kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி?


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி?


தேவசித்தமறியாத  போலிஊழியக்காரர்களை அறிவது எப்படி?

"அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." மத்தேயு 26:54

எப்படித்தெளிவாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார். வேதவாக்கியங்கள் நிறைவேறியே தீரவேண்டும்.

ஆனால் மகா வேசியான பாபிலோனின் தாக்கத்தில் இன்றைக்குத் தங்களை ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் அநேகர் வேதவாக்கியங்கள் நிறைவேறவே கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுகொண்டிருக்கின்றனர். உமக்கு அப்படி சம்பவிப்பதில்லை என்று பேதுரு இயேசுவுடன் சொன்னபோது கிறிஸ்து அவனை "எனக்குப் பின்னாகப்போ சாத்தானே" என்று கடிந்து கொண்டது நினைவிருந்தால் நாமும் தேவ சித்தத்துக்கு விரோதமாக ஜெபிக்கச்சொல்லும் ஊழியக்காரனை தாராளமாக அப்பாலே போ சாத்தானே என்று விரட்டியடிக்கலாமே!

சில உதாரணங்கள்:
"ஜனத்துக்குவிரோதமாய் ஜனமும், ராஜ்ஜியத்துக்கு விரோதமாய் ராஜ்ஜியமும் எழும்பும், பஞ்ச‌ங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்." மத்தேயு 24:7 இது வசனம் தேவ திட்டம்.
ஆனால் ஊழியக்காரர்களின் ஜெபவிண்ணப்பங்கள்: தேச ஒற்றுமைக்காக, பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், இயற்கைப் பேரழிவுகளும் வராதிருக்க முழுஇரவு ஜெபங்கள், அமாவாசை ஜெபங்கள், சங்கிலித்தொடர் ஜெபங்கள், இன்ன பிற....
இவர்கள் அறியாதது "அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." மத்தேயு 26:54 என்பதே.

"அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்கள்." மத்தேயு24:11 இது வசனம் தேவதிட்டம்.
போலி ஊழியக்காரர்களின் பிரசங்கங்களும், ஜெபங்களும் இதற்கு நேர் எதிர். அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள், இந்தியா கிறிஸ்தியாவாக மாறும் என்று தீர்க்கதரிசனங்களும், இயேசுவே இந்தியாவை எனக்குத்தாரும், இந்தியா இயேசுவுக்கே. என்றமுழக்கங்களும் ஜெபங்களும் நமக்குப் புதிதல்லவே.
ஆனால் கிறிஸ்துவின் வார்த்தை சொல்வது:"அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." மத்தேயு 26:54 என்பதே.

"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அ
நியாயம் செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாகட்டும்;....." வெளி 22:11 இது வசனம் தேவதிட்டம்.
இவர்களது ஜெபம். அநியாயஞ்செய்கிறவன் நியாயஞ்செய்யட்டும்;அசுத்தமாயிருக்கிறவன் பரிசுத்தமாகட்டும் என்பதே.
இவர்களுக்கு வேதம் தரும் பதில் "அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்." மத்தேயு 26:54 என்பதே

அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்ற வசனத்தின்படி இவர்களும் அந்த அநேகரில் ஒன்றுதான் என்று நாம் அறிவதால் நமக்கு இதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. வசனம் நிறைவேறுகிறது
.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கள்ள தீர்கதரிசிகளையும், அப்போஸ்தலர்கலாக இல்லாத போதும் தங்களை அப்போஸ்தலர்கள் என்று சொல்லி திரிபவர்களையும், காணக்கூடாத தேவனை கண்டேன் என்று பிதற்றும் கூட்டம், பலவிதமான போதனைகளில் சிக்குண்டு சபைகளை நடத்தி வரும் கூட்டங்கள் இவை அனைத்திற்கும் விடை கிடைக்கும் ஒரே இடம் "வேதம்" மாத்திரமே!! அந்த வேதத்தையும் ஆராய்ந்து தான் அறிய முடியுமே தவிர, அதை தலையனைக்கீழ் வைத்து விட்டு, வெறுமனே கண்களை மூடி காட்சிகளும் கணவுகளை பார்ப்பதன் மூலமாக அல்ல.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard