kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவ‌ திட்ட‌ம் : ஒரு பார்வை


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
தேவ‌ திட்ட‌ம் : ஒரு பார்வை


தேவ‌ திட்ட‌ம் : ஒரு பார்வை

பூமியை ப‌டைத்து அதை "ந‌ல்ல‌து" என்று சொன்ன‌ தேவ‌ன், இந்த‌ பூமியை கைவிடும்ப‌டியாக‌ இல்லை. இதை மீண்டும் க‌ட்டி எழுப்புவ‌தே தேவ‌னின் திட்ட‌ம். அவ‌ர் அதை செய்யும் போது, அனைவ‌ரும் இந்த‌ பூமியில் புதிய‌ ச‌ரீர‌த்துட‌ன் உயிர்த்தெழுந்து வ‌ருவார்க‌ள். இதுவே கிறிஸ்துவ‌ சுவிசேஷ‌த்தின் வாக்குத்த‌த்த‌ம்.

"ப‌ல‌ர் இதில் த‌ங்கி வாழ‌வும், சில‌ர் இதை ஆழ‌வும்". இந்த‌ இர‌க‌சிய‌ம் இன்று கிறிஸ்துவின் வ‌ருகை நெருங்கி வ‌ருவ‌தால் ஏற்ப‌டும் வெளிச்ச‌த்தினால் ப‌ல‌ரை சிந்திக்க‌ செய்திருக்கிற‌து. வெளிப்ப‌டுத்தின விசேஷ‌ம் வெளிப்ப‌டுத்துவ‌தும், ப‌வுல் சொல்லுவ‌தும் இதை தான், அதாவ‌து, தேவ‌னின் அந்த‌ புதிய‌ பூமியில் மேசியாவான கிறிஸ்துவின் த‌லைமையில் ஆளுகை செய்வார்க‌ள் என்று (வெளி. 20:6).

தேவ‌னின் இந்த‌ புதிய‌ பூமியின், ந‌டு நாய‌க‌னாக‌ இருப்ப‌வ‌ர் கிறிஸ்துவை த‌லையாக‌ கொண்ட‌ ச‌பையே. அவ‌ரின் ஆவி (சிந்தை) த‌ற்போது ந‌ம்மை வ‌ழி ந‌ட‌த்துவ‌தும், அவ‌ர் திரைக்கு அந்த‌ப்ப‌க்க‌ம் ந‌ம் பார்வையில் ப‌டாத‌ப‌டி பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் அம‌ர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு நாள் அந்த‌ திரை நீக்க‌ப்ப‌ட்டு, ப‌ர‌லோக‌த்தின் அர‌சாட்சி இந்த‌ பூமியில் வ‌ரும் (உம்முடைய‌ இராஜிய‌ம் வ‌ருவ‌தாக‌ (ம‌த்.6:10)), கிறிஸ்துவின் பிர‌ச‌ன்ன‌ம் இந்த‌ பூமியை நிற‌ப்பும், அவருடையவர்கள் அவருடன் அவர் சாயலில் எழுப்படுவர், மீதமானவர் இங்த பூமியில் உயிர்த்தெழுவர். எல்லோரின் முழ‌ங்கால்க‌ளும் முட‌ங்கும், இன்று ம‌றைவாக‌ இருக்கும் ச‌த்திய‌ங்க‌ள் யாவ‌ரும் புரிந்துக்கொள்ளும்ப‌டியாக‌ வெளிப்ப‌டும், தேவ‌னின் ராஜிய‌ம் என்றென்றும் நீடிக்கும். இதுவே இந்த‌ உல‌க‌த்திற்கு கிடைக்கும் "இர‌ட்சிப்பு" எல்லா ஜ‌ன‌ங்க‌ளும் இர‌ட்சிக்க‌ப்ப‌டவும், ச‌த்திய‌த்தை அறிகிற‌ அறிவை அடைய‌வும்" 1 தீமோ 2:4-6. இதுதான் "இர‌ட்சிப்பு" ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்ப்பிக்க‌ப்ப‌டுவ‌து.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:30:50 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரலோக நரக விஸிட் அடிப்பவர்களை தலைவர்களாக கொண்டிருந்தால் நிலைமை இப்படி தான் இருக்கும். இது எல்லாம் உங்களுக்கு புரியாது, உங்களுக்கு புரியவைக்க எனக்கு விருப்பமும் இல்லை. கிண்டலடிக்கும் தோரனையில் எதை பார்த்தாலும் அது புரியவும் புரியாது. தயவு செய்து விட்டு விட்டு வேறு வேலை அல்லது வேறு ஏதாவது தளம் இருக்கும், அங்கு உங்கள் கருத்துக்கு ஒத்து போவோர் இருப்பார் அங்கு போய் பதியுங்கள். இது எல்லாம் உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம். உங்களுக்கு எல்லாம் பரலோகத்தில் தாவீதை பார்த்தேன் என்று பாட்டி கதை சொன்னால் தான் இனிப்பாக இருக்கும். அது போன்ற பாட்டி கதைகள் இந்த தளத்தில் வருவதில்லை. அப்படி இருக்கும் தளமாக பார்த்து போய் தங்களின் தாகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்.

