யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வுநாள் பிரமாணம் கிறிஸ்தவர்கள் பின் பற்ற கூடியதா!? ஓய்வு நாள் பிரமாணம் மாத்திரம் அல்ல, யூதர்களுக்கு மாம்சத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகள், ஆவியை பெற்ற கிறிஸ்தவர்கள் பின் பற்ற வேன்டுமா, அதாவது, விருத்தசேதனம் தொடங்கி, தசமபாகம் வரையில். சில சுய நீதி போதகர்கள், தங்கள் சவுகரியத்திற்கு யூத கட்டளைகளை சபைகளில் போதித்து வருகிறார்கள். உழைக்க மறுப்போர், தசமபாகம் என்கிற கட்டளையும், ஆபிரகாம். தாவீது, சாலமோனின் செல்வங்களை காண்பித்து அவர்கள் கட்டளைகளை பின் பற்றியதால் தான் செழிப்பாக (!?) வாழ்ந்தார்கள் என்றும் போதிக்கும் "செழிப்பு உபதேசியார்கள்" என்று ஏக பட்ட பிரிவுகளில் போதகர்கள் செயல்பட்டு கிறிஸ்துவத்தை பந்தாடிக்கொண்டிருக்கிறார்கள்!! கேள்வி என்னவென்றால், யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரமாணங்களை ஆவியை பெற்ற கிறிஸ்தவர்கள் பின் பற்ற வேண்டுமா. சிலது தேவை சிலது தேவை இல்லை என்று மழுப்பலே வேண்டாம். இதில் இரண்டு பதில் தான் இருக்க முடியும், ஒன்று ஆம், அல்லது இல்லை. ஆம் என்றால் அனைத்து கட்டளைகளையும் பின் பற்ற வேண்டுமா!! இதே கேள்வி பல தலைப்புகளில் வந்தும் விவாதம் சொந்த தாக்குதலில் முடிந்ததால், இதையே மீண்டும் தெளிவான பதில்கள் பதிவாக வரும்படி மீண்டும் தொடங்குகிறேன்!
பழைய ஏற்பாட்டில் உள்ள விஷயங்கள் நமக்கு திருஷ்ட்டாந்தரமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று அப்போஸ்தலர் எழுதியிருந்தும், சில சுய நீதி போதகர்கள், இல்லை, இல்லை அவைகள் நாம் அறிந்துக்கொள்ளும்படியாக மாத்திரம் இல்லை, அவைகளை பின் பற்றவும் நமக்கு கடமை இருக்கிறது என்று போதிக்கிறார்கள். அவர்கள் விருத்தசேதனம் பெற்றார்களா என்று கேட்டாள் மழுப்பல்!! ஏன் இப்படி குழம்பி பிறரையும் குழம்பசெய்கிறார்களோ.
ஓய்வுநாளில் வேலை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லியும், இயேசு கிறிஸ்து குறிப்பாக அந்த நாளையே தெரிந்துக்கொண்டு பல காரியங்களை செய்தாரே!? ஏன்??