kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடைசி காலம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கடைசி காலம்!!


அன்புள்ளவர்களே,

காலம் சமீபமாக இருப்பதை நாம் நடந்துக்கொண்டிருக்கும் பல காரியங்களில் வெளிப்படுகிறதே!! பல சாமியார்களின் போலி வேஷங்கள் வெளியாகிறது. கடவுளை பார்த்து பேசினேன் என்று சொல்லுபவர்கள் எப்படி பட்டவர்கள் என்று வெளியரங்கமாகிறது. அப்படியே தான் நம் கிறிஸ்துவ கூட்டத்திலும் அநேகர் தங்களை ஊழியர்கள் என்று சொல்லிக்கொண்டு, நான் கடவுளிடம் பேசினேன், இயேசு கிறிஸ்துவை என் காரில் கூட்டி சென்றேன், பரிசுத்த ஆவியான தேவன் (!!) என் அறையில் வந்து நாற்காளியில் அமர்ந்து என்னிடம் இரவு முழுவதும் பேசினார் என்று கிறிஸ்தவர்களை முட்டாள்களாக்கி பணம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம்  உலா வந்து கொண்டிருக்கிறது.

தேவ கிருபையினால் உலகத்தார் அனைவரும் பெற போகும் இரட்சிப்பை ஏதோ இவர்கள் ப்ரோக்கர்கள் மாதிரி இருந்துக்கொண்டு பணம் வாங்கி பட்டுவாடா செய்துக்கொண்டிருக்கும் இந்த கூட்டத்தின் போலித்தனமும் மிக விறைவிலே வெளியரங்கமாகும் நாட்கள் சமீபித்திருக்கிறது. அன்று உலகத்தார் புரிந்துக்கொள்வார்கள், இந்த மாயாவிகள் எந்த "தேவனிடத்தில்" தான் பேசினார்கள் என்று!!

இனி இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு தமது இரண்டாம் வருகையில் இராஜாவாக வரும் நாளை தான் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமே தவிர, அனுதினமும் வந்து போவதாக அவர் சொல்லவில்லை.
யோவான் 14 :3 "நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்."

Jn 14:3 "And if I go and prepare a place for you, I will come again, and receive you unto myself; that where I am, there ye may be also"

இப்ப‌டியாக‌ அவ‌ரின் இர‌ண்டாம் வ‌ருகையின் போது தான் வ‌ருவ‌தாக‌ சொல்லியும் ஒரு கூட்ட‌ம் ஊழிய‌ர்க‌ள் என்று வேஷ‌மிட்டு சுய‌ விள‌ம்ப‌ர‌ம் தேடி, "நான் இயேசுவிட‌ம் பேசினேன், ப‌ரிசுத்த‌ ஆவியிட‌ம் பேசினேன்" என்றும், ஒரு சில‌ர் ஒரு ப‌டி மேலே போய், "நான் தேவ‌னின் சிங்காச‌ன‌த்தின் அருகே போய் வ‌ந்தேன்" என்ப‌தை போன்ற‌ வார்த்தைக‌ளை சொல்லி அநேக‌ரை ம‌ய‌க்கி கொண்டிருக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருப்போம். தோமாவிட‌ம் இயேசு கிறிஸ்து சொன்ன‌து நினைவிருக்க‌ட்டும், "என்னை க‌ண்டு விசுவ‌சிக்கிறாயே!! காணாம‌ல் விசுவ‌சிப்ப‌வ‌ர்க‌ள் பேர் பெற்ற‌வ‌ர்க‌ள்" என்று.

இந்த‌ ப‌ண‌ம் ப‌றிக்கும் ஊழிய‌ர்க‌ளிட‌ம் ஏமாறாம‌ல், வேத‌த்தின் வார்த்தைக‌ள் மூல‌மாக‌ மாத்திர‌மே தேவ‌னையும், அவ‌ர் ம‌னித‌ர்க‌ளுக்கு வைத்திருக்கும் மாபெரும் திட்ட‌த்தை புரிந்துக்கொள்வோமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்புள்ளவர்களே,

நேற்று தான் இந்த திரியை ஆரம்பித்தேன், அதற்குள் மற்றோரு செய்தி "ஜாமக்காரன்" பத்திரிக்கையில் வாசிக்க கிடைத்தது:

கேள்வி: Dr. பால் தினகரன் மகனை கனடா நாட்டில் படிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்துக்கொண்டிருப்பதாக பலமான வதந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றனவே! அறிவீர்களா?

பதில்: இளம்பங்காளர் திட்டத்தின் கடாநாயகனான மகனே பரிட்சையில் பெயிலானால் மற்ற இளம்பங்காளர்கள் என்ன நினைப்பார்கள். அரியர்ஸ்ஸை உள்நாட்டில் எழுதினால் நன்றாக இருக்காது, மேலும் இங்க்ய் அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆகவே கனடா நாடு கடத்தப்படுகிறார்.
  
       இளம்பங்காளர் திட்டத்தில் பணம்போட்டவர்களில் பெரும்பாலனோர் இவ்வருடம் தோற்றுப் போனர்கள். அவர்களின் சாட்சி இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையில் இடம் பெறாது.

இதை மேலும் வாசிக்க‌ ஜாம‌க்கார‌னின் இனைய‌த்த‌ள‌த்திற்கு சென்று வாருங்க‌ள். www.jamakaran.com



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நேற்று இராத்திரி தான் கிறிஸ்து என்னுடன் வந்து பேசி விட்டு சென்றார், என் அறையில் வந்த் 2 மணி நேரம் "ஊழியத்தை" குறித்து எனக்கு ஆலோசனை வழங்கினார், என்னூடன் "ஊழியத்தை" குறித்து விவாதித்தார். (இயேசு கிறிஸ்து: என்னால் சில பல காரியங்களை செய்ய முடியவில்லை, அனைவரிடமும் இதை சொல்லவும் முடியவில்லை, வேதத்தில் எழுதப்பட்டவைகள் எல்லாம் குறைவு தான், இதோ இப்பொழுது உனக்கு சொல்லுவது தான் அதற்கு அடுத்தப்படியான சத்தியம், இதை என்னால் அனைவரிடமும் சொல்ல முடியாததினால், நீ தான் எப்பாடு பட்டாவது இதை சொல்ல வேண்டும், அதற்காக நீ "ஊழியம்" என்று சொல்லி பணம் வாங்கி கொள். போன்றவற்றை பேசுவார்களோ).

இன்னும் சில‌ர் ஒரு ப‌டி மேலே போய், எனனை (!!) என் ச‌ரீர‌த்திலிருந்து (?!?) வெளியே கூட்டி வந்து (இது தான் கூடு விட்டு கூடு பாய்கிற‌ ச‌மாச்சார‌மோ!!) சில‌ ச‌ம‌ய‌ம் மாட மாளிகைகள் நிறைந்த‌, த‌ன‌க்கு ப‌ங்க‌ளா இருக்கும் இட‌மான‌ ப‌ர‌லோக‌த்திற்கும் ப‌ல‌ ச‌ம‌ய‌ம் த‌ன் தாத்தா பாட்டி (ஏனென்றால் அவ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இல்லையாம்) நெருப்பில் க‌த‌றி (!!) கொண்டு இருக்கும் ந‌ர‌க‌த்திற்கு கூட்டி சென்று வ‌ருவாராம்!! என்ன‌ கொடுமை சார்!!

ப‌ல‌ர் ஒரு ப‌டி மேலே போய் (பெ(ஏஏஏஏஏ)ரிய‌ ஊழிய‌ர்க‌ளாம்) இதோ இப்பொழுது இந்த‌ கூட்ட‌த்தில் ப‌ரிசுத்த‌ ஆவி அசைவாடிக்கொண்டிருக்கிறார் (ஆதார‌ம் ஆதி. 1:2); இதோ இயேசு கிறிஸ்து தொட்டு சுக‌ப்ப‌டுத்திக்கொண்டிருக்கிறார், இதோ மேடையில், அதோ கூட்ட‌த்தில், அங்கே இருக்கிறார், இங்கே இருக்கிறார் போன்ற‌வ‌ற்றை பேசுவார்க‌ள்!!

இது எல்லாம் ச‌ரி இல்லை என்று வேத‌த்தில் வாசித்திருந்தாலும், ஒரு பெரும் கூட்ட‌ம் இவ‌ர்க‌ளின் பேச்சை (!!) கேட்டு ப‌க்தி ப‌ர‌வ‌ச‌த்தில் (!!) "அவ‌ர் ஜெபிக்கும் போது, என‌க்குள் மின்சார‌ம் பாய்ந்த‌து" "இயேசு கிறிஸ்துவே என்னை வ‌ந்து தொட்ட‌ர் (வ‌ள‌ரும் ஊழிய‌ராக‌ இருப்ப‌வ‌ர்)" போன்ற‌வ‌ற்றை "சாட்சிய‌க" சொல்லுவார்க‌ள். இதை எல்லாம் ர‌சிக்க‌ தெரியும், ஆனால்,

வேத‌த்தில் சில‌ அடிப்ப‌டை ச‌த்திய‌ங்க‌ளை சொன்னால், அது எப்ப‌டி முடியும், இது எப்ப‌டி முடியும் என்கிற‌ ப‌டியான‌ கேள்விக‌ள் கேட்பார்க‌ள்!! ஃபான்ஸி க‌தைக‌ளை கேட்டே வ‌ள‌ர்ந்த‌வ‌ர்க‌ள், ஆகையால் அப்ப‌டி தான் இருப்பார்க‌ள்!!

"தீத்து 2:11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி"

எல்லா ம‌னுஷ‌ர்க‌ளும் இர‌ட்சிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்கிற‌ அடிப்ப‌டை அன்பே இல்லாத‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளிட‌ம் தேவ‌ன் வ‌ந்து பேசினார் என்று பித‌ற்றுவார்க‌ள்!! வ‌ச‌ன‌ம் எல்லாம் இவ‌ர்க‌ள் பார்க்கும் காட்சிக‌ளுக்கு முன்னால் பொய்யாக‌ தான் இருக்கும், ஏனென்றால் "இப்பிரப்ப்ர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌ன்" இப்ப‌டி ப‌ல‌ ஃபிலிமை கான்பிக்க‌ வ‌ல்ல‌வ‌னாக‌ இருக்கிறான். இவ‌ர்க‌ள் விடும் ரீலுக்கு அள‌வே இல்லாம‌ல் ப‌ல‌வித‌ புதுமைக‌ளை த‌ங்க‌ளின் ரீல்க‌ளில் சேர்த்து சொல்லி வ‌ரும் கூட்ட‌ம் பெருகி விட்ட‌து.

அது எப்ப‌டி எல்லாரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டுவார்க‌ள், என‌க்கு இந்த‌ க‌ருத்தில் உட‌ன் பாடே இல்லை, ஏனென்றால் என‌க்கு தான் அவர் (எவர்??) ந‌ர‌க‌த்தை கான்பித்தாரே!! அங்கு தான் எல்லாரும் எரிந்துக்கொண்டிருந்தார்க‌ளே, அப்போஸ்த‌ல‌ர்க‌ளுக்கு கூட‌ நான் (யார் இந்த‌ நான்) தெரிவிக்காம‌ல் 2000 வ‌ருட‌ம் முடிந்து உன‌க்கு மாத்திர‌ம் தெரிவிக்கிறேன் என்று சொன்னாரே (!!). வ‌ச‌னம் தெளிவாக‌ அனைவ‌ரின் இர‌ட்சிப்புக்கு அவ‌ரின் கிருபையே கார‌ன‌ம் என்று சொன்னாலும், இல்லையே, எங்க‌ளுக்கு அப்ப‌டி ஒரு காட்சி வ‌ர‌வில்லையே என்று பித‌ற்றுவார்க‌ள். ஆனால் எங்க‌ளுக்கு அப்ப‌டி ஒரு ஆசை தான் (ஏன் இப்ப‌டி சொல்லுகிறார்க‌ள் என்றால், எல்லாரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்று வேத‌த்தில் இருப்ப‌து ஒரு வேளை  நிறைவேறி (!!) விட்டால் கூட‌, பார்த்தீர்க‌ளா, நான் தான் அப்ப‌வே ஆசை ப‌ட்டேன் என்று சொன்னேனே என்று சொல்லுவ‌த‌ற்கு வ‌ச‌தியாக‌ இருக்குமே, என்ப‌த‌ற்காக‌ தான்)!!

இவ‌ர்க‌ளுக்கும் இவ‌ர்க‌ளை போன்ற‌ கூட்ட‌த்தாருக்கும், இதை ந‌ம்பி இவ‌ர்க‌ளின் பேச்சை கேட்டு, இவ‌ர்க‌ள் ஏதோ பெரிய‌ "ஊழிய‌ர்க‌ள்" என்று ந‌ம்பிக்கொண்டிருப்ப‌வ‌ர்க‌ளுக்கு (த‌ய‌வு செய்து இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளை ஊக்க‌ ப‌டுத்தி இவ‌ர்க‌ளை பெரிய‌ ஆளாக‌ மாற்றி விடாதீர்க‌ள்) ம‌த் 24ல் உள்ள‌து இது வ‌ரை வாசித்த‌தே இல்லையா:

"அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவ‌னாகிலும் (இயேசு கிறிஸ்து இப்ப‌டி பித‌ற்றுகிற‌வ‌ர்க‌ளுக்கு கொடுக்கும் ம‌ரியாதையான‌ வார்த்தை எவ‌னாகிலும்) சொன்னால் ந‌ம்பாதேயுங்க‌ள்; ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் (இன்றைய நவீன ஊழியர்கள்) எழும்பி, கூடுமானால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாய் பெரிய அடையாளங்களையும் (அதான், நரகம் பார்த்தேன், பரலோகம் பார்த்தேன், போன்ற கன்றாவிகள்) அற்புதங்களையும் (இவர்கள் பார்த்ததாக சொன்னதை பலரை நம்ப வைப்பது தான்!) செய்வார்கள்; இதோ முன்ன‌தாக‌ உங்க‌ளுக்கு அறிவிக்கிறேன் (இது ஏதோ நாங்க‌ள் புதிதாக‌ எங்க‌ளுக்கு கிறிஸ்து வ‌ந்து சொல்லி போன‌ விஷ‌ய‌ம் அல்ல‌, வேத‌த்தில் முன்ன‌தாக‌வே எச்ச‌ரித்திருக்கிறார்); ஆகையால், அதோ, வ‌னாந்த‌ர‌த்திலே இருக்கிறார் என்று சொல்லுவார்க‌ளானால், புற‌ப்படாதிருங்க‌ள்; இதோ அறைவிட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்லுவார்க‌ளானால் ந‌ம்பாதிருங்க‌ள்" ம‌த். 24:23-26.

இப்ப‌டி ப‌ட்ட‌வைக‌ள் ச‌ம்ப‌விக்க‌ வேண்டும் என்ப‌து தேவ‌ சித்த‌மே. வேத‌ம் இதை சொல்லியும் இப்ப‌டிப்ப‌ட்ட‌வைக‌ள் மேல் பிரியாமாக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறார்க‌ள் என்றால் அது வ‌ச‌ன‌ம் நிறைவேறுவ‌தையே கான்பிக்கிற‌து, அப்ப‌டியே பெருகி வ‌ரும் க‌ள்ள‌ கிறிஸ்துக்க‌ளும் க‌ள்ள‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளின் கூட்ட‌மும் வ‌ச‌ன‌ம் நிறைவேறி வ‌ருவ‌தையே கான்பிக்கிற‌து.

வேத‌த்தில் உள்ள‌தை எழுதிவிட்டேன், கிருபை த‌ருப‌வ‌ர் தேவ‌ன் ஒருவ‌ரே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

இதற்குத்தான் கிறிஸ்து "காணாமல் விசுவாசிப்பவர்கள் பாக்கியவான்கள்" என்றார்.
சபை கிறிஸ்துவைப்போல பாடுபட அழைக்கப்பட்டிருக்கிறது, ஏனென்றால் கிறிஸ்துவுடனெ ஆளுகை செய்வதற்காக.
சபை ஒரு பிரபலமான ஸ்தாபனமாகவோ, எல்லாராலும் மெச்சத்தகுந்த புகழ் பெறும் அமைப்பாகவோ அதின் அங்கத்தினர்கள் செல்வச் செழிப்போடு எல்லாவித பூமிக்குரிய ஆசீர்வாதங்களோடும், வசதிகளோடும் ஆரோக்கியமாக, ஒரு வியாதியற்ற சுகமான வாழ்வு வாழ்வார்கள் என்றோ வேதத்தில் ஒரு வசனம் கூட இல்லை.

இந்த மோசம்போக்கும் வேசிமார்க்கத்தார் புதிய ஏற்பாட்டு வசனங்களுக்கு முற்றிலும் முரணாக போதித்து

இயேசு அற்புதம் செய்கிறார்;

இயேசு ஆசீர்வதிக்கிறார்;

இயேசு சுகமாக்குகிறார்;

என்று ஆசைவார்த்தைகளைச் சொல்லி அப்பாவி ஜனங்களை தங்களுடைய 'சபைகளுக்கு' இழுத்து சுவிசேஷத்தை ஆதாயத் தொழிலாக மாற்றி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
பங்களாககளில் அதினவீன வசதிகளுடன் சொகுசு கார்களுடன் அம்பானிகளுக்கு நிகராக வாழும் இவர்கள் ஊழியர்கள் அல்ல அட்டூழியர்கள்.
எச்சரிக்கையாக இருப்போம்


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard