" நாம் சகோதரரிடத்தில் அன்பு கூறுகிறபடியால் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக் கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்." ( 1 யோ. 3: 14 - 16 )
உயிருடன் சர்வாயுதவர்க்கம் தரித்தவர்களாக இருக்கும் ஒவ்வொரு சகோதரருக்கும் முடிவாகக் கொடுக்கப்படும் பரீட்சை சகோதர அன்பே.
இது அனேகரை விழுந்துபோகச் செய்யக்கூடியது.
இதை அனேகர் நிறைவேற்றக் கூடாதவர்களாக இருந்து தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிக்கக் கூடிய சிலாக்கியத்தைப் பெற தகுதியற்றவர்களாகப் போய்விடக்கூடும்.
இக்காரியத்தில் ஒருவர் பெலவீனமுடையவராகவோ அல்லது தவறுகிறவராகவோ காணப்படும் போது நம் அதிபதியான இயேசு கிறிஸ்துவின் சிலுவை வீரர்கள் அப்படிப்பட்டவர்களை வெறுப்பதோ, நிந்திப்பதோ கூடாது.
இதற்கு மாறாக அவர்களுடைய பெலவீனத்தில் அவர்கள் பேரில் கவனம் செலுத்தி உதவி செய்து அவர்கள் ஆவியிலே வளர உதவ வேண்டும்.