஆறுதலடைவார்கள்!!

இன்று நடக்கும் பேரின்ப பெருவிழாக்களின் நோக்கமே, இன்ஸ்டண்ட் சுகம், ஆறுதல் தானே! இதையா மலை பிரசங்கம் போதிக்கிறது!! அல்லது இயேசு கிறிஸ்து யாரையாவது இந்த பிரசங்கத்தில் ஏஜண்டுகளாக நியமித்திருக்கிறாரா!! இல்லையே!! இவை எல்லாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவரின் ஆளுகையின் போது நடக்கும் காரியங்கள். கிறிஸ்தவர்களானவுடன் இவை எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் என்று நம்பி பேரின்பபெருவிழாக்களில் ஏமாந்து போகாதீர்கள்!! இதை நடத்துபவர்களுக்கே இதில் சொல்லப்பட்டது ஒன்றும் வந்து சேரவில்லை!! 

திருப்புரில் பால் தினகரன் கூட்டத்திற்கு இப்படியும் ஒரு போஸ்டர், "அற்புதங்களை பெர அறிய வாய்ப்பு"!! எப்படி எல்லாம் கிளம்பிட்டாங்கைய்யா!!

மலைப்பிரசங்கம் தனிப்பட்ட மனிதனுக்கு தனிப்பட்ட பெலன் கிடைக்கும் ஒரு தீர்க்கதரிசின பிரசங்கமே தவிர, அதை கேட்டவுடன் நடக்கும் பிரசங்கம் இல்லை! இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடம் சொன்னார், 'உலகம் தரும் சமாதனம் அல்ல, என் சமாதானத்தையே உங்களுக்கு விட்டு செல்கிறேன்" என்று, ஆனால் அந்த அப்போஸ்தலர்கள் எப்படி வாழ்ந்து மரித்தார்கள் என்பது அனைவருகும் தெரிந்ததே! ஆக இயேசு கிறிஸ்து சாமாதானம் தருகிறேன் என்று சொன்னது உடனடியாக ஏற்படும் விஷயம் அல்ல, அதற்கென்று ஒரு காலம் வைத்திருக்கிறார், அப்பொழுது நிச்சயம் நடைப்பெறும்.

மலை பிரசங்கம் நமக்கு இரண்டு காரியங்களை சொல்லுகிறது:

1. இந்த பிரசங்கம் முழுவதும் தீர்க்கதரிசன் பிரசங்கமே!

2. இந்த பிரசங்கத்திற்கும் இன்று நடக்கும் பேரின்ப பெருவிழா போன்றவற்றுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard