kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதம்:தேவனின் திட்டங்களே!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வேதம்:தேவனின் திட்டங்களே!!


வேத புத்தகம் (பைபிள்) என்பது என்ன என்றும், ஏன் அந்த புத்தகம் நம் கையில் இருக்கிறது என்றும், அது ஏன் புரிவதற்கு அத்துனை கஷ்டமாக இருக்கிறது என்றும், மேலும் ஏன் அந்த புத்தகம் விதவிதமாக புரிந்துக்கொள்ளப்படுகிறது என்பதற்கு ஒரே வரியில் பதில் என்னவென்றால்,

வேதம், தேவனால் அவர மனிதர்களுக்கு வைத்திருக்கும் தம் திட்டங்களை விளக்கவே கொடுக்கப்பட்ட ஒரு புத்தகம். பலர் இந்த புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளையும் தங்களுக்கு சாதகமாக, அதில் உள்ள வரிகளை அது யாருக்கு சொல்லப்பட்டது என்று கூட பார்க்காமல் தங்களுக்கு என்று சுதந்தரித்துக்கொள்வது அபத்தமாக இருக்கிறது. உதாரனமாக யூதாசிடம் சொல்லப்பட்ட வசனம் எப்படி நமக்கு சொந்தமாகும், இஸ்ராயெல் மக்களிடம் சொல்லப்பட்ட காரியங்கள், விருத்தசேதனம் உட்பட, நாம் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்.

இந்த புத்தகத்தை தேவனின் தன்மையில், அவரின் நோக்கத்தில் பார்த்து புரிந்துக்கொள்ள முயற்சி செய்யும் போது மாத்திரமே தேவன் தமது சத்தியத்தின் ஆவியை கொண்டு நமக்கு விளங்க செவார். அதை விட்டு விட்டு, வரிகளை வாசித்து, அதையே ராத்திரி முழுவதும் யோசித்து (இதை தான் பலர் தியானிப்பது என்கிறார்கள்) தூங்கும் போது அது சம்பந்தமாக வரும் கனவுகளை தேவன் தன்னிடம் வெளிப்பாடுகளை தந்தார் என்றும், சிலர் ஒரு படி மேலே போய், தேவன் என்னிடம் பேசினார் என்றும், வேதத்தில் மகத்துவத்தை குறைத்து, ஏதோ தாங்கள் மிகவும் பரிசுத்தம் உள்ளவர்கள், ஆகவே தான் தேவன் தங்களிடம் பேசுகிறார் என்பது போல் உலகிற்கு தங்களை வெளிப்படுத்துவார்கள்!! இது போன்ற காரணங்களால் தான் இன்று இத்துனை பிரிவினைகள் கிரிஸ்துவத்திற்குள் இருக்கிறது. வேதம் என்ன சொல்லுகிறது என்கிற அடிப்படை புரிந்துக்கொள்ளுதலை விட்டு விட்டு, அதில் எந்த வசனங்களை தமக்கு சொந்தமாக்கி கொள்ளலாம் என்றும் அதை கொண்டு எப்படி வியாபாரம் செய்யலாம் என்றும் சிந்திப்பவர்கள் தான் அதிகம்.

வேதத்தை தேவன் ஏன் எழுதி தந்தார் என்று உண்மையை அறிய பிரயாசிக்க வேண்டுமே தவிர அதை எப்படி தன் கனவுகளாக மாற்றி வியாபாரம் செய்ய வேண்டாம். இது தேவன் மூலமாக வர போகும் காரியங்களை வெளிபாடுகளாக தாங்கியிருக்கும் ஒரு புத்தகம். ஏற்கனவே வெளிப்படுதிய காரியங்களை அவர் மீண்டும் வித்தியாசமாக வெளிப்படுத்த அவசியம் இல்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பலருக்கு வேதத்தை தவிர இன்னும் பல வெளிப்பாடுகளை தேவன் தந்துக்கொண்டிருப்பதாகவும் அங்காங்கே நாம் கேட்கவும் பார்க்கவும் முடியும். "எழுதியதற்கு அதிகமாக எண்ணவேண்டாம்" என்று வேதத்தில் இருக்கிறது, அதை கொடுத்தவரும் தேவனே, ஆனால் அதே தேவன் அவர் தந்த வார்த்தைகளுக்கு முறனாக அன்று எழுதியதற்கு அதிகமாக எண்ணவேண்டாம் என்பதை மாற்றி விட்டு இன்று அநேகருக்கு வெளிப்பாடுகளை தந்து கொண்டிருப்பதாக பல இடங்களில் பலர் வஞ்சக வலையை வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