திருத்துவம் பேசும் தளங்கள் நிறைய இருக்கிறது, அங்கே போய் தேவ தூஷனம் செய்துக்கொண்டிருங்களே!! இங்கு வந்து எழுதி எங்கள் தளத்தின் நோக்கத்தை திசை திருப்பும் பிசாசின் தந்திரங்களை தொடர வேண்டாம் என்று சொல்லுகிறேன்.உங்களையே பவுலாகவும் பேதுருவாகவும் நினைத்து கொண்டு இருப்பதினால் இன்னும் பல குழப்பங்கள் வரும். இது எல்லாம் வேதத்தில் இருக்கிறது. கள்ள போதகர்கள் வருவார்கள் என்று, அவர்களுக்கு உண்மை கசக்கும், ஏனென்றால் உண்மை பேசினால் பிரபலமாக முடியாது. உங்களை போல் ஊழியன் என்கிற போர்வையில் இருந்தால், பரலோகம் போய் வந்தேன் தாவிதுடன் நடனம் ஆடினேன், பரிசுத்த ஆவி என்கிற ஆள்தத்துவத்துடன் நாற்காளி போட்டு பேசினேன் என்று எல்லாம் சொல்லி பிரபலமாக இருக்க முடியும், காணிக்கை தசமபாகம் போன்றவற்றை மிரட்டி, திருடி, பிச்சை எடுத்து குடும்பத்துடன் வாழ முடியும். மனசாட்சி இருந்தால் இந்த ஊழியர்கள் இப்படி வாழ்வது இல்லை, தன் சொந்த உழைப்பில் தான் வாழ்கிறார்கள் என்று எழுதும், இல்லாவிட்டால் இந்த தளத்தில் எழுதாதீர்!!

தூங்குகிறவனை எழுப்ப முடியும், தூங்குகிறவனை போல் இருப்பவனை எழுப்ப முடியாது!! சரிதான்........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:30:40 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

களைகள் கூட்டத்தை சார்ந்த உமக்கே இத்துனை என்றால் கோதுமையை சார்ந்த எமக்கு எத்துனை இருக்கும். வாதத்திற்கு தான் வாதம்செய்ய முடியும், முட்டாள் தனமான விதண்டாவாதத்திற்கு வாதம் செய்வது நேரத்தை வீனடிப்பதாகும்.

திருத்துவம் என்கிற வார்த்தையே வேதத்தில் இல்லை, இல்லாத ஒன்றை யூகமாக அமைத்து அதை திருட்டு தனமாக விதைத்த களைகள் கூட்டம் தானே நீங்கள் எல்லோரும். களைகளுக்கு வேதத்தில் என்ன முடிவு என்று தெரியுமா இல்லையா!! கண்டிப்பாக எந்த ஒரு முட்டாளும் உம்மை போன்ற ஆட்களை தம் ஃபோரத்தில் அனுமதிப்பதே கிடையாது, நான் அப்படி இல்லை என்று சந்தோஷப்படும். உம்மை போன்ற நோய் பிடித்த கருத்துக்களையும் அனுமதிப்பதே இந்த தளத்தின் பெருந்தன்மை தான்!!

//வேதத்தின் திரித்துவம்
மனிதனின் திரித்துவம்
தேவனின் திரித்துவம்
சாத்தானின் திரித்துவம்//

திருடி திங்கும் கூட்டத்திற்கு பொழுது போகாமால் வேதத்தில் இல்லாத போதனைகளை சொல்லி சொல்லி கேட்டு கேட்டு கிறிஸ்துவத்தை கெடுத்த மட்டமான கோட்பாடுகள் இவைகள், இதையே வைத்து இன்னும் பாடிக்கொண்டிருப்பது தேவதூஷனம். திருத்துவம் என்று ஒரு வார்த்தையை வேதத்தில் காண்பியும் நான் தளத்தில் எழுதுவதை விட்டு விடுகிறேன்.

காதில் பஞ்சையும் மூலையில் மசாலாவையும் வைத்துக்கொண்டு தான் இந்த திருத்துவத்தை பிரசங்கம் செய்கிறார்கள், அதை நிருபிக்க எத்துனையோ உலகபிரகாரமானதை பயன்படுத்துவார்களாகம், போப்பா, இதை எல்லாம் ஒரு காலத்தில் நாங்களும் பேசியவர்கள் தான், தேவன் எங்களுக்கு புரியவைத்தார், புரிந்துக்கொண்டோம், உமக்கு ஒரு நேரம் இருந்தால் அதை செய்வார், அப்பொழுது புரிந்துக்கொள்ளும்.

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

பவுல் அன்றே சொல்லி வைத்துவிட்டார், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை, சிலருக்கு மாத்திரமே தேவன் தன்னை புரிந்துக்கொள்ளும் அறிவை தருகிறார். அடுத்தவன் காசில் உட்கார்ந்து சாப்பிடுகிறவனுக்கு அது நிச்சயமாக கிடையாது.

பவுலுக்கு தெரியாத விளக்கம் சோம்பேறிகள் கூட்டம் தருகிறதாம். பவுல் இரண்டு பேரை மாத்திரமே சொல்லியிருக்கிறார், இவர்கள் மூன்றாவது ஆள்த்தத்துவமான ஆவியை சேர்த்துக்கொண்டு இல்லாத திருத்துவத்தை போதிப்பார்கலாம். இந்த வசனத்தை மல்லாக்க படுத்தாவது, குப்புற படுத்தாவது, முழங்கால் போட்டாவது,யோசித்து பாரும். உமக்கு ஒன்றும் பவுலை காட்டிலும் பெரிய ஞானம் இல்லை!!

ஆமா அதான் சகோ அன்பு உம்முடைய தமிழின் ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரே, அப்புறம் ஏன் உம் தமிழை பீத்திக்கொள்கிறீர்!! இனிமே அடக்கி வாசியும்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இப்பவும் என் வீட்டில் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். திறந்த வீட்டிற்குள் நுழையும் பழக்கம் இருப்பதால், என் வீட்டில் வந்து நீர் தான் எழுதிக்கொண்டிருக்கிறீர்! வாசகர்களுக்கு அருவருப்பாக இருப்பதை நறுக்கவதும், வெட்டுவதும் என் வீட்டிற்குள் வெலியிலிருந்து வரும் குப்பையை பொறுத்தது, என் வீட்டை அதிகமாக அசுத்த படுத்த நினைத்தால் நிச்சயமாக் நீக்குவேன். என் தளத்திற்கு நான் நிர்வாகி என்கிற பொறுப்பு எனக்கு இருக்கிறது. உம்முடைய வீட்டில் திருத்துவம் என்கிற குப்பையை குமித்து வை, பரப்பு, யார் வேண்டாம் என்கிறார்கள்!!

பி.கு. ஆமா திருத்துவம் பற்றியான நான் கடைசியாக கொடுத்த பதிவை மாத்திரம் உம் தளத்தில் பதியாமல் விட்டுவிட்டது என்ன பெரிய மேதாவித்தனமோ!!

வேதத்தின் திரித்துவம் = வேதத்தில் திருத்துவம் என்கிற வார்த்தையோ கருத்தோ கிடையாது.

மனிதனின் திரித்துவம் = மனிதனின் திருத்துவம் (!!) குழப்பத்திற்கு அளவே இல்லை போல். கேட்டல் ஒரே வசனமான 1 தெச 5:23 என்கிற வசனத்தை மனப்பாடமாக காண்பிக்கும் அசுத்த ஆவியின் கூட்டத்தார்!!

தேவனின் திரித்துவம் = தேவ தூஷனம் செய்யும் திருத்துவ கூட்டம். வாசிக்க 1 கொரி 8:6,7

சாத்தானின் திரித்துவம் = சாத்தனையும் விட்டு வைக்கவில்லை இந்த 666 குட்டத்தார்!!

என்ன திருத்துவ போதனையோ. இந்த போதனையிலும், அவியாத அக்கினியிலும், இந்த ஆவிக்குறிய (அசுத்த) சபையாரும் கத்தோலிக்கர்களும் ஒன்றே!! பாபிலோன் சபையின் வேசித்தனத்தோடு, அவள் கொடுக்கும் பானத்தை குடிக்கும் குட்டி ராஜாக்கள்!! ஒரு காலத்தில் கத்தோலிக்கர்களை துருபதேச சபையார் என்று சொன்னவர் இன்று கோட்பாட்டின் பரிமாற்றத்தால், காயம் பட்ட அந்த சபைக்கு மீண்டும் உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த அசுத்த ஆவியார் சபையினர்!!

இல்லாத ஒன்றை உருவாக்கி அதற்கென்று காசு வாங்கி பிரசங்கிக்கும் இந்த அசுத்த ஆவியார் குட்டத்ததை என்னவென்று சொல்லுவது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard