I தீமோத்தேயு 1:5. கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே.
6. இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்.
7. தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள்.
இப்படியாக பவுல் தீமோத்தியிடம் அறிவுறை வழங்குகிறார். இதை எல்லாம் செய்யாமல் அன்று போல் இன்றும் அநேகர் தங்களை நியாயப்பிரமான போதகராக சொல்லிக்கொள்ள விரும்புகிறார்கள். மாயமற்ற விசுவாசம் என்று சொல்லப்பட்ட வார்த்தையை ஒரு ஆங்கிள மொழிப்பெயர்ப்பு என்று சொல்லுகிறது. அதாவது கள்ள விசுவாசம். அது அன்று மாத்திரம் அல்ல இன்றும் தான் இருக்கிறது ஆகவே தான் ஆளாளுக்கு ஒரு விசுவாசத்தை பிடித்துக்கொண்டு 2000த்துக்கும் மேற்பட்டை சபைகளை சிதறி கிடைப்பதை நாம் பார்க்க முடிகிறது.
மேலும்,
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்
என்கிறார் பவுல், ஆனால் இந்த வசனத்தை வைத்துக்கொண்டு தங்களை தவிர அனைவருமே பாவிகள் என்று போதித்து வருகிறார்கள். பவுல் தன்னையே பிரதான பாவி என்று அறிக்கை செயவது இவர்களின் பார்வையில் படுவதில்லை. உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு மனுஷனும் பாவியே, இந்த பாவியாக இருக்கும் மனிதர்களை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு உலகத்தில் தன்னை மீட்கும் பொருளாக கொடுக்க வந்தார். பல கிறிஸ்தவர்கள், தாங்கள் கிறிஸ்தவ பெயர்களை வைத்துக்கொண்டு, ஞானஸ்நானன்ம் எடுத்துக்கொண்டு, வாரம் தவறாமல் ஆராதனைக்கு சென்று காணிக்கைகளையிம், தசமபாகங்களையும் செலுத்துவதால் "பாவிகள்" என்க்ற வரிசையில் அவர்கள் இல்லை என்று என்னுகிறார்கள். அவர் அவர் மனசாட்சிக்கே அது தெரியும்.
அன்பானவர்களே, பூமியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பாவியே, இந்த பாவிகள் நிறைந்த கூட்டத்தாரை இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு பூமிக்கு வந்தார். இந்த கூட்டத்தாரில் கிறிஸ்தவர்கள் மாத்திரம் இல்லை, உலகத்தாரும் இருக்கிறார்கள்.
15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்
வந்தார்தான், ஆனால் பாவிகளை அவரால் இரட்ச்சிக்க முடியாதே; ஏனென்றால் பாவிகள் இரட்ச்சிக்கப்பட அவர்கள் முதலில் அவரைக் கேள்விப்பட வேண்டும், பின்பு அவர்கள் தங்கள் பாவங்களை விட்டோய்ந்து பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும்; ஞானஸ்நானம் பெற வேண்டும்; கண்டிப்பாக போதகர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் யாரிடமாவது அடிமையாகி அவர் நடத்தும் 'சர்ச்'க்கு தவறாமல் செல்லவேண்டும்; தசமபாகம் கொடுக்கவேண்டும்; ஒவ்வொருவரும் வரங்கள் பெற்று அதை உபயோகப்படுத்தவேண்டும்; ஊழியம் செய்ய வேண்டும்; இவைகளுக்கு நடுவே தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும்....
இதில் எதுவும் குறைந்தால் நரகம்தான். கிறிஸ்துவைக் கேள்விப்படாமல் மரிக்கும் எல்லாருமே நரகத்துக்குப் போவார்கள், கேள்விப்பட்டும் அவர்போல வாழாதவர்களுடைய கதியும் அதேதான்.
இவைகளைச் செய்யும் 'பரிசுத்தவான்கள்' மட்டும் வெண்ணங்கி தரித்து குருத்தோலையைக் கையில் ஏந்தி காலா காலத்துக்கும் பரலோகத்தில் போரடிக்காமல் நின்றுகொண்டேஏஏஏஏஏஏஏஏஏ..... இருப்பார்கள்.
அதாவது உலகத்தில் கிறிஸ்துவை அறியாத மற்றும் பின்வாங்கிப்போன கோடான கோடி ஜனங்கள் அவியாத அக்கினியில் தங்கள் உற்றார் உறவினர்களுடன் சதாகாலமும் வெந்தும் வேகாமலும் அக்கினியில் துன்பம் அனுபவிப்பார்கள்; இதை இந்த பரலோகவாசிகள் பார்த்து களிகூருவார்கள்....
இது வெறும் நற்செய்தியல்ல, சூப்பர் நற்செய்தி!!!! இதையே மெயின்ட்டெய்ன் பண்ணுங்க...
-- Edited by soulsolution on Sunday 1st of August 2010 06:14:25 PM