வேத மாணாக்கர்கள் அல்லது வேத மாணவர்கள் (Bible Students) என்பவர்கள் சுதந்திரமான, ஒரு சபைப் பாகுபாடற்ற ஒரு கிறிஸ்தவ ஐக்கியமாகும். இவர்கள் உலகமுழுவதும் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஐக்கியமும் முழுமையான சுதந்திரமான ஐக்கியமாகும். இவர்களுக்கென்று தனியே பொதுவான தலைமையகம் இல்லை.
ஒவ்வொரு உள்ளூர் ஐக்கியமும் முழுக்க முழுக்க தன்னிச்சையாக செயல்படுகின்றது. உள்ளூர் ஊழியர்கள் யாரும் பணமோ, காணிக்கைகளோ வாங்குவதில்லை. செலவினங்கள் அனைத்தும் மனமுவந்துதரும் உதவிகள் மூலம் மட்டுமே சந்திக்கப்படுகிறது. முழுநேர ஊழியர்கள் கிடையாது.
உள்ளூர் அமைப்பில் பொறுப்பாளர்களாக 1தீமோ 3, தீத்து 1ன் படி அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் வருடமொருமுறை.
இவர்களுக்கென்று சொத்துக்களோ, இடமோ கிடையாது. கூட்டங்கள் பெரும்பாலும் வாடகை இடங்களில் மற்றும் வீடுகளிலேயே நடைபெறுகின்றன.
இவர்கள் நம்பிக்கை கிறிஸ்துவை சொந்த ரட்சகராக ஏற்றுக்கொள்வது மற்றும் அவர் உலக மக்கள் அனைவருக்குமே இரட்சகர் என்பதும். (1 தீமோ 2:5,6, யோவான் 3:16)
ஒவ்வொருவரும் வேதத்தை ஆராய்ந்தறிந்து தெளிவுபெறவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்.
தலைப்புவாரியாக வேதத்தை ஆராய்ந்து புரிந்துகொள்ளும் வண்ணம் இவர்கள் வேதபாடங்கள் நடத்துகிறார்கள்.
வருடாந்திர அகில உலக கன்வென்ஷன் ஐரோப்பாவில் ஒவ்வொருவருடமும் நடக்கிறது.
இவர்களுக்கும் யேகோவா சாட்சிகள் என்ற உலகளாவிய அமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும்.
ஆனாலும் இன்றைய சபைகள் எல்லாம் நிக்கேதேமுவை போல் இருக்கிறார்கள். அதாவது இந்த பூமிக்கு அடுத்த காரியங்களை அறியாதவர்கள், ஆனால் தங்களுக்கு பரலோக ரகசியங்கள் தெரிந்து விட்டது போல் சொல்லி வருகிரார்கள். ஏனென்றால் யெகோவா சாட்சிகள் யார், வேத மாணவர்கள் யார் என்று இந்த பூமியின் காரியங்களை வைத்தே அறிய கூடிய காரியத்தை கூட அறியாமல் பரலோகம் நரகம் வரை சென்று வந்ததாக தம்பட்டம் அடித்து வருகிறார்கள். தேவையான பதிவு தான். ஆனாலும் வேத மாணவர்களின் புத்தங்களை நாம் சத்தியத்தில் வளர ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்ளலாமே தவிர, அதையே நம்பி இருக்க கூடாது. அவைகளை கொண்டு மென்மேலும் சத்தியத்தை ஆறாயந்து வளர வேண்டுமே தவிர எங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்கிற மமதையில் இருக்க கூடாது.