கடைசி காலங்களில் வேத புறட்டர்கள் வருவார்கள் என்று அதே வேதம் தான் சொல்லியிருக்கிறது. அதன் படியே, வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் இருக்கட்டும், இதோ எங்களுக்கு தேவன் வெளிப்படுத்துவதை நீங்கள் கேளுங்கள் என்று ஒரு சிலர் இல்லை, பலர் எழும்பி கிறிஸ்தவர்களை வஞ்சித்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போஸ்தலர் காலத்தில் "உயிர்த்தெழுதல்" நடந்தேறிவிட்டது என்று வேதத்தை புறட்டியவர்கள் போல் தான் இன்று வரையும், இனியும் உலகின் கடைசி வரையிலும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வேதத்தை வாசிப்பவர்கள் அறிந்தது எல்லாம், உலகம் தோன்றி 6000 வருடங்கள் தான் ஆகியிருக்கிறது என்பது. ஆனால் உண்மையிலே உலகம் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இது வேதத்திலிருக்கும் ஒரு விஷயம் தான். ம‌றைவான‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை தேவ‌ன் வேத‌த்திலிருந்து தான் காண்பிப்பாரே த‌விர‌, அத‌ற்காக‌ தானியேல் அல்ல‌து யோசேப்பிட‌ம் க‌ண‌வுக‌ளில் விள‌க்கிய‌து போல் செய்வ‌தில்லை, க‌ற்றுக்கொள்வ‌து எல்லாம் எழுதிமுடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ வேத‌த்திலிருந்து தானே த‌விர‌, வெளியிலிருந்து வ‌ரும் வெளிப்பாடுக‌ளினால் அல்ல‌!!
கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, இப்ப‌டி என‌க்கு வெளிப்பாடு, உண‌க்கு வெளிப்பாடு என்று ஏன் தேவ‌ன் ஒரு சில‌ரை மாத்திர‌ம் தெரிந்துக்கொள்ள‌ வேண்டும். அன்று தேவ‌னுக்கு வேத‌த்தை எழுதி முடிக்க‌ பாத்திர‌ங்க‌ள் தேவை ப‌ட்டார்க‌ள், அவ‌ர்க‌ளை தேவ‌ன் எப்படி, ஏன் தெரிந்துக்கொண்டார் என்ப‌தையும் வேத‌ம் தெளிவாக‌ விள‌க்கியிருக்கிற‌து. ஆனால் எழுதி முடித்த‌ வேத‌த்துக்கு அப்பாற்ப‌ட்ட‌ வெளிப்பாடுக‌ளை த‌ர‌ தேவ‌னுக்கு இன்று அவ‌சிய‌ம் இல்லை என்ப‌தும் உண்மையே! எல்லோரும் ஒரே ஆலைய‌த்திற்கு செல்கிறார்க‌ள், ஒரே ஆவியை பெற்றிருக்கிறார்க‌ள், ஆனால் ஏன் ஒரு சில‌ருக்கு மாத்திர‌ம் வெளிப்பாடுக‌ள் கிடைக்கிற‌து என்று ஒரு போதும் யோசித்த‌தே கிடையாதா?

பிரிய‌மான‌வ‌ர்க‌ளே, இன்று வ‌ரும் வேத‌திற்கு அப்பாற்ப‌ட்ட‌ வெளிப்பாடுக‌ளை நிச்ச‌ய‌மாக‌ ந‌ம் தேவ‌ன் த‌ருவ‌தில்லை, மாறாக‌ இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தில் தேவ‌ன் என்கிற‌ சாத்தான் தான். ஏனென்றால் தேவ‌ன் வாக்கு மாறாத‌வ‌ர், அவ‌ர் வேத‌த்தில் ஒன்றை சொல்லி இன்று ஒரு சில‌ருக்கு மாத்திர‌ம் த‌ர‌வேண்டிய‌ அவ‌சிய‌மும் இல்லை.

வேத‌த்தின் தேவ‌ன் மேல் பிரிய‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ளே, இன்று இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌னான‌ சாத்தான் கொண்டு வ‌ரும் வெளிப்பாடுக‌ள் எந்த‌ வித‌த்திலும் தேவ‌னின் அநாதி திட்ட‌ங்க‌ளை முறிய‌டிக்க‌ முடியாது என்ப‌தில் ந‌ம்பிக்கையாக‌ இருங்க‌ள், தைரிய‌மாக‌ இருங்க‌ள்!! "ச‌மாதான‌த்தின் தேவ‌ன் சீக்கிர‌மாக‌ சாத்தானை உங்க‌ள் (கிரிஸ்துவின் ச‌ரீர்மான‌ ச‌பை) கால்க‌ளின் கீழெ ந‌சுக்கி போடுவார்" ரோம் 16:20. சாத்தானை மாத்திர‌ம் இல்லை, தேவ‌னின் வ‌ருகையின் வெளிச்ச‌த்தில் சாத்தானின் த‌ந்திர‌ங்க‌ளையும் த‌விடு பொடியாக்கும் கால‌ம் வ‌ந்துக்கொண்டு இருக்கிற‌து.

இன்னும் வ‌ரும்...........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard