யார் சர்ப்பத்தின் தலையை நசுக்குவார்? ஸ்திரியின் வித்து என்கிறது வேதம். யார் அந்த வித்து! கிறிஸ்துவே அந்த வித்து! மாத்திரம் அல்ல, கிறிஸ்துவுடன் சேர்ந்த சபை தான் அந்த வித்து. இயேசு கிறிஸ்து தேவனின் குமாரன். தேவனால் அழைக்கப்பட்டவர்கள் (சபை) இயேசு கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகள்!! தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளும். இப்போ யார் வித்து என்று புரிகிறதா! தலையாகிய கிறிஸ்துவும், சபையாகிய சரீரமும் சேர்ந்து தான் அந்த வித்து. சரி எப்போ சாத்தானின் (சர்ப்பத்தின்) தலை நசுக்கபடும்!? அல்லது ஏற்கனவே நசுக்கப்பட்டு விட்டதா! ஏற்கனவே நசுக்கப்பட்டு விட்டது என்றால், இந்த பிரபஞ்சம் பொல்லாததாக இருக்க வாய்ப்பு இல்லை (கலா. 1:4)
மிக தெளிவான ஒரு வசனம் இருக்கிறது.ரோம் 16:20, "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்."
இந்த வசனத்தில் யார் "உங்கள்"? அது தான் சபை. தலையாகிய கிறிஸ்துவும் சரீரமாகிய சபையும் சேர்ந்து தான் சாத்தானின் தலையை நசுக்குவார், ஆனால் இதை செய்ய வைக்கப்போவதே தேவன் தான். ஆதி 3:15ல் சொல்லப்பட்ட "அவர் உன் தலையை நசுக்குவார்" என்றும், ரோம் 16:20ல் சொல்லப்பட்ட "உங்கள் கால்களின் கீழே நசுக்கிபோடுவார்" என்பதை தயசு செய்து ஒப்பீட்டு பாருங்கள்!!
சாத்தானின் தலை நசுக்கப்படும், தலை என்றால், நம் போல் உள்ள தலை இல்லை, மாறாக சாத்தானின் போதனைகளும், அதை கொண்டு வரும் அவனின் தந்திரங்களும் மொத்தத்தில் எல்லாரும் பார்க்கும்படியாக அவன் சாம்பலாக்கப்படுவான். அது தான் சாத்தானின் முடிவு, அது நிறைவேற போவது கிறிஸ்து மற்றும் சபையால், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சிக்கு பின்.
பி.கு. இந்த தலைப்பின் கேள்வி இறைவன் (http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=35973398) என்கிற தளத்தில் கேட்கப்பட்டது. நான் அங்கு பதில் பதிந்தால், அது அந்த தளத்தை வளம் வருவோருக்கு இடறலாக இருக்கும் என்று அங்கு பதியாமல் நம்ம தளத்தில் பதிவிடுகிறேன். அந்த தளத்திலிருப்போரு இது சம்பந்தமாக கேள்விகள் எழுப்பலாம், பதில் தரப்படும். நன்றி.